சமூக உணர்ச்சிக் கற்றல்

This entry is part 1 of 12 in the series சமூக உணர்ச்சி

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது ஆடை, கேளிக்கைகள், விளையாட்டு, உணவு இரசனை சார்ந்தது மட்டும் அல்ல. நாம் கற்கும் முறைகளில் கூட மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கற்கும் முறை, என்ன கற்கிறோம், எதைக் கற்கிறோம், எப்போது கற்கிறோம் என்பது தொடங்கி எல்லாவற்றிலுமே மாறுதல்கள். அதிலும் இப்போது பள்ளியில் படிக்கிற குழந்தைகளின் மனதில் அரசு இயந்திரங்களால் உருவான அச்சமும் நிலவுகிறது.

தன்னைத் தெரிந்து கொள்ளல்

This entry is part 2 of 12 in the series சமூக உணர்ச்சி

ஒரு பொருளை மற்றொரு குழந்தையிடமிருந்து மாணவர் பறித்தபோது, அந்தச் செயலால் மற்ற குழந்தை எப்படி வருத்தமடைந்தது என்பதை விளக்குதல். “அவர் எப்படி உணர்ந்திருப்பார்? ஏன் அவர் அழுதார்?” போன்ற கேள்விகள் மூலம் விளக்குதல்.

பொறுப்புணர்வோடு முடிவுகளை எடுத்தல்

This entry is part 3 of 12 in the series சமூக உணர்ச்சி

இங்கேதான் பெற்றோர்கள், ஆசிரியர்களின் தேவை இருக்கிறது. மாணவர்கள், இளம் வயதினர்களை உணர்ச்சியால் எடுக்கும் முடிவின் பின்விளைவுகள், மாறுபட்டு எடுக்கும் முடிவுகளின் பின்விளைவுகள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியிலிட்டுக் காட்டி சிந்திக்க கற்றுத் தர வேண்டும். நல்லது என்ன அல்லது என்ன அவர்களே புரிந்து கொள்வார்கள்.

இன்க்ளூசிவ் – உள்ளடக்கிய நிலை

This entry is part 4 of 12 in the series சமூக உணர்ச்சி

ஆனால், அறிமுகம் செய்து பல கலாசார வேறுபாடுகளை உணர்ந்துகொண்டால் மட்டும் போதாது. மாறுபட்ட கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை அந்தக் குடும்பத்தில், சமூகத்தில், வகுப்பில் சேர்ந்தவர்களாக உணர்வதும் முக்கியம். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘பிலாங்கிங்’ என்கிறார்கள். இதன் பொருள் “நான் இங்கே சொந்தமானவன், என் தேவை இங்கே அவசியம், என் கருத்துகளுக்கு மதிப்பு இருக்கிறது” என்ற உணர்வு.

சமூக உணர்ச்சி கற்றலை வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் வழிகள்

This entry is part 5 of 12 in the series சமூக உணர்ச்சி

ஒவ்வொரு மாணவனின் திறமையையும், உழைப்பையும், கலாச்சாரத்தையும் பாராட்ட வேண்டும். நம் வகுப்பில் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்த மாணவர்கள் இருக்கலாம். ஒருவர் கிராமத்து பின்னணி, இன்னொருவர் நகர பின்னணி என்று இருக்கலாம். ஒருவர் வீட்டில் தமிழ் பேசுவார், இன்னொருவர் தெலுங்கு அல்லது இந்தி பேசுவார். இந்த வேறுபாடுகளை பலவீனம் என்று நினைக்காமல், அது ஒவ்வொருவருடைய தனித்துவம் என்று பாவித்து, அவற்றைப் பாராட்ட வேண்டும்.

சமூக உணர்ச்சி கற்றலும் நேர்மறையான பள்ளி சூழலும்

This entry is part 6 of 12 in the series சமூக உணர்ச்சி

நேர்மறையான பள்ளி சூழல் சமூக உணர்ச்சி கற்றலுக்கான அடித்தளமாக செயல்படுகிறது. பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலில் மாணவர்கள் தங்கள் புதிய திறன்களை தயக்கமின்றி பயிற்சி செய்ய முடிகிறது. தவறுகள் செய்து அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பும், ஆதரவான உறவுகளின் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைக்கிறது.

வயதுக்கேற்ற கல்வி முறை

This entry is part 7 of 12 in the series சமூக உணர்ச்சி

இந்த வயதில் மாணவர்கள் சிக்கலான உணர்ச்சிகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள். மீராவின் கதையில் வெளிப்படுவது போல, அவர்கள் சவாலான சூழ்நிலைகளில் உதவக்கூடிய தனிப்பட்ட பலங்களையும் வளங்களையும் அடையாளம் காணுகிறார்கள். மன அழுத்தத்தை நிர்வகிக்கும் திறன்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு

This entry is part 8 of 12 in the series சமூக உணர்ச்சி

அதே போல குடுபங்களுக்கென ஒரு கொள்கைப் பிடிப்பு அறம் உண்டு. அது எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். சில குடுபங்களில் கடின உழைப்பு, நேர்மை, சில குடுபங்களில் எதிலும் விட்டுக்கொடுக்காத தன்மானம், வேறு சில குடுபங்களில் காலத்தோடு காரியமாற்றும் பண்பு என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். அந்த கொள்கைப் பிடிப்புகளை விட்டுவிடாமல் செயலாற்ற பழக வேண்டும். இல்லை எனில் குடும்பச் சூழல் இனிக்காது. 

பள்ளி-சமூகம்-பெற்றோர் கூட்டுறவு: நிலையான கல்வி மேம்பாட்டிற்கான அடிப்படை

This entry is part 9 of 12 in the series சமூக உணர்ச்சி

முதலாவதாக, குடும்பங்களுக்கும் பள்ளி பணியாளர்களுக்கும் இடையே ஒரு கூட்டுறவு உண்டு, அதன் நோக்கம், மாணவர் வெற்றிக்கான ஒரு வரையறையை  உருவாக்கி முன்னேறுவது. இரண்டாவதாக, குடும்பங்களும் பள்ளி பணியாளர்களும் சேர்ந்து மாணவர்கள் நலனுக்காக, கலாசாரம் மற்றும் பிற நம்பிக்கைகள் அடிப்படையில் பரஸ்பர நம்பிக்கை, புரிதல் மற்றும் பாராட்டுக்களை வளர்க்கும் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குகின்றனர்.

சமூகக் கற்றலில் சமூகத்தின் பொறுப்பு

This entry is part 10 of 12 in the series சமூக உணர்ச்சி

நண்பர்களின் ஆதரவு  என்பது ஒருவழிப் பாதை அல்ல. உதவி பெறுபவருக்கு மட்டுமல்ல, உதவி வழங்குபவருக்கும் மன நலன் மேம்பாடு கிடைக்கிறது. இது சமூகக் கற்றலின் அழகான அம்சமாகும் – கற்பிப்பவனும் கற்கிறான், உதவுபவனும் உதவி பெறுகிறான். ஒரே தடைகளை இரண்டு நண்பர்கள் சந்திக்கும் போது கலந்து பேசும்போது அந்தத் தடைகளை அவர்கள் இருவரும் சேர்ந்தே தகர்த்தெறியும் வழிமுறைகளை எளிதாகக் கண்டுகொள்கிறார்கள்.

தெரிவுகள் அதிகம், முடிவு ஒன்று

This entry is part 11 of 12 in the series சமூக உணர்ச்சி

சின்ன முடிவுகள் முதல் வாழ்க்கையையே புரட்டிப்போடும் முடிவுகள் வரை. இன்று என்ன காபி குடிப்பது என்பது முதல் காலை உணவு என்ன உண்பது வரை. நாம் சிறுவர்களாக இருந்தபோது இந்தக் குழப்பம் இருந்திருக்கவில்லை. அம்மா செய்வதுதான் காலை உணவு. இப்போது அப்படி இல்லை. பல இல்லங்களில் பலவகை சீரியல்களும் பிரெட் டோஸ்டா இல்லை பழரசமா என பிள்ளைகளைக் கேட்பதில் குழப்பம் ஆரம்பிக்கிறது. பழரசத்தில் ஆயிரம் வகை இருக்கும். இது ஒரு வகை பொருளாதார மேம்பாட்டைக் காட்டினாலும் முடிவெடுக்க குழந்தைகளைத் திணறடிக்கச் செய்கின்றன. நான் சொல்வது சற்றே பொருளாதாரத்தில் மேல்தட்டு குடும்பங்களை.

முடிவெடுத்தல், பொறுப்பேற்றல் மற்றும் சமூக கற்றல்

This entry is part 12 of 12 in the series சமூக உணர்ச்சி

அலுவலகங்களிலும் இதே விஷயம் நடக்கிறது. தலைவர்கள் எப்படி சிக்கலான முடிவுகளை எடுக்கிறார்கள், தவறுகளை எப்படி ஏற்கிறார்கள், பொறுப்பை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை ஊழியர்கள் கவனிக்கிறார்கள். ஒரு நிறுவனத்தில் தலைவர்கள் தங்கள் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டால், அதிலிருந்து கற்றுக்கொள்வது பற்றிப் பேசினால், அந்த நிறுவனத்தில் ஒரு கற்றல் கலாச்சாரம் உருவாகும். ஊழியர்களும் தங்கள் தவறுகளை மறைக்காமல், அவற்றிலிருந்து கற்க முயல்வார்கள்.