சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வு என்பது பிராமணர்களால் மட்டுமே கடைபிடித்துத் திணிக்கப்படுகின்ற ஒன்றா என்றால் அக்கேள்விக்குப் பதில் இல்லை என்பதுதான். இன்றைக்குக் கேள்விப்படும் செய்திகளில் பெரும்பாலும் மற்ற உயர் வகுப்புகளைச் சார்ந்தவர்கள் தமக்குக் கீழ் இருப்பவர்கள் மேல் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளாகத்தான் இவை இருக்கின்றன. அதனால் இந்த ஏற்றத்தாழ்வுக்கான போராட்டத்தை இன்னும் பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் நிறுத்துவது எந்த விதத்தில் சரியாகும்?
