சைகை மற்றும் தொடுமொழி, மானுடர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள மட்டுமானவை அல்ல. சகல விலங்கினம், பறவையினங்களோடும் சகஜமாகத் தொடர்பு கொள்ளப் பயனாகிறவை. இவை தவிர வேறு எந்த மொழியும் புழக்கத்தில் இல்லாமல் போனது. திட்டமிட்டு அவை ஒவ்வொன்றாக அழிக்கப் பட்டன. பேச்சும் எழுத்தும் முழுவதும் இறந்துபட அடுத்த அடுத்த தலைமுறைகளில் மரபணு மூலம் கடத்தப்பட்ட குறைந்தபட்ச மொழி இல்லாமல் போனது. மொழி அழிப்பு முழு வெற்றி பெற்றது.
Category: இதழ்-304
காட்டாற்று வெள்ளம்
அகநானூற்றில் மாசாத்தியாரின் இரண்டு பாடல்கள் [324,384] உள்ளன. இப்பாடல்களில் தலைவன் வரவை நோக்கியிருக்கும் தலைவியின் உணர்வுகளை எழுதியுள்ளார்.
முல்லை நிலத்தில் கார்காலம் வந்து விட்டது. மழை நீரால் நிலம் குளிர்ந்து ஈரமாகிக் கிடக்கிறது. இந்த காலநிலையே இந்தப்பாடல்களின் உணர்வு நிலையாகவும் உள்ளது. ஆனால் தலைவனின் வரவு நோக்கியோ,தலைவன் வந்துவிட்டதாலோ,வராததாலோ,வர வேண்டாம் என்று மறுப்பதாலோ அந்த கார்காலத்தை தலைவி எவ்விதமாக உணர்கிறாள் என்பதே ஒவ்வொரு பாடலின் நிறபேதமாக இருக்கிறது.
வாழ்வென்ப அபத்தங்கள் கோர்த்த சரம்
மறக்க முடியாத எத்தனையோ இருக்கின்றன இந்தக் கதைகளில் – பழைய கிராமபோன் ரெக்கார்டுகளை அரைத்து சிரங்குக்குப் பத்துப் போட வாங்கிச் செல்வார்கள் எனும் குறிப்பு, முந்திரிக்காய் கூஜா, ஊறுகாய் பிரதானமாக உலவும் கதைக்கு ‘வினைத் தொகை’ என்ற தலைப்பு, பேச்சிலர் தங்குமிடத்தின் மாடியைப் பார்த்து, இருக்கிறானா இல்லையா என்ற எந்தக் கவலையும் இல்லாமல் ‘சடகோபா’ என்று எப்போதும் அழைக்கும் ஆழ்வார்
ஜகன்னாத பண்டித ராஜா
இந்த நூலை ஜகன்னாத பண்டிதர் இயற்றியது குறித்து சில கதைகள் உலவுகின்றன. இதில் காணப்படும் சில பாடல்கள் இளம்வயதிலேயே இறந்துவிட்ட மனைவியை எண்ணிப்பாடியதாகக் கொள்ளப்படலாம். எது எப்படியோ நமக்கு வேண்டியது இவற்றின் நயமும் சுவையும் கவிதையழகும் தான். சில பண்டிதர்கள் எழுதிய ஆங்கில விளக்கத்தின்1,2,3 துணைகொண்டு நான் இதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன்.
மிளகு அத்தியாயம் ஐம்பத்தைந்து
ஸ்னான கட்டத்திற்குள் காசிரை நுழைந்தபோது ஒரே சிரிப்பும் கலகலப்பான பேச்சுமாக ஒரு நூறு பெண்கள் அங்கே களித்திருந்தார்கள். நீண்டு வளைந்து குளம் போல் பாத்தி கட்டி, ஷராவதியை நடை மாற்றி, கிழக்கு திசையில் கொஞ்ச தூரம் வேகமின்றி மெல்ல அசைந்தாடிப் போகவைத்திருக்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் அரபிக் கடலின் முதல் அலைகள் நிலம் தொட்டுப் போக, குளியல் மண்டபம் விடிந்து கொண்டிருக்கும் பொழுதில் வெளிச்சம் பூசி நின்றது.
உபநதிகள் – பதினாறு
சரியா இருபத்தி இரண்டு வருஷத்துக்கு முன்னாடி. நான் ரயில்வேல சாதாரண சார்ஜ்மன். கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்திருந்தாங்க. ரிடைர் ஆன அப்பா கடன் வாங்கி இந்த வீட்டைக் கட்டியிருந்தார். அதனால வாடகை இல்ல, ஆனா குடும்பம்னா மத்த எத்தனையோ செலவுகள். மாசம் முடியும்போது கையில காசு மிஞ்சினது இல்ல. முதல் குறுக்குத்தெருவில இருக்கற அத்தனை வீடுகளும் மிடில் ஈஸ்ட் பணத்தில கட்டினது.
சீஸ்
மேலும் சீஸ் உருவாகும் போது இருக்கும் பாக்டீரியாக்கள் அவை பழமையாகும்போது இருப்பதில்லை. இந்த பாக்டீரியாக்களின் உடலிலிருக்கு ம்நொதிகள் சீஸில் கலந்து பழமையாக்குதலின்போது பிரத்யேக நறுமணத்தை உண்டாக்குகின்றன. எனவேதான் பலவகைப்பட்ட பாலிலிருந்து தயாராகும் சீஸ்கள் பலநூறு வகை நறுமணங்களும் சுவையும் கொண்டிருக்கிறது
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 5
அன்றைய நாளின் கடைசி டென்ஷன் ப்ராஞ்ச் முடிந்த பின் காத்திருந்தது. ஒவ்வொரு நாளும், எல்லா பரிவர்த்தனைகளும் முடிந்த பின், வங்கிக் கணக்குகள் ப்ராஸஸ் செய்து அடுத்த நாளை புதிதாக ஆரம்பிக்க வேண்டும். இந்த நிரலில் ஏதோ கோளாரு இருந்ததால், நாட் கடைசி கணக்குகள் இடித்தன. இதை எப்படியோ சோதனை செய்ய நேரமில்லை. ப்ராஞ்சில், அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டார்கள்.
தெய்வநல்லூர் கதைகள் 11
அந்தப் புள்ளையும் பாவம்தானல. அவளும் நல்லாப் படிக்க பஸ்ட் ரேங்க்கு புள்ளன்னாலும் பீத்தகாரியா இல்லாம சேக்காளியாத்தான இருந்தா. “ சிவாஜி முதன்முறையாக ஒரு “கேர்ள்க்கு” நிகழ்ந்ததைப் பொருட்படுத்தி வருந்தியது எனக்கு வியப்பாக இருந்தது. இனி நாமும் பிரேம், சிவாஜி போல “கேர்ள்ஸ்”காக யோசித்து வருத்தப்பட வேண்டுமென்று பின்னாட்களில் நாங்கள் பலரும் நினைத்துக் கொண்டதற்கு இச்செயலே அடிப்படை.
பிரார்த்தனைகள்
கடலலைகளாக
புரளும் மனம்
உருண்டோடி உன் பாதக்கரையை
அடைந்த தருணம்,
என் தலைமீது மாற்றினாய்
அழகிய உன் பிறை நிலவை.
அதிரியன் நினைவுகள் -23
நட்பின் அடிப்படையில் அமைத்துக்கொண்ட எனது சந்திப்புகளில் விலைமதிக்கமுடியாததென்று ஒன்றிருக்குமானால் அது நிகோமீடியாவைச் சேர்ந்த அர்ரியன்(Arrian) என்பவருடன் ஏற்பட்ட சந்திப்பு. சுமார் பன்னிரண்டு வருடங்கள் என்னைக்காட்டிலும் வயதில் சிறியவர், இருந்தும் அந்த இளம் வயதிலேயே அரசியல், இராணுவம் இரண்டுதுறையிலும் சாதித்து தொடர்ந்து தமது கௌவுரவத்தை உயர்த்திக்கொள்ளும்வகையில் பணியாற்றி வந்தார்
என் குழந்தைகளின் புகைப்படங்கள்
‘‘எங்கேதான் இருப்பாங்க அவங்க? ஏன் இவ்வளவு நேரம் ஆகுது? வெளியே போயிட்டா போதும், எப்ப திரும்பி வரணுங்கிறதே அவருக்குத் தெரியாது’ என்று கணவரை மனதுக்குள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் அவள். எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தபடி கதவருகே உட்கார்ந்து அவர்கள் எப்போது வருவார்கள் என்று தன் விழிகளால் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
டோமஸ் டிரான்ஸ்டிராமரின் ஹைக்கூ கவிதைகள்
கடையிலிருந்து வரும் சப்தமும்
கண்காணிப்புக் கோபுரத்தின் கனத்த காலடிகளும்
காட்டைக் குழப்புகின்றன