உதயத்தில் ஓர் அஸ்தமனம்

அவள் களைத்துப் போனது போலத் தெரிந்தாள்.  மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது.  கவலை அவள் முகத்தில் கருநிழல் போலப் படர்ந்திருந்தது.  அவளது முடியிலிருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தாலும் அவள் அதைக் கழுத்துக்கு மேல் ஒரு கொண்டையாக முடிச்சிட்டு வைத்திருந்தாள்.  அவளது உடைகளும் ஈரமாகத்தான் இருந்தன.  மிகவும் இளமையாகவோ, மிகவும் முதிர்ச்சியாகவோ இல்லாமல் பார்க்க இனிமையாகத் தெரிந்தாள் அவள்

சிந்தனையின் சுருக்கமான வரலாறு

புத்தகம் அறிவோம்: வாழ்வதற்கான ஒரு தத்துவ வழிகாட்டி அறிமுகம்  “சிந்தனையின் சுருக்கமான வரலாறு: வாழ்வதற்கான ஒரு தத்துவ வழிகாட்டி(A Brief History of Thought: A Philosophical Guide to Living (Learning to Live))” என்ற இந்த புத்தகத்தினை சமகால ப்ரெஞ்ச் தத்துவ ஆசிரியர் லூக் பெரி “சிந்தனையின் சுருக்கமான வரலாறு”

இயற்கையை நோக்கியிருத்தல்

This entry is part 6 of 19 in the series கவிதாயினி

இற்றைதிங்கள் அந்நிலவில் 6 கழார்க்கீரன் எயிற்றியார் சங்ககாலக்கவிஞர். இவரின் பாடல்கள் அகநானூறு, நற்றிணை,குறுந்தொகை பொன்ற சங்கஇலக்கிய தொகை நூல்களில் உள்ளன.  இவர் காவிரிபூம்பட்டிணத்திற்கு அருகில் உள்ள கழார் என்னும் ஊரில் பிறந்தவர். கீரன் என்பரை மணந்தார். எயிற்றியார் என்பது குறிஞ்சி நிலப்பெண்ணை குறிக்கும் பெயர். ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களில் “இயற்கையை நோக்கியிருத்தல்”

உதிர்தல்

பசுக்களெல்லாம் கொட்டடைந்தபின்னான மாலையில் சொன்ன நாள் நேரத்துக்கு ஊர் கூடியிருந்தது. பறவை திசை நோக்கி ஷிவலிங்கையா இந்த வருடம் மழை அதிகமிருக்குமென்றும், இன்னும் இரண்டு நாட்களில்  மழை துவங்குமென்றும் சொன்னார். ஊர் தானியங்களை நீர்ப்பதமேறாமல் பாதுகாக்கக் கிடங்குக்கு இன்னும் இரண்டு சுவர் கூடுதலாக எடுக்க வேண்டுமென்றார். அதுவரை அவ்வூர் கண்டிராத மழை அவ்வருடம் இருக்கப்போவதாகச் சென்னார். நிகழாதவை தன்னை நிகழ்த்திக்கொள்ளும் காலமது.

மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது

அவர் புன்சிரிப்பு மாறாமல் சொன்னார். அப்புறம் எனக்கு எதுக்கு சுற்றி வளைத்துப் பேசி நேரம் போக்குவது? சுருக்கமாக நிதிக்குழு, அரசுரிமை எனக்கு வர எடுத்த நடவடிக்கை, ஏன் வரணும் என்ற காரணகாரியம், மிளகுராணியோடு நான் எதிரெதிர் நின்று ஆட்சி மாற்றம் கேட்க இருக்கும் விரைவில் நிகழ இருக்கும் நடப்பு இதற்கு பில்ஜி அரசரின் ஆதரவு வேண்டுதல். எல்லாம் சொன்னேன். 

அசல்

வாழ்க்கை அதேபோல் நெருக்கடியில் செல்வதாகவே விதிக்கப்பட்டது என்பதாகவே நான் எடுத்துக்கொண்டேன். இப்போது செல்பவர்களும் அப்படித்தான் எண்ணக்கூடும். இரண்டு பெட்டிகளுக்கு பின் கூட்டம் குறைவாக இருக்கக்கூடும் என்பதையோ உடலும் மனமும் நெருக்கடியின்றி செல்லமுடியும் என்பதையோ அறியவேயில்லை. முதல் பெட்டியில் செல்வதால் எப்பயனும் இல்லையென ஒரேயடியாக மறுத்துவிடமுடியாது. சாலையிலிருந்து வந்து ஏறுவதற்கு அதுதான் முதன்மையானது.

துளிமம்

துளிம கொள்கையின் ‘பிறப்புச் சான்றித’ழாக  மேற்சொன்ன எளிய தெளிவான வரிகளைக் கொள்ளலாம். இந்த தொடக்க வரி ,   ‘எனக்குத் தோன்றுவது என்னவென்றால்..’   , ‘ நான் (இவ்வாறு) சிந்திக்கிறேன்..’ என்னும் டார்வினின் பரிணாமம் குறித்த அறிமுகக் குறிப்புகளின் தொடக்கம் அல்லது காந்தப்புலம் குறித்த அறிமுகத்தின் போது  பாராடவிடம் காணப்பட்ட தயக்கம் போன்று அற்புதமானது .

தெய்வநல்லூர் கதைகள் 13

This entry is part 13 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

பெரிய கோவில்  சந்திப்புக்குப் பிறகு மொத்த வகுப்புமே மாறிப்போனது. அன்றைய மாலை நாங்கள் எவ்வித காரணமுமின்றி சும்மா சிரிப்பதே அம்மா சுகமென சிரித்து பேசினோம்.  வெள்ளி மாலை கோவில் சந்திப்பு முடிந்து சங்கீதாவும், மெஜூராவும் உடன் வர நாங்கள் மூவரும் என அனைவரும் ஒன்றாக கோவிலிலிருந்து கிளம்பி தெற்கு “தெய்வநல்லூர் கதைகள் 13”

கஞ்சா

இரண்டு நாட்களுக்கு முன்பு சர்வதேச செய்திகளில் சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவரொருவர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்தாக கைதுசெய்யபட்டது பேசுபொருளாக இருந்து. போதையூட்டும் தாவரங்கள் குறித்த ஆய்வில் இருப்பதால் நான் அதுகுறித்து மேலும் தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்தேன் சிங்கப்பூரில் போதைப்பொருள் சார்ந்த குற்றங்களுக்கு மிகக் கடும் தண்டனைகள் வழங்கப்படும். இந்த மாணவனுக்கு “கஞ்சா”

ஓவியம் என்பது யாதெனில்…

வெண்ணிற தாடி, தொப்பிகள் மறைக்காத நரை மயிர், சுருக்கங்களும் பள்ளங்களும் நிறைந்த சுமுகமான முகங்கள். அவற்றில் என்ன தத்ரூபமான வெளிப்பாடுகள்! காலமெல்லாம் தோழமை கொண்டாடிய இருவர். பரஸ்பர அன்பு, நம்பிக்கை, ஒருவரின் ரகசியங்களையும் குறைபாடுகளையும் மற்றவர் அறிந்த அன்னியோன்யம். உரையாடலில் ஒரு இடைவெளி. அந்தக் கணம் சித்திரத்தில் உறைந்திருக்கிறது. ஒருவர் ஏதோ சொல்ல நினைக்கிறார். அதற்கு சரியான வார்த்தைகளைத் தேடுகிறார்.

அதிரியன் நினைவுகள் – 27

This entry is part 26 of 48 in the series அதிரியன் நினைவுகள்

காதல், உடலைப் பிரிந்த ஒரு ஆன்மாவை மீண்டும் பூமிக்குக் அழைத்து வந்து, தற்காலிகமாக அதற்கு ஒரு உடலைக் கொடுப்பதாகும். அளவில் வேறுபாடுகள் இருப்பினும் இக்கதையின் ஆழம் எங்கள் மனதை நெகிழச் செய்தது.  எங்களில் அனேகர் இக்கதையை ஒத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினர் : சத்தீரஸ் தனது குரு  நாவன்மை படைத்த அஸ்பாசியஸை (Aspasius) நினைவு கூர்ந்தார் (இவர் சிஷ்யருக்கு சில வாக்குறுதிகளை அளித்திருந்தார்

ஜகன்னாத பண்டித ராஜா – 4

This entry is part 4 of 6 in the series ஜகன்னாத பண்டித ராஜா

இந்த கங்கா லஹரியின் ஸ்லோகங்களைத்தான் நாம் காணப்போகிறோம். நான் அறிந்தவரை இதுவரை தமிழ் மொழிபெயர்ப்பைக் கண்டதில்லை. என்னைப்போலும் சம்ஸ்க்ருதம் அறியாதவர்கள் அறிந்து போற்றும் வகையில் (ஒரு ஆங்கில மொழியாக்கத்தின் துணைகொண்டு) இதனைச் செய்யத் துணிந்தேன். அன்னை கங்கைக்கு எனது காணிக்கை இதுவே. தீபாவளி சமயம் இதனைச் செய்யத் துவங்கியது எத்தனை பொருத்தம்!

ஆண்மை

தன் மாளிகையின் உப்பரிகையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தார் பீஷ்மர். நதியின் அலைகள் காற்றில் அலைபாய்ந்து கரைகளைத் தொட்டுச் சென்றன. அவைகளின் மேல் ஆதவனின் பொன்னிறக் கிரணங்கள் ஆசையுடன் படிந்தன. இவைகளெல்லாம் தன் இயல்பில் இருக்கையில் ஏன் மனிதன் மட்டும் இயல்புகளைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளை வகுத்தான்? வாய் பேச “ஆண்மை”

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 9

This entry is part 9 of 10 in the series கணினி நிலாக்காலம்

90 -களில் வந்த முக்கிய வியாபாரப் பயன், சின்ன நிறுவனங்கள் தங்களது கணக்கு சார்ந்த தேவைகளை ஒருங்கிணைக்க முடிந்தது. ஒரு பெரிய சர்வர் என்னும் சக்தி வாய்ந்த கணினியுடன், பல்வேறு துறைகளின் பயனாளர்கள் தங்களுடைய மேஜைக் கணினியிலிருந்து தொடர்பு வைத்துக் கொண்டு, சர்வரில் இயங்கும் ஒரு மென்பொருள் பல பயனாளர்களின் தேவைகளையும் நிறைவு செய்யும். இன்று இது மிகச் சர்வ சாதாரணமாக எல்லா நிறுவனங்களில் இயங்கினாலும், ஆரம்ப நாட்களில் நடந்த மனித கூத்துக்கள் மிகவும் சுவாரசியமானவை.

வரம்

நல்லதுதான், ஒரே முதலீட்டை நம்பி இருக்க முடியாது, இன்றைக்கு என்ன ஆயிற்று என்று சொல்லுங்கள், தேவைப்பட்டால், இன்னொன்று பார்க்கலாம், என்னுடைய நீண்ட கால நண்பன் தான்“ என்று இன்னொரு பெயரை உதிர்த்தார். நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆனால் எனக்கு பழக்கம் இல்லை, எழுதிக் கொண்டேன். ஒரு வேளை அவருக்கு அதில் ஏதாவது கமிஷன் கிடைக்குமோ என்னவோ என்ற ஒரு சந்தேகம் இருந்தது.

கருஞ்சாந்து நிற ஆற்றலாளர்கள்

ஈரம் கசியாத, சுகாதாரப் பட்டியுடன், அணையாடையும் இருக்கும், பெண்கள் பாதுகாப்பாக சங்கடமில்லாமல் உணரும். ‘அட்ஜெஸ்டபில் பெல்ட்டை’ இவர் வடிவமைத்தார். முதலில் இந்த சாதனத்தை வரவேற்ற ஒரு குழுமம், இவர் ஒரு கறுப்பினத்தவர் என்று அறிய வந்ததும் சந்தைப் படுத்த மறுத்து விட்டது. காப்புரிமைக் காலம் முடிந்து விட, எவரும் இந்த சாதனத்தை வடிவமைக்கலாம், சந்தைப் படுத்தலாம் என்ற விதி முறையின் படி, இவரது இந்தக் கண்டுபிடிப்பு, இவருக்கு அழியாப் புகழை தந்ததே தவிர, பணம் தரவில்லை.

சுமதிக்கு அவள் பெயரை பிடிக்காது

பாலசுப்ரமணியன் ரயில்வே ஊழியர். திருமணம் சொந்தத்திலேயே அமைந்தது. பின்னே சும்மாவா, பட்டமங்கலத்தான் பரம்பரையில் முதல் அரசு ஊழியன். முறை உள்ள சொந்தங்கள் எல்லாம் நீ நான் என்று போட்டி போட, பாலசுப்ரமணியன் தெரிவு செய்தது தூரத்து உறவுக்கார பெண்ணான தங்கத்தை. வந்த வரன்களில் தங்கம் படித்தவள். பட்டம் பெறவில்லை என்றாலும், பனிரெண்டு வரையில் படித்தவள். கிளை நூலகத்தின் உறுப்பினள்.

சந்திரசேகர் கவிதைகள்

கடல் முன்னமர்ந்து
கொந்தளித்துக் கொண்டிருந்தேன்
எனக்கு எதிர்கரையில்
யாரோ அமர்ந்திருந்தார்
நலமா என்றேன்
நலமே என்றார்
இடம் மாறிக் கொள்ள
நீந்த வேண்டியிருக்கிறது

களத்திர ஸ்தானம்

காலைலேர்ந்து ஒரு பொண்ணு வீட்டுக்காரன் வரல பாத்துக்கோ. தொண்ணூறு பையன் ஜாதகம் வந்தா பத்து பொண்ணு ஜாதகம் வருது. என்னத்தச் சொல்ல போ.. ஒரலும்  ஒலக்கையுமா செய்யச் சொன்னா வெறும் ஒலக்கையாச் செஞ்சு போட்டுருக்கு, கிறுக்குக் கூதி புள்ள..ஒலக்க வேணும்னா சொல்லு…என்று கண்ணடித்த மீனாச்சியைப் பார்த்து ‘அப்பிடி ஏதும் பிடிச்சிட்டயா என்ன?’ என்று கேட்க நினைத்து கேட்காமல் சிரிப்பதைத் தவிர ஏதும் செய்ய முடியவில்லை

நட்சத்திரம் நகர்கிறது?

அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்குள் ‘தடாலடி’ அரசியல் நிகழ்வுகளுக்குப் பஞ்சமிருக்காது என்பதால் நீதிமன்றங்களில் நடக்கும் முன்னாள் அதிபர் மீதான வழக்கு, விசாரணைகள் விவாதப்பொருளாக மாறி வருகிறது. மக்களிடையே அதிபர் ஜோ பைடனின் ஆதரவு குறைந்து வரும் வேளையில் எதிர்க்கட்சியில் நடக்கும் களேபரங்களுக்கும் குறைவில்லை. அரசியல் வரலாற்றில் “நட்சத்திரம் நகர்கிறது?”

நெஞ்சம் மறப்பதில்லை

மேலோட்டமாகப் பார்க்கும்போது நீர்வீழ்ச்சியைப் போற்றும் பாடலாகத் தெரிந்தாலும் புலவரின் சொந்த வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்கும்போது வேறுபொருள் புலப்படுகிறது. புலவரின் மகள் இறந்தவுடன் அரசவைப் பதவியைத் துறந்து துறவு வாழ்க்கை வாழத் தொடங்கினார் என்பது அவரது மகள்மீது வைத்திருந்த அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. நீர்வீழ்ச்சியை வாழ்க்கையாகவும் அதன் நீரை மகிழ்ச்சியாகவும் புகழை நினைவாகவும் உருவகித்தால்…

பால் லின்ச்சின் டப்ளின் டிஸ்டோபியா

2003ஆம் ஆண்டு, ‘Damas de Blanco’ (வெள்ளுடுப்பு மங்கையர்) என்ற அமைப்பை  கூப அரசால் சிறை வைக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போக்கடிக்கப்பட்டவர்களது பெண் உறவினர்கள் துவக்கினார்கள். மார்ச் 2011 ஆம் ஆண்டு, அரசுக்கு எதிராக சுவற்றில் எழுதிய பள்ளிக் குழந்தைகள் சிரியாவிலுள்ள டாரா என்ற நகரில் கைது செய்யப்பட்டபோது “பால் லின்ச்சின் டப்ளின் டிஸ்டோபியா”