நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம், காரணம் ஏன்’ என்ற ராமனின் கடலின் நீல நிறம் பற்றிய ஆரம்பகால ஆராய்ச்சி ‘ராமன் விளைவில்’ தொடங்கி இன்று ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி என்ற நவீன நுட்பமான தொழில்நுட்பமாக வளர்ந்துள்ளது. நாளை இது ஒரு கைபேசி போன்ற ஒரு கையடக்க ராமன் ஸ்பெக்ட்ரோமீட்டரைக் கொண்டு ஃபிரான்செஸ்கா மற்றும் பெட்டோவா ஓவியங்களின் காணப்படும் நீலநிறத்தின் உண்மைத்தன்மையை லாபிஸ் லசூலி, அசூரைட் மதிப்பீடு செய்யும் என்றால், ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
Category: ஓவியம்
காலம் எரித்ததும், கணினி மீட்டதும்
அரசியலுக்கு வருவதற்கு முன்னால் ஹிட்லரின் முதல் ஆர்வம் ஓவியம்தான். இரண்டு முறை முயன்றும் அவருக்கு வியென்னா ஓவியப் பள்ளியில் இடம் கிடைக்கவில்லை. பிறகு அவர் ஜெர்மனியின் வேந்தராகி, மில்லியன்களில் யூதர்களையும், இன்னபிற ‘உன்னதமற்ற’ மக்களையும் தீவிரமாக கொன்று குவித்துக் கொண்டிருந்த பொழுதும் இடையிடையே காட்சிகளுக்கு வந்து ஓவியங்களில் திளைப்பதைக் கைவிடவில்லை. அவருடைய ஓவிய ரசனை செவ்வியல் சார்ந்தது
நேர்கோணல் – மர்ஸல்துஷா (Marcel Duchamp)
உண்மையான கலைப் படைப்புகள் நேரடியாக சிந்தைக்கே பேசக்கூடியவை என்பதால் அக்கால ஓவியப் படைப்புக்களை “ரெட்டினல் ” (“Retinal “, கண் சார்ந்த) என நிராகரித்தார். ஒரு கலைப் படைப்பின் மகத்துவம் அது நேயர்களிடம் எற்படுத்தும் கேள்விகளிலும், சர்ச்சையிலும் உள்ளது. கேள்விகளே எழுப்பாத ஓவியங்கள் தொங்கும் சுவருடன் சுவராகி மறைந்து போகிறது.
கலைத்தீவிரவாதி – ஓவியர் ஃப்ரான்சிஸ் நியூட்டன் சூசா (Francis Newton Souza)
தெய்வீகமும், ஒழுக்கமும் சூசாவின் இயல்பில் இல்லை. கிறிஸ்துவப் பள்ளியின் ஒழுங்குமுறையும், கட்டுப்படும் அவருக்கு கசப்பான அனுபவமாக இருந்தது. ஆபாசப் படங்களைக் கழிவறையில் வரைந்ததிற்காகப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பதினாறாம் வயதில் கலைக்கல்லூரியில் சேர்ந்த சூசா, “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கெடுத்தற்காக மீண்டும் வெளியேற்றப்பட்டார். அதே தினம் தன் முதல் ஓவியத்தைக் காய்கறி நறுக்கும் பலகையின் மேல் நீல நிறத்தில் வரைகத்தியினால் தீட்டினர்.
கண்டுணரும் நொடிப்பொழுதின் காட்சி
இந்தப் பின்புலமெல்லாம் தெரியாமல் இதைப் பார்த்தாலும் இது மிகச் சிறந்த ஓவியம் என்று பெரும்பாலானவர்கள் ஒத்துக்கொள்வார்கள். பார்த்தவுடனேயே இந்த மனிதர் உயிருடன் இல்லை என்பது தெளிவு. மார்பின் காயம், இரத்தம், குருதி படிந்த கத்தி, தொய்ந்த முகம், தளர்ந்த கை போன்றவை மரணத்தைத் துல்லியமாக வரையறுக்கின்றன. கிட்டத்தட்ட சிலுவையில் அறையப்பட்ட ஏசுவைப் போல இந்த மனிதர் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
இருளையும் ஒளியையும் வென்றவன்
கரவாஜியோ இறந்து இப்பொழுது நானூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்றும் செவ்வியல் முறையின் முக்கிய மாமேதை என்றும் இருளையும் ஒளியையும் ஓவியத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்று நமக்குக் கற்றுக்கொடுத்த வித்தகர் என்றும் புகழப்படுகிறார். கரவாஜியோவின் ஓவியங்கள் பரோக் (Baroque) என்ற மாபெரும் வகைப்பாட்டை ஓவியங்களில் துவக்கிவைத்தது
வெந்து தணியாத காயம் – ஓவியர் ஃப்ரான்சிஸ் பேகன் (Francis Bacon)
பார்க்கும் பார்வை சிந்தைக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தின் (impression) அடிப்படையில் வரைய தொடங்கினர் சில ஓவியர்கள். வடிவமைப்பிற்கு, தத்ரூபத்திற்கு, உணர்ச்சிகளுக்கு இரண்டாம் இடத்தை கொடுத்து, நிறங்களுக்கும் , நிறங்களினால் ஏற்படும் உணர்ச்சிகளுக்கும், சாமானிய சூழல்களுக்கும், தூரிகை அசைவுகளும் முதலிடம் கொடுத்தனர் இந்த இயக்கத்தினர். இந்த இயக்கத்திற்கு இம்ப்ரெஷசனிசம் (impressionism) என பெயர் சூட்டினர் கலை விமர்சகர்கள்.
கானலின் நீரோ, காட்சிப்பிழையோ?
பார்வையாளனின் மூளை படைப்பை எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும், அதை எப்படி அவருக்குக் கடத்துவது எனத் தனக்கென விதிகளை உருவாக்கிக்கொள்வதனால் நவீன ஓவியர் ஒரு தேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி (Neuroscientist) போலச் சிந்திக்கிறார். எதை வரைவது, எதை விடுப்பது அல்லது சிதைப்பது என்று அவர் கருதும் பொழுது, அந்த விடுதலும் சிதைத்தலும் எப்படிப் பார்வையாளானின் மூளையால் இட்டு நிரப்பப்படும் அல்லது சரிகட்டப்படும் என்று அவர் தீர்மானித்தாக வேண்டும்.
பாவம், மரணம், நரகம்
இடப்பகுதி ஒருவித தெய்வீகத் தன்மை கொண்டதாகவும், கருமை நிறத்தில் வலப்புறம் ஒருவித நரகம் போலவும், நடுப்பட்ட பெரும்பகுதி சுவர்க்கம்-நரகம் போன்றவற்றின் கலவையாகவும் தோன்றுகின்றன. அவற்றைப் புரிந்துகொள்ள நாம் பகுதிகளைத் தனித்தனியே பார்த்தாக வேண்டும். முதலில் இடப்புறம், இது ஈடன் தோட்டத்தின் வடிவம். நம் கவனத்தை முதலில் ஈர்ப்பது கீழ்ப்பகுதி, இங்கே கர்த்தர் ஏவாளையும் ஆதமையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்,
எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 2
உன்னதமான வாழ்வை வாழ்வது எப்படி என்று சிந்திக்கத் தூண்டியவர். சந்தேகம் – அதனுடன் கூடவே வரும் சங்கடம் மற்றும் குழப்பம் – இவையே உன்னதத்தை நாம் கண்டடைய முக்கிய வினையூக்கிகள் என்று உணர்த்தினார். நம்மை வசதியாக உட்கார்ந்துகொண்டிருக்கும் குகைகளை விட்டு வந்து, பரந்த வெளியையும் கண்கூசும் சூரியனையும் காண, அதன்மூலம் உலகைப் புரிந்துகொள்ளச் சொன்னவர். அவர் வாழ்ந்த நாட்களில் இவை பெரும் குற்றங்களாகக் கருதப்பட்டன, அதற்கான மரண தண்டனையையும் அவர் ஏற்கவேண்டியிருந்தது.
எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 1
படத்திலிருக்கும் பெண்களைக் கவனித்தால் அவர்கள் முற்றிலும் வேறுபட்ட உணர்ச்சி நிலையில் இருக்கிறார்கள். ஒருவர்மீது ஒருவர் சாய்ந்திருக்கும் இரண்டு இளம் பெண்களில் ஒருவர் சகோதரி, மற்றவர் அவளுடைய கொழுந்தியாள். இவர்கள் கனவனையோ, காதலனையோ (அல்லது இருவரையுமோ) இழக்கப்போகிறார்கள். பின்னாலிருக்கும் முதியவள் தன் இரண்டு பேரப்பிள்ளைகளைத் தழுவி ஆறுதல் அளிக்கிறாள். அவர்களுக்கான உடை வெளிர் நிறங்களில் இருக்கின்றன, அவர்களது சோகத்தை மேலிட்டுக் காட்டுகின்றன
எங்கிருந்து வந்தோம்? நாம் யார்? நாம் எங்கு செல்கிறோம்?
2019-க் கனடாவின் தலைநகர் ஆட்டவா-வில் “இளம் தஹித்தியப் பெண்ணுடன் அவருடைய தொடர்பு” என்று தலைப்பிட்ட ஓவியம்”13-14 வயது தஹித்திய சிறுமியுடன் அவர் தொடர்பு” என்று வெளிப்படையாக மாற்றித் தலைப்பிடப்பட்டது. தொடர்ந்து அவருடைய ஓவிய மேதைமைக்கு அப்பால், ஒரு காலணியாதிக்க வெள்ளையராக அவருக்கு இருந்த அதிகார நிலையை அவர் தன்னுடைய சுயதேவைகளுக்காக எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார் என்பதையும் சேர்த்தே சொல்லவேண்டும் என்கிறார்கள்.
கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்
ஸிஸிபஸின் தண்டனையைப் பலரும் ஓவியமாக வடித்திருக்கிறார்கள். இவைகளுக்குள்ளே முன் பொதுயுகம் 530-ல் சுட்ட களிமண் பானையில் வரையப்பட்டதே நமக்குக் கிடைத்தவற்றில் மிகப் பழமையானது. பொதுயுகம் 1549-ல் இத்தாலியஓவிய மேதை டிஷியன் என்பவரால் திரைச்சீலையில் தைலவண்ணம் கொண்டு வரையப்பட்ட ஸிஸிபஸ் ஓவியங்களுக்குளே மிகச் சிறப்பானதாக அறியப்படுகிறது.
அண்ணே, சித்திரமும் நாப்பழக்கமாண்ணே?!
செந்தில் இப்படி ஒரு கேள்வியை கவுண்டமணியிடம் கேட்டால், “ஏண்டா மாங்கா தலையா, உருப்படியான பழமொழிய இப்படியாடா நாசம் பண்ணுவே?” என்று அவர் திரும்பக்கேட்கலாம். அதற்கு செந்தில், “நான் நாசம் பண்ணலைண்ணே. புதுசா வந்திருக்கிற கம்ப்யூட்டர்தான் இப்படி பழமொழியை பாதியாக்கிருச்சாம்”, என்று பதில் சொல்லலாம். கணினி என்றால் ஓரமாய் உட்கார்ந்துகொண்டு “அண்ணே, சித்திரமும் நாப்பழக்கமாண்ணே?!”
ப்ரமீதியஸ்கள்
சோவியத் ரஷியாவில் பல்வேறு பொது இடங்களில் பெரிய ஓவியங்களையும் சித்திரவடிவுகளையும் சோசலிஸப் பிரச்சாரத்திற்காக நிறுவினார்கள். ரஷியா சிதறுண்ட பின் அந்த கல்லோவியங்கள் இன்னும் எஞ்சி நிற்கின்றன. அவ்வாறு உக்ரெய்ன் நாட்டில் பொது இடங்களில் அமைந்திருக்கும் சிற்பங்களையும் பிரும்மாண்ட கலைப்படைப்புகளையும் தேடி யூஜென் நிகிஃபொரவ் கிளம்புகிறார். இன்னும் பல அரசு “ப்ரமீதியஸ்கள்”
மகரந்தம்
எட்வர்ட் மன்ச் வரைந்த அதிபுகழ் பெற்ற ஓவியமான அலறல் (ஸ்க்ரீம்). அதைக் குறித்து அவர் இவ்வாறு தனது கையேட்டில் எழுதுகிறார்: ‘என்னுடைய இரு நண்பர்களுடன் சாலையில் நடந்தேன். சூரிய அஸ்தமனம் ஆனது. ஆகாயம் ரத்தநிறமானது. மனச்சோர்வு என்னைத் தொட்டதை உணர்ந்தேன். என் நண்பர்கள் என்னைவிட்டு முன்னே நகர்கிறார்கள். என் மார்பில் திறந்த காயம் இருப்பதை போல் பயம் கவ்விக் கொண்டது. சோர்வாக கைப்பிடியில் தளர்ந்தேன். கருப்பும் நீலமும் கலந்த மலையிடைக் கடல் நுழைவழி தெரிந்த நகரத்தின் மேகங்களில் இருந்து ரத்தம் சொட்டி உதிர அலை அடித்தது. இயற்கையினூடே மாபெரும் அலறல் துளைத்து வந்தது.’ அந்த ஓவியத்தைப் பார்த்தால் யாரோ அலறுவதை சித்தரிப்பது போல் இருக்கும். ஆனால், அந்த ஓவியம் தான் மட்டுமே கேட்ட ஓலத்தை, மற்றவர்களுக்குக் கேட்கக் கிடையாத அலறலைக் குறிக்கிறது. அது போல் புத்தாக்கங்களைக் கொணர கொஞ்சம் சித்தம் கலங்கியிருக்க வேண்டுமோ என எண்ணும் கட்டுரை
இந்தியாவின் முகங்கள்
ஜோஷுவா க்ளக்ஸ்டைன் (Joshua Gluckstein) இந்தியா நெடுக பயணித்திருக்கிறார். சந்தித்தவர்களில் சிலரை ஓவியமாகத் தீட்டியிருக்கிறார். கோட்டோவியமாக இந்தியர்களின் முகங்களை அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடு தெரியுமாறு பதிந்திருக்கிறார்.
இந்திய கலை திருவிழா – 2016
டெல்லியில் நிறைய ஓவியக் கண்காட்சிகளும் கலைவிழாக்களும் நடக்கின்றன. வரைபட சந்தைக்கும் ஓவிய விழாவிற்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள் என்ன என்று சற்றே வியந்துவிட்டு, ஜனவரி 14 முதல் 17 வரை நடந்த கொண்டாட்டத்தில் பிடித்த படங்களை இங்கே பகிர்ந்திருக்கிறார்கள். கீழே ராக்கீ ராய் ஓவியம்.
மகரந்தம்
மேற்கும் கிழக்கும் எப்படியெல்லாம் பண்பாட்டில் வேறுபடுகின்றன என்று நாம் பலபேர் சொல்லி, எழுதி அறிந்து இருக்கிறோம். நம்மில் பலருக்கும் இது பற்றி ஒரு குத்து மதிப்பான கருத்தும் இருக்கும். ஒரு சீனக் டிஸைனர் இந்த வேறுபாடுகளைத் தான் உணர்ந்த விதத்தில் சிறு சித்திரங்களாகப் போட்டு வைத்திருந்தாராம். 13 வயதில் பெர்லினுக்குச் செல்ல நேர்ந்த யாங் லியு, சில வருடங்களுக்கு யூரோப்பிய பண்பாட்டோடு தான் கொண்ட உறவில் பற்பல அதிர்ச்சிகளைச் சந்தித்திருக்கிறார். அவற்றை அவ்வப்போது வரைந்த படங்களால் …
ஓவிய வியாபாரியின் கண்காட்சி
மோனே, ரெனாய்ர், டீகாஸ், மானே, பிஸாரோ போன்ற ஓவியர்களின் படைப்புகளை கண்காட்சியாக வைப்பார்கள். ஆனால், இவர்களை எல்லாம் விற்பவரின் கண்காட்சியை ஃபிலடெல்ஃபியாவில் வைக்கிறார்கள். எந்தக் கலைஞருக்குமே முதன் முதல் விற்பனை என்பது முக்கியமானது. அதை சாத்தியமாக்கியவர் பால் டியுரண்ட்-ரூல் (Paul Durand-Ruel). ஆயிரம் மோனெ ஓவியங்கள், 1,500 ரெனாயிர் “ஓவிய வியாபாரியின் கண்காட்சி”
கோபுலு – மறக்க முடியாத நினைவுகள்
பெருநகரத்தின் நடைபாதை வாழ்வு சார்ந்த செங்கல்பட்டு, வட ஆற்காடு உழைப்பாளி மக்களை மிக வேகத்துடனும், துல்லியத்துடனும் அவர் வரைந்திருப்பார். ஜார்ஜ் டவுன் ஜனப்பிரவாகத்தில் அவர் வரைந்த பல முகங்களை நான் பல முறை எதிர்கொண்டிருக்கிறேன். செம்புதாஸ் தெரு கார்ப்பரேஷன் பள்ளியில் என்னுடன் படித்த என் பால்யகால சகியும், நடைபாதை வாசியுமான பாஞ்சாலியின் முகச் சாயலை கோபுலுவின் ஏதோ ஒரு கோட்டோவியத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். பாஞ்சாலி மட்டுமன்று; நடைபாதைகள் சேரிகளின் பல குணச்சித்திரங்கள் அவர் தூரிகையில் உயிர் பெற்று எழுந்தார்கள். பிராமண முகங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். குறிப்பாக தஞ்சை மாவட்ட பிராமண முகங்களின் அத்தனை வகைகளையும் அவர் வரைந்து தீர்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.
அன்று விகடனில் அவர் வரைந்த தொடர்கதைகளுக்கு தலைப்பு எழுத்துகளை ஒட்டி சின்னதாக ஒரு முகப்போவியம் வரைந்திருப்பார் பாருங்கள்!
