முதலியத்தை விமர்சிக்கும் மர்ம நாவல்கள்

பல நாடுகளிலும் துப்பறியும் நாவல்கள், மர்மக் கதைகள் சமூக விமர்சனத்துக்குக் கருவியாகப் பயன்பட்டிருக்கின்றன. ஆனால் ஸ்வீடன், நார்வே, ஃபின்லாந்து போன்ற ஸ்காண்டிநேவிய நாடுகளில் சமீபகாலமாக மர்ம நாவல்கள் நிறைய வெளிவருவதோடு, அவை மொழி பெயர்க்கப்பட்டு ஆங்கில மொழி உலகில் பரவலாக விற்பதும், அவை எல்லாமே ஒரு விதமான சமூக விமர்சன நோக்கோடு வெளிவருவதும் கவனிக்கத் தக்கன.

சாம்சனின் கதவு

ஒரு சாதாரண மனிதன் இறைவனின் அற்புத வரத்தால் செய்ய முடிந்த சாகசங்களைக் குறித்து எடுத்துக்கூற எங்களிடம் ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. உங்களின் சாம்சனையே எடுத்துக்கொள்வோம். கடவுளால் அருளப்பெற்ற சாம்சன் ஒரு கழுதையின் தாடை எலும்பைக்கொண்டு தன் எதிரிகளைத் துவம்சம் செய்ததாகவும், கோட்டைக் கதவுகளைத் தன் தோளில் சுமந்து சென்றதாகவும் கதைகள் உண்டு. அது இறைவனால் அருளப்பட்ட ஒரு சக்தி என்று போற்றி மகிழ்கிறீர்கள். ஆனால் சாம்சனை, ஹிந்துக்கள் வணங்கும் ஹனுமனுக்கு இணையாக கூற இயலாது.

கன்னி வெடி

மனித வெடிகுண்டு தாக்குதலில் பெண்களை உபயோகிப்பது நல்ல பலன்களை(?!) அளிப்பதாக கூறப்படுகிறது. ஒரு ஆண் மனித வெடிகுண்டு சராசரியாக 13 மனித உயிர்களை மட்டுமே கொல்கிறான். ஆனால் ஒரு பெண் மனித வெடிகுண்டு சராசரியாக 21 மனித உயிர்களை கொல்கிறாள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது.

அங்காடித்தெரு – ஒரு பார்வை – பகுதி 2

இதைப் பார்க்கையிலேயே நமக்குத் தோன்றும் முதற்கேள்வி, இவ்வளவு எளிதாகக் காணக் கிடைக்கும் ஒரு பெரும் சோக நாடகத்தை ஒரு திரைப்படமாக்க தமிழ் சினிமாவுக்கு ஏன் இத்தனை பத்தாண்டுகள் ஆயிற்று என்பதுதான். இப்போதுமே நம் மக்கள் இத்தகைய சினிமாவைப் பார்த்து முழு ஈடுபாட்டுடன் அதைக் கவனிப்பார்களா என்பது குறித்தும் எனக்கு ஐயம் உண்டு.

பட்டம்

இது மூட நம்பிக்கை என்று கருதப்படக் கூடும். எனினும், முழுக்கவும் காரணங்களில்லாமல் இவ்வாறு நம்பப்படவில்லை என்பதே சீனத்தில் பலரும் சொல்கிறார்கள். மைதானத்தில் இறங்கி நல்ல காற்றைச் சுவாசித்துக் கொண்டு பட்டம் விட்டால் உடல் நோயும் மனநோயும் விலகி உற்சாகம் பிறக்கத்தானே செய்தது…

அங்காடித்தெரு – ஒரு பார்வை

தமிழ் சினிமா என்பது டெக்னாலஜியின் துணை கொண்டு நிகழ்த்தப் படும் ஒரு பிருமாண்டமான பொழுது போக்குச் சமாச்சாரம் என்ற விதியில் இருந்து வெளி வந்து, சமூக அவலங்களையும் அதன் யதார்த்தம் கெடாமல் சொல்வதற்கு சினிமா என்னும் மீடியாவையும் பயன் படுத்தலாம் என்பதை நிரூபித்து, முறைசாரா ஊழியர்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிக் கொணரத் துணிந்திருக்கிறார் வசந்த பாலன்.

அந்த ஒரு சம்பவம், எல்லாவற்றையும் இழந்தேன்

தம்பியை தூக்கிக் கொண்டிருந்த என்னுடைய தந்தை வலப்புறத்தில் அவனை வேகமாக தூக்கி எறிந்தார். தாயின் கைகளைப் பற்றிக் கொண்டிருந்த என்னை வலப்புறத்தில் பலமாக வெகு தூரத்தில் தள்ளிவிட்டாள். அதன்பிறகு என்னுடைய பெற்றோர்களின் உடல்கள் தனித்தனியாகப் பிரிந்து கிடந்ததைப் பார்க்கமுடிந்தது. என்னுடைய தாயின் உடலும், தலையும் தனித்தனியாக சிதறிக் கிடந்தன.

அந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா?

மத்திய கேபினெட், அந்நிய நாட்டின் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது குறித்தான சட்டம் ஒன்றைக் கொண்டுவர அனுமதி அளித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அடுத்து நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவு வைக்கப்பட்டு, விவாதத்துக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்படலாம்.

இது தொடர்பாக ஒரு கேள்வி-பதில் விவாதம்.

லாபம் இல்லை என்ற நிலையில் மூவர் மட்டுமே கல்வித் துறைக்குள் வருகிறார்கள். ஒருவர்: அரசு. இரண்டாமவர்: மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற தர்ம சிந்தனையுள்ள தனி மனிதர்கள், அறக்கட்டளைகள், மத அமைப்புகள். மூன்றாமவர்: திருடர்கள், பொறுக்கிகள், அரசியல்வாதிகள். இந்த மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். ஜாலியாக சட்டத்தை ஏய்த்து, பணத்தை கறுப்பு, வெள்ளை, நீலம், பச்சை என்று மாற்றி உள்ளிருந்து வெளியே எடுத்துவிடுகிறார்கள். இந்த மூன்றாம் நிலையில் இருப்பவர்கள்தான் இன்று அதிகமாக கல்வியில் நுழைகிறார்கள்.
லாபம் செய்யலாம் என்ற நிலை வரும்போது நியாய சிந்தனை உள்ள பலரும் கல்வித் துறையில் நுழைவார்கள். திருடர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.

கூட்டம்

கூட்டங்களுக்கு ஒரு விதமான anonymity கிடைத்துவிடுகிறது. Anonymity கிடைத்த இவர்கள் யாரை வேண்டுமானாலும் அடிக்கிறார்கள், உடைக்கிறார்கள். குடித்திருப்பதால் இவர்களுக்குக் குறி தவறுவதில்லை.

வைரம்

தீவிரவாதிகள் விற்கும் வைரங்களுக்கு ‘ரத்த வைரங்கள்’ (Blood Diamonds) அல்லது ‘மோதல் வைரங்கள்’ (Conflict Diamonds) என்று பெயர்.உலகை ரத்தக் களரியாக்கியே தீருவேன் என்று முனைந்திருக்கும் ஒசாமாவின் கூட்டம் கூட இந்த வைரக் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக வதந்தி உலவுகிறது. ஆயுதங்கள் வாங்க பணத்தை நாடு விட்டு நாடு மாற்றுவது கடினமாக இருக்கிறது, ஒரு சிறு பொட்டலம் வைரம் கடத்துவது எளிது, அதன் மதிப்பும் சந்தையில் ஏராளம். அதனால் கிட்டும் ஆய்தங்களும் ஏராளம்.

வழித்துணை நாய்கள்

கண்பார்வை இழந்த வீரர்களுக்கு மருத்துவம் செய்து கொண்டிருந்த ஒரு மருத்துவர் ஒரு நாள் ஒரு பார்வையிழந்த வீரருடன் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது யாரோ கூப்பிடவே தன்னுடைய நாயை அந்த வீரருக்குத் துணையாக விட்டுவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்க்கையில் அவருக்கு மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில், அந்த நாய் போர் வீரரைப் பள்ளம்-மேடு பார்த்து ஜாக்கிரதையாக ‘வாக்கிங்’ கூட்டி சென்று கொண்டிருந்தது.

ஹெட்லீ, மதானி – The Departed

புனே பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பிலும் ஹெட்லீயின் பங்கு இருப்பதாக இப்போது சந்தேகிக்கப்படுகிறது. ஹெட்லீயை இந்தியாவுக்கு வரவழைத்து விசாரணை செய்யவும் இந்தியா முயற்சிக்கும் என்றும் தெரிகிறது. ஆனால் என்ன செய்துவிடமுடியும் இந்தியாவால்? மும்பை தாக்குதலில் உயிரோடு பிடிபட்ட, அதற்கான வீடியோ ஆதாரம் உள்ள அஜ்மல் கசாபை விசாரிப்பதையே இந்தியா இன்னும் ஒழுங்காகச் செய்து முடிக்கவில்லை. அவன் ஒரு சிறுவன், அதனால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் கசாபுக்காக வாதாடக்கூட நம்மூரில் ஆட்கள் இருக்கிறார்கள்.

நீடு எஞ்சுதலும், நவீனத்துவமும்

உரைநடையை எப்படிக் கவிதையின் அமைதியோடு எழுதுவது, அதே நேரம் அதில் ஒரு இசைத் தன்மையை எப்படிக் கொணர்வது என்று துவக்க காலக் கவிஞர்கள் கவனத்தோடு செயல்பட்டனர். சந்தத்தை உரைநடையோடு இணைக்கும் முயற்சி அது. மேற்கில் என்ன காரணங்களுக்காக மாடர்ன் பொயட்ரி என்ற உரு பரவியது என்பதை யோசித்து, அதே வகைக் காரணங்கள் தமிழில் இல்லாதபோதும், ஒரு சில ஒற்றுமைகளை பெரும்தளத்து அளவில் தமிழ்க் கவிஞர்கள் உணர்ந்தனர். அதாவது, சமூக, பண்பாட்டு, இலக்கிய மரபிலிருந்து விடுபடுதல் ஒரு முதல் கட்ட நகர்தல்.

தேநீர்

தமிழ் பண்பாட்டின் நாட்டுப்புறக் கலையான ‘கூத்து’க்கு இணையான சீன ‘ஓபெரா’ வகையான நாடகங்கள் சீனத்தின் தேநீரகங்களில் நடக்கும். பேய்ஜிங்கின் தென் பகுதியில் தியன்ச்சியோ என்ற வட்டாரத்தில் இருக்கும் ஒரு கட்டடம் முழுக்க மரத்திலானது. இது 1933ல் கட்டப்பட்டுள்ளது. இன்று இந்தக் கட்டடத்தில் இயங்கும் தேநீரகத்திற்குள்ளிருக்கும் மேடையில் அப்பகுதியில் நிலவிய நாட்டுப்புறக் கலாசாரத்தைக் குறித்து அறிந்திட இங்கு நடக்கும் நாடகங்கள் உதவுகின்றன.

நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம்?

தலைமை அறிஞர்களாக விளங்கிய இவர்களின் வார்த்தைகளை உதிரி சமூக விஞ்ஞானிகளும் வழிமொழிய வேண்டிய நிலை ஏற்பட்டது. வழிமொழிந்து நின்றவர்கள் JNU போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பும், மேற்கு நாடுகளிலிருந்து அழைப்பையும் பெற்றனர். மதச்சார்பின்மைவாதிகளின் ஆதிக்கம் மெல்ல மெல்ல தன்னுடைய உள்ளார்ந்த தணிக்கையை உருப்பெருக்கிக் கொண்டது. எந்த ஆய்வுகள் பதிக்கப்படவேண்டும், அரசின் நிதி உதவி எதற்கு ஒதுக்கப்படவேண்டும், எந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படவேண்டும் போன்றவற்றை இந்த உள்ளார்ந்த தணிக்கை முடிவு செய்தது.

உரிமை இழப்பின் பதிவுகள்

“இரண்டு ஏக்கர் நிலம்” வழக்கமான இந்திய திரைப்படங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டே துவங்குகிறது. காய்ந்து, பாளம் பாளமாக வெடித்துப் போன நிலம். ஒரு இலை கூட இல்லாத உயிரற்ற ஒரு மரம். விவசாயிகள் துன்பத்தில் வாடுகிறார்கள். அடுத்த காட்சி சட்டென திசை மாறுகிறது. மேகத்தை கிழித்தபடி பெய்யும் மழை. விவசாயிகள் மழையில் நனைந்து, தங்கள் துன்பம் தீர்ந்ததென்று மகிழ்ச்சியில் ஆடி பாடுகிறார்கள். திரைப்படம் பயணிக்கப் போகும் திசை குறித்த எந்த ஒரு முன்முடிவையும் பார்வையாளன் மேற்கொண்டுவிட முடியாது. மிக நுட்பமாக ராய் தனது பார்வையாளனை வழிதவற வைக்கிறார்.

தூரிகைக்கலை

ஓவியத்தையும் தூரிகைக்கலையையும் ஒரே தாய்வயிற்றுப் பிள்ளைகள் என்று வருணிப்பர் சீனர். அவ்வந்த காலத்துக் கலைஞர் உருவாக்கிய முக்கிய பாணியிலிருந்தே படைப்பின் காலத்தைச் சொல்லிவிடக் கூடிய தூரிகைக் கலைஞர்கள் சீனாவிலும் சீனாவுக்கு வெளியிலும் இன்றும் உளர். சீனத்திலோ அரசர் முதல் ஆண்டி வரை பலரும் தூரிகை ஓவியங்களைக் காலங்காலமாக சேகரித்துப் பாதுகாத்திருக்கிறார்கள். சீனச் சமூகத்தில் வீடு, அறைகள், பெரிய கட்டங்கள், நீதிமன்றம், கைவிசிறிகள், சுவர்கள், நுழைவாயில்கள், அருங்காட்சியகம், அலுவலகம், நினைவுச் சின்னங்கள், கல்லறைகள், ஆலயங்கள் என்று எங்கெங்கு காணினும் தூரிகைக்கலையின் சுவடுகள் வாழ்த்து, முதுமொழிகள், அறிஞர் பொன்மொழிகள், கவிதை, பாடல், ஈரடிக்கவிதை, கடிதம் போன்ற பல்வேறு வடிவில் மிளிரும்.

Y2K நெருப்பும், தொடரும் புகைமூட்டமும்

வெகுஜன மக்கள் பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் எளிமைப்படுத்தி சொல்வதையே விரும்புகிறார்கள். இதன் முக்கிய விளைவு? துறைசார் அறிவு, துறை சாராதவர்களிடமிருந்து பெறப்படும் நிலை. உதாரணம் : இனம்/இந்திய வரலாறு குறித்த பாடம் எடுத்த அரசியல்வாதிகள், சினிமா உட்பட அனைத்தும் அறிந்தவனாக அறிவித்துக் கொள்ளும் கலைஞானிகள், விஞ்ஞானத்துடன் இணைத்துக் கொண்ட மதவாதிகள். இப்படி நீண்டபடியே இருக்கிறது இந்தப் பட்டியல். இதனால் சொல்பவர்களுக்கு காலப்போக்கில் ஒரு ஒளிவட்டமும், அதிகார பீடமும் நிச்சயம். கேட்பவர்களுக்கு? காதுல பூ!!

புத்திசாலியான முட்டாள்-II

1970களில் யூரி கெல்லர் ஒரு மகத்தான நிகழ்வாக அலையடித்தார். “மன சக்தியால்” அவர் கரண்டிகளை வளைத்தார். முத்திரையிடப்பட்ட உறைகளிலிருந்த சித்திரங்களை “ஞானப்பார்வையால்” கண்டறிந்து வரைந்தார். பிரிட்டனின் மிகச்சிறந்த அறிவியலாளர்கள் அவருடைய அதீதமன ஆற்றல்களுக்கு சான்று பகர்ந்தனர். ஜேம்ஸ் ராண்டி என்கிற தொழில்முறை மாயாஜால நிபுணர் கெல்லரை போலவே கரண்டிகளை வளைக்கும் வரை. ஆனால் ராண்டி அந்த வித்தைக்கு அதீதமனசக்தி தேவையில்லை என்பதையும் தேர்ந்த கையசைவுகளும் பார்ப்பவர்களின் கவனத்தை சிதறடித்து அதனை செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்பதுமே அவசியம் என விளக்கிய போது அறிவியலாளர்களின் முகங்களில் ஈயாடவில்லை.

பயங்கரவாதத்தின் ரணங்கள் – 26/11

26/11 என குறிப்பிடப்படும் அந்த பயங்கரவாத போர் இந்தியாவின் மீது நிகழ்த்தப்பட்டு ஓராண்டு முடியும் இத்தருணத்தில் உலகளவிலும், ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் அந்நிகழ்வின் பாதிப்பு குறித்து பேச வேண்டியது அவசியம். இந்திய சமூகத்தின் தனி ஒரு மனிதனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பையும் அசைத்துப் பார்த்திருக்கிறது. நமது அரசு அமைப்புகளின் தடித்தனத்தையும், தவறுகளையும் வெளிக்காட்டியிருக்கிறது. கூடவே நம் சமூகத்து குறைபாடுகளையும்.

கார்கோகல்ட் ஹிந்துத்துவா

நாஸா சான்றாதாரம் தேடும் ஹிந்துத்துவர்களை நாம் இந்த வரைபடத்தில் எந்த புள்ளியில் நிறுத்தலாம்? முதலில் ஏன் நாஸா? இவர்கள் எப்போதும் சுதேசியை முன்வைப்பவர்கள் அப்படியிருக்க ஏன் இஸ்ரோவை தேர்ந்தெடுக்க கூடாது? ஏன் நாஸாவை தேர்ந்தெடுக்க வேண்டும்? தங்களை ஒரு உலகளாவிய வட்டத்தில் வைத்து பார்க்க முயல்கிறார்கள். அவர்களை அறியாமலே அதற்கான சிறந்த வெளிப்பாடாக அமெரிக்க அறிவியல் நிறுவனம் ஒன்றை தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் பழமைக்கு ஒரு சான்றாதாரம் தேடுகிறார்கள்.

மகரந்தம்

நம்பிக்கைகளின் அடிப்படையில் மனிதகுலம் மிகப்பெரும் பிளவை சந்திக்கிறது. இந்தப் பிளவின் இடைவெளியில் புதைக்கப்பட்ட பிணங்கள் கணக்கிலடங்காதவை. மதம் சார்ந்த நம்பிக்கையாளர்களின் பூசல் ஒரு பக்கம். இந்நாணயத்தின் மற்றுமொரு பக்கம், கடவுள் மறுப்பாளர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையே நடைபெறும் பூசல்.

வள்ளுவரும் ஒழுக்கமும்

திருவள்ளுவர் காலம் வரையிலும் சமூகத்தில் பெருவழக்காக, அரசியல் வகையில் அங்கீகரிக்கப்பட்டனவாக பரத்தையர் தொழில், கள் வணிகம், சூதாடல், மருந்து போன்றவை இருந்து வந்ததை சங்க இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். இவற்றை ஊக்குவிப்பது, கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வதென்பது அரச அதிகாரம் சார்ந்தது.

பல்ஸாக்கும் சீனத் தையற்காரிச் சிறுபெண்ணும்- தாய்-சீஜி

தாய்-சீஜிக்கு இரு வடிவங்களுண்டு. அவரொரு தேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் என்பது முதலாவது, வெற்றிகரமான எழுத்தாளர் என்பது இரண்டாவது. முதலாவது துறையில் அவர் வாங்கிக் கட்டிக்கொண்டது ஏராளம், குறிப்பாக சீன அரசிடமிருந்து. ‘எனது மனத்துயரம் சீனா’ (Chine ma douleur) என்ற திரைப்படத்திற்காக சீன அரசாங்கம் அவரை நாடு கடத்தியது. அப்படத்தில் வரும் இளைஞன் செய்த குற்றம் அரசால் தடை செய்யப்பட்டிருந்த இசைத் தட்டொன்றை தனது வீட்டில் வைத்திருந்ததும், அதைப் போட்டுக் கேட்டதும்.

மாய உறுப்புகள் நிறுவிய ஞான தரிசனம்

எதனை இந்த உலகத்தின் துயர் துடைக்காத தத்துவம் என்கிற மாதிரியாக ரூபர்ட் ஷெல்ட்ரேக்கும் எந்த தத்துவ சிந்தனையின் வெற்றியால் இந்தியாவில் அறிவியல் தேக்கநிலையை அடைந்தது என அவுட்லுக் கட்டுரையாளரும் கருதினார்களோ அதே தத்துவசிந்தனை துயர் துடைக்கும் செயல்முறையை உருவாக்கியதை நாம் காண்கிறோம். இந்திய தத்துவத்தின் ஒரு பெரிய கண்டடைதலே மாயை என்பது. இது உலகமே பொய் என்பதாக கடந்த இருநூறு ஆண்டுகளின் பொதுபுத்தியில் பதியவைக்கப்பட்டது. ஆனால் மாயை என்பது எப்படி நாம் புலன்களால் அடையும் ஒவ்வொன்றும் கட்டமைக்கப்படுகிறது என்பதை சுட்டுவது. அதனை தத்துவத்திலும் வாழ்க்கை முறையிலும் ஒரு கூறாக மாற்றியதன் மூலம் இந்திய ஞான மரபு ஒரு வலிமையான பண்பாட்டை உருவாக்கியது.

வீகுர் இனப்பிரச்சனையின் ஒரு வேர்

இயல்பிலேயே தங்களுக்கென தனி அடையாளத்தையும், கலாச்சார ரீதியாக தனித்துவம் பெற்றிருந்த உய்குர்கள், எக்காலத்திலும் தங்கள் மீதான சீன அரசின் அடக்குமுறையை சிறிதும் விரும்பவில்லை. வரலாற்றில் உய்குர் மக்கள் அவர்களின் கலைதிறனுக்காக பெரிதும் புகழப்படுபவர்கள்.

அறிவியல் கல்விக்கான சமுதாயத்தேவை

பிராந்திய இயற்கை வளங்களையும் அதனுடன் தன் வாழ்வு பின்னிப்பிணைந்து கிடப்பதையும் சிறிதும் உணராமல் நம் மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளிவந்து பட்டமும் பெற்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு அறிவியல் என்பது முற்றிலும் மேற்கத்திய விஷயம்; வெள்ளைக் கோட்டுடன் வெள்ளைத் தோலுடன் இணைந்த ஒரு பண்பாட்டு அன்னியம்.