இனக்கலவர நினைவுகள்: குமுறும் குரல்கள்

இந்தியாவில் சிலரது உயிருக்கு இன்று மதிப்பில்லை; அன்றாட வாழ்வை இவர்கள் பயத்துடனும் வேதனையுடனும் வெளிக்காட்ட முடியாத கோபத்துடனும்தான் கடத்த வேண்டியிருக்கிறது என்பதுதான் இந்தியாவின் இன்றைய மிகப் பெரிய சோகம்.இந்தப் புத்தகத்தில் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிகழ்ந்தவற்றை நினைவு கூர்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சிலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு சம்பவங்களை அலசி ஆராய்ந்து இந்திய வாழ்வின் அடிப்படை என காலங்காலமாகச் சொல்லப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வரும் சிலவற்றை கேள்விக்குள்ளாக்குகின்றார்கள்.

நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை – ஜமீலா நிஷாத்

ஜமீலா நிஷாத் ஒரு கவிஞர். பல வண்ணங்களிலும் வேறுபட்ட வடிவங்களிலும் கனவுப்படிமங்களாகக் கவிதைகள் தன்னிடம் உருக்கொள்வதாக அவர் கூறுகிறார். அவரது கவிதைகளில் காணப்படும் கனவுத்தன்மை இது சாத்தியம்தான் என்று நமக்கு உணர்த்துகிறது. தன்மீது 1992க்குப் பிறகு திணிக்கப்பட்டதாக அவர் கருதும் முஸ்லிம் அடையாளத்தை பரிசீலனை செய்யும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக அவர் இறங்கியுள்ளார். கோயில்களுக்குச் செல்வது, தர்கா விழாக்களில் கலந்து மகிழ்வது என்ற தோழமையும் பகிர்வுணர்வும் நிறைந்த சூழலில் வளர்ந்த அவரால் ஹைதராபாதில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நிலவிவரும் வெறுப்பையும் பகைமையுணர்வையும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஜமீலா நிஷாத்தின் தலைப்பிடாத சில கவிதைகள்

என் ஓவியங்களில் பெண்குதிரையாக
வாலைச் சுழற்றிக்கொண்டு
கம்பீரமாக நான் நடந்தேன்
டக் டக்
டக் டக்

நடவுகால உரையாடல் – சக்குபாய்

ஆதிவாசி சமூகத்தவரான சக்குபாய் காவித் தஹானு தாலுகாவிலுள்ள பந்த்கரைச் சேர்ந்தவர். சிறு விவசாயிகளுக்காகவும் நிலமற்ற கூலித்தொழிலாளர்களுக்காகவும் போராடி வரும் கஷ்டகரி சங்கட்டனா (பாட்டாளிகள் சங்கம்) என்ற மக்களமைப்போடு கடந்த பத்தாண்டுகளாகப் பணியாற்றி வருபவர். அவரது கிராமத்தில் `சங்கட்டனா’ உருவாகுவதற்கு சக்குபாய்தான் ஊர் மக்களின் ஆதரவைப் பெற்றுத்தந்தார்.

நாங்களும் படைத்தோம் வரலாறு

என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். தலித் சமூகத்தைச் சேர்ந்தவள் நான். என் அம்மாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. கொங்கண் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம்தான் என் பூர்வீகம். என் அப்பா ஆறாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். என் கிராமத்திலிருந்தவர்களோ அவர் பெரிய படிப்பு படித்திருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் ஆறாம் வகுப்பு படித்திருந்தாலே போதும், வேலை கிடைத்துவிடும். எனவே அவர் ஓர் ஆசிரியராக இருந்தார். அத்துடன் எங்கள் இனத்தில் நடைபெறும் திருமணங்களை முறைப்படி நடத்தி வைப்பார்.

ஊர்மிளா பவாரின் இரண்டு சிறுகதைகள்

அப்பா அந்த நாளைய ஸ்கூல் மாஸ்டரானதால் ‘அடி’ மாஸ்டராகவே திகழ்ந்தார். ஏதோ அடிப்பார் என்றில்லை. அடிக்க ஆரம்பித்தார் என்றால் தன்னையே மறந்துவிடுவார். எங்கள் ‘வாடி’யில் அவர் ஒருவர்தான் படித்தவர். எவ்வளவு படித்திருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்? ஏழாம் கிளாஸ் வரை.

பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி

நான்காவது வகுப்பிற்குமேல் அவளை படிக்கவிடாத, கராச்சியைச் சேர்ந்த குடும்பத்தின் இளம் பெண் ; தினசரிகளை படித்து புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றித் தெரிந்துகொண்ட ஆர்வம்மிக்க பெண் ; தான் மேலே படிக்கா விட்டால் அறிவியலில் தான் கண்டுபிடிப்பதற்கென்று எதுவுமே இல்லாமல் போய்விடுமா என்று கவலை கொண்ட பெண் ; பிரிவினைக்குப் பின், இருபத்தியிரண்டு வயதில், ஐந்து சகோதரிகளும் ஐந்து சகோதரர்களும் கொண்ட தன் குடும்பம் பிழைக்க ஏதேனும் ஒரு வழி தென்படாதா என்று பம்பாய் தெருக்களில் தன் சகோதரனுடன் அலைந்து திரிந்த பெண் ; ஆராய்ச்சிக்கூடத்தில் அலுப்பே கொள்ளாமல் உழைத்த ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானி; அறிவியல் அறிவு மூலமாக தான் அறிந்து கொண்டதெல்லாம் புறவுலகம் பற்றியதுதான் என்பதால் சுயத்தின் தன்மையை அறிய முயலும் ஒரு சந்நியாசி – சாந்தூ குர்னானியின் கதையிலிருந்து உருவாகும் பலமும் உறுதியும் கொண்ட பிம்பங்கள் இவை. இந்த வாழ்க்கைக் கதையிலிருந்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் பெண்களின் கல்வித் தேர்வு பற்றியும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிவியல்துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் நாம் அறிகிறோம்.

முன்னணிப் பெண் விஞ்ஞானிகள்

நேரடிப் பேட்டிகளுக்கு வயதான விஞ்ஞானிகள் கிடைக்காததே இந்தக் கட்டுரையை எழுதும்போது நான் எதிர்கொண்ட முக்கியமான பிரச்சினை. என்றாலும் அவர்களில் இரண்டு பேரோடு பேச எனக்கு அதிர்ஷ்டம் கிட்டி யது. அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை அலசிப் பார்க்கும்போது, பரந்த இந்திய வானத்தை அழகுபடுத்தும் அற்புத வண்ணங்களின் அழகான வானவில்லை காட்சிப்படுத்தும். இந்த முன்னணி பெண் விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் உண்டான மாற்றத்தின் செயல்வகையை அந்த வண்ணங்களில் ஒவ்வொன்றாகக் காணப் போகிறோம். கண்ணாடிக் கூரையை உடைத்து வெளியேறி, தன்முனைப்பான முயற்சிகளால் அவர்கள் தங்களுக்கு மட்டும் வரலாறை உருவாக்கிக் கொள்ளவில்லை; இந்திய சமூகத்தின் சமூகப் புரட்சிப் போக்கில் அவர்கள் சரித்திர காரணகர்த்தாக்களாகவும் ஆனார்கள்.

சொல்லாத கதைகள்

கலா ஷஹானியைப்  போன்று மானிட மதிப்பீடுகளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டோருக்கு நாட்டிற்காக, அதன் விடுதலைக்காகப் போராடியதும் தான் வரித்துக் கொண் ட மதிப்பீடுகள் சார்ந்து வாழ்வதும்  அரசியல் செயல்பாடல்ல; மாறாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்து அவர்களின் ஆளுமையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கிய ஓர் ஆன்மீகத் தேடல். அவர்கள் சுய லாபத்தையோ அங்கீகாரத்தையோ கருதாமல் தேசத்திற்குத் தொண்டாற்றுவதையு ம் சில மதிப்பீடுகளுக்காக வாழ்வதையுமே இலட்சியமாகக் கொண்டவர்கள்.

தனியாய் ஒரு போராட்டம்

முஸ்லிம்கள் தனக்கு அளித்த உதவிகளை பற்றிச் சொல்லிக் கொண்டு வருகையில் கலா அவர்கள் தன்னிடம் கேட்ட பல கேள்விகளையும் பற்றி நினைவுகூர்ந்தார். “நீங்கள்—ஹிந்துக்கள்— ஏன் எங்களை வெறுக்கிறீர்கள்? உங்கள்மேல் எங்களுக்கு எந்தவித வெறுப்பும் இல்லையே?” அவர் அதற்கு முன்பும் அதன் பின்பும் அளித்த—-அவரது இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த— பதிலைத்தான் அப்போதும் அளித்தார். “நாங்கள் உங்களை வெறுக்கவில்லை. மத வேறுபாடுகள் பாராட்டாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான். நாமெல்லாம் ஒன்று. மனிதர்கள் என்ற நிலையில் நாமெல்லாம் சகோதர சகோதரிகள்.”]