தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் 1960ல் வெளிவந்த ராகஜலதி நாவலின் உள்ளே, இந்த நாவலின் எழுத்தாளர் லதா எழுதிய இதர நாவல்கள் என்ற தலைப்பின் கீழ் ஆறு நாவல்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்கள். அவற்றில் ஒன்று ஜீவன ஸ்ரவந்தி. மூன்று தலைமுறை வாழ்க்கையைச் சுற்றி இந்த நாவலின் கதை நகருகிறது. “ஜீவன ஸ்ரவந்தி: தெலுங்கு இலக்கியங்கள்”
Category: சமூகம்
உபநதிகள் – அத்தியாயம்: பத்து
சற்றுத்தள்ளி கோடிட்ட இடத்தில் கலாவதி காரை நிறுத்துகிறாள். இறங்கி மேற்கு வானத்தின் கருமையைப் பார்த்து அவள் முகத்தில் கவலைக் கோடுகள். மனதைத் தேற்றிக்கொண்டு காரில் இருந்து பைகளை எடுத்து நடக்கிறாள். புல்வெளியில் ஏற்கனவே சில கூடாரங்கள் எழுந்து நிற்கின்றன. இன்னும் சில தரையில் உட்கார்ந்து ஓய்வு எடுக்கின்றன. விவசாயிகள் சந்தையில் என்ன வாங்கலாம் என்பதைத் தீர்மானிக்க கலாவதி ஒரு சுற்று நடக்கிறாள்.
மாரியின் மனைவி
மனிதர்களுக்கு கடுப்பையும், எரிச்சலையும் ஊட்டுவது கார்டிசால் என்ற ஹார்மோன். அட்ரினலின் சுரப்பியினின் மூலமாக கார்டிசால் மனிதனுக்கு ஆபத்து வந்தால் சுரக்கும். ஆதி மனிதனுக்கு அது உயிர் வாழ உதவியாக இருந்தது. வனவிலங்குகளைக் கண்டால் மனிதன் ஓடவோ, சிலை போல நிற்கவோ, போராடவோ அது பல விதத்தில் உதவி செய்தது. அதே போல் மனிதனுக்கு பசியைத் தூண்டுவது க்ரெலின் என்ற ஹார்மோன். சில சமயம் கார்டிசால் க்ரெலின் சுரப்பை அதிகரிக்கும்.
அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம்
அறிமுகம் “கடும் போட்டிகள் கொண்ட விளையாட்டுகளுக்கு அழகு என்பது ஒரு குறிக்கோள் அல்ல, ஆனால் உச்சப்பட்ச விளையாட்டுப் போட்டிகள் மனித அழகின் மிகச் சிறந்த ஆடுகளம். இதை தோராயமாக போருக்கும் வீரத்திற்கும் உள்ள தொடர்போடு பொருத்திப் பார்க்கலாம்” டேவிட் பாஸ்டர் வாலஸ் அமெரிக்க விளையாட்டுக்கள் உண்மையில் இன்றைய அமெரிக்காவை “அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம்”
அல்லல் என் செயும் அருவினை என் செயும்?
ஊடகத்தார் படும் இன்னல்
உரைக்க ஒண்ணாது
அல்லில்லை பகலில்லை அலுப்பொன்றில்லை
பெற்றோர் மனையாள் தம்மக்கள்
தறுகண் நினைப்பில்லை
அவனன்றி ஓரணுவும் அசையாது
என்பது போல் எவ்விடத்தும்
நீக்கமற நிறைந்திருக்கும் பணி
கயோட்டீ கதைகள்
“வெறும் கதைகள். நீ, நான், எல்லாரும், நாமெல்லாம் கதைகளின் ஒரு கூட்டம், அந்தக் கதைகள் என்னவாக இருக்கின்றனவோ அதெல்லாம்தான் நாமாக இருக்கிறோம். பழங்குடிகளைப் போலவேதான் வெள்ளையருக்கும். ஒரு பழங்குடிச் சமூகத்துக்கும், நகரத்துக்கும், நாட்டுக்கும், உலகத்துக்குமே இதேதான் பொது. இந்தக் கதைகள் எல்லாமாகச் சேர்ந்து, எப்படிப் பின்னிச் சேர்கின்றனவோ அதெல்லாம்தான் நாம் யார், என்ன, எங்கே எப்படி இருக்கிறோம்னு சொல்லுதுங்க.”
“மறக்கிறத விட்டுட்டு நினைவுபடுத்திக்க ஆரம்பிக்கணும் நாமெல்லாம். இது வேணும், அது வேணுமின்னு கேட்கறதை நிறுத்தணும், நமக்கு வேணுமுன்னு நாம நினைக்கிறதை ஜனங்க நமக்குக் கொடுப்பாங்கன்னு காத்திருக்கறதை நிறுத்தணும். நமக்குத் தேவையானதெல்லாம் கதைங்கதான்.
இந்திய மறுமலர்ச்சியைக் கொணரும் நவோதயா பள்ளிகள்
அரசுப் பள்ளிகளில் பயிலும் பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த கிராமப்புற மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாதிரி பள்ளிகள்” எனப்படும் இணை கல்வி நிறுவனங்களை அமைக்க 1985ல் மத்திய அரசு தீர்மானித்தது. அன்றைய பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி, “ஜவஹர் நவோதயா வித்யாலயா(ஜேஎன்வி)” எனப்படும் பள்ளிகளை, இருபாலாருக்குமான ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான இலவச குடியிருப்புப் பள்ளிகள் திட்டமாக, 1986ல் தொடங்கி வைத்தார். கல்வி அமைச்சகத்தின் கீழ் “நவோதயா வித்யாலயா சமிதி” எனும் ஒரு தன்னாட்சி அமைப்பு இப்பள்ளிகளை நிர்வகிக்கிறது.
நடவுகால உரையாடல் – சக்குபாய்
ஆதிவாசி சமூகத்தவரான சக்குபாய் காவித் தஹானு தாலுகாவிலுள்ள பந்த்கரைச் சேர்ந்தவர். சிறு விவசாயிகளுக்காகவும் நிலமற்ற கூலித்தொழிலாளர்களுக்காகவும் போராடி வரும் கஷ்டகரி சங்கட்டனா (பாட்டாளிகள் சங்கம்) என்ற மக்களமைப்போடு கடந்த பத்தாண்டுகளாகப் பணியாற்றி வருபவர். அவரது கிராமத்தில் `சங்கட்டனா’ உருவாகுவதற்கு சக்குபாய்தான் ஊர் மக்களின் ஆதரவைப் பெற்றுத்தந்தார்.
எமக்கென்ன
பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி
மகிமைத் தேர்தல்!
ஆளும் ஆசை அற்றுப் போகுமோ?
மெக்காலேயின் வாழ்க்கையும் காலமும்
ஓரியண்டலிஸ்ட் என்ற வார்த்தை 1800களில், ஆங்கிலத்தை விட இந்திய மொழிகள்தான் இந்தியர்களின் கல்விக்கும் நவீனப்படுத்துவதற்கும் உகந்தது என கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் நிர்வாகிகளைத்தான் முதலில் குறிப்பிட்டது. ஹிந்து தேசியவாதிகளிடையே, காலனியத்திற்கு பின் வந்த மார்க்சிஸ்ட்கள் கருதுவது போல், ஓரியண்டலிசம் என்ற வார்த்தை அசிங்கமானதாக கருதப்படுகிறது
பைடனின் ஆட்சிக்காலம்: ஆண்டறிக்கை
நாட்டின் சாலைகள், பாலங்கள், தண்டவாளங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் நீண்ட கால மேம்பாடுகளை “பில்ட் பேக் கட்டமைப்பு” திட்டத்துடன் இணைந்து ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை மில்லியன்(1,500,000) புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது சாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி! இதற்காக ஒரு ட்ரில்லியன் டாலர் உள்கட்டமைப்பு மசோதாவையும் சிரமப்பட்டு இரு கட்சிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றியதை பைடன் அரசின் சாதனையாக ஜனநாயக கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.
குருதி
வழக்கமாக மடிததுக் கட்டிய மல் வேஷ்டியும் முண்டும் துண்டுமாகததான் அறவே மேக்கப் இல்லா சேட்டன்களும் சேச்சிகளும் இன்னமும் பச்சைப் பசேல் கேரளத்துக் கொல்லைகளிலும் காடுகளிலும் திரிகிறார்கள். ஆனாலும், கதை என்கிற ஒரு வஸ்துவை மட்டும் தீர்க்கமாக அவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அதில் அவர்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. கதையோட்டத்தைத் தடை செய்யும் பாட்டுகளையும் அறவே குறைத்துக்கொண்டு வருகிறார்கள்…. கிறித்துவ வெறித்தனமோ, இஸ்லாமிய பயஙகரவாதாமோ, ஹிந்துதுவ ரஸவாதமோ, எதுவாக இருந்தாலும் கதை தான் ஆணிவேர்.
மதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு
கிட்டத்தட்ட 160 ஆண்டுகளாக இயங்கிவந்த கிருத்துவ திருச்சபைகளின் உறைவிடப் பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் மீது இந்த மதவெறியர்கள் கொடூரமான பாலியல் வன்முறைகளையும்,கொலைகளையும் ஈவிரக்கமில்லாமல் செய்திருக்கின்றனர்.அதிலும் பூர்வகுடி மக்களின் குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து அவர்களுக்கு கல்வி அளிக்கிறோம் என்கிற போர்வையில், அந்தக் குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகளை, வசதிகளைக் கூட செய்து தராமல், கட்டுப்பாடுகள் விதிப்பதாக பல்வேறு பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கியதால் பல குழந்தைகள் சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் கொடூரமாக மரணித்திருக்கின்றனர்.
குரூப்ல கும்மி
அநேகமாக நாம் அனைவரும் ( அது என்ன, அநேகமாக, கண்டிப்பாகவே) ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அலைபேசி தகவல் பரிமாற்ற செயலிகளில் (வாட்ஸ்அப், டெலிகிராம்) ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குரூப்புகளில் இணைக்கப்பட்டிருப்போம்.(நாமாக எங்கே சேர்ந்தோம்). தாமாக கேட்டு இணைந்த தியாகிகளும் உண்டு. இதில் இரண்டு மொபைல் போனுடண், “குரூப்ல கும்மி”
ஆணின் அன்பு
இது நடந்து 6 வருடங்கள் கழித்து கோயம்புத்தூர் செல்லும் பஸ்ஸில் அவரை பார்த்தேன். கண்டுகொண்டு பேசினார். “சரிங்க சார் கெளம்பறேன்” என்ற போது “இப்போ ஒடம்பு எல்லாம் பரவால்லயா” என்று கேட்டார். நான் ஒரு நிமிடம், நல்லாதான இருக்கேன் என்று நினைத்துக்கொண்டு விழித்தேன். “அங்க காலேஜ்ல இருக்கும் யோது வயத்துவலி இருந்துதே, இப்போ பரவால்லயான்னு கேட்டேன்” என்றார். நான் பதில் சொல்வதற்குள், “அன்னிக்கு எனக்கு வலிச்ச மாதிரி இருந்துச்சு போங்க” என்று அவர் சொன்ன போது அவரின் கண்ணாடி க்ளேரை தாண்டி அவர் கண் நிறைந்ததை கண்டேன்.
பரோபகாரம் – நாட்டுக்கு நாடு
தனி குடிமக்கள், நிறுவனங்கள், மஹா கோடீஸ்வரர்கள் போன்றவர்களை எல்லாம் தாண்டி, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு உதவுவது உருப்படியான செயல்முறையா? அந்த உதவிகளால் நாடுகள் பெரிதாக முன்னேறுகின்றனவா அல்லது அந்த உதவும் கரங்களையே நம்பி உருப்படாமல் போகின்றனவா என்றொரு பூதாகாரமான கேள்வி பரோபகார திட்டங்களை அலசும் வட்டங்களில் உலாவிக்கொண்டே இருக்கும்.
பரோபகாரம் – மஹா உதவல்கள்
அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 5.75 லட்சம். நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஸோஸ் அவர்கள் அத்தனை பேருக்கும் தன் சொந்தப் பணத்திலிருந்து இந்த வருடம் தலா ஒரு லட்சம் டாலர் (சுமார் எழுபது லட்சம் ரூபாய்) பொங்கல் போனஸ் கொடுத்தாலும்கூட, அவரது சொத்து 2020 ஆரம்பத்தில் இருந்ததைவிட இன்று அதிகமாக இருக்கும்! காரணம் கொரொனா தாண்டவத்தால் உலகமே தடுமாறிக்கொண்டிருந்த போன வருடம் மட்டும் அவரது சொத்து மதிப்பு அவ்வளவு உயர்ந்திருக்கிறது!
பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு
சுமார் 32 வருடங்களுக்கு முன், 1988 வாக்கில் மும்பையில் இருந்து சென்னை (அன்றைய வழக்கில் பம்பாயிலிருந்து மெட்ராஸ்) வருவதற்கான ரயிலைப் பிடிக்க விக்டோரியா டெர்மினஸ் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தேன். நல்ல உடை, ஷூ அணிந்து தலை வாரி, ஷேவ் செய்து கொண்டு பார்க்க டீசண்ட்டாக இருந்த ஓர் இளைஞர் “பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு”
கழுத்து நீண்டு வாய் குறுகிய பாட்டிலுக்குள் ஒரு காடு
ஜன்னலுக்கு வெளியே வெகுதூரத்தில் தெரிந்த பொட்டல் வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பொட்டல் வெளி மௌனமாய் அசைவது தெரியாமல் மெதுவாக அசைந்துகொண்டிருந்தது ; மின் கம்பங்கள் கத்திக்கொண்டே வேகமாக பின்னோக்கி ஓடின. அவள் அருகில் அமர்ந்திருந்த ராம் அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு அவனுக்கு அந்தப்பக்கத்தில் உட்கார்ந்திருந்த மன்னியிடம் அவன் ட்ரேட் மார்க் “கழுத்து நீண்டு வாய் குறுகிய பாட்டிலுக்குள் ஒரு காடு”
யோகாப்பியாசம் இந்துக்களுடையதா?
முதலாவதாக, யோகம் இந்துக்களை சேர்ந்ததுதான். ஹிந்து மதம் என்பது இந்தியாவில் உள்ள, உருவ வழிப்பாட்டை அடிப்படையாகக்கொண்ட மத மரபுகள் அனைத்தும் சேர்ந்ததாகும். தொன்றுதொட்ட காலமாக இருந்துவரும் மரபுகளும் இதில் அடங்கும். எனவே, யோகம் இந்து மதத்தைவிடப் பழமையானது எனும் தீபக் சோப்ராவின் கூற்று வேடிக்கையான ஒன்று.
இந்துக்கள் கோழைகளா?
“இந்து ஒரு கோழை; முகம்மதியர் இந்துக்களை அச்சுறுத்துபவர்கள்” இதை 29 மே 1924 இளைய பாரதம் இதழில் எழுதியவர் அஹிம்சாவாதி மகாத்மா காந்தி. இந்துக்களை தட்டி எழுப்ப சொல்லப்பட்டதா அல்லது முகம்மதியர்களை மேலும் ஊக்கமூட்டுவதற்கா என்று தெரியவில்லை ஆனால் ஆசிரியர் இந்துக்களின் பலவீனங்களில் கோழைத்தனம் ஒன்றல்ல என்கிறார்
கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் திராவிடப் பேரறிஞர்களால் சொல்லப்படுவது இது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழன் கல்வியறிவு பெற்று உலகம் முழுவதற்கும் பாடம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். தமிழ்நாட்டில் பிராமணர்கள் நுழைந்து தமிழர் கல்வித் திறனைச் சீர் குலைத்தனர். பிராமணர் அல்லாதாரை படிக்கவிடாமல் தடுத்தனர். இன்றும் பல்வகைச் சூழ்ச்சிகளைச் செய்து “கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு”
குறைந்த தண்டனை, அதிக நீதி
தற்போது நடந்து கொண்டிருப்பது கருப்பர்களுக்கும் வெள்ளை அமெரிக்கர்களுக்குமான போராட்டம் மட்டுமல்ல. அனைத்து சிறுபான்மையினரும் இணைந்து ஆதிக்க மனோபாவ வெள்ளையினத்தவரை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டம். “Black Lives Matter” இயக்கம் பற்றிப் பேசவே அஞ்சும் இந்தியர்கள் ஏராளம். அது கருப்பர்களுக்கானபிரச்னை என்று எளிதில் கடந்து விடுவதும் முறையானதல்ல.
நிறமும் நடிப்பும்
எந்தெந்த நடிகர்கள் முகத்தை வெள்ளையடிக்கும் களிம்புகளைப் பரிந்துரை செய்து கொண்டே, “எல்லா நிறமும் ஒன்றே” என்று முழக்கமும் இடுகிறார்கள் என்னும் பட்டியலை இங்கே காணலாம். “கருப்பு நிறம், வெள்ளை நிறம் எல்லாம் ஓர் உயிர்!” என சொல்பவர்களால் எப்படி முகப்பூச்சுப் பொருட்களை உபயோகிக்கவும் சொல்லமுடிகிறது என்னும் வினாவை எழுப்புகிறது “நிறமும் நடிப்பும்”
இளம்பருவத்தோள்
அமெரிக்க வாழ் இந்தியர்களைப் பற்றிய முதல் நெட்ஃபிளிக்ஸ் தொடர் அமெரிக்கத் தலைமுறையினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தி ஆஃபீஸ்” என்ற அமெரிக்க நாடகத்தில் நடித்துப் பிரபலமான இந்திய வம்சாவளி மிண்டி கேலிங் தன்னுடைய சிறு வயது அனுபவங்களை “Never Have I Ever” தொடராக இயக்கியிருக்கிறார்.
‘Luce’ -திரைப்பட விமர்சனம்
நாம் சற்றேனும் சிந்தித்துப் பார்க்காத அவ்வுண்மைகள்தான் என்ன? இவ்வுலகம் அருட்தொண்டர்களாலும் சூனியக்காரர்களாலும் நிரப்பப்பட்டதல்ல. சாதாரண மனிதர்களே நிரம்பியிருக்கிறார்கள் அவர்கள் எல்லோருமே எல்லா துறைகளிலும் மேன்மையடைந்தவர்களல்ல. சில துறைகளில் உயர்ந்தும் பல துறைகளில் தாழ்ந்தவர்களுமாகவே இருக்கிறார்கள். அவர்களின் நடத்தையும் அவர்களை ஊக்குவிக்கும் காரணங்களைப் பொறுத்து, நேர்வழியையோ, குறுக்குவழியையோ பின்பற்றுகிறது.
குளக்கரை
Experimental Advanced Superconducting Tokamak (EAST) என்ற உலை சி சுவான் மாகாணத்தில் அமைந்துள்ளது. ‘டோனட்’ வடிவிலானது.2017-ல் 50 மில்லியன் டிகிரி வெப்பம்தான் உருவாக்க முடிந்தது;2018-ல் நடந்த பரிசோதனையில் அதில் 100 மில்லியன் டிகிரி செல்ஸியஸிற்கும் மேலாக வெப்பம் கிடைத்தது.செப்புக் கம்பிச் சுருள்கள் செறிவான காந்த மண்டலத்தின் மூலம் அதிக அளவில் ‘எலெக்ட்ரான்’ வெப்பத்தை தக்க வைத்தது இதில் ஒரு முக்கிய திருப்புமுனை.இயற்கைச் சூரியனின் உட்புறத்திலேயே 15 மில்லியன் டிகிரிதான் வெப்பம் உண்டாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனவர்கள்
உரல் இடிக்க, முறுக்கு சுத்த, அதிரசம் சுட என்று பண்டிகைகளின் போது அம்மாக்களுக்கு உதவ வரும் பெண்கள் அத்தைகளாகவும், ஆச்சிகளாகவும் மாறி இருக்கின்றனர். எங்கள் வீட்டில் சுத்து வேலை பார்க்கும் அத்தையிடம் வீட்டையே ஒப்படைத்து விட்டு நாங்கள் நாள்கணக்கில் ஊருக்குச் சென்று இருக்கிறோம். அப்போது பெரிய விஷயமாகத் தெரியாதது, இப்போது வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
ஆடை – குழம்பிய குட்டையில் பிடிக்க நினைக்காத மீன்
இளைஞர்களால் ரசிக்கக்கூடிய ஒரு படம்; முற்போக்கான கருத்தை முன்வைக்க விழையும் ஒரு படம்; அதேநேரம் சமூக ஒழுங்கைச் சீர் குலைக்காத ஒரு படம்; சமுதாயத்திற்கு ஒரு கருத்தைச் சொல்லும் படம்; இன்றைய முதலாளித்துவ அரசியல் மனோபாவத்தை பகடி செய்யும் ஒரு படம்; பொதுவெளியில் ஆபாசம் என்று கருதுபவை பெரும்பாலும் நெருங்கிய வட்டாரங்களில் மிக இயல்பாக எடுத்துக்கொள்ளப் படுபவை. அவற்றை மூடி மறைக்காமல் பொதுவெளியில் போட்டு உடைக்கும் ஒரு படம்; விளிம்புநிலை மக்களை விலக்காத ஒரு படம் என்று ஒரே நேரத்தில் பல கம்பிகள் மேல் நடக்க முயற்சித்திருக்கிறார் கதாசிரியர்.
சாதலும் புதுவது அன்றே: An Elephant Sitting Still
ஏராளமான அண்மைக் காட்சிகள், Medium Shot-கள். தேவைப்பட்டாலொழிய, சட்டகத்தின் தெளிக்குவி நடுவத்தில் ஏனைய கதாபாத்திரங்கள் காட்டப்படுவதில்லை. பிரதான கதை மாந்தர்களுடனான உரையாடலின் போது கூட துணைக் கதாபாத்திரங்கள் மங்கலான குவியத்திலேயே (Shallow Focus) விலக்கி வைக்கப்படுகிறார்கள். இசைவான தொலைவிலிருந்து கொண்டு இயங்குகிறார்கள். காமெரா நகர்வுகளில் மந்தமான செயலூக்கமின்மை நிறைந்திருந்தாலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கையில் அது முனைப்பு கொள்கிறது. அத்தகைய தருணங்களில் மட்டும் அவர்களது உருத்தோற்றங்கள் தெளிவு பெறுகின்றன.
ஆலமரத்தின் கீழ் ஒரு குடியிருப்பு
ராஜஸ்தானத்தில் பெண்களின் மேம்பாட்டுக்காக வேலை செய்ததால் உயர்சாதியினரால் மானபங்கப் படுத்தப்பட்டு, நீதிக்காகப் போராடி பின்னர் நீரஜா பனேட் விருது பெற்ற பவ்வரி தேவியை எல்லோருக்கும் தெரியும். ஆனால் ராஜஸ்தானத்தில் பல பவ்வரிகள். பவ்வர் என்று ஆண் குழந்தைகளையும், பவ்வரி என்று பெண்குழந்தைகளையும் கூப்பிடுவது வெகு சகஜம். செல்லமாக, கிராமப்புறங்களில் இந்தச் செல்லப் பெயரே பெயராக நிலைத்து விடுவதும் உண்டு. பவ்வரிகளின் வாழ்க்கை, போராட்டங்களுடன் இணைந்த வாழ்க்கையாக இருப்பதும் வியப்புக்குரியது இல்லை. காரணம், தாழ்ந்த சாதியினர் என்று அடையாளமிடப் பட்டவர்களிடையேதான் பவ்வரிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட ஒரு பவ்வரிதான் பவ்வரி பாயிபட்
எல்லைகள் அற்ற வெளி
கிரிக்கெட்டில் உற்சாக நடனமாடப் பெண்கள், குடிக்கும் பார்களில் நடன மாதுக்கள், கிராமத் திருவிழாக்களில் குட்டைப் பாவாடையோடு ஆடும் பெண்கள். . . இவை சொல்வது என்ன? பெண் என்பவள் உடல் மட்டுமே என்ற பெரும்பான்மையான மன நிலையை. இதை முறியடிக்க எத்தனைக் காலங்களாக பெண்கள் போராடுகிறார்கள், எத்தனை எள்ளல்களையும், இழிவுகளையும் கடக்கிறார்கள், அதை பெண்ணும், மொழியும், வெளிப்பாடும் என்ற பரிமாணங்களில் அம்பை தனது ‘உடலெனும் வெளி’ என்ற நூலில் மிக அருமையாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்கிறார். குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் அவர்களின் மொழியால் அல்லாமல், உடலாலேயே முத்திரை குத்தப்பட்டு அவ்வை முதல் அரங்கமல்லிகா வரை கால, சரித்திர பேதமற்று
இரண்டு சூடான அவித்த முட்டைகளும் காஷ்மீரமும்
இனம் மதம் என்ற நிலையிலிருந்தும் உயர்ந்து எழும்பிய லால் தேத் போன்ற ஞானிகள் வாழ்ந்த நிலம் காஷ்மீரம். அக்கமகாதேவியைப்போல் உடைகளைக் களைந்து ஞானப் பாடல்களை இசைத்த சிவ பக்தை லால் தேத். பல வகைகளில் இன்றும் அவர் வாழ்க்கையும் பாடல்களும் நமக்குத் தேவையான ஒன்றாகவே இருக்கின்றன. எல்லோருமே லால் தேதை தங்களுடையவர் என்று உரிமை கொண்டாடுகின்றனர். லால் தேதை மதமாற்றம் செய்து அவர் ஸூஃபி கருத்துக்களால் கவரப்பட்டார் என்றெல்லாம் கூறப்படுவதன் காரணம் எழுநூறு அண்டுகளுக்குப் பின் இன்றும் நம் வாழ்க்கையில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும்…
யாதும் ஊரே – யாவரும் கேளிர் (குடிபுகல் – பாகம் 4)
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று பல கண்டங்களுக்குள் புகுந்து ஆங்காங்கே நிலவும் சூழல்களை ஆய்ந்ததின் மூலம், எல்லைகள் இல்லாதபோதும்கூட குறிப்பிட்ட ஒரு பகுதியை வெற்றிடமாக்கி இன்னொரு பகுதியை மூச்சுத் திணறச் செய்யும் அளவு பெருந்திரள் குடியேற்றம் நிகழ்வதில்லை என்று முந்தைய பகுதிகளில் நிறுவி விட்டோம். ஆனால் அத்தனை நல்நோக்கங்கள் “யாதும் ஊரே – யாவரும் கேளிர் (குடிபுகல் – பாகம் 4)”
குளக்கரை
கொசுக்கள் குளம், குட்டைகளில் நீரில் முட்டை இடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் லார்வா எனப்படும் இளம் குஞ்சுகள் இந்த மைக்ரோ ப்ளாஸ்டிக் முத்துக்களை உணவோடு சேர்த்து உண்கின்றன. இந்தக் கொசுக்களை உண்ணும் பறவைகள், வௌவால்கள் போன்ற இதர உயிரினங்களை உணவுச் சங்கிலியில் மேல்நிலையில் உள்ள பிராணிகள் உண்ணும்போது அவை படிப்படியாக மேலே உயர்ந்து, மனிதரின் உணவுச் சுழற்சிக்குள் வந்து விடுகின்றன.
ஜனநாயகத்தின் வழிகள்
இன்று தமிழகம்தான் இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நடைபெறும் மாநிலம். 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் 20,450 கண்டன ஆர்ப்பாட்டங்களும் அடுத்தபடியாக பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் முறையே 13,059 மற்றும் 10,477 ஆர்ப்பாட்டங்களும் நடந்தது. இவற்றில் கணிசமான அளவிலான போராட்டங்கள், அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்த்தே இங்கு நடத்தப்படுகின்றன. தமிழக அரசும் மத்திய அரசும் தமிழக மக்களை கேட்காமலேயே திட்டங்களை அமல்படுத்திடுகின்றன என்றும், அவை தமிழக நலன்களுக்கு எதிரானவை… இப்போது எட்டுவழிச் சாலை, கோவையின் குடிநீர் விநியோகம் தனியார்ப்படுத்துதல் போன்ற திட்டங்கள் மக்களிடம் எந்த கருத்தும் கேட்காமல், மக்களுக்கே தெரியாமல் கொண்டு வரப்படுகின்றன என்றும், இதற்கு முன்கூடங்குளம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெய்ல் குழாய்கள் பதிக்கும் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத் திட்டம், நீட் நுழைவுத் தேர்வு முதலிய பிற திட்டங்களும்…
வி. எஸ். நைபால் என்ற மனிதரும் அவர் எழுத்தும்
நோபல் பரிசுச் செய்தி குறித்து அறிய வந்தபோது இங்கிலாந்தின் கிராமப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நைபால் பெருந்தன்மையான பதில் அளித்தார். இங்கிலாந்து (அவரது “தாயகம்”), இந்தியா (அவரது “மூதாதைகளின்” தேசம்), அவரது இலக்கிய ஏஜண்ட் என்று நன்றி கூறினார். அவர் தன்னை “தேர்வுக்குப் பொருத்தமான நபராக” கருதவில்லை என்று விளக்கினார் (1972ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அவர் நோபல் பரிசுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்), தன் பிறப்பிடத்தைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார். ட்ரினிடாட்டில், புதிய தேசிய நூலகத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. நைபால் தன் பதின்ம பருவத்தின் சில ஆண்டுகளைக் கழித்த செயிண்ட் ஜேம்ஸ்ஸில் உள்ள இல்லம், “திரு பிஸ்வாஸின் நண்பர்கள்” என்ற அமைப்புக்கு அளிக்கப்பட்டது. அது நைபால்கள் மற்றும் பிற மேற்கிந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த ஆய்வு மையமாக …
ஏதிலி வாழ்வது எப்படி?
இப்படிதான் வளர்கிறது வாழ்க்கை. குடும்பங்கள் விரிகின்றன, பிறரது ஆசிகளும் பொறுப்புகளும் நம்மை நாடி வருகின்றன. நமக்கு வசதியான பிரதேசத்தை விட்டு வெளியேறும்போது, நாம் வளர்ந்த காலத்தில் உண்ட ரொட்டிக்கு மாறாய் வேறொன்றை உண்ணும்போது, பகுத்துணரும் மனப்பான்மை வளர்கிறது. சல்லா, சப்பாத்தி, வெந்நீர் கார்ன்பிரெட், பிடா, இன்ஜெரா, பாகெட்- வேறொரு ரொட்டியை, வேறு வகையில் காரம் சேர்ந்த உணவை உண்பது என்பது எவ்வளவு அற்புதமானது. உன் மொழிக்கு மாறாய் வேறொரு மொழியில் கனவு கண்டு கொண்டிருப்பவன் அருகில் உறங்குவது என்பது எவ்வளவு அற்புதமானது. இந்த திருமண நாள் புகைப்படத்தை நினைத்துப் பாருங்கள்
குடிபுகல் சிக்கல்கள் – சாத்தியமான தீர்வுகள் (குடிபுகல் – பாகம் 1)
குறிப்பிட்ட ஒரு தேசம் அல்லது சமூகத்தில் உள்ள ஒரு சமயக் குழு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, அதனுடன் போட்டியிடும் பிற சமூகக் குழுக்கள் தம்மை அச்சுறுத்துவதாக அவை எளிதில் கருதக்கூடும். அப்படிப்பட்ட அச்சங்கள் நியாயமாய் இருப்பதற்கான போதிய வரலாற்றுச் சான்றுகள் கூட இருக்கவே செய்கின்றன. அமெரிக்காவில் கணிசமான அளவில் வாழும் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட கிறித்துவர்கள் தம் உரிமைகளும் விழுமியங்களும் எப்போதும் ஆபத்தில் இருப்பதாய் உணர்கிறார்கள். நூற்று இருபது லட்சம் பேர் கொண்ட இந்தியாவில் எண்பது சதவிகிதத்தினர் இந்துக்கள். ஆனால் அவர்களில் பலர் தம் சமயம் ஆபத்தில் இருப்பதாய் நினைப்பதோடு எதிர்த்து நின்றுதான் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாய் நம்புகிறார்கள். இது போலவே உலகில் வேறு பகுதிகளில் உள்ள யூதர்கள், முஸ்லிம்கள், மற்றும் பிறர், தம் தேசத்தில் பெரும்பான்மையினராய் இருந்தாலும் பிறரது அச்சுறுத்தலை உணர்கிறார்கள்.
அமெரிக்காவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட குறை வயது கல்யாணங்கள்
தன் பதினொன்றாம் வயதில் ஷெரி ஜான்ஸன் என்பவர் வன்கொடுமைக்கு உள்ளானார். அதனால் கருவுற்றார். அதன் பின் தன்னை வல்லுறவு செய்தவனுக்கே மணம் முடித்து வைக்கப்பட்டார். இந்தப் பழக்கத்தை மாற்ற இப்போது தன் கதையை சொல்லி போராடி வருகிறார் ஷெரி ஜான்ஸன். அமெரிக்காவில் எந்த வயதில் வேண்டுமானாலும் திருமணம் செய்து “அமெரிக்காவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட குறை வயது கல்யாணங்கள்”
அவர்கள் முகத்தின் வியர்வை
இது வரை பிரபுக்களின் படங்களையும் ராணிகளின் ஓவியங்களையும்தான் அருங்காட்சியக கலைக்கூடங்களில் பார்த்திருப்போம். இப்போது “அவர்கள் முகத்தின் வியர்வை” (“The Sweat of Their Face”) என்னும் கண்காட்சியை ஸ்மித்ஸோனியன் (Smithsonian’s National Portrait Gallery) அமைத்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளிகள், அடிமை சிப்பந்திகள், ரயில் வேலையாட்கள், எஃகு தொழிலாளிகள் என “அவர்கள் முகத்தின் வியர்வை”
ஒவ்வொரு நாளும் 69 கொலைகள்: மெக்சிகோ
சென்ற மாதத்தில் மட்டும் 2,371 பேர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று மெக்சிகோ கருதுகிறது. போதை மருந்து கடத்தல், மாஃபியா ஆள் கடத்தல், அரசியல் அதிகார ஊழல் என்று இந்த வருடத்தில் இருபதாயிரத்திற்கும் மேலான கொலை சம்பந்தமான புகார்களின் மேல் புலன் விசாரணையை நடத்தி வருகிறது மெக்ஸிகோ. செய்தி: “ஒவ்வொரு நாளும் 69 கொலைகள்: மெக்சிகோ”
மகரந்தம்
கலிஃபோர்னியாவின் பெர்க்லி நகரில் உள்ள பல்கலையில் ஒரு வகுப்புக்குப் பாடம் நடத்தும் பேராசிரியர் ஒருவர் ‘Desire, Sexuality and Gender in Asian American literature’ என்ற தலைப்போடு ஒரு வகுப்பை நடத்துகிறார்…..வகுப்பு ஆசிய அமெரிக்க இலக்கியத்தில் பால் விருப்பம், பாலடையாளம், பால் பாகுபாடு ஆகியன எப்படிக் கையாளப்படுகின்றன என்பதை விவாதிக்கிறது….பேராசிரியரின் ஒரு முக்கிய உத்தி. மாணவர்களைத் தமது எதிர்காலத் துணை பற்றி அவர்களுக்கு என்ன எதிர்பார்ப்புகள் உண்டு என்று ஒரு பட்டியல் தயாரிக்கச் சொல்கிறார். அவற்றை அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்கிறார். பிறகு அவர்களின் பெற்றோர்களைத் தொலைபேசியில் அழைத்து பெற்றோர்களின் எதிர்பார்ப்பின் படி மாணவர்களின் துணைகள் எப்படி இருப்பது நல்லது என்று அறியச் சொல்கிறார். அந்தக் குணாம்சங்களைப் பட்டியலிட்டு வாங்கிக் கொள்கிறார். இந்த இரு பட்டியல்கள் பற்றிய தம் கருத்துகளை மாணவர்கள் வகுப்பில் பகிர்கின்றனர்.
குளக்கரை
தமிழ்த் திரைப்படத்தில் வரும் பாலியல் வன்முறைக் காட்சிக்குப் பின், ஒரு பஞ்சாயத்து கூடும். அதில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்ணை அதை நிகழ்த்தியவன் மணம் செய்துகொள்ள வேண்டும் என்ற (வழக்கமான) விசித்திரமான தீர்ப்புக் கூறப்படும். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு தீர்ப்பை அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகண நீதிமன்றம் அளித்துள்ளது. பாலியல் வன்முறை மூலம் பிறந்த ஒரு குழந்தையை அதன் தாயோடு, அந்த வன்முறையை நிகழ்த்தி அவளைக் குழந்தைக்குத் தந்தையாக்கியவனும் பராமரிக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. இது தவறான தீர்ப்பு என்றும், தனது கட்சிக்காரரை இரண்டாவது முறையாக சட்டம் தண்டித்துள்ளது என்றும் அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
குளக்கரை
பரிணாம வளர்ச்சியைப் பொருத்தவரை, மலர்களின் பரிணாம வளர்ச்சி எப்போது துவங்கியது என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 140 மில்லியனிலிருந்து 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்பட்டாலும், மலர்களின் படிமங்கள் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் காணப்படவே இல்லை. டார்வின் கூட மலர்களின் பரிணாம வளர்ச்சியைப் புதிராகவே கருதியிருக்கிறார். திடீரென்று பல்வேறு வடிவங்களில் காணப்பட்ட மலர்களின் வளர்ச்சியை ஒரு மர்மம் என்றே அவர் வர்ணிக்கிறார்.
குளக்கரை
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நாடகத்தில் அதிபர் தமது சட்ட மந்திரி போன்ற பதவிக்குத் தேர்ந்தெடுத்த ஒரு நபரை ‘முறைப்படி’ தேர்ந்தெடுக்கக் கூட்டப்பட்ட ஒரு அவையில், பார்வையாளர் ஒருவர் அங்கு இந்த நபரின் ‘நேர்மை, நம்பகத்தன்மை, நியாய உணர்வு’ போன்றன விதந்தோதப்பட்டதைக் கேட்டுத் தன்னை அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார். அப்படிச் சிரித்தது அவையின் ஒழுங்கைக் கெடுக்கச் செய்யப்பட்ட முயற்சி என்று சொல்லி அவரை அவை அதிகாரிகள் கைது செய்து அவர்மீது வழக்குத் தொடர்கிறார்கள். ஆக அமெரிக்காவில் என்னவொரு சட்ட அமைப்பு இருக்கிறது என்றால், அரசு நிகழ்ச்சியில் விசாரணை நடக்கும்போது சிரித்தால் சிறை தண்டனை கிட்டும் வாய்ப்பு அதிகம் என்பதுதான் அது.
பாலர் , இளம்பிராயத்தினரின் உறக்கமும் உறக்கமின்மையும்
6 மணிக்கும் குறைவான அளவு உறக்கமுள்ளவர்களிடையே 8 மணி நேர உறக்கத்தையுடையவர்களோடு ஒப்பிடும்போது அகால மரணத்தை தழுவும் ஆபத்து 13 சதவிகிதம் அதிகமாக உள்ளது..உறக்கம் குறைவாக உள்ளவர்களினால் 40,000த்திற்கும் மேலான சாலை விபத்துகள் நிகழ்கின்றன.இதனால் வருடந்தோறும் 1,500 பேர் உயிரிழக்கிறார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது போல் சரியான அளவு உறக்கம் கொள்வதை சிறுவயதிலேயே ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய ஒழுக்கக் கட்டுப்பாட்டில்சேர்ந்த ஒன்று. சரியான அளவு உறக்கம் கொள்வதை சிறு வயதிலேயே பழக்கிக் கொண்டு விட்டால் பெரியவர்களான பின் உறக்கப் பற்றா குறையையும் அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் தவிர்க்கலாம் என்றே நான் நம்புகிறேன். அதனால்தான் இக்கட்டுரை சிறுவயதினரிடையே உறக்கத்தின் அருமையை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
நாடோடிகளுக்குக் குடியுரிமையா? கானலில் நீரூற்றா?
ஒரு இனம் அல்லது மொழியைப் பொதுவாகக் கொண்ட மக்களின் நாட்டரசு உருவான பிறகு, ரோமாக்கள் ஓரம் கட்டப்பட்டார்கள், புதுச் சமூகங்களில் அவர்களுக்கு உறுப்பினர் என்ற உரிமை மறுக்கப்பட்டது, அவர்கள் இருப்பது பொறுத்துக் கொள்ளப்பட்டதே தவிர ஏற்கப்படவில்லை. தனிக் குழுவாக இருப்பதும், தங்கள் மொழிகளையும், பண்பாட்டையும் பாதுகாத்துக் கொள்வதும் அழியாமல் பிழைத்திருக்க அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகள்- உலக வரலாற்றில் அனேகக் குழுக்கள் இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்கின்றனர். ரோமாக்கள் மட்டுமா வேரில்லாத வெளியாட்கள் என்று நடத்தப்பட்டனர்? நாடு-அரசுகளின் காலத்தில் அவர்களின் வரலாறு ஓரளவு யூதச் சமூகங்களின் நிலையை ஒத்திருந்தது. இன்றோ, ரோமாக்களில் பலர் நாடோடிகளாக இல்லாமல், ஒரு நிலப்பரப்பில் தங்கி விட்டிருக்கின்றனர், அந்த நாட்டு அடையாளங்களை ஏற்றுத் தம்மை செக் மக்கள், ஃப்ரெஞ்சு மக்கள், இதாலியர் என்றோ அடையாளம் மேற்கொண்ட போதும், நாடு தடைகளின்றி நடத்தப்படுவதற்கு அவர்கள் ஆபத்து விளைவிக்கிறார்கள் என்ற கருத்தே மேலோங்கி உள்ளது.
அளறுதல்
செக்ஸை வைத்து இலக்கியம் படைத்தால் மட்டும் என்ன சாதித்து விடுவாராம்? எந்தப் பொருளிலும் மலிவுப் பொருள்தான் மனித புத்திக்கு உடனே சென்று சேர்கிறது. ஏனெனில் உழைப்பை, முயற்சியைக் கேட்கும் எதுவும் மனிதருக்கு அத்தனை உவப்பானவை அல்ல. கட்டுப்பாட்டோடு குடிக்கச் சொல்லும் உயர் அளவு ஆல்கஹால் உள்ள சாராயங்கள் – விஸ்கி இத்தியாதி- அனேகருக்கு ஏற்பில்லை, காரணம் விலை மட்டுமல்ல. மறக்கவும், மரத்துப் போகவும் குடிப்பவர்களே அதிகம். அது எத்தனை தூரம் தன்னைத் தானே மேன்மேலும் தோற்கடிப்பது என்பதை அவர்கள் அறியாமலா இருப்பார்கள்? அதே போல மேலை இலக்கியர்களுக்கு இந்த செக்ஸ் பற்றி எழுதுவது என்பது ஒரு உளைச்சல். முயன்று முயன்று எழுதி அதில் என்ன சாதிப்பார்களாம்?
திபெத் எப்படி நசுக்கப்படுகிறது?
திபெத்திய தேச அடையாளத்திற்கு மையமாக இருக்கும் மொழி மற்றும் பௌத்தம் ஆகியன, சீனாவின் பாதுகாப்பு, மேலும் அரசு முன்னின்று செலுத்தும் தேசியத்துக்கும், பரவலாக ஏற்கப்பட்டுள்ள ஹான் இன உயர்வு சார்ந்த தேசியத்துக்கும் சிறிதும் ஏற்க முடியாததாக உள்ளதால், மாநில மற்றும் நாட்டு அதிகாரிகள் நடுவேயும், சாதாரணச் சீனரிடையேயும் இவற்றுக்கு எதிரான காழ்ப்புணர்வு அதிகமாக உள்ளது… சீன ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் ‘கரைத்து விடுதல்’ என்ற அணுகல் முறைப்படி, 1950 இலிருந்து திபெத்தின் மீது சுமத்தப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சியும், அதிலும் 1989க்குப் பிறகு வந்த கால கட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற கடும் ஒடுக்கு முறைகளும் பண்டை நாளில் இருந்த நல்லுறவை நொறுக்கி விட்டன.