ஒரு நூற்றாண்டு நினைவுகள் – இதழியலாளர் மூவர்

வ.வே,.சு.ஐயரும், சுப்பிரமணிய சிவாவும் நேரடியாக  சுதந்திர போட்டத்தில் ஈடுபட்டவர்கள். மாதவையாவைப் பொறுத்தவரையில், அவர் மிகுந்த தேசபக்தியினைக் கொண்டிருந்தாலும், அரசாங்க உத்தியோகத்தில் இருந்தபடியால், அரசியல் வாதங்களில் தலையிடவில்லை. தேச விடுதலை சார்ந்தும், தமிழ்ச் சமூக மேம்பாடு சார்ந்தும் விசாலமான கனவுகளைக் கொண்டிருந்த அக்காலத்திய இளைஞர்கள் இவர்களுக்கிடையேயான ஒற்றுமை என்னவென்று ஒப்பிடுகிறபோது, இம்மூவர் கண்ட ஓரே கனவைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.

வேலாயுத  முத்துக்குமார்  கவிதைகள்

விடிகாலை கார்த்திகை மழையில்
முற்றத்து கூடம் நிரம்பிவிட்டது.
மனப்பிறழ்வுற்ற அம்மா
வாரியலால் பெருக்கிக் தள்ளுகிறாள்.
பெருக்கப் பெருக்க நிறைகிறது மழை.
ஓர் கணத்தில் மழையோடு
உரையாடத் தொடங்குகிறாள்

கண்டறியாதன கண்டவர்

வருடக்கணக்காக ல.ச.வும், கு.அ.வும் ஒன்றாக இருந்து எத்தனையோ நுணுக்கமான கருத்துக்களை விவாதித்தும் ஆராய்ந்தும் அனுபவித்தும் இருந்திருக்கிறார்கள். இரண்டு, மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை, ஒரு வேளை, பலகாரம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பொழுது போவதே தெரியாமல் உயர்ந்த விஷயங்களைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். சில நாட்கள், இரவு பதினோரு மணிக்கு மேல் பன்னிரண்டு மணிக்கு மேல் வாழைப்பழமாவது கிடைக்காதா, இல்லை வெற்றிலை பாக்காவது கிடைக்காதா என்று சென்னைப் பட்டிணத்துக் கடை வீதிகளில் தேடி அலைந்திருக்கிறார்கள்.

வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்

மே 1974இல் தலைஞாயிறு இலக்கிய அமைப்பு பதிப்பித்த, 32 கவிஞர்களின் 42 கவிதைகளை உள்ளடக்கிய ‘நாற்றங்கால்’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த வண்ணதாசனின் (கல்யாண்ஜி) இரண்டு கவிதைகளில், ‘குரங்கின் குரங்குகளால் குரங்குகளுக்காக‘ என்கிற தலைப்பில் வெளியான கவிதை இது.   பயத்துடன் விடியும் காலைகுரங்குகள் வருமோ என்றுமதில் சுவர் ஓரம் “வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்”