தோழரண்ணனிடம் முன்பே நாங்கள் சொல்லியவற்றை அவர் டிரிப்பிள் எஸ் சாரிடம் சொல்லியிருந்தார். நாங்கள் மெல்ல எம் எஸ் சி சாருக்கும், பிரேமுக்குமான உரசல் குறித்தும், அது தொடர்பாக நடந்து வரும் ‘பழிவாங்கல்களையும்’ சொன்னோம். டிரிப்பிள் எஸ் சார் முகம் இறுகியது. தோழரண்ணன் கூட அதிர்ச்சி அடைந்தார்
Category: இதழ்
நலுங்கும் சுடர் – பால் கிங்ஸ்நார்த்தின் கலகம் 2
ரிக் வேதம் பூமியை ‘சக்தி’ எனச் சொல்கிறது. அதர்வ வேத புவி சூக்தத்தில், இடம் பெறும் 63 செய்யுள்களில், சிலவற்றைக் கீழே பார்ப்போம். பூமியை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், அதனால், உயிரினங்கள் எப்படி செழிக்கும் என்று பாடிய முனிவர்கள், சுற்றுச் சூழலின் அவசியம் தெரியாமலா இதைச் சொல்லியிருக்கிறார்கள்?
இருட்டின் வெளிச்சம்: உய்குர் கட்டாயத் தொழில் சர்ச்சை
2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பிய பொழுது சர்வதேச மோதலின் மையத்தில் தான் வசமாக சிக்கியுள்ளதையும் சீனாவை மையமாகக் கொண்ட கட்டாய தொழிலாளர் விசாரணைகளை இனி தொடர முடியாது என்றும் அறிந்து கொண்டார் மர்ஃபி. பல்கலைக்கழக உள் ஆவணங்கள் மூலம் ஆகஸ்ட் 2022லிருந்தே ஷெஃபீல்ட் ஹாலமின் வலைத்தளங்கள், மின்னஞ்சல் தொடர்புகள் சீனாவிற்குள் தடுக்கப்பட்டுள்ளதையும் அறிந்தார். மர்ஃபியின் ஆராய்ச்சி சீன அதிகார அரசின் அதிருப்தியைத் தூண்டியதற்கான ஆரம்ப அறிகுறியாகவும் அது பார்க்கப்பட்டது.
தொடரும் விதுர நீதி
மனிதனின் உடல் ஒரு தேர். ஆன்மா அந்த தேரை செலுத்தும் தேரோட்டி. உணர்வுகள் தேரை இழுக்கும் குதிரைகள். அந்த உணர்வுகளை பழக்கப்படுத்திக் கட்டுப்படுத்த பயின்ற ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியாய் பயணிக்கிறான். உணர்வுகளை அடக்க முடியாதவன் சொல்ல இயலாத துன்பங்களை அடைகிறான்.
எங்கே செல்லும் இந்தப் பாதை?
இருக்கும் முதியோர் இல்லங்களில் கூட அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதில்தான் கவனம் இருக்கிறதே தவிர அவர்களுக்கு ஒரு தரமான வாழ்வுமுறையை அமைத்துத் தர வேண்டும் என்ற முனைப்பு இருப்பதில்லை. இந்நிறுவனங்கள் தாங்கள் வசூலிக்கும் கட்டணங்களைப் பொறுத்து சாப்பாடு, உறைவிடம், மருத்துவத் தேவைகள் போன்ற அடிப்படை வசதிகளை ஓரளவு நன்றாகச் செய்து தருகின்றன. இந்நிறுவனங்களில் நல்ல முறையில் கவனிப்பு இருந்தாலும் இவை இங்கிருப்பவர்களின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் அர்த்தமுள்ளதாகச் செய்கின்றன என்பது கேள்விக்குரியதே
மனசுப் போல
‘என்ன தப்பு செய்தோம்னு இப்பிடி தண்டிச்ச கடவுளே’ என்று அவரைக் கேட்டுக்கொண்டேன். அவர் இதற்கெல்லாம் பதில் சொல்பவரா என்ன. துளசிப்பிரசாதம் வங்கிக்கொண்டேன். கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஆஞ்சனேயரை வலம் வந்து தரை வீழ்ந்து வணங்கினேன். பிரசாதம் புளியோதரை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாழைச்சருகு தொன்னை. இரண்டு இரண்டு என நான்கு கப்கள் வங்கிக்கொண்டேன்
நளனுடைய உபாக்யானம் என்ற பகுதி, மஹா பாரதத்திலிருந்து
யார் நீங்கள்? உங்களைப் பார்த்தால் நல்ல பண்புள்ளவராகத் தெரிகிறது. இந்த உள்ளறை வரை வரத் துணிந்த நீங்கள் யார் என்பதை அறிய விரும்புகிறோம். இந்த பகுதி பலமான கட்டுக் காவலுடன் கூடியது எப்படி உள் நுழைந்தீர்கள்? அரசனின் கட்டளையை யாரும் மீறவும் துணிய மாட்டார்களே.
இன்ஃபோசிஸ் பரிசுகள் 2025 – இயற்பியல் அறிவியல்
இளைய விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுக்கு, இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளையால் மந்திரமுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையை அனுப்புகிறது: உலகளாவிய சவால்களில் கவனம் செலுத்தி, அறிவியல் கடுமையுடன் செயல்படுத்தப்படும் துணிச்சலான இடைநிலை ஆராய்ச்சி, மற்ற குழுவினரின் அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமல்ல, உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு அர்த்தமுள்ள தீர்வுகளை தர முடியும் என்கின்ற தொலைநோக்கு பார்வையும் தான்.
அரளகுப்பே அஷ்டதிக்பாலகர்
கர்நாடகத்தில் வரலாற்றைச் சொல்லும் கோயில்கள் என்றவுடன் நம் மனத்தில் முதலில் தோன்றுவது, ஹொய்சாளர்கள் எடுப்பித்த பேலூர், ஹளபேடு கற்றளிகளும், விஜயநகர சாம்ராஜ்யத்தினர் எழுப்பிய ஹம்பி கோயில்களும், சாளுக்கியர்களில் கைவண்ணத்தில் எழுப்பிய பாதாமி தளிகளும்தான். சில வருடங்களுக்கு முன்னால் ஃபேஸ்புக்கின் மூலம் வரலாற்று/விழிப்புணர்வு செயல்பாட்டாளரும் அற்புதமான புகைப்படக் கலைஞருமான ஸ்வாமிநாதன் “அரளகுப்பே அஷ்டதிக்பாலகர்”
சுழியத்தின் காரணியம்
சுழியமே காரணம், அதன் காரணியமே ஒன்று. சுழியம் எனும் சாரமற்ற ரூபம், ஒன்று அதன் நாமம். சட்டென அலுவலகத்தில் கண்முன் இருந்த கணினிகளெல்லாம் சுழியங்களும் ஒன்றுகளும் சேர்ந்த நாமரூபங்களின் தொகுப்பாகத் தெரிந்தது. அலுவலகத் தோழர்களும் அவ்வாறே தோன்றினர். ’அது’ சாரமற்றதெனில் அதனைக் காணும், உணரும், உற்றறியும், ’இது’?
நம்பிக்கை
அந்த அறையில் தான் பஜனை நடக்கும். கூட்டுப் பிரார்த்தனை நடக்கும். நிறைய அற்புதங்கள் நடந்திருப்பதாக அக்கம் பக்கத்தில் பேசுவார்கள். படங்களில் அவ்வப்போது மஞ்சள்நிறப் பொடி கசிவதும் உண்டு. கணேசன் பார்த்தது இல்லை. ஆனால் நம்புவான். அவனுக்கு சிறுவயதில் இருந்தே மகான்களிடத்தில் நம்பிக்கையும் ப்ரேமையும் உண்டு.
பொது நலம், மேரி டைபாய்ட் கதை மற்றும் சமூக நலன் ஓர் அறிமுகம்
மேரியின் காலத்தில், நோய்கள் பற்றிய பல தவறான நம்பிக்கைகள் இருந்தன. பழைய நம்பிக்கைகளின்படி, நோய்கள் “மோசமான காற்று” அல்லது “மியாஸ்மா”வால் ஏற்படுகின்றன என்று மக்கள் கருதினர். நோய்கள் தெய்வீக தண்டனை அல்லது பாவத்தின் விளைவு என்றும் நம்பினர். சில மக்கள் “சபிக்கப்பட்டவர்கள்” அல்லது “அசுத்தமானவர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டனர்.
சாண்ட்விச் தலைமுறையும் சொல்ல இயலா சங்கடங்களும்!
நம் பெற்றோருக்கு வயது கூடக் கூட அவர்களின் தேவை ஒரே மாதிரியாகவும், இதுதான் என்று எதிர்பார்க்கக்கூடியவையாகவும் இருப்பதில்லை. அவர்கள் தேவைகளுக்கெல்லாம் ஈடு கொடுக்க நம் வாழ்வுமுறைகளில் நாம் பெரும் சமரசத்தைச் செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது, நம்மைப் பல விதங்களில் பாதிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
காட்டுத்தடம்
எங்களுக்கு முன்னால் தூக்குக் கயிற்றைப்போல் ஆலமர விழுதுகள் தொங்கிக்கொண்டிருந்தது. பாதி உயிர் அதைப் பார்த்தவுடனயே போய்விட்டது. மீதி உயிர் போகும்படி விழுதுகள் தொங்கும் கிளைக்கு மேலுள்ள கிளையில் வடக்குப்பார்த்து அமர்ந்திருந்த ஆந்தையொன்று தன்னுடலை துளிகூட அசைக்காமல் தலையை மட்டும் திருப்பி தென்புறமாக விழுந்த எங்களை முண்டக்கண்ணை விரித்து இமைத் தட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தது. அந்தப் பார்வை எங்களின் தலையை முதுகுப் பக்கமாகத் திருகி கொண்டை முடிச்சினை முறித்துக் கொல்வது போலிருந்தது.
”குற்றத்தின் நறுமணம்” கவிதைகள் – விமர்சனம்
தனது கடந்தகால வாழ்வியலின் காட்சியை நிகழ்கால அசலாகக் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நிரை மரக்காலில் நிறைந்திருக்கும் நெல்மணிகளாய் சொற்கள் நிறைந்தவையாகக் கவிதைகள் காணப்படுகின்றன. தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாகத் தானிருக்கின்றன “குற்றத்தின் நறுமணம்”என்று. குற்றத்தினை பல்வேறு வகையான கோணங்களில் வகைப்படுத்தலாம்.
நாற்பதாவது மரணம்
அஞ்சு வருஷம் ஒரு சைக்கிள், ஒரு வட்டம் சார். ஒரு சைக்கிள்ல சென்னையில் ட்ரெயினேஜ்ல விழுந்து பதினஞ்சு சாவு. இது வரை பதினாலு ஆயிருக்கு. அதே மாதிரி பேனர் விழுந்து பத்து சாவு. அது இந்த சைக்கிள்ல முழுசா முடிஞ்சிருச்சு. தமிழ்நாட்டுல போலீஸ் கஸ்டடி டெத் நாற்பது. இந்த முறை முப்பத்தி ஒன்பது ஆச்சு. போலீஸ் துப்பாக்கிச் சூடு சாவு ஒரு இருபது. இந்த முறை அதுவும் முடிஞ்சு போச்சு. இதைத் தவிர ட்ரெயின் விபத்து அது இதுன்னு சென்ட்ரல் கவர்மெண்ட் கணக்கு வேற.
அசோகமித்திரனின் கதையுலகம்
மகத்தான ஆக்கங்களில் பொங்கியெழும் அறச்சீற்றமாகவும், மானுடர் மேல் கொண்ட கருணையாகவும் வெளிப்படும் அதே கனிவு மறுபுறம் அவர்கள் கொண்ட துயராகவும் அதன் விளைவான கசப்பாகவும் கூட வெளிபடக்கூடும் என்கிறார். இருத்தலியல் காலத்தில் எழுதப்பெற்ற பல படைப்புகள் இன்று காலாவதியாகிப் போய்விட்டாலும் கூட, இன்றளவும் அசோகமித்திரனின் கதைகள் நமக்கு நெருக்கமாக இருப்பதன் காரணம் அவர் கதைகளில் அத்தனை கதாப்பாத்திரங்களின் ஊடாகவும் வெளிப்படும் அவரது கனிவுதான்!
மாபெரும் சூதாட்டம்
‘’அரசே ! பகடையாட்டம் என்பது ஓர் அவதானம். நம்மால் எப்போதும் முற்றிலும் அறிய முடியாத எப்போதும் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத பெருஞ்சிக்கல் ஒன்றினை அறிய முயல்கிற புரிந்து கொள்ள முயல்கிற ஓர் முயற்சி. இதில் ஆடும் நபர்கள், ஆடும் குழுக்கள், பகடைக்காய்கள், பணயப் பொருட்கள் அனைத்துமே அறிய முடியாத பெரும் சக்திகளின் பாவைகளே. பகடையாடுபவன் அறிய வேண்டிய முதன்மையான விஷயம் இது’’
நீலப் பிரகாசம்
ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகத் தோன்றிய மற்றொரு ஆராய்ச்சி, வாயுக்கள் போன்ற சிறிய மூலக்கூறுகளைப் பிடிக்க அல்லது வைத்திருக்கக்கூடிய, சிறிய துளைகள் அல்லது இடைவெளிகளைக் கொண்ட நுண்துளைப் பொருட்கள் அல்லது திடப்பொருட்களை உருவாக்குவதாகும். இது தேவையில்லாத மூலக்கூறுகளை வடிகட்ட அல்லது வாயுக்களை சேமிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சின்னப் பையன்
சட்டென்று அம்மா புடவையை எடுத்து பள்ளத்தில் வீசினான். பையா, இதை கெட்டியாக பிடிச்சுக்கோ, நான் மேலே இருக்கேன்— யாராவது வந்தால் உதவிக்கு கூப்பிடலாம். சுற்றும் முற்றும் பார்த்தான். வகுப்பு மாணவர்கள் சிலர் வந்தனர். நானும் விழாமல் இந்த புடவையுடன் சிறுவனை இழுத்து மேலே கொண்டு வரும் வரை என் காலை அழுத்தி யாராவது கெட்டியாக பிடிச்சுக்கோங்கோ. அந்த சிறுவர்களும் உடனே புரிந்து கொண்டு அவன் கால்களை இறுக்கி பிடித்துக் கொண்டனர்.
ஃப்ரென்ச் ஃப்ரைஸ்
இந்த சர்வதேச நிறுவனங்களுடனான ஒப்பந்தம், உள்ளூர் சந்தையில் உருளைக்கிழங்கை விற்றுக்கொண்டிருந்த விவசாயிகளின் வருமானத்தை 75% அதிகரித்தது. இது இந்திய விவசாயிகளின் வாழ்வை மாற்றியது மட்டுமல்லாமல், இந்திய உருளைக்கிழங்கு பதப்படுத்தும் நிறுவனங்களின் விதியையும், தரத்தையும் மாற்றி அமைத்து, 2017-ம் ஆண்டு முதல் உலகெங்கும் உருளைக்கிழங்குகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியாவை மாற்றியது.
நலுங்கும் சுடர் – பால் கிங்ஸ்நார்த்தின் கலகம் – 1
ஆனால், நிஜ உலகில் இயந்திர அழிவு என்பது மாறுதலாகத்தான் இருக்கும். போல்ஷெவிக் சதிக்குப் பிறகு, ரஷ்யாவில் நடந்த உள்நாட்டுப் போரை நினைவில் கொள்ளுங்கள். கடைசி முடியரசான ரோமனாவ் 30 பகுதிகளாகச் சிதறுண்டது; மன்னரும், சுற்றமும், உற்றமும் கொல்லப்பட்டனர்; பன்னிரண்டிற்கும் மேற்பட்ட அயல் இராணுவம் இந்தப் போரில் உட்புகுந்தது; இந்தப் போர் தொடர்ந்த 3-5 வருடங்களில், 10 மில்லியன் மக்கள், இந்தச் சண்டை சிக்கலினால் இறந்தார்கள்.
றெக்கை– அத்தியாயம் 8
எல்லா ஒப்பனைகளும் உரிந்த பிறகு பளிச்சென்று முழுவதாக, எல்லா வண்ணங்களும் ஓவியன் வரைந்த அசலாக உயிர்த்தன. ஓவியத்தில் நடுவில் கொஞ்சமும் இயற்கை மாறாத புல்தரை. இரண்டு ஆண்கள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒருவர் வெள்ளயர். மற்றவர் நல்ல கருப்பர்.ஒரு பேரழகி ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள். அந்தப் பெண்ணின் ஒரு பாதம் முதல் ஆண் மடியிலும் அவளது இன்னொரு பாதம் மற்ற ஆண் மடியிலும் மெல்லத் தொட்டு இருக்கின்றன. ஓவியத்தின் கீழே என்னமோ எழுதியிருக்கிறது,
‘கண்ணுக்குத் தெரியாத’ நெருக்கடிகளுக்குள் சூடான்
செங்கடல் வர்த்தகம், தங்கச் சுரங்கத்தில் செல்வாக்கு செலுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) RSF க்கு ஆயுதங்கள், ட்ரோன்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எகிப்து, சூடானிய ஆயுதப் படைகளை (SAF) ஆதரிக்கிறது. ஏனெனில் அது நைல் நதிநீர் பேச்சுவார்த்தைகளில் தனது நிலைப்பாட்டை ஆதரிக்கும் ஒரு நட்பு அரசாங்கத்தை விரும்புகிறது. ரஷ்யா இரு தரப்பினரையும் அரவணைத்துள்ளது. போருக்கு முன்பு, மாஸ்கோ சூடானின் செங்கடல் கடற்கரையில் ஒரு கடற்படை தளத்தை உருவாக்க முயன்றது. ஆகவே, சூடானின் மோதல் வெறும் உள்நாட்டுப் போர் அல்ல – இது செல்வாக்கு மற்றும் வளங்களுக்கான ஒரு பினாமி போட்டி என்பதைக் காட்டுகிறது.
தெய்வநல்லூர் கதைகள் -27
கணிதத் தேர்வில் தன்னுடைய கணக்கு சரியாக இருந்தும் 2 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருப்பதாக பிரேம் எம் எஸ் சி சாரிடம் முறையிட்டார் (சார், நீங்க சொல்லிக் கொடுத்தபடிதான் சார் இந்தக்கணக்கை போட்ருக்கேன். ஏழு ஸ்டெப்தான சார் மொத்தம், ஏழும் சரியாத்தான போட்ருக்கேன். ஆனா 5 க்கு மூணு மார்க்தான் சார் போட்ருக்கீங்க- விடைத்தாளை நீட்டியபடி). எம் எஸ் சி சார் சிறிதும் அலுங்காமல் பிரம்பை கையில் எடுத்தபடியே துரையை அழைத்து அவர் விடைத்தாளை வாங்கி பிரேம் முகத்தின் முன் நீட்டினார்
கொடுத்துப் பெறுவதல்ல பெண்ணியம்
பெண்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் துணையாக, ஆண் இலக்கியவாதிகள் புயல்போல வேட்டியை இறுக்கிக் கட்டி களமிறங்கிய செயல் மகிழ்ச்சியை அளிக்கிறது. பரிதாபம் காட்டிச் சும்மா இருக்காமல் அவர்களின் துயரங்களைப் புரிந்து கொண்ட ஆண் எழுத்தாளர்களின் இலக்கிய செயல்பாடுகள் விரிவாக வெளிவந்தன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை அளவிலும் இயல்பிலும் சிறிதாக இருந்தாலும் சமுதாயத்தில் பெரிய மாற்றங்களை எடுத்து வருகின்றன. சிந்தனையைத் தூண்டுகின்றன.
தணிகா கவிதைகள்
தூவானத்தில்
அகல்இலை குடைபிடிக்கிறாய்
வடிகிறது
வானம்.
தமயந்தியின் ஸ்வயம்வரம்
தயக்கம், பயம், செய்வதறியாத திகைப்பு, குழப்பம் இவைகளுடன் பாவம் அந்த பெண் என்று இரக்கமும் வந்தது. போலியையும், உண்மையையும் எப்படி பிரித்தறிவாள்? நேரடியாக அந்த போலி நளன் களையே அடையாளம் காட்டி இருக்கலாமோ, அல்லது அவர்களையே வேண்டி விட்டுக் கொடுக்க செய்திருக்கலாமோ என்று தானே பல வித குழப்பங்களுடன் இருந்தாள். உண்மை நளன் என்ன நினைப்பான், இந்த பெண் இதன் பின் என்னை நம்ப வேண்டுமே, நளனே ஏதேனும் சைகையாக சொல்லக் கூடாதா?
ஜேம்ஸ் வாட்சன் (1928 –2025)
கேம்பிரிட்ஜில் வாட்சன், க்ரிக் என்ற ஆராய்ச்சியாளருடன் இணைந்து, DNA வின் அமைப்பை கண்டறிவதில் ஈடுபட்டார். DNA-வின் சரியான அமைப்பை ரோசலின்ட் ப்ராங்ளின் மற்றும் வில்கின்ஸ் வழங்கிய எக்ஸ்-கதிர் விளிம்பு வளைவுப் படங்கள் (X-ray diffraction photographs) மூலம் கண்டறிந்தனர். பாஸ்பேட் முதுகெலும்புகள் மூலக்கூறின் வெளிப்புறத்தில் உள்ளது மற்றும் அது ஒரு இரட்டைச் சுருள் என்றும் ரோசலிண்ட் சுட்டிக் காட்டினார். இந்த முக்கிய நுண்ணறிவு, இரண்டு இழைகளும் எதிரெதிர் இணையானவை என்பதை உணர்ந்துகொள்ளவும், சரியான இரட்டைச் சுருள் அமைப்பைக் கண்டுபிடிப்பதற்கும் ஏதுவானது.
இணை சினிமா – ஓர் கண்ணோட்டம்
முதலாவதாக, குறைந்த முதலீட்டில் எடுக்கப்படுபவை என்பதால் வர்த்தக முயற்சிகளை விட குறைந்த வெகுமதியே கிடைக்கும் என்பதற்காக. இரண்டாவது, குறைவாக விநியோகிப்பாளர்களும், திரையரங்குகளும் கிடைக்கும் நிலையில், அதிக ஓட்டம் காணாது என்பதாலும். மூன்றாவதாக (முக்கியமாக), கலை திரைப்படங்களில் நடிக்கும் நாயகர்களுக்கு ஒரு முத்திரை குத்தப்பட்டுவிடும் என்பதாலும் இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக , இணை திரைப்படங்களில் நடிப்பதற்கென்றே திறமையான கலைஞர்கள் வரிசை இருப்பதும் உண்மை.
தாரகேஸ்வரி
ஏதோ ஒரு வேலையில் தீவிரமாக ஆழ்ந்திருந்தாலும் முதல்வரின் பார்வை இடையிடையே வெளியே நிற்பவர்களையும் தொட்டு மீளாமல் இல்லை. ஆனால் அதில் எங்களைக் கண்டுகொண்ட பாவனையோ, அறைக்குள் வரச்சொல்லி அழைக்கும் சைகையோ கொஞ்சமும் இல்லை. மனதுக்குள் சுழன்று கொண்டிருக்கும் முக்கியமான ஏதோ ஒரு சிந்தனையையே அந்த முகம் வெளிப்படுத்திக்கொண்டிருந்ததால், எங்கள் மீது அவ்வப்போது படியும் அவரது பார்வை , இலக்கற்ற வெற்றுப்பார்வை மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு வாட்ஸாப் மொழிபெயர்ப்பு : ஷெல்லியின் “Autumn: A Dirge”
ஆமாம், குளிர்காலம் ஆரம்பித்த உடன் வருடம் செத்துவிடுகிறது. இயற்கை மாறுகிறது – வீழ்கிறது, வெளிர்கிறது, உதிர்கிறது. வசந்தகாலத்தையும் கோடைக்காலத்தையும் வாழ்வாகவும் குளிர்காலத்தைச் சாவாகவும் கவிதை வரையறுக்கிறது.
பராக்குப் பார்த்தல்!
தமிழிலும் இதற்குத் தொன்மையான ஒரு பெயர் உண்டு. அது பராக்குப் பார்த்தல். அக்கு என்றால் கண். பர என்றால் மற்றயவை. பரலோகம் என்றால் நம்முடைய உலகம் இல்லாத மற்றொரு உலகம். பரமண்டலம், பரதேசமெல்லாமும் அப்படியே. பரோபகாரி என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்வபன். ஆக பார்க்க வேண்டியவற்றை விட்டுவிட்டு மற்றவற்றில் கண்ணை வைப்பதற்குப் பராக்கு என்றார்கள். பொதுவாக கவனமின்மை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டாலும், வேடிக்கை பார்ப்பதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம்.
யாமார்க்கும் குடியல்லோம்
சுவரோடு சுவராய் ஒட்டியிருந்தவன் அதிலிருத்து மெல்ல விலகித் திரும்பிப் பார்க்காமல் கைகளை விரித்தபடியே பின்னோக்கி நடந்தான். அவனது கால்கள் மட்டுமே அசைந்தன அதுவொரு சிலைக்கு உயிர் வந்து நடப்பதைப் போல் இருந்தது. அறையின் மறுமுனையை அடைந்தவன் வேகம் கொண்டான், பாய்ச்சலுறும் விலங்கைப் போல முன்னோக்கி விரைந்தான். தனக்கு முன் சுவர் உள்ளது என்பதை அவன் சற்றும் பொருட்படுத்தவில்லை.
இயல் விருது அனுபவங்கள் – 2025
இலக்கியம் பலவீனமானது. அன்றாட லௌகீக நோக்கத்திற்கு பைசா பிரயோசனமில்லை. அது எங்களுக்கு உணவளிக்கவோ அல்லது தங்க மாளிகையில் ஆபரணம் வாங்கவோ உதவாது. நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருந்தாலொழிய உங்களை வளப்படுத்தாது. ஆனால் மனிதகுலத்தின் எந்தவொரு கலாச்சார முயற்சியும் இருந்ததைப் போலவே இலக்கியமும் அழியாமைக்கு நெருக்கமாக உள்ளது.
வேலையை விரும்பிய தருணம்
நான்கு மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டு தயாராக இருக்கும்படி உத்தரவு வந்தது. குளித்துவிட்டு கம்பெனி சீருடையை அணிந்து தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான். ‘நல்லாத்தானேடா இருக்க’ என்று தன்னையே பாராட்டிக் கொண்டான். நுனி விரலில், தண்ணீரில் குழைத்த வீபூதியைத் தொட்டு இரு புருவங்களுக்கிடையே நீட்டினான். ‘ஈரத்துல தொட்டு வெச்சா, ரொம்ப நேரத்துக்கு இருக்கும்’ சூப்பர்வைசர் முந்தின நாள் இரவே சொல்லி வைத்திருந்தார்.
டோண்ட் கேர்
டோண்ட் கேரால் நம்பவே முடியவில்லை!. பொடி நடையாகவே அவர், ‘யான உழுந்தான் பாசா’ பக்கம் வந்திருந்தார். தனது அப்பா காலத்தில், இந்தப் பாசாவில் யானை ஒன்று விழுந்து மேலே ஏறி வர முடியாமல் நாளெல்லாம் பிளிறிக் கொண்டிருந்ததாம்!. வனத்துறை ஆட்கள் வந்தே அதைக் காப்பாற்றினார்களாம். அன்றிலிருந்து அது ‘யான உழுந்தான் பாசா’ ஆகிப்போனது. அன்று, அங்கே பாஷாணம் அடிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. சந்தனசாமிதான் கங்காணி!. டோண்ட் கேரைப் பார்த்ததும் கையசைத்து நட்பைக் காட்டினான்.
ஒற்றைக் குதிரை
கற்றை சடை முடி மாதேவன்,
கடற்பா லரவத் தறிதுயிலோன்
மற்றை தெய்வங்கள் யாவையுமே
மனதால் விளைந்த தோற்றங்களே.
பாயும் குதிரை
இந்த சோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குதிரையின் பெயர் சாலீ கார்டனர் (Sallie Gardner). அன்று லீலன்ட் ஸ்டான்போர்ட் மற்றும் அவரது நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் அந்த பாலோ ஆல்டோ (Palo Alto) பண்ணையில் கூடியிருந்தனர். ஓடு தளத்தின் ஒரு முனையில் குதிரை சாலீ நின்றுகொண்டிருந்தது. உத்திரவு கிடைத்தவுடன் சாலீ பாய்ந்து ஓடியது. சாலீயின் குளம்பொலியும், காமிராக்களின் ஷட்டர் ஒலியும் படபடத்தது போலவே பார்வையாளர்களின் இதயங்களும் படபடத்தன.
றெக்கை– அத்தியாயம் 7
நிர்மலாவின் அருகே மிக அருகே நெருங்கி உட்கார்ந்து கேட்டாள் –பசங்க கர்ப்ப காலத்திலேயே இந்த மந்திரவாதம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தாங்களா? ஏன் கேக்கறேன்னா, வலநாடுலே கருவிலே இருக்கறது ஆண் பிள்ளைன்னா தினம் ஒரு மணி நேரம் கர்ப்ப ஸ்திரியை உட்கார வச்சு சுற்றி நின்னு வரிசையா இங்க்லீஷ் பாட்டு பாடி ஆடுவாங்க, டிங் டாங் பெல், மேரி ஹேட் அ லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப் ..
சக்கர வியூகம்
பழக்க வழக்கங்களை எதிர்பார்த்திராத வகைமைகளில் மாற்றும் (தென் கொரியா மிகச் சிறந்த எடுத்துக்காட்டு). பல்லாயிரக்கணக்கான உபகரணங்கள் சாதாரண மக்களின் கரங்களிலும் இருக்கிறது/ பணம் படைத்தோர், அதிகாரம் படைத்தோர் ஆகியோரின் கைகளிலும் இருக்கிறது. எனவே, தரவுகள் பெறுவதோ, அதை அலசுவதோ, அதன் மூலம் விரும்பும் ஒரு கருத்தைப் பரப்புவதோ, அதை நம்பச் செய்வதோ, அதன்படி கட்டுப்படுத்துவதோ இயல்பாக, நாம் அறியா வண்ணம் நடை பெற்றுக் கொண்டேயிருப்பதால், கணக்கீடுகளும், உயிர் கூட்டமான மனிதர்களும் இணைந்து ஒரு சைபர்னேடிக்ஸ் அமைப்பாக நாம் வடிவெடுத்து வருகிறோம்.
தெய்வநல்லூர் கதைகள் – 26
அதுவரை குழப்பமாகவே இருந்த எங்களுக்கு சூழலின் விபரீதம் புரிந்தது. ஆனால் எம் எஸ் சி சார் எவ்வித வெறுப்பும் வெளிப்படாத முகத்தையே காட்டினார். இதற்கு முன் இந்த வகுப்புக்குள் தான் வந்ததே இல்லை என்பது போல இருந்தது அவரது செயல்பாடு. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் (பெயர், படிப்பு – என் பேரும் படிப்பும் ஒண்ணுதாண்டே ) தன்னுடைய குடும்பம் குறித்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் எங்கள் ஒவ்வொருவரையும் குடும்பம் குறித்து சொல்லச் சொன்னார். வழக்கம் போல முன் பெஞ்சு மாணவனாகிய தெண்டிலு எழுந்தபோது அவரை கையசைவால் அமர வைத்தவர் –“அதென்னடே, மொத பெஞ்ச்சுன்னதும் எல்லாத்துலயும் மொத ஆளா வந்துரணுமா? அடுத்தவனும்தான் வரட்டுமே” தெண்டிலு முகம் குழப்பமானபோது பிரேம் முகம் இறுக்கமானது.
இராணுவ உடையில் ஒரு கூலிப்படை
பாகிஸ்தான் தளபதிகளின் விசுவாசம் தங்கள் நாட்டிற்கோ, இஸ்லாத்திற்கோ, காசாவிற்கோ அல்ல. தங்கள் காசோலைகளில் கையெழுத்திடுபவர்களுக்கு மட்டுமே. என்று பாகிஸ்தானியர்கள் ராணுவ நிறுவனம் தங்கள் பாதுகாவலர் அல்ல. சுயலாபத்திற்காக இயங்கும் கூலிப்படை என்பதை உணருகிறார்களோ அன்று நாடு பிளவுபடும். வரலாறு அவர்களைப் போர்வீரர்களாக நினைவில் கொள்ளாது. பேரரசிற்கு விலைபோனவர்களாக மட்டுமே நினைவில் கொள்ளும் என்பதையும் ராணுவ அதிகாரிகள் அறிவார்கள்.
நள சரித்திரம்
தன் தயக்கத்தையும், வெட்கத்தையும் கடந்து வந்து, தன் விருப்பத்தை தெரிவித்தாள். தானும் இது வரை கேள்விப் பட்டதில் இருந்து நளனை விரும்புவதைச் சொன்னாள். ஒத்த மனமுடைய இரு உயிர்கள் இணவது தான் இயல்பு. பறவை இனம் வேறு இனத்தை விரும்புமா? தன் தந்தை மறுக்க மாட்டார். ஆயினும் வேறு காரணத்தால், விதியின் விளையாட்டால் வேறு விதமாக அவரே நினைத்தால் நான் உயிரை விடவும் தயங்க மாட்டேன் என்றாள்
முடிவெடுத்தல், பொறுப்பேற்றல் மற்றும் சமூக கற்றல்
அலுவலகங்களிலும் இதே விஷயம் நடக்கிறது. தலைவர்கள் எப்படி சிக்கலான முடிவுகளை எடுக்கிறார்கள், தவறுகளை எப்படி ஏற்கிறார்கள், பொறுப்பை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை ஊழியர்கள் கவனிக்கிறார்கள். ஒரு நிறுவனத்தில் தலைவர்கள் தங்கள் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டால், அதிலிருந்து கற்றுக்கொள்வது பற்றிப் பேசினால், அந்த நிறுவனத்தில் ஒரு கற்றல் கலாச்சாரம் உருவாகும். ஊழியர்களும் தங்கள் தவறுகளை மறைக்காமல், அவற்றிலிருந்து கற்க முயல்வார்கள்.
தொடர்ந்த தூதுப்படலம்
சிறந்த அரசனானவன் தன் நல்லறிவைக் கொண்டு நல்லது கெட்டது என்ற இரண்டை வேறுப்படுத்திப் பார்ப்பான். பரிசு, சமாதானம், வேறுபடுத்துதல் மற்றும் பலம் இவற்றை உபயோகப்படுத்தி நண்பர்கள் , எதிரிகள் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களை கட்டுப்படுத்துவான். தன் ஐம்புலன்களை கட்டுக்குள் வைத்திருப்பான். இராஜ்யங்களுக்கு இடையேயான ஆறுவிதமான உறவுகளை அறிந்திருப்பார்கள். ஏழு விதமான கெட்டவைகளிடம் இருந்து ( ஆசை, சூதாட்டம், வேட்டை, கொடுஞ்சொல் கூறுவது, குடி, கொடுமையான தண்டனைகள் விதிப்பது மற்றும் செல்வத்தை வீணடிப்பது) விலகி இருப்பான்
மகிழ்ச்சி
பாத வடிவ உடல்
எல்லா உறுப்புகளும் சேர்ந்து தான்
இந்த உடலை கீழே வைக்கின்றன
பாத வடிவில் மட்டுமே இந்த உடல்
ஆனால் மண்ணில் பதிகின்றது
பாதம் மாதிரி உடல் இல்லை
பாதம் மாதிரி உடல் உறுப்புகள் இல்லை
சையது சலீம்
பெண்களுக்கு, அதிலும் முக்கியமாக முஸ்லிம் பெண்களுக்கிருக்கும் மற்றொரு பிரச்சினை கல்வியறிவு இன்மை. அது எத்தனை அனர்த்தங்களுக்கும் விபரீதங்களுக்கும் வழி வகுக்கிறது என்பதைக் கூறி, முக்கியமாக அதன் மதிப்பை அறியாத முஸ்லிம் இளைய தலைமுறை ஏன் முன்னேறுவதில்லை என்பதையும் ‘சலீம்’ உதாரணங்களோடு விவரிக்கிறார். ஒரு பெண் கல்வியறிவு பெற்றால். அவள் மட்டுமே அல்ல அந்தக் குடும்பமும், அவளுடைய ஊரும் எத்தனனை பயன் பெறும் என்பதை ‘அன்வர்’ மூலம் நிரூபிக்கிறார் சலீம்
ஜான் சர்ல் (1932- 2025) – அமெரிக்கத் தத்துவாளர்
1990கள் மற்றும் 2000களில், சியர்ல் ஒரு புதிய துறையில் ஆராயத் தொடங்கினார். அவரது புத்தகங்கள் “The Construction of Social Reality” (1995) மற்றும் “Making the Social World” (2010) இந்த யோசனைகளை விரிவாக்கின. பணம், அரசாங்கம், திருமணம், சொத்துரிமை இவை எல்லாம் எங்கிருந்து வருகின்றன? மலைகள் மற்றும் ஆறுகள் மனிதர்கள் இல்லாமலும் இருக்கும். ஆனால் ஒரு இருபது டாலர் நோட்டு? ஒரு ஜனாதிபதி? இவை நமது கூட்டு ஒப்பந்தத்தால் மட்டுமே இருக்கின்றன
2025 நோபல் பொருளாதார அறிவியல் பரிசு
நம் வளர்ச்சியின் ரகசியம் 2025 ஆண்டுக்கான பொருளாதார அறிவியல் துறைக்கான நோபல் பரிசு புதிய கண்டுபிடிப்புகள் எப்படி நாடுகளின் வளர்ச்சியைத் தாங்குகிறது என்பதை கணித மாதிரிகளால் விளக்கியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.. இவை வெறும் கோட்பாடுகள் அல்ல – நமது அன்றாட வாழ்க்கை, வேலைவாய்ப்புகள், சுகாதாரம் எல்லாவற்றையும் பாதிக்கும் உண்மையான மாற்றங்கள்! “2025 நோபல் பொருளாதார அறிவியல் பரிசு”
