சிறுகோட்டுப் பெருங்குளம்

This entry is part 11 of 11 in the series கவிதாயினி

மல்லர் போர் என்பது  எதிர்ப்பவரை குறிப்பிட்ட பொழுது தாக்குதல் நடத்தவிடாது செயலிழக்க செய்தல். அந்த மல்லனின் வீரத்தில் திகைப்புற்று மையல் கொண்ட ஊர், வெளியூரில் இருந்து வந்த மல்லனை வென்றவனாக ஏற்றுக்கொள்வதா.. வேண்டாமா என்று தடுமாறுகிறது. அங்கே கூட்டத்தில் மற்பார் காண வந்த ஒருத்திக்கு அவன் மீது மையல் உண்டாகிறது. அவளும் அவனை  காதலிப்பதா? வேண்டாமா? என்று இருநிலைகளில் அலைகழிகிறாள்.

மறம் பாடுதல்

This entry is part 10 of 11 in the series கவிதாயினி

புறநானூற்றின் போர்ப்பாடலில் மாதவிடாய் பெண்களை உவமையாகக் கூறுமளவிற்கு உவமை அற்றுபோனதோ என்று வாசிக்கும் போது தோன்றியது. செய்யுள் அழகியலில் உவமைச்சிறப்பிற்கு முக்கியமான இடம் உண்டு. எந்த உவமையும் அழகற்றது இல்லை. ஒரு உவமை எந்தப்பாடலில் எந்தப்பொருளில் எங்கு வைக்கப்படுகிறது என்பதே அதன் அழகை தீர்மானிக்கிறது

சந்தனம் வாடும் பெருங்காடு

This entry is part 9 of 11 in the series கவிதாயினி

சங்ககாலத்தில் இளம் பெண்கள் முருகு பிடித்து விட்டது என்று முருகனுக்கு பலி கொடுத்து குறிகேட்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அதற்கு முருகு அயர்தல் என்று பெயர். வழக்கத்துக்கு மாறாக தலைவி சோர்வும் தனிமையும் கொள்வதை  அன்னை கவனிக்கிறாள். அவள் உள்ளம் திடுக்கிட்டு விழித்து குழந்தை பெண்ணானதை உணர்ந்திருக்கும். அவள் அதை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தத்தளிக்கிறாள். வழிபாடு மூலம் எதையோ அறிவிக்கிறாள்.

வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும்

This entry is part 8 of 11 in the series கவிதாயினி

பதிற்றுபத்து புறநானூறுக்கும் முந்தைய காலத்தில் எழுதப்பட்டது. பதிற்றுப்பத்தில் எழுதிய ஒரே ஒரு பெண்பால் புலவர்  காக்கைபாடினியாார்.  இவர் ஆடுகோட்பாட்டு சேரலாதனின் அவைப்புலவராக இருந்துள்ளார். இந்தப்பாடல்களில் பாடப்பட்ட சேரலாதன் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் அதே ஔியுடன் காலத்தில் நிற்கிறான். இன்று வாசிக்கும் போதும் அவன் கண்ணி தாழாது நிற்கிறது

தீரத்தின் ஔி

This entry is part 7 of 11 in the series கவிதாயினி

வெள்ளரிகாயின் விதைபோன்ற அரிசி சோற்றை நீரிலிட்டு உண்டு,பரல்கற்கள் உள்ள வெறும்தரையில் படுத்துறங்குவதை விட எனக்கு அந்த பெருங்காட்டின்  ஈமப்படுக்கை தாமரை பூத்த குளம் போன்றது என்கிறாள். கண்கலங்காது கடந்து செல்ல முடியாத பாடல் இது. போரில் கொல்லப்படுவது வேறு. இது வேறு இல்லையா? 

இயற்கையை நோக்கியிருத்தல்

This entry is part 6 of 11 in the series கவிதாயினி

இற்றைதிங்கள் அந்நிலவில் 6 கழார்க்கீரன் எயிற்றியார் சங்ககாலக்கவிஞர். இவரின் பாடல்கள் அகநானூறு, நற்றிணை,குறுந்தொகை பொன்ற சங்கஇலக்கிய தொகை நூல்களில் உள்ளன.  இவர் காவிரிபூம்பட்டிணத்திற்கு அருகில் உள்ள கழார் என்னும் ஊரில் பிறந்தவர். கீரன் என்பரை மணந்தார். எயிற்றியார் என்பது குறிஞ்சி நிலப்பெண்ணை குறிக்கும் பெயர். ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களில் “இயற்கையை நோக்கியிருத்தல்”

காத்திருப்பின் கனல்

This entry is part 5 of 11 in the series கவிதாயினி

இந்தப்பாடலும் நீண்ட நாள் பிரிவைப் பாடும் பாடல். மாமரத்தின் கிளையில் மின்னும் கரியநிறத்தில் குயில் அமர்ந்திருக்கிறது. அந்தக்குயிலை பார்த்தபடி தென்னம் நெய்யிட்டு வாரப்படாத தன் கூந்தலை வருடிய தலைவி பிரிவை நினைத்து கலங்குகிறாள். மாம்பூக்களின் மஞ்சள் நிற மகரந்ததுகள்கள் கரியகுயில் மீது படிந்திருக்கிறது.

காட்டாற்று வெள்ளம்

This entry is part 4 of 11 in the series கவிதாயினி

அகநானூற்றில் மாசாத்தியாரின் இரண்டு பாடல்கள் [324,384] உள்ளன. இப்பாடல்களில் தலைவன் வரவை நோக்கியிருக்கும் தலைவியின் உணர்வுகளை எழுதியுள்ளார்.
முல்லை நிலத்தில் கார்காலம் வந்து விட்டது. மழை நீரால் நிலம் குளிர்ந்து ஈரமாகிக் கிடக்கிறது. இந்த காலநிலையே இந்தப்பாடல்களின் உணர்வு நிலையாகவும் உள்ளது. ஆனால் தலைவனின் வரவு நோக்கியோ,தலைவன் வந்துவிட்டதாலோ,வராததாலோ,வர வேண்டாம் என்று மறுப்பதாலோ அந்த கார்காலத்தை தலைவி எவ்விதமாக உணர்கிறாள் என்பதே ஒவ்வொரு பாடலின் நிறபேதமாக இருக்கிறது.

மொழியென்னும் ஆடி

This entry is part 3 of 11 in the series கவிதாயினி

ஆதிமந்தியார்,ஊண்பித்தை,ஓரிற்பிச்சியார்,காமக்கணிப் பசலையார், காவற்பெண்டு,குமிழிஞாழலார் நப்பசலையார் மற் றும் குறமகள் இளவெயினி ஆகியோரின் பாடல்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஒருபாடல் எழுதியுள்ளார்கள். சங்கப்பாடல்களில் துணங்கை கூத்து என்ற கூத்தினைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பெண்கள் கைக்கோர்த்து ஆடும் நடனம் என்று சொல்லப்படுகிறது. திருவிழாவில் தேர்வலம் முடித்த மாரியம்மன் கோவில் “மொழியென்னும் ஆடி”

பேரன்பை அருளும் துக்கம்

This entry is part 61 of 72 in the series நூறு நூல்கள்

குழந்தை பெறுவதற்காக ‘பேக்கேஜ் மெடிசின்ஸ்’ என்று தனக்கு இல்லாத நோய்க்கெல்லாம் மருந்து சாப்பிடும் நந்தினியிடம்  ‘உன் உடம்பு தானே ஊரான் வீட்டுப்பண்டமா’ என்று தோழி கேட்பாள். ஒரு மனித உடல் இயந்திரமாக பார்க்கப்படும் அவலம் இந்த சிகிச்சைகளில் அப்பட்டமாக நடந்தேறுகிறது. 

சங்கப்பெண்கவிகள்

This entry is part 2 of 11 in the series கவிதாயினி

தலைவன் பிரிந்து சென்ற காலத்தில் தலைவி முற்றத்தில் பழுத்திருக்கும் வேம்பை பார்க்கிறாள். அவர் செல்லும் பாலை நிலத்திலும் வேம்பு பழுத்திருக்கும் காலம் இது தானே? என்று தோழியிடம் கேட்கிறாள். கிளி அந்த வேப்பம்பழத்தை கொத்தி தின்பதற்கு வாயில் வைக்கிறது. இந்தக்காட்சி பொன்ஆசாரி தாலிநாணில் பொற்காசைக் கோர்ப்பதை நினைவுபடுத்துகிறது. அவர் சென்ற வழியில் இதே போல கிளிக்கூட்டம் பழுத்த மரங்களில் அமரும்தானே, அதைக் கண்டாவது என் நினைவு வருமா? கேட்கிறாள்

இற்றைத் திங்கள் அந்நிலவில் -1

This entry is part 1 of 11 in the series கவிதாயினி

காவற்பெண்டு பாடிய பாடலில் ‘புலி சேர்ந்து போகிய கல்லளை’  என்ற வரி தேர்வுகளில் கேள்விகளாக கேட்கப்படும். ‘புலி இருந்து சென்ற கல்குகை போன்று, அவன் இருந்த வயிறு இங்கே இருக்கிறது..  அவன் போருக்கு சென்றுள்ளான்’ என்று புறநானூற்று தலைவி சொல்கிறாள். இது போன்று சங்கப்பாடல்கள்  இளம்வயதில் அறிமுகமாகியிருந்தாலும்,சிறவயதில் அதை நாம் உள்வாங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. சங்கப்பாடல்களை வாசிக்கும் போது அதில் எதாவது ஒருவரி மனதில் படிந்து தித்திக்கும்  அல்லது வெறுமையைப் படரவிடும்.

மூங்கில் காடு

“புல் கொண்ட விழைவுதான்  மூங்கில்..புற்களைத்தான் முதன்முதலாக இந்த நிலத்தில் உயிராக படர்ந்தனவாம்.  அவை சூரியனை நோக்கி தவம் இருந்தன. சூரியன் தன் அதிகாலை ஔியால் புல்வெளியை தொட்டுப்பரவி பசும் ஔியே உருவாக நின்றாராம். எதற்கான தவம் என்று புற்களை எழுப்பி கேட்டாராம்..பரவுவதைப்போலவே நாங்கள் உயர்ந்து வளர வேண்டும் என்று புற்கள்  கேட்டதாம். வேகமாக பரவி நிலத்தை மூடிவிடும் நீங்கள் உயரமாக வான் நோக்கி எழுந்து வளர வேண்டும் என்றும் வரம் கேட்பது சரியா  என்றாராம். மிச்சமுள்ள  தாவரங்களுக்கு நிலம் இல்லாமல் போகாதா என்றாராம்? இல்லை நாங்கள் தான் முதலில் உங்கள் ஔியை வாங்கி உயிரானோம். காலகாலமாக தரையில்  வளர்ந்து மடியமுடியாது என்று புற்கள் ஒருசேர சொல்லயதும் சூரிய தேவர் புன்னகைத்து அப்படியே ஆகட்டும் நீங்கள் உங்கள் விழைவுபடியே உயர்ந்து வளருங்கள். ஆனால் மடிவதற்கு முன் இருதிங்களில் உங்களின் இந்த விழைவு பெருகும். அப்போது நீங்கள் வான்நோக்கி எழுந்து இப்போது போலவே அனைவரும் ஒன்றாய் பூத்து இந்த நிலத்தில் உயர்ந்து நின்று ஒன்றாய் மடிவீர்கள்..” என்று வரம் அளித்தாராம்.

கண்ணாடிப் பரப்பு

அடுத்தநாள் ‘மெகபூபா’ பாடலை மிக மெல்லிய சத்தத்தில் வைத்து தொட்டிக்கு மேலே பிடித்துக்கொண்டேன். வா வா என் அன்பே வாழ்வின் பேரன்பே என்று அலைபேசி அதிர்ந்தது. என்னை போலவே அதற்கும் அந்த ஒலி இனிய அதிர்வாக இருக்குமா என்று தெரியவில்லை. உடனே இந்த மீன் ஆணா பெண்ணா என்று முதன்முதலாக கேள்வி வந்தது. இத்தனை நாள் என்னைப்போலவே அதையும் பெண் என்று நினைத்திருந்தது எத்தனை மடத்தனம் என்று பாடலை நிறுத்தினேன்.

சிலுவைப் பாதை

இங்க இருக்கறதுதான் பிடிச்சிருக்கு. அங்க ரொம்ப அமைதியா இருக்கும். சின்ன சத்தம் கேட்டாக்கூட பயமா இருக்கும்.எந்த சிஸ்ட்டருக்காவது ஒடம்பு சரியிருக்காது. யாராச்சும் செத்து போவாங்க. எல்லாரும் ரொம்ப வயசானவங்க. ரொம்ப கஸ்ட்டப்படுவாங்க..பாவமா இருக்கும். அழுகையா வரும். இங்க மாதிரி ஜாலியா இருக்க முடியாது.”

கலைச்செல்வி – நேர்காணல்

காந்திக்கும் அவரது மூத்த மகன் ஹரிலாலுக்குமிடையே நிலவிய முரண்பட்ட உறவுமுறை குறித்தும் சிறுகதை எழுதும் ஆர்வம் வந்தது. ஆனால் அதற்கான தகவல்கள் போதாத நிலையில் பல நுால்களை தரவிறக்கியும் மொழி பெயர்த்தும் வாசிக்கத் தொடங்கினேன். அது எழுத்தாக வெளிப்பட்டபோது சிறுகதைக்குள் அடங்கவியலாததாக இருந்தது. நாவலாக எழுதத் தொடங்கினேன். அதற்கு காலமும் நேரமும் கைக் கொடுத்தது என்பேன்.

சிவகாமி நேசன் என்னும் இனிமை

பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட பக்திக் கவிஞரான அக்கமகாதேவி சிவனை நினைத்து எழுதிய வசனங்களை எழுத்தாளர் பெருந்தேவி மொழிபெயர்த்துள்ளார். அவை ‘மூச்சே நறுமணமானால், என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. நூற்றி இருபது வசனங்கள் கொண்ட இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் “சிவகாமி நேசன் என்னும் இனிமை”

கிஞ்சுகம்

வசிஷ்டர் … .. நிதானமானகுரலில் பேசத்தொடங்கி இறுதியாக, “தசரதன் தன் வேள்வியால் தன்னை எரித்து உண்டாக்கிய பெருந்தீ ராமன். இன்று இளையராணி தொடங்கியிருக்கும் நீண்ட பெருமழையால் அந்த பெரும்வேள்வித்தீ அணையாதிருக்க சீதை உடனிருக்க வேண்டும். சூரியனை அடிவயிற்றில் காக்கும் புவியளித்த வெம்மை சமித்து சீதை. காக்க வேண்டியது அரசகடமை இளவரசே,” என்கிறார்.

தையல்

“சொல்லத் தெரியாம இல்ல லோகு…நம்ம செல்லம் முருங்கமரக்கிளையாட்டம். ஒருமுறியில் ஒடிச்சு நம்மப்பக்கம் வச்சிக்கலாம்…அப்பிடி செஞ்சுட்டு எங்குலசாமி முன்னாடி எப்பிடி போய் நிப்பேன்…”
“குலசாமி எது?”
“பெருமா மல அடிவாரத்து பிச்சாயி…”
“பச்சப்பிள்ளைய கையில வச்சுக்கிட்டு இருக்கறவளா…அதான் நீ இப்படி இருக்குற. எங்கமாறி மருதவீரனா இருக்கனும். குதிரையில தூக்கிப்போட்டுட்டு பறக்கற ஆளு…”என்று சிரித்தாள்.

விலக்கம்

பிறந்தநாளன்று சாயுங்காலம் விடுதியின் தொலைபேசியிலிருந்து அவள் பேசும்போது அண்ணன், “ஆஃபீஸ்ல சர்ட் நல்லாருக்குன்னு சொன்னாங்க…எங்கடா வாங்கின,” என்றான்.
“ஏழு கடல்தாண்டி….ஏழுமலைத்தாண்டி…ஒரு கிளிக்கிட்ட இருந்து,” என்றாள். அவன் வேகமாகச் சிரித்தான்.

நீள்ஆயுள் நிறைசெல்வம்

ஐம்பது வயதிற்கு மேலான வாழ்க்கை நெருக்கடிகள், நோய் போன்றவை மற்றவர்களை இறுக்கிச் சுற்றுவதால் ஓரிரு ஆண்டுகளாக வீட்டில் ஓர் அமானுஷ்யம்போலச் சோர்வு கவிழ்ந்திருக்கிறது. அப்பாயியும், புதிதாகப் பிறந்துள்ள குழந்தையும் அந்த படலத்தைக் கிழித்து ஔி பரப்புகிறார்கள்.

அமுதம்

வீட்டின் பின்னால் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற பார்வதி அரவம் கேட்டு ஓடிவந்து, “டேய்…உன்னப்பெத்தவடா நானு. நாரத்தண்ணியகுடிச்சா பெத்தவக்கூட பொம்பளையா மட்டுந்தான் தெரிவாளா…அவதான் என்னிய வயல்ல கொண்டு போய் போட்டுருங்கன்னா. அதுக்கு உங்கப்பன ஏண்டா அடிச்ச…அவரு எங்கூட இருக்காம உங்களுக்கே பண்ணையாளு வேல செஞ்சுக்கிட்டு வயல்லயே கிடக்கனுமா…” என்று அவன் சட்டையைப் பிடித்தாள்.

எஞ்சும் சூடு

கடைசியாக சங்கர், “ஊரு பிள்ளைக்குட்டி நலமா இருக்கட்டும், ஊர் பெருகட்டும், ஆடு மாடு ஈத்துஎடுக்கட்டும்,கோழியா நிறையட்டும், வீட்டு சால் குறையாதிருக்கட்டும், நெல்லம் பயிரு பால்பிடிக்க, தென்னம்மரம் பாளைவிட, மரமெல்லாம் செடிகொடியெல்லாம் பூத்து செழிக்கட்டும் ஊர்,” என்று அடுக்கிக்கொண்டே சென்றார். அங்கங்கே சிலர் கைக்கூப்பி நின்றார்கள். ஒருசிலர் கண்கள் கலங்க ஊரை வாழ்த்தி முடிந்தது அன்றையகூத்து.

பொன் சிறகு

“அம்மா…உங்கள் பெயரர் விஜயரங்க சொக்கநாதரை பக்கம் அமர்த்தி நீங்கள் பேசவேண்டும். அரசியாக அல்லாது அன்னையாக…”
“நீ இளையவன்…அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் தாயின் இறப்பிற்கு நான் காரணம் என்ற எண்ணம் யாராலோ அவனுக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது. நானும் தலைமேல் ஏற்ற பொறுப்புகளின் வழியே அவனிடமிருந்து விலகி நெடுந்தொலைவு வந்துவிட்டேன். பெற்றவர் இல்லாத பிள்ளை, சூழ பகைநிற்கும் ராஜ்ஜியம் இரண்டிற்கும் முன் நான் எளிய பெண்ணாக விரும்பவில்லை கொண்டய்யா .”

பேச்சரவம்

அன்று விடுதி மைதானத்தில் அமர்ந்தபடி ப்ரியா தீபாவிடம்,
“மனசு சுதந்திரமா இருந்தா டான்ஸ் இயல்பாவே வருமாம்…” என்றாள்.
“யாருடீ சொன்னா…உங்க அனித்தா அக்காவா…”
“ம்…”

அபத்த நாடகத்தின் கதை

சசியின் தந்தை கோபால்தாஸ் ஒரு தரகர். அந்த வேலைகளுக்கே உரிய சூட்சுமங்கள் நிறைந்தவர். அந்த யுக்தியைப் பயன்படுத்தித் தன் வீட்டில் தங்கவரும் நந்தலால் என்ற பெரிய வியாபாரியை மகளுக்குத் திருமணம் செய்விக்கிறார்.

ஆக்கவோ அழிக்கவோ

அனைவருக்கும்
நாம் யார் யாரோ தான்.
சொல்லி விளங்க வைக்கும்,
செய்து நிரூபிக்கும் சங்கடங்கள் இல்லை.

எப்படி பிரிந்திருப்பது என்ற
பிலாக்கணங்கள் இல்ல…
எப்போதும் பிரிந்தே இருக்கிறோம்.
எப்போது சேர்ந்திருப்பது
என்ற பதட்டமில்லை
இருமுனைகளாய் சேர்ந்தே இருக்கிறோம்.

மத்தளம் கொட்ட

மார்பில் மடியில் தோளில் படுத்துறங்க வைத்தவர். எப்பொழுதும் அவர் பக்கத்தில் சாய்ந்தே அமர்ந்திருந்த நினைவு. உண்ணும் போதும் அவரின் பக்கம் தான். வேண்டாம் என்பதை எடுத்து அவர் தட்டில் போடவும் பிடித்ததை கேட்காமல் எடுத்துக்கொள்ளவும் வசதி. கணக்கு வழக்கு பேசும் இவர் யார்?

ரீங்கரிப்பு

“நம்ம வயலா செல்வம்?”
அவர் கொஞ்சம் வெட்கப்பட்டதைப்போல திரும்பிச் சிரித்துத் தலையாட்டினார்.
“நாத்து வுட்டாச்சு போலயே…”
“ஆமாமா… மூணு குழி… இத வாங்கறதுக்குள்ள இந்தச் சென்மம் மாஞ்சுப்போச்சு…”

மயில்தோகை

இந்த சசி எதையாவது சொல்வா. மெல்லமாத்தான் புரியும்.
“மனுசருக்கு எதுவும் நிச்சயமில்லம்மா. . நாப்பதுக்கு மேல நம்ம ஒடம்பே நம்ம பேச்ச கேக்காது. எந்த மனுசாளானாலும் ரொம்ப சாராணமானவா தான். . யாரும் அப்படிஒன்னும் ரொம்ப ஒசந்து போயிடல. கடுகத்தினி வேத்தும தான் அலைபாயற மனசுக்கு மலையத்தினியா ரூபமெடுக்கும். . லகான இழுத்துப் பிடிம்மா.”

ஜீவனம்

ஆலமரத்துக்கு அடியில் தன்னந்தனியாக ஊன்றப்பட்டிருந்த கருங்கல்லில் செதுக்கப்பட்டிருந்த ஊமைப்பிடாரியின் கால்களுக்கு அடியில் நித்யாவை கிடத்தி ஓவென்று கத்திக்கதறினாள். ஊமைபிடாரியிலிருந்து வழிந்திருந்த எண்ணெய் இவள் மீது பிசுபிசுவென்று ஒட்டியது. அம்மா அழுவதைப் பார்க்க பயமாக இருக்கவும் ஊமைப்பிடாரியை இறுகப்பற்றிக்கொண்டாள். ஒரு சொல்லும் இல்லாத அழுகை.

கண்ணீரின் குருதியின் சுவை

1770 ல் முதல் வங்கப்பஞ்சம். கம்பெனி உழியர்கள் அரிசிச் சந்தையையும் வளைத்துபோட்டனர். அதிகப் பணம் கொடுப்பவர்களுக்கு அரிசியை விற்றனர். குறிப்பிட்டவிலை நிர்ணயமெல்லாம் இல்லை. அந்தநிலையிலும் உப்புவரி முழுமையாக வசூலிக்கப்பட்டது. மக்களில் மூன்றில் ஒருபங்கு ஆட்கள் உணவில்லாமல் மரித்தனர்.

சீதா

மாமா,“கல்லாவில பணம் எண்றவங்க வேணாம்ன்னா நமக்கு மாப்பிள்ளை அமையுமா? நம்ம ஆளுக சிறுசிலருந்து எல்லாம் கடையில வளந்ததுக,” என்றார்.
சீதா குறுக்கே புகுந்து, “அவங்க கீழ எல்லாம் என்னால இருக்க முடியாது. . ” என்றாள்.

உயிராயுதம்

சுட்டெரித்த சுடலையின் வெப்பம் தணிந்தபின் சாம்பல் தரித்த கங்குகளென என்புகள் கிடந்தன. இந்திரன் முனிவருக்குரியவைகளைச் செய்து என்புகளை பாதுகாத்தான். விஸ்வகர்மாவை அழைத்தான்.
அவர் என்புகளை கங்கையின் நீரில் முழுக்கி எடுத்தபின் அவை வைரம் என, மின்னலின் பருவடிவென ஔிகொண்டிருந்தன. ’என்பினாலான மானுட உயிர்ப்பொருள் இத்தகைய ஒன்றாகுமா!’ என்று அவரின் மனம் பதைத்துக்கொண்டிருந்தது.

மழைத்திரை

அக்காவுக்குக் கல்யாணமான பின் குடும்பமே பெருமாள் மலை ஏறினார்கள். அம்மா மூச்சு வாங்க நல்லதங்காள் கதையைச் சொன்னாள். “புறப்பட்ட எடத்துக்கும், சேந்த எடத்துக்கும் அலையறத்துக்கு இப்படி மூச்சப் பிடிக்கனும். விட்றப்பிடாது குட்டிகளா. . பொம்பளப் பிள்ளைக்குதான் அத்தன தெம்புண்டு,” என்று பேசியபடி ஆயிரத்து ஐநூறு சொச்சம் படிகளை ஏறுவது தெரியாமல் ஏற்றிவிட்டாள்.

பூமுள்

உள்ளங்கை வியர்வையை கைகுட்டையில் துடைக்க துடைக்க அது வியர்த்துக் கொண்டேயிருந்தது. எட்வின் வராண்டாவில் அவனுக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்திருக்கும் காட்சி அவள் மனதிற்குள் வந்தது. மனம் மீண்டும் இல்லை என்றது. இது என்னையே நான் வீழ்த்திக்கொள்ளும் கண்ணி. ஒருபார்வை , ஒருசொல், ஒருமுகக்குறிப்பு அன்று உணர்த்திய எள்ளலை மீண்டும் கண்டால் எழுப்பிய அனைத்தும் சரியும். ஆனால் உள்ளுக்குள் மிக ஆழத்தில் எட்வின் முகம் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான்.

நானென்பதும் நீயென்பதும் அதுவென்பதும்

வளர வளர குழந்தைகள் தன்னியல்பில் கற்றுக்கொள்வதை இந்தக்குழந்தைகளுக்கு படிப்படியாக கற்பிக்க வேண்டியதை இந்தநூல் சொல்கிறது.முதலில் குழந்தையை மனதால் பின்தொடர்ந்து புரிந்து கொள்வதன் அவசியத்தையும்,அவர்களை மனதாற ஏற்றுக்கொள்வதன் அவசியத்தையும் சொல்கிறார்.இவை இரண்டும் சரியாக நடந்துவிட்டால் அடிப்படையான சிக்கல் முடிவிற்கு வந்துவிடும்.

ஒரு பந்தலின் கீழ்…

அவன் மெதுவான குரலில், “உன்ன மாறி சொகவாசியா…அங்க சுடுகாட்ல வந்து ஒக்காந்து பாரு தெரியும்,” என்றவன், “அய்யோ…வாய்தவறுது. . மவராசியா ஆயுசோட இரு. நம்ம விமலா போனவருஷம் செத்து போனுச்சே. . என்னால எரியறதபாத்துக்கிட்டு ஒக்கார முடியல. எளந்தேகம் குப்புற போட்டு எரிச்சம். . என்னடா பொழப்புன்னு இருந்துச்சு,” என்றான். “சொகவாசின்னு யாருமில்ல,” என்றபடி எழுந்து கீழே கிடந்த காகிதக் கோப்பைகளைப் பொறுக்கினாள்.

வங்கக்கடலின் அலைகள்

வாழ்க்கையின் அடிகளால் மனம் விழும் போது, எங்கோ ஒரு மனமும் கையும் சேர்ந்து எழுதிய இலக்கியங்கள், தோளில் தட்டி தலையில் கைவைத்து என்னன்னாலும் இந்த ஜீவிதம் இனிது என்று தூக்கிவிடுகிறது. படைப்பாளன் என்ற சொல் எத்தனை பொருத்தமான சொல்.

கண்ணனை அழைத்தல்

This entry is part 16 of 72 in the series நூறு நூல்கள்

அம்பையின் இந்தக் கதை எனக்கு அம்மா, அம்மாச்சி, பெரியம்மா, பக்கத்துவீட்டு அம்மா, அத்தை, அக்கா என்று அனைவரையும் மனதில் கொண்டுவரும் கதையாக இருக்கிறது. இசையும், பாரதிபாட்டுகளும், ஸ்லோகங்களும் தெரிந்த குமுதாம்மா போலவே படிப்பறிவில்லாத விவசாயியான எங்க அம்மாச்சியும், சமையல்கட்டைத் தவிர ஏதுமறியாத அம்மாவும், படித்த அக்காவும், வேலைக்கு செல்லும் தங்கையும் ஏதோ ஒருவகையில் வீடு, சமையலறை என்ற விஷயங்களில் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்

முத்தத்தின் சுவை – வாசிப்பனுபவம்

மரத்திலேயே கனிந்த கனிகள் சுவையானவை என்றாலும் பறவைகள் தேர்ந்தெடுத்து கொத்திய கனிகள் இன்னும் சுவையானவை.அதை சுவைத்தவர்கள் அறிவார்கள்.அதுபோலவே சிறுபிள்ளைகளுக்கு மூத்தவர்கள் சொல்லும் கதைகளும்.அதனாலேயே குழந்தைகள் பெரும்பாலும் சிலகதைகளை மீண்டும் மீண்டும் “அந்தக்….கதை…சொல்லு” என்று கேட்பார்கள்.அந்த கதைசொல்லி தாத்தாக்களும் பாட்டிகளும் நம் உறவாக இருக்க வேண்டும் என்பதில்லை.ஆனால் அவர்களே ஒரு சமூகத்திற்கான முன்னவர்கள்.

மேலாண்மை பொன்னுசாமியின் ‘பாட்டையா’ என்ற கதை ஊருக்கே தாத்தாவான கதைசொல்லியைப் பற்றியது.ஒவ்வொரு கிராமத்திலும் அப்படி ஒருவர் இருப்பார் அல்லது இருந்தார்.அவரை “காந்திகாலத்தில பெறக்கவேண்டிய மனுசன்,” என்ற ஒரே வாக்கியத்தில் அலட்சியமாகவும் பெருமையாகவும் ஊருக்குள் சொல்வார்கள்.எங்கள் ஊரில் என்பால்யத்தில், இந்தக்கதையில் வரும் அரிஞ்சர் பாட்டையா போன்ற பாலுப்பிள்ளைதாத்தா எனக்கும், என்அய்யாவுக்கும், ஊரில் சிலருக்கும் கதைசொல்லியாக இருந்தார்.

சாய்ந்துகொள்ள வசதியான பாதங்கள்- வாசிப்பனுபவம்

வாழ்க்கைக்கு துணையாக ஒருமரம் போதும் என்று அடிக்கடித் தோன்றும். முதுகை சாய்த்துக்கொள்ள, அப்படியே கால்நீட்டி கிட்டத்தட்ட படுத்துக்கொள்ள, இலைகளின் சலசலப்புச் சத்தத்தில் அப்படியே உறங்கிப்போக, வெயிலில் நடக்கையில் பின்புறமிருந்து தலைக்கு மேல் விரியும் அம்மாச்சியின் முந்தானையைப்போல நிழல் கவிய நின்றிருக்கும் ஒற்றை மரம் போதும் என்ற ஆசுவாசத்தை, ஒருவரை இன்னொருவரில் கண்டுகொள்ள, பதின்வயதின் புரிந்து கொள்ளமுடியாத பாழ்தனிமையில் விடுதிவாழ்வில் இத்தகைய வெளிச்சத்தை இலக்கியமன்றி எனக்கு எதுவும் தந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

வெய்யிலின் மொழி

சென்னைக்குக் கிளம்ப வேண்டும் என்ற நினைப்பே சசியை சுற்றிச்சுற்றி வந்தது. இது எப்பவும் இப்படித்தான். இங்கு வரும் நாளைத் தவிர அடுத்த காலையிலிருந்து அவ்வப்போது நாட்களை மணிக்கணக்காகப் போட்டு உருட்டிக்கொண்டிருக்கும் மனம். சசி சமையலறைக்கு வெளியிலிருந்த தாழ்வாரத்திலிருந்து படுக்கையறையை எட்டிப்பார்த்தாள். சீரான மூச்சுடன் கங்கா படுத்திருந்தான். முன்பிருந்ததைவிட உடல் “வெய்யிலின் மொழி”

மித்ரா

மேனகா மித்ராவின் மீது தண்ணீரை ஊற்றிவிட்டு ஓடினாள். இவள் பின்னால் துரத்திக்கொண்டே ஓடினாள். அடுத்தவள்…அடுத்தவள் என்று விளையாட்டு வேகமெடுத்த நேரத்தில் சிஸ்டர் வந்து, “பொம்பளப் பிள்ளைகளா நீங்கள்…குளிக்கற எடத்தில இந்த ஆட்டமா …” என்று கத்தினார்.
முன்பக்கம் விளையாடியவர்கள் அமைதியாக, பின்னால் இவர்கள் எதையும் உணராமல் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
“அந்த ரெண்டு குமரியும் இங்க வா.”
“அப்படியே போய் க்ரௌண்டில் முட்டிப் போடு.” என்றார்.
இருவரும் பெட்டிக்கோட்டோடு முட்டிப்போட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
“இப்பவும் சிரிப்பா…நல்லா ஆடுங்க …” என்றபடி சுபாஷினி சென்றாள்.

தெருவெங்கும் அவளின் நடமாட்டம்

அனேகமாக மாடிகளில் எவருமில்லை. இந்த வெயில்நாட்களின் துவக்கத்தில் தெருவில் கட்டிலில் படுத்திருக்கும் வயசாளிகளைத் தவிர, மாடிகளில் ஆள் நடமாட்டமே இல்லை. மனித மனதை என்றவென்று சொல்வது. கள்ளமற்று திரிந்த சிறுமிகளின் மனதிலும் பயத்தை ஊன்றி நிறுத்திவிட்டார்கள். குழந்தைகள் மட்டும் எதுவும் அண்டாத தெய்வங்களாக எப்போதும் போல, அவர்கள் நேரத்திற்கு அழுது சிணுங்கிக் கொண்டிருக்கும் சந்தடிகள் கேட்டன.

கமலதேவி – இரு கவிதைகள்

அன்று கவரப்பட்ட
திரௌபதியின் வஸ்திரம்
கிடைக்கவேயில்லை…
கண்ணன் தந்த ஆடையோடு
இதுவரையும் வந்துவிட்டாள்.

பாலுவிலிருந்து பாபுவிற்கு

இந்த வினோ கேட்டதுதான் பாலுவுக்குப் புரியவில்லை.  கற்றலில் தனியாள் வேறுபாடுகள் வகுப்பு முடிந்து வெளிவருகையில் நடைபாதை தூணுக்கருகில் புத்தகத்தைக் கையில் பிடித்தபடி குனிந்து சேலையில் விசிறியிலை மடிப்புகளை உதறி விட்டுக் கொண்டிருந்தாள்.  வந்து அவனுடன் இணைந்து நடந்தபடி , “இப்படி ஒவ்வொரு குழந்தையும் அதுக்குரிய வேகத்திலயும்,விருப்பத்திலயும், மரபியல் கூறுகளின் அடிப்படையிலதான் கத்துக்குது.  அப்படின்னா.  .  .  நல்லாபடிக்கறவங்களுக்கு, சுமாரா படிக்கறவங்களுக்கு, மெதுவா படிக்கறவங்களுக்கு தனித்தனி கிளாஸ் இருக்கறது தப்பில்லயே?”
“வெறுமனே படிக்க மட்டுமா பள்ளிக்கூடம்” 

புதுமைப் பித்தனின் ‘செல்லம்மாள்’ – ஒரு வாசிப்பனுபவம்

செல்லம்மாளைச் சார்ந்து வாசிப்பது ஒரு பார்வை. அதோடு இந்தக் கதை குறுகிவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை. பின் எதற்கு பிள்ளை நடையாய் நடப்பதையும், பழஞ் சோற்று மூட்டையையும், அவரின் பெருமூச்சையும் எழுத வேண்டும். இயங்களை மீறி மனிதநேயம் சார்ந்த வாசிப்புக்காக எழுதப்பட்ட கதையாக எனக்குத் தோன்றுகிறது. புதுமைப்பித்தன் கசப்புகளைக் கிண்டல்களாக மாற்றியவர். அவர் நம்பிக்கைவாதியில்லை என்றெல்லாமில்லை அதைத்தாண்டி மனிதமனதை எதிர்திசையில் இருந்து நேயம் நோக்க அங்குசம் குத்தியவர்.

கவிதைகள் – அன்பழகன் செந்தில்வேல், கமலதேவி

நூல்சுற்றும் உருளை
மொழுமொழுக் கன்னங்களும்
இடையே குருவி வாயும்
மேல்வரிசையின்
இருமுயல் பற்களும்,
அணைத்துக் கொள்ள வசதியான
உயரமும்,
தழுவலின் இயல்பான ஏற்பும்…
அத்தனை உறவுச் சிக்கல்களையும்
ஒற்றை நூலென மாற்றும்.