இவர்கள் இல்லையேல்

உடல் ஒத்துழைத்தவரை, அம்மா தன் கடைசி மகனை கூட்டிக்கொண்டு ராம்வன் சென்று, அங்கு சில நாட்கள் தங்கியிருந்துவிட்டுவருவார். திரும்பி வந்ததும் மிகவும் சந்தோஷமாக சொல்வார் – பாவம், இந்த பைத்தியக்காரனின் தலையெழுத்தில் நல்ல சாப்பாடு என்பது எழுதப்படவேயில்லை.

காவிய ஆத்மாவைத் தேடி… -3

This entry is part 3 of 3 in the series காவிய ஆத்மாவைத் தேடி

‘ரஸம்’ என்ற கொள்கையிலும் சிருங்கார ரஸமே பிரதானம், சிகரம் என்பது போஜன் கருத்து. இந்த ஒற்றை ரஸமும் உண்மையில் ஒரு சேதனனுள் (அறிவுள்ள மனிதனுள்) ஒரு ரசிகனுள், ஒரு கவிஞனுள், ஒரு பண்பட்ட மனிதனுள் எழுகின்ற சாத்விக அஹங்காரமே என்பது போஜராஜனின் புதுவகையான உளவியல் சார்ந்த அழகியல் கருத்து. இந்த ஒற்றை அடிப்படை அஹங்காரமான சிருங்காரம் எட்டு தலைகளுள் ஒன்றான, ஆண் பெண் விழைவான இன்பச் சுவையைக் குறிக்காது.

ஒஹையோ நெடுஞ்சாலையில் அபோலோ

கடல் காக்கும் ரகசியங்கள் முத்தும் பவழமும் அல்ல, அது கொண்ட உயிர்களும், சிலப்பதிகாரம், டெம்பெஸ்ட், மோபி டிக் என்று நம் இலக்கியங்கள் வரையும் பேரிழப்புகள், உடைந்த கனவுகளின் சித்திரங்களும்தான். கடல் ரகசியங்களின் நினைவுகளைக் கண்ணுறும் வகையில் புலப்படுத்தும் தன்மை கொண்ட விடியல் சாதாரண ஒன்றல்ல, அது சாலையின் (freeway) குறுக்கே விழுந்து கிடக்கிறது என்றால் அதன் பொருளும் அவ்வளவு மகிழ்ச்சிக்கு உரியது அல்ல- கடல் கொண்ட கப்பல்களின் கூடுகள் போல் துருவேறிய, வெறிச்சோடிய உலகில் ஒளி பாய்ச்சுகிறது இந்த விடியல்.

நீள்ஆயுள் நிறைசெல்வம்

ஐம்பது வயதிற்கு மேலான வாழ்க்கை நெருக்கடிகள், நோய் போன்றவை மற்றவர்களை இறுக்கிச் சுற்றுவதால் ஓரிரு ஆண்டுகளாக வீட்டில் ஓர் அமானுஷ்யம்போலச் சோர்வு கவிழ்ந்திருக்கிறது. அப்பாயியும், புதிதாகப் பிறந்துள்ள குழந்தையும் அந்த படலத்தைக் கிழித்து ஔி பரப்புகிறார்கள்.

நீலக்கற்றாழையும் டெக்கீலாவும்

டெக்கீலாவில், 100 சதவீத ஆல்கஹால் அளவுடன் இருக்கும் அசல் டெக்கீலா மற்றும் மிக்ஸ்டோ எனப்படும் செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட 51 சதவீத ஆல்கஹால் அளவுள்ள மலிவான டெக்கீலா என இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன . இவ்விரண்டில் பழமையாக்குதலின் அடிப்படையில் பிற வகைகள் உருவாகின்றன.

ஔரங்கசீப்பைப் பற்றிய சர்ச்சை

ஔரங்கசீப்பின் குற்ற உணர்வை வேறு மாதிரியாகக் காண்பிப்பதற்காக ஆட்ரி ட்ருஷ்கி செய்ததைப்போல் உண்மைக்குப் புறம்பான சுண்ணாம்புப் பூச்சை நான் செய்ய வேண்டிய அவசியமில்லை. காசி விசுவநாதர் கோயில், கிருஷ்ண ஜென்மபூமி மற்றும் ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்து அச்சிதிலங்ககளின்மேல் எழுப்பிய மசூதிகள் இன்றும் அவனது உருவ வழிபாட்டு எதிர்ப்புக்குச் சாட்சியாக நிற்கின்றன.

மிளகு: அத்தியாயம் ஐந்து

புராதன மாளிகைகளும், வியாபார நிறுவனங்களும் அணிவகுத்து நிற்கும் கருங்கல் பாவிய அகலமான வீதிகளில் மிக விரிவானது அந்த ரதவீதி. அங்கே போர்த்துகீஸ் அரசப் பிரதிநிதி இம்மேனுவல் ராபர்ட்டோ பெத்ரோ Immanuel Roberto Pedro வசிக்கும் விசாலமான மாளிகை. வழக்கமான போர்த்துகீஸ் காலை உணவான சீராக வெண்ணெய் தடவி அனலில் சுட்ட டொர்ரடா (toast), மசித்த காய்கறியும், பன்றி மாமிசமும் இடையில் வைத்த ரொட்டித் துண்டுகள், ஆரஞ்சு பழக்கூழும் தேனும் நிறைத்த பாபோ செகோஸ் (bun), பால் அதிகம் சேர்த்த காப்பி என்று பசியாறிப் பயணத்துக்குச் சித்தமானார் பெத்ரோ.

குருதி

வழக்கமாக மடிததுக் கட்டிய மல் வேஷ்டியும் முண்டும் துண்டுமாகததான் அறவே மேக்கப் இல்லா சேட்டன்களும் சேச்சிகளும் இன்னமும் பச்சைப் பசேல் கேரளத்துக் கொல்லைகளிலும் காடுகளிலும் திரிகிறார்கள்.  ஆனாலும், கதை என்கிற ஒரு வஸ்துவை மட்டும் தீர்க்கமாக அவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அதில் அவர்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. கதையோட்டத்தைத் தடை செய்யும் பாட்டுகளையும் அறவே குறைத்துக்கொண்டு வருகிறார்கள்…. கிறித்துவ வெறித்தனமோ, இஸ்லாமிய பயஙகரவாதாமோ, ஹிந்துதுவ ரஸவாதமோ, எதுவாக இருந்தாலும் கதை தான் ஆணிவேர்.

புவிச் சூடேற்றம்: ஒரு விஞ்ஞான அறிமுகம்

This entry is part 1 of 23 in the series புவிச் சூடேற்றம்

இதில் விந்தையான விஷயம் என்னவென்றால், ஏழை நாடுகள், இது என்னவோ பணக்கார நாடுகளின் சதி மற்றும் பிரச்சனை என்று நினைக்கின்றன. உண்மையோ முற்றிலும் வேறு. இது பூமி சம்பந்தப்பட்டது. இதில் மனிதனால் உருவாக்கப்பட்ட பணம், நாடு, எல்லைகள் இவற்றுக்குப் பங்கே கிடையாது. பணக்கார ஸ்வீடன் நாட்டையும் ஏழை பங்களாதேஷையும் வேறுபடுத்திப் பார்க்காத பிரச்சினை இது. சொல்லப் போனால், ஏழை நாடுகளை அதிகமாகப் பாதிக்கவல்ல ஒரு பிரச்சனை இது.

பாஸ்னியக் காப்பி

‘யானைகளின் யுத்தத்தில் அழிவது எறும்புகளே’ என ஒரு சொலவடை உண்டு. அதேபோல அமேரிக்கா – சோவியத் ரஷியா வல்லரசுகளுக்கு இடையேயான பலப்பரீட்சை பெரும்பாலும் அவர்களால் தூண்டிவிடப்பட்ட சிறிய நாடுகளின் யுத்தங்கள் வாயிலாக வெளிப்பட்டது. இந்த ‘கோல்டு வார்’ அல்லது மறைமுக பனிப்போரில் சிக்காமல் இந்தியா, எகிப்து, யூகோஸ்லாவியா, கானா மற்றும் இந்தோனேஷியா ஆகிய வளரும் நாடுகள் தங்களுக்குள்ளே ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் கூட்டமைப்பே “கூட்டு சேரா இயக்கம்”.

இடுகாட்டு மோட்சம்

ஆயிரம் இடைஞ்சல்கள் இருந்தும், “பெருவெள்ள நாட்களை” அவ்வூரின் அநேக பேருக்குப் பிடிக்கத்தான் செய்கிறது. இயற்கையின் மழையை எந்த உயிருக்குத்தான் பிடிக்காது. நடைமுறைப் பணிகளிலிருந்து ஒய்வு கொடுக்கும் ஒரு ரகசியத் திருவிழாவாகவே, மொத்த ஊரும் பெருவெள்ளத்தை கொண்டாடிக் களிக்கிறது.

பிட்(காயினு)க்கு மண் சுமப்பவர்கள்

1800 க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்ஸிகள் இருப்பதாக 2018-ல் வெளிவந்த ஒரு செய்தி தெரிவிக்கிறது. அதில் கிட்டத்தட்ட பாதி பிட்காயின் என்ற வலை நாணயங்கள் (Bitcoin). கிரிப்டோகரன்ஸிகளின் தற்போதைய சந்தை மதிப்பு $1.5 டிரில்லியன். உருவற்ற ஒரு பொருள் (!), கணினியின் நிரலன்றி வேறு ஒன்றுமில்லை, ஆயினும் அதன் மதிப்போ மலைக்க வைக்கிறது.

முதலியத்தை எதிர்க்கும் பொதுமம்

நீரும் காற்றும் தாராளமாகக் கிடைக்கின்ற வற்றாத வளங்களாக இருப்பதால் அவை பொது நுகர் பொருளாக நீடிக்கின்றன என்று காலங்காலமாக நினைத்திருந்தோம். ஆனால் பிரத்யேகமான கொள்கலனில் இருக்கும்போதுதான் தண்ணீர் தனியார் சொத்தாக முடியும் என்கிறார் ஹியூகோ டே க்ரோட். அதாவது பாட்டிலில் அடைக்கப் பட்ட கனிம நீர் வருகைக்கு நுகர்வோரே காரணம் என்கிறார்.

வெண்ணெய்த் தாழி

யமுனாவுக்கு குடைராட்டினம்தான் பிடிக்கும். சிங்கம் குதிரை அன்னபட்சி னு எல்லோரும் போட்டி போட்டாலும் இரட்டை நாற்காலிலதான் ஏறுவாள்.. கொஞ்சம் கொஞ்சமா வேகமெடுத்தவுடன் காற்றில் ஜிவ்வுனு பறக்கற மாதிரி இருக்கும்.

நுனி மேய்வதா, நுட்ப அறிதலா – குறியீட்டு அட்டவணைகள்?

இன்றைய உருவத்தை அடைவதற்கு முன்னரும்கூட அட்டவணைகள் ‘ஒத்திசைவுகளும், வேறுபாடுகளும்’ கொண்டு பயன்பாட்டில் இருந்தன. பக்கங்களில் எண்கள் அச்சிடப்படத் தொடங்கிய காலத்தில் இவைகள் ஒரு நிலைப்பை அடைந்தன.

லாவண்யா சத்யநாதன் கவிதைகள்

காற்று நெருப்பாகும்
காலமொன்றில்
குட்டையானது குளம்.
முகில்கள் மழைவர மருள
மந்திரம் ஜெபித்தன மீன்கள்.

இரண்டாவது சூரியன்

This entry is part 5 of 7 in the series பூமிக்கோள்

சூரியனின் தோற்றத்தைப் பற்றிய இன்றைய “ஒற்றைச் சூரியன்” கருத்துக்கு அடிப்படை மாற்றம் கோரும் கருதுகோளை முன்வைத்துள்ளது. ஆதியில் சூரிய அமைப்பு இரு விண்மீன்கள் விண்வெளியில் ஒன்றை மற்றது வலம்வரும் இருமை விண்மீன் அமைப்பாகத்தான் உருவானது என்பது இவர்களின் கருதுகோள்.

ஒரு வரிசையிலுள்ள மூன்று சிறிய பறவைகள்: ஸ்டீபன் கிரேன்

மூன்று சிறிய பறவைகள் ஒரு வரிசையில்
கவனிப்பிலாழ்ந்தபடி அமர்ந்திருந்தன.
ஒரு மனிதன் அந்த இடத்திற்கருகே கடந்து சென்றான்