தெய்வநல்லூர் கதைகள் 13

This entry is part 13 of 18 in the series தெய்வநல்லூர் கதைகள்

பெரிய கோவில்  சந்திப்புக்குப் பிறகு மொத்த வகுப்புமே மாறிப்போனது. அன்றைய மாலை நாங்கள் எவ்வித காரணமுமின்றி சும்மா சிரிப்பதே அம்மா சுகமென சிரித்து பேசினோம்.  வெள்ளி மாலை கோவில் சந்திப்பு முடிந்து சங்கீதாவும், மெஜூராவும் உடன் வர நாங்கள் மூவரும் என அனைவரும் ஒன்றாக கோவிலிலிருந்து கிளம்பி தெற்கு “தெய்வநல்லூர் கதைகள் 13”

வித்தியாசமாக சிந்தித்தால் வெற்றி பெற முடியாது

எந்த வண்ணப்படம் விற்கும் என்பதை சரியாக யாராலும் சொல்ல முடியாது. பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்து அருமையாக படம் பிடித்து மேலேற்றினால், அந்தப் படத்தை யாரும் பொருட்படுத்தவே மாட்டார்கள். முதலில் விற்ற என்னுடைய படங்கள் எனக்கு எதையும் கற்பிக்கவில்லை. மாறாக, என்னைத் தவறாக சந்தையை கணிக்கத் தூண்டியது. என் தன்நம்பிக்கையை குலைக்கவும் செய்தது. ஏன், அசட்டுத்தனமாக இந்தத் தொழிலில் வெற்றி பெறலாம் என்று தப்புக் கணக்குப் போடேன் என்று பல தருணங்களில் நினைக்க வைத்தது. நான் எந்தப் படங்கள் சிறந்தவை என்று எண்ணியிருந்தேனோ, அவை அதிகம் விற்றதே இல்லை!

மேற்கத்திய இசை: எளிய அறிமுகம்

வெறும் மேலதிக கொண்டாட்டங்களுக்கான இசையை கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு.   சங்கீதம் வாயிலை திறந்து வைத்துக்கொண்டு அரவைணைக்க தயாராக இருக்கும் தருணத்தில்   விலகிவிட்டிருக்கிறேன். நமது நம்பிக்கையில் சில தத்தளிப்புகளை உருவாக்குகிறது. பழகிய  சிந்தனைகளை கேள்விக்குள்ளாக்கிறது. கற்பனையின் எல்லை என்று நீ வகுத்தது அடிப்படை தவறு . மேலும் விஸ்தரி என்ற அறைகூவல்.

கங்கா தேசத்தை நோக்கி

This entry is part 1 of 12 in the series கங்கா தேசத்தை நோக்கி

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தாய்மண்ணில் கால் பதித்து உற்றார், உறவினர்களையும், கோவில் குளங்களையும் பார்த்து விட்டு வந்தால் தான் அடுத்த இரு வருடங்களை நிம்மதியாக கழிக்க முடியும் என்ற மனநிலையிலேயே இருந்து பழகி விட்டதால் 2018 மதுரை விசிட்டிற்குப் பிறகு 2020 கோடை விடுமுறைக்காக ஆவலாக காத்திருந்தோம். “கங்கா தேசத்தை நோக்கி”

உசைனி

“காருகுறிச்சியாரை மாதிரி உசைனிய வாசிக்க இனி யாரு வரப்போறா? நானே அஞ்சாறு தடவை நேரில கேட்டு இருக்கேன். கோயில்பட்டியில ஒரு கோயில் கச்சேரி. அன்னைக்கு உசேனியை எடுத்துட்டார். மணி போனதே தெரியலை. காருகுறிச்சியார் ஒவ்வொரு தடவை ஷட்ஜத்துக்கு வரும்போதும் ஒரு சுழிப்பு சுழிச்சு ஷட்ஜத்தைத் தொடுவார் பார்த்து இருக்கியா? அதுக்கு என்னென்னமோ ஸ்வரமெல்லாம் சொல்றாங்க, என்னைக் கேட்டா அதை உசைனி ஷட்ஜம்-னு சொல்லுவேன்.

எலும்புக்குள் குடிகொண்டிருக்கும் அசுரன்- மல்லிகார்ஜுன் மன்சூர்

ஒரு மகத்தான இசை கலைஞனை பற்றி எழுதுவது ஒரு சிக்கலான காரியம். முதலில் அவரின் இசையை எழுத மொழி நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அப்படி இருந்தாலும், எல்லாம் எழுதி முடித்த பிறகும் நாம் எதுவும் எழுதவில்லை என்று தோணும். மன்சூர் போன்ற மேதைகள் தங்கள் ஆன்மாவை இசையில் கலந்ததை எப்படி வார்தைகளால் வர்ணிக்க முடியும்?

பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி

நான்காவது வகுப்பிற்குமேல் அவளை படிக்கவிடாத, கராச்சியைச் சேர்ந்த குடும்பத்தின் இளம் பெண் ; தினசரிகளை படித்து புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றித் தெரிந்துகொண்ட ஆர்வம்மிக்க பெண் ; தான் மேலே படிக்கா விட்டால் அறிவியலில் தான் கண்டுபிடிப்பதற்கென்று எதுவுமே இல்லாமல் போய்விடுமா என்று கவலை கொண்ட பெண் ; பிரிவினைக்குப் பின், இருபத்தியிரண்டு வயதில், ஐந்து சகோதரிகளும் ஐந்து சகோதரர்களும் கொண்ட தன் குடும்பம் பிழைக்க ஏதேனும் ஒரு வழி தென்படாதா என்று பம்பாய் தெருக்களில் தன் சகோதரனுடன் அலைந்து திரிந்த பெண் ; ஆராய்ச்சிக்கூடத்தில் அலுப்பே கொள்ளாமல் உழைத்த ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானி; அறிவியல் அறிவு மூலமாக தான் அறிந்து கொண்டதெல்லாம் புறவுலகம் பற்றியதுதான் என்பதால் சுயத்தின் தன்மையை அறிய முயலும் ஒரு சந்நியாசி – சாந்தூ குர்னானியின் கதையிலிருந்து உருவாகும் பலமும் உறுதியும் கொண்ட பிம்பங்கள் இவை. இந்த வாழ்க்கைக் கதையிலிருந்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் பெண்களின் கல்வித் தேர்வு பற்றியும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிவியல்துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் நாம் அறிகிறோம்.

“பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுக்காரங்களுக்கு மட்டும் மரியாதெ செய்யுது?”

This entry is part 4 of 10 in the series கி.ரா. - அ.ரா.

புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தமிழ்த்துறைக்குக் க.நா.சுப்பிரமண்யம், கி.ராஜநாராயணன் போன்றோரை வருகைதரு பேராசிரியராக அழைத்தது போல சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியிலும் ஒருவரை அழைக்கலாம் என்ற பேச்சு வந்தது. அப்போது உடனடியாக நினைவில் வந்த பெயர் பிரபஞ்சன். நாடக இலக்கியம் என்றொரு தாள் ஒவ்வொரு பருவத்திலும் உண்டு. செவ்வியல் நாடகங்கள் வரிசையில் இந்திய நாடகங்கள், ஐரோப்பிய நாடகங்கள், நவீன இந்திய நாடகங்கள் என அத்தாள்களுக்குப் பெயர். இந்த த்தாள்களில் ஒன்றிரண்டைப் பாடம் சொல்வதற்காக அவரை அழைக்கலாம் என்று பேசினோம். தமிழ்நாட்டில் நடந்த பாதல் சர்க்கார் நாடகப்பட்டறையில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர் அவர். அந்த உத்வேகத்தில் அவர் எழுதிய முட்டை, அகல்யா என்ற இரண்டு நாடகப்பிரதிகளும் கவனிக்கத்தக்க நாடகங்கள் தான் என்று சொன்னேன்.

புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து

This entry is part 21 of 72 in the series நூறு நூல்கள்

ஆசிரியரின் முதல் கதையும் அவரது சொந்த அனுபவத்தை வைத்து எழுதியதும் என்று சொல்லப்பட்ட ‘விடிவு’, தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. நண்பர்கள் பைக்கில் செல்லும்பொழுது, ராஜா என்பவன் லாரியில் அடிபட்டு இறந்துவிடுகிறான். அவன் சடலத்தை இறந்தவன் வீட்டில் ஒப்படைக்கும்பொழுது எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை சஸ்பென்சாக வைத்து, கதை நகர்கிறது. ஏமாற்றுபவன், திருடன், காமக்கண்ணோடு பார்ப்பவன், சொல்வதொன்று செய்வதொன்று என்று நடமாடுபவர்கள், அப்பாவிகள் இருக்கும் கதைகள் உள்ள தொகுப்பில், மானுடத்தில் அன்பு மிச்சமிருக்கிறது என சொல்ல ஒரு எளிமையான கதை.

கி.ரா – நினைவுக் குறிப்புகள்

This entry is part 2 of 10 in the series கி.ரா. - அ.ரா.

இதே தன்மையில் உருவானதல்ல கதைசொல்லி என்னும் கலைச்சொல். Performance, Narrative என்ற இரண்டு ஆங்கிலச் சொற்களை அரங்கியல் பலவிதமாகப் பயன்படுத்தத் தொடங்கிய நவீனத்துவ காலகட்டத்துக் கலைச்சொல் சொல்லுதலை நிகழ்த்துதலாக மாற்றிய காலகட்டத்தின் தேவையை உணர்த்தும் சொல். நிகழ்த்துதல் கோட்பாடு..
என்னும் அரங்கியல் சிந்தனையின் வழியாக இலக்கியவியலுக்குள் நுழைந்த அச்சொல்லுதலின் தீவிரம் எல்லாவற்றையும் நிகழ்த்துதலாக்க நோக்கத்தோடு இணைத்தது. நிகழ்த்துதலுக்கேற்ப சொல்லப்படும் மொழியின் பண்புகளும் அடுக்குகளும் மாறவேண்டும் என்று வலியுறுத்தியது.  

சமேலி, சுந்தரி, சீனா

சமேலிக்கு திருமணமாகி, அவள் தன் சிறு சாம்ராஜ்யத்தை நிர்வாகிக்கச் சென்றபிறகு வந்தவள் சுந்தரி. பெயருக்கேற்ற அழகி. அம்மன் சிலை போல கருப்பாக இருந்தாலும், வாட்ட சாட்டமான உடல் வாகு கொண்ட அழகி. …தேர்தல் சமயத்தில், ராஜேஷ் கன்னா வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்த போது, இவளது கணவன், நீ வெளியே போகக்கூடாது என்று இவளிடம் சத்தியம் வாங்கிக்கொண்டானாம். எங்காவது ராஜேஷ் கன்னா என்னை பம்பாய் அழைத்துக்கொண்டு போய்விட்டால், தானும் குழந்தைகளும் என்ன செய்வது என்கிற பயம்தான் பீஜி என்றாள் சிரித்தவாறு.

கி ரா : நினைவுகள்

This entry is part 1 of 10 in the series கி.ரா. - அ.ரா.

இளங்கலையில் முதல் இடம் பிடித்ததற்காக அந்த ஆண்டு கல்லூரி விழாவில் பரிசு கொடுப்பார்கள். மீனாட்சி புத்தக நிலையம் சென்று 30 ரூபாய்க்குள் நூல்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுப் போனார் பேரா.கி.இளங்கோ. அதற்கான ஒரு சீட்டும் கொடுத்தார். அதனை எடுத்துக் கொண்டுபோய் கிராவின் கிடை, பூமணியின் ரீதி, ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் வாங்கிக் கொண்டுவந்தேன். எனக்கேயான புத்தகங்கள் என்று வாங்கிய முதல் மூன்று புத்தகங்கள் அவை

குருதி

வழக்கமாக மடிததுக் கட்டிய மல் வேஷ்டியும் முண்டும் துண்டுமாகததான் அறவே மேக்கப் இல்லா சேட்டன்களும் சேச்சிகளும் இன்னமும் பச்சைப் பசேல் கேரளத்துக் கொல்லைகளிலும் காடுகளிலும் திரிகிறார்கள்.  ஆனாலும், கதை என்கிற ஒரு வஸ்துவை மட்டும் தீர்க்கமாக அவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அதில் அவர்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. கதையோட்டத்தைத் தடை செய்யும் பாட்டுகளையும் அறவே குறைத்துக்கொண்டு வருகிறார்கள்…. கிறித்துவ வெறித்தனமோ, இஸ்லாமிய பயஙகரவாதாமோ, ஹிந்துதுவ ரஸவாதமோ, எதுவாக இருந்தாலும் கதை தான் ஆணிவேர்.

ராஜாவின் கீதாஞ்சலி

இளையராஜா, ’கீதாஞ்சலி’ என்ற ஒரு தனிப்பட்ட இசை வெளியீடு ஒன்றைச் செய்துள்ளார். அதைப் பற்றியது அல்ல இந்தக் கட்டுரை. என்னைவிட அழகாக இந்த இசை வெளியீட்டை விமர்சிக்கப் பலர் உள்ளனர். திரையிசையமைப்பாளராக இருந்தும், எப்படியோ எனக்கு கீதையைப் புரிய வைத்து விட்டவர் இளையராஜா. எதற்கு கீதையைப் புரிந்து கொள்ள “ராஜாவின் கீதாஞ்சலி”

ஒரு கோப்பை தேநீரில் சுழலும் உலகம்

காபியைப் பற்றிய சுவைபொங்கும் கட்டுரைகளைப் படித்திருக்கிறோம். ஆனால் நான் காஃபிப்பிரியை அல்ல! தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும், குடும்பமே காஃபிப் பிரியர்களானாலும் எங்கள் பெற்றோர் என்னவோ குழந்தைகளை அவர்களுக்குப் பதினைந்து வயதுவரை போர்ன்விட்டா அல்லது ஓவல்டின் கொடுத்துத்தான் சமர்த்தாக வளர்த்தார்கள். பின் கல்லூரிக்கும் ஹாஸ்டல் எனப்படும் விடுதிகளிலும் தங்கிப்படித்தபோதும்கூட ஏனோ காஃபிமீது “ஒரு கோப்பை தேநீரில் சுழலும் உலகம்”

கிண்ணத்தை ஏந்துதல்

பல வடிவங்களில் இருக்கும் வைன் கோப்பைகளின் வசீகர வடிவம் அந்த பானத்தை ரசித்து ருசிப்பதற்கான் காரணங்களில் முக்கியமானதாகி விட்டிருக்கிறது…கோப்பைகளின் விளிம்பு எத்தனை மெல்லியதாக உள்ளதோ அத்தனைக்கு வைனை  ஆழ்ந்து ருசித்து அருந்தலாம்., விளிம்புகள் கூர்மையாக இல்லாமல் மென்மையாக்க பட்டிருப்பது வைனை நாவில் எந்த இடையூறுமின்றி சுவைக்க உதவுகின்றது. கிண்ணப்பகுதியை கைகளால் பற்றிக்கொள்கையில் உடலின் வெப்பத்தில் வைனின் சுவை மாறுபடலாம் என்பதால் கோப்பைகளை எப்போதும் தண்டுப்பகுதியை பிடித்தே கையாள வேண்டும்.

குரூப்ல கும்மி

அநேகமாக நாம் அனைவரும் ( அது என்ன, அநேகமாக, கண்டிப்பாகவே) ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அலைபேசி தகவல் பரிமாற்ற செயலிகளில் (வாட்ஸ்அப், டெலிகிராம்) ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குரூப்புகளில் இணைக்கப்பட்டிருப்போம்.(நாமாக எங்கே சேர்ந்தோம்). தாமாக கேட்டு இணைந்த தியாகிகளும் உண்டு. இதில் இரண்டு மொபைல் போனுடண், “குரூப்ல கும்மி”

பாலுவை அரசியலில் சேர்த்தவர் எங்கப்பா!

போன வாரம் பாடும் நிலா பாலுவின் 75 –வது பிறந்த நாள். இந்தக் கட்டுரையின் காலகட்டம், அவருக்கு இந்தப் பெயர் வருவதற்குப் பல்லாண்டுகள் முன்பானது. அதாவது, அவருடைய ஆரம்ப வருடங்கள் – 1965 முதல் 1975 வரை. எங்கப்பா ஒரு தீவிர எம்.எஸ்.வி, மற்றும் சிவாஜி ரசிகர். அவருக்கு “பாலுவை அரசியலில் சேர்த்தவர் எங்கப்பா!”

ஆணின் அன்பு

இது நடந்து 6 வருடங்கள் கழித்து கோயம்புத்தூர் செல்லும் பஸ்ஸில் அவரை பார்த்தேன். கண்டுகொண்டு பேசினார். “சரிங்க சார் கெளம்பறேன்” என்ற போது “இப்போ ஒடம்பு எல்லாம் பரவால்லயா” என்று கேட்டார். நான் ஒரு நிமிடம், நல்லாதான இருக்கேன் என்று நினைத்துக்கொண்டு விழித்தேன். “அங்க காலேஜ்ல இருக்கும் யோது வயத்துவலி இருந்துதே, இப்போ பரவால்லயான்னு கேட்டேன்” என்றார். நான் பதில் சொல்வதற்குள், “அன்னிக்கு எனக்கு வலிச்ச மாதிரி இருந்துச்சு போங்க” என்று அவர் சொன்ன போது அவரின் கண்ணாடி க்ளேரை தாண்டி அவர் கண் நிறைந்ததை கண்டேன்.

காடு

This entry is part 2 of 2 in the series காடு

நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப் படத்திற்காக மூன்று மாதங்களாக இங்கேயே இருக்கிறாராம். வாட்டிய ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டுவிட்டுப் ஃப்ளாஸ்க்கில் கருப்புக் காபியுடன் வந்தால் மாலைதான் அறைக்கு திரும்புவது, சில சமயங்களில் இரவிலும் காத்திருக்கிறாராம். அவரின் இந்த அர்ப்பணிப்பு வியப்பை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியில் விலங்குகள் குறித்த ஆவணப் படங்களை ஒரு நொடியில் மாற்றி அடுத்த சேனலுக்குத் தாவியிருக்கும் பலநூறு சந்தர்பங்களை எண்ணி வெட்கினேன்.

காடு

This entry is part 1 of 2 in the series காடு

பொங்கல் விடுமுறை 5 நாட்கள் என்று அறிவிக்கப்பட்டதும், கர்நாடகாவின் கபினி வனப்பகுதியின் ‘’Ghost’’ என அழைக்கப்படும் கருஞ்சிறுத்தையை காண வேண்டுமென பலநாட்களாக காத்துக்கொண்டிருக்கும்  கானுயிர் புகைப்படக்காரனான இளைய மகன் தருணின் பொருட்டும் அங்கிருக்கும் காட்டுமரங்களின் முதலைமரப்பட்டைகளையும் ( Crocodile bark ), அங்கு அதிகமாக வளரும் தந்தப்பாலை செடிகளையும் “காடு”

கல்கத்தா புத்தகக் கண்காட்சி: 2020

2020 கொல்கத்தா புத்தகச்சந்தைக்கு 44வது ஆண்டு. புத்தகச் சந்தையில் தரை மேவப்பட்ட மைதானத்தில், சில கூடாரங்கள், தெரு ஓரக்கடைகள் என்ற இரு மாதிரிகளில் கடைகள் உருவாக்கப்படுகின்றன. கட்டண வேறுபாடு உண்டு. தெருவோரக்கடைகளில நிரந்தரக் கடைகள் போல ஒவ்வொன்றிற்கும் பாதுகாப்புக்கு கிரில் கதவுகள் வைத்து உருவாக்கப்படுகின்றன.

பரோபகாரம் – தன்னார்வுலா

This entry is part 3 of 5 in the series பரோபகாரம்

பிறருக்கு உதவுவது என்றால், பணத்தை நன்கொடையாகக் கொடுப்பது மட்டும்தான் என்பதில்லை. சிரமதானம் என்று சொல்லப்படும் உழைப்பை நன்கொடையாகக் கொடுக்கும் வழக்கு, நாலு பேருக்கு இலவசமாகச் சாப்பாடு போடுவது, கிட்னி / ரத்தம் / கண் தானம், அறிவுரை / புத்திமதி போன்றவை வழியாகப் பிறருக்கு வாழ்வில் முன்னேறச் சரியான “பரோபகாரம் – தன்னார்வுலா”

பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி

1. உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா? என் அப்பாவுக்குச் சொந்த ஊர் கரூருக்கு அருகில் உள்ள வாங்கல் கிராமம்.  என் அம்மா பிறந்தது வெங்கரையில். நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். பள்ளிப் படிப்பு தி.நகரில்  உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (வடகிளை)யில். பிறகு கல்வி லயோலா “பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி”

நானன்றி யார் வருவார்….

மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி  சபரீஸ் ஹோட்டலில் ‘ஆர்டர்’ செய்து விட்டுக் காத்திருந்தபொழுது, ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை…..’ என்று மனதுக்குள் காலையிலிருந்து பாடிக்கொண்டிருந்த வாணி ஜெயராம் திடீரென்று ஆம்பிளைக் குரலில் வெளிப்பட்டுவிட, எதிரே பிரும்மாண்டமான சோலாப்பூரிக்குப் பின்னிருந்து தலையைத் தூக்கி ‘தர்பாரி கானடா?’ என்றவரின் முகம் இன்னும் “நானன்றி யார் வருவார்….”

ஃபிலிப் லார்கின்: சாதாரண உன்னதம்

லார்கின் படைப்புகளில் இரு நிலையான சரடுகளைக் காண முடிகிறது, அவற்றுக்கு இடையிலான முரணியக்கம், அவரது கவிதைகளுக்கு ஒரு தனிச்சுவை அளிக்கிறது: ஹார்டிய “இங்கேயே இப்போதே” என்ற இருப்பும், யேட்ஸ்சிய காலாதீதத்தன்மை என்ற இரண்டும் அவரது முதிர்ந்த கவிதைகளிலும்கூட தொடர்ந்து தென்படுகின்றன.

இயந்திரச் சிக்கல்கள் – விளாதிமிர் அலெக்ஸீவ்

விளாதிமிர் அலெக்ஸீவ் என்ற தரவிதழாளருக்கும் OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட GPT-3 எனப்படும் மொழி உருவாக்கிக்கும் இடையே நடந்த ஓர் உரையாடலிலிருந்து சில பகுதிகள். இணையத்தில் உள்ள தரவுகளை அலசுவதன் வழியாக GPT-3 தனது செயற்கை நுண்ணறிவை வளர்த்துக் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பழகியுள்ளது.

யாருக்கு இந்த துணிச்சல் வரும்?

பதினாறிலிருந்து பத்தொன்பது வயதிற்குள் மெக்ஸிகோ நகரத்தில் திருடியவையும்  எனக்கு இருபது வயது இருக்கும்போது ராணுவப் புரட்சி தொடங்கிய முதல் சில மாதங்களில் சீலேவில் வாங்கியவையுமே  என் நினைவை நீங்காத புத்தகங்கள்,. மெக்ஸிகோவில் ஒரு அபாரமான புத்தகக்கடை உள்ளது. அதன் பெயர் “கண்ணாடி புத்தகக் கடை”. அது அலமேதாவில் இருந்தது. “யாருக்கு இந்த துணிச்சல் வரும்?”

தேர்தல் சடுகுடு…இது அமெரிக்க ஸ்டைல்

நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் 24 மக்கள் பிரதிநிதிகளும், 9 கட்சிப் பிரதிநிதிகளும் இருக்கின்றனர். இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவை முழுமையாகப் பெறுவார்கள். அதிபர் தேர்தலுக்கு ஒன்பது மாதங்கள் இருக்கும் நிலையில் இந்த ஆரம்ப கட்ட ப்ரைமரியில் நம்பிக்கையான வேட்பாளர்கள் அடையாளம் காட்டப்படுவார்கள் என்பதாலும், அடுத்தடுத்து நடைபெறும் ப்ரைமரிகளில் அவர்கள் எவ்வாறு செயல் படுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இறுதி நிலவரம் தெரியவரும்.

பயணப்படியும் பரலோகப் பயணமும் பின்னே பஸ் ஆல்டரினும்

மனிதன் நிலவில் காலடி வைத்தது 1969 ஆம் ஆண்டு. இவ்வருடம் அந்நிகழ்வு நடந்து ஐம்பது வருடங்கள் ஆனதால் அது குறித்து ஏராளமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிலவுக்கே போய் வந்தாலும் நம் அரசு அலுவலங்களின் சிகப்பு நாடாவில் இருந்து தப்ப முடியாது என்ற ஒரு கட்டுரை மிக சுவாரசியமானது.

அம்பையின் முறியாத சிறகுகள்

சமூகத்தில் பெண்ணின் நிலையை இவ்வளவு தெளிவாக முன் வைக்கும் அம்பை தான் எக்காலத்தும் தன்னை ஒரு பெண் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தப்படுவதை எதிர்த்தே வருகிறார். பெண் எழுத்தாளர்களில் சிறந்த எழுத்தாளர் அம்பை என்ற அடையாளத்தில் இருக்கும் நுண் அரசியலையும் அம்பை மிகத் தெளிவாக அறிந்திருக்கிறார். அதனால் தான் ஆண் பெண் அடையாள மறுப்பை ஏற்ற மகாபாரதக் கதைப் பாத்திரமான அம்பை என்ற கதைப்பாத்திரம் அம்பைக்கு மிகவும் நெருக்கமானதாகிறது.

பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்

பெண் எழுத்து குறித்தும், பொதுவாகப் பெண்களைக் குறித்தும் இருக்கும் இந்த நோலாமை தமிழ் இலக்கிய விமர்சன மரபிலும், தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு தொடர் கண்ணியாக இருந்து வருகிறது. கல்வியை, உரிமைகளை, வெளிப்பாட்டுக்கான நியாயமான இடத்தைக் கோரும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள், அந்தக் குறைபாடுதான் அவர்களை எல்லா வகையிலும் செயல்படத் தூண்டுகிறது என்ற எண்ணம் பல காலமாக இருந்து வருவதுதான். இந்தக் குறைகள்தான் என்ன? அழகின்மை, தோற்றப் பொலிவின்மை, ஓர் ஆணின் துணையின்மை, பெண்களுக்கு இருக்கக் கூடாத அதீத காம இச்சைகள் இவைகள்தான் பெண்களை இயக்கும் அடிப்படையான குறைகள்/காரணங்கள் என்ற கருத்து தொடர்ந்து நிலவி வருகிறது. அத்தனையும் பெண் உடல் மேல் கட்டப்பட்டவை.

அடவியும் அந்தேரி மேம்பாலமும்..

சுய புலம்பல்களும்,தன்னிரக்க வெளிப்பாடுகளும் மட்டுமே பெண் எழுத்துக்கள் என்ற போக்கை மாற்றிப் பெண் தனது உண்மையான சுயத்தை உணருவதே பெண்ணியம் என்பதைத் தன் புனைவுகள்,மற்றும் கூரிய சமூக ஆய்வுகள் வழியே முன்வைத்து நவீன பெண்ணியத் தமிழ்ப்படைப்புக்களின் திசைதிருப்பியாக விளங்கியவர் அம்பை

குக்கூவின் மாய யதார்த்த வாழ்க்கை

அந்த அமர்வு மூத்த பெண் எழுத்தாளர்களின் எழுத்துலகு பற்றியது. முதலில் மிருணால் பாண்டே பேசினார். பலரும் அறிந்த ஹிந்தி எழுத்தாளரான அவர் தாய் சிவாணியைப் பற்றிப் பேசாமல் எந்த நிகழ்வையும் மிருணால் பாண்டே தொடங்க மாட்டார். அன்றும் தன் தாயாரைக் குறிப்பிட்டுவிட்டு, தான் சிறு பெண்ணாக இருக்கும்போதே மாகாஸ்வேதாதேவியின் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் அவர் தாயாரிடம் வந்ததாகவும் அப்போதே அவரைத் தெரியும் என்றும் அவர் தனக்கு மகாஸ்வேதாதேவி மௌஸி (சித்தி) என்றும் கூறிய பிறகு ஹிந்தியின் மூத்த பெண் எழுத்தாளர்கள் பற்றிச் சுவையாகப் பேசினார். அடுத்து நான் பேசும்போது மூத்த எழுத்தாளர்கள் பத்திரிகைகள் நடத்தியது குறித்துப் பேசும்போது, வீட்டு வேலை, சமையல் இவைகள் எல்லாவற்றையும் செய்து இலக்கியத்துக்கும் வாழ்க்கையில் இடம் அளிக்க முயன்றார்கள்…

ஞாபகக் காற்று

அம்பை தமிழின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவர் தீவிரமான பெண்ணியவாதியானாலும் அழகியலோடு விளங்குபவை அவர் கதைகள். என்னைப் பொருத்து பெண்ணிய எழுத்தோ அல்லது வேறு விதக் கோட்பாட்டு எழுத்தோ வீரியமாக இருக்க அழகியலைத் துறந்தாலும் தவறில்லை. அம்பையிடம் இரண்டும் இயைந்து வந்தன

அணில் கட்டிய பாலம் ஒன்று

கோட்டையூரில் ரோஜா முத்தைய்யா வீட்டைக் கண்டு பிடிப்பதில் எந்தவித சிரமமும் இருக்கவில்லை. அந்தச் சிறிய ஊரில் அவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கவில்லை. பேருந்தின் நடத்துனரே என்னிடம் முத்தைய்யா அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு நான் போகிறேனா என்று விசாரித்திருந்தார். அவர் வீடு பல ஆராய்ச்சியாளர்கள் வந்துபோகும் இடமாக இருந்தது போலும். நான் வருவது குறித்து முன்பே எழுதியிருந்ததால் பழங்கால வீட்டின் நீண்ட தாழ்வாரத்தை அடுத்த பெரிய் முன்னறையில் கீழே தரையில் அவர் அமர்ந்திருந்தார்.
“வாங்கம்மா” என்று வரவேற்றார்.

சந்தையில் புத்தகங்கள்

புத்தகங்கள் நிறைந்திருக்கும் கடைகளூடே நடப்பது மனத்துக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. பல புத்தகங்களை வாங்கவும் முடிந்தது. அதைப் படிக்கும் உற்சாகமும் இன்னும் இருக்கிறது. செவிக்குணவாக ”என் தமிழ்த் தாயே” என்ற கூச்சலும் விடாமல் கேட்டது வெளி அரங்கிலிருந்து….“எங்க வீட்டுல எங்க பாட்டியும் அம்மாவும் உங்களை விரும்பிப் படிப்பாங்க. நீங்க ஆப்ரிக்காவிலிருந்து எழுதின கதைகள் பிரமாதம்னு சொன்னாங்க” என்று கனிவுடனும் “உங்க ’சமையலறை மூலையில்’ கதை அற்புதம். நிறைய எழுதுங்க. இப்போ எழுதறீங்கதானே?” என்று அக்கறையுடனும் “உங்க ‘கொலை செய்துவிட்டாள் அம்மா’ என்னை ரொம்ப பாதிச்சுதுங்க” என்று நெகிழ்ச்சியுடனும் சொல்லும் பல வாசகர்களை ஒருசேரப் புத்தகச் சந்தைகளில்தான் ஒவ்வோர் ஆண்டும் பார்க்க முடிகிறது.

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது

தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியுடனான தன் அனுபவங்களை விவரிக்கிறார் ஏகாந்தன்

அஞ்சலி: ஆனியெஸ் வர்தா

நேற்று என் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவு என்னைத் துயரிலாழ்த்தியது. ஃபிரெஞ்சு சினிமாவின் முதுபெரும் மேதை ஆனியெஸ் வர்தா மறைந்த செய்தி குறித்த தன் வருத்தத்தை அவர் எழுதியிருந்தார். இந்த மேதையின் திரைப்படங்களில் எனக்குப் பிடித்த படங்கள் குறித்த நினைவுகள் கிளர்ந்தெழுந்தன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் “அஞ்சலி: ஆனியெஸ் வர்தா”

‘வட திசை எல்லை இமயம் ஆக!’

கண்கொட்டுதல், இமையாடுதல் என்றோம். இமையாடாமல், கண் சிமிட்டாமல், கண் கொட்டாமல், கண்ணிமைக்காமல் பார்த்தான், அல்லது பார்த்தாள் என்கிறோம். இமைப்பொழுது என்றால் கணம் அல்லது குறுகிய கால அளவு. உறங்கிப் போதலை, இமை பொருந்துதல் என்றோம். கண் இதழ்கள் சேர்தலே இமை கொட்டுதல். இமைப்பளவு என்றாலும் கண்ணிமைப் பொழுதே! சீவக சிந்தாமணி, இமைப்பளவைக் குறிக்க, ‘இமைப்பு’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. இமைப்பு எனும் சொல்லுக்கு dazziling, brilliance, விளக்கம் ஆகிய அர்த்தங்களும் உண்டு.

தேரோடும் வீதி…

வடம் போக்கித் தெரு…! கெட்டித்து போன கால உருளையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு தெரு…தெரு என்றாகி, அதற்கொரு பெயர் சூடி சில‌ நூறாண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் அதன் கீழிருக்கும் மண்? மலையத்துவஜனும் காஞ்சனமாலையும் சுந்தரவல்லியை பெண்ணாய் பெறும் வேள்வியை செய்யக் கடந்து போயிருக்கக் கூடிய தெரு…அச்சுந்தரவல்லி, மும்முலை அரசியாய் கயிலை நோக்கி படைதிரட்டி சென்றிருக்கக் கூடிய தெரு…அங்கு நாயகனை கண்ட நாணத்தில் ஒரு முலை மறைந்து இருமுலை குமரியாய் திரும்பியிருக்கக் கூடிய தெரு…”மனமகிழ் துங்குநர் பாய்புடன் ஆடச் சுனைமலர்த் தாதுதும் வண்டுதல் எய்தா” பரங்குன்றம் நோக்கி பலர் சென்றிருக்கக்கூடிய தெரு…”பொன்தொழில் சிலம்பொன்று ஏந்திய கையள்

ஓ ரசிக சீமானே…

இளவட்டங்கள் துண்டை ஹாண்டில்பாரில் கட்டிக்கிட்டு குளிர எண்ணெய் தேய்ச்சுகிட்டு ஒரே சைக்கிளில் மூன்று பேர் கூட செல்வதுண்டு. படிப்படியாக ஆத்துக்கு செல்வது குறைந்தது. யாராவது இறந்தால் கருப்பந்துறைக்கு(சுடுகாடு) போய் பின் ஆத்தில் குளித்து வருவது என்பதும் போய் இப்ப நேரே வீட்டுக்கு வந்து வெந்நீர் குளியல் (மாப்ள, உடம்புக்கு ஒத்துக்கிடமாட்டேங்குலா) என்றாகி போனது.

படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்: வி.எஸ். நைபால்

தன்னை தொடர்ந்து மீண்டும் புதிதாய்ப் படைத்துக் கொள்ளும் தேவை தீக்கங்கு விரல்களாய் அவரைத் தீண்டுவது நிற்கவில்லை, அவரது சுடர்மிகு அறிவு, “தன் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்துவது,” அதுவொன்று மட்டுமே அவருள்ளத்தில் தன்னைச் சூழ்ந்திருந்த வேடிக்கை மனிதர்களிடமிருந்து அவரைப் பிரித்துக் காட்டியது. நம் இளைஞன் ஒரு துயர் தன் இதயத்தில் கவிவதை உணர்கிறான், ஆயினும் அலையொன்று அவனைச் சாடி நனைக்கிறது, ஏதோ ஒரு உன்னதம் தன்னைத் தொட்டாற்போல் இருக்கிறது. நைபாலின் பிஸ்வாஸ் போல், அவரும், மார்க்குஸ் அவுரேலியஸின் மெடிடேஷன்களை ஸ்லம்பர்கிங் மெத்தையில் படுத்திருந்தபடி வாசித்து ஓய்வெடுக்கலாம், என்று அவன் ஆறுதல் சொல்ல விரும்புகிறான், உறவினர் விஷயத்தில் அந்தப் புத்தகம் ஃபைன்மேனின் ‘லெக்சர்ஸ் ஆன் பிசிக்ஸ்’ ஆக இருக்கக்கூடும். ஆனால் இது அத்தனையிலும் தன்னிரக்கத்தின் நெடி சிறிதளவு வீசுவதையும் உணர்ந்து, “உள்ளபடியே உள்ளது இவ்வுலகம்,” என்ற மாபெரும் துவக்கத்துக்குப் பின் ‘பெண்ட் இன் தி ரிவர்’ நாவலில் வருவது, “ஒன்றுமில்லாதவர்கள், தாம் ஒன்றுமில்லாமல் ஆக அனுமதித்தவர்கள், அவர்களுக்கு அங்கு இடமில்லை,” என்ற சொற்கள் என்பதை நினைவுகூர்கிறான். அதையொட்டியே அவனும் தன் உறவினரிடம், “கனவு காண்பது போதாது, செயல் புரிய வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறான்

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – இறுதி பாகம்

என் தந்தை யானை போன்ற நினைவாற்றல் கொண்ட சான்றோர். என் அன்னை அன்பும் இலக்கிய நுகர்வும் கொண்டவர். இது போன்ற பெற்றோர் சங்கீதத்தில் தோய்ந்த உறவினரும். இவற்றிலிருந்து கிளைத்தெடுத்த நான் இவற்றில் எவைகளை ஸ்வீகரித்தேன் என்பது விளங்காத விஷயம் தான். தவிர என் தந்தையை முந்தைய தலைமுறை எவ்வெவற்றைக் கொண்டிருந்தார்கள் என்று அனுமானிக்கிற நிலையில் நான் (அவர்களையெல்லாம் பிரத்யட்சமாய்ப் பார்க்காததால்) இல்லை. இப்படியிருக்கும் போது ஆதித்யா யாரிடமிருந்து எவ்வெவற்றை ஸ்வீகரித்தான்…

புதுமைப் பித்தனின் ‘செல்லம்மாள்’ – ஒரு வாசிப்பனுபவம்

செல்லம்மாளைச் சார்ந்து வாசிப்பது ஒரு பார்வை. அதோடு இந்தக் கதை குறுகிவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை. பின் எதற்கு பிள்ளை நடையாய் நடப்பதையும், பழஞ் சோற்று மூட்டையையும், அவரின் பெருமூச்சையும் எழுத வேண்டும். இயங்களை மீறி மனிதநேயம் சார்ந்த வாசிப்புக்காக எழுதப்பட்ட கதையாக எனக்குத் தோன்றுகிறது. புதுமைப்பித்தன் கசப்புகளைக் கிண்டல்களாக மாற்றியவர். அவர் நம்பிக்கைவாதியில்லை என்றெல்லாமில்லை அதைத்தாண்டி மனிதமனதை எதிர்திசையில் இருந்து நேயம் நோக்க அங்குசம் குத்தியவர்.

யாதும் ஊரே, யாவரும் கதை மாந்தர்

“மகா பாரதத்தில் போர்க் காட்சிகளைக் காணவியலா திருதராட்டினனுக்கு சஞ்சயன் போல,” பல நாடுகளுக்கும் போக வாய்ப்பில்லாதவர்களுக்கு, தான் வசித்த நாடுகளில் தாம் கண்டதையும், அனுபவித்ததையும் சுவையான கதைகளாக காட்சிப் படுத்திக் கொண்டே போகிறார். ஒரு கதை சொல்லியாய் இருப்பது மற்ற படைப்புத் தொழில்களை விட சிரமம் வாய்ந்தது. ஒவ்வொரு கதையும் மற்றவர் தொடாத ஒரு விசயமாகவும், புதிய மொழியாகவும் இருக்கவேண்டும். இச்சிரமத்தை வென்று 140-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல கட்டுரைகள், சில நாவல்கள், மற்றும் உலக எழுத்தாளர்களிடம் சுவையான நேர்காணல்கள் என்று 60-ஆண்டுகளில் இவர் தொட்டிருக்கும் தளங்கள் இதுவரை வேறு எவருக்கும் வாய்க்காதது. அவற்றிலிருந்து சிலவற்றை இங்கே சில நிமிடங்களில் சொல்ல முயல்வது…

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 8

அத்யாயம் 25 இந்த சமயத்தில் பல்வேறு சபாக்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வழங்கும் விருதுகளைப் பற்றியும் பரிசுகளைப் பற்றியும் சொல்ல வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட ராகங்களில் நன்கு தயார் செய்து கொண்டு வருவார்கள். அந்த ராகங்களிலேயே அவர்களைக் கேள்விகள் நிகழ்ச்சியின் நடுவர்களாகிய வித்வான்கள் கேட்கும்படியான ஏற்பாடு அவர்களுக்குள் உண்டு போலும் “தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 8”

டார்ச்லைட் வெளிச்சத்தில் சிறுகதை வாசித்தல்

குழுமத்தில் சில சிறுகதைகள் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது பேசப்பட்ட சிறுகதை குறித்து நண்பர் ஒருவர், “இந்தக் கதையின் மையம் எதுவென்று வைத்துக் கொள்வது?” என்று கேட்டார். “பெண்கள் வைத்துக் கொள்ள வேண்டுவது கிடைப்பதேயில்லை,” அல்லது, “வைத்துக் கொள்ள வேண்டிய அளவு கிடைப்பதில்லை,” அல்லது, “வைத்துக் கொள்வது விரும்பிய வகையில் வாய்ப்பதில்லை,” என்ற ஒன்றை, அல்லது இது எல்லாவற்றையும் சொல்ல வரும் கதை அது, என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்போது, சிறுகதைகள் குறித்து யோசிப்பதில் நிறைவு காண்பது விட்டுப்போய் பல காலம் ஆகிவிட்டதையும் உணர்ந்தேன்.

ஒரு துளி ஒரு நதி ஒரு கடல்

ஓஷோவின் உரைகளை, அவரது குரலில், அறையின் மென்வெளிச்சத்தில், கண்களை மூடி நெடுநேரம் கேட்டுக்கொண்டிருப்பது என் வழக்கம்; அந்த அற்புதமான பரவச மணித்துளிகள் என்னில் உண்டாக்கும் நெகிழ்வு, மாற்றம், சலனம், உணர்வு, போதை… வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு முன்னிரவில் படிப்பறையின் விளக்கை அணைத்துவிட்டு ஓஷோவின் ஏதோ ஓர் உரையைக் கண்களை மூடிக் கேட்டுக்கொண்டிருந்தேன். நேரம் கடப்பதை அறிந்திருக்கவில்லை; ஒன்றிரண்டு மணிநேரம் ஆகியிருக்கலாம். அந்த குரல் மனதை என்னவோ செய்திருந்தது. கண்கள் பனித்திருந்தன. உரையின் முடிவில் ஓஷோ “உங்கள் காதருகில் அந்தப் பெருங்கருணை தென்றலாய் மிக மெல்லிய ஒலியோடு கடந்துசெல்கிறது; உங்களுக்குக் கேட்கிறதா?” என்று கேட்டு “இன்றைக்கு இது போதும்” என்று முடித்தார். அவ்விருட்டிலேயே, அதன்பின்னான அமைதியில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேனோ தெரியவில்லை.

அப்பா அன்புள்ள அப்பா…

சென்னையில் வசித்தபோதும் சரி, இங்கிலாந்து வசிக்கச் சென்ற போதும் சரி, விடுமுறைக்கு ஈரோடு வரும் போதெல்லாம் இரவுகளில் கால் பாதங்களில் காயத்திருமேனி எண்ணையை நன்கு அழுத்தித் தடவி விடுவேன். முதலில் முட்டி, பின் படம். தேய்க்க தேய்க்க அப்பா, கால் எரிச்சல் அடங்க, சுகமாக தூங்க ஆரம்பிப்பார். நான் டிவியைப் பார்த்துக்கொண்டே தேய்த்துக்கொண்டிருப்பேன். சில சமயங்களில் “ம், போதும், நீ போய் தூங்கு” என்று மெல்ல கண் திறக்காமல் சொல்வார். சில சமயங்களில் நானாக நிறுத்தியதும் ஓர் தலையசைப்பு. காலையில், “நேற்றிரவு நன்கு தூங்கினேன்” என்று புன்னகை போதுமானதாக இருந்தது. பாதங்களை பார்க்க முடியவில்லை. வேஷ்டியைக் கொண்டு கால்கள் மூடப்பட்டிருந்தன.