கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை

This entry is part 1 of 4 in the series குடாகாயம்

அவருடைய ஓவியங்கள் academicism என்று சொல்லப்படும் பயில்முறையைச் சார்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்தியக் கலையுலகில் பயில்முறைக் கலைகள் கோலோச்சிக் கொண்டிருந்ததன. இது ஓவியம், சிற்பம், இசை போன்று பலவற்றுக்கும் பொருந்தும். இவ்வழிக் கலைஞர்கள் பல வருடங்கள் – அதாவது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக – தங்கள் கலையைப் பயிற்சிக்கூடங்களில் ஆழ்ந்து கற்றார்கள்

இமானுவல் கன்ட்டின் அழகியல் தத்துவம்

This entry is part 2 of 4 in the series குடாகாயம்

ஊஞ்சலையும், கதைமாந்தர்களையும், ரோஜாச்செடியையும், கயிறுகளையும், கூபிட்-ஐயும், குரைக்கும் நாயையும், விலகும் வெளிர்சிவப்பு ஆடையையும், கிளர்வூட்டும் கால்களையும், ஏங்கித் தவிக்கும் இளைஞனின் கண்களையும் தனித்தனியே காண்கிறோம். இவற்றை ஒருசேரப் பொருத்தி நம் மனம் நமக்கு ஒரு கதை சொல்கிறது.

இமானுவல் கன்ட்டின்  உணர்வோங்குப் பெருநிலை

This entry is part 3 of 4 in the series குடாகாயம்

தமிழில் உன்னதத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட நான் இறையுணர்வு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.  பேரழகின் ஊடாக இணைந்திருக்கும் முடிவின்மையை அதன் முக்கிய வரையறையாகக் கொள்ளலாம். ஊடாக, அது எழுப்பும் அச்சம், இயலாமை, விந்தை எனப் பல்வேறு உணர்வுகளையும் ஒட்டுமொத்தமாகக் கொண்டது இறையுணர்வு.

கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்

This entry is part 4 of 4 in the series குடாகாயம்

ஸிஸிபஸின் தண்டனையைப் பலரும் ஓவியமாக வடித்திருக்கிறார்கள்.  இவைகளுக்குள்ளே முன் பொதுயுகம் 530-ல் சுட்ட களிமண் பானையில் வரையப்பட்டதே நமக்குக் கிடைத்தவற்றில் மிகப் பழமையானது.   பொதுயுகம் 1549-ல் இத்தாலியஓவிய மேதை டிஷியன் என்பவரால் திரைச்சீலையில் தைலவண்ணம் கொண்டு வரையப்பட்ட ஸிஸிபஸ் ஓவியங்களுக்குளே மிகச் சிறப்பானதாக அறியப்படுகிறது.