மனிதர்களுக்கு கடுப்பையும், எரிச்சலையும் ஊட்டுவது கார்டிசால் என்ற ஹார்மோன். அட்ரினலின் சுரப்பியினின் மூலமாக கார்டிசால் மனிதனுக்கு ஆபத்து வந்தால் சுரக்கும். ஆதி மனிதனுக்கு அது உயிர் வாழ உதவியாக இருந்தது. வனவிலங்குகளைக் கண்டால் மனிதன் ஓடவோ, சிலை போல நிற்கவோ, போராடவோ அது பல விதத்தில் உதவி செய்தது. அதே போல் மனிதனுக்கு பசியைத் தூண்டுவது க்ரெலின் என்ற ஹார்மோன். சில சமயம் கார்டிசால் க்ரெலின் சுரப்பை அதிகரிக்கும்.
Tag: ஜாபாலன்
கிரிஸ்ஸோபதேசம்
முதலீடுகளில் பலவகை உண்டு. அந்த காலம் மாதிரி மனைவியின் தாலியை அடகு வைத்து, உனது கார் கொட்டகையில் புத்தொழில் தொடங்க முடியும். சில சமயம் அது வெற்றி பெற்று ஒரு கோடி ஈட்டி ஒற்றைக் கொம்பு (unicorn) நிறுவனமாக வளரலாம். இல்லாவிடில் மக்களிடம் முறையிட்டு கூட்ட நிதி சேர்க்கலாம். அடுத்த வழி தேவதை முதலீட்டார்களை (angel investors ) முதல் சுற்று முதலீடு கேட்பது. பெரிய தொகையானால் முதலீட்டார்கள் கூட்டமைப்பை (syndicate ) அணுகலாம். அந்த மாதிரி பல கூட்டமைப்புகள் குழுமத்துக்கு நான் தலைவன்.
இன்வெர்ட்டி-வைரஸ்
மணி இப்போது டாக்டருக்கு படித்து முடித்து விட்டான். திருநெல்வேலி டவுன் பக்கத்தில் அன்சர் கிளினிக்கில் வேலை. எனக்கு இப்போது கல்யாணம் ஆகி ஒரு குழந்தை வேறு இருக்கிறது. எங்களுக்கும் அதே ஊரில் தான் வேலை என்றாலும் அம்மா அப்பாவை அடிக்கடி பார்க்க முடியவில்லை. அன்றைக்கு நானும் என் கணவரும் உணவகம் சென்ற போது தான் மணியைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்க்காமல் யாரோ ஒரு பெண்ணோடு பேசிக் கொண்டு இருந்தான். அவர்கள் இருவரின் உடல் மொழியை பார்த்தாலே தெளிவாக தெரிந்தது இது வெறும் நட்பல்ல என்று.
அமித் ஷாலினியும் நரேந்திர மோதினியும்
நமது முதல் கேள்வி, புதியதாக இராகம் கண்டு பிடிப்பது அவசியமா? ஏற்கனவே நூற்றுக்கணக்கில் ராகங்கள் உள்ளன. அவற்றை கண்டு பிடிப்பதற்கே ரசிகர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும் போது இது எதற்கு என்ற கேள்வி எழலாம். இதற்கு கண்ணதாசன் “ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும், வெறும் இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்” என்று பதில் அளித்து இருக்கிறார். இந்த பாடல், “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்”, இடம் பெற்ற படம் ” அபூர்வ ராகம்”. அந்த திரை படத்திலேயே இன்னொரு பாடல் (அதிசய ராகம், ஆனந்த ராகம்) வழியாக நம் கேள்விக்கு விடையும் அளித்து இருக்கிறார்கள் MSV மற்றும் Dr பாலமுரளி கிருஷ்ணா அவர்கள். அந்த திரைபாடப் பாடலின் துவக்க ராகம் “மஹதி”.
பப்பிக்குட்டி
நான் கூடையைப் பார்த்தேன். வெள்ளைப் பஞ்சு மேகம் போல புசு புசுவென்று ஒரு அழகான குட்டி. பிறந்து சில வாரங்கள் தான் ஆகி இருக்க வேண்டும். பொமேரேனியன் வகை என்று நினைத்தேன். கூடையின் பக்கத்தில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாள் நின்று கொண்டு யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார். “ஆமாங்க, நம்ம பேரப் பிள்ளைங்களுக்குத் தாங்க. போன மாசம் தான் குட்டி போட்டது. எழுபதாயிரம் கேட்டாங்க. நாங்க அம்பதுக்கு பேசி முடிச்சிட்டோம்”.
வோல்காவின் வால்
நாங்கள் என்ன தான் திட்டத்தை இரகசியமாக வைத்திருந்தாலும், அது கசிந்து விட்டது. பெரும்பான்மை நாய்களுக்கு இந்த திட்டத்தின் தாக்கம் தெரியவில்லை. அவர்களின் கவனம் எப்போதும் அன்றாட உணவு தான். சில அறிவு ஜீவிகளுக்கு திட்டம் புரிந்தது. ஆனால் சரியா தவறா என்று முடிவு எடுக்க இயலவில்லை. ஒரு சிறு பான்மையினருக்கு திட்டம் கொஞ்சம் கூட பிடிக்க வில்லை. ஏனென்றால் பலருக்கு அந்த காவலர்களுடன் நல்ல நட்பு. மனிதர் போட்ட உணவை உண்டு துரோகம் செய்வது கண்டிப்பாக நாய்க்குணம் இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து இருந்தது.ஆனால் வோல்காவை எதிர்த்துப் பேசும் தைரியம் யாருக்கும் இல்லை. ஆனால் அத்தனை குழுக்களும் விழித்திருந்து உறு துணையாக இருப்பது என்று முடிவு எடுத்தன.