இளம் வயதில் அழகும் அறிவும் நிறைந்த ஒருத்தியின் மேல் பையன்களுக்கு மோகம் வருவது இயற்கை. காலப்போக்கில் அழகின் தாக்கம் குறைந்து அறிவின் உயர்ச்சி மட்டுமே தங்கும். அப்போது ஆசைக்கு பதில் பிரமிப்பு. நிகிலுக்கும் விரைவில் அந்த மாற்றம் நிகழும். திரும்பிப் பார்க்கும்போது, ‘சே! என்ன அசட்டுத்தனம்!’ என்று நினைக்கத் தோன்றும். வெட்கப்பட ஒன்றும் இல்லை. உடல் மற்றும் மன வளர்ச்சியில் ஒரு பாலம்.
Author: அமர்நாத்
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி…
தாத்தா தான் அவனுக்கு அப்பா. அவன் டிஎன்ஏயில் பாதி பங்கைக் கொடுத்து, நிகில் என்ற பெயரையும் வைத்தவர் அவனுடைய முதல் பிறந்தநாளுக்கு முன்பே சாலை விபத்துகளில் இறந்தவர்கள் கணக்கில் சேர்ந்துவிட்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து அவன் அம்மா மீளவில்லை. அவள் மன ஆறுதலுக்கு பரதநாட்டியப் பள்ளி. வீட்டின் தரைத்தளத்தில் இருந்து வரும் சலங்கையோசைக்கு நிகில் பழகிவிட்டான். தேர்வுகளுக்குத் தயார்செய்யும்போது கூட அது இடையூறாக இருந்தது இல்லை.
வேதாந்த் வேதாந்தம்
என் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து இங்கே குடியேறியவர்கள். இல்லத்தில் பூஜைக்கு ஒரு தனி அறை, கோவிலுக்கு வாரம் தவறாமல் போவது, முக்கியமான ஐந்தாறு பண்டிகைகள் கொண்டாடுவது என ஹிந்து மரபை ஓரளவு பின்பற்றுகிறவர்கள். எனக்கு ஹிந்து என்றால் என் பெற்றோர்களின் நண்பர்கள் மற்றும் என்னைப்போல சத்யா, (புன்னகையுடன்) வித்யா என்று ஹிந்துப்பெயர்கள்
ஒருத்தி மகளாய்ப் பிறந்து…
கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனையோ சிசுக்களைப் பிறந்த சில நாட்களுக்குள் பெற்ற தாய்களிடம் இருந்து பிரிக்கும் பாவத்தையும், அந்தப் பச்சிளம் குழந்தைகளை அன்புடன் ஆதரவுடன் வளமுடன் வளர்க்கும் குடும்பங்களில் சேர்த்த புண்ணியத்தையும் ஒருசேர செய்து வருகிறேன். இதுவரை நான் வழிசெய்த எந்த இடமாற்றமும் துயரத்தில் முடிந்தது இல்லை. இதற்கு முக்கிய காரணம், மனிதர்களின் தராதரத்தைக் கணிக்கும் எனது சாமர்த்தியம்
ஓவியம் என்பது யாதெனில்…
வெண்ணிற தாடி, தொப்பிகள் மறைக்காத நரை மயிர், சுருக்கங்களும் பள்ளங்களும் நிறைந்த சுமுகமான முகங்கள். அவற்றில் என்ன தத்ரூபமான வெளிப்பாடுகள்! காலமெல்லாம் தோழமை கொண்டாடிய இருவர். பரஸ்பர அன்பு, நம்பிக்கை, ஒருவரின் ரகசியங்களையும் குறைபாடுகளையும் மற்றவர் அறிந்த அன்னியோன்யம். உரையாடலில் ஒரு இடைவெளி. அந்தக் கணம் சித்திரத்தில் உறைந்திருக்கிறது. ஒருவர் ஏதோ சொல்ல நினைக்கிறார். அதற்கு சரியான வார்த்தைகளைத் தேடுகிறார்.
உபநதிகள் – பதினேழு
கடைசியாக, முந்தைய தினம் அவளுடைய ட்யுக் ப்ராஜெக்ட் அறிக்கைக்கு எதிரான ராஜ் வாரனின் அபிப்ராயம். ‘இலக்கண ஆங்கிலத்தைத் தவிர வேறொரு திறமையும் இல்லாத, ‘டாம்ப்ராம்’ மானஸா’ என்ற தாக்குதலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆக்ஸ்ஃபோர்டில் இதழியல் உயர்பட்டம் வாங்கிய ஒருவனுக்கு பல தகவல்ளைச் சேர்த்து கோர்வையாக எழுதப்பட்ட நீண்ட கட்டுரையை, அதன் பொருள் பிடிக்காவிட்டாலும், ரசிக்கத் தெரியாதா?
உபநதிகள் – பதினாறு
சரியா இருபத்தி இரண்டு வருஷத்துக்கு முன்னாடி. நான் ரயில்வேல சாதாரண சார்ஜ்மன். கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்திருந்தாங்க. ரிடைர் ஆன அப்பா கடன் வாங்கி இந்த வீட்டைக் கட்டியிருந்தார். அதனால வாடகை இல்ல, ஆனா குடும்பம்னா மத்த எத்தனையோ செலவுகள். மாசம் முடியும்போது கையில காசு மிஞ்சினது இல்ல. முதல் குறுக்குத்தெருவில இருக்கற அத்தனை வீடுகளும் மிடில் ஈஸ்ட் பணத்தில கட்டினது.
உபநதிகள் – 15
பெர்னியின் திருமண விருப்பத்தை குடும்பத்தில் மற்றவர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதது மானஸாவுக்கு ஆச்சரியமாக இல்லை. அவள் அப்பாவும் அம்மாவும் மறுத்து எதுவும் சொல்லாவிட்டாலும் அவர்கள் வார்த்தைகளின் தொனியில், ‘இது ஒரு தாற்காலிகக் கவர்ச்சி, ஆறு மாதம் நீடித்தால் பார்த்துக்கொள்ளலாம்.’ அவர்களின் சந்தேகம் எதிர்பார்க்கக் கூடியது தான். பதின் பருவத்திலேயே இன்னும் ஒரு ஆண்டு இருக்கும்போது மானஸாவும் பெர்னியும் கல்யாணத்துக்குப் பதில் தொழில் பாதையை யோசிக்க வேண்டும்.
உபநதிகள் – 14
சில நாட்களாக அடுத்த வீட்டுக்குக் குழந்தைகள் நடந்தோ ஊர்தியிலோ வரவில்லை. சிறுபொழுதுக்குப் பிறகு அவர்களை அழைத்துப்போகவும் இல்லை. அந்த வீட்டில் நடமாட்டமும் இல்லை. அதன் பாதிப்பு அவனுடைய மாற்றத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒரே நிசப்தம்! அவன் கூச்சலைக் கேட்பதற்கு யாரும் இல்லையே என்பதால் அதைச் செய்யப் பிடிக்கவில்லையா? அவனுக்குக் கத்த வேண்டும் என்கிற ஆசையே போய்விட்டதா? சேச்சே அப்படி இருக்காது.
உபநதிகள் – பதின்மூன்று
என் எலைஸா பாட்டி ஆதிகால வரலாற்றில் கரைகண்டவள். டைபர் நதியில் மிதந்து வந்த இரண்டு அபலைக் குழந்தைகளை ஒரு பெண் ஓநாய் காப்பாற்றி வளர்த்த கதையையும், அதைத் தொடர்ந்த சம்பிரதாய வழக்கங்களையும் அவள் எழுதிய ஒரு கட்டுரையில் படித்தேன். நிஜத்திலும் ஓநாய்கள் ஒன்றுக்கொன்று உதவிசெய்து குட்டிகளுக்கும் முதிர்ந்த பிராணிகளுக்கும் ஆதரவு தருவதையும், ஆணும் பெண்ணும் வாழ்நாள் முழுக்கத் துணையாக இருப்பதையும் அவள் விவரித்து இருக்கிறாள். ஓநாய்களை நம் காதல் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக ஏற்க வேண்டும் என்ற அவள் அறிவுரையைப் பின்பற்றப் போகிறேன்
என் இரண்டு உலகங்களில் ஒன்று
இது நடந்தபோது நானும் என் மனைவியும் ட்யுக் மருத்துவ மையத்தில் பணிசெய்தோம். அதே சமயம் தபாலில் வந்த ஒரு சங்கிலிக் கடிதம். இரண்டையும் இணைத்து ஒரு சிறு கதை எழுதியபோது ஒரு பக்கத்துக்கு மேல் தாண்டவில்லை. பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த கவனத்துடன் பல வாரங்கள் முயற்சித்ததில் ‘இந்தக் கடிதம் கிடைத்த…’ நான் தைரியமாகத் திருப்பி வாசிக்கும் அளவுக்குத் தேறியது. வணிகப் பத்திரிகைகள் ஏற்காததால் ‘திண்ணை’ இணைய இதழ்
உபநதிகள் – பன்னிரெண்டு
“நம் குடியிருப்பையே எடுத்துக்கொள்வோம். குப்பைகளை வாரி தெருவை சுத்தம் செய்ய ஒரு ‘மாம்-அன்(ட்)-பாப்’ குழுவே போதும், பெரிய கார்பொரேஷன் அவசியம் இல்லை. கலாவதிக்காக நீ கற்பனை செய்த மென்டல்சன் ஃபார்ம்ஸ் போல பத்து ஏக்கர் சிறு பண்ணைகள் பலரகப் பயிர்களைப் பயிரிட்டு பெரிய தொழிற்சாலை பண்ணைகளைவிட அதிகம் விளைவிக்க முடியும். நோய் தடுப்பு, வெட்டுக்காயங்களுக்குக் கட்டுகள் போன்ற, பல அவசியமான சேவைகளைச் சிறிய அளவில் செய்தால் மருத்துவ செலவைக் குறைக்கலாம்.”
உபநதிகள் – 11
“ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படித்து ரசித்திருக்கிறேன். அவருடைய ஒப்பற்ற கதாபாத்திரங்களுக்கு அக்காலத்து மேடை நடிகர்கள் எப்படி உயிர்கொடுத்தார்கள் என்று நமக்குத் தெரியாது. ஒளிப்பதிவு வரும்வரை அந்தக் கலைஞர்களின் சாதனைகள் நீரில் வரைந்த கோலங்கள். நான் எழுதிய வார்த்தைகளும் விவரித்த காட்சிகளும் வெறும் எலும்புக்கூடு. அவற்றை உயிருடன் பார்க்கும்போது நடிப்பு என்பது எப்படிப்பட்ட அருமையான கலை என்பதை உணர்கிறேன். நான் மந்தாகினியை சில மாதங்களுக்கு முன் சந்தித்து சிறிது நேரமே அவளுடன் பழகினாலும் அவள் என் தங்கை.
உபநதிகள் – அத்தியாயம்: பத்து
சற்றுத்தள்ளி கோடிட்ட இடத்தில் கலாவதி காரை நிறுத்துகிறாள். இறங்கி மேற்கு வானத்தின் கருமையைப் பார்த்து அவள் முகத்தில் கவலைக் கோடுகள். மனதைத் தேற்றிக்கொண்டு காரில் இருந்து பைகளை எடுத்து நடக்கிறாள். புல்வெளியில் ஏற்கனவே சில கூடாரங்கள் எழுந்து நிற்கின்றன. இன்னும் சில தரையில் உட்கார்ந்து ஓய்வு எடுக்கின்றன. விவசாயிகள் சந்தையில் என்ன வாங்கலாம் என்பதைத் தீர்மானிக்க கலாவதி ஒரு சுற்று நடக்கிறாள்.
உபநதிகள் – ஒன்பது
அமெரிக்க புறநகர் தனித்துவம் இல்லாத இடம். அதில் வேர் விடாத போராட்டங்கள், கொள்கை இல்லாத மனிதர்கள், ஆழமில்லாத உணர்ச்சிகள். அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த நான் அதன் எல்லைகளைத் தாண்டி கற்பனை செய்ய மிகவும் சிரமப்பட்டேன். நீயும் உன் எண்ணங்களின் கட்டை அவிழ்த்து அவற்றை மேலே பறக்கவிட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத எத்தனையோ பெண் வயதுக்கு வரும் கதைகளில் இதுவும் ஒன்றாக ஆகிவிடும். கலாவதி வளர்ந்தது நமக்குத் தெரிந்த ப்ரென்ட்வுட் இல்லை. இலங்கைத் தமிழர்கள் ஒருவித பாசப்பிணைப்புடன் அமைத்துக்கொண்ட சமுதாயம். அதை நீ கதையில் கொண்டுவர வேண்டும்.
உபநதிகள் – 8
தற்போதைய சமுதாய அமைப்பின் உருவாக்கலில் அவள் தாய் கங்காவைப்போல கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பு அடங்கியிருக்கிறது. ஒருசிலர் அளவுக்குமேல் பணம் சேர்க்கிறார்களா? அந்த அளவு என்ன? அதை நிர்ணயிப்பது யார்? இயந்திர சமுதாயத்தினால் தான் எங்கோ உட்கார்ந்து யூ.எஸ்.ஸைக் குறைசொல்லும் அவள் கட்டுரைகள் பலருடைய பார்வைக்கு எட்டுகின்றன. அந்த அமைப்பை ஒரே நாளில் இடித்துவிட முடியுமா? அப்படி நிஜமாகவே நடந்தால் அது தன்னைப் பாதிக்காது என்கிற தைரியத்தில் எழுதியிருக்கிறாள். யூ.எஸ்.ஸில் பொருளாதார வளர்ச்சி வேகம் இழந்தால் அதன் பாதிப்பு இந்தியாவிலும் இருக்கும். பி.பி.ஏ. பட்டம் வாங்கியவளுக்கு இதுகூடவா தெரியவில்லை?
உபநதிகள் – ஏழு
நீ படித்திருப்பாய், என் அப்பாவால் குனிந்து நிமிர்ந்து நீண்டநேரம் நின்று தொழிற்சாலையில் வேலைசெய்ய முடியாது. தினம் எதிரில் தாத்தா வீட்டிற்கு மெதுவாக நடந்து சிரமப்பட்டு மாடிக்கு ஏறுவார். அங்கே கணினியின் முன் அவர் நேரம் போகும். ஆலோசனை என்ற பெயரில் ஓரளவு வருமானம். வெளிவேலை எல்லாவற்றையும் என் அம்மாவே செய்வாள். அதை அடிக்கடி கவனித்த ஒரு ஆள் என் பெற்றோருக்கு இடையில் நெருக்கமான உறவு இல்லை என்று கணக்குப் போட்டுவிட்டான். அவனுடைய பையனுக்கு ட்யுஷன் பற்றிப்பேச என் அம்மாவை ஒரு விடுதிக்கு வரச்சொல்லி அங்கே சந்தித்தான்.”
தேவை ஒரு தந்தை
படிக்கட்டின் முடிவில் சமதளம். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார்கள். ஒரு வட்ட மேஜையைச் சுற்றி மூன்று நாற்காலிகள். ஒன்றில் ஒரு முதியவர். குளியலறையின் ஒரு பகுதி பாதி திறந்திருந்த கதவு வழியாகத் தெரிந்தது. சுவரில் மாட்டிய கறுப்பு வெள்ளைப் படங்களைத் தவிர சாமான்கள் அதிகம் இல்லை. கீழே பார்த்த படங்களைப்போல இவற்றிலும் ஒரு க்ரிக்கெட் ஆட்டக்காரர். குழுவினர் பின்தொடர அரங்கில் நுழைகிறார். கையை உயர்த்தி பந்தை வீச இருக்கிறார். களத்தின் நடுவே ஓடுகிறார். வெற்றிக்கோப்பையை இரு கரங்களில் அணைக்கிறார்.
உபநதிகள் – 6
சிறுகதை முதல் வரியிலேயே சூடுபிடிக்கணும், முக்கால்வாசி இருக்கும்போதே முடிஞ்சிடணும். நீ எழுதினது முழுவதையும் சேர்த்து வச்சுக்கோ! எதிர்காலத்தில உதவும். ஆனா, போட்டிக்கு அனுப்பற கதை சனிக்கிழமை காலையில தொடங்கி நோம் சோம்ஸ்க்கியை ஆதவி மட்டம் தட்டறதோட முடிந்துவிடும். அதாவது கதையின் கால நீளம் இருபத்தியாறு மணி
உபநதிகள் – 5
நீங்க சொல்ற முதல் கட்சியில நான். என் தம்பி இரண்டாவதுல. எதிர்ல அப்பா அம்மா இருக்காங்களே அந்த வீட்டிலதான் நாங்க வளர்ந்தோம். எங்கேயாவது போகணும்னு அப்பா சொன்னா அவன் டக்னு கிளம்பிடுவான். நான் தாத்தா பாட்டிக்குத் துணையா இருக்கேன்னு வீட்டிலயே தங்கிடுவேன். எனக்கு எல்லா வேளையும் வீட்டு சாப்பாடு போதும், அதே அவனுக்கு வாரம் ரெண்டு தடவை ஓட்டல்ல விதவிதமா சாப்பிட்டாகணும். ஆதவி என்னை மாதிரி இருக்கா…” என்று சொல்லும்போதே காரின் ஆட்டத்தில் வினதாவின் கண்கள் மூடிக்கொண்டன.
உபநதிகள் – 4
ந்தக் குறிப்பிட்ட அதிருஷ்டசாலிகளில் மானஸாவும் ஒருத்தி. அத்தினத்தில் வழக்கத்துக்கு முன்பே எழுந்து தூக்கம் வராமல் தவிக்கவில்லை. கோவிலுக்கோ யோகா பயிற்சிக்கோ போகவில்லை. படிப்பின் தீவிரம் குறைந்து பள்ளிக்கூட பருவம் முடிவுக்கு வரப்போகும் காலம் என்பதால் மூளையை வருத்தாத பள்ளிக்கூட நாள். அது முடிந்ததும் நிதானமாகக் காரில் அலெக்கை அழைத்துவந்தாள். ஃப்ளாரிடா சென்றிருந்த அண்டை வீட்டினரின் நாய் அவர்கள் வீட்டில். அதனுடன் சில நிமிடக் கொஞ்சல். உயர்மட்டக் கல்லூரியில் நுழையாவிட்டால் வாழ்க்கை என்னாகுமோ என்ற தவிப்பில் நிறையத் தின்று வயிற்றைக் கெடுத்துக்கொள்ளவில்லை. ஒரேயொரு குக்கி, அரை கோப்பை கொழுப்பு குறைத்த பால்.
உபநதிகள் – மூன்று
என் தங்கை என்னைவிட இரண்டரை வயது சிறியவள். மற்றவர்கள் தாத்தாவின் கவனத்தைப் பிடித்துவைத்ததைப் பார்த்து, தன் பங்குக்கு அவரிடம் என்ன காட்டலாம் என்று யோசித்தாள். மாடியில் தன்னறைக்குப் போய் அவளுடைய கைப்பையை எடுத்துவந்தாள். அதில் ஒரு சிறிய பர்ஸ். அதைத்திறந்து அவள் சேர்த்துவைத்திருந்த டாலர் நோட்டுகளைப் பெருமையுடன் காண்பித்தாள்.
உபநதிகள்-2
பதின்பருவத்தின் பின்பாதியில் இருந்த அவர்களுக்கு நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இருந்து சால்ட்லேக் சிடிக்குத் தனியாகப்பயணம், பலருக்கு முதன்முறையாக. மதியத்திற்குமுன் விமான நிலையத்தில் ஐந்தாறு பேர்களாகச் சேர்ந்து வளாகத்தின் மாணவர் விடுதிக்கு வந்தார்கள். சிறுவயதில் இருந்தே தனி அறையின் சுதந்திரத்திற்குப் பழக்கப்பட்ட மானஸா இன்னொருத்தியுடன் ஒரு அறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். கல்லூரி வாழ்க்கைக்கு ஒத்திகை. மானஸா தன் பெட்டியைத் திறந்து சாமான்களை அவற்றுக்கான இடங்களில் வைத்தபிறகு அவள் அறைத்தோழி நிதானமாக வந்தாள், சிறிய தோள்-பையுடன்.
உபநதிகள் – 1
ஸ்ரீலங்கா திரும்பிப்போவதைத் தவிர்க்கும் சோதனையில் பகீரதனுக்குக் கடைசிக்கட்டம். குடியேற்ற அதிகாரியுடன் நேர்காணல். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே அரசாங்கக் கட்டடத்தில் காத்திருந்தார்கள். தனித்துத் தெரியாத சம்பிரதாய ஆடைகள். அவன் நீலநிற கோட் ட்டை பான்ட்ஸில். அவள் முழங்காலுக்கும் தாழ்ந்த கறுப்புப் பாவாடை, வெள்ளை சட்டை, கழுத்தைச்சுற்றி சாம்பல்நிறத் துண்டு. கணவன் மனைவி இருவரும் அவரைத் தனித்தனியே சந்திக்க வேண்டும். அலுவலக அறையில் இருந்து ஒரு பழுப்பு ஆணும் அதிகாரியும் வெளியே வந்தார்கள். அவனை எதிர்கொண்ட பெண்ணும் அவனும் ஏமாற்ற மௌனத்துடன் வெளிவாசல் நோக்கி நடக்க…
அத்திம்பேர்
குமரநாதன் வயதில் ஒரு பையன். அதற்கு ஓவியர் வரைந்த படத்தை வெகுநேரம் ரசித்தான். தலை தீபாவளிக்கு அத்திம்பேர் வரப்போகிறார். அவன் அக்காவை அவர் பறித்துக்கொண்டதாக அவர் மேல் அவனுக்குக் கோபம். அவரை ரயில் நிலையத்தில் இருந்து அழைத்துவர அப்பாவுடன் போகவில்லை. வீட்டிற்கு வந்ததும், ‘அவருடன் பேசமாட்டேன். அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட மாட்டேன். அவருக்குப் பிடித்த சேமியா பாயசம் எனக்கு பாய்சன்’ என்று எதிர்ப்பு காட்டுகிறான். அவர் அவன் மனநிலையைப் புரிந்துகொண்டு அவனை அன்புடன் நடத்துகிறார். அவனுடன் பரிவாகப் பேசுகிறார். கடைசியில் அவன் சமாதானமாகப் போகிறான்.
ஒந்தே ஒந்து
சுவாமிநாதன் குமரநாதனின் நெருங்கிய நண்பன். அவன் பெற்றோர்கள் பல மாநிலங்களில் வசித்ததால் அவர்களுக்குப் பல மொழிகள் பழக்கம். அச்சமயம் அவன் தந்தை பெங்களூர் விமானப்படை அதிகாரிகளின் பயிற்சியில் இருந்தார். கன்னடம் தமிழ் மாதிரிதான். பல வார்த்தைகள் கிட்டத்தட்ட ஒண்ணா இருக்கும்.ஒன்று இரண்டு மூன்று… எப்படி சொல்லணும்?
வானம் பொழிகிறது பூமி விளைகிறது
போவதற்கு முன் தயிர் சாதம். திரும்பிவந்ததும் ஒரு தம்ளர் மோர். மறுநாள் வீட்டில் தங்கியவர்களுக்குக் கதை சொல்ல வேண்டும். கடைசி காரியம் தான் சிரமம். நடுநடுவில் நிறுத்தி சங்கரி விவரம் கேட்பாள். ‘குளிகை சாப்பிட்டதுமே ராணி கிளியா மாறிட்டாளா? அது எப்படி?’ பதில் தெரியாமல் அவன் முழிப்பான். இந்த தடவை. கவனம் சிதறாமல் திரையில் வைத்த கண் எடுக்காமல்…
பணம் பணம்… (2)
முதலில் ஒரு சௌகரியமான இல்லம் தேட வேண்டும். தற்போதைய இடம் தாற்காலிகம் என்பதுடன் அவன் தேவைக்கு சிறியது. அவன் தொழிலுக்கு எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம். ஆனால் ‘ஹார்மொனி’யிலோ ‘ஃப்ளவர்-ஆர்ரோ’விலோ சந்திக்கும் பெண்களை அவனால் விலையுயர்ந்த விடுதிக்கும் திரைப்படத்துக்கும் அழைத்துப்போக முடியும். அவர்களில் ஒருத்திக்கு அவன்மேல் ஆர்வமும் நம்பிக்கையும் பிறக்கும். அதனால் ஊரின் எல்லைக்கு உள்ளேயே.
பணம் பணம்…
இனிமேலும் தொடர்ந்து இதைச் செய்ய வேண்டுமா? செய்வதில் என்ன தவறு? உடல் வாழ்க்கை நடத்துவதற்கு அவசியமான வருமானம் சம்பாதிக்க வேலை. அது முடிந்ததும் மீதி நேரத்தில் மன வாழ்க்கையை வளர்க்க தியானம். அத்துடன், பல வருஷப் பழக்கத்தை ஒரே நாளில் விடமுடியாது. மூளையின் இரு பாதிகளுக்கும் ஒத்துப்போகவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக…
ஏகபோகம்
மறுநாள் அப்பாவின் வருகைக்கு ஆவலுடன் காத்திருந்தான். ஐந்து மணியில் இருந்தே வாசற்படிக்கட்டு அவனை ஒட்டிக்கொண்டது.
சைக்கிளின் பின்னால் செய்தித்தாளில் சுற்றிய பெட்டி.
“ஆகா!”
“சௌந்தரம்! ஜாக்கிரதையாப் பிரி!”
உள்ளே. செக்கர்ஸ்-பாக்கேமன். மடிக்கும் அட்டையின் இரு பக்கங்களில் இரண்டு ஆட்டங்கள். தேவையான காய்கள், பகடைகள்.
குமரநாதனுக்கு அழுகை வரும்போல இருந்தது.
“இதை ஆடினா மூளைக்கு நல்லதுன்னு சொல்லிக்கொடுத்தான். செஸ் மாதிரி அவ்வளவு கஷ்டமா இருக்காதாம்.”
1957-2
பள்ளிக்கூடம் திறந்த முதல்நாள். முதல் படிவத்தின் (இன்றைய கணக்கில் ஆறாம் வகுப்பு) முதல் பாடம், ஆங்கிலம். வகுப்பில் பெரும்பாலோர் சுற்றுவட்டாரத்து கிராமங்களில் இருந்து வந்த மாணவர்கள். அதுவரை காதில் விழுந்த ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தைகளை மட்டுமே அறிந்த அவர்களுக்கு அம்மொழியின் முதல் அறிமுகம். அதனால் ஆசிரியர் கேட்கிறார்.
1957 – 1 செம்பருத்தி
ஆனால் நகராட்சி பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் சம்பளம் அவள் ஆசையைத் தடுத்திருக்கும். அவள் செய்வது ஜெபநேசனுக்குத் தெரியாமலும் இருக்கலாம். கணவன் மனைவி அந்தரங்கத்தில் தலையிடுவது தவறு. அதே சமயம் இந்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு மனித சட்டம். உலகில் கிறித்துவக் குழந்தைகளைப் பெருக்குவது அதற்கும் மேலான கடவுளின் ஆணை. அதை நிறைவேற்றுவது கடவுளின் பணியாளரான ஆசீர்வாதத்தின் கடமை.
ஊபருக்குக் காத்திருக்கிறார்கள்
பதின்பருவத்தில் பொதுவாக பெற்றோர்களின் பழக்கங்களும் அறிவுரைகளும் குழந்தைகளுக்கு எரிச்சலைத் தரும். என் விஷயத்தில் என் அப்பாவின் தினப்படி முனகல். ‘சம்பளம் பத்தவில்லை, பணக்காரர்கள் செல்வத்தைச் சுருட்டிக்கொண்டு விடுகிறார்கள். அரசியல்வாதிகள் நிர்வாகத்தினர் பக்கம்.’ இப்படி. ஒருநாள், பொறுக்கமுடியாமல் வீட்டுச் செலவுகளின் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அத்தியாவசிய செலவுகள் போக மீதிப் பணத்தை செலவழிக்குமுன் அதன் அளவுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதா? என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் பயணம் போவோம். டிஸ்னி உலகம் இல்லை லாஸ் வேகாஸ். பத்தாயிரம் டாலர் பறந்து போய்விடும். முழுநேரமும் ஓயாத மனத்தாங்கல், சிறு தடங்கலுக்கும் வருத்தம், திரும்பி வந்ததும் ஏமாற்றம். அதை ஒதுக்கினேன். அம்மாவின் சிகரெட் பழக்கத்தை நிறுத்தினேன்.
எதிர்வளர்ச்சி
இயந்திரப் பொருளாதாரத்தினால் சில தலைமுறைகளாக நம் உடைமைகளின் எண்ணிக்கை அதி வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப நம் வருமானம் பணவீக்கத்தையும் தாண்டி அதிகரித்து இருக்கிறது. நமக்குப் புதுப்புது விருப்பங்கள். அவற்றில் பல அவசியங்களாக மாறிவிட்டன. அவற்றை நிறைவேற்ற புதுப்புது தொழில் நுட்பங்கள். நாளை இன்றைவிட சிறப்பாக இருக்கும் என்பது அரசியல் கோஷம் மட்டுமல்ல. அது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு, சமுதாயத்தின் முக்கிய அங்கம். புதிய தொழில் முயற்சிகளுக்கு அதுவே ஊக்கம். ஊர்திகள் வீடுகள் வாங்குவதற்குத் தேவையான கடன், ஓய்வுக்காலத்தில் உழைப்பில்லா வருமானம், உலகெங்கும் கூடிக்கொண்டே போகும் பங்குச் சந்தைகளின் மதிப்பு போன்ற பணத்தினால் அளக்கக்கூடிய எல்லா பரிமாற்றங்களுக்கும் அது தான் அஸ்திவாரம். அது இல்லை யென்றால் வர்த்தக மற்றும் அரசியல் நிறுவனங்களின் திட்டங்களும் இல்லை.
நேர்மைக்கு ஒரு காம்பஸ் -2
லாபத்தை அதிகரிக்க ஒரு நிறுவனம் புதிய இயந்திரங்களிலும் பணியாட்களுக்கு நவீன வழிகளில் பயிற்சி அளிப்பதிலும் செலவிடலாம். அதைவிட சுலபமான வழி, அதே துறையில் இருக்கும் இன்னும் சில நிறுவனங்களுடன் கூட்டு சேர்தல். அப்படி உருவாகும் வலிய நிறுவனம் தன் பொருட்களின், பணிகளின் விலைகளை விருப்பம் போல் ஏற்றலாம். சட்டத்தின் கண்களில் அது குற்றம் இல்லை. இணைந்த நிறுவனங்களின் பொதுவான பதவிகள் என பலரைப் பணிநீக்கம் செய்யலாம். தொழிலுக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக மலிவாக வாங்கலாம்.
இரண்டு அலைபேசி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து தொடர்புகளின் விலையைக் கூட்டினால் அவற்றைப் பயன்படுத்தாமல் எதிர்ப்புகாட்ட முடியும். ஆனால், உடல் சிகிச்சைக்கு?
நேர்மைக்கு ஒரு காம்பஸ் – 1
வேலைக்காக நாஷ்வில் வந்ததில் இருந்து மளிகை சாமான்கள் வாங்க ப்ரஷாந்த்துக்குப் பிடித்த கடை பப்ளிக்ஸ். அலுவலகத்தின் பக்கத்திலேயே ஒன்று. தனியாகவோ இல்லை நிவேதிதா ஊரில் இருந்தால் அவளுடனோ வாரம் ஒருமுறையாவது போவது வழக்கம். காரில் இருந்து இறங்கி, கடைக்கு நடந்தபோதெல்லாம் அந்த சிகிச்சையகம் அவன் கண்ணில்படும். பப்ளிக்ஸின் இடப்பக்கம் வரிசையாக பலரக உணவகங்கள், முடித்திருத்தகம், வளர்ப்புப் பிராணிகளின் தேவைகள், அலைபேசி… கட்டடத்தின் வலப்பக்க மூலையில் சிகிச்சையகம் மட்டும். அதன் கதவில்..
உணவு, உடை, உறையுள், … – 3
. நடுவில் புல்தரையில் இருந்து பெண்களின் சிரிப்பொலியும் பேச்சுக்குரலும். ஒலிகள் இல்லாத வர்த்தக லோகத்தில் இருந்து பேசும் உலகில் நுழைந்தாள். பெண்களின் கலகல சத்தம் வந்த திசையில் இலைகளின் ஊடே பார்வையை ஓட்டினாள். மஞ்சள் விரிப்புக்குமேல் ஒரு செவ்வக பிரம்புக்கூடை அதைச்சுற்றி மூன்று பெண்கள். ஹிந்தி வார்த்தைகள் என்றாலும் பேச்சு தெளிவாகக் காதில் விழவில்லை. இப்படியொரு காட்சியை அங்கே அதுவரை பார்த்தது இல்லை. கூடையில் என்ன இருக்கும்? அவர்கள் என்ன பேசுகிறார்கள்? பக்கத்தில் போய்ப் பார்ப்பது அநாகரிகம் என ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
உணவு, உடை, உறையுள், … – 2
இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை. ‘ஸ்பெல்டா’வின் வளர்ச்சிக்கு நான் வரைந்த திட்டம் பயனில்லாமல் போகுமோ என்கிற அச்சம், ‘எரேஸ்’ துண்டுகளைப் பயன்படுத்துவோரின் கவனக்குறைவால் நேர்ந்த சில விபத்துகளை வைத்து பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல்கள் தொடுத்த வழக்கு, கவலை இல்லாத எதிர்காலத்துக்கு வழி காட்டியதால் வந்த நன்றி உணர்வு, பழைய நினைவுகளின் தாக்கம், இவை அனைத்தும் கலந்து எனக்குக் கொடுத்த மனக்குழப்பம். அதில் இன்னொன்றையும் சேர்த்துவிட்டேன்.
உணவு, உடை, உறையுள், … 1
பட்டியலின் கீழே அவள் தோழியுடன் பேசிய நேரத்தில் அவன் பென்சிலால் எழுதிய ஒரு படம். ஜன்னல் வழியாகத் தெரிந்த இலைகள் உதிர்த்த மரம். இரண்டையும் அவள் சிலநொடிகள் உற்றுப்பார்த்தாள். மரத்தின் வெறுமை படத்தில் வெளிப்பட்டதைக் கவனித்தாள். காகிதம் சுற்றிய பெட்டிக்குள் இன்னொரு வர்ண அட்டைப்பெட்டி. வாடர்-கலர் கிட் – முப்பது வர்ணங்கள், மூன்று ப்ரஷ்கள், முன்னூறு காகிதங்கள்.
விலைக்குமேல் விலை
அப்படி மூன்று மாதம் செய்ததின் முடிவு, வாங்குகிறவர்களின் கையோங்கி இருந்ததால் அதன் மதிப்புக்கு பதினைந்து இருபது சதம் குறைவாகத்தான் வீடு விலைபோகும். எதற்கு நஷ்டப்பட வேண்டும்? வெளிப்புறத்தில் புல்வெட்டவும் இலை வாரவும் ஒரு பணியாளன். வீட்டிற்குள் அவள் புழங்கும் இடத்தை அவளால் சுத்தமாக வைக்க முடியும்.
“வேலைக்குப் போற வரைக்கும் இங்கியே தனியா இருந்துடறேன்.”
கோழிக் குஞ்சுகள்
தாத்தாவின் கையைப் பிடித்து அழைத்துப் போகிறான். வீட்டிற்குப் பின்னால் காலியாக இருந்த மனை கொல்லையாக மாறியிருந்தது.
“பட்டணத்தில இத்தினி பெரிய நிலம். அதிருஷ்டம் தான்.”
“கோழி வளர்க்கிறோம்” என்று தாத்தாவின் கவனத்தைத் திருப்புகிறான்.
அன்புள்ள அன்னைக்கு
நீ வாழ்ந்ததைவிட என் வாழ்வு சிறப்பாக அமையும் என்பது மூன்று நான்கு தலைமுறைகளாக நடந்தது மேலும் தொடரும் என்பதால் வந்த நம்பிக்கை. நீ வளர்ந்த வீட்டைவிட இப்போதைய உன் இல்லம் இரண்டு மடங்கு. எனக்கெனத் தனி அறைகள். தரைத்தளம் முழுக்க விளையாட்டுச் சாமான்கள். வீட்டுக்குப் பின்னால் நீச்சல் குளம். அவற்றை அனுபவிக்கத்தான் எனக்கு மனம் இல்லை. வன்முறையைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து புதுவாழ்வு தேடும் அகதிகள், ஐந்து காலன் தண்ணீரைச் சுமந்து ஐந்து மைல்கள் நடக்கும் சிறுமிகள், பசியில் வாடும் பிஞ்சு முகங்கள் – இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது புறநகர இல்லமும் அதன் சக்தி விரயமும் அர்த்தம் இழக்கின்றன.
மிகப்பெரிய அதிசயம்
“நிகழ்காலம் பிடிக்காவிட்டால் எதிர்காலத்தை மாற்றி அமைக்க திட்டம் தீட்டுகிறோம்.”
“முன்னேற்றம் என்று நாம் சொல்லும் அத்தனைக்கும் அது காரணம்.”
“எதார்த்தத்தை மறுத்து நமக்குப்பிடித்தமான கற்பனையை நிஜம் என நம்புகிறோம். அளவுக்கு மிஞ்சிய சத்தில்லாத உணவும் சோம்பல் வாழ்க்கையும் மற்றவர்களுக்கு மட்டுமே நோய் நமக்கு இல்லை என நினைக்கிறோம். நிறுவப்பட்ட அறிவியல் கொள்கைகளில் பெரும்பாலோருக்கு அநாவசிய சந்தேகம்.”
20xx- கதைகள்: முன்னுரை
நிலக்கரி சக்தியில் ஐரோப்பியர்கள் வராது இருந்தால், நிலையான கிராம வாழ்க்கையும் அரசாட்சிகளின் ஏற்ற இறக்கங்களும் இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்திருக்கும். இது ஒரு ஆதரிச சமுதாயமா? இல்லை. இரண்டாயிரம் காலரி உணவு எல்லாருக்கும் நிச்சயம் இல்லை. அவ்வப்போது ‘ஓர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும் ஒக்க விற்கும் கார்தட்டிய பஞ்சகால’ங்கள். பயிர்விளைவிப்பதின் பெரும்பளுவைப் பள்ளர்கள் சுமந்தார்கள். எழுத்தறிவு மக்களில் ஐந்துசதம் பேருக்கு இருந்தால் அதிகம். அவர்களில் உயர்குடியைச்சேர்ந்த ஒருசில பெண்கள். விதிக்கப்பட்ட வாழ்க்கைப்பாதையில் இருந்து விடுபடுதல் அரிதான செயல். ஆனால், இன்றைய மத்தியக்கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பகுதியின் பல நாடுகளில் மக்கள் படும் அவதியுடன் ஒப்பிட்டால் அந்தத்தமிழகம் ஒரு சொர்க்கம். முக்கிய காரணம், வறுமையிலும் மனிதாபிமானம் அழிந்துவிடாமல் பாதுகாத்த கொள்கைவீரர்கள்.
வேலைக்கு ஆள் தேவை
‘குச்சினா-க்ராஃப்ட்’டின் அதிவேக வளர்ச்சியில் தனக்கும் ஒரு பங்கு என்று ராகுல் நினைத்ததால் வேலை நிரந்தரம் என அடிமனதில் ஒரு நிச்சயம். அது இல்லாமல் போனதால் விரக்தி. அடுத்துவந்த சில வாரங்களில் அது ஏமாற்றமாக மாறியது. பதினோரு ஆண்டுகளுக்கு முந்திய பொருளாதாரத் தாழ்வின்போது அவன் மாணவன். அவனை அது பாதிக்கவில்லை. இப்போதைய பொருளாதார சுருக்கத்தின் இறுக்கத்தை முழுமையாக உணர்ந்தான். அவனுடைய அனுபவமும் அறிவுமே அவனுக்குப் பகை.
என்ன பொருத்தம்!
பொதுமக்கள் நலத்தில் எம்.எஸ். பட்டம் வாங்கி வெவ்வேறு இடங்களில் வேலை தேடியபோதுதான். பெரிய மருந்து நிறுவனம் ஒன்றில் சேர்ந்து மக்களில் இத்தனை பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் இன்னின்ன நோய்கள், அவற்றுக்கு என்னென்ன மருந்துகள் விற்கலாம் என்று கணக்குக்காட்டுவது அவன் வேலைத்திட்டம். அதற்கு எதிராக அரசாங்க அலுவலகத்தில் நுழைந்து மருந்துகளின் துணையில்லாமல் மக்களின் உடல்நலத்தை உயர்த்த அவள் முயற்சித்தது விரிசலுக்குக் காரணம். …. டாலரை எண்ணியெண்ணி செலவழிக்கும் சில்லறை மனிதர்களுடன் பழகும் அவளுக்கும், அஷ்வின் டயானா போல பணத்தை எப்படியெல்லாம் வாரியிறைக்கலாம் என்று யோசிக்கும் குடும்பங்களைக் குறிவைக்கும் ராகுலுக்கும் ஒத்துப்போகுமா?
அவர் வழியே ஒரு தினுசு
“மார்க்கெட்டிங். இந்தியாவில் சத்து இல்லாத செயற்கை சாப்பாட்டை விற்க எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற தலைப்பில். சென்னை டிவியில் சோடா, சாக்லேட், சிப்ஸ் இதுக்கெல்லாம் எவ்வளவு கமர்ஷியல்! கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும் இட்டிலி, லட்டு, காப்பிக்கு பதிலாக வெள்ளை ப்ரெட், டோநட், கோலா. அதானல உடல் பருமன், இதய பலவீனம், இரத்தத்தில் சர்க்கரை.”
நிஜமான வேலை
“மூலதன வருமானத்தின் பெருக்கத்திற்கு பொருளாதார வளர்ச்சி ஈடுகொடுக்க முடியாது என்று அவர் சொல்வது சமீபத்திய வரலாற்றின்படி சரி. அதனால் ‘கூப்பான்கள் வெட்டும்’ ஏழைகள் ஏழைகளாகவே இருக்க, பணக்காரர்களிடம் இன்னும் பணம் சேர்கிறது என்பதும் ஓரளவுக்கு உண்மை. ஆனால், உலகமுழுவதுக்குமான மூலதன வரி பிரச்சினையைத் தீர்க்கும் எனத்தோன்றவில்லை.”
பிரகாசமான எதிர்காலம்
அப்போது தான் அவன் மனமாற்றம் தாற்காலிகமானது இல்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவள் காதல் வாழ்க்கையில் புதிய அனுபவம். கல்வி அல்லது தொழில் நிமித்தம் ஊர் மாறியதால், இன்னொரு பெண் அபகரித்ததால், பழக்கம் புளித்துப் போனதால் உறவுகள் முறிந்திருக்கின்றன. அவனிடம் நிகழ்ந்த மாற்றங்கள் அவள் எதிர்பாராதவை. உலர்சலவை செய்த வர்த்தக ஆடைகளுக்கு பதில் சுருங்கிய சட்டையும் பான்ட்ஸும். கடைகளில் வாங்காமல் அவனே தயாரித்த மதிய உணவு. முகத்தில் தீவிர சிந்தனையின் ஆழம். ஆனால் அவளைப் பொறுத்தவரை அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.
2016 – எண்கள்
“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இருக்கும். எல்லாருடைய வீட்டிலும் டிவிக்கு கேபிள் இருக்கு, நாமும் வச்சுண்டா என்னன்னு கேட்டான். நமக்கு கட்டுப்படியாகாதுன்னு சொல்றதுக்குப் பதிலா அவனையே வீட்டுக்கணக்கு போடச்சொன்னேன். நான் வீணை சொல்லித்தரேன், அவ பாட்டு க்ளாஸ் நடத்தறா. அதில வரும்படி இவ்வளவு. வீட்டு வாடகை, எலெக்ட்ரிக் பில், சாப்பாட்டுச்செலவு… எல்லாம் கணக்குப்போட்டு கடைசியில அறுபது டாலர் தான் மிச்சம்னு கண்டுபிடிச்சான். அதில ஐம்பது டாலரைத் தூக்கி கேபிளுக்கு கொடுக்கறது அனாவசியம்னு அவனுக்கே தோணிடுத்து.”
“நீங்க செஞ்சது புத்திசாலித்தனமான காரியம். முடியாதுடான்னு ஆரம்பத்திலயே பட்னு சொல்லியிருந்தா அவனுக்கு ஏமாற்றமா இருந்திருக்கும்.”