ஸ்லோகங்கள் 46, 47, 48-ல் இதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. -அமைதியை எங்கும் பெறவில்லை, உன் மடியில் நீண்ட உறக்கம் கொள்ள வேண்டும்; ஜகன்னாதனை விடுவிக்கும் தருணம்; கங்கையின் அழகான தெய்வ வடிவம் – என இவைகள் பண்டிதராஜரின் இறுதி விருப்பங்களை நமக்கு உணர்த்துகின்றன.
Tag: ஜகன்னாத பண்டித ராஜா
வீழ்ச்சியடைந்தவர்களால் ஒதுக்கப்பட வேண்டியவை! வீழ்ந்தவர்களால் உரக்கக் கூறப்படாதவை!!
இவ்வுலகில், தாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய
இயலாதவர்களையும்கூட உயர்ந்த நிலைக்குச் சேர்க்கும்
புனிதத் தலங்கள் பல, மூன்று உலகங்களிலும் உள்ளன.
ஆனால் நினைக்கவும் கூடாத நடத்தைகொண்டு
தவறிழைத்த மக்களையும் உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல
உனது ஒப்பற்ற புனித நீரே அனைத்துப்
புனிதத் தலங்களையும்விட உயர்வானதாகிறது.
ஜகன்னாத பண்டித ராஜா – 4
இந்த கங்கா லஹரியின் ஸ்லோகங்களைத்தான் நாம் காணப்போகிறோம். நான் அறிந்தவரை இதுவரை தமிழ் மொழிபெயர்ப்பைக் கண்டதில்லை. என்னைப்போலும் சம்ஸ்க்ருதம் அறியாதவர்கள் அறிந்து போற்றும் வகையில் (ஒரு ஆங்கில மொழியாக்கத்தின் துணைகொண்டு) இதனைச் செய்யத் துணிந்தேன். அன்னை கங்கைக்கு எனது காணிக்கை இதுவே. தீபாவளி சமயம் இதனைச் செய்யத் துவங்கியது எத்தனை பொருத்தம்!
ஜகன்னாத பண்டித ராஜா -3
இந்த ஸ்லோகங்கள் ஜகன்னாதர் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் எழுதினவையாக இருக்கக்கூடும். ஏனெனில் இதில்
தம் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்;
தாமியற்றிய செய்யுள்களின் இனிமையை, நயத்தை, உயர்வாகப் பெருமிதத்துடன் பேசுகிறார்;
ஜகன்னாத பண்டித ராஜா -2
இளம் மனைவியுடன் கருத்தொருமித்து வாழும் / வாழ்ந்த ஒருவனின் நினைவலைகளாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றன இந்தக் கவிதைகள். இவற்றை ஆழ்ந்து படிக்கும்போது நமது சங்கக் கவிதைகளான அகநானூறு, எட்டுத்தொகை நூல்களின் சாயல் மிகுதியாகத் தெரிகின்றது. ஊடலும் கூடலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. பிரிவின் வாட்டம் கனலெனச் சுடுகின்றது
ஜகன்னாத பண்டித ராஜா
இந்த நூலை ஜகன்னாத பண்டிதர் இயற்றியது குறித்து சில கதைகள் உலவுகின்றன. இதில் காணப்படும் சில பாடல்கள் இளம்வயதிலேயே இறந்துவிட்ட மனைவியை எண்ணிப்பாடியதாகக் கொள்ளப்படலாம். எது எப்படியோ நமக்கு வேண்டியது இவற்றின் நயமும் சுவையும் கவிதையழகும் தான். சில பண்டிதர்கள் எழுதிய ஆங்கில விளக்கத்தின்1,2,3 துணைகொண்டு நான் இதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன்.