பப்பிக்குட்டி

நான் கூடையைப்  பார்த்தேன்.  வெள்ளைப் பஞ்சு மேகம் போல புசு புசுவென்று  ஒரு அழகான குட்டி. பிறந்து சில வாரங்கள் தான் ஆகி இருக்க வேண்டும். பொமேரேனியன்  வகை என்று நினைத்தேன்.  கூடையின் பக்கத்தில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாள் நின்று கொண்டு யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார். “ஆமாங்க, நம்ம பேரப்  பிள்ளைங்களுக்குத் தாங்க.  போன மாசம் தான் குட்டி போட்டது. எழுபதாயிரம்  கேட்டாங்க. நாங்க  அம்பதுக்கு  பேசி முடிச்சிட்டோம்”.

வோல்காவின் வால்

நாங்கள்  என்ன தான் திட்டத்தை  இரகசியமாக வைத்திருந்தாலும், அது  கசிந்து விட்டது.   பெரும்பான்மை நாய்களுக்கு இந்த திட்டத்தின் தாக்கம் தெரியவில்லை. அவர்களின் கவனம் எப்போதும் அன்றாட உணவு தான்.  சில அறிவு ஜீவிகளுக்கு  திட்டம் புரிந்தது. ஆனால்  சரியா தவறா   என்று முடிவு எடுக்க இயலவில்லை. ஒரு சிறு பான்மையினருக்கு திட்டம் கொஞ்சம் கூட பிடிக்க வில்லை. ஏனென்றால் பலருக்கு அந்த  காவலர்களுடன் நல்ல நட்பு.  மனிதர்  போட்ட உணவை  உண்டு  துரோகம் செய்வது கண்டிப்பாக நாய்க்குணம் இல்லை  என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து இருந்தது.ஆனால்  வோல்காவை எதிர்த்துப் பேசும் தைரியம் யாருக்கும் இல்லை.  ஆனால் அத்தனை  குழுக்களும் விழித்திருந்து உறு  துணையாக இருப்பது என்று முடிவு எடுத்தன.