பாத வடிவ உடல்
எல்லா உறுப்புகளும் சேர்ந்து தான்
இந்த உடலை கீழே வைக்கின்றன
பாத வடிவில் மட்டுமே இந்த உடல்
ஆனால் மண்ணில் பதிகின்றது
பாதம் மாதிரி உடல் இல்லை
பாதம் மாதிரி உடல் உறுப்புகள் இல்லை
Tag: செல்வசங்கரன்
செல்வசங்கரன் கவிதைகள்
நீரைக் கையால்
அள்ளும் போது
நீர் என்ன செய்கிறது
ஏற ஒத்துழைத்தது
ஏறியதை இழுத்தது
ஏறியதே இறங்கியது
எல்லாவற்றையும் செய்தது
செல்வசங்கரன் கவிதைகள்
ஒரு மலைப் பயணம் மேற்கொள்ளலாம் எனக்
கிளம்பிக் கொண்டிருக்க
மலையே இறங்கி வந்து கைகளில் என்னை
ஏந்திக் கொள்ளுகிற அதிசயம் நிகழ்ந்தால் கூட
எதுவும் மாறாதென்று தோன்றியது
கவிதைகள்
வாழ்நாளில் உங்களுக்கு ஏற்பட்ட துயர சம்பவங்களை மனதில் இருத்தி
ஒரு சொட்டு மாறாமல்
அப்படியே கண்களில் கொண்டு வந்து உட்கார வையுங்களென்றதும்
எல்லாருக்கும் கண்கள் சிவீரென்று ஆனது
என் சிவப்பினை அந்தச் சிவப்புகளோடு ஒப்பு செய்து பார்த்தேன்
