மாணாக்கன்

“அவர்கள் யேசுவை முதன்மை மதகுருவின் முன்னிலையில் கேள்விகள் கேட்கத் துவங்கினர். அந்த சமயத்தில் முற்றத்தில் வேலைக்காரர்கள் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டினர். அவர்களுக்கு அருகில் நின்றிருந்த பீட்டரும் கைகளை நீட்டி குளிர் காய்ந்தார். அப்போது, அங்கிருந்த ஓர் பெண்மணி, பீட்டரைக் கண்டு “இவரும் யேசுவுடன் இருந்தார்” என்றார்.  அதாவது, பீட்டரையும் இழுத்து சென்று கேள்வி கேட்க வேண்டும் என்று அர்த்தத்தில் கூறினாள். 

வைரஸ்

உத்ரன், கைகளை ஆட்டி கத்தினான், “ இந்த ஆள் ஒரு கூலிக்காரன். நேத்துதான் தெலுங்கானாவல இருந்து ஊர் திரும்பியிருக்கான். 18 நாட்கள் தனிமையில் இருந்திருக்கணும். அரசாங்கம் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணியிருக்கு. ஆனா, இவன் ரயிலிருந்து குதிச்சி தப்பியோடியிருக்கான். வீட்டுக்கு போற அவசரத்துல… வேற எதுக்கு? “ ஏளனமாக உறுமினான்.

அகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம்

இத்தனை கடுமையான எதிர் கொள்ளவேண்டியிருக்கும் சவால்களுக்கு, சோதனைகளுக்கு மத்தியில் காந்தி போன்ற ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு உண்டு, முக்கியமாகச் சுய எள்ளல் உண்டு என்பதே முதலில் ஆச்சரியமான விஷயம். ஆனால் சற்று யோசித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பது புரியும்.

ம்ருத்யோ மா

“க்ளிங்” – சற்றே வேகமாக மதுக் கோப்பைகள் இடித்துக்கொண்டது போலத்தான் சத்தம் கேட்டது. வரிசையின் முன்னே எட்டிப்பார்த்தேன். பெர்லின் செல்லும் இந்த விமான கேட்டின்முன் உருவாகியிருக்கும் வரிசையில் இரண்டாவதாக நின்றுகொண்டிருந்த தாத்தாவின் கையிலிருந்த டியுடி ஃப்ரி ஷாப் பையிலியிருந்து தரையெங்கும் இரத்தச்சிவப்பு உற்சாகமாக எல்லா திசைகளிலும் பரவியது. அவர் “ம்ருத்யோ மா”

முதல் காலடி

பயணக்குழுவில் சாஹிப்புகளைத் தவிர, என் ஷெர்பா அணியில் இருந்து ப்யு தார்கே, டா நாம்க்யால், அஜ்பா, டோர்ஜி மற்றும் நோர்பு……அன்று மட்டும் கிட்டதட்ட எட்டு மணி நேரங்கள் ஏறியிருப்போம்.
25,680 அடிகள் உயரமான நெப்ட்ஸ்ஸின் சிகரம் (nuptse) இப்போது எங்களுக்குப் பின்னால் இருந்தது. நாங்கள் அதற்கு சரிக்கு சரியான உயரத்தில் இருந்தோம். ….சூரிய ஒளி சுருங்கிக்கொண்டே வந்தது, குளிர் மேலும் கடுமையாக எங்களை போர்த்திக்கொண்டு இறுக்கி அணைத்துக்கொண்டிருந்தது. சற்று நேரம் சிரமப்பட்டுக்கொண்டு வந்த நோர்பும் டோர்ஜாவும் திடீரென நின்றார்கள்.

களியோடை

This entry is part 12 of 72 in the series நூறு நூல்கள்

கொடிய கோடையில், ஏரிகள் நீரின்றி வரள, பறவைகள் தங்க இடமின்றிச் செல்ல, இந்த வெப்பம் மிகுதியான சூழ்நிலையில், குளங்கள் நிறையுமாறு ஓர் அதிகாலையில் பெய்த மழையால் ஊர் மக்களுக்குள்ளும் பெய்த உவகை எல்லாம் ஒரு சேர என்னுள் பெய்ததது போலிருந்தது என்று அந்த பாடல் சொல்கிறது.

அலகுடைய விளையாட்டு

அந்த முதல் வெற்றியை, நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே கவனித்து கொண்டிருந்த, மறக்கவே முடியாத கணங்களை அன்றிரவு வீடு திரும்பும்போது அசை போட்டேன். கை குலுக்கியபின் திரும்பிய டோடியாவின் தளர்வான நடையை, ஸ்கோரை மைக்கிடம் சொன்ன போது மைக்கின் கண்களின் ஆச்சரியத்தை, அன்றிரவு வீடு திரும்பி காரை அணைத்த பின்பும் ரேடியாவை அணைக்காமல் pink-கின் million dreams பாடல் முடியும் வரை கேட்டுக்கொண்டிருந்ததை, காரிலிருந்து இறங்கிக் கடும் குளிர் காற்றிலும் வானத்தின் மூன்று நேர்கோட்டுத் தாரகைகளைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்ததை…அடுத்த நாள் அலுவலகப் பயணத்திலும் அசை போட்டேன். மாலை, இரவு என்று அந்த வாரம் முழுவதும் யோசித்ததை நினைத்துச் சிரிப்பாக வந்தது.

யார் பாதிக்கப்பட்டவர்கள்?

சிறையிலிருந்து/சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வெளி வந்தவனை சமூகத்தில் அனுமதிக்கலாமா? அவன் திருந்திவிட்டான் என்பது என்ன நிச்சயம் என்ற ஆரம்பக்கேள்விகளிலிருந்து அவனது இந்த நிலைக்கு, இளம் வயதில், கொடூரனாக, கொலைகாரனாக மாறியதற்கு யார் முதற் காரணம் என்ற அடிப்படை கேள்விகளுக்கான முகாந்திரங்களும் இருக்கின்றன.
கடைசி அத்தியாயத்தின் ஆரம்பத்தில், க்ரேய்க், எடி ஜே டர்னர் அல்ல என்று அன்னாவின் நம்பகமான நபர் தெரிவித்தவுடன் அவள் அதிர்ந்து போகிறாள்.

அப்பா அன்புள்ள அப்பா…

சென்னையில் வசித்தபோதும் சரி, இங்கிலாந்து வசிக்கச் சென்ற போதும் சரி, விடுமுறைக்கு ஈரோடு வரும் போதெல்லாம் இரவுகளில் கால் பாதங்களில் காயத்திருமேனி எண்ணையை நன்கு அழுத்தித் தடவி விடுவேன். முதலில் முட்டி, பின் படம். தேய்க்க தேய்க்க அப்பா, கால் எரிச்சல் அடங்க, சுகமாக தூங்க ஆரம்பிப்பார். நான் டிவியைப் பார்த்துக்கொண்டே தேய்த்துக்கொண்டிருப்பேன். சில சமயங்களில் “ம், போதும், நீ போய் தூங்கு” என்று மெல்ல கண் திறக்காமல் சொல்வார். சில சமயங்களில் நானாக நிறுத்தியதும் ஓர் தலையசைப்பு. காலையில், “நேற்றிரவு நன்கு தூங்கினேன்” என்று புன்னகை போதுமானதாக இருந்தது. பாதங்களை பார்க்க முடியவில்லை. வேஷ்டியைக் கொண்டு கால்கள் மூடப்பட்டிருந்தன.

சித்திர சுவர் நெடுஞ்சேனை

தேவரையும் மருள் கொள்ளச்செய்யும் அழகுடைய பெண்கள், அணிகலன் கள் அணியாமல், பூக்களை உதிர்ந்து விட்ட, இலையுதிர் கால கொம்புகள் போல் அவ்வூர்வலத்தில் சென்றார்கள்.

தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர்,
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார்.

இப்படி காட்சிகளை மாபெறும் உயரத்தில், பிரமாண்டத்தில் வானை மறைக்குமாறு சொல்லிவருகின்ற கம்பர், ஓர் இடத்தில் சரசரவென இறங்கி, இயல்பாக, எளிய ஆனால் புன்னகைக்க வைக்கும் ஓர் சித்திரத்தைக் காட்டுகிறார்.

வெங் கனல் கதுவியது ஒப்பன

காரணம் மிக எளியதுதான். செம்மை நிறம் கொண்ட பாத சுவடுகள் செம்மாணிக்க நிறமுடைய பாறைகளில் தெரியாது. அதே சமயம், பச்சை நிறமுள்ள பாறைகளில் நன்கு தெரிகின்றன. பச்சை பாறைகளில் சிவப்பு பாதச் சுவடுகள்! கவரும் அடர் வர்ணக்கலவைகள்…இடை இடையே இருக்கும் மாணிக்கப் பாறைகளில் மறைந்தும் பின் வரும் பச்சைப் பாறைகளில் தொடர்ந்தும்!

தீரா பாரிஸ் பக்கங்கள்…

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த மாற்றத்தை – தனி மனித, சமூகங்களில் இருந்து தேசங்களின் தலைவிதிகளை வரை நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றத்தை பின் புலத்தில் கொண்டிருப்பதே இந்த நூல் வழக்கமான புலம் பெயர்வு ஆவணங்களிலிருந்து விலகித் தெரிவதற்கு முக்கிய காரணங்களாக எனக்குத் தோன்றுகிறது.
நூலில், ஒரு பாண்டிச்சேரி தமிழர் செல்வத்திடம் கேட்ட கேள்வியையையும் அதற்கு செல்வம் அவர்களின் பதிலையும் குறிப்பிட்டு கட்டுரையை முடிக்கலாம் என நினைக்கிறேன்.
தூதரகப்பக்கம் அறிமுகமாகிக்கொண்ட பாண்டிச்சேரி தமிழர் கேட்ட கேள்வி முதலில் வேடிக்கையாக இருந்தாலும், வேடிக்கை இல்லை.

மௌனியின் “அழியாச்சுடர்”

“அழியாச்சுடர் சிறுகதை ஒரு நவீன ஓவியத்தைப்போலவே எழுதப்பட்டுள்ளது. அதன் வடிவம் மட்டுமல்ல அதன் கதைமாந்தர்களும் துல்லியமற்ற சூழலிலேயே நிகழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் பேசும்போது பேச்சு எழுகிறதா எனத் தெரியவில்லை. அவர்கள் அழுகைக்கான காரணங்கள் அவர்களுக்கே தெரிவதில்லை. அவர்கள் காணும் காட்சிகளும் உண்மையா அல்லது கற்பனையா என்பதும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை. அவர்கள் உண்மையில் காட்சிகளை அல்ல அர்த்தங்களை மட்டுமே கண்டுகொள்கிறார்கள். காட்சிகள் மீது அவர்களே ஏற்றிக்கொண்ட ஏதேதோ அர்த்தங்கள். “

லண்டனில் இலக்கிய உரையாடல்கள் – புதுமைப்பித்தனின் “செல்லம்மாள்”

வானத்திலே தறிகெட்டுச் சிதறிக் கிடந்த நட்சத்திரங்களில் திரிசங்கு கிரகமண்டலம் அவர் கண்ணில் பட்டது. அவருக்கு வான சாஸ்திரம்ம் தெரியாது. சங்கு மண்டலத்தின் கால், தூரத்தில் தெரிந்த கறுப்பு ஊசிக்க் கோபுரத்தில் மாட்டிக் கொண்டு அஸ்தமிக்கேவா உதயமாகேவா முடியாமல் தவித்தது. — சங்கு மண்டலம் crux எனப்படும் நட்சத்திரக்கூட்டம். நமது புராணத்தில் அது திரிசங்கு சொர்க்கம் – அங்கும் போக முடியாமல் இங்கும் வரமுடியாமல் நடக்கும் ஊசலாட்டத்தைக் குறிக்கிறது. இங்கு செல்லம்மாளின் மனநிலை அப்படிப்பட்டது தான். அவளது சமூக மனம் கணவன் வேலைக்குச் அனுப்ப நினைக்கிறது, உடல் வியாதியும் மனமும் தனிமையை உணர்ந்து தவிக்கிறது“

What a wonderful world

நகரச் சதுக்கத்தைத் தாண்டியபின் மறுபடியும் சைக்கிளில் ஏறி நகர தேவாலயத்தை ஒட்டிய பெரும் கற்கள் பாவித்த தெருக்களில் சற்று வேகமாக மிதித்தோம்.
இரு புறங்களிலும் உயர உயர நூற்றாண்டுகள் தாண்டிய சுவர்களுக்கும் நடுவில் தெருவே குறுகிய கால்வாயாகத் தோன்றியது. எதிரில் இன்னொரு சைக்கிள் வந்தால் கூட உரசும் அபாயக் கால்வாய். ஐரோப்பிய முடுக்கு என்ற வார்த்தை இந்த ஊருக்கு மாறி வந்த போதே தோன்றி இருக்கிறது. அன்று போலவே இன்றும் சிரிப்பு வந்து விட்டது.
தெரு முடிவில் திரும்பி இன்னொரு சற்றே பெரிய கால்வாயில் கலந்தோம்.

கைவிளக்காம் கடவுள் திங்கள்

எத்தனையோ துடர்பாடுகளுக்கு, மனசஞ்சலங்களுக்கு பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு ஆறுதலானச் சொல், ஒரு கனிவான பார்வை, சரியான வழி காட்டும் கரம், சட்டென கண்களில் படும் தேவாலயச்சுவர்களில் தென்படும் நம்பிக்கை வாக்கியம் எதுவாகிலும் அது கடவுள் திங்கள்தான் இல்லையா?

குணமும் குடிமையும் குற்றமும்

ஒரே முன் பல் மட்டும் தெரிய “அந்த அழகு மலை பசங்க கூட இன்னி உன்னப் பார்த்தேன்? ” என்று நான் பக்கத்தில் சைக்கிளை வைத்துக்கொண்டு நிற்கும் போதே பாஸ்கியை நோக்கி உறுமிய குரலை ஒரு காலத்தில் கேட்டு கேட்டுப் பழகிவிட்டு இப்போது, “நல்லா இருக்கிங்களா தம்பி?” என்ற குரலைக் கேட்கும் போது அத்தனை சங்கடமாக உணர்ந்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டேன். நன்கு குழைந்த சாதம் போலிருந்தது.

நல் அணி மணிச் சுடர் தவழ்ந்திட நடந்தாள்

மேற்கிந்திய (முன்னாள்) பந்துவீச்சாளர் அம்ப்ரோஸ் – அவர் தோளில் இருந்து கை விரல்களை நோக்கி ஒரு எறும்பு பயணத்தை ஆரம்பிக்குமானால் வெகு தூரம், நேரம் பயணம் செய்துதான் கை விரல்களை அடையவேண்டும். மூன்று selfie stickகள் ஒன்றன் பின் ஒன்றாக கட்டிய தூரம். அந்த விரல்களின் நுனியில் சிவப்பு கிரிக்கெட் பந்து மஞ்சள் எலுமிச்சை பழம் போல் ஒட்டிக்கொண்டு இருக்கும்.
இவர் ஓடி வந்து பந்து வீசுவதை பிட்சின் பக்கவாட்டில் இருந்து பார்த்தால் என்னென்னவல்லாம் தெரியும்?

அறம் செய்த அறம்

சில படைப்புகளை படிக்கும் போதே படைப்பாளிகளின் சூழ்நிலையைப் பற்றி மனதில் ஒரு வரி தனியாக, தொலைக்காட்சி சேனல்களில் அடியில் “முக்கியச் செய்திகள்” ஓடுவது போல் ஓடிக்கொண்டே இருக்கும். கம்பராமாயணத்தைப் படிக்க ஆரம்பித்துச் சில அமர்வுகளிலேயே தோன்றியது, கம்பனின் பார்வை ஒரு drone camera பார்வை அல்லது பெருங் கழுகுப் பார்வை என்று. எதையும் “உலகத்தோடு” அல்லது உலகம் யாவையுமாகத்தான் பார்க்கிறார். மேலும், கடலை ஒட்டிய பெரிய மலைத் துண்டின் உச்சி மேல் இருப்பிடம் அமைத்து அங்கிருந்து தினமும் கடலையை நோக்கி அமர்ந்துதான் கம்பராமாயணம் இயற்றியிருப்பாரோ என்று தோன்றியது.

தனியும் தானும் அத் தையலும் ஆயினான்

ஒரு பாடல் தரும் வாசிப்பு அனுபவத்தை வாசகர்கள் நெருக்கமாக உணரும்போது அது அவரவருக்கான அனுபவமாக ஆகிவிடுகிறது. ஒரே appதான், ஆனால் அவரவருக்காகவே தனித் தனி session!

அலகுடை நீலழவர் – பெருமாள் முருகனின் 'ஆளண்டாப் பட்சி'

“நான் செத்துப்போனா ரெண்டு நாளு வெச்சிருந்து ஊருல இருந்து ஆளெல்லாம் வரட்டுமின்னு இந்தக் காட்டுக்குள்ளயே என்ன பொதச்சுடுங்க, வெள்ளாமைக்கு எருவாயி வெருசா வெருசம் பயிராகவும் செடிகொடியாவும் மொளச்சு வந்து உங்க முகம் பாத்துக்கறன்”

மஹா நதி – நீலகண்டப் பறவையைத் தேடி – வாசிப்பனுபவம்

நாவலின் ஒவ்வொரு சம்பவத்திலும், கட்டத்திலும் மனிதரிலும் ஒட்டி இயல்பாக, எத்தனை தட்டினாலும் ஒட்டிக்கொண்டிருக்கும் கடற்கரை மணலாக இயற்கை. மகேந்திர நாத், பெரியவர், பார்வையிழந்தவர், சூரிய உதயத்தைக் காண பல வருடங்களுக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வருகிறார். பேரன்கள் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கிறார். வழியிலிருக்கும் எல்லா மரங்களின் பெயர்களையும் சொல்கிறார். பூ, மீன் எல்லாவற்றையும் வாசனை உணர்ந்தே சொல்லிவிடுகிறார்.

விக்டோரியன்…

கிட்டதட்ட அச்சு வெல்லம் மாதிரியான ஒரு நினைவுச் சின்னம் அமைந்திருந்தது. அதன் ஒரு பக்கத்தில் இரண்டாம் உலகப்போரில் உயிர் நீத்த இந்த டவுணைச்சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி குறிப்பு இருந்தது. இன்னொரு பக்கம் முதல் உலகப்போரில் இறந்தவர்களுக்கு. மூன்றாவது பக்கம் என்னவாக இருக்கும் என்ற யோசனை வந்தது. இப்போது வழக்கமான எண்ணம் தலைகாட்ட ஆரம்பித்தது. நான் இன்னொரு பக்கத்தைப் பார்க்கபோகும்போது மற்ற பக்கங்களில் எழுதியிருந்தவை மறைந்துவிடும்…இந்த எண்ணம் வந்தவுடன் என்னுள் பதற்றம் மெல்ல புகையாய் எழுந்தது.

வைரமணி நீரலைகள்…

முதலில் பருப்பு வேகும் வாசனை, குக்கர் விசில், பின் வெங்காயம் வறுபடும் வாசனை, முருங்க இலை நெய்யில் வறுபடும் வாசனை, சற்று நேரம் கழித்து சாம்பார் கொதிக்கும் சத்தமுடன் சாதம் வேகும் வாசனை என்று சமையல் மெல்ல, மெல்ல விடிந்து உச்சி வேளையாக வசந்தாக்கா பாத்திரங்களை ஷெல்பின் அடியில் அடுக்க ஆரம்பித்தார்.

வெளிச்சமும் வெயிலும்

சில சமயங்களில் அந்தப் பக்கமாக வரும் மேகங்களிலும் அந்த நிறம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொள்ளும். மேக ஓரங்களில் சிவந்து, சிவந்து ஏதோ கடுமையான வர்ணத்தில் ஜொலிக்கும். எரியும் டார்ச் விளக்கை மூடிப் பிடித்துக் கொள்ளும் கை விரல்களின் வர்ணத்தில். கொஞ்சம் எட்டி எப்படியாவது பறந்து அதன் அருகில் போய்விட்டால் நானும் அந்த வர்ணத்திற்கு மாறிவிடுவேன்.

பிரித்தானிய சின்னத்திரையில் குற்றப்புனைவுகள்

இந்த எழுத்தாளர் எங்கு போனாலும் அங்கு ஒரு திருட்டு, கொலை நடந்துவிடும்! இவர் மட்டும் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்…:) மற்றவர்கள் எப்படியோ, நான் இவரை சந்திக்க, இவர் கலந்துகொள்ளும் விழாக்களுக்கு போக மாட்டேன், இவர் விடுமுறைக்கு போகும் ஊர்களுக்கெல்லாம் தலை வைத்துக்கூட படுக்கமாட்டேன்!

மணியம் செல்வன்

தேவைக்கு அதிகமாக வெட்டிவிட்ட சுண்டுவிரல் நகம் போல உறுத்தியும் உறுத்தாமலுமான தூறல் மாலையில் மைதிலியின் கேட்டதற்காக நான் அன்று உமாவை, நனைந்த ம.செ. ஓவியத்தை என் பைக்கில் அவள் மாம்பலம் பெரியப்பா வீட்டில் கொண்டுவிட்டேன்.

யாகாவாராயினும் நாகாக்க

மனதில் பட்டதை வாயைக் கட்டுப்படுத்த முடியாது அவனறியாமல் சொல்லிவிடுவது வழக்கம். யோசித்து சொல்லலாமா சொல்லக்கூடாதா என்று யோசித்து ஓரளவிற்கு கட்டு்ப்படுத்தி வைப்பான். ஆனால் அடுப்பில் பாலை வைத்துவிட்டு எதையோ யோசித்துக்கொண்டிருக்கையில் கண் முன்னாலேயே பால் பொங்குவது மாதிரி சொல்வது தெரிந்தே கட்டுப்படுத்த முடியாமல் சொல்லிவிடுவான்.

வெகுளாமை

பெரியசாமிக்கு இந்தத் துறையில் கிட்டதட்ட பதினோரு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம்.`பொய்` அனுபவ வருடங்கள் கலக்காமல் முறையாக கேம்பஸ் இண்டர்வியுவில் நுழைந்து முதல் ஐந்து வருடங்கள் புரோக்ராமராகவே இருந்தார், கடுமையாக, அதிகம் பேசாமல் உழைத்தார். மாடுல் லீட், டீம் லீட், ப்ராஜெக்ட் லீட் என்று படிப்படியாக ப்ராஜக்ட் மேனேஜராக மௌன உழைப்பு. இப்போதா, துறைக்கு வருபவர்கள் இரண்டு, மூன்று வருடங்கள் ஆகிவிட்டால் போதும் லீட் பொசிஷன் எதிர்பார்க்கிறார்கள். கோட் (code) அடிக்க மாட்டார்களாம். வளர்ந்துவிட்டார்களாம். மேற்பார்வைதானாம். ராஸ்கல்கள்!

பிரிட்டன் – 2012

அத்தனை ஆரவாரமான, இசைக்கும் விளக்குகளுக்கும் நடுவினிலே சன்னமாய் அவரிடம் போய் “ஸார், ரிசஷன், ரிசஷன்னு சொல்றாங்களே அது பத்தி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்க ஆசை. எதற்கு வம்பு. பிரிட்டிஷ் துப்பறியும் புத்தங்களின்படி அங்கும் பக்கத்திலிருக்கும் கிரின், ஜேம்ஸ், ஹைட் பார்க்குகள் முழுக்கவும் MI5/6 துறை அதிகாரிகள் இருப்பார்கள். அந்த பார்க்குகளிலும் லண்டன் ட்யூப்புகளிலும் ரகசிய, சங்கேத வார்த்தைகளை, பெட்டிகளை மாற்றிக் கொண்டிருப்பார்கள். நாம் ஏன் அவர்களுக்கு வேலை வைக்க வேண்டும்…

சுற்றம்

முதல் நாளிரவு சாப்பாட்டில் திருப்தியின்மை கண்களில் தெரிய தெருக்கோடி முதலியார்
இன்னும் சில வருடங்களில் விபத்தில் உடல் சிதறப்போகிற சபாரி சூட் பழனி சித்தப்பா
குருப் போட்டோவிலும் கால் வீக்கம் தெரியும் வில்லுக்குறி அத்தை

முதல் கிரிக்கெட் வெற்றி – இங்கிலாந்து மண்ணில்!

எல்லாரையும் போல நானும் ஒரு சராசரி இந்தியன் என்பதிற்கு கிரிக்கெட் ஆர்வமும் ஒரு காரணி. பள்ளி, கல்லூரி நாட்களில் ஊரிலுள்ள அத்தனை வெயிலும் எங்களது தலைகளில்தான். இரயில் பயணங்களில் தென்படும் கிரிக்கெட் காட்சிகளைப்பார்த்து, கண் பார்வையிலிருந்து மறைவதிற்குள் ஒரு பந்தையாவது பார்த்துவிடவேண்டும் என்று தோன்றுவது சகஜம்தானே!

ஸ்குரில்

அந்த வார இறுதியில் ஸ்குரில் குடும்பம் எங்கள் ப்ளாட்டிற்கு வந்திருந்த போது அந்த சின்ன பையனின் “வால்தனத்தின்” கடுமை பிடிபட்டது. சோபாவின் மேலிருந்து உணவு மேசைக்கு ஒரு சாடல்; அங்கிருந்து பக்கத்து சன்னலுக்கு மறு சாடல்…ஸ்குரிலும் மனைவி ஸ்குரிலும் அவனை ரொம்ப கண்டுக்கவே இல்லை.மூன்றாவது தாண்டலில் சன்னல் திரையை பற்றிக்கொண்டு கீழே விழுந்துவிட்டான். மறு நிமிடத்தில் துள்ளி சமையலறையில் ஓடிப்போனான்; இரு நிமிடங்கள் கழித்து உள்ளே போன மீரா அலறி காஸ்ஸை அணைத்துவிட்டு பையனையும் கொஞ்சம் இறுகவே அணைத்து, இருண்ட முகத்துடன் வந்தாள்…