இந்தப் பங்குச் சந்தை நுழைவினால் இந்நிறுவனத்தில் வேலை பார்த்த / பார்க்கும் ஊழியர்களில் 4,400 பேர் மில்லியனர்களாகவும் 400 பேர் நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதிப்பார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மற்ற நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கும் இத்தகைய வளர்ச்சி இங்கு ராக்கெட் வடிவமைப்பாளர்கள், தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள், அங்குள்ள உணவகங்களில் பணிபுரிபவர், ராக்கெட் கடலில் விழும் பொழுது அதை எடுத்துக் கரை சேர்பவர் என்று மிகப் பரவலாக இந்த மதிப்புக்கூட்டு நடந்திருப்பது பெரிய ஆச்சரியம். இத்தனை பேர் ஒரே நிகழ்வின் மூலம் பெரும் செல்வந்தர்களாக மாறுவது அரிதான ஒன்று. அதை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்திக் காட்டி இருக்கிறது.
