படுக்கையருகே உள்ள சிறு மேஜைமீது உலர்ந்த கண்ணாடிக் கோப்பை இருந்தது, இரண்டு வறண்ட ரொட்டித் துண்டுகள் இருந்தன. அவள் தன் உதடுகளை உறிஞ்சினாள் – தடித்து, வெடித்திருக்கும் கீழ் உதடு முதலில், பிறகு மேல் உதடு – தன் கோரைப்பற்களால் அவற்றைப் பிடித்து மெலிதான உலர்ந்த தோலை உரிக்கிறாள். அவள் நாறிக் கொண்டிருக்கிறாள் – வேறெப்படி இருக்கும், அவளுடைய இரவாடைகளின் கீழேயிருந்து உடல் மாமிசத்தின் வாடை மேலெழுந்து வருகிறது, பாதங்களில் அழுக்கு படலமாக ஒட்டியிருக்கிறது. படுக்கையின் மேல் விரிப்புக்குக் கீழே, அரிப்பெடுக்கிற ஒரு குதிகாலை இன்னொரு காலின் நுனிவிரல்களால் சொரிகிறாள், அழுக்கு அவள் கால் நகங்களின் அடியில் சுருள்கிறது.
Author: மைத்ரேயன்
முது மது (நாட்படு தேறல்)
சாண்ட்ரா விழுங்குவதற்குச் சில கணங்கள் எடுத்துக் கொண்டாள். “இல்லைதான், உங்களிடம் இருப்பது ஜனங்களே பிரச்சினைகளாக இருந்தாலும், அவர்கள் தங்கள் பிரச்சினைகளிலிருந்து ஓடிப் போக வழி செய்வது.”..டாக்டர் கோல் அசைவின்றி அமர்ந்திருந்தார், … “ஆமாம், அது ஒரு பெரும் பங்கு இதிலெல்லாம். நாம் ஒரு பெரிய சிக்கலை உருவாக்கி விட்டு, அதன் விளைவுகளைச் சந்திக்காமல் அவற்றிலிருந்து பறந்து போய் விட முடியாது. கடிகாரத்தைத் திரும்பி வைத்து, நிஜ வாழ்வில் ஏற்பட்ட சேதங்களை மற்ற மனிதர்கள் மீது சுமத்த முடியாது. நீ இதைச் சரியாகப் பிடித்து விட்டாய்.”
மொழிபெயர்ப்பினாலான பயனென்கொல்?
எனக்கு நேரடியாகச் சந்தோஷம் கொடுக்கும் எழுத்தாளர்கள் சிலர் உண்டு. சில எழுத்தாளர்கள் என்னை யோசிக்கச் செய்வார்கள், அல்லது நல்ல விதமாக என்னைத் தொந்தரவு செய்வார்கள், அல்லது அவர்களின் பாத்திரங்களுக்காக என்னைக் கவலைப்படச் செய்வார்கள். லாஃபெர்ட்டி இவை எல்லாவற்றையுமே செய்தார், அவற்றை எல்லாம் மிகவும் நன்றாகவும் செய்தார். ஆனால் அவர் அதற்கு மேலும் ஏதோ செய்தார். ஒரு லாஃபெர்ட்டி கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நான் சந்தோஷத்தால் புன்னகைக்கத் துவங்குகிறேன்.
பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – பாகம் 2
“நீண்ட இழை மேபிள் (மரம்),” என்றார் ஸோர்கின், சுட்டியபடி. “பழைய ஸிட்கா ஸ்ப்ரூஸ் (மரம்). வார்ப்பு இரும்பு. நிக்கல். பதினெட்டு அடுக்குகள் எப்படி ஒட்டிக் கொண்டிருக்கின்றன, பார். அது யூரியா ரெஸின் ஒட்டுப் பசை. இதற்கு முன்னால் ஒரு காலத்தில் இதுவே மிருகத் தோல்களிலிருந்து காய்ச்சிய ஊன்பசையாக இருந்தது.”
அவர் கம்பிகளின் மேல் தன் கையைத் தடவினார். “எஃகிரும்பு. கூடவே செப்புக் கம்பியில் சுற்றிய எஃகிரும்பு.”
“இப்ப இங்கே பார்,” என்றார் அவர். “இது அத்தனை சிறப்பு. காஷ்மீர் (கம்பளம்).” அவனுடைய வியப்பைப் பார்த்து அவர் சிரித்தார். “ஆமாம், காஷ்மீர். திருப்பு முனைகளுக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள்.”
பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 1
காய்கறிகளை வெட்ட உதவும் ஒரு சிறு பலகையையும், சீவுவதற்குப் பயன்படும் கத்தி ஒன்றையும் வெளியே எடுத்தார். சாக்லெட்டின் மீது கத்தியால அழுத்தி வெட்டுமுன்னர், கத்தியை இப்படியும் அப்படியும் நகர்த்தி அலைத்தார், பிறகு ஓரிடத்தில் இலேசாகப் பொருத்தினார். எதனுள்ளும் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அதைத் தன் வாய்க்குள் போடுவது அவருக்கு ஏற்காது. கத்தி இறங்கி, சாக்லேட்டுக்குள் காரமெல் இருப்பதைக் காட்டியது. ஒரு பாதித் துண்டை எடுத்து அதைத் தின்றார். அதைத் தின்னும்போதே, சிலர் அந்த சாக்லேட்டுக்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமலே அந்த சாக்லேட் முழுவதையும் குருட்டுத்தனமாக வாயிலிட்டுத் தின்று விடுவார்கள் என்று நினைக்கவும் அவர் உடலில் நடுக்கம் பரவியது.
கயோட்டீ கதைகள்
“வெறும் கதைகள். நீ, நான், எல்லாரும், நாமெல்லாம் கதைகளின் ஒரு கூட்டம், அந்தக் கதைகள் என்னவாக இருக்கின்றனவோ அதெல்லாம்தான் நாமாக இருக்கிறோம். பழங்குடிகளைப் போலவேதான் வெள்ளையருக்கும். ஒரு பழங்குடிச் சமூகத்துக்கும், நகரத்துக்கும், நாட்டுக்கும், உலகத்துக்குமே இதேதான் பொது. இந்தக் கதைகள் எல்லாமாகச் சேர்ந்து, எப்படிப் பின்னிச் சேர்கின்றனவோ அதெல்லாம்தான் நாம் யார், என்ன, எங்கே எப்படி இருக்கிறோம்னு சொல்லுதுங்க.”
“மறக்கிறத விட்டுட்டு நினைவுபடுத்திக்க ஆரம்பிக்கணும் நாமெல்லாம். இது வேணும், அது வேணுமின்னு கேட்கறதை நிறுத்தணும், நமக்கு வேணுமுன்னு நாம நினைக்கிறதை ஜனங்க நமக்குக் கொடுப்பாங்கன்னு காத்திருக்கறதை நிறுத்தணும். நமக்குத் தேவையானதெல்லாம் கதைங்கதான்.
எரியும் காடுகள் – 4
எரியும் காட்டுக்குள் ஆழப் போனேன். என்னைச் சுற்றி எங்கும் மஞ்சள்- ஆரஞ்சு நிறமாக ஆகும்வரை, தீய்ப்பதாக இருந்தது. நான் அப்போது காட்டின் தரையில் அமர்ந்தேன், ஜ்வலிக்கும் கங்குகள் கருத்த ஆகாயத்திலிருந்து புரண்டு விழுவதைப் பார்த்திருந்தேன்.
துப்பாக்கி ரவை நம் மூளைக்குள் குடைந்து போவது போகும்போது எப்படி உணர்வோமோ அப்படித்தான் எரியும் மரங்களும் தெரிந்தன. மரங்களில் வலியை உணரும் திசுக்கள் இல்லை அதனால் நெருப்பு அந்த மாதிரி வலியாகக் கொணராது. அது தூலமானதல்ல. அது எல்லாவற்றின் இறுதியிலும் இருக்கும் நியாயத்தின் நெருப்பு. நிரந்தரமான, மாற்ற முடியாத தவறுகளையெல்லாம் எரிப்பது, உலகின் விளிம்பிலிருந்து பறந்து போவதைப் போன்றது. அது கடைசி ஒலியின் தாக்கும் எதிரொலி….
எரியும் காடுகள்-3
என் துப்பாக்கி ரவைகளை நான் திரும்ப அடைந்து விட்டேன். என்ன பெரிய சாதனை இது? என்னிடம் துப்பாக்கி கூட இல்லை.
கதவருகே நான் போக சில எட்டுகள் இருந்தன, அப்போது ஏதோ ஒன்று என் கண்களில் தென்பட்டது. அது கணப்பிடத்தின் மேலே இருந்த மேல் மூடியின் மீதிருந்தது. அந்த கணப்படுப்பிலிருந்து நேற்றைய சாம்பல்கள் சுத்தமாக அகற்றப்பட்டிருந்தன.
நான் அதை உற்றுப் பார்த்தேன், அப்படியானால், ரால்ஃபின் நடத்தை நேற்று திடீரென்று மாறியதற்கும், அந்தத் துப்பாக்கி ரவைகளிருந்த பைக்கும் ஒரு தொடர்பும் இருக்கவில்லை.
எரியும் காடுகள் – 2
துடுப்பு என் மடியில் பத்திரமாக இருப்பதை உறுதி செய்து கொண்டேன், மிச்சமிருந்த சாண்ட்விச்சை வெளியே எடுத்தேன். ஒரு துண்டு விடாமல் எல்லாவற்றையும் சாப்பிட்டேன், பின்னர் அதைச் சுற்றி வந்த மேல் காகிதத்தைப் பயன்படுத்தி, பனித் துகளைச் சேகரித்து அதை வாய்க்குள் திணித்துக் கொண்டு சாப்பிட்டேன். நான் ஏற்கனவே நிறைய வியர்த்திருந்தேன், பசியை விட உடலில் நீரிழப்பு என்பது மோசமாகப் பாதிக்கும், நான் இருக்கும் இடத்தை உத்தேசித்தால் அப்படி நடப்பது அங்கதச் சுவை கொண்டதாகத்தான் இருக்கும். ஏரித்தண்ணீர் குடிக்கக் கூடியதாக இருந்திருக்கும், ஆனால் நான் ஏற்கனவே வேண்டுகிற அளவு ஆபத்தை மேற்கொண்டிருந்தேன்.
எரியும் காடுகள் – 1
நான் அங்கே இருந்து மூன்று வாரங்கள் ஆனபின்னரே அவர் அந்தத் தீவைப் பற்றிச் சொன்னார், என் கணக்கில் நாங்கள் உரையாடியதில் அது மூன்றாவது அல்லது நான்காவது தடவையாக இருக்கும். முதல் சில நாட்களுக்கு அவர் என்னை அணுகாமல் என் போக்கில் இருக்க விட்டார். அந்த ஓய்வு வாசஸ்தலத்தில் (அப்படி ஒரு வர்ணிப்பு பழைய காலத்து அர்த்தத்தில்தான் அந்த இடத்துக்குப் பொருந்தும். அது எங்கோ மலைகளடர்ந்த, எட்டாக்கையான ஒரு பிரதேசத்தில் இருக்கும், பாசி படர்ந்த, பழைய சிறுகுடில்களின் தொகுப்பாக இருந்தது) நான் சேர்ந்தபோது குளிராக, இருண்ட, மிக நேரமாகி விட்ட பின்மாலைப் பொழுதாக இருந்தது.
சாரணர் மனோபாவமும் போர்வீர மனோபாவமும்
“ஆய்ந்தறிந்து பேசுதல்” என்ற பாட்காஸ்ட்டை நடத்துபவரும், செயல்முறை ஆய்வறிவுக்கான லாபநோக்கில்லாத மையம் ஒன்றை பெர்க்லியில் நிறுவத் துணை நின்றவருமான கேலெஃப், இந்தக் கருது பொருளைப் பற்றி எழுதிய புத்தகத்தில் ‘ஆய்தறிதல்” என்ற சொல்லை மிக அரிதாகவே பயன்படுத்துகிறார். மாறாக அவர், “சாரணர் மனோபாவம்” ஒன்றை விவரிக்கிறார். அது நமக்கு “சாரணர் மனோபாவமும் போர்வீர மனோபாவமும்”
தீர யோசித்தல்
இதற்கிடையில், அமெரிக்கர்களில் பாதிப்பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள்; பலர் சதித்திட்டங்கள் பற்றியும், போலி அறிவியல் முடிவுகளையும் நம்புகிறார்கள். நாம் சிந்திப்பதில்லை என்று சொல்ல முடியாது- நாம் தொடர்ந்து படிக்கிறோம், கருத்து சொல்கிறோம், விவாதிக்கிறோம் – ஆனால் நாம் செய்வதை ஓட்டமாய் ஓடியபடி, நம் செல்ஃபோன்களில் வம்புவதந்தி பரப்பித் தொல்லை செய்யும் புன்மதியாளர்களைப் பார்வையைக் குறுக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பையப் பையப் பயின்ற நடை
சொல்வனம் பத்திரிகையின் 250 ஆம் இதழைப் பற்றிச் சில எண்ணங்கள். சில பத்திரிகைகள்- மேலும் இதர பண்பாட்டு வெளிப்பாடுகள்- எடுத்த எடுப்பிலேயே உசைன் போல்ட் தடகளத்தைக் காற்று வேகத்தில் கடப்பது போல, அசாதாரண லாகவத்துடன், துரிதத்துடன் செயல்படத் துவங்கி விடுகின்றன. சொல்வனம் துவக்கத்திலிருந்து மதலை போல நடை பழகத் “பையப் பையப் பயின்ற நடை”
சிறப்பிதழ் வரிசை: இந்திய மொழிகள்
இந்த இதழை வங்கமொழிச் சிறப்பிதழின் இரண்டாம் பாகமாகக் கொணர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்….இந்த இதழில் பல சிறுகதைகளைக் கொடுக்கிறோம். பனபூல், ராம்நாத் ராய், சமரேஷ் மஜும்தார், ஸீர்ஷோ பந்த்யோபாத்யாய், மஹாஸ்வேதா தேவி, ஆஷாபூர்ணா தேவி, சுபிமல் மிஸ்ரா, மோதி நந்தி, ரபீந்த்ரநாத் தாகுர்ஆகியோரின் கதைகள் உள்ளன. பிபூதி பூஷண் பந்த்யோபாத்யாயின் நாவல் ஒன்றின் அடுத்த பாகம் மொழிபெயர்க்கப்பட்டுக் கிட்டுகிறது. ஜாய் கோஸ்வாமி, ஸாங்க்யா கோஷ், புத்ததேவ் போஸ், சக்தி சட்டோபாத்யாயா ஆகியோரின் கவிதைகள் உள்ளன. தவிர நாடக உலகில் உத்வேகத்தைக் கொணர்ந்த பாதல் சர்க்கார் பற்றிய ஓர் அனுபவக் கட்டுரையையும், க்ளைவ் பெல் என்ற ஒரு குழல் இசைக்கலைஞரின் பேட்டியையும் கொடுத்திருக்கிறோம்.
சிற்றடி: ஏன் இந்த முயற்சி?
பல மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களைப் பெற்று வாசித்துப் பார்த்தபோது அவற்றின் சுகந்தம், நேரடித் தாக்கம், ஸ்பரிசானுபவமே போன்ற வாசிப்பனுபவம், எனக்கு இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குச் சென்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை, அதேபோல இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குப் போய் அங்கிருந்து தமிழாக்கம் பெற்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை.
ஷெர்லி ஹாஸர்ட் (1931-2016) – ஓர் அறிமுகம்
ஹாசர்டின் உரைநடை, பழமொழிகளைப்போலச் சுருங்கச் சொல்வதாகவும், ரத்தினக் கற்களை வெட்டுவதுபோலக் கூர்மையான விளிம்புகளோடும் இருப்பது – அது இத்தகைய குறிப்புகளிலிருந்து உருப்பெற்றது. அக்குறிப்புகள் எங்கோ கேட்டவை, அல்லது கனவாகப் பெறப்பட்டவை, பிறகு எழுதி வைக்கப்பட்டவையாக இருந்தன.
அமிழ்தல்
அக்கா, முன்பு நீ தேடிக்கொண்டிருந்த சுட்டுப் பெயர்; உன் புத்தியிலிருந்து மறைந்துவிட்டதாகத் தோன்றுகின்றவற்றில் அதுவும் ஒன்று. நீ வார்த்தைகளைப் பெறப் போராடுகிறாய்; ஆனால் அந்த அமிழ்த்தி உனக்குக் கொடுப்பவை எல்லாம் நடுவாந்திரமாக, தொடர்பறுந்த வகைச் சுட்டுப் பெயர்களாகவே உள்ளன, அவற்றில் ஒன்று உனக்கு உள்ளுணர்வால் உடனே தெரிகிறது, தவறான சொல் என்று – அதை வெளிதேசத்தவரும், அன்னியரும்தான் இந்த மாதிரிச் சூழல்களில் பயன்படுத்துவார்கள். “அக்கா,” நீ அந்தச் சுட்டுப்பெயரை, இறுதியில், திரும்பச் சொல்கிறாய், ஏனெனில் உனக்கு வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.
வெள்ளைப் புள்ளி
“நுரையீரல்களைப் பார்,” அப்பா சொன்னார். “ஆரோக்கியமான நுரையீரல்கள் நெகிழக் கூடியவை. நாம் மூச்சை இழுக்கும்போது, அவை விரியும், விடும்போது சுருங்கும். சில நோய்கள் தாக்கினால் அவை இந்த நெகிழும் குணத்தை இழந்து விடுகின்றன. அவை அளவுக்கு அதிகமாக உப்பும். இங்கே இதயம் எத்தனை குறுகித் தெரிகிறது பார். தட்டையாக, கீழே போய்விட்ட உதர விதானத் திரையைப் பார்க்கலாம். இங்கே நுரையீரல்கள் ரொம்பப் பெரிசாகவும், ரொம்பக் கருப்பாகவும் இருக்கின்றன. நான் சொன்னேனில்லையா, காற்று இங்கே சிறைப்பட்டிருக்கிறதென்று. இங்கே ரத்தத்தில் போதுமான அளவு பிராண வாயு இல்லை. இந்த நபருக்குக் காற்றடைப்பு நோய் இருக்கிறது.”
ஒரு பயணம்
“அவருக்குப் போன வாரம் இன்னொரு முறை ரத்த அடைப்பு வந்தது,” அவள் சொன்னாள், ஆனால் அது ஏனோ நிஜமில்லை, பொய் என்பது போலவும், ஏதோ அவனுக்கு அதிர்ச்சி கொடுத்துத் தன்னோடு பேசவைக்கவென்று அவள் அதைச் சும்மா சொல்கிறாள் என்பது போலவும் இருந்தது. ஆனாலும் அவன் பேசவில்லை; தன் சிகரெட்டை வலுவாக அவன் உறிஞ்சுவது அவளுக்குக் கேட்டது.
டெட் சியாங்கின் பேட்டி- டொச்சி ஒனெய்பச்சி – எலெக்ட்ரிக் லிட்
ஒரு அதிபுத்திசாலி செயற்கை நுண்ணறிவு உருப்பெற்று வந்தால்- அது நடக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லை- அத்தகைய நுண்ணறிவு பிரபஞ்சத்தைக் கைப்பற்றி ஆள விரும்பும் என்று இத்தனை மனிதர்கள் ஏன் நினைக்கிறார்கள்? இந்த எண்ணம் ஸிலிகான் பள்ளத்தாக்குடைய முதலியத்தைப் பார்த்து எழுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது: தொழில்நுட்ப முன்னோடிகள் தாம் அறிவு பூர்வமாக யோசிப்பவர்கள் என்று நம்புகிறார்கள், வளர்ச்சியை மற்றெதற்கும் மேலே வைக்கிறார்கள், அதனால் அதிபுத்திசாலி ஜீவராசியும் அதையேதான் செய்யப் போகிறது என்ற கருத்து இது.
வண்டல் படிய ஓடும் நதி
அன்று சிறு பத்திரிகைகளுடைய மிகச் சிறு தொகை சந்தாவைக் கட்ட ஓராயிரம் தமிழர்கள் கூடத் தயாராக இல்லை. இன்று திரும்பிப் பார்க்கையில், நாங்கள் என்ன செய்யவென்று அதைத் துவங்கி நடத்தினோம் என்ற வியப்புதான் எஞ்சுகிறது.
அதை நடத்தியதில் எங்களுக்குக் கிட்டிய நன்மைகளில் தமிழ் நாட்டின் பல இலக்கியகர்த்தாக்களை எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தெரிய வந்ததைச் சொல்லலாம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்களின் தன்மைகளை இந்தப் பத்திரிகையின் மூலம் தெரிந்து கொண்டோம் என்று சொல்ல எனக்கு ஆசைதான். ஆனால் அப்படி ஏதும் அற்புதமாக நடக்கவில்லை.
என்ன இயலாது என்று வேண்டுமானால் தெரிந்து கொண்டோம். என்ன கைவசம் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டோம். அவற்றை எப்படி அடைவது என்பதற்கு அப்பத்திரிகை அனுபவம் உதவவில்லை. ஒரு சிலருக்கு இங்கிருந்து தம் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர அந்த அனுபவம் உதவி இருக்கலாம். அது பற்றி அவர்கள் சொல்வதுதான் முறையாக, நம்பகமானதாக இருக்கும்.
கோடை ஈசல்
முந்தைய பகுதிகள்:பகுதி – ஒன்றுபகுதி – இரண்டு பீட்டர் வாட்ஸ் + டெரில் மர்ஃபி அந்த அறை காயங்கள் ஏற்படும் வாய்ப்பைக் குறைப்பதற்கென கட்டமைக்கப்பட்டிருந்தது. அங்கு படுப்பதற்கு ஒரு கட்டில் இருந்தது. அதன் ஒரு மூலை கிழக்குப் புறச் சுவருக்குள் பதிந்திருந்தது. அது போதுமானதாக இருந்தது. அவள் ஓடிய “கோடை ஈசல்”
கோடை ஈசல்
பாதி உலகம் தள்ளி தூரத்தில இருக்கற கதகதப்பான உங்க ஆஃபிஸ்ல உட்கார்ந்துக்கிட்டு, எங்களுக்கு போதனை செய்யறது உங்களுக்கு சுலபமா இருக்கு. நாங்கதான் ஜீனியோடு போராட வேண்டி இருக்கு, அவ தன்னோட முட்டிகளை தன் முகத்திலே குத்திக்கறா, தன் கையில இருக்கற தோலை உரசிப் பிச்சுப்புடறா, வெறும் மாமிசம்தான் அவ கையில தொங்கறது, அல்லது தன்னோட கண்ணுல ஒரு ஃபோர்க்கால குத்திக்கறா. அவ ஒரு தடவை (உடைஞ்ச) கண்ணாடியைத் தின்னா, ஞாபகம் இருக்கா? ஒரு மூணு வயசுக் குழந்தை அடாவடியா கண்ணாடியைத் திங்கறா! நீங்க இருக்கீங்களே, டெர்ரகானோட சோமாறிகள், எல்லாராலும் என்ன செய்ய முடியறது?
கோடை ஈசல் – பீட்டர் வாட்ஸ் & டெரில் மர்ஃபி
குழந்தைகளை வதைப்பதில் ஒரு சிந்தனைச் சோதனை இது: அப்போதே பிறந்த ஒரு குழந்தையை, நேர்க்கோடுகளே இல்லாத ஒரு சூழலில் கிடத்துவது. அவளுடைய மூளை ஒரு சமன நிலைக்கு வரும்வரை, மூளையின் நரம்புத் தொடர்புகள் எல்லாம் உறுதியாகும் வரை, அங்கேயே இருக்கச் செய்வது. உருக்களின் அமைப்புகளை ஒன்றோடொன்று பொருத்திக் காட்சிப்படுத்தும் கண் விழித்திரையின் மொத்த இணைப்புகளும், தேவை என்று கேட்கும் தூண்டுதலே இல்லாததால், செயல்படுவதை நிறுத்தி விடும், இனிமேல் அவற்றை மறுபடி செயல்பட வைக்க முடியாது போகும். தொலைபேசிக் கம்பங்கள், மரங்களின் தண்டுகள், வானளாவும் கட்டிடங்களின் செங்குத்து உயரங்கள்- உங்களுக்குப் பலியான அந்தப் பெண், தன் வாழ்நாள் பூராவும் நரம்புகளின் வழியே இவற்றைப் பார்க்க முடியாதவளாகவே ஆகி இருப்பாள்.
மகரந்தம்: #மீ டூ இயக்கம்: பெண்கள் நிலை
ஹாலிவுடில் என்ன ஆனால் என்ன, என்னை அதெல்லாம் பாதிக்காது என்பது ஏராளமானவர்களின் அணுகலாக இருக்கும். அப்படிக் கருதினால் உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் எல்லாரும் எத்தனை பிழை செய்கிறீர்கள் என்று? உங்கள் வீடுகளுக்குள்ளும் ஊடகங்களிலும் வெளியாகி எங்கும் மக்களுக்கு ‘கேளிக்கை’யாகக் கிட்டுவன எல்லாம் இந்த ஹாலிவுடின் தயாரிப்புகள்தாம். அவை உங்கள் வாரிசுகளின் மனங்களை எல்லாம் வளைத்துத் தம் மதிப்பீடுகளை அவர்களிடம் பதிக்கின்றன. உங்கள் பெண்களின் உடல் வடிவு, ஆண்களின் உடல் வடிவு ஆகியவை குறித்த பொது எதிர்பார்ப்புகள், சமூக உறவுகளில் நம் நடத்தைகள், எதிர்பார்ப்புகள், உறவுகளின் நியதிகள் என்று என்னென்னவோ ஹாலிவுட் படங்களால் மாற்றி அமைக்கப்படுகின்றன என்று தொடர்ந்து விளக்குகிறார். ஹாலிவுடின் தயாரிப்புகளைப் பார்க்க மறுக்கச் சொல்லி நம்மிடம் வாதிடுகிறார்.
வாசகர் மறுவினை
இசை/ நாட்டியம்/ இலக்கியம்/ நாடகம்/ சினிமா/ விளையாட்டுத் தொழில் (ஸ்பொர்ட்ஸ்) போன்றன எல்லாம் நிகழ்த்தல் துறைகள். இவற்றில் சமத்துவம் என்ற கருத்து மிக மிகப் பெயரளவில்தான் இருக்கும். அது இயங்கு களத்தை எல்லாருக்கும் சமமாக அமைக்க வேண்டும் என்ற நன்னடத்தை பற்றிய மதிப்பீடுகளால் உருவானது. இவற்றில் எல்லாவற்றிலும் மேன்மையான வழிமுறையையும் மனிதக் குரங்கு அவ்வப்போது தேர்ந்தெடுக்கிறது. அதைப் பாராட்டியே இலக்கியம், தர்ம சாஸ்திரங்கள், விவிலிய நூல்கள், ஒழுக்கப் பாடங்கள், வாய்வழிப் போதனைகள், பாட்டி/ தாத்தா கதைகள், உபந்நியாசங்கள், சர்ச்சியப் பிரசங்கங்கள், கல்லூரிகளில்/ பள்ளிகளில் அற போதனைகள், ‘ஆசான்’களின் அறக் கதைகள் எல்லாம் எழுகின்றன. மனிதக் குரங்குக்கு அதன் சிறப்பான நடத்தையை இலக்காகத் தொடர்ந்து முன்வைத்தால் அது ஒரு இலட்சிய புருஷனின் குணங்களை அடைந்து விடும் என்ற உடோப்பிய நோக்கம் இது.
ஆரம், காரம், சாரம்
சொல்வனத்தின் 166 ஆம் இதழ் ஒரு சிறப்பிதழ். இந்தச் சிறப்பிதழ், பல நாடுகளிலும் நிலப்பகுதிகளிலும் வசித்தோ, பயணித்தோ பெற்ற அனுபவங்கள் வழியே இலக்கியம் படைக்கும் திரு. அ.முத்துலிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழும் பதிப்பாசிரியர்களைக் கொண்ட சொல்வனம் இணையப் பத்திரிகை, இப்படிப் புலம் பெயர்ந்த வாழ்வின் அனுபவங்களை இலக்கியமாக்குவதில் திறன் படைத்தவராகப் பரவலாக அறியப்பட்டிருக்கும் திரு.அ.முத்துலிங்கத்தைச் சிறப்பிக்க எண்ணியது இயற்கை. இந்தச் சிறப்பிதழில் அனேகமாக எல்லாக் கட்டுரைகளும் இதழின் நாயகரது திறன் பற்றிய பாராட்டுகளாக, பலரது பார்வைகளில் அமைந்துள்ளன. இத்தனை பாராட்டுகளாகக் கொடுத்தால் திகட்டாதா, ஒரு ருசி மாற்றத்துக்காகவாவது கார சாரமாக ஏதும் கொடுக்கலாகாதா
காளி பிரசாத் எழுதிய பழனி சிறுகதை குறித்து
ஜெயகாந்தன் காலத்துலேருந்து அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எழுதினவங்க எல்லாம் அப்படியே எதார்த்தத்தைக் கொடுக்க முயற்சி செய்தாலும், அந்தக் கதைகள் எல்லாத்திலயும் அவர்களிடம் இருந்த மனிதனாகும் முயற்சியைச் சுட்டி, அவர்களுக்கு எதிராக எத்தனை சக்திகள் இயங்குகின்றன என்று காட்டும் முயற்சிகளாக இருந்தன. லும்பன் வாழ்க்கையைத் தானே கூட வாழ முயன்று வாழ்விலும், தன் முயற்சிகளிலும் தோற்றுப் போன ஜி.நாகராஜன் கூட தன் வேசி/ கூட்டிக் கொடுக்கும் கந்தன் ஆகியோரினுள் இருக்கும் ஆழ்ந்த அன்பையே தொடர்ந்து குறைவான சொற்களில் கொடுத்துக் கொண்டிருந்தார். அது ஏதோ அவர்களை உய்வுக்கு இட்டுச் சென்று விடும் என்பது போலத்தான் அவருடைய அணுகல் இருந்தது. சா.கந்தசாமிதான் 60களின் இறுதியில் கதாசிரியன் இழிவைச் சித்திரிக்கும்போது ஒரு அற நிலைப்பாடும் எடுக்காமல் கொடுக்கலாம் என்ற நிலையில் இருந்து கதைகளை அளித்துப் பார்த்தார். ஆனால் அவராலும்…
மதப் போர்கள்
2014 ஆம் ஆண்டில் ஜூன் மாதம், அல் கைதாவிலிருந்து உடைந்து போன ஒரு குழு, குறிப்பிடும்படியான வகையில் கொடூரமான குழு எனலாம், இந்தக் குறிக்கோளை அடைந்தது, ஆனால் தன் மூலக்குழுவைப் பகைத்துக் கொள்ளவும் செய்தது. ஈராக்- சிரியாவின் எல்லைப் பகுதியின் இருபக்கங்களிலும் பெரும் நிலப்பரப்பை வென்று கைப்பற்றிய, இஸ்லாமிச அரசு என்ற இந்தக் குழு, தன் தலைவரான அபு பக்ர் அல்- பாக்தாதி இனிமேல் காலிஃப் இப்ரஹிம் என்று அறியப்படுவார் என அறிவித்தது…. இந்தப் புது காலிஃபும் அவரது சகாக்களும் இறுதித் தீர்ப்பு வரும் நாளுக்காகத் தயாரிப்புகளில் இறங்கி இருக்கிறார்மள். அது உடனே வரவிருக்கிறது என்று இவர்கள் நம்புகிறார்கள், இந்த நாளில் மார்க்கத்திலிருந்து தவறியவர்களும், சிலை வணக்கம் செய்வாரும் உலகிலிருந்து அழிக்கப்பட்டு உலகு சுத்திகரிக்கப்படும் என்றும் நம்புகிறார்கள்.
நிழல்களிடையில் மணக்கும் தாழை மடல்
கவிஞர் ஞானக் கூத்தன் சென்ற வாரம் காலமானார். . . 50 ஆண்டு காலத்துக்கும் மேல் தமிழில் கவிதைகளும், இலக்கிய விமர்சனமும் எழுதி வந்த ஞானக் கூத்தன் தமிழ் இலக்கியத்தை உறுதியான நவீனப் பாதைக்கு அழைத்து வந்த சில இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவர். . . 60களில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய தமிழ்க் கவிதை … சமகாலத்தை சமகால மதிப்பீடுகளுடன் பார்க்கத் துவங்கிய நிலை, புத்தித் தெளிவு ஏற்படக் காரணமானவர்களில் ஞானக் கூத்தன் ஓர் அசாதாரணமான சக்தி. . . அவரது கவிதைகளையே பலரும் சிலாகித்துக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். ஒரு விமர்சகராக ஞானக் கூத்தன் அறியப்படவில்லை என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட சிலரின் வட்டத்தைத் தாண்டி அவர் இந்த வகையில் அறியப்படாததற்குக் காரணங்கள் என்னவென்று புலப்படவில்லை. பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில் எழுதியது ஒரு காரணமாகாது. ஏனெனில், அவருடைய கவிதைகளே பெருமளவும் சில நூறு பேருக்கு மேல் படித்திராத சிறு பத்திரிகைகளில் வந்தவைதான். ஆனால், அவற்றின் தாக்கம் அன்றாடச் செய்தித்தாளில் இவர் மறைவுக்கு ஒரு தலையங்கம் எழுதுமளவு விரிந்திருக்கிறது என்று தெரிகிறபோது நமக்கு வியப்புதான் எழ வேண்டும். ஆனால், எல்லா செய்தித்தாள்களிலும் தலையங்கங்கள் வரவில்லை என்பதையும் கவனிக்கலாம்.
குளக்கரை:சவுதி நிதி, அரபு விதி, டெட்ராய்ட்டின் அதோகதி
இந்திய அறிவு ஜீவிகளைக் கேளுங்கள், அவர்கள் எல்லாரும் இந்து மதத்தையும், இந்துக்களையும்தான் உடனே ஃபாசிஸ சக்திகள் என்று முத்திரை குத்துவார்கள். அந்த மதத்தின் எதுவும் காட்டுமிராண்டித்தனம். ஆனால் ஐஸிஸ் போன்ற அமைதி மார்க்கத்தினரின் வழி அதி அற்புத முற்போக்கு என்று சொல்வதில் அவர்களுக்குச் சிறிதும் தயக்கமே இராது. ஜவஹர்லால் நேரு பல்கலையின் அதி புத்திசாலி மாணவர் குழுக்களைப் பாருங்கள். எப்படி இந்தியாவை உடைத்து, காஷ்மீரைப் பாகிஸ்தானிடம் கொடுத்து, இந்தியாவுக்குள் சீனாவின் ஆட்சியை (மாவோயிச ஆட்சி) வரவேற்று உலக அமைதிக்கு வழியை நாளையே காணத் துடித்துப் போராட்டம் எல்லாம் நடத்துகிறார்கள். அதல்லவா தீர்க்க தரிசனம்.
மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றி
வருடாவருடம் சென்னையில் இப்போது நடக்கும் புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள் விற்பதாகவும் செய்தி நமக்குக் கிட்டுகிறது. அவை அனேகமாக இலக்கியப் புத்தகங்கள் இல்லை என்பதுதான் நமக்கு எளிதில் புரியாத ஒரு விஷயம். இத்தனைக்கும் தமிழில் இன்றும், நேற்றும் எழுதிய இலக்கியாளர்கள் அப்படி ஒன்றும் புத்தியைக் கலக்கும் தீவிரம் கொண்ட எழுத்தை எழுதி வாசகர்களை அயர்த்துபவர்கள் இல்லை. ஒரு ஜேம்ஸ் ஜாய்ஸ், சாமுவெல் பெக்கெட், யூஜீன் இயானெஸ்கோ, ஃப்லோபேர் அல்லது கார்ல் ஓவெ க்னௌஸ்கார்ட் போல இயல்பான வாசிப்பைச் சவாலாக ஆக்கித் தருபவர்கள் தமிழ் எழுத்தாளர்களிடையே மிக மிகக் குறைவு. அவர்களில் 90% போல மிகவும் சுலபமாக அணுகக் கூடிய நடையும், வாசகர்களுக்குப் பரிச்சயமான எதார்த்த உலகின் பல பண்பாட்டுச் சூழல்களைக் கொண்டும், கதை மாந்தரைக் கொண்டும்தான் இந்த இலக்கியங்களைப் படைத்திருக்கின்றனர். இவற்றிலிருந்து இப்படி அன்னியப்பட்டு நிற்க…
படிப்பு அறை – ‘தாத்தாவும் பேரனும்': ‘டோட்டோ-சான்’ – பகுதி 2
இப்படி ஒருவர் இருக்கிறார், இப்படி ஒரு புத்தகத்தை அவரால் எழுத முடிகிறது என்பனவும் மகிழ்ச்சியைக் கூடுதலாக்குகின்றன. நம்மில் எத்தனை பேரால் நம் துவக்கப்பள்ளி வருடங்களை நினைவு கூர முடியும்? அதுவும் அவற்றை விரிவாக, வண்ணங்களோடு, தம் ஆசிரியை, ஆசிரியர்கள் பற்றிய வருணனைகளோடும் அவர்கள் நம்மோடு நடத்திய பல உரையாடல்களின் சாரத்தோடு நினைவு கூர முடியும்? நம்மில் பலரும் தம் துவக்கப் பள்ளி ஆசிரியர்களைப் பெயரோடு நினைவு வைத்திருப்போம், ஆனால் அவர்கள் நம் வாழ்விற்குக் கொடுத்த கொடை என்ன என்பதை அத்தனை விவரமாகச் சொல்லத் தெரியாதவர்களாகவே அனேகமாக இருப்போம்.
படிப்பு அறை – 'தாத்தாவும் பேரனும்'; 'டோட்டோ-சான்'
விசித்திரமான விஷயம் என்னவென்றால், மொழி பெயர்ப்பில் எனக்குக் கிட்டிய அத்தனை மகிழ்ச்சி மூல நூலில் அப்போது கிட்டவில்லை. மூல நூல் வேறொரு உலகை எனக்கு அறிமுகப்படுத்தியது என்றாலும், அதுவும் நன்றாக இருந்தது என்றாலும், மொழி பெயர்ப்பும் அது விரித்த உலகும்தான் என் மனதில் ஆழப்பதிந்திருந்தன. பின்னாளில் மொழி பெயர்ப்பை மறுபடி தேடிப்படித்த போது மொழி பெயர்ப்பு என்பது எனக்குமே ஒரு பிடித்த கலையாக, நானும் பயில்கிற ஒரு விஷயமாக இருந்ததால், இந்த முறை அந்த மொழி பெயர்ப்பின் போதாமைகள் புரியத் துவங்கி இருந்தன. ஆனாலும் அப்புத்தகத்தின் வாசகர்கள் யாரென்று யோசித்து அவர்களுக்கு வாசிப்பு சௌகரியம் இருக்க வேண்டுமென்று கருதி வல்லிக்கண்ணன் அந்த மொழி பெயர்ப்பைச் செய்திருக்க வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது.
பேட்டிகள் – சில குறிப்புகள்
நாம் ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும்போது என்ன எதிர்பார்க்கிறோம்? ஏன் அத்தனை நேரம் அதற்குச் செலவழிக்கத் தயாராக இருக்கிறோம்? புனைவுலகில் அப்படி என்னதான் பெரும் சூட்சுமம் இருக்கிறது, புனைவு எப்படி உதிக்கிறது, அதை ஒருவர் எப்படிக் கட்டமைக்கிறார், ஏன், அவருடைய அனுபவம்தான் என்ன அப்படி ஒரு வாழ்வு வாழ்வதில், அவர் எப்போது திறன் இருக்கிறது என்பதை அறிகிறார், வாசகர்களின் ஆர்வம் என்பது அவர் வாழ்வில் என்ன பங்காற்றியுள்ளது என்பன போன்றவற்றைத் தெரிந்து கொண்டு நமக்கு என்ன கிட்டப் போகிறது?
ஃபார்மால்டஹைடில் பாடமானதா வரலாறு? – சிலந்தியின் விஷக்கடி
அனுமனின் சித்திரத்தை, ஒரு பண்பாட்டின் நோக்கத்தை மதித்து நோக்குகையில். சுயம் ஒதுங்கி, சமூக ஒழுங்கும், அறமும், நற்பண்பும் மையப்படுவது உயர்வாகக் கருதப்படுவதை அது சித்திரிக்கிறது என்பது உடனே புரியும். லீகோ சித்திரமோ சுயம் என்பதே தொடர்ந்து கட்டப்படுவதையும், அதுவும் சுயத்தாலேயே கட்டப்படுவதையும் ஒரு புரியாத, தீர்வில்லாத புதிராகக் காட்டுவது தெரியும். முன்னது பண்டை நாகரீகத்தின் தாக்கம் என்றால், பின்னது தொழிற்சாலை நாகரீகத்தின், அனேகமாகப் பயனற்ற பொருட்களின் பெருக்கத்துக்காக சமூகங்களைப் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் நாகரீகத்தின் தாக்கம் என்று பார்க்க முடியும். முன்னதில் நம்பிக்கையைத் தொடர்ந்து மேன்மைக்கு வழி கிட்டுவது குறித்த தெளிவு சித்தரிக்கப்படுகிறது. பின்னதில் வாழ்வின் அர்த்தமின்மை குறித்த விசித்திர உணர்வே தலை.
கிருஸ்த்மஸுக்குப் பிறகு மூன்றாவது நாள்
பையன் ஓவரால் அணிந்திருந்தான். அவனுடைய அப்பாவுடைய கட்டம் போட்ட மேல் அங்கி (கோட்) ஒன்றையும் போட்டிருந்தான். அவன் அப்பா வளர்ந்து அந்தக் கோட்டைப் போட முடியாமல் போன பின்பு இவனுக்கு வந்திருக்க வேண்டும், அது மட்டும் சரியாகப் பொருந்தினால் இவனுக்கு நல்ல மேல் கோட்டாக இருந்திருக்கும். அதன் கைகள் பையனுக்காக வெட்டப்பட்டிருந்தன, ஆனால் வேறேதும் செய்யப்படவில்லை.
ஏட்டுச் சுரைக்காயும், மெக்ஸிக அதிபரும்
ஒரு நிருபர் பென்யா நியதோவிடம் அவரது வாழ்வை மாற்றிய மூன்று புத்தகங்களைக் குறிப்பிடும்படி கேட்டார். அவருடைய தடுமாற்றமான பதில், பின்னால் யு ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது, முள் முனையில் நிற்பது போன்ற துன்பம் தரும் நான்கு நிமிடங்கள் நீடித்தது. முதலில், அவர் தனக்குப் பிடித்த நாவல்களைப் பற்றி குழறினார், ஆனால் அவற்றின் தலைப்புகள் அவருக்கு நினைவில்லை. அவர் மொத்த பைபிளையும் படித்ததில்லை என்ற போதும், அதில் சில பத்திகள் அவரது இளம்பருவத்தில் மிக நம்பிக்கையூட்டுவதாக இருந்தன என்று யோசித்துச் சொன்னார்.
க.நா.சுப்ரமணியம் – தஞ்சை பிரகாஷ்
பணத்தட்டுப்பாட்டின் காய்ச்சலில் வதங்கிய இருவரும், சி.சு.செல்லப்பாவும், மணிக்கொடி எழுத்தாளர்களும் எப்படி உயர் இலக்கியம் என்ற கனவின் குளுமையில் இளைப்பாறினார்கள் என்பதை இங்கு படிக்கலாம். காலணா, அரையணாவெல்லாம் இவர்களுக்கு அத்தனை முக்கிய விஷயங்களாக இருந்தது தெரிந்து இவர்கள் எதற்காக அத்தனை போராடி ‘இலக்கியம்’ படைத்தார்கள் என்பது குறித்து நமக்கு வியப்புதான் எழும். ஏனெனில் இவர்கள் படைத்த இலக்கியத்தை வாங்கிப் படிக்க அப்படி ஒரு சமூகமே அங்கு இல்லை.
ஜெஃப் டையருடன் ஒரு நேர்காணல்
“நான் பற்பல பொருள்களைப் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். எல்லாப் பொருள்களுக்கும் ஒரே மாதிரி கட்டமைப்பையே பயன்படுத்தியிருந்தால், அதெல்லாம் ஒரு தூசுக்குச் சமமாகி விடும்..”
சாப்ளின் – பகுதி 2
நவீனத்துவம் துவங்கிய பொழுதிலிருந்து மனிதர் துரிதத்தையும் வேண்டி நிற்கிறார். நவீனத்துவத்தின் கடைக்கால்களான கருத்தியல்கள் உலகெங்கும் பரவி, தேர்ந்த விசாரணையற்று அனைத்து நிலங்களிலும் நடைமுறைப்படுத்தப் படுவதன் விளைவு, படைப்பூக்கம் என்பது வளர்வதன் கதியை விட, அழிப்பின் கதி கூடுதலாக உள்ளது. விளைவு, செம்மை என்றும்போல் தொலை வானாகவே இருக்கிறது மானுடருக்கு.
சாப்ளின் : செம்மையும் சமூகமும் – 1
20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எந்த நாட்டில் அவருக்கு அபரிமித பாராட்டும் வசதிகளும் கிட்டினவோ அதே நாட்டிலிருந்து அந்நூற்றாண்டின் நடுவில் கிட்டத் தட்ட ஒரு குற்றவாளி போல நடத்தப்பட்டு, துரத்தப்பட்ட நிலையில் அவர் இருந்தார். அவருடைய அரசியல் கருத்துகளை ஏற்க முடியாத வலது சாரிப் பீதி அமெரிக்காவிலிருந்து அவரைத் துரத்தியது. அவரை அது மட்டும்தான் துரத்தியது என்று சொல்லி விட முடியாது.
இலட்சியக் கொலைகளும், அலட்சியக் கொலைகளும்
ஒரு மைல் நீளத் தெருவில் சுமார் 100 வீடுகளிருக்கும்- பூனைகள் உலவுவதால் என்ன விளைவுகள் என்று சமீபத்தில்தான் எனக்கு உறைத்தது. பூனைகள் அமெரிக்காவில் லட்சக்கணக்கான சிறு பறவைகளைக் கொல்கின்றன என்று படித்த போதுதான் எனக்குப் பிரச்சினையின் பரிமாணம் தெரிந்தது. லெனினியம்/ஸ்டாலினியம் எத்தனை லட்சம் பேரைக் கொன்றன என்பதை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால்தானே புரிகிறது? கம்யூனிசத்தின் பலிகளை லட்சிய பலிகள் என்று சொன்னால் முதலிய அமைப்பு இந்த மாதிரியான அலட்சிய பலிகொண்டு அது சம்பந்தமான குற்ற உணர்வுக்குக்கூடத் தேவையில்லாத குழந்தைமையை பாவித்துக் கொண்டிருக்கிறது.
ஜிப் லாக்கில் அரை நாள்
மண்புழுவை தெய்வம் போல மதிக்கவேண்டும் என்பது தெரியவில்லை. அதை உபாதை செய்யக் கூடாது என்று பெரியவர்கள் அடித்துச் சொல்லிக் கொடுப்பார்கள். எந்தப் பூச்சியையும் கொல்லக் கூடாது என்பதும் வீட்டில் சொல்லித் தருவார்கள். பல்லிகள் வீடெங்கும் உலா வரும். சமையல் உள்ளில் மட்டும் அவற்றை உலாவ விடுவதில்லை. சாமி உள் எனப்படும் பூஜை உள்ளில் பல்லிகளுக்கு பூரண சுதந்திரம். அங்கு கரப்புகள் அவ்வப்போது நடமாடும் என்பதால் இருக்கலாம். நம் ஊர் சாமிகளுக்கும் கரப்புகளுக்கும் ஏதோ கரிசனம் கலந்த உறவு.
பார்த்தும், போர்ஹெஸ்ஸும் பின்னே டயரும் – சில அறிமுகக் குறிப்புகள்
இன்னும் பொருத்தமாகச் சொன்னால், டயர் (Geoff Dyer) வாழ்க்கையின் விசித்திரங்களையும், பாணிகளையும் ஈடுபாட்டுடன் கவனிக்கும் வாழ்க்கை ரசிகர் ; அதில் குதூகலமாய் திளைக்கும் விசிறி என்று கூடச் சொல்லலாம். அதனால் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போகாமல்- அதான் நாவலெழுதுகிறார், புனைவுகளை எழுதுவது எப்படி என்று பல்கலையில் போதிக்கிறார், அவற்றைச் செய்யாமல்- பார்ப்பது, கேட்பது, ருசித்தது, அனுபவித்தது என்று பலதையும் பற்றி தனக்காகவும், நமக்காகவும் குறிப்புகளை எழுதித் தள்ளுகிறார். தனக்காகவும் என்று சொன்னதை இலேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
அனைத்தையும் கடந்ததைப் பற்ற நினைக்கும் கவிஞர்- டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர்
2011 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபெல் பரிசை ஸ்வீடன் நாட்டுக் கவிஞரான டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமருக்கு வழங்கி இருப்பதாகச் சமீபத்தில் செய்தி கிட்டியதும், உலகெங்கும் இலக்கியவாதிகள் நடுவே வழக்கமாக எழும் சலசலப்பு எழுந்தது. இந்தியாவில், தமிழில் இவர் குறித்து ஏதும் அதுவரை பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் மேற்கில் கவிதைகளைப் படிப்பவர் நடுவே ட்ரான்ஸ்ட்ரமர் பற்றி நல்ல தகவலறிவு இருந்ததாகத் தெரிய வந்தது. இதர இலக்கிய வகைகளைப் படிப்பவர்களுக்கு இவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்பதைச் சுட்ட வேண்டும்.
பெருங்கொள்ளையும், அன்னிய வங்கிக் கணக்குகளும்
ஒரு முறை தன்னிடம் இருக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களைக் கொடுப்பதென்று தீர்மானித்து விட்ட இந்த வங்கிகள், இதர நாடுகளின் அரசுகள் இத்தகைய கணக்குகளைப் பற்றிய தகவல் சேகரிக்க முனைந்தால் தருவதாக உறுதி கொடுத்திருக்கின்றன. ஒரு நாடு மட்டும் இந்தக் கணக்குகளைப் பற்றிச் சிறிதும் அக்கறை காட்டவில்லை. அது எந்த நாடு என்று யோசியுங்கள்!! ஆம், அது இந்தியாதான்.
பாலையில் துவங்கிய நெடும் பயணம்
ரஷ்யரைத் தோற்கடித்த பின், ரத்தமில்லாது அந்தப்பகுதி ஆட்சியாளரைக் கொல்லத் தீர்மானித்த மங்கோலியத் தளபதிகள், அவர்களைத் தரையில் படுக்கவைத்து, மேலே ஒரு மரமேடையைப் போட்டு அதன் மீது கூட்டமாக அமர்ந்து உணவு உண்டனராம். மரப்பலகைக்குக் கீழே அந்த அரச குலத்தினர் நசுங்கிச் செத்தனராம். இப்படிப்பட்ட உளவியல் வன்முறையால் மங்கோலியருக்கு என்ன லாபம் என்றால், அந்த பெரும் நிலப்பகுதியே ஒன்றரை நூற்றாண்டுக்கு பெரும் கலவரங்கள் எழுச்சிகள் இன்றி அடங்கி இருந்தது.
இசைவழி ஓடும் வாழ்க்கை – 3
சங்கிலிகளில் கட்டப்பட்டிருந்த நிலைகளில் தம்மிடையே அவரவர் மொழிப் பாடல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். உரக்கப் பாடினால் தண்டனை கிட்டும், என்று ஒலி ஒடுங்கிய முனகலிசையும், தாளங்களும், சொல்லொடுங்கிய இசையும் அவர்களிடம் நிறைய பரிமாறிக் கொள்ளப் பட்டிருக்கிறது. சொற்கள் பேசிப் பழக ஒரே பகுதி மக்கள் இல்லாத காரணத்தால் பொருளிழந்து, தலைமுறைக்குத் தலைமுறை மாற்றிக் கொடுக்கப் படாமல் பாஷை ஞானம் அழிந்த பின்னும் எஞ்சுவன தாளங்களும், பாட்டுகளுடைய இசைப் பாணியும் மட்டுமே. இப்படி ஒரு வினோத பண்பாட்டுத் தொடர்ச்சி அமெரிக்கக் கருப்பர் இசையில் நீடிக்கிறது.
இசைவழி ஓடும் வாழ்க்கை – பகுதி 2
ஒளரங்கசீப் தன் சபையிலிருந்த சங்கீத மேதைகளைப் பாடவிடாமல் பல்லாண்டுகள் தடை விதித்திருந்தான். நாஜிக்கள் ஐரோப்பியரல்லாத மற்ற அனைவரின் இசைக்கும் தடை விதித்திருந்தனர். கம்யூனிஸ நாடுகளில் ‘இயக்கப் பாடல்கள்’ தவிர மற்ற அனைத்து இசைவகைகளையும் தடை செய்திருந்தனர். தண்டிப்பும், சிறைச்சாலைகளும், கட்டாய உழைப்பு முகாம்களும், நொறுக்கப்பட்ட பியானோக்கள், வயலின்கள், உடைக்கப்பட்ட விரல்கள், அறுக்கப்பட்ட குரல் நாண்கள் – எதுவும் இசையை ஒழிக்க முடியவில்லை.