பேட்டை நாவல் காலத்தின் ஆவணம்

1639-இல் ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை நிறுவுவதற்கு முன்பு, சோழமண்டலக் கடற்கரையோரம் மீன்பிடித் தொழிலையும் வேளாண்மையையும் வாழ்வாதாரமாகக் கொண்ட தமிழ் சமூகங்கள் வாழ்ந்து வந்தன. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, எழும்பூர், நுங்கம்பாக்கம் மற்றும் புரசவாக்கம் போன்ற கிராமங்கள் கடலோர வணிகப் பாதைகள், கோயில் வலைப்பின்னல்கள் மற்றும் விவசாய நிலப்பரப்புகளுடன் இணைக்கப்பட்ட சிறிய குடியிருப்புகளாக இருந்தன. இவர்களின் உலகம் கடல், பருவமழை என்றுதான் பிணைக்கப்பட்டிருந்தது.

அன்பின் ஐந்தாம் பரிமாணம்: காலவெளி தரிசனம்

கார்கன்சுவா குறித்த சித்தரிப்பானது, சுழலும் கருந்துளைகளைப் பற்றிய பொதுச் சார்பியல் கோட்பாட்டின் தீர்வுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. சுழற்சியற்ற கருந்துளைகளைக் காட்டிலும், மெய்யான வானியல் கருந்துளைகள் கோண உந்தம் கொண்டவையாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தச் சுழற்சியானது அவற்றின் கட்டமைப்பை அடிப்படையிலேயே மாற்றியமைக்கிறது. இங்கே கருந்துளையின் சுழற்சியால் கால-வெளியே நூல் இழை போல முறுக்கப்படுகிறது

பெல்லா தார் – இரங்கல்

தாரின் முத்திரை என்பது நுட்பமான நீண்ட காட்சிகள், காலத்தை அதன் மூல வடிவில் எதிர்கொள்ள நம்மைப் பணிக்கின்றன. கில்லெஸ் டெலூஸ் முன்வைத்த கால-பிம்பம் எனும் கருத்தாக்கத்தோடு ஆழமாகத் தொடர்புடையது அவரின் திரைமொழி. இங்கே சினிமா என்பது ஒரு செயலைத் துரிதப்படுத்துவது அல்ல, மாறாக காலத்தை அதன் போக்கில் சுதந்திரமாக விட்டுவிடுவது. ஹான்ஸ்-ஜார்ஜ் கடாமர் கூறுவது போல், கலை என்பது வெறும் தகவலல்ல, அது அனுபவத்தின் வழியே கிட்டும் ஒரு தரிசனம்.

ஜான் சர்ல் (1932- 2025) – அமெரிக்கத் தத்துவாளர்

1990கள் மற்றும் 2000களில், சியர்ல் ஒரு புதிய துறையில் ஆராயத் தொடங்கினார்.  அவரது புத்தகங்கள் “The Construction of Social Reality” (1995) மற்றும் “Making the Social World” (2010) இந்த யோசனைகளை விரிவாக்கின. பணம், அரசாங்கம், திருமணம், சொத்துரிமை  இவை எல்லாம் எங்கிருந்து வருகின்றன? மலைகள் மற்றும் ஆறுகள் மனிதர்கள் இல்லாமலும் இருக்கும். ஆனால் ஒரு இருபது டாலர் நோட்டு? ஒரு ஜனாதிபதி? இவை நமது கூட்டு ஒப்பந்தத்தால் மட்டுமே இருக்கின்றன

நட்சத்திர இரவு

அந்த நிசப்தம் அவன் காதுகளில் ஒலித்தது. மௌனமும் ஏதோ சொல்கிறது என்பதை அவன் உணர்ந்தான்.  மொழிக்கு தான் அர்த்தம் உள்ளதா என்ன?  மௌனங்களும்  அர்த்தங்களால் நிரம்பியுள்ளது. இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் வரும் ஒரு ஆழ்ந்த மௌனம் போல. சொல்லப்படாத உணர்வுகள், கேட்கப்படாத கேள்விகள், கிடைக்காத பதில்கள் என அனைத்தையும் அந்த மௌனம் சுமந்து நிற்கிறது

நித்தியம் – 2

காத்தின் மூளைக்குள் திடீரென மோட்சார்ட்டின் ரெக்வியம் ஒலிக்க ஆரம்பித்தது. அச்சமூட்டும் இசை அவளது நரம்புகளைப் பிடித்து இழுத்தது. இறப்பின் அழைப்பைப் போன்ற அந்தப் பாடல் அவளது இதயத்தை கனமாக்கியது, கல்லறையின் மண்ணை அவள் மீது வீசுவதைப் போல் உணர்ந்தாள். யார் இந்த மனநோய் தந்திரத்தை விளையாடுவது என்பதை அறியாமல் உணர்ந்த காத், அந்த இசையை மறக்க முயன்றாள். ஆனால் அவளது தலையில் ரெக்வியம் வட்டமிட்டுக் கொண்டே இருந்தது, அவளது ஆன்மாவை ஒரு கருப்பு துணியால் போர்த்துவதைப் போல்.

நித்தியம்

“டாக்டர் ஜெனிஃபர், இந்த அளவீடுகள் சரியானவை என்று உறுதியா?” கிரேடி துணிச்சலாகக் கேட்டிருந்தான் தன் முனைவர் பட்ட மாணவன். பளபளக்கும் டாஷ்போர்டில் அவள் அடுக்கிய டேட்டாக்களை எல்லோரும் உற்றுப் பார்த்திருந்தனர். அவளது ஐந்து ஆண்டுகால உழைப்பில் கண்டுபிடித்த புற்றுநோய் செல்களின் பிழை பற்றி விளக்கிக்கொண்டிருந்தாள்.

இசைவைத் தேடும் வாழ்க்கை

மற்ற புலிகள் அனைத்தும் கற்பனையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள், ஆனால் வேங்கை வனம் நாவலின் மச்சிலி  உண்மையில் வாழ்ந்த புலி. அதுவும் நாம் வாழ்ந்த காலகட்டத்திலேயே வாழ்ந்த புலி என்பது குறிப்பிடத்தக்கது. வேங்கைவனம் நாவல் வெறும் புலியைப் பற்றிய கதை தானா என்ற கேள்வியை முன்வைத்தால், ஆம்/இல்லை என்று இருபதில்களும் சொல்லலாம். புலிகள் மூலமாக வரலாறு, வரலாற்று புனைவு, போர், அதிகாரம், படிநிலை, காலனித்துவம், சூழியல், காதல், அறம், துரோகம், மனித-விலங்கு உறவு, இயற்கையின் வலிமை, இயற்கை மீதான ஆதிக்கம் போன்ற பல பரிமாணங்களை இந்நாவல் ஆராய்கிறது.

எல்லையற்ற நடனம்

“நாம் புதிய பிரபஞ்சங்களை உருவாக்கும்போது, வெறும் கால-வெளியை மட்டும் உருவாக்கவில்லை,” என்று டாக்டர் மார்கஸ் தனது கையை உயர்த்தி, மேலே உள்ள ஹோலோகிராபிக் காட்சியில் புதிதாக உருவாகும் பிரபஞ்சத்தை சுட்டிக்காட்டினார். “எளிய விஞ்ஞான செயல்முறை அல்ல. நாம் ஒரு கடவுளின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம், பாருங்கள், இங்கே. பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் – ஒவ்வொன்றும் ஒரு சூரியன், ஒவ்வொன்றும் புதிய உலகங்களுக்கான ஒளி. டிரில்லியன் கணக்கான கிரகங்கள் – ஒவ்வொன்றும் ஒரு வீடு, ஒரு தாய்மடி, புதிய வாழ்க்கை.

உஸ்தாத் பிஸ்மில்லா கான்

This entry is part 9 of 22 in the series இசைவாணர்

பிஸ்மில்லா கான் தனது வாரணாசி வேர்களுடன் ஆழமான பிணைப்பை வைத்திருந்தார். அமெரிக்காவில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் உட்பட, வெளிநாடுகளில் தங்குவதற்கான பல அழைப்புகள் அவருக்குக் கிடைத்தன. ஆனால், அவர் எல்லாவற்றையும் மறுத்து, “கங்கை அமெரிக்காவில் பாய முடியுமா?” என்று கேட்டுப் பதிலளித்தார். இந்த வார்த்தைகள் அவரது பிறந்த இடம் மற்றும் புனித நகரமான வாரணாசியின் கலாச்சார பாரம்பரியத்திற்கான அவரின் நிலையான பக்தியை வெளிப்படுத்தின. எவ்வளவு உயர்ந்த புகழைப் பெற்றாலும், அவரது இசையின் ஆழமும், மனதின் நிலைத்தன்மையும் வாரணாசியோடு இணைந்தே இருந்தன.

அசைந்தாடு சீலை ஆலாபனம் – உஸ்தாத் அஞ்சலி

This entry is part 1 of 22 in the series இசைவாணர்

தனி வாத்தியத்தில் மட்டுமே தங்களை அர்ப்பணிப்பவர்கள், அந்தக் கருவியில் புதுமையான ஆழத்தை அடைந்து, இசையை உச்சத்தில் கொண்டு செல்வதற்கான திறனைக் கொண்டவர்கள். மேலும் நுணுக்கமாக பார்த்தால், ஒவ்வொரு வாத்தியக் கருவியிலும் பல்வேறு சங்கீத பரிமாணங்கள் மறைந்திருக்கின்றன. எந்த வாத்திய கருவியிலும் இன்னும் முழுமையாக மீட்டபடாத இசை, அறியாத இசைப் பரிமாணங்கள் உள்ளது,  அதைப் புதியதாக உருவாக்கும் திறன் இருக்கின்றது

ஆக்கன் ஊற்றுப்பட்டை

AlphaGo, நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம், ஒரு வீரர் செய்யக்கூடிய அடுத்த நகர்வுகளை முன்னறிவிக்கிறது. இதற்காக, இது ஒவ்வொரு விருப்பத்தையும் ஆராய்வதற்குப் பதிலாக, கொள்கை நெட்வொர்க் மூலம் மிகவும் நம்பிக்கைக்குரிய நகர்வுகளைத் தேர்ந்தெடுக்கும். மேலும், மதிப்பு நெட்வொர்க் மூலம், தற்போதைய போர்டு நிலையை மதிப்பீடு செய்து, AlphaGo க்கு எவ்வளவு சாதகமாக இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்கிறது. AlphaGo, தனது முந்தைய பதிப்புகளுக்கு எதிராக மில்லியன் கணக்கான கேம்களை விளையாடி, கற்றுக் கொண்டு, வலுவூட்டல் கற்றல் என்ற முறையில், அதன் அளவுருக்களை சரிசெய்கிறது