நான் கண்விழித்தபோது, விண்களனிற்குள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தேன். விண்களன் எந்த வித அசைவுமின்றி நிற்பது போல் இருந்தாலும் அது வேகமாக வெற்றிடத்தின் ஆழத்திற்குள் சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. குறுகிய ஜன்னல் வழியே பார்த்தேன். அகண்ட கருமை நிற பிரபஞ்சத்தில் விண்வெளியின் எந்தப் பகுதி அது என்பதை என்னால் “கேள்வி-பதில்”
Tag: அறிபுனை
இன்மையால் வகுத்தல்
ஆறு ஆண்டு மண வாழ்க்கைக்கு பிறகு, அவள் மீதான காதல் நீர்த்துப் போனது. அந்த எண்ணத்தையே கார்ல் மறுத்தான். ஆனால் அவள் மாறிவிட்டாள் – இப்போது அவளை புரிந்துக்கொள்ளவோ அவளுக்காக தான் என்ன உணர்கிறான் என்று தெரியவில்லை. ரெனேவின் அறிவுலகமும் உணர்வுலகமும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத வகையில் பிணைய, அவனால் எட்ட முடியாத எல்லைகளுக்கு அப்பால் அவள் சென்றுவிட்டதாக உணர்ந்தான்.
மிதப்புக்கட்டை
அதுவும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழில் நுட்பம் மென்மேலும் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கும் இந்த நவீன காலகட்டத்தில் ஓர் புதிய உலகைப்படைக்க, காட்ட, ஓரிரு நிமிடங்களில் சிற்சில ப்ரேம்களில், ஒலியமைப்பில் காண்போரின் aweவை எளிதில் அடைந்துவிட முடியும் விஷயத்தை எழுத்தில் காட்ட பத்து, இருபது பக்கங்களும், அதிக வாசக கவனமும் தேவைப்படும்.
அனாதை
”…சூரியனைச் சுற்றிய ஒன்பது கிரகங்களின் விசைகள் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு, சமன்படும் இடங்களில்தான் ஒவ்வொரு கிரகத்தின் இருப்பும் சாத்தியமாகிறதா? சமன்படுதலும், சமரசமும்தான் குடும்பமென்கிற ஒருங்கிணைப்பின் மையமா?” சிந்தனையில் ஆழ்ந்திருந்த ப்ரீத்தியின் முகம் சட்டென ஒளிர்ந்தது.
சந்தா
நெற்றியையும் புருவங்களையும் சுருக்கி அவனைப் பார்த்து,”ஆனால் பார் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.”
“என்ன மாதிரியான பகடி இது? அதுதான் அனைவருக்கும் வாழ்வுரிமை சந்தா இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதே. உயிர் வாழ்வதிலோ உணவு உண்பதிலோ என்ன பெரிய இம்சை வந்துவிடப் போகிறது?”
குருடு
“சந்தேகி. சந்தேகித்தலே அறிதலெனும் தேரின் வடம். தேர் நகர்வது சக்கரத்தினால். நகர்த்தப்படுவது அதன் வடத்தினால் தான்” என்றார் கிழவர்.
அவன் உச்சிவானில் எழுந்த கதிரவனின் அலைகள் ஆற்று நீரில் நெளிவதைச் சற்று நேரம் பார்த்தான். பின்னர் கேட்டான். “நான் இப்போது உங்களைக் காண்கிறேன். நீங்கள் என்முன் அழிந்தழிந்து தோன்றுகிறீர்களா என்ன?’
“ஆம்” என்றார் குரு. “‘உனக்கு தெரியும் நான்’ என்பது, உன் புலன்களின் வழியே உன் அறிதலாகி நீ உருவகிப்பது. ‘உனக்கு தெரியும் நானும்’, ‘உலகிற்குத் தெரியும் நானும்’ வேறுவேறானவை. உன் அறிதலை வைத்து இவ்வுலகிற்கும் அதுவே ‘நான்’ என என்னைப் பொதுமைப்படுத்துவது உன் வறட்டு ஆணவம் மட்டுமே” என்றார் குரு.
