பரத்தை கூற்றாக வரும் ஒரு பாடலில் பரத்தை தலைவியை கேலி செய்கிறாள். தலைவனை தன்னிடம் இருத்திக்கொள்ள முடியாத தலைவியின் உறக்கத்தை, கவனமின்மையை நீர்நாயின் உறக்கத்திற்கு ஒப்பாக கூறுகிறாள். புதுவருவாயை உடைய வளமான மருத நிலத்தின் பொய்கை நிறைந்திருக்கிறது. அங்கு வாளை மீன்கள் தீட்டிய வாள் போல மின்னி விளையாடி நீருக்குள் மறைகிறது. அவற்றை கவனிக்காமல் அதன் கரையில் பசியோடு நீர்நாய் உறங்குகிறது
Tag: ஔவையார்
நீர்த்துறை படியும் பெருங்களிறு
இந்தப்பாடல்களில் வரும் பெருங்களிறு என்ற படிமத்தையும், தீர்த்தங்காரர்களின் கருணை மற் றும் அகிம்சையை என்மனம் இணைத்துக் கொண்டது . தன் குழுவிற்கான பாதுகாப்பு, வீரம் என்றிருந்து பின் வன்முறையாகி, எடுத்த வாளை வைக்கவிடாது மதம் கொண்ட களிறாக மாறிய இனக்குழுக்கள் தங்களை தாங்களே அழித்துக்கொண்டிருந்த காலத்தில் தீர்த்தங்காரர்கள் தங்கள் கருணையால் அந்த களிரை மெல்ல மெல்ல படிய வைத்திருக்கிறார்கள்.
பிறப்பு எனும் அதிசயம்
மொத்தத்தில் பிறப்பு என்பது ஒரு அதிசயம்தான்; வாழ்க்கையும், இறப்பும் கூட அதிசயங்களே. பிறப்பு என்பது ஒருவர் வேண்டும்போது, வேண்டும் நிலையில், வேண்டும் பிறவியை அடையுமாறு நிகழ்வதல்ல. ஒவ்வொன்றும் முன்னரே நிச்சயிக்கப்பட்டபடி (pre-determined / ordained) நிகழ்வதாகும். ஆனால் இதனை நாமறிய இயலாது. ஆகவேதான் பிறப்பும் இறப்பும் நம் வசத்திலில்லை.
