அன்று செயலழிந்தல மருபொழுது

இன்று இந்தியாவில் தான் உலக அளவில் இளைஞர்கள் அதிகம். மூன்றில் ஒருவர் இளைஞர் என்கிறார்கள்.  ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தைப்பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாக குறைவாக இருந்துவருகிறது. வளரும் அறிவியல் சூழலில், சராசரி வயது உலகெங்கும் ஏறிக்கொண்டே வருகிறது. நான் வாழும் சிங்கப்பூரில், சராசரியாக முதியவர்கள் தொண்ணூறு வயது “அன்று செயலழிந்தல மருபொழுது”

மனதை லேசாக்கிய மலேசியப்பயணம்

முதலில் முருகன் கோவில், அதற்குப்பக்கத்தில், விநாயகர், சிவன் அம்பாள் என்றிருக்கும் தனிக்கோவில், பெருமாளுக்கென தனி கோவில், நெஞ்சில் இராமனை சுமந்தபடியிருக்கும் ஆஞ்சநேயர் என்று இந்த கோவில் வளாகம் மெல்ல மெல்ல, பலகோவில்களில் கூட்டமாக மாறி  இருக்கிறது.வாசலில் பல மலர்மாலைகள் விற்கும் கடைகளையும், லட்டு, ஜிலேபி, முறுக்கு என விற்கும் பணியாரக்கடைகளையும், இளநீரை சீவித்தரும் கடைகளுமாக அடிவாரம் எப்போதும் போல பரபரப்பாக இருந்தது.

பொன்டெங்

“என் மகன் இப்போது தொடக்க நிலை நான்கில் படிக்கிறான். அவனுக்குத் துணைப்பாட வகுப்பு, பள்ளியில் உள்ள மாணவர் பராமரிப்பு நிலையத்துக்கு வெளியே சில நூறு மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அவன் சரியாக வகுப்புக்குப்போகிறானா என்பதைக்கண்காணிக்க இது நிச்சயம் உதவும்”
அதிர்ச்சியாக இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல், தட்டிலிருந்து உணவை மென்றேன்.

பிராணஜீவிதம்

நாம் எப்படி மனம் போன போக்கில் இருக்கிறோமோ, அப்படியே இயற்கையும் நடக்க ஆரம்பித்துவிட்டது. பருவநிலை மாற்றங்களை எல்லா நாட்டினரும் அனுபவிக்கின்றனர். மழை மாதங்களில் மழை பெய்வதில்லை, பெய்தாலும் பெருவெள்ளமாக மாறி கடலில் சென்று சேர்கிறது.ஆல், அரசு, பனை, புன்னை  போன்ற மரங்கள் நெடுங்காலம் வாழக்கூடியவை.மண் அறிப்பைத்தடுப்பவை. காற்றின் மாசைக்கட்டுக்குள் வைப்பவை. பருவ நிலை மாற்றத்தைக்கட்டுக்குள் வைக்க உதவுபவை

மூத்துத்தி மாமி

ரேழியின் வலதுபக்க அறை. அது தான் சமையல் அறையும், பூஜை அறையும். அதோடு ஒட்டிய மற்றொரு அறையில் படுக்கை, அலமாரி இத்யாதிகள். உத்திரத்திற்கு மேலே கொடுக்கப்பட்டிருந்த மர சட்டங்களுக்கு இடையே, வெளிச்சத்திற்காக வைக்கப்பட்டிருந்த கண்ணாடி சதுரத்தின் வழி, சூரிய ஒளி, பல துகள்களின் கலவையாய், நீண்ட வெளிர்மஞ்சள் நிறப்பின்னல் போல, தரைவரை நீண்டது. அந்த வெளிச்சத்தில், மின்னிய இருபுற மூக்குத்திகளோடு மதுரா மாமி, வெண்டைக்காயைத் தரையில் உட்கார்ந்து திருத்திக்கொண்டிருந்தாள். மண்ணெண்ணெய் அடுப்பில், உலை கொதித்தது. மத்தியான சாப்பாடு மாமாவிற்கு எப்போதும் ஆத்தில் தான்.

வாராதே இனி வார்தா

என்ன தான் வெளிநாட்டு வாழ்க்கை சுகமாக இருந்தாலும், பெற்றவர்களைத் தனியே தவிக்கவிட்டு போகும் இந்த வாழ்க்கை உயர்வில் முழு நிம்மதி என்றும் இல்லை.
வயதான முதியவர்கள், என்ன உடல் நிலை இருந்தாலும், காலம் கருதி எல்லாருடனும் முகமலர்ச்சியோடு பேசவேண்டியிருக்கிறது.

பிற மொழி இலக்கியம் மற்றும் ஈழ இலக்கியம்

தா.நா.குமாரசுவாமி வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அவர் மொழிபெயர்த்தபோது கூகிள் போன்ற இந்நாளைய வசதிகள் எதுவுமில்லை. எல்லா அத்தியாயத்திலும் பரிபாடல், திருக்குறள், தேவாரம், பெருங்கதை, திருக்கோவையார், சூளாமணி, கம்பராமாயணம், குறுந்தொகை, பெரியாதிருமொழி போன்றவற்றிலிருந்து ஓரிரு பொருத்தமான வரிகளைச் சேர்த்திருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பாளரின் வேலை, வெறும் மொழிமாற்றம் மட்டுமல்ல, பிறமொழி வாசகனுக்கும், ரசனை கெடாமல் அந்த படைப்பைக் கொண்டு சேர்ப்பது என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த புத்தகம்.

அது இருளால் செய்த ஒரு வழிச்சாலை!

“என்ன ஒரு மாதிரியா இருக்க!” காலையில் வேலை முடிந்து வந்த பிரேம் முகத்தின் உள்ளேயும் படித்தான்.

“வீட்ல இல்லங்க.”

ஒன்றும் சொல்லாமல் முகத்தைத்தூக்கி வைத்துக்கொண்டு போன பிரேமை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள் ரேணு.

இப்போதெல்லாம் அடிக்கடி அவன் பேசும்போது குழந்தையை பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது. அவளை விட அவனுக்குத்தான் எதிர்பார்ப்பு அதிகம்.

கோவிட்-19 கால மனநலமும் இனநலமும்

தீநுண்மித் தொற்று காலத்தைப் பொருத்தவரை, அதுவரை என்ன மன நலனில் மூத்தோர் இருந்தார்களோ, அதைக் காப்பாற்றிக்கொள்ளவே அரும்பாடுபட வேண்டியதாக இருக்கிறது.