ஏழு கவிதைகள்

இரவு வானத்தில்
தனித்துப் பறக்கிறது பறவை.
வானம் தனித்திருக்கும்
பறவை தனித்திருக்கும்
தனித்திருக்கும்
இரண்டின் சந்திப்பிலும்
தனிமையிருக்கும்
தனிமையின் கரங்களில்
வானம் புகும்
பறவை புகும்
இங்கு யாவுமே உட்புகும்

சுஜய் ரகு கவிதைகள்

வறண்ட ஓடைப் பாதையில்
கிடந்து தகிக்கும் ஒரு கூழாங்கல்லைச்
சீண்டுவதுபோல
நடுநிசி இரவைக் கிழித்தபடி
காற்றில் ஓங்கரித்தது
ரயிலோசை
இருள் வெளி அதிரவும்
துளி துளி வண்ணங்களாக
ஒளிர்ந்து உதிர்ந்தன
திரளாய் பற்பல சொற்கள்

மூன்று கவிதைகள்

மிகப்பெரிய அநீதி
நிகழ்ந்தது போல்
தலையில் கொத்திவிட்டு
இருளிலே அபாயத்தைத்
தோற்றுவித்துச் சென்றது ஒரு காகம்
அது இங்கும் அங்கும் பறந்து
மரணத்தின் அருகாமையை காட்டி
மீண்டும் இன்னொன்றாகப்
பறந்து போகிறது

காதலெனும் திசைமானி

சிவதனுசு
உடைபட்டது.
மழையில் கண்ணீர்த்துளியாய்
நின்று இசைத்துக்கொண்டிருந்தான்.
ஆம்
கேள்விகளை நோக்கி
பாடலாகப் பெருகுகிறான் அவன்
பழி பாவங்களை நோக்கி
சிறு புன்னகையாய் பெருகுகிறான் அவன்
கண்ணீரை நோக்கி
கண்ணீராகவே பெருகுகிறான் அவன்.
பேதையாய் ஆகி நிற்பவளே
காதலின் அழைப்புகள்
ஆழங்களில் பிறக்கிறது

ரவிசுப்பிரமணியன் கவிதைகள், இசை வடிவம்

மலரின் இருப்பு மணத்தை சொல்லுகையில்
மரத்தின் அசைவு காற்றை சொல்லுகையில்
பறவையின் பாடல் இசையை சொல்லுகையில்
வாலின் அசைவு வாஞ்சையை சொல்லுகையில்

வ. அதியமான் கவிதைகள்

உன்னிடம்
இரண்டு உள்ளங்கைகள் இருக்கின்றன
என்னிடமும்
இரண்டு உள்ளங்கைகள் இருக்கின்றன

குறுக்கும் நெடுக்குமாய் கோர்த்து
உயர தூக்கிப் பிடித்திருக்கும்
நான்கு உள்ளங்கைகள்
போதாதா?

குறிச்சொற்களின்* கவிதைகள்

ஒரு அனுப்பப்படாத செய்தியில்
வரப் போகும் அந்தப் புதுப் பிரபஞ்சம்
நிலவுகள் அதன் வரைவு நகல்கள்
கருந்துளைகள் ரத்து செய்யும்
மாற்றங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை

ஒளியும் விழியும்

ஆழ்ந்த உறக்கத்தில்
சங்கினுள் அடங்கும்
கடலைப் போல
நிலவினுள் சுருண்டு
விழிக்கிறேன்.
உடைந்த கண்ணாடிச்
சில்லென, நிலவை
மனதில் அளக்கிறேன்.

செ.புனிதஜோதி கவிதைகள்

வழிநெடுங்கிலும்
காயங்கள் ..,.
காயங்கள் மீது
மின்மினியென
பறந்து கொண்டிருக்கின்றன…
நிறைவேறிய
நிறைவேறா
பல கனவுகள்….

செல்வசங்கரன் கவிதைகள்

ஒரு மலைப் பயணம் மேற்கொள்ளலாம் எனக்
கிளம்பிக் கொண்டிருக்க
மலையே இறங்கி வந்து கைகளில் என்னை
ஏந்திக் கொள்ளுகிற அதிசயம் நிகழ்ந்தால் கூட
எதுவும் மாறாதென்று தோன்றியது

மா. காளிதாஸ் கவிதைகள்

கேமராவை பார்க்காமல்
இன்னொரு பக்கம்
பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அந்தக் காட்சி
தெளிவாகப் புலனாகிவிட்டதா எனத் தெரியவில்லை.

செந்தி கவிதைகள்

ஓர் அதிகாலையில் ஆறுகண் பாலத்தில்
அவ்வழி வந்த உலகாணி பால்க்காரன்
முன்பு நிர்வாணமாக நின்று இரண்டு
கைகளால் வழி மறிக்க
மூன்று வாரங்கள் காய்ச்சலில் படுத்து
எழுந்திருக்காரன் என்பதை அறிந்ததால்
இம்முறையும் அவளிடம் பேசாது வந்துவிட்டேன்.

வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லா

திரு வினோத்குமார் சுக்லா ராஜ் நந்த் காவ் (சத்தீஸ்கர்) இன்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து 1981 இல் இவரது இரண்டாம் கவிதை தொகுப்பு வெளியானது. வேளாண்மையில் முதுகலை பட்டம் பெற்ற இவர் ராய்ப்பூர் வேளாண்மைக் கல்லூரியில் சில காலம் ஆசிரியராக பணியாற்றினார். இவருடைய கவிதை தொகுப்புகள் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

வினோத்குமார் சுக்லா கவிதைகள்

ஞானபீட விருதைப் பெறவிருக்கும், வினோத்குமார் சுக்லா 2024_ஆம் ஆண்டுக்கான, இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதினை தனது 88_ஆவது வயதில் பெறவிருக்கிறார் இந்தி எழுத்தாளரும், கவிஞரும், நாவலாசிரியருமான வினோத்குமார் சுக்லா (1 ஜனவரி 1937). யதார்த்தத்தில் இருந்து மாயத்தை வெளிக் கொண்டு வரும் நவீன பாணி எழுத்துக்காகப் “வினோத்குமார் சுக்லா கவிதைகள்”

ஆதித்ய ஸ்ரீநிவாஸ் கவிதைகள்

அன்னையே
மீண்டும் உன்னிடம் கையேந்தி நிற்கிறேன்
ஓவியமாய் விரிந்துள்ள இரவும் பகலும்தான்
எத்தனை எத்தனை அழகு
கபாலத்தில் படிந்த தடித்த கசடுகள்
அகமெல்லாம் நிரம்பிவிட்டுள்ளது
சுடரேற்றும் வளைக்கரங்கள்
விரித்தெடுக்கிறது கடலெங்கும் பெருவானமொன்றை
ஏனோ கட்டங்கள் சதுரங்கள் வரைவதில்
என் இசையின் காலங்கள் கழிகிறது.

பார்த்து போ

எப்பொழுதும் போல
இப்பொழுது
போயிட்டு வரேனென்று
சொல்லுவதற்கு வாயெடுத்து
வார்த்தைகள்
வாய்க்குள் சிக்கிக்கொண்டது

இடமும் வலமும்

எருக்கும் நெருஞ்சியும்
பூத்த நிலத்தை
பூந்தோட்டமென்று
ஒருவன் சொன்னால்
அவனிடம் வாதிடுவதைப்போல்
அறிவீனம் வேறொன்றுமில்லை.

8. கிருஷ்ணா

அவள் அவரிடம் “நீர் இலக்கியம், இலக்கணம் அனைத்திலும் மிகத் தேர்ச்சி பெற்றவர். ஆனால் என்னிடம் வைத்துள்ள பிரேமையில் ஆயிரத்திலொரு பங்கு அந்தக் கிருஷ்ணனிடம் வைத்தால் கூடப் போதுமே! உம் வாழ்க்கையின் பொருளை உணர்ந்து பலனை அடைய,’ என்கிறாள்

அகவிதழ்

பக்கத்து
தண்டவாளத்தின் மீது
தலை சாய்த்தும்
தலை வைத்தும்
சிவப்பு மலர் சூடிய
சிறிய செடி
தனது சிவப்பால்
ரயிலை நிறுத்தும்
முயற்சியை தொடர

நட்சத்திரங்களுக்கு பரிசு

காட்டி கொடுத்தல்
துரோகம் வஞ்சகம்
பைத்தியக்காரத்தனம்
பொய் மொத்தம் வியாபாரம்
அவதூறு பரப்ப அஞ்சாமை
எல்லாவற்றையும் முதலீடாக்கினான்
அந்த முதலீடு
அவனை பிரபலமாக்கி விட்டது

சோர்வு & இரவின் இருள்

தேன்மதுரத் தேநீரின் மணம்
என்னை தூக்கிக் கொண்டு
நடந்தது
கண் மூடி சுவைத்த போது
நாவினுள் பட்டு எல்லையிலா
பிரபஞ்ச வெளியில் நின்றிருந்தேன்

முனுசாமி தாத்தா

முனுசாமி பாட்டன்
பீடிய விட்டொழிஞ்சு
வெகு நாட்களாயிடுச்சு
நினைச்சத சாதிச்சிட்டோம்ன்னும்
ராவெல்லாம் இருமல்
சத்தம் இல்லேன்னும்
நிம்மதியா தூங்குறா
பொய்சொல்லி சாமியாடிய
கங்கம்மாப் பாட்டி

சன்ன வருடல்

வெளியூரில் இருக்கும்
பிள்ளைகள்
விடுமுறைக்கு வீட்டிற்கு
வந்து பார்க்கும்பொழுது
கெஞ்சும் பாவனையில்
முகம் இருக்க வேண்டும்.

போதி மரம் முறைக்கிறது

காதின் ஓட்டை வளர்த்தவனே
மோதும் ஆசை வெறுத்தவனே
நாறும் நறுமலர் ஓவியத்தை
சாரும் உன்னுயிர்க் காவியத்தை
நாற்றச் சகதியில் விடுவதற்கா?
நங்கை அவளைத் துறந்து சென்றாய்
இராகுலன் முகத்தையும் மறந்து சென்றாய்
இரவின் நடுவில் பிரிந்தவனே
எழுப்பி அவளிடம் சொன்னதுண்டா?
எழுகென என்னுடன் என்றதுண்டா?

7. விருந்தாளி

தாங்கள் இறந்துபோகும் மனிதர்களாகிய எங்களுக்கு அளித்துள்ள பரிசுகள் எங்கள் எண்ணற்ற தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இருப்பினும் நாங்கள் குறைவின்றி உங்களிடம் திரும்பத் திரும்ப யாசித்து வருகிறோம்.

புரத்தல்

தொழுவத்தின் கூரையில்
முட்டையிட்டு அடைகாத்த
கோழியின்
பக் பக் ஒலி
இரவைக் கூட்டிக்கழித்து
எல்லாம் சரியாக
இருப்பதாய்ச் சொன்னது

6. மறைக்கப்பட்ட திட்டம்

இந்த அணுவின் அமைப்பு நடராஜப் பெருமானின் நடனத்தோடு ஒப்பிடப்படுகிறது. அவனுடைய ஒழுங்கான நடன அமைப்பின் காரணமாகவே இந்த அண்டம் இயங்குகிறது எனலாம். ஆடும் அவன் கையில் தீ, காலில் மண், தலையில் நீர், கையில் உள்ள உடுக்கையில் காற்று, ஆடுமிடம் ஆகாயம் எனப் பஞ்ச பூதங்களும் அவனாகவே நின்று, அனைத்தையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் தான் அனைத்துள்ளும் நின்று ஆடுகிறான். இதுவே அணுத்தாண்டவம்.

நினைவோடையின் படிமம் –  ஜெயந்த மஹாபாத்ரா

வறுமையில் தவிக்கும் தகப்பன் தன் சொந்த பெண்ணையே விற்பதற்கு தள்ளப்பட்ட நிலைமையை விளக்க “வெறும் நுரையைத்தான் சுரண்டியது அவன் பழைய வலை” என்பதிலும் பனங்கீற்று குடுசையில் காற்று நுழைவதுபோல அந்த குடுசைக்குள் பல பேர் நுழைந்திருக்கிறார்கள் என்பதிலும் ஜெயந்தாவின் மெல்லிய உணர்ச்சி பார்வை வெளிவருகிறது

5. இரவுநேர யாத்திரிகன்

இறப்பைத் தன் காதலியாகக் கண்டு, அவளுடனான சந்திப்பிற்குத் தயாராவதனை வியக்கத்தக்க நுட்பங்களுடன் எழுத்தில் வடித்துள்ளார். இரவு என அவர் கூறுவது வாழ்க்கையின் இறுதியில் நாம் செல்லும் இடம். அதனை எவ்வாறு தைரியமாக எதிர்கொள்வது என அழகாக உண்மையான விளக்கங்களை அளிப்பது இக்கவிதை.

இருத்தலும் ஆணையும்

அழல்
மோகம்
காமம்
இன்னும்
இன்னும்
கீழ்மைகள்
இருக்கும்
திசைக்கூட திரும்பப்போவதில்லை

குளக்கரையில்- சில குறிப்புகள்

குளத்தில் மிதக்கிறது
முன்பு எப்போதோ
கடைசியாய்ப் பார்த்து
மலங்கலாய் நினைவுபடுத்திக் கொள்கிற
ஒரு பால்ய சிநேகிதியின்
முகம் போல்
முழுநிலவு.

3. சரணடைதல்

எது மனிதனை அசக்தனாக்கி, எதுவோ ஒன்றில் சரணடைய வைக்கிறது? இயலாமையா? நம்பிக்கையா? இல்லை வேறு ஏதோவா? ஒன்று மட்டும் நன்கு விளங்குகிறது. நன்மையிலும் தீமையிலும் நாம் நக்குத் துணையாக வேறு ஒன்றில் இணைந்திருக்க விரும்புகிறோம்; அது நம்மை மீறிய ஒரு சக்தியாக இருக்க வேண்டும்; நம்மை அரவணைக்க வேண்டும்; நமக்குத் துணையாக, பலமாக இருக்க வேண்டும்.

கோசின்ரா கவிதைகள்

ஒரு சந்திப்பில்
நான் தற்கொலை பற்றி பேசினேன்
நீ காதலைப்பற்றி பேசினாய்
காதல் தூரத்தில் தெரியும்
மலைக்குன்று என்றாய்
இருவரும் ஏறி உச்சியில் நிற்கின்றோம்

ரவி அல்லது கவிதைகள்

தோராயமாக சொல்லிவிடும்
கற்பிதங்கள்
யாவிலும்
உண்மை இருக்க வேண்டிய
அவசியமில்லை.
வசீகரித்துவிட்டாலே போதும்
இந்த
அடிமை மனம்
புரிதலை
மழுங்க வைத்து
தோரணங்களையே
எப்பொழுதும்
தொங்கிக் கிடக்கும்.

அன்பு

அன்பின் ஊற்றைப்போலவே
அவ்வளவு இயல்பாய்
பெருக்கின் சுழிவுகள்கூட
அச்சசலாய்
இருந்தது
அன்பின்மையின் ஊற்று

கவிதைக்குள் அலையும் மனசு ….

உழைத்துக் கொடுத்து
அறிவு புகட்டி
உதிரம் கடத்தி
உணர்வுகளால் தன்னை
உறுவாக்கி பசியால்
வயிறு சுருங்கி
இறந்து போன அப்பா
மீண்டும் வாசலில் வந்து அமர்கிறார்

சூர்யமித்திரன் கவிதை

மணித்துளிகளில்
காட்சி மாறி
பனிப்போர்வைக்குள்
பதுங்கும்
கனவுத்தொடர்ச்சி

குறுங்கவிதைகள்- கு. அழகர்சாமி

அடுத்தடுத்த
இரு கணங்களுக்கிடையேயுள்ள
இடைவெளியில்
எப்படியாவது நுழைந்து
நிலைபெற்று விடப் பார்க்கிறேனே
என் சாசுவதத்திற்கு
நான் !

மழைக்காலக் கவிதைகள்

மழைக் காலத்தின் குறிப்பாக
எதைச் சொல்வாய்
தாத்தாவின் தோளில்
வீடெல்லாம் வெள்ளம் நுழைய
தர்ம சத்திரம் நோக்கி ஓடிக் கொண்டிருந்தோம்

வேனில் – கானல்

புகையென
கசிந்து
வெளியேரும்
பறவைகள் ஒவ்வொன்றின் பின்னும்
கீச்சென அலறி
பின்தொடர்கிறது
புதரின் கனல்

மழைக்காலம்

நெடுஞ்சாலை வாகனங்கள் மோதி
உயிர் விடும்
வழிதவறிய
பட்டாம்பூச்சிகளின்
மரணங்களில்
ஒரு மிடறு அருந்தி
உயிர்க்கிறது
நெருப்பு சிகரெட்டின்
நுனியை தொடும் கணம் போல
யாரும் பறிக்காத
அரளிச்செடியின் வேர்கள்

ரவி அல்லது கவிதைகள்

தேங்கியவைகளுக்கு
எப்பெயராவது
இருந்துவிட்டுப்
போகட்டும்
கடலாகும்
பயணத்தில்

அரா கவிதைகள்

கல்குவாரி சண்டையாடும் இரண்டு மீன்கள்
நிறமிகளைத் தூக்கி எறிய
அதனைப் பிடித்து தொண்டையில் தடவி
வண்ணமயமான மிடற்றொன்றை நீலமும் ஒரு நிறம்
நிறம் பூத்த கழுத்தைக் கொத்தித் தேனெடுக்க வந்த பாம்பை
நாயொன்று துரத்துகிறது

சகுனியாட்டம் 

பொருட்டாக
நினைக்காத
முட்டாள் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு
சொன்ன ஒரு சொல்லை எண்ணி மருகுதல்

அப்பா வீடு திரும்புகிறார்

நான் பார்க்கிறேன் அவர் நலிந்த தேநீரைப் பருகுவதை,
பழைய சப்பாத்தியை உண்பதை, புத்தகம் வாசிப்பதை.
கழிவறைக்குள் செல்கிறார்
மனிதரால் உருவாக்கப்பட்ட உலகிலிருந்து
மனிதர் விலகுவதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க.
வெளியில் வந்தவர் நடுங்குகிறார் பீங்கான் தொட்டி அருகில்,
குளிர்ந்த நீர் ஓடுகிறது அவரது பழுப்புநிறக் கைகளின் மேல்,

சுரங்கம்

எஸ்டேட் மேனேஜர் உத்தரவால்
எருதைப் பிடிக்கும் முயற்சியில்
தவறிச் சரிவில் விழுந்து
ஒரு கொம்பு முறிந்ததை
மலைக்கிராமம் அறிந்திருந்தது
முன்பு காட்டை விட்டே வெளிவாராத எருது
இப்போது தன் கூட்டத்தோடு இல்லை
இலைதழைகளில் மறைந்தும்
சேற்றில் அமிழ்ந்தும்
பிறர் அறியாமல் திரிகிறதாம்

கு. அழகர்சாமி கவிதைகள்

அந்த
மாமலையை
நெருங்க நெருங்க
என் அகத்துள்
ஆழ்ந்து ஆழ்ந்து
ஓங்கும்
மெளனத்தை மறைத்தது
மால்நிற மாமலை.

உதிர்வெனும் தாழாப்பொழுது

இடையில் கிடந்த
மோதிரத்தை
காக்கை கொத்திச்சென்றதை
நாங்கள்
எச்சலனமற்றும்
வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தோம்.