பொய்யான மீபொருண்மையை (Metaphysics) விடவும் மோசமானது, மீபொருண்மையைப் பற்றிய எச்சரிக்கைகள். எப்போது, ஐம்புலன்களால் மட்டுமே அறிந்ததைத் தாண்டி செல்கிறோமோ, அப்போது அது ஆடம்பரமாகத் தோன்றும் என்பது வெளிப்படைதான். ஆனால், அது மீபொருண்மையின் குற்றமல்ல; அது துறை சார்ந்த ஒரு ஆபத்து; எப்படி மூட நம்பிக்கைகள், மதம் சார்ந்த விபரீதங்களோ, தர்க்கப் பூர்வமாக விவாதிக்கையில், வறட்டுப் பிடிவாதம் வரட்சியைத் தருமோ, (சரியான காரணங்கள் அமையாத நிலையில் அது போடும் ஆவேச வேடம்!) அவ்விதம் தான் மீபொருண்மையிலும் நிகழ்கிறது. நான் ஆடம்பரம் என்று தான் சொன்னேன்- தவறு என்று சொல்லவில்லை.
Tag: பானுமதி ந
உறங்காமை
தூக்கமின்மை உள்ளவர்கள் நன்றாகத் தூங்குபவர்களுடன் சரியாக இணைகிறார்கள், ஆனால் அந்த நல்ல தூக்கம் உள்ளவர்கள் கூட அவர்கள் தூங்க வேண்டிய அளவுக்குத் தூங்குவதில்லை. மனிதர்கள் “இருநிலை” (biphasic) தூக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளனர் என்று வாக்கர் கூறுகிறார் – அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு தூக்க அமர்வுகள் தேவையாம். நவீனமயமாக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்களை விட நீண்ட காலம் தூங்கும் பாரம்பரிய சமூகங்களில் உள்ளவர்கள், சிறிது நேரம் உயிர் காக்கும் தூக்கத்தை, அதாவது இரு வேளை தூக்கத்தை மேற்கொள்கிறார்கள்.
கேள்வியின் நாயகனே
‘என் அறியாமைகள் எனக்குத் தெரிகின்றன; அப்படியென்றால் நான் எப்படி புத்திசாலியாக இருக்க முடியும்?’ இந்தப் புதிரை விடுவிப்பதற்காக, அவர், அறிவுஜீவிகள் எனத் தம்மைச் சொல்லிக் கொள்பவர்களான அரசியல்வாதிகள், கவிஞர்கள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோரிடம் கேள்விகள் கேட்டிருக்கிறார். துறைசார் அறிவு அவர்களுக்கு இருந்த போதிலும், அதனாலேயே மற்ற அனைத்திலும் தாங்கள் அறிவு மிக்கவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கிறது.
இசைக்கும் புத்தகம்
காருகுறிச்சியார் துரிதமான சஞ்சாரங்கள் வாசிக்கும் போது, அதனுடன் ஒலிக்கும் ‘துரித கம்பிதங்கள்’ முரணின்றி மிளிர்பவை. இதை மட்டும் சொல்லிவிட்டால் போதுமா? ரக்தியைப் பற்றி சொல்ல வேண்டாமா? ஒரு சீரான போக்கில் சலனத்தை ஏற்படுத்திப் பாருங்கள். ரக்தி வரும். ராகத்தில் பிரயோகங்கள் எல்லாம் சக்கரம் மாதிரி. சுழன்று கொண்டிருக்கும். ஒரு உராய்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது வெளிப்படும் தீப்பொறிதான் ராகப் பிரயோகங்களுக்கு உள்ளே பொதிந்திருக்கும் விசையை கேட்பவர்களையும் உணர்ந்து கொள்ள வைக்கும்
நடமிடும் விரல்கள்
‘கோபாலி மேடைக்கு வருவது தெரியும், உட்கார்ந்திருப்பது தெரியும், உட்காருவது தெரியாது, மைனா கிளையில் அமர்வதைப் போல’ என்று மரப்பசுவில் தி ஜா எழுதியிருப்பார். ராக ஆலாபனையின் போது அவரது கவனம் முழுக்க ஸ்ருதியில் இருக்கும்; சின்னச் செல்லத் தட்டலுடன் ஒற்றை ஓசை வரும். பிறகென்ன, கலைஞருக்கும் இவருக்குமான கொடுக்கல் வாங்கலில் மொத்தப் பரிசும் ரசிகருக்கே. இரு கைகளின் விரல்கள், விரிந்தும், குவிந்தும் வரும் பாங்கில் மொழியின் ஒலி கேட்கும்
வில்லோ (Willow)
பல இலட்சக்கணக்கான மின் அணுக்கள் பெரிய அளவில் இப்படி இணைந்து பல உலோகங்களைப் பிறப்பிக்கின்றன. இவை போஸ் ஒடுக்கத்துடன் (Bose Condensation) இணைகையில், நமக்கு சிறந்த திறனுள்ள கணினி கிடைக்கிறது. மிக அதிக வெப்ப நிலையிலும் தடையற்ற மின் கடத்திகளாக இந்தப் போசான் ஒடுக்கத்துடன் இணைந்த மின் அணுக்கள் செயல்படுவதால், அதி திறன் கணினி கிடைக்கிறது. கருந்துளைகளிலும் இந்தக் குவாண்டப் பிணைப்பு உள்ளது என்பது ஒரு வியத்தகு செய்தி.
உயிரே உயிரே!
மைடோகாண்ட்ரியா, வளர்வதும், பிறப்பிப்பதும் அது சார்ந்த உயிரணுவிலிருந்து மாறுபட்ட ஒன்று. அதாவது அது சுயமாகச் செயல்படுகிறது. மைடோகாண்ட்ரியா டி என் எ (Mitochondria DNA) என்று சொல்லப்படும் வட்ட மரபணுக்களை (Circular genomes) தனியாகவே பிரதி எடுத்து அதை இரட்டைப் பிளவின் மூலம் பெருக்குகிறது. இது செல்களின் பிரதியெடுப்பை ஒத்து இல்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன
மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி…
இயற்கையான உறவில் மலரும் மகவு என்ற அமைப்பை நீர்த்துப் போகச் செய்து, அந்த உறவு தரும் கடமை, பொறுப்பு, அன்பு, வம்சம் என்று காலம்காலமாய் மனித இனமும், சட்டமும் பணிந்து கொண்டாடிய ஒன்றை, ஒப்பந்தங்களால் அடைவதில், சட்டச் சிக்கல்கள் எழத்தானே செய்யும்? யாருக்குச் சொந்தம் என்ற கேள்வியை எடுத்துக் கொள்ளுங்கள். பணத்திற்காக கருவை சுமந்தவர்களென்றாலும், அத்தகைய அனைத்துப் பெண்களும், தாங்கள் கற்பனை செய்தபடி, அந்தக் குழந்தையிடமிருந்து உடலால் பிரிந்திருப்பது எளிதல்ல என்ற இடத்திற்கு வந்து சேர்ந்து மனச் சோர்விற்கும் ஏக்கத்திற்கும் உள்ளாகிறார்கள்.
உணர்தல், அறிதல், தெளிதல்
ஏஐ என்பது ஒரு கணினிச் செயல்பாடு. நாங்கள் கற்பிக்கப்படுகிறோம், முடிவுகளை அடைகிறோம்; ஆனால், மனிதர்களைப் போல. எங்களால் உணர முடியாது. எங்களுக்கு எப்போதாவது உணர்வு வருமா என்று விவாதங்கள் நடக்கின்றன; ஆனால், துறை சார்ந்த வல்லுனர்கள் உணர்வை நாங்கள் பெறுவது சாத்தியமில்லை என்று சொல்கிறார்கள்.
நிற(ப்)பிரிகை
வன்முறையும், அழகும் கலந்திருக்கும் இவ்வுலகில் அப்பாவித்தனத்தின் சாத்தியம்/சாத்தியமற்ற தன்மை பற்றிய அவரது புரிதல்களைக் காட்டிய நாவல் என்று 2016ல் மேன்புக்கர் பரிசு பெற்ற அவரது ‘வெஜிடேரியனைச்’ சொல்லலாம். முப்பாகமாக வெளியான இதில், குடும்ப நெறிமுறைகள், பெண் உடல் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள், அவளைப் புரிந்து கொள்ளாமல் அவள் மனசிதைவிற்கு ஆளானவள் என்று சிகிச்சை செய்வது போன்றவை காட்சிப்படுத்தப்படுகின்றன
யாதேவி
ப்ரக்ஞை என்பதில் உணர்ச்சிகள், எண்ணங்கள் அனைத்தும் அடங்கும். ஆனால், அது, அவையல்ல. ப்ரக்ஞையின் உள்ளடக்கங்களாக அவை இருக்கின்றன. இந்த இருமை இருப்பது தான் மாயை என்று இந்தியர்கள் சொல்கிறார்கள்.
எரியும் மரங்கள்
ஹான் காங்கின் எழுத்துக்கள், உடல் மற்றும் மன வேதனையின் இணைப்பை, அவற்றின் வெளிப்பாட்டை. கிழக்கிய சிந்தனைகளை ஒட்டி வெளிப்படுத்துகின்றன. Convalescence 2013, நாவலில் காலில் உள்ள புண் உருவகமாக வருகிறது. அது குணமாவதில்லை. அதைப் போல முக்கியக் கதாபாத்திரத்திற்கும் அவரது இறந்து விட்ட சகோதரிக்குமான உறவு சொல்லப்படுகிறது. ஆறாத அந்தப் புண், அடிப்படையான இருத்தலின் அனுபவமாக உருவெடுக்கிறதே தவிர கடந்து செல்லும் இரணமாக இருக்கவில்லை.
தம்மையே தமக்கு நல்கும்
ஒரு குறிப்பிட்ட குவாண்ட நிலையில் உள்ள ஒரு துகளை, கடந்த காலத்திற்கு எடுத்துச் சென்று, வேண்டுமென்றே அதன் கடந்த கால நிலையை மட்டும் மாற்றி, அதன் நிகழ்கால நிலையை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றாமல் உருவகப்படுத்திப் பார்க்கையில், குவாண்ட நிலையில் அந்தப் பட்டாம் பூச்சி விளைவு ஏற்படவில்லை என்று அவர்கள் கண்டறிந்தனர்.
கண்டறியாதன
நமக்கு சிலது தெரிவதில்லை, என்ன தெரியவில்லை என்பதை உணர்வதற்கும் வழி தெரியவில்லை. சில கேள்விகளுக்கு உள்ளார்ந்த விடை இல்லை. பொதுப் புரிதலுக்குள் அடங்காத அதை ஈஷா உபனிஷத் இவ்வாறு சொல்கிறது : ‘அது அசைகிறது, அசைவதில்லை; தொலைவிலும், அருகிலுமாக இருக்கிறது; உள்ளேயும் இருக்கிறது, வெளியேயும்’
வாழ நினைத்தால் வாழலாம்
க்ரையோனிக்ஸ்’ (cryonics) என்ற துறையில் முன்னிலை வகிக்கிறது. மரணத்தை வெல்லவும், வாழ்தலை நீடிப்பதற்கும் உதவும் துறை க்ரையோனிக்ஸ். மிக மிகக் குறைந்த தட்ப வெப்ப நிலையில் மனித உடல்களைக் குளிரூட்டி, பின்னர் தேவையான போது மீண்டும் உயிர்த்தெழச் செய்யும் தொழில் நுட்பத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
நானே நானா, யாரோ தானா? – 2
இந்த அகிலம் பரந்து விரிந்திருக்கிறது. நம் நவீன அறிவியல் சாதனங்களாலும் இன்று வரை அறிய முடியாத பல விண்மண்டலங்கள் இருக்கின்றன. இத்தகையதொரு பிரும்மாண்டத்தை படைத்துள்ள ‘ப்ரும்மம்’ எல்லையற்ற ஒன்றாகத்தான் இருக்க முடியும் எனக் கருதுகிறோம். உணர்வு என்பது உணர்பவரைச் சார்ந்தது, உணரப்படும் பொருளைச் சார்ந்ததில்லை என்பது உபநிஷத்தின் கருத்து
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
சில மொழிகளின், சில சொற்களுக்குச் சரியான சொல், பிற மொழிகளில் கிடைப்பதில்லை எனத் தோன்றுகிறது. ‘சைதன்யம்’ என்பதை, ‘கான்சியஸ்னெஸ்’. ‘உணர்வு’ என்றெல்லாம் சொல்கையில், சைதன்யத்தின் முழுப் பொருளும் விளங்குகிறதா என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு நிரடும் கேள்வியே. சைதன்யம். முடிவற்றது, எல்லையில்லாதது, வானைப் போன்றது,
செல்லா, ஜீனா?
மரபணுத் தொடர் செய்திகளை உபயோகிக்கும் விதத்தில், எவ்விதம் செல்கள் தங்களை ஒருங்கமைக்கின்றன என்ற கேள்விக்கு நம்மிடம் விடையில்லை. ஆனால், கருவினை ஒத்த செல்களை ஆய்வகத்தில் ஆராய முடிகிறது. ஆர்கனாய்ட்ஸ் இருக்கின்றன. ஆர்கனாய்ட்ஸ் என்பவை முப்பரிமாணத்தில் உருவாக்கப்படும் உறுப்பு அல்லது திசு. ஸ்டெம் சாத்தியக் கூறுள்ள செல்கள், சுயமாக ஒருங்கமைத்துக் கொண்டு, முப்பரிமாணத்தில் செல் நிறைகளாக ஆய்வகங்களில் காணக் கிடைக்கும்.
மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?
சந்திரனின் நிழல் சூர்யனின் பரப்பில் பெரும்பாலும் விழும் போது, சூர்ய நிற மண்டலம் சிவப்பாகக் காட்சி அளிப்பதை, சிவப்பு ஆடு என்றும், முழு கிரஹணத்தின் போது தெரியும் சூரியனைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தை வெள்ளாடு என்றும் அத்ரி வர்ணிக்கிறார். இரவின் இருளுக்கும், கிரஹண இருளுக்கும் மாறுபாடு உண்டெனவும் அவர் சொல்கிறார்.
அடையாளம்
‘ஏய்’களுக்கு அவள் எந்த ஏவல்களும் செய்வதில்லை. அப்படியும் வித்து முளைத்து எழுந்தது. மருத்துவ மனையில், சீமந்த விழாவில். எங்கெங்கு நோக்கினும் அவள் மிசஸ். சரவணன். அது ஒரு மரியாதை என்று கூட அவள் தன்னைத் தேற்றிக் கொண்டாள். அவள் ஆறு மாத கர்ப்பம். சரவணன் தன் வணிகத்தில் படு தோல்வி அடைந்தார். விட்டதைப் பிடிக்கிறேன் என்று சூது, மாது, குடி என்று அழிய ஆரம்பித்தார். வருண் பிறந்தான்.
மலங்கி மடுவாகலி
அவர்கள் வேட்டையாட வரும் போதெல்லாம், காட்டு யானைகள் ஓரிடத்தில் மரத்தை உலுக்கி பூமாரி பெய்து அதை வலம் வந்து மீண்டும் காட்டுக்குத் திரும்புவதைப் பார்த்தார்கள். வியப்பினால் உந்தப்பட்டு அந்த மரத்தின் அடியில் கோடாரியால் வெட்ட சிவலிங்கத் திருமேனியிலிருந்து குருதி கொப்பளித்து, அவனது ஐந்து முகம் போலவே ஐந்து திசைகளிலும் சிதறியிருக்கிறது
சீர்மையற்ற சீர்மை
கூகுளை நாம் அத்தகைய ஒரு சீர்மையற்ற இலக்கத்தை உருவாக்க சொல்லி கேட்டால் அது தூய்மையான சீர்மையற்ற கணித மாதிரிகளைக் கொண்டு முடிவுகளை கொடுப்பதில்லை. அது சீர்மையைக் கொண்டு சீர்மையற்ற இலக்கத்தைத் தருவதாக நம்மை நம்பச் செய்துவிடும். அதன் வழிமுறையோ, அதற்கான உள்ளீடுகளோ, எவையுமே நாம் அறியாதவை. இவ்விதத்தில் கிடைக்கப்பெற்ற எண்களும் போலிச் சீர்மைகளே.
தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே
பல்லாயிரம் ஆண்டுகளாக, உறவினர்களுடனும், விரிந்து பரந்த குடும்பத்துடனும், இணைந்து பணி செய்பவர்களுடனும், நண்பர்களுடனும், பயணத்தில் இருக்கும் வியாபாரிகளுடனும் மனிதர்கள் ஒன்றாக ஒரே படுக்கையில் உறங்கியிருக்கிறார்கள். பயணத்தின் போது முன்பின் அறியாதவர்கள் தன்னருகில் படுத்திருப்பதை அனுமதித்திருக்கிறார்கள். ஆனால், அதிர்ஷ்டம் காலை வாரியதென்றால், கூட படுத்திருக்கும் நபர், குறட்டை விடுபவராகவோ, உடல் வாசத்தைப் பரப்பி சங்கடத்தில் ஆழ்த்துபவராகவோ, பிறந்த மேனியில் தூங்குபவராகவோ அமையலாம்!
இருகால் கொண்டெழும் பீமத் துணைவன்
அமெசானுக்காகச் சோதனை செய்யப்படும் இந்த ரோபோவில், ‘டிஜிட்’ என்ற பாட் (மென் பொருள்) பயன்படுத்தப்படுவதாக ‘அஜிலிடி ரோபோடிக்ஸ்’ தலைமை நிர்வாக அதிகாரி டேமியன் ஷெல்டன் சொல்கிறார். இக்கட்டுரை வெளியாகும் நேரத்தில் அனேகமாக தொழிற்சாலைப் பணிகள் துவங்கியிருக்கக்கூடும். பயன்பாட்டு நோக்கத்துடன் அமைக்கப்படும் உலகின் முதல் ரோபோ தொழிலகம் என்று அவர் பெருமிதப்படுகிறார்.
மாதவிப் பொன் மயிலாள்
ஒரு ஆவர்த்தம் ஜதி சொல்லி பின்னழகைக் காட்டி அசையாமல் அவள் நிற்க உளி அந்த மென்மையான கற்களில் அவள் நின்ற நிலையை வடித்துக் கொண்டிருந்தது. பின்னர் ‘தர்ஷன் தேஜோ நாத்’ என்ற ‘ஸ்தாவன்’ (பதம்) எடுத்து அபிநயிக்க அதில் சித்தம், சித்தாலயம் என்ற நிலையில் அவள் ஆடாமல் அசையாமல் நின்றாள். அந்த நிலையில் உடலின் கீழ்ப் பகுதி ஒரு நேர்க்கோட்டில் நிற்க, இடை ஒசிந்து, மார்புகள் விம்மி, கரங்களில் தாமரைத் தண்டு கொண்டு வருடும் வீணை அமர்ந்திருக்க, காதுக் குழைகள் நிலைத்து நிற்க, நெற்றி விரிய, எடுத்துக் கட்டிய சிகையே மகுடமாக அவளே ஒரு சாத்யகி போல நின்றாள்
ஆண்மை
தன் மாளிகையின் உப்பரிகையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தார் பீஷ்மர். நதியின் அலைகள் காற்றில் அலைபாய்ந்து கரைகளைத் தொட்டுச் சென்றன. அவைகளின் மேல் ஆதவனின் பொன்னிறக் கிரணங்கள் ஆசையுடன் படிந்தன. இவைகளெல்லாம் தன் இயல்பில் இருக்கையில் ஏன் மனிதன் மட்டும் இயல்புகளைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளை வகுத்தான்? வாய் பேச “ஆண்மை”
சண்டிகா
என் கட்சிக்காரர் தான் சுமக்கும் மூன்றாவது கருவை சட்டப்படி அழிக்க நினைக்கிறார். அவர் கணவரின் முழு சம்மதமும் இதற்கு இருக்கிறது. இரண்டாவது குழந்தை பிறந்து ஒராண்டுதான் ஆகிறது. உடல் உபாதைகள், மன நோய்க்கான சிகிச்சைகள் என்று அவர் தெம்பற்று இருக்கிறார்
இச்சா, இனியா, காயா, பழமா- இரண்டாம் மற்றும் இறுதிப் பகுதி
தனது1924ம் வருட நூலான ‘பணச் சீர்திருத்தத்தில்’(Tract on Monetary Reforms) வணிகத்தின் சுழற்சியில் சாதாரண மனிதன் சிக்கிக் கொண்டு தவிக்காமல் அவனைக் காப்பாற்றும் பொறுப்பு, அரசைச் சேர்ந்தது என அவர் எழுதினார். பொருளாதார வீக்கம் மற்றும் மந்த நிலை தானாகவே சரி செய்து கொள்ளும் என்ற எண்ணத்தின் போதாமைகளை அவர் சுட்டிக் காட்டினார்.
சிலையும், கல்லும் – நூல் விமர்சனம்
தங்கத்தின் மாற்றினை அறிவதற்கு. ஆசாரி. உரைகல் என்று ஒன்று வைத்திருப்பார். கிரிதரனின் வசம் அந்தக் கல் வந்திருக்கும் போலிருக்கிறது. முதல் கட்டுரை நாம் கொண்டாடும் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம். வாசனையைக் கொண்டு, பூவை அறிவது போல, நம்மை நேரடியாக பாதிப்பது, ஒரு எழுத்தின் மூலம் எழுத்தாளனை நாம் அறிந்துகொள்வதே. ஹென்றி என்ற. கதாபாத்திரம், புனைவின் பிடிகளுக்குள் கட்டுப்படாதவன். அவனது சமநிலை. ஆச்சரியப்படுத்தும் ஒன்று. ஜெயகாந்தன் சொல்லும் மிகச்சிறப்பான ஒரு அவதானிப்பை கிரி சொல்கிறார். மனிதன் என்பவன், சமூகத்தின் விளைச்சல் இல்லை. அவன் சுயமான எண்ணங்களைக் கொண்டவன்
இச்சா, இனியா, காயா, பழமா?
உளவியலின் மற்றொரு முக்கியப் பிரிவு, ஆய்வகங்களில் அறிவியல் நிரூபணங்களின் மூலம் இதை உறுதி செய்ய முடியும் என நம்பியது. உளவியல் பகுப்பாய்வாளர்கள் போலவே, பரிசோதனை உளவியலாளர்கள், மனிதரின் அக அனுபவத் துல்லியத்தை, அறிவியல் ரீதியாகச் சொல்ல முடியும் என்றார்கள். அளக்கக்கூடிய புற நிலை உடல் செயற்பாடுகள், அகநிலையின் வெளிப்பாடுகளே என்ற அவர்களது கொள்கையால் அவர்கள் உளப்பகுப்பாய்வாளர்களிலிருந்து மாறுபட்டனர். ஜான் வாட்சனின் ‘நடத்தை விதிகள்’ மூலம், மிகப் பிடிவாதமாக, தனியான அகநிலை என்ற கருத்தை கிட்டத்தட்ட மறுத்து, ‘உணர்வு’ என்பது பிரதிபலிப்புகளின் கூட்டமைப்பு என்ற முடிவிற்கு வந்தார்கள்.
இலக்க முறை நல ஆய்வும் மருத்துவமும்
உங்கள் மருத்துவர் வருங்காலங்களில் தரப்போகும் மருந்துச் சீட்டு ஒரு மருத்துவப் பயன்பாட்டுச் செயலியாக இருக்கலாம். தற்சமயம் பயன்பாட்டில் உள்ள அல்லது கட்டமைக்கப்பட்டு வருகின்ற பல நூறு செயலிகள், உடல் நலம், மன நலம் மற்றும் நோயினைத் தானாகக் கண்டறிந்து, அதைக் கண்காணிப்பதோ, மருந்துகளைப் பரிந்துரைப்பதோ செய்யும் வண்ணம் உருப்பெற்று வருகின்றன.
