ஏதிலி வாழ்வது எப்படி?

இப்படிதான் வளர்கிறது வாழ்க்கை. குடும்பங்கள் விரிகின்றன, பிறரது ஆசிகளும் பொறுப்புகளும் நம்மை நாடி வருகின்றன. நமக்கு வசதியான பிரதேசத்தை விட்டு வெளியேறும்போது, நாம் வளர்ந்த காலத்தில் உண்ட ரொட்டிக்கு மாறாய் வேறொன்றை உண்ணும்போது, பகுத்துணரும் மனப்பான்மை வளர்கிறது. சல்லா, சப்பாத்தி, வெந்நீர் கார்ன்பிரெட், பிடா, இன்ஜெரா, பாகெட்- வேறொரு ரொட்டியை, வேறு வகையில் காரம் சேர்ந்த உணவை உண்பது என்பது எவ்வளவு அற்புதமானது. உன் மொழிக்கு மாறாய் வேறொரு மொழியில் கனவு கண்டு கொண்டிருப்பவன் அருகில் உறங்குவது என்பது எவ்வளவு அற்புதமானது. இந்த திருமண நாள் புகைப்படத்தை நினைத்துப் பாருங்கள்

குடிபுகல் சிக்கல்கள் – சாத்தியமான தீர்வுகள் (குடிபுகல் – பாகம் 1)

குறிப்பிட்ட ஒரு தேசம் அல்லது சமூகத்தில் உள்ள ஒரு சமயக் குழு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, அதனுடன் போட்டியிடும் பிற சமூகக் குழுக்கள் தம்மை அச்சுறுத்துவதாக அவை எளிதில் கருதக்கூடும். அப்படிப்பட்ட அச்சங்கள் நியாயமாய் இருப்பதற்கான போதிய வரலாற்றுச் சான்றுகள் கூட இருக்கவே செய்கின்றன. அமெரிக்காவில் கணிசமான அளவில் வாழும் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட கிறித்துவர்கள் தம் உரிமைகளும் விழுமியங்களும் எப்போதும் ஆபத்தில் இருப்பதாய் உணர்கிறார்கள். நூற்று இருபது லட்சம் பேர் கொண்ட இந்தியாவில் எண்பது சதவிகிதத்தினர் இந்துக்கள். ஆனால் அவர்களில் பலர் தம் சமயம் ஆபத்தில் இருப்பதாய் நினைப்பதோடு எதிர்த்து நின்றுதான் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாய் நம்புகிறார்கள். இது போலவே உலகில் வேறு பகுதிகளில் உள்ள யூதர்கள், முஸ்லிம்கள், மற்றும் பிறர், தம் தேசத்தில் பெரும்பான்மையினராய் இருந்தாலும் பிறரது அச்சுறுத்தலை உணர்கிறார்கள்.

அமெரிக்காவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட குறை வயது கல்யாணங்கள்

தன் பதினொன்றாம் வயதில் ஷெரி ஜான்ஸன் என்பவர் வன்கொடுமைக்கு உள்ளானார். அதனால் கருவுற்றார். அதன் பின் தன்னை வல்லுறவு செய்தவனுக்கே மணம் முடித்து வைக்கப்பட்டார். இந்தப் பழக்கத்தை மாற்ற இப்போது தன் கதையை சொல்லி போராடி வருகிறார் ஷெரி ஜான்ஸன். அமெரிக்காவில் எந்த வயதில் வேண்டுமானாலும் திருமணம் செய்து “அமெரிக்காவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட குறை வயது கல்யாணங்கள்”

அவர்கள் முகத்தின் வியர்வை

இது வரை பிரபுக்களின் படங்களையும் ராணிகளின் ஓவியங்களையும்தான் அருங்காட்சியக கலைக்கூடங்களில் பார்த்திருப்போம். இப்போது “அவர்கள் முகத்தின் வியர்வை” (“The Sweat of Their Face”) என்னும் கண்காட்சியை ஸ்மித்ஸோனியன் (Smithsonian’s National Portrait Gallery) அமைத்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளிகள், அடிமை சிப்பந்திகள், ரயில் வேலையாட்கள், எஃகு தொழிலாளிகள் என “அவர்கள் முகத்தின் வியர்வை”

ஒவ்வொரு நாளும் 69 கொலைகள்: மெக்சிகோ

சென்ற மாதத்தில் மட்டும் 2,371 பேர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று மெக்சிகோ கருதுகிறது. போதை மருந்து கடத்தல், மாஃபியா ஆள் கடத்தல், அரசியல் அதிகார ஊழல் என்று இந்த வருடத்தில் இருபதாயிரத்திற்கும் மேலான கொலை சம்பந்தமான புகார்களின் மேல் புலன் விசாரணையை நடத்தி வருகிறது மெக்ஸிகோ. செய்தி: “ஒவ்வொரு நாளும் 69 கொலைகள்: மெக்சிகோ”

மகரந்தம்

கலிஃபோர்னியாவின் பெர்க்லி நகரில் உள்ள பல்கலையில் ஒரு வகுப்புக்குப் பாடம் நடத்தும் பேராசிரியர் ஒருவர் ‘Desire, Sexuality and Gender in Asian American literature’ என்ற தலைப்போடு ஒரு வகுப்பை நடத்துகிறார்…..வகுப்பு ஆசிய அமெரிக்க இலக்கியத்தில் பால் விருப்பம், பாலடையாளம், பால் பாகுபாடு ஆகியன எப்படிக் கையாளப்படுகின்றன என்பதை விவாதிக்கிறது….பேராசிரியரின் ஒரு முக்கிய உத்தி. மாணவர்களைத் தமது எதிர்காலத் துணை பற்றி அவர்களுக்கு என்ன எதிர்பார்ப்புகள் உண்டு என்று ஒரு பட்டியல் தயாரிக்கச் சொல்கிறார். அவற்றை அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்கிறார். பிறகு அவர்களின் பெற்றோர்களைத் தொலைபேசியில் அழைத்து பெற்றோர்களின் எதிர்பார்ப்பின் படி மாணவர்களின் துணைகள் எப்படி இருப்பது நல்லது என்று அறியச் சொல்கிறார். அந்தக் குணாம்சங்களைப் பட்டியலிட்டு வாங்கிக் கொள்கிறார். இந்த இரு பட்டியல்கள் பற்றிய தம் கருத்துகளை மாணவர்கள் வகுப்பில் பகிர்கின்றனர்.

குளக்கரை

தமிழ்த் திரைப்படத்தில் வரும் பாலியல் வன்முறைக் காட்சிக்குப் பின், ஒரு பஞ்சாயத்து கூடும். அதில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்ணை அதை நிகழ்த்தியவன் மணம் செய்துகொள்ள வேண்டும் என்ற (வழக்கமான) விசித்திரமான தீர்ப்புக் கூறப்படும். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு தீர்ப்பை அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகண நீதிமன்றம் அளித்துள்ளது. பாலியல் வன்முறை மூலம் பிறந்த ஒரு குழந்தையை அதன் தாயோடு, அந்த வன்முறையை நிகழ்த்தி அவளைக் குழந்தைக்குத் தந்தையாக்கியவனும் பராமரிக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. இது தவறான தீர்ப்பு என்றும், தனது கட்சிக்காரரை இரண்டாவது முறையாக சட்டம் தண்டித்துள்ளது என்றும் அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

குளக்கரை

பரிணாம வளர்ச்சியைப் பொருத்தவரை, மலர்களின் பரிணாம வளர்ச்சி எப்போது துவங்கியது என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 140 மில்லியனிலிருந்து 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்பட்டாலும், மலர்களின் படிமங்கள் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் காணப்படவே இல்லை. டார்வின் கூட மலர்களின் பரிணாம வளர்ச்சியைப் புதிராகவே கருதியிருக்கிறார். திடீரென்று பல்வேறு வடிவங்களில் காணப்பட்ட மலர்களின் வளர்ச்சியை ஒரு மர்மம் என்றே அவர் வர்ணிக்கிறார்.

குளக்கரை

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நாடகத்தில் அதிபர் தமது சட்ட மந்திரி போன்ற பதவிக்குத் தேர்ந்தெடுத்த ஒரு நபரை ‘முறைப்படி’ தேர்ந்தெடுக்கக் கூட்டப்பட்ட ஒரு அவையில், பார்வையாளர் ஒருவர் அங்கு இந்த நபரின் ‘நேர்மை, நம்பகத்தன்மை, நியாய உணர்வு’ போன்றன விதந்தோதப்பட்டதைக் கேட்டுத் தன்னை அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார். அப்படிச் சிரித்தது அவையின் ஒழுங்கைக் கெடுக்கச் செய்யப்பட்ட முயற்சி என்று சொல்லி அவரை அவை அதிகாரிகள் கைது செய்து அவர்மீது வழக்குத் தொடர்கிறார்கள். ஆக அமெரிக்காவில் என்னவொரு சட்ட அமைப்பு இருக்கிறது என்றால், அரசு நிகழ்ச்சியில் விசாரணை நடக்கும்போது சிரித்தால் சிறை தண்டனை கிட்டும் வாய்ப்பு அதிகம் என்பதுதான் அது.

பாலர் , இளம்பிராயத்தினரின் உறக்கமும் உறக்கமின்மையும்

6 மணிக்கும் குறைவான அளவு உறக்கமுள்ளவர்களிடையே 8 மணி நேர உறக்கத்தையுடையவர்களோடு ஒப்பிடும்போது அகால மரணத்தை தழுவும் ஆபத்து 13 சதவிகிதம் அதிகமாக உள்ளது..உறக்கம் குறைவாக உள்ளவர்களினால் 40,000த்திற்கும் மேலான சாலை விபத்துகள் நிகழ்கின்றன.இதனால் வருடந்தோறும் 1,500 பேர் உயிரிழக்கிறார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது போல் சரியான அளவு உறக்கம் கொள்வதை சிறுவயதிலேயே ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய ஒழுக்கக் கட்டுப்பாட்டில்சேர்ந்த ஒன்று. சரியான அளவு உறக்கம் கொள்வதை சிறு வயதிலேயே பழக்கிக் கொண்டு விட்டால் பெரியவர்களான பின் உறக்கப் பற்றா குறையையும் அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் தவிர்க்கலாம் என்றே நான் நம்புகிறேன். அதனால்தான் இக்கட்டுரை சிறுவயதினரிடையே உறக்கத்தின் அருமையை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

நாடோடிகளுக்குக் குடியுரிமையா? கானலில் நீரூற்றா?

ஒரு இனம் அல்லது மொழியைப் பொதுவாகக் கொண்ட மக்களின் நாட்டரசு உருவான பிறகு, ரோமாக்கள் ஓரம் கட்டப்பட்டார்கள், புதுச் சமூகங்களில் அவர்களுக்கு உறுப்பினர் என்ற உரிமை மறுக்கப்பட்டது, அவர்கள் இருப்பது பொறுத்துக் கொள்ளப்பட்டதே தவிர ஏற்கப்படவில்லை. தனிக் குழுவாக இருப்பதும், தங்கள் மொழிகளையும், பண்பாட்டையும் பாதுகாத்துக் கொள்வதும் அழியாமல் பிழைத்திருக்க அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகள்- உலக வரலாற்றில் அனேகக் குழுக்கள் இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்கின்றனர். ரோமாக்கள் மட்டுமா வேரில்லாத வெளியாட்கள் என்று நடத்தப்பட்டனர்? நாடு-அரசுகளின் காலத்தில் அவர்களின் வரலாறு ஓரளவு யூதச் சமூகங்களின் நிலையை ஒத்திருந்தது. இன்றோ, ரோமாக்களில் பலர் நாடோடிகளாக இல்லாமல், ஒரு நிலப்பரப்பில் தங்கி விட்டிருக்கின்றனர், அந்த நாட்டு அடையாளங்களை ஏற்றுத் தம்மை செக் மக்கள், ஃப்ரெஞ்சு மக்கள், இதாலியர் என்றோ அடையாளம் மேற்கொண்ட போதும், நாடு தடைகளின்றி நடத்தப்படுவதற்கு அவர்கள் ஆபத்து விளைவிக்கிறார்கள் என்ற கருத்தே மேலோங்கி உள்ளது.

அளறுதல்

செக்ஸை வைத்து இலக்கியம் படைத்தால் மட்டும் என்ன சாதித்து விடுவாராம்? எந்தப் பொருளிலும் மலிவுப் பொருள்தான் மனித புத்திக்கு உடனே சென்று சேர்கிறது. ஏனெனில் உழைப்பை, முயற்சியைக் கேட்கும் எதுவும் மனிதருக்கு அத்தனை உவப்பானவை அல்ல. கட்டுப்பாட்டோடு குடிக்கச் சொல்லும் உயர் அளவு ஆல்கஹால் உள்ள சாராயங்கள் – விஸ்கி இத்தியாதி- அனேகருக்கு ஏற்பில்லை, காரணம் விலை மட்டுமல்ல. மறக்கவும், மரத்துப் போகவும் குடிப்பவர்களே அதிகம். அது எத்தனை தூரம் தன்னைத் தானே மேன்மேலும் தோற்கடிப்பது என்பதை அவர்கள் அறியாமலா இருப்பார்கள்? அதே போல மேலை இலக்கியர்களுக்கு இந்த செக்ஸ் பற்றி எழுதுவது என்பது ஒரு உளைச்சல். முயன்று முயன்று எழுதி அதில் என்ன சாதிப்பார்களாம்?

திபெத் எப்படி நசுக்கப்படுகிறது?

திபெத்திய தேச அடையாளத்திற்கு மையமாக இருக்கும் மொழி மற்றும் பௌத்தம் ஆகியன, சீனாவின் பாதுகாப்பு, மேலும் அரசு முன்னின்று செலுத்தும் தேசியத்துக்கும், பரவலாக ஏற்கப்பட்டுள்ள ஹான் இன உயர்வு சார்ந்த தேசியத்துக்கும் சிறிதும் ஏற்க முடியாததாக உள்ளதால், மாநில மற்றும் நாட்டு அதிகாரிகள் நடுவேயும், சாதாரணச் சீனரிடையேயும் இவற்றுக்கு எதிரான காழ்ப்புணர்வு அதிகமாக உள்ளது… சீன ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் ‘கரைத்து விடுதல்’ என்ற அணுகல் முறைப்படி, 1950 இலிருந்து திபெத்தின் மீது சுமத்தப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சியும், அதிலும் 1989க்குப் பிறகு வந்த கால கட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற கடும் ஒடுக்கு முறைகளும் பண்டை நாளில் இருந்த நல்லுறவை நொறுக்கி விட்டன.

பொருந்துதல்

அது ஒரு வாகன விபத்து. அதில் அடிபட்டு இறக்கிறார் ஒரு பெண். அந்த வழக்கில், இறந்த பெண்ணின் குடும்பத்திற்குத் தர வேண்டிய காம்பன்சேசன் தொகையைக் கணக்கிட வேண்டி வந்தது. அப்பெண் வெளி வேலை செய்து பொருள் ஈட்டவில்லை. ஹவுஸ் ஒய்ஃப். எனினும், அப்பெண் வீட்டில் செய்யும் வேலைக்கு பிரதியுபகாரமாக ஒரு தொகையாக ரூபாய் 5000, நிர்ணயிக்கப்பட்டு அதை அவள் சம்பளம் போல குறிப்பிட்டு காம்பன்சேசன் கோரப்பட்டது. (பின்னர் குறைவான தொகை பெறப்பட்டது) அதை ஒட்டி, வழக்கறிஞர்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். ஒரு பெண் தாயாக, குழந்தைகளை கவனிப்பது முதல், கணவன், குடும்பம் என அனைத்தையும் கவனிப்பதற்கான தொகை அது. அத்தொகை சரிதானா என பேசிக்கொண்டிருக்கையில், அவளுக்கான கூலியா அது?

மெய்ம்மை-கடந்த உலகில் உண்மை குறித்து…

நாம் எல்லாரும் தரவுகளைத் தெரிந்து கொள்வதிலோ, அவற்றின் உண்மையை உறுதி செய்து கொள்வதிலோ ஒரே அளவு ஆர்வம் காட்டுவதில்லை. நம் பார்வையை வலுவாக்கும் செய்திகளுக்கும் கருத்துகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம். அவற்றை விரும்பி பகிர்ந்து கொள்வதால் அவை கூடுதல் ஆற்றல் பெறுகின்றன. இணையம் உண்மையை அறியும் சாதனம் என்ற நிலையை எட்டாமல், எல்லாரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறியும் சாதனமாகி விட்டது. நிறைய பேர் பேசிக்கொள்ளும் விஷயங்களே கவனம் பெறுகின்றன, உண்மைக்கு இங்கு மதிப்பில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் களப்பணியாளர்களும் நிறுவன அமைப்புகளும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் தகவல்களையும் பரப்புவது இரண்டாம் சிக்கல். உண்மையறியும் சல்லடை இல்லாத உலகில்…

"என் பெயர்”

முன்பெல்லாம் கிராமங்களில் ‘பொட்டல்’லேர்ந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள்” எனும் தகவல் சொன்னால் போதும். அந்த ஊரில் இருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள். இன்ன மாதத்தில் வந்திருப்பதால், விவசாயத்திற்கு மடை திறந்து விடச்சொல்லி கேட்க வந்திருக்கிறார்கள் என அனைத்தும் புரிந்துவிடும். ஏனெனில் அப்போது அநேகரும், ஊரை பிரதிநிதித்துவப்படுத்தினர். பின்னிட்டு, ஊர் பெயர் போதாது. குடும்பப் பெயர் சொன்னால் விளங்குவதாக இருந்தது. இப்போது குடும்பப்பெயரை விட சொந்தப்பெயரே அடையாளத்திற்குப் பயனாகிறது. அதற்கு முகவரியாகவே குடும்பப் பெயர். இதிலும், பெண்களிடம் செய்த சர்வேயில்…

குற்ற நீதியொறுத்தல் முறை

அமெரிக்க நீதி முறை எத்தனை பயங்கரம் என்பது தெரியாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் இந்தியர்களும்/ தமிழர்களும். பழுப்புத் தோலுக்குக் கீழே பல நிறங்களில் மேலும் பல இனக் குழுவினர் காவல் துறையின் கடுமையான பார்வைக்கும், இழி நோக்குக்கும் ஆளாக இருக்கக் கிட்டுவதால், இந்தியரும் சீனரும் இது “குற்ற நீதியொறுத்தல் முறை”

கென்யா – குறுங்குறிப்புகள் – 2

பகலில் எங்கு சென்றாலும், மாலை ஏழு மணிக்குள் வீடு திரும்பி விடுவது அல்லது தாமதமானால் நண்பர்கள் வீட்டில் தங்கிவிடுவது வழக்கம்.எப்போதும் பயணிக்கும்போதோ அல்லது வீட்டிலோ கொஞ்சம் பணம் வைத்திருப்பது நல்லது; திருடர்களோ, வழிப்பறியோ – நாமாக பணத்தைக் கொடுத்துவிட்டால் நல்லது (உயிருக்கு உத்தரவாதம்!); பணமில்லையென்றால் கோபமாகி விடுவார்கள் (பெரும்பாலும் இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடுபவர்கள் போதைக்கு அடிமையானவர்கள்).

காவேரியும் இல்லத்தரசியும்

என் தேசத்தில் எனது பக்கத்து மாநிலத்தில் நான் தைரியமாக நடமாட முடியவில்லை என்பது எத்தனை துக்ககரமான விஷயம்! என் தாய்மொழியை நான் இங்கு பேசுவதற்கு யோசிக்க வேண்டுமா? எனது பேரன் பேத்திகளுக்கு காவிரி என்பது வெறும் வரைபடத்தில் மட்டுமே காண்பிக்கப்பட வேண்டுமா? தென்பண்ணை, பாலாறு போல இந்த ஜீவநதியும் என் மாநிலத்தில் காணாமல் போய்விடுமோ?

மகரந்தம்

இது அறிவுலகத்தை நோக்கிய விமர்சனம். தற்போது இணையத்திலும் தமிழ் இலக்கிய கலை பண்பாட்டு சூழலிலும் புழங்கும் பெரும்பான்மையான சிந்தனையாளர்கள் படிக்க வேண்டிய சிறு கட்டுரை. விமர்சனமாக எடுத்துக்கொள்ளும் சிந்தனையாளர்கள் மறுப்புத் தெரிவிக்கலாம். அப்படி தெரிவிக்கும் தோறும் இந்த கட்டுரைக்கு வலு சேர்க்கும்படியாக அமைந்துவிடும் என்பதுதான் நிதர்சனம்.

சென்ற வருடத்தில் மட்டும் ஆறரைக் கோடி அகதிகள்

ஐ.நா. அறிக்கையின் படி சென்ற வருடம் மட்டும், 65.3 மில்லியன் பேர்கள் தங்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டிருக்கிறார்கள் இது இங்கிலாந்து நாட்டின் மக்கள் தொகைக்கு சமமாகும். ஃபிரான்ஸில் ஒரு குண்டு வெடித்தால், உலக ஊடகங்கள் அனைத்தும் அதை பதிவாக்கி விவரிக்கிறது. ஆனால், ஃபிரான்ஸ் நாட்டின் ஜனத்தொகைக்கு சமமானவர்கள் தங்களின் “சென்ற வருடத்தில் மட்டும் ஆறரைக் கோடி அகதிகள்”

மகரந்தம்

கிளவுட்ஸ் ஆஃப் சில்ஸ் மரியா (Clouds of Sils Maria) என்னும் படமும் ஸ்விட்சர்லாந்தில் படமாகிறது. தில்வாலே துல்ஹானியா லெ ஜாயேங்கே (Dilwale Dulhania Le Jayenge – DDLJ)வும் ஸ்விஸ்ஸில் படமாகிறது. எந்தப் படத்திற்கு பனிச்சறுக்கு மலையின் உச்சியில் ஆளுயுர பிரும்மாண்ட கட் அவுட் வைத்திருக்கிறார்கள்? விடையை மேலே பார்த்திருப்பீர்கள். இருநூறு படங்களுக்கு மேல் இங்கே படமாகியிருக்கின்றன. ஏன்? காஷ்மீர் பிரச்சினை காரணமா அல்லது வெள்ளைத் தோல் கொண்டவர் நமக்கு சிப்பந்தியாக அடிபணிவது காரணமா என்னும் கேள்விகளை இந்தக் கட்டுரை எழுப்புகிறது. உள்ளூர் சிம்லாவில் படப்பிடிப்பை வைத்தால், கால்ஷீட்டை மட்டும் கொடுத்துவிட்டு டிமிக்கி தருபவர்களை மலைப் பிரதேசங்களுக்குக் கொண்டு சென்றால், நாயகன் / நாயகி காணாமல் போகும் தொல்லையில்லாமல் …

மகரந்தம்

தென் கொரியாவில் 50 மிலியன் மக்களில் 80 சதவீதத்தினரிடம் இத்தகைய தொலைபேசிகள் இருக்கின்றனவாம். இவற்றில் மூழ்கி இருக்கும் இந்த மக்களுக்குச் சமீபத்தில் பலவகை மன அழுத்த நோய்கள் ஏற்படத் துவங்கி இருப்பதால் இவற்றிலிருந்து விடுபட்டு இருப்பது சாலச் சிறந்த தேர்வு என்று சிலர் கருதத் துவங்கி இருக்கின்றனராம். அப்படி யோசிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு போட்டி சமீபத்தில் நடந்ததாக கார்டியன் பத்திரிகை தெரிவிக்கிறது. தலை நகரான சோல் நகரில், சுமார் 60 பேர் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதைப் பயின்றனராம். 90 நிமிடங்கள் தொலைபேசிகள், கணினிகள், ஏன் கைக்கடிகாரத்தைக் கூட பார்க்காமல் சும்மா இருக்க வேண்டும் என்பது போட்டி. ஒரு பூங்காவில் நல்ல வெப்பம் நிலவிய போதும் இந்த 60 பேர் அப்படி அமர்ந்திருந்தனராம்.

தொழில்நுட்பம் vs. சட்டங்கள்

காவலன் தயாராகும் முன் கள்ளன் தயாராகி விட்ட நிகழ்வு நாட்டிற்கு நல்லதல்ல. உதாரணமாக சமீபத்தில், நடந்த தமிழக தேர்தலில், தேர்தல் ஆணையம் ஊடக விளம்பரங்கள் செய்வது மற்றும் அதற்கான செலவுக் கணக்குகளை ஆணையத்திடம் ஒப்படைப்பது குறித்து சுற்றறிக்கை ஒன்றை அறிவித்திருந்தது. அதில், ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்காகச் செய்யும் விளம்பரங்களில் ஆன்லைன் விளம்பரங்களும் அடங்கும். எனவே அதற்கான செலவுக் கணக்கையும் கணக்கில் கொண்டு வரவேண்டும் என்கிறது ஆணையம். ஆனால், ஆன்லைனில் விளம்பரம் எனில் ‘எவை ஆன்லைன்?” “எவை விளம்பரங்கள்?” “எவை ஆன்லைன் விளம்பரங்களுக்கான செலவு?” அந்தச் செலவுக் கணக்கை ”எப்படிக் கணக்கிடலாம்?” என பல கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் இன்னும் பதில் சொல்லவில்லை.

ஆட்டிஸம் (மதி இறுக்கம்)

இது ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபேட் கருவிக்கான விளம்பரம். எனினும், அதைக் குறித்து ஆர்ப்பரிக்காமல், மதியிறுக்கம் குறித்தும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழில் நுட்பம் எவ்வாறு உதவும் என்பதை சுட்டுகிறது. டிலன் என்பவரால் சாதாரண மனிதரைப் போல் பேச முடியவில்லை. அதனால், அவருடைய எண்ணங்கள் வெளிப்படாமல் அவருக்குள்ளேயே அடங்கிவிடாமல் இருக்க, “ஆட்டிஸம் (மதி இறுக்கம்)”

ஈராக்கில் தொழில் தொடங்கலாமா!

ஈராக்கில் போலிஸ் ரிப்போர்ட் பெறுதல் என்பது சாத்தியமே இல்லை. ஒரு சிறு எடுத்துக்காட்டாக இத்தாலியைச் சேர்ந்த ஒரு கம்பனி பாஸ்ராவை ஒட்டியுள்ள ஓரிடத்தில் எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய் அமைக்கும் பணிக்கு வந்தது. அவர்களின் கொடவுனில் இருந்து ஐந்து லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களும், புத்தம் புது ஏர்கண்டிஷனர்கள் பலவும் காணாமல் போயின. எடுத்தவர் யாரெனத் தெரியும். ஆனால், சொல்ல முடியாது. சொன்னால் மறுநாளே கொலை செய்யப்படுவீர்கள். போலிஸில் சென்று பொருட்கள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தால் யார் மீது சந்தேகம் என எழுதிக்கொடுக்கச் சொல்வார்கள். நீங்கள் கொஞ்சம் தைரியமான ஆளாய் இருந்து ஈராக்கியின் பெயரையோ அடையாளத்தையோ சொன்னால் அவர்களே திருடிச்சென்றவனிடம் நம்மை காட்டிக்கொடுப்பதுடன் நாம்தான் திருடி விற்றுவிட்டோம் என்ற திசையில் கேஸைக் கொண்டு செல்வார்கள். மேலும், போலிஸ் பேப்பர் என்ற ஒன்று கிடைக்கவே கிடைக்காது. போலிஸின் அறிக்கை இன்றி காப்பீடு நிறுவனங்களும் இழப்பீடுகளைத் தராது.
இதே நிலைதான் வாகன விபத்துகளுக்கும். முழுக்க முழுக்க கட்டைப்பஞ்சாயத்து முறையே ஏதேனும் விபத்து நேர்ந்துவிட்டால். இஸ்லாமிய முறைப்படி பழிக்குப்பழியாக பதில் கொலை, அல்லது ரத்தப்பணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் உறுப்பினரிடமிருந்து வசூலிக்கப்படும்.
மத்திய கிழக்கில் பிற நாடுகளில் இந்தப் பணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனமே கொடுத்துவிடும்.

எழுச்சியூட்டும் நம்பிக்கை

இளைஞர் சமுதாயம் தீய வழிகளில் செல்லாமல் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க இப்படிப்பட்ட வடிகால்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பல குடும்பங்களில் விளையாட்டு, இசை, கைவேலை என்று சிறு வயது முதலே ஓய்வு நேரப் பழக்கங்களாகப் பழக்கப் படுத்திவிடுவார்கள். இன்னும் சில குடும்பங்களில் கலையார்வங்களை வளர்ப்பார்கள். ஆண் பெண் பேதங்கள் இல்லாமல் பலவிதக்கலைகளிலும், விளையாட்டிலும் ஆர்வங்கள் பலவிதங்களில் வளர்க்கப்படும். இவையெல்லாமே இளம் வயது ஆர்வங்களுக்கு ஒரு வடிகால் வகுக்கும் வழிமுறைகள்தாம்.

இலவசம் இணையச் சமநிலைக்கு ஆபத்தா?

இணையம் என்பதை அத்தியாவசியத் தேவையாகக் கருதும் இந்த மேல்தட்டு மக்கள் கட்டணமின்றி வழங்கப்படும் திட்டங்களையும் எதிர்ப்பதால் அன்றாடம் வேலைசெய்து பிழைக்கும் மனிதர்களுக்கு இணையம் என்பது எட்டாத கனியாகிவிடும். இணையச் சமத்துவம் என்பது மறைமுகமாக இணையத்தளங்களைத் தடுப்பதுதானே தவிர வெளிப்படையாகப் பயன்பாட்டு அடிப்படையில் விலையேற்றுவதல்ல. வெளிப்படைத் தன்மையின்மைதான் இணையச் சமத்துவத்தைப் பாதிக்கிறது என்ற மையப்புள்ளியைவிட்டு வேறுபட்ட கட்டணங்கள்தான் சமத்துவத்தைப் பாதிப்பதாகக் காட்டுவது யாருக்கு லாபம் …

உறவுக்கு ஒரு பாலம்

ஒரு நாளிதழ் கட்டுரையில் மூத்த குடிமகன் ஒருவர் எழுதியிருந்தார்; அவருடைய மனைவி காலமான பின்னர், தன் வாழ்க்கையை எப்படி சமாளிக்கிறார் என்று. மனைவி இருந்தவரை வென்னீர் வைக்ககூட மனைவியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர், பின்னர் எப்படி சமையல் கற்றுக்கொண்டு, தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டு சுவாரசியமாக நாட்களை வைத்துக்கொண்டார் என்பது படிக்க நெகிழ்ச்சியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் நமது மனோபாவம்தான். இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று நம்மைநாமே சீர் படுத்திக்கொண்டும், பிறரின் சிறுதவறுகளை மறந்தும் மன்னித்தும், வாழ்க்கைப் பயணத்தில் தேவைப்படும்போது எதிர் நீச்சல் போட்டுக்கொண்டும்…

அற்புத மானுக்கு முடிவில்லாத வேட்டை

அவன் மோசமாக ஒப்பிக்கிறான், மூக்குக் கண்ணாடியை அடிக்கடி நேராக்கியபடி. ஆனாலும் மனதைத் தொடுகிறான். எனக்குப் புரிந்தது.. அவன் என்ன உணர்கிறான் என்பது எனக்குப் புரிந்தது. அவனுடைய இடைவிடாத உடல் கோணல்கள், அந்தக் கண்ணாடி, அவனுடைய அதிர்வுகள்.. ஆனால் அவன் என்ன ஒப்பித்தான் என்பதை நான் சுத்தமாக மறந்து விட்டேன், அது ஏன் முக்கியமாக இருந்தது என்பதையும் மறந்து விட்டேன். உணர்ச்சிகள் தனிப் பிறவிகள்- கஷ்டப்படுவது, காதல், மென்மையாக உணர்தல். அவற்றுக்குத் தமக்கென வாழ்வு இருக்கிறது; நாம் அவற்றை உணர்கிறோம், ஆனால் நாம் அவற்றைப் பார்ப்பதில்லை. நீங்கள் திடீரென்று வேறு ஒருவரின் வாழ்வில் ஒரு அங்கமாகி விடுகிறீர்கள்,

மனம் ஒரு குரங்கல்ல…

இவைகளை சரி அல்லது தவறு என்று தராசில் பார்ப்பதைவிட எண்ண அலைகளின் சக்தியை புரிந்து கொள்ளும் கோணத்தில் பார்த்தால் தெளிவாகும்.. உலகில் எத்தனையோ பேர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக எத்தனையோ சாகசங்களை செய்யவதும் இது போன்ற என்ணங்களின் வலிமையால்தான். ஆழ்கடலில் குதிப்பது, நெருப்பை விழுங்குவது, பாம்பு தேள்களை உடலில் விடுவது, அதள பாதாளத்தில் பாய்வது, அந்தரத்தில் தொங்குவது… இவர்களை இப்படி செய்யத்தூண்டும் எண்ண அலைகள்தாம்…

நம் நலன்…..நம்மைச் சேர்ந்தவர் நலன்…..சமூக நலன்….

பேரிடர் என்பது சொல்லி வைத்து வருவதில்லை. இயற்கையோ அல்லது மனித வெறுப்பில் உருவான தீவிரவாதத் தாக்குதலோ, எதிர்பாராமல்தான் நம்மைத் தாக்குகிறது. கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். நமக்கு ஐந்து நிமிடம் தரப்படுகிறது. அதற்குள் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளி வர வேண்டும். அதன் பின்னர் உங்கள் வீடு உங்கள் எதிரேயே தரைமட்டமாக்கப்படும். இது வேண்டும் அது வேண்டும் என்று வீடு நிறைய காலங்காலமாக சேர்த்துவைத்துள்ளவற்றில் எதை விடுவது?

பிரான்ஸ்: நிஜமும் நிழலும் -10: ஆக்கலும் அழித்தலும்

பெரியண்ணன்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட இம்மனிதர்கள் உண்மையில் அப்பாவிகள். சாவிகொடுத்த பொம்மைகளாக, நடைபிணம்போல இயங்கி மடியும் அடிமைகள். அவர்கள் சாகாமலிருந்தால் மரணதண்டனைக்குச் சாத்தியமற்ற பிரான்சு நாட்டில் – ஜனநாயக நாடென்ற பாரத்தையும் சுமந்திருப்பதால் குற்றவாளிகளே ஆனாலும் சட்டப்படி கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் இருக்கின்றன. விசாரணை, நீதிமன்றம், தண்டனை, பிறகு (வசதியான) சிறைவாசம் என்பதற்கு அரசாங்கத்தின் வரிப்பணத்தில் கணிசமாக ஒரு பகுதியைச் செலவிட வேண்டியக் கட்டாயம் இருக்கிறது. ஆகக்கொலையாளிகள் பிரான்சுநாட்டினை விரோதமாகப் பாவித்தபின்பு, அவர்கள் செலவில் தங்கள் உயிரைப் பேணுவது எவ்விதத்திலும் நியாயமுமில்லை.

கொடுக்கும் கலை

இருபது வருடங்களுக்குப் பின் இவருடைய கிளினிக்குக்கு ஒரு ஆலோசனைக்காக சென்றிருந்தேன். அவருக்கு வயதாகியிருக்கும்; அவரது சந்ததியினர் யாராவது இருப்பார்கள் என்ற எண்ணத்துடன் உள்ளே சென்றால், சாட்சாத் அவரே வழக்கம்போல் அதே நாற்காலியில் உட்கார்ந்து வரவேற்கிறார். இன்று அவர் வயது 73. “நீங்கள் முன்பே என்னிடம் பலவருடங்கள் முன்பு வந்தீர்கள் போலிருக்கிறதே….” என்று கேட்கும் அளவு ஞாபக சக்தி. எப்படி இவரால் இந்த வயதிலும் இப்படி எப்போதும் ஒரு புத்துணர்வுடன் வேலை செய்ய முடிகிறது? அவர் சொன்னார்: “ இரண்டு வருடம் முன்பு கிட்னியில் கான்சர் இருப்பது எனக்குத் தெரிய வந்தது.

செத்தும் கொடுக்க வைக்கும் சீரிய தொழில்நுட்பம்

ஒரு நாளைக்கு முன்னூறு எரியூட்டுதல்கள் நிகழும் வாரணாசியில் வேண்டிய அளவுக்கு தீவிர எரியூட்டு நிலையங்கள் இல்லாததாலும், ஒரு உடல் எரிய ஏழு எட்டு மணி நேரம் ஆவதாலும், அவசரமாக உடலங்கள் கங்கையில் இழுத்துவிடப்படுகின்றன.
உடல் எரியும் நிலைகளை சற்று நிதானமாகப் பார்ப்போம். உடலில் வெளிப்புறப்பாகங்கள், சில உள்ளுறுப்புகள் 700 டிகிரி செண்டிகிரேடில் எரிந்துவிடுகின்றன.ஆனால், சில பகுதிகள், நீர் , கொழுப்பு நிறைந்தவை எரிய அதிக வெப்பம் தேவை. அவை பகுதி வெந்து, நச்சுப் பொருட்களை 700 டிகிரியில் வெளியிடுகின்றன.எனவே, இருமடங்கு வெப்பநிலையில் உடல் எரிக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இது, கட்டைகளால் எரிக்கப்படும் முறையில் அதிக வெப்பநிலை ,எரிபொருட்களால் பல படிகளில் ஏற்படுத்தப்பட்டுவிடுகிறது. எனவேதான், திறந்தநிலை எரியூட்டுநிலையங்களில் உடல்களின் எரிதல் முழுமையாகிறது. மின்எரியூட்டகங்கள் முதலில் சற்றே தோல்வியடைந்தது இந்த வெப்பநிலைத் தகறாரில்தான்.

தீர்வுகள் விரல் சொடுக்கில் கிடைக்காது…

மொத்தத்தில், ஒரு குழந்தையை நீங்கள் எப்படி கையாளுகிறீர்களோ அந்தத் தாக்கம்தான் அந்தக் குழந்தையின் சுபாவமாக இருக்கும். மனித சமுதாயம் உருவாவதில் பெற்றோர்களின் பங்கு சாமான்யமானதல்ல. பரிட்சை நேரங்களில் தோல்வியைத் தாங்காமல் விபரீத எல்லைகளுக்குப் போகும் சில இளைஞர்களை ஆரோக்கியமான திசையில் திருப்புவது பெற்றோர்கள் கடமை.
நம் ஏமாற்றத்தின் பாரத்தையும் குழந்தைகள் மீது காட்ட வேண்டுமா என்ன?

குடிமைப் பங்காளர்கள் (Civil partnership)

ஓரிடத்தில் ஒரு ஆணும் பெண்ணும், இணைந்து வாழ்ந்து வந்தால், அதை அந்தப் பகுதியில் இருப்பவர்கள் அவர்கள் இணை என நம்பும் வண்ணம் வாழ்ந்து வந்தால், அப்படி வாழ்ந்து வந்தது தொடர்ந்து சிலகாலமாவது இருந்திருந்தால், அவர்கள் தம்பதியராகவே பார்க்கப்படுவார்கள். அவர்களில் பிரிவு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு, அதாவது அண்டி வாழ்ந்து வந்தவருக்கு மற்றவர் சட்டப்படி பதில் சொல்லியே ஆகவேண்டும். அந்த நபர்கள் ஏற்கனவே திருமணம் ஆனவராக இருந்திருந்தால் கூட என சட்டம் சொல்கிறது.(சட்டமானது பலமணத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால், ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு உதவ முயல்கிறது.)

பெண்ணும் சாமியும்

இன்று, அலுவலகம் ஓடுகையில் தொங்கத் தொங்கத் தாலி எரிச்சலூட்டுகிறது. தாலியை புனிதமாக தலையில் ஏற்றிய ஆணுக்கோ அது அவனின் ஆயுளை நிர்ணயிக்கும் ஒன்றாக மனதில் உருவேறிக் கிடக்கிறது. “என்னது? தாலியைக் கழற்றுவதா?” என்கிறான் அவன். “பேங்கில் பண்ணத்தைப் போடச்” சொல்கிறாள் பெண். பெற்ற பிள்ளை, அவனுடையது என்பதை அவனுக்கே அவள்தான் சொல்ல வேண்டிவந்தமையால் அவன் பெயர் இனிஷியலானது. இப்போது எவரை நம்ப வைக்க வேண்டும். இது நம் பிள்ளை என நமக்குத் தான் தெரியுமே? பின் எதற்கு? நம் இருவரின் உற்பத்திக்கு நம் இருவரின் பெயர்

பிரான்சு : பிரெஞ்சு மக்கள்

இன்றைய பிரெஞ்சுமக்களைப் பற்றி பேசுவதற்கு முன்பாக, பிரெஞ்சைத் தாய்மொழியாகக்கொண்ட இம்மக்களின் சமூககம் வேர்பிடித்த காலம் அண்மைக்காலத்தில்தான் நிகழ்ந்தது, ஆயிரம் ஆண்டு பழமைகொண்ட வரலாறுக்கு அவர்கள் சொந்தக்காரர்கள் அல்ல. பிரெஞ்சுக் காரர்களின் பூர்வீக மக்கள் என்று பலரை வரலாற்றா¡சிரியர்கள் குறிப்ப்பிடுகிறார்கள். 13ம் நூற்றாண்டில் இந்திய ஐரோப்பிய வழியில்வந்த கெல்ட்டியர்கள் ஆயிரக்கணக்கில் இன்றைய பிரான்சுநாட்டில் குடியேறியதாகவும் அவர்களை ரொமானியர்கள் கொலுவா என அழைத்ததாகவும், அம்மக்களே பிரெஞ்சுக்காரர்கள் எனகூறுகிறவர்கள் இருக்கின்றனர் வேறு சில வரலாற்றாசிரியர்கள் பிரெஞ்சு மக்களின் முன்னோர்களென்று ரொமானியர்களைச் சொல்கிறார்கள்

குளக்கரை

தாது வருடப் பஞ்ச காலத்தில் உயர்ஜாதி இந்தியர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு உணவளிப்பதைப் பற்றிக் கவலைப்படாது தம் நலனை மட்டும் கவனித்துக் கொண்டதாகவும், இந்துக்களின் அறமற்ற தன்மையை அது சுட்டுவதாகவும் சில தமிழ் நாவலாசிரியர்கள் ‘புரட்சி நோக்கோடு’ புத்தகங்கள் எழுதிப் பிரபலமான போது அது தவறு, இந்தியர்கள் தம் மக்களுக்கு உணவளிக்கச் செய்த பெரு முயற்சிகளைப் பிரிட்டிஷார் முனைந்து தோற்கடித்தனர் என்று சில சான்றுகளுடன் சுட்டிய ஒரு கட்டுரையைச் சொல்வனத்தில் பல மாதங்கள் முன்பு பிரசுரித்திருந்தோம். அந்தக் கட்டுரைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் பிரதமராக இருந்த, சர்ச்சில் வேண்டுமென்றே இந்தியரைப் பட்டினிக்கு ஆளாக்கிக் கொடுமையான இனப் படுகொலைகளைச் செய்திருக்கிறார் என்று நேரடியாகத் தகவல்கள் மூலம் ஆராய்கிறார் ராகேஷ் கிருஷ்ணன்.

பிரான்சு நிஜமும் நிழலும் -5: உணவும் -விருந்தும்

ஐரோப்பியரல்லாத ரெஸ்ட்டாரேண்ட்களில் இந்திய மற்றும் சீன ரெஸ்ட்டாரெண்ட்கள் பிரெஞ்சுக்காரர்கள் விரும்பிப் போகக்கூடியவை. இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் தங்கள் ரெஸ்ட்டாரெண்டிற்கு காந்தி யென்றோ, இந்திராவென்றோ, பாம்பே என்றோ, தில்லி என்றோ, தாஜ்மகால் என்றோ பெயர்வைப்பது பொதுவாக வழக்கில் இருக்கிறது. இந்தியா உட்பட இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்குக் காந்தி தற்போதைக்கு ஒரு வியாபாரப் குறியீடு என்பதால், பாகிஸ்தானியர்கள் உட்பட காந்தி என்ற பெயரைத்தான் வைக்கிறார்கள், ‘ஜின்னா’ வென்று தங்கள் ரெஸ்டாரெண்டிற்கு பெயரிடுவதில்லை.

மிதுனம்: பண்பாடு – பன்னாடு – பெற்றோர்

மனதிற்கு நெருக்கமான கதை அமைந்திருப்பது நேர்மையான காரணமாக இருக்கும். என்னுடையப் பெற்றோரை இந்தப் படத்தில் பார்த்து இருப்பதால் பிடித்து இருக்கும். அல்லது எங்களையே, இன்னும் சில பத்தாண்டுகள் கழித்து இப்படி பார்ப்பதால் கூட இருக்கலாம். இந்தியாவில் தன்னந்தனியே விடப்பட்டிருக்கும் அனாதைப் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள். அந்த மகன்/ள்கள் ஐவரும், சௌக்கியமாக அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், இன்ன பிற பரதேசங்களிலும் குடிபுகுந்து விட்டார்கள். அப்பாதாஸ் என்னும் தந்தையாக எஸ்.பி.பி. புச்சி லஷ்மி என்னும் தாயாராக லஷ்மி. இந்த இருவரும் சேர்ந்து மிதுனம்.

பிரெஞ்சுக் குடும்பம்

நவீன பிரெஞ்சுக் குடும்பம் -கலப்பு குடும்பம் – சமூகத்தின் எதிர்பார்ப்பைத் துச்சமாகக் கருதுகிறது. தனிமனிதனின் உடல் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, மனிதத்தின் ஒழுங்குகளை கலைத்துப்போட்டிருக்கிறது. இரத்த உறவுகள்கொண்ட பிள்ளைகள், தம்பதிகள் ஆகியோரிடமே சிற்சில சமயங்களில் அசாதரண பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறபோது, உடம்பின் இச்சையை மாத்திரம் கணக்கிற்கொண்டு ஒழுங்கைச் சிதைத்து கட்டமைக்கப்படும் நவீன குடும்ப அமைப்பு ஆணாதிக்கமோ பெண்ணாதிக்கமோ அல்ல உணர்ச்சிகளின் ஆதிக்கம்- ஆபத்தானது.

தமிழ் இசை மரபு – இறுதிப் பகுதி

தெற்குக்கு அதன் சரித்திரம் முழுவதிலும் நீடித்து இருந்த ஒரு விஷயம் அதன் அறுபடாத மரபு, அம்மரபின் மேல் அது கட்டி எழுப்பிக் கொண்டு போக முடிந்தது, அதற்கு சாதகமாக இருந்தது வட இந்தியாவை ஒப்பிட்டு நோக்கும் போது, இங்கு நிலவிய அமைதி. கோவிலிலிருந்து பிரவாஹித்த பாடகர்களின், நாட்டிய கலைஞர்களின் இனிமையான இசை மற்றும் லயத்துடனான தாள சப்தங்கள் அப்பிரதேசம் முழுவதுமே எதிரொலித்தது. நாயக்கர்களுக்குப் பின்வந்த மராத்தா மன்னர்களும் இன்னும் அதிக அளவில் இம்மரபைத் தொடர்ந்தனர். சாலைகளிலும், கோவில்களின் நடைபாதைகளிலும் நிரம்பியிருந்த இசைக்கு பாமர மக்களும் (hoi polloi), நூற்றாண்டுகள் பலவாகத் தொடர்ந்து நிலவும் இத்தகைய சூழலில் இதற்கு அன்னியப்பட்ட பாமர மக்கள் இருந்திருப்பாராயின், அப்பாமர மக்களும் இச்சுழலில் மூழ்கி மகிழ்ந்தனர்.

மதுவிலக்கு சாத்தியங்களும் நிதர்சனங்களும்

கடந்த சில வருடங்களாகவே, பல சமூக ஆர்வலர்கள், சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து மதுவிலக்கு பற்றி பேசி வந்தாலும், தமிழ்ச் சமூகத்தில் சமீபத்தில் நடந்த பள்ளி மாணவி மதுவருந்தி மயங்கிக் கிடந்த வீடியோ, 4 வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் காட்சி இன்னும் வேறு சில காட்சிகளும் இந்த மதுவிலக்கு வேண்டும் எனும் எண்ணத்திற்குப் பெரும் வலுவைச் சேர்த்திருக்கிறது.

தமிழ் இசை மரபு – பகுதி 2

சரித்திரத்தின் ஒரு சுருக்கமான, வேகப் பார்வையில், தொல்காப்பியர் காலத்திலிருந்து ஒரு தொடர்ந்த பிரவாஹத்தை நாம் பார்க்கிறோம். தொல்காப்பியம், ‘ஆற்றுப்படை” என்ற இலக்கிய வகையின் குணங்களைத் தொகுத்துக் கூறுகிறதென்றால் இந்த பிரவாஹம் கிருஸ்துவுக்கு எத்தனை நூற்றாண்டுகள் முற்பட்டது என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். தொல்காப்பியத்திலிருந்து 12 – ம் நூற்றாண்டின் பக்தி சகாப்தத்தின் முடிவு வரை, இடையில் அது கடந்த பக்தி சகாப்த சிலப்பதிகாரக்காலத்தில் இசையும் கவிதையும் ஒருங்கிணைந்தன: செவ்வியல் இசை மற்றும் கவிதையின் இணைவு, செவ்வியல் கலை மற்றும் நாட்டார் கலையின் இணைவு, இவற்றுடன் பொதுமக்களிடம் கலை அமிழ்ந்தது. 12 – ம் நூற்றாண்டு வரையேனும், 1500 ஆண்டுகள் அறுபடாமல் நீடித்த பாரம்பரியம் இது. சரித்திரத்தின் துவக்கத்திலிருந்து நூற்றாண்டுகளாய், இசையுடன் இணைந்த சாகித்யம், பொதுமக்களின் தளத்தில் அதன் மரபைத் தியாகம் செய்யாமல், தொடர்ந்திருப்பது நாம் அறிந்தவரையில் எங்குமே இணையில்லாத தமிழ்மண்ணுக்கே உரிய அதிசயமான நிகழ்வு.

அரேபியாவில் கொடூரக் கட்டிடங்கள்

அரபு நாடு என்றவுடன் மாட மாளிகைகளும், துபாய் நகரத்தின் அங்காடிகளும், கேளிக்கை மையங்களும், கத்தார் நாட்டின் கால்பந்து உலகக் கோப்பை மைதானங்களும் பிரமிப்பில் ஆழ்த்தி நினைவிற்கு வரும். அந்த பிரும்மாண்டங்கள் உருவாகக் கோடிக்கணக்கான தினக்கூலிகள் இந்தியாவில் இருந்தும் பங்களாதேஷில் இருந்தும் தினம் தினம் செத்துப் பிழைக்கிறார்கள். அரேபிய பாலைவனத்துக்கு “அரேபியாவில் கொடூரக் கட்டிடங்கள்”

தமிழ் இசை மரபு

ரமா மாத்யா இயற்றிய (கி.பி. 1550, ஆந்திரம்) ஸ்வரமேள கலாநிதி ‘ஏக ராக வீணா’ (ஒரு ராக வீணை) ’சர்வ ராக வீணா’ (எல்லா ராகங்களுக்குமான வீணை) என்பனவற்றைப் பற்றிப் பேசுகிறது. இதிலிருந்து சங்க காலத்தில் பல யாழ்கள் இருந்தன, ஒவ்வொன்றும் ஒரு ராகத்தை மட்டும் இசைப்பதற்காக வடிவமைக்கப் பட்டிருந்தது என்பதை நாம் அறியலாம். இது காலப்போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட தந்திகளை பயன்படுத்தி வீணை உருவாக்கும் வேலைப்பாட்டில் ஏற்பட்ட வளர்ச்சியினால் மாறி, இறுதியில் பலவகைகளில் இயங்கககூடிய வீணையின் வடிவமைப்புக்கு வழி வகுத்தது, ஆயினும் அத்தகைய யாழ்கள் பலகாலம் நீடித்திருந்தன. இன்றைய வீணை ’சர்வராக’ வீணையாகும்.

சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி

’குண்டாற்றுக்கு அந்தப் பக்கம் நீ ஜமீந்தார் என்றால், இந்த பக்கம் நான் – உனக்கெதுக்கு தாரை தப்பட்டை’ என்று மேலக்கோட்டை கவுடர் ஜமீனை கேட்கும் அங்கப்பதேவரை, அங்கப்பர் என்று எழுதியிருந்தால் அல்லது முத்தையாத்தேவர் என்கிற ராஜாவை ’தாயோளி’ என்று திட்டி செருப்பால் அடிவாங்கிய தாசில்தார் நடராஜ ஐயரை நடராஜன் என்றூ எழுதியிருந்தாலோ அல்லது சோழமூக்கன் வழிவந்து பல தலைமுறைகளாக பிள்ளைமாராக வாழ்ந்த மேகநாதம்பிள்ளையின் அக்குடும்ப ரகசியம் உடைந்து போனபின்பு அக்குடும்பத்தில் கட்டிக் கொடுத்து வாழ்த்த பெண்கள் திருப்பி அழைத்துக் கொள்ளப் படுவதை, முத்தையா தேவரை கட்டிக் கொண்ட ஜெயலட்சுமி தனது குடும்பத்துடனான உறவுகளை அறுத்துக் கொள்வதை, ஜெயலட்சுமியின் அத்தை ராஜாவை (முத்தையாதேவரை) த் திட்டும்போது…

என் பங்கு

நான் ஒரு கடை முதலாளி. என் கடையில் பத்து இளைஞர்களும், பத்துப் பெண்களும் வேலை பார்க்கிறார்கள். சட்டம் இருவருக்குமே சமமான வேலைக்கு சமமான சம்பளம் தர வேண்டும் என்றெ சொல்கிறது.நானும் சட்டத்தை மதிப்பதனால், அதற்கு உடன் படுகிறேன்….ஆனால் பாருங்கள்… ஒரு முதலாளியாக நான் கவனித்ததில், ஆண்கள் வேலை செய்யும் அளவுக்குப் பெண்கள் வேலை செய்வதில்லை. மாதத்தில் குறைந்தது இரண்டு நாள் திடீரென லீவு போட்டு விடுகிறார்கள். இது போக, பிள்ளைக்கு உடம்பு சரி இல்லை. மாமியாளுக்கு நெஞ்சு வலி என ஏகப்பட்ட காரணங்கள்….இங்கே வந்த சமயத்திலாவது வேலை செய்கிறார்களா? …ம்ஹும்..உயரத்தில் இருக்கும் ஒரு பெட்டியை இறக்க வேண்டுமெனில் கூட வேலை செய்யும் ஆணைக் கூப்பிடுகிறார்கள். கனமான உருளையை உருட்ட வேண்டுமா? கூப்பிடு ஆண்பிள்ளையை…வேலை நேரத்தில் சட்டென ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இடத்திலிருந்து எதையேனும் எடுத்துவர வேண்டுமா? இந்த இளைஞர்களில் எவனிடமாவது வண்டிச்சாவியைக் கொடுத்தால் போதும் கொண்டு வந்து இறக்கி விடுவான். இந்தப் பெண்களும் இருக்கிறார்களே…….பெண்களை வேலைக்கு வைத்ததால் எனக்கு நட்டம்தான். …..
ஆனால் இப்போது ஆண்கள் பெண்கள் இவர்களுக்கு எப்படி நான் சமச் சம்பளம் தர முடியும்?