பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு

This entry is part 1 of 5 in the series பரோபகாரம்

சுமார் 32 வருடங்களுக்கு முன், 1988 வாக்கில் மும்பையில் இருந்து சென்னை (அன்றைய வழக்கில் பம்பாயிலிருந்து மெட்ராஸ்) வருவதற்கான ரயிலைப் பிடிக்க விக்டோரியா டெர்மினஸ் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தேன். நல்ல உடை, ஷூ அணிந்து தலை வாரி, ஷேவ் செய்து கொண்டு பார்க்க டீசண்ட்டாக இருந்த ஓர் இளைஞர் “பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு”

பரோபகாரம் – நம்பகத்தன்மை

This entry is part 2 of 5 in the series பரோபகாரம்

உலகின் பல நாடுகளில் ஒரு நாளைக்கு $2க்கும் குறைவான பணத்தில் வாழும் ஏழை மக்கள், மாத அல்லது வார சம்பளம் பெறுபவர்கள் இல்லை. அவர்கள் வருமானம் நாளுக்கு நாள் நிறைய வேறுபடுகிறது. நுண்கடன் அமைப்புகளால் அவர்கள் வருவாயை சீராக்க முடிந்தால் அதுவே அவர்களுக்கு பெரிய உபகாரமாக இருக்கும். அவர்களுக்கு நூறு ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, கட்டணங்களுடன் நூற்றி நாற்பது ரூபாயை திருப்பி கொடுத்தே ஆக வேண்டும் என்று அவர்கள் கழுத்தில் கை வைப்பதை விட, அத்தகைய சீரான வருவாய் நிலையை அடைய சேமிக்க உதவுதல், காப்புறுதி வழங்குதல் போன்ற உதவிகள் பன்மடங்கு பலனைத் தரும் என்கிறார் ரூட்மேன்.

பரோபகாரம் – தன்னார்வுலா

This entry is part 3 of 5 in the series பரோபகாரம்

பிறருக்கு உதவுவது என்றால், பணத்தை நன்கொடையாகக் கொடுப்பது மட்டும்தான் என்பதில்லை. சிரமதானம் என்று சொல்லப்படும் உழைப்பை நன்கொடையாகக் கொடுக்கும் வழக்கு, நாலு பேருக்கு இலவசமாகச் சாப்பாடு போடுவது, கிட்னி / ரத்தம் / கண் தானம், அறிவுரை / புத்திமதி போன்றவை வழியாகப் பிறருக்கு வாழ்வில் முன்னேறச் சரியான “பரோபகாரம் – தன்னார்வுலா”

பரோபகாரம் – மஹா உதவல்கள்

This entry is part 4 of 5 in the series பரோபகாரம்

அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 5.75 லட்சம். நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஸோஸ் அவர்கள் அத்தனை பேருக்கும் தன் சொந்தப் பணத்திலிருந்து இந்த வருடம் தலா ஒரு லட்சம் டாலர் (சுமார் எழுபது லட்சம் ரூபாய்) பொங்கல் போனஸ் கொடுத்தாலும்கூட, அவரது சொத்து 2020 ஆரம்பத்தில் இருந்ததைவிட இன்று அதிகமாக இருக்கும்! காரணம் கொரொனா தாண்டவத்தால் உலகமே தடுமாறிக்கொண்டிருந்த போன வருடம் மட்டும் அவரது சொத்து மதிப்பு அவ்வளவு உயர்ந்திருக்கிறது!

பரோபகாரம் – நாட்டுக்கு நாடு

This entry is part 5 of 5 in the series பரோபகாரம்

தனி குடிமக்கள், நிறுவனங்கள், மஹா கோடீஸ்வரர்கள் போன்றவர்களை எல்லாம் தாண்டி, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு உதவுவது உருப்படியான செயல்முறையா? அந்த உதவிகளால் நாடுகள் பெரிதாக முன்னேறுகின்றனவா அல்லது அந்த உதவும் கரங்களையே நம்பி உருப்படாமல் போகின்றனவா என்றொரு பூதாகாரமான கேள்வி பரோபகார திட்டங்களை அலசும் வட்டங்களில் உலாவிக்கொண்டே இருக்கும்.