“அப்போ அடுத்த கேள்வி, அவரு இத எப்படி சாதிச்சிருப்பாரு? இதுக்கான பதில் நமக்கு நாராயண குரு கிட்ட இருந்து கிடைக்கலாம். நாராயண குருவ ஒரு சீர்திருத்தவாதி, ஆன்மீகவாதினு மட்டும் பாக்காம, அவருக்கு ஒரு தொழில் முனையும் மைன்ட்செட் இருந்திருக்கு, அதை அற வழியில மக்களோட பிரச்சனைகளை தீர்க்க உபயோகப் படுத்தியிருக்கறத நம்மாள தெரிஞ்சிக்க முடியுது”
Tag: ஹரி வெங்கட்
ஆற்றுவன ஆற்றி அமைவது – “The Brutalist”
தனது முக்கியமான கலைப்பணியின் மையத்தில் ஒரு சிலுவையைச் சேர்ப்பது, ஒரு யூதக் கட்டிடக் கலைஞருக்கு அளிக்கும் மன நெருக்கடி அசாதாரணமானது. மேற்கத்திய சூழலில் நிதியுதவி பெறவும், பெருமை அடையவும், ஒரு யூதக் கலைஞனாக இருந்தாலும், கிறிஸ்தவ அடித்தளத்தில் கட்டிடமொன்றை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிலுவை, அந்த ஆதரவுக்கான சின்னமாகும் — ஒரு விலைபோல.
‘சத்யஜித் ராய்’ என்றொரு இசை ஆளுமை
ராயின் உரையாடல்கள் மேற்கத்திய செவ்வியல் இசையுடன் தொடர்புடையதாகவே இருக்கும். ஒரு முறை அவர், 10-ஆம் நூற்றாண்டு இந்துக் கோயிலான கொனார்க்கை, ‘இந்திய சிறபக் கலையின் B-minor’ என்றழைத்தார். சில சமயங்களில் மேற்கத்திய செவ்வியல் இசையை, தனக்கே உரித்தான வகையில் தன் திரைப்படங்களுக்கு அவர் உபயோகிப்பதுண்டு. இசைக் கருவிகளின் சேர்க்கையை குறித்து கவலை கொள்ளாத, மரபுகளை மீறிய கடுமையுடன் வெளிப்படும் அவரது இசை, மேற்கத்திய சூழலில் ”ரேயின் இசை” என்றழைக்கப்பட்டு, அவருக்கான ஒரு தனித்தன்மையை நிறுவியது.
