நாங்கல்லாம் மதுர காரங்ய…!

ஒவ்வொரு தெருவிலும் எப்படி இத்தனை காபி வடை கடைகள்? காலை துவங்கி நள்ளிரவு வரை எப்படி விடாமல் எல்லா கடையிலும் ஒரு கூட்டம் எதையேனும் சாப்பிட்டபடியே இருக்கிறது? இன்று நேற்றா? பத்து இருபது ஆண்டுகளாகவா?  போன நூற்றாண்டிலிருந்தா? என்றிலிருந்து தோன்றியது இத்தகையதொரு பழக்கம்? நம்புவதற்கு கடினமெனினும், சங்க காலம் தொட்டு “மதுரைக்காரர்கள்” இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்! மதுரை மக்களிடம் பிரத்யேக உணவு மரபணுக்கள் ஏதேனும் இருக்குமோ? சொல்ல முடியாது… இன்னும் சில ஆண்டுகளில் ஏதேனும் ஒரு மரபணு ஆராய்ச்சியில், “மதுரை மரபணு” என்றொன்று கண்டறியப்படலாம்.

ஒரே ஒரு முத்தம்

உங்கள் அப்பாவை நீங்கள் முத்தமிட்டது உண்டா? இதென்ன அசட்டுத்தனமான ஒரு கேள்வி என்று தோன்றலாம். குழந்தைப் பிராயத்தில் உண்டு என்பது நாம் தரக்கூடிய சிறுபிள்ளைத்தனமான பதிலாக இருக்கலாம். எனவே கேள்வியை இன்னும் சற்று தெளிவாக்கலாம்…உங்கள் பால்யத்திற்குப் பின் எப்போதேனும் அப்பாவை முத்தமிட்டுருக்கிறீர்களா? நான் ஏன் இக்கேள்வியை கேட்கிறேன் என்பதை விளக்குவதற்கு முன், உங்கள் தந்தை இப்போது உங்களுடன் இருந்தால் உடனே சென்று முத்தமிட்டு வாருங்கள்.

இது வேற லெவல்…!

சமீபகாலங்களில் எனக்கொரு சந்தேகம். உங்களுக்கும் இருக்கலாம். தமிழில் வார்த்தைகளுக்கு அத்தனை பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா என்பதே அது. சந்தேகம் சும்மா வரவில்லை. பல நாட்களாக, பல பேரிடம் பேசும் பொழுது சட்சட்டென்று இந்த எண்ணம் வந்து போகும். எதனால் என்று கேளுங்கள்… ஒரு நண்பரிடம் அவர் சென்று வந்த பயணம் “இது வேற லெவல்…!”

தமிழகம்-தமிழ்நாடு சர்ச்சை பற்றி

உணர்வு என்பதே ஒரு அற்புதமான சொல். நேர்மறையான, உன்னதமான, நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் அகத்தை ஊடுருவும் பொழுது ஏற்படுவதே உணர்வு. தொன்மையில் இருந்தது போலன்றி தற்காலத்தில் சொற்கள் அவரவர் விருப்பதிற்கேற்றவாறு பயன்படுத்தப்பட்டு பொருளின் அடர்த்தி நீர்த்துப் போய்விட்டது. பள்ளி செல்லும் வயதில், 80களின் முற்பகுதியில், மதுரை மேம்பாலங்கள் அனைத்திலும் “இன உணர்வு கொள்” என்று கரியினால் எழுதப்பட்ட வாசகத்தை பார்த்தபடி கடந்ததுண்டு.

தீண்டா நதி

மனிதர்களில் தான் எத்தனை வகை! அதிலும் ஒரு சமோசாவை மனித மனம் எப்படியெல்லாம் வித்தியாசமாக சாப்பிட நினைக்கிறது! என் அருகில் இருந்தவர் சமோசாவின் தோல்பகுதிகளை தனியே எடுத்துவிட்டு மசாலாவை மட்டும் சாப்பிடும் ரகத்தைச் சேர்ந்தவர். அதன் பொருட்டு தோலுக்கும் மசாலாவுக்குமான பிரிவினைவாத முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, வழிப்போக்கர் ஒருவர் “ஜெயிந்திபுரம் எப்படி போறது” என்று அவரிடம் கேட்டபடி வந்தார். கிரைம் பிராஞ்ச் பக்கம் கைகாட்டி, “இப்படியே நேரா போங்க ஒரு சாக்கடை வரும் அதை ஒட்டின தண்டவாளத்தை தாண்டி லெப்ட்ல போனா வந்துரும்” என்றார். அவர் எதை சாக்கடை என்று சொன்னார் என்று அறிந்த நான் கொதித்தெழ வேண்டும்தான்.

பக்கிம் + பாரதி = பரவசம்

“பக்கிம் சந்திர பாபுவின் சொற்களைத் தமிழ்ப்படுத்த எனக்குப் போதிய வன்மை இல்லாவிடினும், தமிழ் நாட்டாருக்கு அச்செய்யுளின் பொருளுணர்த்த வேண்டுமென்ற ஆசைப் பெருக்காலேயே யான் இதனைத் துணிந்திருக்கிறேன்” என்கிறார். இது மட்டுமா? “தெய்வப் புலவர்” என்றால் நாம் அனைவரும் திருவள்ளுவர் என்போம். ஆனால் பாரதி தனது கட்டுரையில் “தெய்வப் புலவராகிய பக்கிம் பாபு” என்று அழைக்கிறார்.

பைய மலரும் பூ…

அது ஒரு வெள்ளி இரவு… அலைபேசியில் தொலையாமல், சமூக ஊடகங்களின் சந்தடியில் சிதறாமல்‌, வானில் நகரும் வெள்ளியை ரசித்திட நேரம் கிட்டிய எண்பதுகளில் எழுந்த‌ ஒரு வெள்ளிக்கிழமை இரவு… அருகிருந்த வீடுகளில் ஓடும் ஒலியும் ஒளியும் கூட நம் வீட்டிற்குள் கேட்கும்படி ஊர் அமைதி கொண்டிருந்த காலத்தில் எழுந்த “பைய மலரும் பூ…”

ரசவாதம்…

மலையில பெய்யுற மழை ஓடி வரப்போ அதோட மண்ணு, மரஞ்செடி இதுல இருக்குற சத்தெல்லாம் அள்ளிட்டு வந்துரும். அது பாறைகளோட இடுக்கு, குழி இதுல தேங்கி நிக்கும். இப்படி தேங்கி நிக்குற தண்ணியோட சக்தி சொல்லி மாளாது. உங்களுக்குப் புரியற மாதிரி சொன்னா, இதுவரை சயின்ஸ் கண்டுபிடிக்காத பவர்புல் கெமிக்கல் அது. நினைச்ச நேரத்துல அதை எடுத்துற முடியாது. ஒவ்வொரு மலைக்கும், அதுல உள்ள‌ ஒவ்வொரு பாறைக்கும், ஒவ்வொரு பாறையில உள்ள ஒவ்வொரு குழிக்கும் தனித்தனி இயல்பு இருக்கு. அதப்பொறுத்தும் கால நேரத்தைப் பொறுத்தும் எடுத்தாத்தான் வேலை செய்யும்.

காந்தள் மெல்விரல்

அம்புகள் தாக்கியதால் உண்டாகும் புள்ளிகள் உடைய, போரில் பங்கேற்ற யானையின் முகத்தைப் போன்ற கல்லின் மீது பல காந்தள் மலர்கள் ஒருசேர மலரும் வனப்புடைய நாட்டின் தலைவன் என்கிறார். துடைத்தெறிய முடியாத இரண்டு காட்சிப் படிமங்களை நம்முள் இறக்கி வைக்கிறது இப்பாடல். ஓன்று, இது வர்ணிக்கும் பாறையும் அதன் மீது கொத்தாய் சாய்ந்து நோக்கும் காந்தள் கூட்டமுமாய் அன்றி வேறு யாதொரு காட்சி வடிவத்திலும் பெரும்பாலும் காந்தள் நம் கண்ணில் படுவது இல்லை.

மதுமலர்த்தார் வாங்கி நீ வா..

“பயில்” என்றால் கற்பது என்பது நாம் அறிந்ததே. தூதுப் பாட்டின் பொருளை கற்றுத் தரும் வண்ணம் ஏற்றப்பட்ட கலிவெண்பாவினாலே…என்ற நேர் பொருள் நாம் கொண்டாலும், இன்னொரு அர்த்தமும் நம்மால் உண்டாக்க இயலும். “பயில்” என்பதற்கு “சைகை செய்வது” என்ற பொருளும் உண்டு. தூதின் உட்பொருளை சைகை செய்யும் வண்ணம் ஏற்றப்பட்ட கலிவெண்பாவினாலே…என்று சொன்னால் இன்னும் நயம் கூடுகிறது அன்றோ?

கலி வெண்பா என்பதை ஏன் களி வெண்பா என்று பெயரிடாமல் விட்டார்கள் என்றெண்ணும் அளவு உற்சாகம் ஊட்டும் வாசிப்பு எழில் கொண்டது இன்னிசை கலிவெண்பாவும் நேரிசை கலிவெண்பாவும்.