கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்

This entry is part 4 of 4 in the series குடாகாயம்

ஸிஸிபஸின் தண்டனையைப் பலரும் ஓவியமாக வடித்திருக்கிறார்கள்.  இவைகளுக்குள்ளே முன் பொதுயுகம் 530-ல் சுட்ட களிமண் பானையில் வரையப்பட்டதே நமக்குக் கிடைத்தவற்றில் மிகப் பழமையானது.   பொதுயுகம் 1549-ல் இத்தாலியஓவிய மேதை டிஷியன் என்பவரால் திரைச்சீலையில் தைலவண்ணம் கொண்டு வரையப்பட்ட ஸிஸிபஸ் ஓவியங்களுக்குளே மிகச் சிறப்பானதாக அறியப்படுகிறது.

அண்ணே, சித்திரமும் நாப்பழக்கமாண்ணே?!

செந்தில் இப்படி ஒரு கேள்வியை கவுண்டமணியிடம் கேட்டால், “ஏண்டா மாங்கா தலையா, உருப்படியான பழமொழிய இப்படியாடா நாசம் பண்ணுவே?” என்று அவர் திரும்பக்கேட்கலாம். அதற்கு செந்தில், “நான் நாசம் பண்ணலைண்ணே. புதுசா வந்திருக்கிற கம்ப்யூட்டர்தான் இப்படி பழமொழியை பாதியாக்கிருச்சாம்”, என்று பதில் சொல்லலாம். கணினி என்றால் ஓரமாய் உட்கார்ந்துகொண்டு “அண்ணே, சித்திரமும் நாப்பழக்கமாண்ணே?!”

ப்ரமீதியஸ்கள்

சோவியத் ரஷியாவில் பல்வேறு பொது இடங்களில் பெரிய ஓவியங்களையும் சித்திரவடிவுகளையும் சோசலிஸப் பிரச்சாரத்திற்காக நிறுவினார்கள். ரஷியா சிதறுண்ட பின் அந்த கல்லோவியங்கள் இன்னும் எஞ்சி நிற்கின்றன. அவ்வாறு உக்ரெய்ன் நாட்டில் பொது இடங்களில் அமைந்திருக்கும் சிற்பங்களையும் பிரும்மாண்ட கலைப்படைப்புகளையும் தேடி யூஜென் நிகிஃபொரவ் கிளம்புகிறார். இன்னும் பல அரசு “ப்ரமீதியஸ்கள்”

மகரந்தம்

எட்வர்ட் மன்ச் வரைந்த அதிபுகழ் பெற்ற ஓவியமான அலறல் (ஸ்க்ரீம்). அதைக் குறித்து அவர் இவ்வாறு தனது கையேட்டில் எழுதுகிறார்: ‘என்னுடைய இரு நண்பர்களுடன் சாலையில் நடந்தேன். சூரிய அஸ்தமனம் ஆனது. ஆகாயம் ரத்தநிறமானது. மனச்சோர்வு என்னைத் தொட்டதை உணர்ந்தேன். என் நண்பர்கள் என்னைவிட்டு முன்னே நகர்கிறார்கள். என் மார்பில் திறந்த காயம் இருப்பதை போல் பயம் கவ்விக் கொண்டது. சோர்வாக கைப்பிடியில் தளர்ந்தேன். கருப்பும் நீலமும் கலந்த மலையிடைக் கடல் நுழைவழி தெரிந்த நகரத்தின் மேகங்களில் இருந்து ரத்தம் சொட்டி உதிர அலை அடித்தது. இயற்கையினூடே மாபெரும் அலறல் துளைத்து வந்தது.’ அந்த ஓவியத்தைப் பார்த்தால் யாரோ அலறுவதை சித்தரிப்பது போல் இருக்கும். ஆனால், அந்த ஓவியம் தான் மட்டுமே கேட்ட ஓலத்தை, மற்றவர்களுக்குக் கேட்கக் கிடையாத அலறலைக் குறிக்கிறது. அது போல் புத்தாக்கங்களைக் கொணர கொஞ்சம் சித்தம் கலங்கியிருக்க வேண்டுமோ என எண்ணும் கட்டுரை

இந்தியாவின் முகங்கள்

ஜோஷுவா க்ளக்ஸ்டைன் (Joshua Gluckstein) இந்தியா நெடுக பயணித்திருக்கிறார். சந்தித்தவர்களில் சிலரை ஓவியமாகத் தீட்டியிருக்கிறார். கோட்டோவியமாக இந்தியர்களின் முகங்களை அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடு தெரியுமாறு பதிந்திருக்கிறார்.

இந்திய கலை திருவிழா – 2016

டெல்லியில் நிறைய ஓவியக் கண்காட்சிகளும் கலைவிழாக்களும் நடக்கின்றன. வரைபட சந்தைக்கும் ஓவிய விழாவிற்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள் என்ன என்று சற்றே வியந்துவிட்டு, ஜனவரி 14 முதல் 17 வரை நடந்த கொண்டாட்டத்தில் பிடித்த படங்களை இங்கே பகிர்ந்திருக்கிறார்கள். கீழே ராக்கீ ராய் ஓவியம்.

மகரந்தம்

மேற்கும் கிழக்கும் எப்படியெல்லாம் பண்பாட்டில் வேறுபடுகின்றன என்று நாம் பலபேர் சொல்லி, எழுதி அறிந்து இருக்கிறோம். நம்மில் பலருக்கும் இது பற்றி ஒரு குத்து மதிப்பான கருத்தும் இருக்கும். ஒரு சீனக் டிஸைனர் இந்த வேறுபாடுகளைத் தான் உணர்ந்த விதத்தில் சிறு சித்திரங்களாகப் போட்டு வைத்திருந்தாராம். 13 வயதில் பெர்லினுக்குச் செல்ல நேர்ந்த யாங் லியு, சில வருடங்களுக்கு யூரோப்பிய பண்பாட்டோடு தான் கொண்ட உறவில் பற்பல அதிர்ச்சிகளைச் சந்தித்திருக்கிறார். அவற்றை அவ்வப்போது வரைந்த படங்களால் …

ஓவிய வியாபாரியின் கண்காட்சி

மோனே, ரெனாய்ர், டீகாஸ், மானே, பிஸாரோ போன்ற ஓவியர்களின் படைப்புகளை கண்காட்சியாக வைப்பார்கள். ஆனால், இவர்களை எல்லாம் விற்பவரின் கண்காட்சியை ஃபிலடெல்ஃபியாவில் வைக்கிறார்கள். எந்தக் கலைஞருக்குமே முதன் முதல் விற்பனை என்பது முக்கியமானது. அதை சாத்தியமாக்கியவர் பால் டியுரண்ட்-ரூல் (Paul Durand-Ruel). ஆயிரம் மோனெ ஓவியங்கள், 1,500 ரெனாயிர் “ஓவிய வியாபாரியின் கண்காட்சி”

கோபுலு – மறக்க முடியாத நினைவுகள்

பெருநகரத்தின் நடைபாதை வாழ்வு சார்ந்த செங்கல்பட்டு, வட ஆற்காடு உழைப்பாளி மக்களை மிக வேகத்துடனும், துல்லியத்துடனும் அவர் வரைந்திருப்பார். ஜார்ஜ் டவுன் ஜனப்பிரவாகத்தில் அவர் வரைந்த பல முகங்களை நான் பல முறை எதிர்கொண்டிருக்கிறேன். செம்புதாஸ் தெரு கார்ப்பரேஷன் பள்ளியில் என்னுடன் படித்த என் பால்யகால சகியும், நடைபாதை வாசியுமான பாஞ்சாலியின் முகச் சாயலை கோபுலுவின் ஏதோ ஒரு கோட்டோவியத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். பாஞ்சாலி மட்டுமன்று; நடைபாதைகள் சேரிகளின் பல குணச்சித்திரங்கள் அவர் தூரிகையில் உயிர் பெற்று எழுந்தார்கள். பிராமண முகங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். குறிப்பாக தஞ்சை மாவட்ட பிராமண முகங்களின் அத்தனை வகைகளையும் அவர் வரைந்து தீர்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.
அன்று விகடனில் அவர் வரைந்த தொடர்கதைகளுக்கு தலைப்பு எழுத்துகளை ஒட்டி சின்னதாக ஒரு முகப்போவியம் வரைந்திருப்பார் பாருங்கள்!