யாமார்க்கும் குடியல்லோம்

சுவரோடு சுவராய் ஒட்டியிருந்தவன் அதிலிருத்து மெல்ல விலகித் திரும்பிப் பார்க்காமல் கைகளை விரித்தபடியே பின்னோக்கி நடந்தான். அவனது கால்கள் மட்டுமே அசைந்தன அதுவொரு சிலைக்கு உயிர் வந்து நடப்பதைப் போல் இருந்தது. அறையின் மறுமுனையை அடைந்தவன் வேகம் கொண்டான், பாய்ச்சலுறும் விலங்கைப் போல முன்னோக்கி விரைந்தான். தனக்கு முன் சுவர் உள்ளது என்பதை அவன் சற்றும் பொருட்படுத்தவில்லை.

வெளிச்சம்

“ஒரு சில கருந்துளைகள் நமது அண்டத்தில் உள்ளன. அவை நமது பூமியிலிருந்து பல இலட்சம் மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றைப் பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அறிவியலாளர்களுக்கே இவற்றைப் பற்றிய முழு புரிதல் தற்போது இல்லை. ஆனால் இப்படி அண்டப் பெருவெளியில் தோன்றும் கருந்துளைகள் கோள்களையும் நட்சத்திரங்களையுமே கூட விழுங்க வல்லன” என்றார்.