காளான்கள் வளர்கின்றன: டகாஹாமா க்யோஷி: ஹைக்கூ

இந்த ஹைக்கூ, ‘கொரோமோ’ நகரத்தின் (Koromo city) மக்களுக்கான ஒரு பிரியாவிடை அஞ்சலிக் கவிதையாக இயற்றப்பட்டது. அந்த நகரத்தின் மக்கள் க்யோஷி அவர்களுக்கு காளான்களைப் பிரியாவிடைப் பரிசாக அளித்தார்கள். போரின் விமானத் தாக்குதல்களிலிருந்து தப்பித்து, க்யோஷி, கொரோமோ-வில், மூன்று வருடங்கள் வாழ்ந்தார். ‘பகல் நட்சத்திரம்’ என்பது சூரியனைக் குறிக்கும் எனவும், காளான் என்பது ‘பூஞ்சை’ (fungus) என்பதும் யாருக்கும் உடனே புரியும்.

ஆமிரா கவிதைகள்

எட்டுக்கால் பூச்சிகளாக
சுவற்றில் ஊரத் துவங்குகின்றன பகல் பொழுதுகள்
பயம்
கருகிய சர்க்கரைப் பாகின் நெடியாக
அறையெங்கும் விரவுகிறது

சிக்கிம் – பயணக் கவிதைகள்

மேலிருந்து கயிறு
இறக்கியதுபோன்ற பாதை.
மேகங்களிலிருந்து மிதந்து
இறங்கிய வண்டியிலிருந்து,
அடுத்த முடுக்கு வரைதான் தெரிந்தது.

அகர்ஷனா கவிதைகள்

பாதம் அழுத்தாமல் அடியெடுத்து
பாம்பு வால் ஆட்டி
நிமிர்ந்த காதுகளை கூர் சீவி
கெண்டைக் காலில் வந்துரசுகிறது
செங்காவி வண்ணம் என்னுள்
பாய்ச்ச முயற்சிக்கும் முனைப்பில்.

கவிதை பற்றி மூன்று கவிதைகள்

அன்பு, பிரியம், பாசம், நேசம்,
கருணை, நேயம், மனிதம்
ஆகிய சொற்களைக்
கவிதைகள் தோறும்
வாரி வாரி இறைத்துச் செல்கிறான் கவிஞன்

பிள்ளை மொழி

கிளம்பி வரும் புதிய அர்த்தங்கள்
வளர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில்
நசுங்கிப் புழுங்கும் சொற்களை
விடுதலைச் செய்யும்
நல் மீட்பர் நாவுகள்

எமக்கென்ன

பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி
மகிமைத் தேர்தல்!
ஆளும் ஆசை அற்றுப் போகுமோ?

நாட்டுப் பற்று

சினிமா சேவைக்கு எவரெலாம் வாங்கினர்
மாண்பமை பல்கலை மதிப்புறு முனைவர்?
பத்ம கலைமணி போர்த்தப் பெறாத
தாரகை உண்டா நம் தேயத்து?

நகரம், அவன் & கவிதை

இத்தனை மனிதர்கள் 
நகரங்களில் அல்லாடுவதைப் 
பொருளாதாரத்தின் கணக்குப்பிள்ளை
கூட்டிக் கழித்து
கணக்கு பார்த்துக் கொண்டிருந்தான்

நெகிழிப் பையில் சுற்றிய பூக்கோசு

இந்த வாகன நெரிசலில்
மேம்பாலத்திலிருந்து இறங்குகிறது
அத்தி நிற அந்திச் சூரியன்

குறிஞ்சியின் முல்லைகள்

பாலைவனத்தணல்,
சற்று ஓய்ந்தால் கள்ளிச்செடி,
பசும் பாசமென்று நெருங்கிட
நஞ்சினால் நிரம்பிய ஊற்று,
எஞ்சி அங்கங்கே சொட்டிக்கிடக்கும்

நவம்பர் கவிதைகள்

பூக்கள் உதிரா சமவெளியில்
வெயில் மேயும் கோடையில்
யாருக்கும் தெரியாமல்
சருகை மென்று

மணற்காடர் கவிதைகள்

ஒரு கடுகைத் துளைத்து எப்படி
ஏழு கடலைப் புகட்ட முடிந்தது?
ஒரு கடுகைத் துளைக்க முடிந்ததென்றால்
ஏழு கடலைப் புகட்டுவதா பிரமாதம்?

வல்லூழின் யந்திரத் துப்பாக்கி

தன் ரகசியங்களை
வாழ்க்கை வெளிப்படுத்துவதில்லை.
ஆச்சரியமோ அதிர்ச்சியோ
காலம் முன்னறிவிப்பு செய்வதில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

காடும்..
கூடும்..
பெருந்தேடலானதால்

பறத்தல் மறந்து
போயிருந்தது
நினைவில்
காடுள்ள பறவைக்கு

ஒரு வரிசையிலுள்ள மூன்று சிறிய பறவைகள்: ஸ்டீபன் கிரேன்

மூன்று சிறிய பறவைகள் ஒரு வரிசையில்
கவனிப்பிலாழ்ந்தபடி அமர்ந்திருந்தன.
ஒரு மனிதன் அந்த இடத்திற்கருகே கடந்து சென்றான்

மூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்

ஆறு கற்கள் : Ao நாகர்கள் வட கிழக்கு இந்தியா நாகலாந்தின் மொகோக்சுங் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட பெரும்பான்மை நாகர் இனப் பிரிவு. Ao நாகா தொன்மத்தின் படி அவர்களின் மூதாதையர் (ஆண் -3, பெண் -3) ஆறு கற்களில் இருந்து உதித்தவர்கள். அவர்கள் இயற்கையை வழிபட்டனர்.

பாப்லோ நெருடா ஸ்பானிஷ் கவிதைகள்

1964_ஆம் வருடமே நோபல் பரிசுக்காக இவர் பெயர் பரிசீலிக்கப் பட்டு, பல எதிர்ப்புகளின் காரணமாக வேறொருவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் 1971_ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டதாயினும், அதுவும் அத்தனை எளிதாகக் கிடைத்து விடவில்லை. தேர்வுக் குழுவில் இருந்த பலர் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்கினை பாப்லோ நெருடா புகழ்ந்ததை மறக்கவில்லை. ஆனால் நெருடாவின் ஸ்வீடன் மொழிபெயர்ப்பாளரான ஆர்டுர் லன்ட்க்விஸ்ட் என்பவரின் முயற்சியால் நோபல் பரிசு கிட்டியது. நோபல் பரிசுக்கான ஏற்புரையில் ‘ஒரு கவிஞன் ஒரே நேரத்தில் ஒற்றுமைக்கும் தனிமைக்கும் உந்து சக்தியாகத் திகழ்கிறான்’ எனக் குறிப்பிட்டார் பாப்லோ நெருடா.

புத்தர் சிறு ஒலியாகவும் இருந்திருப்பார்

சிறு கீறலின் நிம்மதியின்மையில்
ஒரு அர்த்தம் துவங்கும் போது
புத்தராதல் மிக எளிது,
ஆனால்
தான்தான் புத்தரென்பதை உணர்ந்து கொள்ளுதல்
மிகக் கடினம்.

நா.பாலா கவிதைகள்

முற்பகல் முடிவதற்குள்
ஐன்ஸ்ட்டின் ஆக மாற எத்தனிக்கையில்
பசி வந்துவிடுகிறது.
மந்தம் சூழ்ந்த மதியப் பொழுதுகளில்
லாவ்-சு ஆகிக் காற்றையும் இலைகளையும்
பார்த்துக் கிடக்கிறேன்.

மினியாப்பொலிஸில் திருப்பள்ளியெழுச்சி

முற்றத்து மணியசைத்து
விளையாட
அழைத்து நிற்கும் காற்று
பொறுமையிழந்து
அனுமதியில்லாமல்
அறைக்குள் நுழைகிறது.

பறக்கும் தட்டுக்கள் – ஸீபால்ட் கவிதைகள்

அது வெல்ஷ் இளவரசனின் ஆவியோ
இட்வால் ஏரியின் அருகில்
தன் சகோதரனால் கொல்லப்பட்ட பிறகு
அந்த ஏரியின் மீது
எந்த பறவையும்
இதுவரை பறக்கவில்லை

எனக்கு நினைவுள்ளது

அவனுக்கு தாங்கள் எங்கு
தலைப்பட்டிருக்கிறோம் என்று
ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.
குழுத் தலைவன் கட்டுக்குள் வைத்திருந்தான்

ஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து

இக்கட்டுரை இதழ்-198 இலிருந்து இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.
…வாசகர்களும் விமர்சகளும் ஸேபால்டை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன்? அவரின் கதை எவ்வாறு என்னோடு மறக்கமுடியாதவாறு உறைக்கவைக்குமாறு உரையாடுகிறது?….

ஒரு வார்த்தை.. நம் மொழியில்..

உங்களுக்கும் எங்களுக்கும்தொடர்ந்து நடக்கிறதுபேச்சு வார்த்தைஎங்கள் பக்கத்திலிருந்துகோரிக்கைகளாகவும்உங்கள் பக்கத்திலிருந்துஅறிக்கைகளாகவும்.நாம் ஒரே மொழியைதாம்உபயோகிப்பதாக நினைக்கிறோம்.ஆனால் உங்கள் வாக்கியங்கள்ஒன்றன் மேல் ஒன்றாக மடிந்துகாரண காரியங்களாகத் திரிந்துஎங்கள் புரிதலுக்கு அப்பாலானதாகவேஎன்றைக்கும் இருக்கிறது.இன்றைய கணமும்உண்ணும் உணவும்கேள்விக்குறிகளாக நிற்கையில்எங்கோ நிகழ்ந்த நிலநடுக்கமும்பேரழிவைக் கொடுத்த நிலச்சரிவும்எம் சிந்தைக்கு எட்டாமல்கடந்து செல்கிறோம்இரக்கமற்றவர்களாய். உங்களுக்கு உதிக்கும் பகலவனேஎங்களுக்கும் உதிக்கிறான்ஆனால் ஒளிக்காகஏங்கி நிற்கிறோம்.கரும்பு “ஒரு வார்த்தை.. நம் மொழியில்..”

3 கவிதைகள்

வானிலிருந்து பிரிந்து எழுகிறது முழுநிலா,
பதறி கண்மூடித்திறக்கையில்
மென் ஒளி கரும்பட்டுத்திரையில்
வட்ட ஒளிக்கல்.

கவிதைகள்- சுசித்ரா மாரன்

வெற்றிலையை
இடித்துக்கொண்டிருக்கும் ..
வாழ்க்கை மென்று
துப்பிய பாட்டிகளின் சரணாலயம்..
திருவையில் அரைத்துக் கொண்டே
இருக்கும் காதலை இல்லாமல் செய்து 
இல்லா காதலுக்கு கரம் சிரம் பொருத்தும்
திரைக்கதை அரசிகள்
பக்கத்துவீட்டுஅத்தைகளின்
நட்சத்திர விடுதி…

கவிதைகள்- லாவண்யா, வான்மதி செந்தில்வாணன்

கையெழுத்து மறையும் நேரம்
கருவேலமுள் மண்டிக்கிடக்கும்
காட்டுப்பாதையில் நடந்துபோகையில்
கால்செருப்பு கைச்செருப்பானால்
ஒருவன் மனதில் என்ன தோன்றும்?

சுபத்ரா; கமலதேவி; வே.நி.சூர்யா கவிதைகள்

இருபத்தோராம் நூற்றாண்டின்
தர்மத்தின் முன் நம்மால் என்ன செய்யமுடியும்?
தன் உணவு
தன் உடைமை தவிர
எஞ்சியவை சுமை.

கவிதைகள் – அன்பழகன் செந்தில்வேல், கமலதேவி

நூல்சுற்றும் உருளை
மொழுமொழுக் கன்னங்களும்
இடையே குருவி வாயும்
மேல்வரிசையின்
இருமுயல் பற்களும்,
அணைத்துக் கொள்ள வசதியான
உயரமும்,
தழுவலின் இயல்பான ஏற்பும்…
அத்தனை உறவுச் சிக்கல்களையும்
ஒற்றை நூலென மாற்றும்.

மூவர் கவிதைகள்

அண்ணன் புத்தாடையும்
முகப்பூச்சுமாய்
உள்ளேயும்வெளியேயும்நடக்க,
திருந்தா நடையோடும்
இடை உள்ளாடையோடும்,
ஊருக்கு செல்லும் பிடியில்
வாசலில் இருந்த வாளியில்

நான்கு கவிதைகள்

பெரிய பொறாமைக்காரன் நான்
எந்த அளவுக்கெனில் ஒரு பாராட்டுக்காக
அத்தனை கால உங்கள் நட்பையே சந்தேகிக்கும் அளவிற்கு
இதற்காக வெகு காலமாய் தனித்திருக்க செய்த தண்டனையில் பிழையில்லை