ஜூரிச் (Zurich) பல்கலையில் சேர்ந்த பிறகு, இயற்பியல் கல்வியில் முழுதாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு, 1905ம் ஆண்டில்,அக்காலத்தின் முதன்மையான அறிவியல் இதழான Annalen der Physikக்கு மூன்று கட்டுரைகளை அனுப்பினார். அந்த ஒவ்வொரு கட்டுரையும் நோபல் பரிசு பெறும் தகுதி கொண்டது. முதல் கட்டுரை பொருட்களில் அணுக்கள் இருப்பதை உறுதியாக விளக்கியது.
Category: அறிவியல்
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 8
90 -களில், லோடஸ் என்ற நிறுவனம் நோட்ஸ் (Lotus Notes) என்ற மென்பொருளை அறிமுகப் படுத்தியது. இந்த மென்பொருளை நிறுவி நான் வேலை செய்த நிறுவனத்தில் பயனர்களிடம் போராடிய தருணங்கள் இன்று வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அந்த காலத்தில், மிகவும் நொந்து போகும் ஒரு விஷயமாக இருந்தது. இந்த நோட்ஸ் மென்பொருளில், ஒத்துழைப்பு மற்றும் மின்னஞ்சல் போன்ற விஷயங்கள் அடக்கம்.
தொட்டால் பூ மலரும்
ப்ரோஸ்தெடிக் கரங்கள் அல்லது ரோபோடிக் கரங்களின் பரப்பில் இந்த உணரிகள் இடம் பெறும்போது, அவை இலாகவமான, தொட்டுணரும் தன்மையைக் கொடுக்கின்றன. இந்த உணரிகள் இடம் பெறும் தோலினால் அமையும் ரோபோக்கள், முட்டையை உடைத்தல், சிறு பழத் துண்டுகளை எடுத்துச் சுவைத்தல் போன்ற சின்னஞ்சிறு செயல்களுக்கும் உதவும். மனிதத் தோலைப் போலவே இந்த உணரியும் மிருதுவாக இருப்பதால், மனிதர்களுடன் செயல்படும்போது ஆபத்து விளைவிக்காமலும், மென்மையாகவும் மனித வாழ்க்கைக்கு ஒத்துப் போகிறது.
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 6
உங்களது உண்மையான நோக்கம். எதற்காக இந்த மென்பொருள் அமைப்பை உருவாக்குகிறீர்கள்? எதற்காக, இத்தனை செலவழிக்கிறிர்கள்? ஒரு டாக்டரிடம் உடல்நிலையைப் பற்றி சொல்வதைப் போல என்னிடம் உங்களது உள்நோக்கத்தைச் சொன்னால், என்னால், உங்களுக்குப் பயன்படும் ஒரு ஸிஸ்டத்தை உருவாக்க முடியும்.
சீஸ்
மேலும் சீஸ் உருவாகும் போது இருக்கும் பாக்டீரியாக்கள் அவை பழமையாகும்போது இருப்பதில்லை. இந்த பாக்டீரியாக்களின் உடலிலிருக்கு ம்நொதிகள் சீஸில் கலந்து பழமையாக்குதலின்போது பிரத்யேக நறுமணத்தை உண்டாக்குகின்றன. எனவேதான் பலவகைப்பட்ட பாலிலிருந்து தயாராகும் சீஸ்கள் பலநூறு வகை நறுமணங்களும் சுவையும் கொண்டிருக்கிறது
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 5
அன்றைய நாளின் கடைசி டென்ஷன் ப்ராஞ்ச் முடிந்த பின் காத்திருந்தது. ஒவ்வொரு நாளும், எல்லா பரிவர்த்தனைகளும் முடிந்த பின், வங்கிக் கணக்குகள் ப்ராஸஸ் செய்து அடுத்த நாளை புதிதாக ஆரம்பிக்க வேண்டும். இந்த நிரலில் ஏதோ கோளாரு இருந்ததால், நாட் கடைசி கணக்குகள் இடித்தன. இதை எப்படியோ சோதனை செய்ய நேரமில்லை. ப்ராஞ்சில், அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டார்கள்.
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 4
நானே பார்க்காத ஒரு கணினியில், இந்த வங்கியின் ஒரு கிளைக்கு வேண்டிய நிரல்களை நான் எழுத வேண்டும். இத்தனைக்கும், அதற்கு முன், அப்படி ஒரு வங்கிக்காக எந்த நிரலையும் நான் எழுதியதில்லை! என் கவனம் எல்லாம், எப்படி இந்த ப்ராஜக்டில் மீண்டு வரப் போகிறோம் என்பது மட்டுமே. ஆனால், மற்றவர்களின் பார்வை வேறு விதமாக இருந்தது.
மரியா சிபில்லா!
1668ல் மரியா அந்நகரின் இளம்பெண்களுக்கு மலரோவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார், Jungferncompaney (“Company of Young Misses,”) எனப்படும் திருமணத்திற்கு காத்திருக்கும் மேல்மட்ட குடும்பப்பெண்களின் அத்தகைய குழுமங்களில் மலர்களின் ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்பது, லினென் துணிகளில் இயற்கை சித்திரங்களை எம்பிராய்டரி செய்வது, ஆகிய வகுப்புக்களின் மூலம் மரியாவுக்கு பல செல்வந்தர்களின் சொந்த தோட்டங்களுக்கு செல்ல அனுமதி கிடைத்தது.
இச்சா, இனியா, காயா, பழமா- இரண்டாம் மற்றும் இறுதிப் பகுதி
தனது1924ம் வருட நூலான ‘பணச் சீர்திருத்தத்தில்’(Tract on Monetary Reforms) வணிகத்தின் சுழற்சியில் சாதாரண மனிதன் சிக்கிக் கொண்டு தவிக்காமல் அவனைக் காப்பாற்றும் பொறுப்பு, அரசைச் சேர்ந்தது என அவர் எழுதினார். பொருளாதார வீக்கம் மற்றும் மந்த நிலை தானாகவே சரி செய்து கொள்ளும் என்ற எண்ணத்தின் போதாமைகளை அவர் சுட்டிக் காட்டினார்.
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 3
அச்சடிக்கும் எந்திரம், திடீரென்று, பாதியில் நின்றுவிடும். உதாரணத்திற்கு, ஒரு 1,300 பக்கப் பட்டியலில் 780 பக்கம் வரை அச்சடித்து விட்டு நின்று விடும். பல வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தில், இவ்வாறு நிகழ்வது கணினி மையத்திற்கு ஒரு மிகப் பெரிய தர்ம சங்கடம் மற்றும் இழப்பு. அந்த நாட்களில், 781 ஆம் பக்கத்திலிருந்து மீண்டும் அச்சடிக்க வசதி இல்லை. ஆரம்பத்திலிருந்து அச்சடித்தால், முழு 1,300 பக்கங்களும் அச்சடித்தது எந்திரம்! காகித மற்றும் நேர விரயம் என்பது கணினி மையத்திற்கு பிடிக்காத விஷயம்
குரு
இறந்தவரின் அவோனா தனக்கு குடும்பத்தில் இருக்கும் பிரியமான குழந்தையின் உடலுக்குள் சென்று விடுகிறது. இப்படி அவோனா நுழைந்த குழந்தை நல்ல வேட்டைக்காரராகவும், அள்ள அள்ள குறையாமல் உணவை அளிப்பவராகவும் பின்னாட்களில் இருப்பார் என்றும் நம்பிக்கை உண்டு
இச்சா, இனியா, காயா, பழமா?
உளவியலின் மற்றொரு முக்கியப் பிரிவு, ஆய்வகங்களில் அறிவியல் நிரூபணங்களின் மூலம் இதை உறுதி செய்ய முடியும் என நம்பியது. உளவியல் பகுப்பாய்வாளர்கள் போலவே, பரிசோதனை உளவியலாளர்கள், மனிதரின் அக அனுபவத் துல்லியத்தை, அறிவியல் ரீதியாகச் சொல்ல முடியும் என்றார்கள். அளக்கக்கூடிய புற நிலை உடல் செயற்பாடுகள், அகநிலையின் வெளிப்பாடுகளே என்ற அவர்களது கொள்கையால் அவர்கள் உளப்பகுப்பாய்வாளர்களிலிருந்து மாறுபட்டனர். ஜான் வாட்சனின் ‘நடத்தை விதிகள்’ மூலம், மிகப் பிடிவாதமாக, தனியான அகநிலை என்ற கருத்தை கிட்டத்தட்ட மறுத்து, ‘உணர்வு’ என்பது பிரதிபலிப்புகளின் கூட்டமைப்பு என்ற முடிவிற்கு வந்தார்கள்.
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 2
இப்படி உள்ளேற்றப்படும் தரவுகள் ஒரு ஃப்ளாப்பி டிஸ்க் -கில் (floppy disk) பதிவு செய்யப்படும். டிஸ்க் என்றவுடன் ஏராளமான தேக்கம் (storage) இருப்பதாக நினக்காதீர்கள். ஒரு ஃப்ளாப்பி டிஸ்கில் 80 -களின் ஆரம்ப கட்டத்தில் வெறும் 256 KB மட்டுமே சாத்தியம். இந்தத் தரவு உள்வாங்கும் எந்திரங்கள், அவை முற்றிலும் நிரம்பிவிடாமல் பார்த்துக் கொண்டு, வித்தியாசமான ஒலிகள் மூலம் இயக்கியிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும்.
நோக்கு அரிய நோக்கே, நுணுக்கு அரிய நுண்ணுர்வே
இந்திய வேதாங்களின்படி, நம்மைச் சுற்றி நாம் காணும் அனைத்தும் சக்தியின் மாறுபட்ட வடிவங்களே. பார்ப்பவர், பார்க்கும் பொருளை, அதன் உண்மை வடிவத்தில் பார்ப்பதாக நினைத்துக் கொள்கிறார், அவ்வளவே!ஹைஸென்பர்க் தன் ‘அன்செர்னிடியில்’, ஒன்றை நிறுவுகிறார். துகள் மின்னணுக்களை நீங்கள் ஆராய்கையில், ஒன்று அதன் நிலையைப் பார்ப்பீர்கள் அல்லது அதன் வேகத்தை. அவரது இந்த ஆய்வுதான் குவாண்டக் கணினி, குறியாக்கம் போன்றவற்றில் பயன்படுத்தப் படுகிறது
சித்சக்தி சேதனா ரூபா ஜடசக்தி ஜடாத்மிகா
விருந்தாளியாக, பிறப்புக் கணக்கு முடியாத நேரத்தில், தன் ஊருக்கு வந்த ஒரு சிறுவனிடத்தில் அவனை மூன்று நாட்கள் காக்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்கும் யமன், அவனுக்கு மூன்று வரங்கள் தருகிறார். முதல் இரண்டு கேள்விகளால், உலகில் சினம் குறைந்து அன்பு பெருக வேண்டும் என்றும், யாக அக்னியின் புனிதம் எது, அதன் முன் சொல்லப்படும் வார்த்தைகள் சத்தியமாகிவிடும் விந்தை என்ன என்பது பற்றியும் கேட்கும் சிறுவன் மூன்றாவதாகக் கேட்கும் கேள்வி யமனையே அசைத்து விடுகிறது
வியாகூலத்திற்கான மரபணுவை (Anxiety Gene) அழிப்பது இனி சாத்தியமே!?
வியாகூலக் குறைபாடைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் தற்போதைய மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளின் செயல்திறன் மிகவும் குறைவு. மேலும் பாதிப்புக்கு ஆளானோரில் பாதிக்கும் மேற்பட்டோர், பல மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை வழிமுறைகளைப் பின்பற்றி, பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்ட பிறகும், போதிய நிவாரணம் கிடைக்கவில்லை என்று ஏராளமான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாடும் சுவை, தேடும் தொல்லியல்
தொல்லியல் என்பது பழங்கால எலும்புகள், மட்டைகள் மற்றும் எறிகணை புள்ளிகள் பற்றியது மட்டுமல்ல, அத்தகைய கலைப்பொருட்கள் காணப்படும் சூழல்களையும் ஆராய்வதாகும். பழைய துண்டுகள், தொலைந்து போன பொருள்களைத் தவிர, அவை படிந்திருக்கும் பூமியின் அடுக்குகள், மண்ணின் கலவை போன்றவற்றையும் உட்கொண்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு காலத்தில் பானைகளை உருவாக்கியவர்கள், வேட்டையாடுவதற்கான புள்ளிகள் அல்லது விலங்குகளின் மறைவுகளை இந்த இடத்தில் துடைத்தவர்கள் பற்றிய கதையை வடிவமைக்க உதவும் தடயங்கள்.
போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – 1
போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு அரிசோனன் குறிப்பு: விமானங்களின் பரிணாம வளர்ச்சி என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டு, அதைப்பற்றி எழுதாமல் போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி எழுதவேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுவது இயற்கையே. பொதுவாக விமானங்கள் என்று எழுதினால் ரைட் சகோதரர்களிடமிருந்து தொடங்கி இன்றுவரை உள்ள பயணி “போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – 1”
இன்றையப் போர்விமானங்களின் தோற்றம்
ஜெட் இயந்திரங்கள் டர்பைன் என்னும் வடிவமைப்பைக் கொண்டன. ஒரே படித்தான வலிமையுள்ள பிஸ்டன் இயந்திரங்களைவிடச் சிறியதாக இருந்தாலும் , அதிக ஒலி எழுப்புவதாலும், சுழற்சி நிமிடத்துக்கு 10,000க்கு மேல் உள்ளதாலும், அதன் வேகத்தைக் குறைத்துக் கார் சக்கரங்களுச் செலுத்த இயலாததாலும் அவற்றைக் காரில் உபயோகப்படுத்த இயலவில்லை. விமானத்தின் காற்றாடிகள் நிமிடத்திற்குச் சிலநூறு சுழற்சிகளே கொண்டவை. ஆனால், ஜெட் இயந்திரத்துடன் ஒரு காற்றழுத்த இயந்திரத்தை (air compressor) ஒன்றாக இணைத்துச் இயக்கினால், மிகவும் வேகத்துடன் காற்றை அவை வெளியேற்றும்.
தானியங்கி வாகனங்கள் செயல்படும் முறை
ஒளியை கொண்டு சூழலை உணரும் கருவி. மனித கண்களுக்கு புலப்படாத புறஊதா (Ultraviolet) மற்றும் அகச்சிவப்பு (Infrared) அலைகளை சுற்றிலும் தெறித்து பரப்பி, சூழலில் உள்ள பொருளின் மீது படித்து பிரதிபலித்து (Reflection) திருப்பி பெறுவதே இதன் வேலை. பிரதிபலிக்கும் அலைகளை கொண்டு வாகனத்தை சுற்றி ஒரு முப்பரிமாணம் வரைபடத்தை (3D map) செயற்கை நுண்ணறிவின் செயலாக்க கருவி (Processing Unit) உருவாக்கும்.
உதா – முப்பரிமாணத்தை கொண்டு தொலைவில் இருப்பது மனிதனா, மரமா, வாகனமா என்பதை செயற்கை நுண்ணறிவு முடிவெடுக்க உதவும். இதன் மாபெரும் குறை என்பது மழை, பனி போன்ற சூழலில், காற்றில் உள்ள நீர்த்துளிகள் ஒளியை சிதறடிப்பதால் (Scatter) முடிவுகள் துல்லியமாக கிடைக்கப்பெறாது.
மௌனமாய் இருந்து உன்னை நீ அறிந்து கொள்
சில ஆண்டுகளுக்கு முன் இதைப் படித்த போது நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன்- என் மனம்/சிந்தனை காலியாக இல்லை; அதற்குக் குறியீடுகள் இல்லை. ஆயினும், ஹெர்ல்பெர்ட் சொல்கிறார், தான் இந்த வகைதான் என்று அறுதிப்படுத்துதல் அவ்வளவாகச் சரியான ஒன்றல்ல. நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பது நமக்குத் தெரிவதில்லை, அந்தச் சோதனை ஒலிக்கு முன்னரும், பின்னருமான பதிவுகள் இதைக் காட்டித் தருகின்றன. நாம் சிந்திப்பதைப் பற்றி, சிலர் கேள்வி கேட்கையில் பொத்தாம்பொதுவாக நாம் பதில் சொல்கிறோம் அல்லவா? நம் எண்ண ஓட்டங்கள் மறைந்துள்ளதாக, மாறுபடுவதாக இருப்பதை ஓரளவிற்கேனும் நாமும் உணர்கிறோம். ஒரு மூளையில் சிந்தையின் பல வடிவங்கள் இருக்கின்றன.
ஓரிகமியால் மடிந்த கண்ணாடி பொருட்களை உருவாக்கும் புதிய நுட்பம்
புதுமையான பொருட்களின் கலவையுடன் நிலையான ஒரு 3D பிரிண்டரில் பல்வகை கண்ணாடிப் பொருட்கள் அச்சிட முடியும். சிக்கலான சிலிக்கா கண்ணாடி வடிவமைக்க பொதுவாக 1000° C க்கு மேல் சூடாக்க வேண்டும். அச்சிடலின் போது இத்தகைய வெப்பமடைவதைத் தவிர்க்க, சூரிச்சில் உள்ள சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் குணால் மசானியா, ஆண்ட்ரே ஸ்டுடார்ட் மற்றும் குழுவினர், ஒரு கண்ணாடி செய்முறையை உருவாக்கினர். அதில் கனிம கண்ணாடி முன்னோடிகளுடன், ஒளி-பதிலளிக்கக்கூடிய கரிம கலவைகள் உள்ளன
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
நம் கணித மேதை இராமானுஜனை, இலண்டன் மருத்துவமனையில் சந்திக்க வந்த கணித வல்லுனரான ஜி ஹெச் ஹார்டி, தான் வந்த வாடகைக் காரின் எண் 1729 மிகவும் சலிப்புத்தரும் ஒன்று என்று சொன்னார். இராமானுஜன் உடனே சொன்னார் : “அது ஆர்வமூட்டும் ஒரு எண். அதுதான், இரு கனசதுரங்களின் (cubes) கூட்டுத் தொகையாக, இரு விதங்களில் சொல்லப்படக் கூடியவற்றில் மிகச் சிறிய எண் என்று சொல்லி இவ்வாறு விளக்கினார். 13+123 = 1729; 93+103= 1729.” ஒரு எண், தன்னளவில் ஈர்ப்பு ஏற்படுத்தாத ஒன்று, இரு மாறுபட்ட வழிகளில், இரண்டு விதமான நேர்மறை எண்களால் விளக்கப்பட்ட விதம் அருமை. ‘ஃப்யூச்சுராமா’ (Futurama) தொடரில், வரும் ஒரு ரோபோவின் எண் 1729. அதைப் போலவே, ஃபார்ன்ஸ்வொர்த் பேராபாக்ஸ் (Farnsworth Parabox) தொடரில் அதன் பாத்திரங்கள் பல்வேறு உலகங்களில் குதிப்பார்கள்.
செயற்கை நுண்ணறிவு – சில கற்பனைகள்!
இதில் மனித செயலாண்மையின் (Human Agency) இடையீடு இல்லாமல் எல்லாவித மனிதத் தேவைகளும், அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ற மிகச்சரியானவற்றை, AI துணைக்கொண்டு மனிதர்கள் செய்யமுடியும் என்பதிலிருந்து, அதிகாரத்திற்காக சமூகத்தை மிக எளிதாக ‘ஹைஜாக்’ செய்யமுடியும் என்றும், எதிர்காலத்தில் தற்போதைய ராணுவங்கள் இருக்காது – எதிரி நாட்டை அடக்குவதை, அந்த நாட்டின் சமூகத்தை AI-ன் துணைக்கொண்டு மூளைச்சலவை செய்து அடையலாம் என்றும், மனித உடல்நலம் சார்ந்த அணுகுமுறையில் உருவாக்க சாத்தியமுள்ள நல்ல/தீய விளைவுகள் என்றும், இன்னும் இதைப்போன்றவையும் இந்த உரையாடலின் களமாக இருந்தது.
ஐன்ஸ்டீனின் அற்புத ஆண்டு
இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் வழிகாட்டி(GPS), நுண்ணலை அடுப்பு (Microwave Oven) முதல், உலகையே அழிக்க வல்லமை படைத்த அணு ஆயுதம்(Atomic Bomb) வரை உருவான அனைத்தும் அந்த மூளையில் தோன்றிய சிந்தனையே காரணம். குறிப்பாக இன்றைய மருத்துவ துறையில் புற்றுநோயின் வீச்சை தடுக்க உதவும் கதிர்வீக்க சிகிச்சை, சிந்தனையின் அதிமுக்கிய பயன்பாடுகளில் ஒன்றாகும்.
மயக்கமா, கலக்கமா, அறிந்ததில் குழப்பமா, அறிவதே சிக்கலா?
என்னைப் போன்ற சாதாரணர்களின் இயல்பு இது. நாங்கள் மேற்சொன்ன விதத்தில் செயல்படலாம். ஆனால், இயற்பியலாளர்கள் கூட இந்த இரகம் தான் என்பதில் ஒரு குரூர திருப்தி! அந்தத்துறையில் மிகப் பழமையான நகைச்சுவை ஒன்று உண்டு- ‘ நாம் பசு மாட்டை கோளமாக (Sphere) உருவகித்துக் கொள்வோம்.’ மன்னிக்கவும், இது ஜோக் தான். இதன் பொருள், ஒரு கோளத்தின் செயலை புரிந்து கொள்வது, அதன் வடிவத்தால் எளிதாகிறது; எனவே தொடக்க அனுமானமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆராயப்படும் பொருளின் சில குணாதியசங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லாத நிலைகளில், சில எளிய கருதுகோள்களைக் கொண்டு நாம் அகிலத்தை அறிந்து கொள்ளத் தொடங்குகிறோம்.
காலமென்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும்
மிக நுட்பமான, அதி உன்னதமான கருதுகோள்களை நாசாவின் முன்னேறிய கருதுகோள் அமைப்பு ( என் ஐ ஏ சி -Nasa Institute for Advanced Concepts) வரவேற்கிறது, உற்சாகப்படுத்துகிறது. தன் எதிர்காலக் குறிக்கோள்களுக்கான கூர்மையான தொழில் நுட்பங்களை அது ஆதரிக்கிறது. சனி கிரகத்தின் சந்திரனான டைடனில் (Titan) பறக்கும் கடல்- விமான ஊர்தியைப் (Sea-Plane) போன்ற ஒரு கருவியைப் படைப்பதற்கும், செவ்வாயில், உயிரினங்களின் குடியேற்றத்திற்கான தானே வளரும் செங்கற்களை உருவாக்கும் கருத்திற்கும் நாசா சமீபத்தில் நிதி அளித்துள்ளது. திரவ வானத் தொலைநோக்கி, (Fluid Telescope) ஆயிரக்கணக்கில் செயற்கைக் கோள் அடங்கிய மெய்நிகர் தொலைநோக்கி, பூமி 2.0 கண்டுபிடிக்க வானக் கண்காணிப்பகம் போன்றவைகளும் இந்தப் பிரபஞ்ச இரகசியங்களை அறிந்து கொள்ள உதவக்கூடும் என்பதால் இவைகளுக்கும், என் ஐ ஏ சி அமைப்பு நிதி அளித்துள்ளது. இந்த முதல் நிலை வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் $1,75,000 கிடைத்துள்ளது; அவர்கள் ஒன்பது மாதங்களில் அந்தந்தக் கருத்துக்களின் சாத்தியங்களை நிரூபிக்க வேண்டும்.
கைக் கொண்டு நிற்கின்ற நோய்கள்
வீடுகளிலும், நகராட்சிகளிலும் இந்த பி எஃப் ஏவைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிறுமணிகள் போன்ற துகள் நிரம்பிய கரிப் பொருள் வடிகட்டியும், (Granular Carbon Filters) தலைகீழ் சவ்வூடுபரவல் (Reverse Osmosis) முறையும் பொதுவில் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆயினும் அவை செலவு பிடிப்பவை மட்டுமல்ல, அதைப் பராமரிப்பதும் கடினமே. (நம் ஊரில் மணற்படுகையும், கூழாங்கற்களும் நீர்த்தொட்டிகளில் பயன்படுத்தி, குழாயின் வாயில் துணியில் முடிந்து வைத்துள்ள படிகாரத்தைக் கட்டி குளிப்பதற்கும், தோய்ப்பதற்கும் உபயோகிப்பார்கள்; வெட்டி வேர், நன்னாரி வேர் போன்றவற்றை குடிக்கும் நீரிலும் போடுவார்கள். செப்புப் பாத்திரங்களைப் பயன் படுத்துவார்கள்- எங்கேயோ கேட்ட நினைவு!)
கனவு மெய்ப்பட வேண்டும்
கற்பனைகள் கொண்டு வரும் கனவுகள், அதை நனவாக மாற்றும் பெரும் முயற்சி, அவற்றில் சில வெற்றி பெறும், சில கருத்துக்களாக மட்டுமே நிலவும், சில மனித வாழ்வின் தரத்தை மேம்படுத்தும், சில பாதிப்பதே தெரியாமல் சூழலை சிதைத்துக் கொண்டே வரும். எப்படியிருப்பினும், கற்பனைகள், கனவுகள் உருவம் பெறுகையில் எழும் உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்கி விடாது.
அறிவாகிய கோயிலின் புதிய தீபங்கள்
முக்கியமாகக் கருதத் தக்கவைகள் என்னென்ன, எதிர்கால தொழில் நுட்பம் எது, வியப்பான, விசித்திரமான படைப்புகள், சாதனங்கள், சேவைகள் என்னென்ன, அனைத்துக்கும் மேலாக 2023-ல் சந்தையில் நீங்கள் வாங்கும் விதத்தில் கிடைக்கப் போகிற பொருட்கள்/ சேவைகள் என்ன என்று வகைப்படுத்தித் தருவது. இதற்கான சி என் இ டியின் செயல்பாடு இவ்வாறாக இருந்தது.
உன்னை ஒன்று கேட்பேன்
சேட்ஜிபிடி மனிதனுக்குகந்த சாதனம். அது நம் மொழியில் உரையாடுகிறது. தொலைக் காட்சி, இணையம், காணொலிகளுடன் நாம் நிகழ்வின் நடுவே உரையாட முடியாது. பின்னரும் கூட கருத்துக்களை மட்டும் தான் சொல்ல முடியும். சேட்ஜிபிடி அப்படியல்ல. அது உங்கள் அலைபேசியில் இருக்கும் பல்திறன் களஞ்சியம், உரையாடும் நண்பன், வழிகாட்டும் ஆசிரியர், கற்றுக் கொள்ளும் சீடன், செல்லக் குழந்தை, மீள மீளக் கேட்டாலும் அலுத்துக் கொள்ளாத உறவு, பாரதி கண்ணனைப் பற்றி பாடியதைப் போல், நண்பனாய், சேவகனாய் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
சமூக ஒழுங்குகளும் அரசியல் நிறுவனங்களுமே ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம்?
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இதற்கெல்லாம் பல்துறை இணைவுப் (interdisciplinary) படைப்பால் மட்டுமே விளக்கம் தர முடியும் . அதையேதான் (அவர் எழுதிய) காபிடல் அண்ட் ஐடியாலஜி (போதுமான அளவு பாராட்டுப் பெறாத நூல்) என்னும் பகுப்பாய்வு மற்றும் முறையியல்சார் (analytical and methodological) திருப்புமுனைப் படைப்பு வழங்கி இருக்கிறது “சமூக ஒழுங்குகளும் அரசியல் நிறுவனங்களுமே ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம்?”
க்ளிக், க்ளிக், பயோ க்ளிக் (Click, Click, Bio Click)
இந்தத் தருணத்தில் நம் இந்திய அறிவியலாளர்கள், தங்க நுண் துகளை, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒட்டுண்ணி பூஞ்சையுடன் இணைத்து சாதனை செய்துள்ளார்கள். இது அளவில் சிறிய ஆற்றலில் பெரிதான ஒன்று. நான்கு அறிவியல் அமைப்புகள் இதை அமைப்பதில் பங்கேற்றன போடோலேன்ட் பல்கலை, கோவா பல்கலை,, ஸ்ரீ புஷ்பா கல்லூரி, தஞ்சாவூர், விலங்கு நோய்கள் அமைப்பு, போபால் ஆகியவற்றைச் சேர்ந்த பயோடெக்னாஜிஸ்ட் உருவாக்கிய இதற்கு ஜெர்மனி, சர்வதேச காப்புரிமை தந்திருக்கிறது.
யாருற்றார்,யாரயலார்?
பல நேரங்களில் நம்மை நாம் நேசிப்பதும், நம்மை நாமே வெறுப்பதும் நடக்கிறது. தன் கோட்பாட்டிற்கும், அதையே வேறு விதக் கோட்பாடாகச் சொல்லி தன்னுடன் தானே சண்டையிட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டென். பொது சார்பியல் கோட்பாட்டில் 1915ல் அவர் காலவெளியில் சக்தியையும், ஆற்றலையும் பற்றிப் பேசினார். சூரியன், பூமி போன்ற பெரிய பொருட்கள், தாம் நின்று கொண்டு சுழலும் காலவெளியை, தம் எடையினால் கீழ் நோக்கி வளைப்பதால் ஏற்படுவதே ஈர்ப்பு விசை என்பது அந்தத் தேற்றம். அவரே 1905ல் குவாண்டம் இயக்கவியலின் அடிப்படையைச் சொன்னவர்.
அவனாம் இவனாம் உவனாம்..
இந்த நிறப்புடவை இந்தப் பெட்டியில் இடம் பெற வேண்டுமென்று ‘மறைந்துள்ள மாறிகள்’ நினைக்கின்றன. (இதைத்தான் இந்தப் பிறவியை இங்கே எடுக்க வேண்டுமென்று வினைப் பயன் தீர்மானிப்பதாக நாம் சொல்லி வருகிறோமோ, என்னமோ?) இது முதல் நிலை மாய எண்ணம் என்றால் அவைகளைப் பிரித்து, தொலைதூரத்தில் வைத்தாலும் அவைகளின் தொடர்புகள் அறுபடுவதில்லை, பிரிக்கப்பட்ட பொருட்கள், தங்களுக்குள் தொடர்பு கொண்டு ஒரே நிலையை அடைய முடியும் என்பது மிகப் பெரிய மாயம். இதைத்தான் ஐன்ஸ்டெய்ன் ‘தொலைவில் உள்ள பயமுறுத்தும் ஒன்று’ என்று சொல்லி தனது ஐயத்தைச் சொன்னார்.. அது அப்படியல்ல என்று பின்னர் வந்த குவாண்டம் இயக்கவியல் இயற்பியலாளர்கள் காட்டி வருகின்றனர்.
அவதரிக்கும் சொல்: எலியட்டின் ஃபோர் குவார்ட்டெட்ஸ்
டி.எஸ்.எலியட் போன்ற பெரும் ஆளுமைகளின் கலையில் முன்னேற்றம் போன்ற பரிணாமங்களை வரையறுப்பது சற்று முட்டாள்தனமாகவே இருக்கலாம்; ஏனெனில் அவரது ஆரம்ப காலப் படைப்புகளிலேயே ப்ரூஃப்ராக் போன்ற படைப்பும், அவரது மத்திய காலப் படைப்புகளில் பாழ்நிலம், ஆஷ் வெட்னஸ்டே போன்ற பெரும் படைப்புகளும் இடம்பெற்றிருப்பதால் . இக்கவிதைகள் அனைத்தையுமே நாம் இத்தொடரின் முந்தைய பகுதிகளில் பேசிவிட்டோம். அவற்றுக்குப் பின்வந்த ஃபோர் குவார்டெட்ஸ் கவிதை உண்மையில் நான்கு நீள் கவிதைகளாலான ஒரு கதம்பக் கவிதை. நான்கு கவிதைகளுமே ஐந்து அசைவுகளாகக் கட்டமைக்கப் பட்டிருக்கிறன.
சந்தனம்
சந்தன மரம் அடர்த்தி மிகுந்தவை நீடித்த நறுமணம் கொண்டவை என்பதால் செதுக்கு வேலைகளுக்கும், சிற்பங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. காய்ச்சி வடிகட்டுதல் மூலம் முதிர்ந்த சந்தன மரங்களிலிருந்து சந்தன எண்ணெய் எடுக்கப்பட்டு நறுமண திரவியங்கள், சோப்புக்கள், மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, வழிபாட்டு பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்காக பல்லாண்டுகளாகப் பயன்படுகிறது
புல்லரிசிப் பூஞ்சை
1692ன் ஒரு துரதிர்ஷ்டவசமான நாளில் இளம் சிறுமிகளான பெட்டியும் அபிகெய்லும் வலிப்பு, உடல் நடுக்கம், தனக்குத்தானே பேசிக்கொள்வது, திடீரென உச்ச ஸ்தாயியில் அலறுவது என பல அசாதாரணமான இயல்புகளுடன் பித்துப் பிடித்தவர்களைப்போல் நடந்துகொண்ட போது ஊர்மக்கள் அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாக நம்பினர். கிராமத்து மருத்துவர் வில்லியமும் அதையே உறுதி செய்தார்
பனியூழிகள்-கண்டுபிடிப்பும் ஆய்வுகளும்
நீண்டகாலத் தாழ்வெப்பநிலை காரணமாகப் புவியின் கணிசமான நிலப் பரப்புகள் சில/பல மில்லியன் ஆண்டுகள் உறைபனியால் மூடிக் கிடந்த காலங்களில் ஐஸ் ஏஜஸ் (ice ages) எனப்படும் பனியூழிகள் சம்பவித்தன. பனியூழி என்ற சொல்லாடல், தோலாடை அணிந்த கற்கால மனிதன் உணவு தேடி, பனிபடர்ந்த விரிந்த நிலப்பரப்பில் முற்றிலும் நம்பிக்கை இழந்தவனாக அலைந்து திரியும் காட்சியை உங்கள் மனக்கண் முன் நிறுத்தக் கூடும். ஆனால் மனித இனம் தோன்றி ஓங்கி உயர்ந்தது எல்லாம் கடந்த 300000 (3 லட்சம் ) ஆண்டுகளுக்குள் தான். அதற்கு முன்பே பெரும்பாலான பனியூழிகள் முடிந்து விட்டன.
ஜெயந்தி சூரம்மா & தேவமணி சத்யநாதன்
தெலுங்கில் நாவல் செயல்முறையை எடுத்து வந்தார்களே தவிர, ஆரம்ப காலங்களில் அதனை எந்தப் பெயரால் அழைப்பது என்பதை அறிந்திருக்கவில்லை. சில நாட்கள் அதற்கு முன்னால் அறிந்திருந்த பிரபந்தம் என்ற இலக்கிய வடிவின் சிறப்பைக் கூறும் உரைநடைச் செய்யுள் என்ற பொருளில் ‘வசனப் பிரபந்தம்’ என்று அழைத்தார்கள். கந்துகூரி வீரேசலிங்கம், ‘ராஜசேகர சரித்திரம்’ என்ற நாவலுக்கு விமரிசனம் எழுதுகையில், ‘காசீபட்ட ப்ரஹ்மய்ய சாஸ்த்ரியின் நவல’ என்ற பெயரை பயன்படுத்தினார். புதிய என்ற பொருள் படும் ‘நவ’ என்ற சொல்லின் ஆதாரத்தோடு நாவல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அருகாமையில் விளங்கும் ‘நவல’ என்ற சொல், அன்று முதல், நாவல் என்ற முயற்சியின் தெலுங்குப் பெயராக நிலைபெற்றது. ‘நவல’ என்பது தேசியச் சொல். ‘பெண்’ என்பது அதன் பொருள்.
மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் (இரண்டாம் பகுதி)
வெள்ளையரின் தலையில் இந்த வேலையை கட்டுவது ஒரு சுலபமான மாற்று வழி. அதிலும் நம்பிக்கையானவர்களாக இருந்தால் இன்னுமே வசதி. ஃப்ராலி புத்திசாலித்தனமாக தன்னை ஹிந்து என அறிவித்து கொள்வதோடு பண்டிட்.வாமதேவ சாஸ்திரி என்ற பெயரை வைத்துக் கொண்டுள்ளார்.வேதம், ஜோதிடம், ஆயுர்வேதம் ஆகியவற்றில் இவரது புலமையை கண்டு ஹிந்துக்கள் இவரை ஒரு பார்ப்பனராகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். அவரது மனைவி இந்தியர்;ஒரு “யோகினி”யும் கூட. மாறாக, எல்ஸ்ட் தான் ஹிந்துவல்ல என்பதை வலியுறுத்துகிறார். ஏனென்றால், யாரையும் ஹிந்து மதத்திற்கு “மாற்ற முடியாது” அது பிறப்புடன் இணைந்தது என்பதையும், ‘ஹிந்துயிசம் பூகோள அமைப்புடன் ஆழமாக இணைந்த ஒன்று’ என்பதையும் அறிந்தவர்.
பறக்கும்தட்டு – மீண்டும் ஒரு விவாதம்
கடந்த சில வருடங்களாக இந்தக் கருத்தோட்டத்தில் ஓர் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு வித்திட்டது 2017 ஆம் ஆண்டில் பிரபல நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை. ஹெலன் கூப்பர், ரால்ப் ப்ளூமெந்தால் மற்றும் லெஸ்லி கீன் எழுதிய இந்தக் கட்டுரை அந்த ஆண்டு உலகம் முழுவதும் பலரால் வாசிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. அதன் சாராம்சம் இது தான்.
கடந்த பல வருடங்களாக இந்த நிகழ்வுகளை கண்காணிக்க பென்டகனில் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) ஓர் அமைப்பு பல கோடி டாலர்கள் செலவில் பயனாற்றிக் கொண்டிருந்ததை இந்தக் கட்டுரை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. மேலும் இந்த அமைப்பு சேகரித்து வைத்திருந்த பல காணொளிகளில் இரண்டை கட்டுரையாளர்கள் வெளியிட்டிருந்தனர். மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த இக் காணொளிகளில் அமெரிக்கப் போர் விமானங்கள் அடையாளம் தெரியாத விண்கலன்களை விமானியறையில் உள்ள அதி நவீன கதுவியிலும் (radar), அகச்சிவப்பு படமியிலும் (infra-red camera) பதிவு செய்யப்பட்ட காட்சிகள் உள்ளன.
நீலமலைக் கள்ளன்
பக்தி, இலக்கியம், சிற்பக்கலை, கட்டிடக் கலை. சித்திரக் கலை, ஆடற் கலை எதைச் சொல்ல எதை விட? சென்னை, தில்லி போன்ற மாநகரங்களை ஒப்பிடுகையில் மிகச் சிறிதான புவனேஷ்வரில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இடையறாத கோயில் கட்டுமானங்கள் நடந்து வந்திருக்கின்றன. இன்றைக்கு மிஞ்சியிருக்கும் 500 கோயில்களில் முந்நூற்றிலாவது வழிபாடுகள் நடை பெறுகின்றன. பல கோயில்களில் சிவனே முக்கிய தெய்வம். ஆனால், சக்திக்கும், விஷ்ணுவிற்கும், சூரியனுக்கும் அருமையான கோயில்களும் உள்ளன. எங்கள் கோயில்களில் ரேகா விமானங்கள் பிரசித்தி பெற்றவை. நேர்க்கோட்டில் புடைப்பாக காணப்படுவதை ரேகா விமானங்கள் என்போம்.
புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 22
இந்தத் தொழில்நுட்பங்கள் யாவும், காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை ரசாயன முறைகளில் உள்வாங்கி, பூமிக்கடியில் புதைக்கும் முயற்சிகள். சில தொழில்நுட்பங்கள், தாங்கள் உருவாக்கிய கரியமில வாயுவைக் கொண்டு, மற்ற பயன்களுக்கு உதவுவது. இதனால், கரியமில வாயு தேவைப்படும் தொழில்கள், இயற்கையை அழிக்கத் தேவையில்லை. உதாரணத்திற்கு, உலகில் ஏராளமாக விற்கும் குளிர்பானங்கள் கரியமில வாயுவைக் கலந்துதான் விற்கின்றன!
புவி சூடேற்றத்திற்கான தீர்வுகள் – பகுதி 21
நாம் எவ்வளவு முயன்றாலும், இந்த விஷயத்தில், இயற்கையைப் போன்ற அளவை நம்மால் எட்ட முடியாது – அது ஒரு 4 பில்லியன் ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னேற்றப்பட்ட விஷயம்! இயற்கையின் இந்த அருமையான சேவையைக் குலைத்த நம்மால், அதற்கு உதவவும் முடியும். முதல் காரியமாக, இயற்கையிடம் மிஞ்சியிருக்கும் கரியமில வாயு உள்வாங்கும் அளவை மேலும் குறைக்க மாட்டோம் என்று ஒவ்வொரு மனிதனும் நினைக்க வேண்டும். இன்னொரு யதார்த்தையும் நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். மனிதர்கள், நிலப் பிராணிகள். கடல் நமது வீடல்ல. அதனால், 17% உள்வாங்கும் கடலுக்கு உதவுவதை விட 24% சதவீதம் உள்வாங்கும் நிலத்திற்கு மேலும் உதவுவது நமக்கு சாத்தியம்!
பேயவள் காண் எங்கள் அன்னை
இன்று நீர் கங்கை ஆறெங்கள் ஆறே! ஹூக்ளி என்பது இங்கு அதன் பேரே! என் ஆன்மீக குரு மற்றும் கணவருமான ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சருக்கு இந்த ஹூக்ளியின் மேற்கரையில் 40 ஏக்கரில் மிக அழகிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இதனுள் எனக்கும், ஸ்வாமி விவேகானந்தருக்கும், தனித்தனியே கோயில்கள் உள்ளன. வளாக முகப்பினுள்ளேயே என் கோயில்! பரமஹம்சருக்கு இவ்விதம் ஆலயம் அமைத்து சமூக நல்லிணக்கதிற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென விவேகானந்தர் விழைந்தார். உலகம் முழுதும் பார்த்தவராதலால், இந்தியாவில் பின்பற்றப்படும் மும்மதங்களான இந்து, இஸ்லாம், கிருத்துவம் ஆகியவற்றைச் சுட்டும் படியும், முன்னர் நிலவி வந்த பௌத்த, சமண சமயங்களைக் காட்டும் வகையிலும் அவரது கோயில் கட்டுமானம் இருக்கிறது
அணுவிற்கணுவாய்
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் பாரதத்தில் அணுவியல், அணுத்தன்மை, புவியீர்ப்பு, இயக்க விதிகள், அணுவின் அமைப்பு என்பதைப் பற்றிய சூத்திரங்கள் இருந்திருக்கின்றன என்று சொன்னால் பலருக்கு வியப்பாக இருக்கலாம். ‘வைசேஷிகம்’ என்பது அணுவைப் பற்றி மகரிஷி கனாதா (Kannada) எழுதிய சூத்திரங்கள் அடங்கிய நூல். சூத்திரங்கள் என்பவை புரிவதற்குக் கடினமாக இருக்கும் விஷயங்களை, சுருக்கமாக, நினைவில் நிற்பதற்கு ஏற்ற வழியில், அதே நேரம் ஆழ்ந்த பொருளுடன் சொல்வதாகும். நம் திருக்குறளை நினைவில் கொள்ளுங்கள்.
நான் யார் யாரென்று சொல்லவில்லை
ஒரு திரைப்படப் பாடல் இவ்வாறு தொடங்கும்- ‘நான் யார் யாரென்று சொல்லவில்லை; நீ யார் யாரென்று கேட்கவில்லை’. ஆனால், கேட்காவிட்டாலும், சொல்லாவிட்டாலும் ‘நான் யார்?’ என்ற கேள்வி மனிதர்களுக்கு எழுந்து கொண்டுதான் இருக்கிறது. விஞ்ஞானமும், மெய்ஞானமும் அதற்கான விடைகளைத் தேடியவாறு இருக்கின்றன.
கல்வித் துறைக் கொடுமையாளர்கள்
அந்த இடத்தை அடைவதற்கே, கருத்தியல் ரீதியான கட்டாயக் கோட்டில் கால் பிறழாமல் நடந்தவர். அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ இந்துக்களை தங்கள் தூண்டிலில் மாட்ட விழையும் நிறுவனம் எதிர்ப்பாளர்களை கல்வி உலகத்தில் நீண்ட நாள் காலூன்ற விடாது. எதிர்பார்த்தது போலவே, முந்தைய தலைமுறை கல்வியாளர்களின் நிலையையே இவரும் விரிவுபடுத்துகிறார். உதாரணம், அவுரங்கசீப்பிற்கு வெள்ளை பூச்சு.இது அவருக்கு கடினமான வேலையாக தெரியவில்லை. ஏனென்றால் அவர் தான் கூறுவதை உண்மையாகவே நம்புபவர் எனத் தோன்றுகிறது
இனத் தொடர்ச்சி எனும் இச்சை
அச்சமயம் முன்னர் வந்த பெருங்காகம் எங்கிருந்தோ பறந்து வந்து புறாக்களை விரட்டும். இதில் நாங்கள் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்- முன்னர் தானியம் கொத்திய பறவைகள் இன்று நொறுக்குத்தீனி கேட்கின்றன. சில இயல்பாகவே தன் பசியை மட்டும் தீர்த்துக் கொள்கின்றன. சில உணவிடுவோருக்கும், உணவை உண்ண வரும் போட்டியாளருக்கும் ஒரே மாதிரி பயப்படுகின்றன. தான் மட்டுமே சாப்பிட்டாலும், தன் இனத்தைச் சேர்ந்த ஒன்றிற்கு உணவு கிடைக்கவில்லையெனில் பகையைப் போராடி துரத்தும் இன உணர்வும் இருக்கிறது.