பெண்களது கீழ்படிவே ஆண்களுக்கு பெண்கள் மீதான ஈர்ப்பை உருவாக்குகிறது. பெண்கள் அழகாகவும், சாந்தமாகவும், பணிவாகவும், தமது சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பவர்களாக இருக்கும்போதே ஆண்களுக்கு பெண்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கிறது எனவும் கூறப்படுகிறது. ஆண் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அதனை சட்டமாக வரைகிறது. இந்த சட்டங்களினாலான சமூக அமைப்பை பெண்களும் சுவீகாரம் செய்கிறார்கள்.
Tag: சந்திரா நல்லையா
சினிமாவும் ஆண் பார்வையும்
முதலாவதாக ஊடகங்களின் ஆண்பார்வையில் பெண்கள் செயலற்ற,மந்தமான, உடமையான, பாலியல் பொருளாகவே பயன் படுத்தப்படுகிறார்கள். இரண்டாவதாக பெண்கள் எவ்வாறு தம்மைத்தாமே பார்க்கிறார்கள் என்பதாகும். மூன்றாவதாக பெண்கள் மற்றைய பெண்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதாகும். பெண்களில் ஒரு பகுதியினர் ஆண்பார்வையில் தங்களது செயலான்மையை விளங்கிக் கொண்டாலும், பெரும் பகுதியினர் ஆணாதிக்க ஆண்பார்வைக்கே பலியாகிப் போகிறார்கள். அப்பார்வையே இயல்பானது எனவும் நம்புகிறார்கள். அழகு, கவர்ச்சி என சில பெண்கள் தமது உடலமைப்பு குறித்து அதீத கவனம் செலுத்துவதைத் காணலாம். குறிப்பாக இளம் வயதினரின் தமது உணவை தவிர்த்து உடல் எடையை குறைப்பார்கள். முழு கவனமும் உடலின் எடை, அளவு (shape and size) என்பதாகவே இருக்கும். இறுதியில் உடல்நலத்திற்கு அவசியமான கலோரியினை இழப்பதினால் கனியுப்புகள், விற்றமின்கள் குறைபாடும் ஈமோகுளோபின் குறைபாடும் ஏற்பட்டு நோயாளியாகிறார்கள். இதனை eating disorder என்று அழைப்பர். இது ஆணாதிக்க கருத்தாக்கத்தின் பின்புலத்தில் உருவாக்கப்படும் ஆண்பார்வையை ஏற்றுக்கொண்ட பெண்களின் விழிப்புணர்வின்மை அல்லது அறியாமை என்பதுடன் மனநிலை பாதிப்பிற்கே இட்டுச் செல்கிறது எனலாம்.
மிசோஜினி (Misogyny) எனும் ‘பெண்வெறுப்பு’!
இன்றைய 19ம், 20 ம் நூற்றாண்டு சமூகவியலாளர்கள் மிசோஜினி குறித்து வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதையும் காணக்கூடியதாகவே உள்ளது. இவ்வாறு காலகட்டங்களை அவதானிக்கும்போது பெண் வெறுப்பு(Misogyny) என்ற செயற்பாடு எவ்வளவு ஆழமாக புரையோடிப்போய் இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்திய தமிழ் புராண, இலக்கியங்களில் கூட பெண்வெறுப்பு கருத்துக்கள் வெளிப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்ணிய ஆய்வாளர் செல்வி திருச்சந்திரன் தமது நூலில் நாலடியாரில் வரும் பாடல் ஒன்றை குறிப்பிடுகிறார்.
மேரி வோல்ஸ்ரன்கிராப்ட்: பெண்களின் உரிமைக்கான நியாயப்பாடுகள்
திருமணத்தில் மூலமாக நல்லதொரு கணவனைப் பெற்று அவனை மகிழ்விப்பதும், அவனுக்கான வாரிசை பெற்றுக்கொடுப்பதுமே பெண்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதற்கு உகந்த விதத்தில் அழகானவர்களாக, அடக்கமானவர்களாக, கீழ்ப்படிவானவர்களாக, கவரச்சியானவர்களாக உருவாகும் விதத்தில் பெண்களை சிறுவயதில் இருந்தே பயிற்றுவிக்கப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.18 ம் நூற்றாண்டின் சட்டத்தின் பார்வையில் திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை, வாக்குரிமை, சுதந்திரமாக செயற்படும் உரிமை என எல்லா வகையான உரிமைகளும் மறுக்கப்பட்டதுடன், அவர்கள் கணவரின் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டவராகவும் இருக்கும் நிலையே காணப்பட்டது.
