இமானுவல் கன்ட்டின்  உணர்வோங்குப் பெருநிலை

This entry is part 3 of 4 in the series குடாகாயம்

தமிழில் உன்னதத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட நான் இறையுணர்வு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.  பேரழகின் ஊடாக இணைந்திருக்கும் முடிவின்மையை அதன் முக்கிய வரையறையாகக் கொள்ளலாம். ஊடாக, அது எழுப்பும் அச்சம், இயலாமை, விந்தை எனப் பல்வேறு உணர்வுகளையும் ஒட்டுமொத்தமாகக் கொண்டது இறையுணர்வு.

கலாஸ்ஸோவின் டியெபோலோ பிங்க்: ஒளியின் நாடகம்

This entry is part 3 of 3 in the series ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ

“கலையெனத் தோற்றமளிக்காத மெய்யான கலை என்றதைக் கூறலாம். அதன் மறைமைக்கு மேல் எதையுமே ஒருவன் கற்றறியத் தேவையில்லை.” “மறைமை” நமக்கு பரிச்சயமான ஒரு கலாஸ்ஸோ வார்த்தை… டியெபோலோவின் படைப்புகளில் ஒரு வகைமையான ஸ்கெர்ச்சி-ஐ (The Scherzi, ஸ்கெர்ஸோவின் பன்மை, ஜோக் அல்லது சேட்டை என்ற அர்த்தம் கொண்டது) அறிமுகம் செய்து வைக்கும் ஒரு விசிடிங் கார்டை போலக் கையாளப்படுகிறது. ஸ்கெர்ச்சியும் கப்ரிச்சியும் (மனம் போன போக்கில் என்று பொருட்படும் …

அமெரிக்காவின் கட்டடங்கள்

அந்தப் பக்கம் கனடாவின் எட்மண்டன் நகரத்தில் துவங்கி இந்தப் பக்கம் அமெரிக்காவின் மில்வாக்கி நகரம் வரை ஊர் ஊராகச் சென்று ஒளிப்படம் எடுப்பது பாரி க்ஃபெல்லர் (Barry Gfeller) என்பவரின் பொழுதுபோக்கு. அவர் மறைவிற்குப் பிறகு அவரின் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நகர நிழற்படங்கள் கிடைத்திருக்கின்றன. சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

குறிப்பிற் குறிப்புணர்வார்

தமிழ் நிலத்தின் வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக களப்பிரர், பல்லவர், நாயக்கர், மொகலாயர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக் காரர் ; இன்றைக்கு இந்திய யூனியன் என்று தமிழ் மண் அடிமைப்பட்டுக் கிடக்கிறபோது இதில் தமிழ் அழகியல், தமிழ்க்கலைகள் எங்கே தேடுவது? எப்படி அடையாளப்படுத்துவது? நண்பர் சா.பாலுசாமி, நாயக்கர் கால கலைகளில் இந்தியநாட்டின் பிறபாணிகளும், ஐரோப்பிய தாக்கமும் இருக்கின்றனவென்று தெரிவித்துள்ள உண்மையை நாம் அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடமுடியாது. தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி : “சிற்றிலக்கியங்களை எழுதிய புலவர்களின் பெயர்களைக்கூடத் தெரியும் ஆனால் சிதம்பரத்து நடராஜரையோ, தஞ்சை பிரகதீஸ்வரத்து நந்தியையோ ….. வடித்தவர்களின் பெயர் தெரியாது. இதற்குக் காரணம் கலையாக்கம் பற்றிய தமிழ்நாட்டுச் (இந்திய) ஒழுங்கமைவு” என முன்வைக்கும் குற்றச்சாட்டில் உள்ள உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை. இதை பாலுசாமியில் ஆய்வுமுடிவுகளும் உறுதி செய்துள்ளன.

தேரிகாதா- மூத்த பெளத்தப் பெண் துறவிகளின் கவிதைகள்

துறவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி வித்தியாசம் இருக்க முடியும்? ஏன் மெய்மை தேடும் பயணத்தில் ஓர் ஆண் பெண்ணை இடைஞ்சலாகக் கருத வேண்டும்?. ஏன் பட்டினத்தார் போன்ற துறவிக்கே ’கண் காட்டும் வேசியர் தம் கண் வலையில் சிக்கி மிக அங்காடி நாய் போல் நெஞ்சம் அலைய’ வேண்டும்? ஏன் ஏக நாதனின் இறையடி இறைஞ்ச போக மாதரைப் போற்றுதல் ஒழிய வேண்டும்? காமம் கடைசி வரை தெரு நாயாய்த் துரத்தும் போலும். ஏன் பின் காமத்தை வெல்லும் தன் இயலாமையாய்ப் பாடாமல் பெண் மேல் ஏற்றி பழித்துப் பாட வேண்டும்? மனம் கடந்து மெய்மை தேடும் பயணத்தில் ஆணென்ன? பெண்ணென்ன? பட்டினத்தார் பெருந் துறவி. ‘பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆரும் துறக்கை அரிது’ என்பார் தாயுமானவர். பெண்ணைப் பெண்ணென்பதற்காகப் பழிப்பது பட்டினத்தார் நோக்கமாக இருக்க முடியுமா?

திதர்கஞ்ச் சாமரம் சுமக்கும் பெண் சிலை

“அந்த நாளையப் பெண்சிற்பம் அமைக்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்தச்சிலையின் அமைப்பும் உள்ளது. ‘யட்சி’ அல்லது ‘யட்சினி’ என்று குறிப்பிடப்படும் இச்சிலையின் எழில் காண்போர் கிளர்ச்சியுறும் விதமாக உள்ளது. பெருத்த மார்பகங்களும், குறுகிச் சிறுத்த இடையும், அகன்ற இடைப் பகுதியும் தொடைகளும் கொண்ட சிலையின் கழுத்தில் சாமுத்திரிகா இலக்கணம் என்று பெண் உடல் அமைப்பை அந்நாட்களில் கூறிய விததிற்கேற்ப நீள வாட்டமாக மூன்று கோடுகளும், (griva trivali) வயிற்றில் மூன்று சதை மடிப்புகளும் (Katyavali) அமைந்துள்ளன. சிலை நிமிர்ந்து நிற்காமல் சிறிது முன்புறம் சாய்ந்த விதமாக இருப்பது பணிவைக்காட்டுவதாக உள்ளது. உதட்டுச் சுழிப்பில் மெல்லிய புன்னகையின் சாயல் உற்று நோக்கினால் மட்டுமே புலப்படுகிறது. சிலையின் வலதுகால் சற்றே முன்னால் மடங்கியுள்ளது. சாமரத்தை உறுதியாகப் பற்றியிருக்கும் கைவிரல்கள் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன…

செ குவாரா + ரோலிங் ஸ்டோன்ஸ்

கியூபப் புரட்சியாளர்கள் ‘செ’ என்று செல்லமாக அழைத்த செ குவாரா என்னும் அரசியல்வாதியையும், த ரோலிங் ஸ்டோன்ஸ் (The Rolling Stones) ஆங்கில ராக் இசைக்குழுவின் சின்னமான உதடுகளையும் ஒருங்கிணைத்த பதாகையைத் தாங்கி கச்சேரிக் கொண்டாட்டத்தில் திளைத்த கியூபா நாட்டின் தலைநகரமான ஹவானா நகரவாசிகளை இங்கே காணலாம்: