இணை சினிமா – ஓர் கண்ணோட்டம்

முதலாவதாக, குறைந்த முதலீட்டில் எடுக்கப்படுபவை என்பதால் வர்த்தக முயற்சிகளை விட குறைந்த வெகுமதியே கிடைக்கும் என்பதற்காக. இரண்டாவது, குறைவாக விநியோகிப்பாளர்களும், திரையரங்குகளும் கிடைக்கும் நிலையில், அதிக ஓட்டம் காணாது என்பதாலும். மூன்றாவதாக (முக்கியமாக), கலை திரைப்படங்களில் நடிக்கும் நாயகர்களுக்கு ஒரு முத்திரை குத்தப்பட்டுவிடும் என்பதாலும் இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக , இணை திரைப்படங்களில் நடிப்பதற்கென்றே திறமையான கலைஞர்கள் வரிசை இருப்பதும் உண்மை.

தாரகேஸ்வரி

ஏதோ ஒரு வேலையில் தீவிரமாக ஆழ்ந்திருந்தாலும் முதல்வரின் பார்வை  இடையிடையே வெளியே நிற்பவர்களையும் தொட்டு மீளாமல் இல்லை. ஆனால் அதில் எங்களைக் கண்டுகொண்ட பாவனையோ, அறைக்குள் வரச்சொல்லி அழைக்கும் சைகையோ கொஞ்சமும் இல்லை. மனதுக்குள் சுழன்று கொண்டிருக்கும் முக்கியமான ஏதோ ஒரு சிந்தனையையே அந்த முகம் வெளிப்படுத்திக்கொண்டிருந்ததால், எங்கள் மீது அவ்வப்போது படியும் அவரது பார்வை , இலக்கற்ற வெற்றுப்பார்வை மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு வாட்ஸாப் மொழிபெயர்ப்பு : ஷெல்லியின் “Autumn: A Dirge”

ஆமாம், குளிர்காலம் ஆரம்பித்த உடன் வருடம் செத்துவிடுகிறது. இயற்கை மாறுகிறது – வீழ்கிறது, வெளிர்கிறது, உதிர்கிறது. வசந்தகாலத்தையும் கோடைக்காலத்தையும் வாழ்வாகவும் குளிர்காலத்தைச் சாவாகவும் கவிதை வரையறுக்கிறது.

பராக்குப் பார்த்தல்!

தமிழிலும் இதற்குத் தொன்மையான ஒரு பெயர் உண்டு. அது பராக்குப் பார்த்தல். அக்கு என்றால் கண். பர என்றால் மற்றயவை. பரலோகம் என்றால் நம்முடைய உலகம் இல்லாத மற்றொரு உலகம். பரமண்டலம், பரதேசமெல்லாமும் அப்படியே. பரோபகாரி என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்வபன். ஆக பார்க்க வேண்டியவற்றை விட்டுவிட்டு மற்றவற்றில் கண்ணை வைப்பதற்குப் பராக்கு என்றார்கள். பொதுவாக கவனமின்மை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டாலும், வேடிக்கை பார்ப்பதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம்.

யாமார்க்கும் குடியல்லோம்

சுவரோடு சுவராய் ஒட்டியிருந்தவன் அதிலிருத்து மெல்ல விலகித் திரும்பிப் பார்க்காமல் கைகளை விரித்தபடியே பின்னோக்கி நடந்தான். அவனது கால்கள் மட்டுமே அசைந்தன அதுவொரு சிலைக்கு உயிர் வந்து நடப்பதைப் போல் இருந்தது. அறையின் மறுமுனையை அடைந்தவன் வேகம் கொண்டான், பாய்ச்சலுறும் விலங்கைப் போல முன்னோக்கி விரைந்தான். தனக்கு முன் சுவர் உள்ளது என்பதை அவன் சற்றும் பொருட்படுத்தவில்லை.

இயல் விருது அனுபவங்கள் – 2025

இலக்கியம் பலவீனமானது. அன்றாட லௌகீக நோக்கத்திற்கு பைசா பிரயோசனமில்லை. அது எங்களுக்கு உணவளிக்கவோ அல்லது தங்க மாளிகையில் ஆபரணம் வாங்கவோ உதவாது. நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருந்தாலொழிய உங்களை வளப்படுத்தாது. ஆனால் மனிதகுலத்தின் எந்தவொரு கலாச்சார முயற்சியும் இருந்ததைப் போலவே இலக்கியமும் அழியாமைக்கு நெருக்கமாக உள்ளது.

வேலையை விரும்பிய தருணம்

நான்கு மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டு தயாராக இருக்கும்படி உத்தரவு வந்தது. குளித்துவிட்டு கம்பெனி சீருடையை அணிந்து தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான். ‘நல்லாத்தானேடா இருக்க’ என்று தன்னையே பாராட்டிக் கொண்டான். நுனி விரலில், தண்ணீரில் குழைத்த வீபூதியைத் தொட்டு இரு புருவங்களுக்கிடையே நீட்டினான். ‘ஈரத்துல தொட்டு வெச்சா, ரொம்ப நேரத்துக்கு இருக்கும்’ சூப்பர்வைசர் முந்தின நாள் இரவே சொல்லி வைத்திருந்தார்.

டோண்ட் கேர்

டோண்ட் கேரால் நம்பவே முடியவில்லை!. பொடி நடையாகவே அவர், ‘யான உழுந்தான் பாசா’ பக்கம் வந்திருந்தார். தனது அப்பா காலத்தில், இந்தப் பாசாவில் யானை ஒன்று விழுந்து மேலே ஏறி வர முடியாமல் நாளெல்லாம் பிளிறிக் கொண்டிருந்ததாம்!. வனத்துறை ஆட்கள் வந்தே அதைக் காப்பாற்றினார்களாம். அன்றிலிருந்து அது ‘யான உழுந்தான் பாசா’ ஆகிப்போனது. அன்று, அங்கே பாஷாணம் அடிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. சந்தனசாமிதான் கங்காணி!.  டோண்ட் கேரைப் பார்த்ததும் கையசைத்து நட்பைக் காட்டினான்.

பாயும் குதிரை

இந்த சோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குதிரையின் பெயர் சாலீ கார்டனர் (Sallie Gardner). அன்று லீலன்ட் ஸ்டான்போர்ட் மற்றும் அவரது நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் அந்த  பாலோ ஆல்டோ (Palo Alto) பண்ணையில் கூடியிருந்தனர். ஓடு தளத்தின் ஒரு முனையில் குதிரை சாலீ நின்றுகொண்டிருந்தது. உத்திரவு கிடைத்தவுடன் சாலீ பாய்ந்து ஓடியது. சாலீயின் குளம்பொலியும், காமிராக்களின் ஷட்டர் ஒலியும் படபடத்தது போலவே பார்வையாளர்களின் இதயங்களும் படபடத்தன.

றெக்கை– அத்தியாயம் 7

This entry is part 7 of 18 in the series றெக்கை

நிர்மலாவின் அருகே மிக அருகே நெருங்கி உட்கார்ந்து கேட்டாள் –பசங்க கர்ப்ப காலத்திலேயே இந்த மந்திரவாதம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தாங்களா?  ஏன் கேக்கறேன்னா, வலநாடுலே கருவிலே இருக்கறது ஆண் பிள்ளைன்னா தினம் ஒரு மணி நேரம் கர்ப்ப ஸ்திரியை உட்கார வச்சு சுற்றி நின்னு வரிசையா இங்க்லீஷ் பாட்டு  பாடி ஆடுவாங்க, டிங் டாங் பெல், மேரி ஹேட் அ லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப் .. 

சக்கர வியூகம்

பழக்க வழக்கங்களை எதிர்பார்த்திராத வகைமைகளில் மாற்றும் (தென் கொரியா மிகச் சிறந்த எடுத்துக்காட்டு). பல்லாயிரக்கணக்கான உபகரணங்கள் சாதாரண மக்களின் கரங்களிலும் இருக்கிறது/ பணம் படைத்தோர், அதிகாரம் படைத்தோர் ஆகியோரின் கைகளிலும் இருக்கிறது. எனவே, தரவுகள் பெறுவதோ, அதை அலசுவதோ, அதன் மூலம் விரும்பும் ஒரு கருத்தைப் பரப்புவதோ, அதை நம்பச் செய்வதோ, அதன்படி கட்டுப்படுத்துவதோ இயல்பாக, நாம் அறியா வண்ணம் நடை பெற்றுக் கொண்டேயிருப்பதால், கணக்கீடுகளும், உயிர் கூட்டமான மனிதர்களும் இணைந்து ஒரு சைபர்னேடிக்ஸ் அமைப்பாக நாம் வடிவெடுத்து வருகிறோம்.

தெய்வநல்லூர் கதைகள் – 26

This entry is part 26 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

அதுவரை குழப்பமாகவே இருந்த எங்களுக்கு சூழலின் விபரீதம் புரிந்தது.   ஆனால் எம் எஸ் சி சார் எவ்வித வெறுப்பும் வெளிப்படாத முகத்தையே காட்டினார். இதற்கு முன் இந்த வகுப்புக்குள் தான் வந்ததே இல்லை என்பது போல இருந்தது அவரது செயல்பாடு. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் (பெயர், படிப்பு – என் பேரும் படிப்பும் ஒண்ணுதாண்டே ) தன்னுடைய குடும்பம் குறித்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் எங்கள் ஒவ்வொருவரையும் குடும்பம் குறித்து சொல்லச் சொன்னார். வழக்கம் போல முன் பெஞ்சு மாணவனாகிய தெண்டிலு எழுந்தபோது அவரை கையசைவால் அமர வைத்தவர் –“அதென்னடே, மொத பெஞ்ச்சுன்னதும் எல்லாத்துலயும் மொத ஆளா வந்துரணுமா? அடுத்தவனும்தான் வரட்டுமே” தெண்டிலு முகம் குழப்பமானபோது பிரேம் முகம் இறுக்கமானது.

இராணுவ உடையில் ஒரு கூலிப்படை

பாகிஸ்தான் தளபதிகளின் விசுவாசம் தங்கள் நாட்டிற்கோ, இஸ்லாத்திற்கோ, காசாவிற்கோ அல்ல. தங்கள் காசோலைகளில் கையெழுத்திடுபவர்களுக்கு மட்டுமே. என்று பாகிஸ்தானியர்கள் ராணுவ நிறுவனம் தங்கள் பாதுகாவலர் அல்ல. சுயலாபத்திற்காக இயங்கும் கூலிப்படை என்பதை உணருகிறார்களோ அன்று நாடு பிளவுபடும். வரலாறு அவர்களைப் போர்வீரர்களாக நினைவில் கொள்ளாது. பேரரசிற்கு விலைபோனவர்களாக மட்டுமே நினைவில் கொள்ளும் என்பதையும் ராணுவ அதிகாரிகள் அறிவார்கள்.

நள சரித்திரம்

This entry is part 1 of 8 in the series நள சரித்திரம்

தன் தயக்கத்தையும், வெட்கத்தையும் கடந்து வந்து, தன் விருப்பத்தை தெரிவித்தாள். தானும் இது வரை கேள்விப் பட்டதில் இருந்து நளனை விரும்புவதைச் சொன்னாள்.  ஒத்த மனமுடைய இரு உயிர்கள் இணவது தான் இயல்பு. பறவை இனம் வேறு இனத்தை விரும்புமா?  தன் தந்தை மறுக்க மாட்டார். ஆயினும் வேறு காரணத்தால், விதியின் விளையாட்டால் வேறு விதமாக அவரே நினைத்தால் நான் உயிரை விடவும் தயங்க மாட்டேன் என்றாள்

முடிவெடுத்தல், பொறுப்பேற்றல் மற்றும் சமூக கற்றல்

This entry is part 12 of 12 in the series சமூக உணர்ச்சி

அலுவலகங்களிலும் இதே விஷயம் நடக்கிறது. தலைவர்கள் எப்படி சிக்கலான முடிவுகளை எடுக்கிறார்கள், தவறுகளை எப்படி ஏற்கிறார்கள், பொறுப்பை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை ஊழியர்கள் கவனிக்கிறார்கள். ஒரு நிறுவனத்தில் தலைவர்கள் தங்கள் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டால், அதிலிருந்து கற்றுக்கொள்வது பற்றிப் பேசினால், அந்த நிறுவனத்தில் ஒரு கற்றல் கலாச்சாரம் உருவாகும். ஊழியர்களும் தங்கள் தவறுகளை மறைக்காமல், அவற்றிலிருந்து கற்க முயல்வார்கள்.

தொடர்ந்த தூதுப்படலம்

சிறந்த அரசனானவன் தன் நல்லறிவைக் கொண்டு நல்லது கெட்டது என்ற இரண்டை வேறுப்படுத்திப் பார்ப்பான். பரிசு, சமாதானம், வேறுபடுத்துதல் மற்றும் பலம் இவற்றை உபயோகப்படுத்தி நண்பர்கள் , எதிரிகள் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களை கட்டுப்படுத்துவான். தன் ஐம்புலன்களை கட்டுக்குள் வைத்திருப்பான். இராஜ்யங்களுக்கு இடையேயான ஆறுவிதமான உறவுகளை அறிந்திருப்பார்கள். ஏழு விதமான கெட்டவைகளிடம் இருந்து ( ஆசை, சூதாட்டம், வேட்டை, கொடுஞ்சொல் கூறுவது, குடி, கொடுமையான தண்டனைகள் விதிப்பது மற்றும் செல்வத்தை வீணடிப்பது) விலகி இருப்பான்

மகிழ்ச்சி

பாத வடிவ உடல்
எல்லா உறுப்புகளும் சேர்ந்து தான்
இந்த உடலை கீழே வைக்கின்றன
பாத வடிவில் மட்டுமே இந்த உடல்
ஆனால் மண்ணில் பதிகின்றது
பாதம் மாதிரி உடல் இல்லை
பாதம் மாதிரி உடல் உறுப்புகள் இல்லை

சையது சலீம்

பெண்களுக்கு, அதிலும் முக்கியமாக முஸ்லிம் பெண்களுக்கிருக்கும் மற்றொரு பிரச்சினை கல்வியறிவு இன்மை. அது எத்தனை அனர்த்தங்களுக்கும்   விபரீதங்களுக்கும் வழி வகுக்கிறது என்பதைக் கூறி, முக்கியமாக அதன் மதிப்பை அறியாத முஸ்லிம் இளைய தலைமுறை ஏன் முன்னேறுவதில்லை என்பதையும் ‘சலீம்’ உதாரணங்களோடு விவரிக்கிறார். ஒரு பெண் கல்வியறிவு பெற்றால். அவள் மட்டுமே அல்ல அந்தக் குடும்பமும், அவளுடைய ஊரும் எத்தனனை பயன் பெறும் என்பதை ‘அன்வர்’ மூலம் நிரூபிக்கிறார் சலீம்

ஜான் சர்ல் (1932- 2025) – அமெரிக்கத் தத்துவாளர்

1990கள் மற்றும் 2000களில், சியர்ல் ஒரு புதிய துறையில் ஆராயத் தொடங்கினார்.  அவரது புத்தகங்கள் “The Construction of Social Reality” (1995) மற்றும் “Making the Social World” (2010) இந்த யோசனைகளை விரிவாக்கின. பணம், அரசாங்கம், திருமணம், சொத்துரிமை  இவை எல்லாம் எங்கிருந்து வருகின்றன? மலைகள் மற்றும் ஆறுகள் மனிதர்கள் இல்லாமலும் இருக்கும். ஆனால் ஒரு இருபது டாலர் நோட்டு? ஒரு ஜனாதிபதி? இவை நமது கூட்டு ஒப்பந்தத்தால் மட்டுமே இருக்கின்றன