இளமை நெடுக இயற்றிய கொடும்பாவங்கள் தனக்கு மிகக்குரூரமான மரணத்தை விளைவிக்குமோ என்கிற ஆழ்மன அச்சத்தைப் போக்கும்பொருட்டு ஆன்மீகக் கடலில் கழுத்துவரை மூழ்கியிருந்த அவர் இதுபோன்ற உலகியல் சச்சரவுகளை அறவே வெறுப்பவராக அப்போது மாறியிருந்தார். அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டுவிட்டதை உணர்ந்துகொண்ட சிதம்பரநாதனின் இளமனம், எஞ்சியிருந்த ஒரே வாசலினுள் தன்னைச் சுருட்டிக்கொண்டு நிரந்தரமாக முடங்கியது.
Category: இந்தியச் சிறுகதை
செத்த வீடு
வரவேற்பறையில் பட்டு வேட்டி சட்டையோடு மார்க்கண்டேயரை வளர்த்தியிருந்தார்கள். பார்த்தால் மிக வயதானவராகத் தெரிந்தார். சிவலை மனுசன். தன்னைவிட இருபது வயதேனும் குறைந்த என் மாமாவோடு எப்படி இவருக்கு நட்பு ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகம் எழுந்தது. நான் அவரது காலடியில் பூங்கொத்தை வைத்துவிட்டு சற்று நேரம் அமைதியாக நின்றேன்.
JANUS- 2
சென்னை ஏர்போர்ட்டிலிருந்து அனைத்து கார் பயணங்களிலும் ஏகப்பட்ட ப்ளைஓவர்கள், பாலங்கள், அப்பாவின் நினைவிலிருந்த இடங்கள் பல மாறிவிட்டன; அவருக்கு சந்தோஷம்தான். இரண்டு, மூன்று லேன்கள் எல்லாம். அத்தனை செலவு தரைக்கு மேல் செய்வதற்கு முன் தரைக்கு அடியில் எத்தனையோ, பாதாள சாக்கடைகள் மாதிரி செய்திருக்க வேண்டும் அங்கிள்…”
மீசை
“உழைப்பு, பணம், உறவு, வயசு எல்லாம் போச்சு,” என்று நினைக்க நினைக்க வலி தாங்க முடியல. நினைக்காமல் இருக்கவும் முடியல. நினைக்காமல் இருந்தா உடம்பு நடுங்குது, நினைத்தா கண்ணீர் வழியுது. முடியல.” அவன் உடல் நடுங்கியது; கண்களில் நீர் ஊறி வழிந்தது. அவன் முன் தலையில் லைட் விழுந்து ஒளிர்வதைக் கோபால் அப்போதுதான் கவனித்தான். இருக்கும் முடி உப்பும் மிளகும் கலந்த கலவை. காலம் வரைந்த கோலம்!
சாமுண்டியின் குழி
அவன் கற்படிகளில் ஏறி நடந்து கோயிலின் முற்றத்தில் மறைந்தான். விதியைப் போல பயமுறுத்தித் தன் முன்னால் நின்ற செங்குத்தான சுவர்களை ருக்மிணி வெறித்தாள். அந்தச் சுவர்கள் பாறைகளிலிருந்து வடிக்கப் பட்டவை ; கீழே ஒரு சிறையைப் போல சிறிது உயர்த்தப்பட்ட பகுதி. யாருமே, காற்று கூட அவளுடைய வேய்ந்த சிறிய குடிசையைப் பார்க்க முடிந்ததில்லை
தோழமை
“உன்னோடு இப்படிப் பேசினா மனசு லேசானா மாதிரி இருக்கு கிஷன்” கொஞ்சம் சாதாரண நிலைக்கு வந்து சொன்னாள். திரும்பிச் செல்ல வேண்டும் என்பதால் சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு கிஷன் வீட்டுக்குத் திரும்பினான். வீட்டுக்கு வரும் வழியில் கெளரி ஆத்தாவின் பார்வை அவனுடைய முதுகில் குத்துவது போல உணர்ந்தான்.
பலூன்
சாந்தியின் கவனம் முழுவதும் கீழே அனாமத்தாய் கிடந்த அந்த பொம்மை வாகனத்தின் மீதே இருந்தது. மேசைமேல் வைத்திருந்த செல்போன் திடீரென அதிர்ந்ததும் ஒருவித ஆர்வத்துடன் அதை எடுத்தாள். ஆனால் திரையில் கடம்பூர் சித்தியின் பெயரைப் பார்த்ததும் உச்சுக்கொட்டிவிட்டு அதை அப்படியே கீழே வைத்தாள்.
நம்பிக்கை
அந்த அறையில் தான் பஜனை நடக்கும். கூட்டுப் பிரார்த்தனை நடக்கும். நிறைய அற்புதங்கள் நடந்திருப்பதாக அக்கம் பக்கத்தில் பேசுவார்கள். படங்களில் அவ்வப்போது மஞ்சள்நிறப் பொடி கசிவதும் உண்டு. கணேசன் பார்த்தது இல்லை. ஆனால் நம்புவான். அவனுக்கு சிறுவயதில் இருந்தே மகான்களிடத்தில் நம்பிக்கையும் ப்ரேமையும் உண்டு.
காட்டுத்தடம்
எங்களுக்கு முன்னால் தூக்குக் கயிற்றைப்போல் ஆலமர விழுதுகள் தொங்கிக்கொண்டிருந்தது. பாதி உயிர் அதைப் பார்த்தவுடனயே போய்விட்டது. மீதி உயிர் போகும்படி விழுதுகள் தொங்கும் கிளைக்கு மேலுள்ள கிளையில் வடக்குப்பார்த்து அமர்ந்திருந்த ஆந்தையொன்று தன்னுடலை துளிகூட அசைக்காமல் தலையை மட்டும் திருப்பி தென்புறமாக விழுந்த எங்களை முண்டக்கண்ணை விரித்து இமைத் தட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தது. அந்தப் பார்வை எங்களின் தலையை முதுகுப் பக்கமாகத் திருகி கொண்டை முடிச்சினை முறித்துக் கொல்வது போலிருந்தது.
மாபெரும் சூதாட்டம்
‘’அரசே ! பகடையாட்டம் என்பது ஓர் அவதானம். நம்மால் எப்போதும் முற்றிலும் அறிய முடியாத எப்போதும் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத பெருஞ்சிக்கல் ஒன்றினை அறிய முயல்கிற புரிந்து கொள்ள முயல்கிற ஓர் முயற்சி. இதில் ஆடும் நபர்கள், ஆடும் குழுக்கள், பகடைக்காய்கள், பணயப் பொருட்கள் அனைத்துமே அறிய முடியாத பெரும் சக்திகளின் பாவைகளே. பகடையாடுபவன் அறிய வேண்டிய முதன்மையான விஷயம் இது’’
கண்ணாடி ஷோகேஸ் – காற்றில் உருகும் கனவுகள்
ஒருகாலத்தில், பாலு காவேரி என்ற பெண்ணை காதலித்தான். அது இரண்டு குடும்பங்களுக்கும் இடையே புயலை கிளப்பியது; சண்டைகள், வாக்குவாதங்கள், உறவுகள் முறிந்தன. அந்தச் சமயத்தில், நடுவில் நின்று சமாதானம் செய்து, அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தவர் சுந்தரம் தான். அந்தக் காலத்தில்– அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்; “சுந்தரம் சொன்னார்” என்பதே முடிவாக இருந்தது.
சுழல்
களவு போன வண்டியை சரியாய் இன்சூர் செய்து வைத்திருந்தோமே என்று அந்தக் காகிதங்களை எடுத்துக்கொண்டு நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் போனேன். அது நகரின் பிரதான லாரன்ஸ் சாலையில் இருந்தது. அங்கு ஒரு அம்மா நடுத்தர வயது இருக்கும். அவர்கள்தான் டூ வீலர் இன்சூரன்ஸ் கிளையிமுக்கு பொறுப்பாக இருந்தார்கள். அவர்கள் கொடுத்த ஃபாரத்தை யெல்லாம் ஃபில் அப் செய்து கொடுத்தேன். ஆர் சி புக் செராக்ஸ் இன்சூரன்ஸ் ஒரிஜினல் எல்லாம் சமர்ப்பித்தேன்.
கத்தி வீரன் கதை
ஓர் நாக்கு பூச்சியை போல இருந்த என்னை கண்டு அப்பா ஏன் ஓடினார் என்பது யாருக்கும் இன்னமும் புரியாத புதிர். இதெல்லாம் நான் ஏதோ மற்றவர்கள் என்னிடம் சொல்லி நான் உங்களிடம் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். எனக்கு சிறு வயதில் ஞாபக சக்தி மிகவும் அதிகம். இப்போதுதான் பொண்டாட்டியின் பிறந்த நாள் மறந்து தொலைக்கிறது. இந்த சிறு வயது சம்பவம் எல்லாம் அப்படியே தொல்லைக்காட்சியில் ரிப்பீட்டில் பார்த்தது போல இன்னும் நினைவிருக்கிறது.
மலரிடுதல்
ஒரு வாழ்க்கை முடிந்துவிட்டது என எனக்கு அன்று புரியவில்லை. எல்லோரும் நினைப்பொழிவார்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை. மெல்லிய அவ்வப்போது வந்துபோகும் நியாபகமாகத்தான் என்னில் எஞ்சப்போகிறாள் என்பதையும் அன்று நான் அறியவில்லை. இவ்வளவு கறாரான ஒரு நிகழ்வாக மரணம் இருக்க வேண்டுமா என இப்போது நினைத்துக்கொள்கிறேன்.
கண்ணன் காட்டிய வழி
“உன் உயிர் நண்பன், மதனி அவனை சொந்தச் சகோதரனாகத்தான் கருதுகிறாள். நம் மகள் கிருஷ்ணை என்னை விட, ஏன் உன்னை விடவும் கூட அவனைத்தான் தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறாள். அவன் எப்படி நமக்கு துரோகம் செய்யத் துணிந்தான்? அவன் என்ன அவமானம் ஏற்பட்டாலும் சரி என்று பீஷ்மரின் கீழ் போரிட்டிருக்க வேண்டும். முதல் நாள் போரில் அவன் பாண்டவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தால் போர் அத்தோடு முடிந்திருக்கும். நாம் இன்றும் நூற்றுவராக இருந்திருப்போம்”
ஆறாவது லார்ஜ்
கதிர்வேலனின் கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்லாமல் அப்பா இப்படித்தான் அதிரடியாகப் பேசி அவனை வாயை மூட வைப்பார். இருந்தும், கதிர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரைக் கிடுக்கிப்பிடியான கேள்விகளோடு திணறடிப்பான். மாறாக இளங்கோவை அப்பா சர்வ சாதாரணமாக வாயடைத்துவிடுவார்.
மாதவரே…
ஒரு மனிதனானவன் அவனது ஸ்துால உருவம், புலனுணர்ச்சி, சிந்தனை, சுபாவங்கள், அறிவு ஆகியவற்றின் தொகுதியாக இருக்கிறான். ‘நான் இருக்கிறேன்’ என்கையில் மனிதனால் குறிக்கப்பெறும் அகங்காரம் ஸ்கந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப்பொருள் அல்ல. ஸ்கந்தங்களின் கூட்டுறவினாலேயே அந்த ‘நான்’ தோன்றுகிறது. மானுடனின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட தனித்த ஆன்மா என்ற எதுவுமில்லை. ஒரு பொருளையும் அதன் குணத்தையும் நாம் நம் கருத்தால் பிரித்து பார்க்க முடிகிறது. ஆனால் பிரத்யட்சத்தில் அவ்வாறு பிரிக்க முடியாது.
ஒலிமுகவாசல்
அந்தச் சிறு அவகாசத்திற்குள் அவன் அந்தப் பெண்ணைக் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றி இருந்தான். அவர்கள் கடற்கொள்ளைக்காரர்களா, தரையில் கொள்ளையடிப்பவர்களா என்பதில் அவனுக்கு ஒரு குழப்பம் இருந்தது. கொள்ளைக்காரர்களை விரட்டி விட்டு, அவளது சிவிகையை ஒற்றைத் தோளில் சுமந்து அரசரிடம் ஒப்படைத்து இருந்தான்.
பைசாசம்
சதா சர்வகாலமும் காதில் குறி சொல்லிக்கொண்டே இருக்குமொரு “கர்ண யக்ஷினி” தம்மிடம் இருந்ததாகவும், அதன் இடையறாத குரல்களைக் கேட்டு, தம்முடைய இடப்பக்க செவி, கேட்கும் திறனற்றுப் போனதாகவும், பிறகு தமது குருநாதரின் உதவியுடன் பெரும் ப்ரயத்தனப் பட்டு அந்த யக்ஷிணியை தம்மிடமிருந்து விடுவித்துக் கொண்டதாகவும் ஒருமுறை சங்கரனிடம் கூறினார்.
மின்மினிகள்
காரில் அமர்ந்து ராஜாவாக சவாரி போகிற கற்பனை அவனுக்குள் செத்து விழுந்தது. உடம்போடு மனமும் சேர்ந்து இடிபட, கால்களுக்கு நடுவில் நசுங்கிக் கொண்டு உட்கார்ந்தான். காரின் ஜன்னல் வழியே பார்த்தால் வானமும் மேகமும்தான் தெரிந்தன. பஸ்ஸில் போனால் ரோட்டோர மரங்களும் மக்களும் பின்நோக்கி வேகமாகப் போவார்களென்று கேட்டிருந்ததெல்லாம் ஞாபகம் வந்தது. எக்கினால் வெளியே பார்க்கலாம். ஆனால் உட்கார்ந்திருப்பவர்களின் முழங்கால்களை இடித்துக்கொண்டு எழுந்திருக்கவேண்டும். ‘உட்காரு, உட்காரு’ என்று முதுகில் அழுத்தி, கீழே மீண்டும் உட்கார்த்திவிட்டால் இன்னும் அவமானம். ‘நடந்தே வந்திருக்கலாம். கஷ்டம்தான், இருந்தாலும் இப்படி கூனி குறுகுவதற்கு அந்த கஷ்டமே பரவாயில்லை.’
சுழற்சி
வள் புறஒலிகளை இரத்து செய்து விட்டு காதுகளைக் கூர்ந்தாள். அய்யோ… என்னதிது? என்னவாயிற்று உனக்கு? குரலற்றுப் போனதா உன் சொற்களுக்கு? நண்பனே… என்ன வேண்டும் சொல். உனக்கென்ன வேண்டும்? எனக்கென்ன வேண்டும்? நமக்கென்ன வேண்டும்… சொல்… அய்யோ… என்னால் புரிந்துக் கொள்ள இயலவில்லையே. அவள் கண்களில் நீர் வழிந்தது. அலைகளின் நாவுகள் ஒன்றின் பின் ஒன்றாக கரையை மோதி ஒலிகளற்று பின்னகர்வதை அவள் இதுவரைக் கண்டதில்லை.
வெளிச்சம்
“ஒரு சில கருந்துளைகள் நமது அண்டத்தில் உள்ளன. அவை நமது பூமியிலிருந்து பல இலட்சம் மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றைப் பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அறிவியலாளர்களுக்கே இவற்றைப் பற்றிய முழு புரிதல் தற்போது இல்லை. ஆனால் இப்படி அண்டப் பெருவெளியில் தோன்றும் கருந்துளைகள் கோள்களையும் நட்சத்திரங்களையுமே கூட விழுங்க வல்லன” என்றார்.
மதியொன்றில்லை..
எப்போதோ தான் சொன்னதை மதித்து அதனாலேயே உத்தியோகம் தேடி வெளியூரெல்லாம் போகாமல் ஊரோடு கிடக்கும் ஜகுவின் அந்த மெலிந்த குள்ள உருவம் தன் முன் விஸ்வரூம் எடுக்கவும் தேசிகன் வாயடைத்துத்தான் போனான். அவனிடம் இப்படிச் சொன்னதையே மறந்து மேற்படிப்பு உயர்ந்த உத்தியோகம் அமெரிக்கா டாலரில் பணம் என்றிருந்த தன்னை அவனுடன் ஒப்பிட்டபோது தனது ஆறடி உயரத்திற்குமுன் வாமனனாய் வந்து ஓங்கி உலகளந்தவனாய், உத்தமனாய் ஜகு தென்பட்டான்!’
தங்கப்பல்- புன்னகையின் இடைவெளி
“மனுஷன் சாப்பிடுற சோறா இது?” என்று வார்த்தை நழுவியது. பின்னர் – தட்டையும் வீசப்பட்டது. நேராக அவளது முகத்தில். அவளது முன்பல் உடைந்தது. அவளது சிரிப்பின் ஒளி, அந்த நொடியிலே மெலிந்து போனது. அந்த நாள் முதல்…அவர் சிரிக்கும்போது,அவளது புன்னகையின் பிழைதிருத்தம் அவர் நெஞ்சில் ஒரு குற்ற
ஆகுதி
நான் ஒரு மோசமான மகன். நான் தவறான முடிவுகள் எடுத்தேன். நான் அவரை காயப்படுத்தினேன். அவர் தினம் தோறும் என்ன செய்ய வேண்டுமென பட்டியல் கொடுத்தேன். அவரை சிறை கைதியாக்கினேன். இப்போது அவர் எங்கேயோ, குளிரில், பயத்தில், என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு என் முகம் கூட நினைவில் இல்லாமல் போயிருக்கலாம்.
ஓர் இ.மு. காலத்துப் பன்மொழிக் காதல் கதை
உமா, மூர்த்தி மாதிரி ப்ராக்டிகலானவளா? நம்மை மாதிரி அவளும் மோட்டு வளை ரகமாயிருந்தால் ஆபத்துதான். ரசம் பொங்குவதிலும், கத்தரிக்காய் வதங்கிச் சுருங்குவதிலும் கவிதையைக் காணும் மனைவி நமக்கு வேண்டாம். குடும்பத்தில் ஒரு கிறுக்கு போதும். ஆனால் ரொம்ப ப்ராக்டிகல் என்றாலும் வம்புதான். ஒரு நல்ல கவிதையையோ கலைப் படைப்பையோ ஆசையுடன் பகிர்ந்து கொள்ள மனைவி வேண்டாமா?
சிறகடிப்பு
கொஞ்சம் தேறிக்கொண்டு வந்த குழந்தை மீண்டும் பிரமை பிடித்ததைப்போல் ஒடுங்கிக்கொண்டு வெடவெடக்க ஆரம்பித்தது. சிஸ்டர் ஒருத்தி அதை எழுப்பி தன்னோடு அணைத்துக்கொண்டு ஓரமாக நின்றுகொண்டாள். நானும் தோழியும் சேர்ந்து மூக்காண்டியை சமாதானப்படுத்தி அமர்த்தி விஷயத்தை எடுத்துச் சொன்னோம். ஆனால் எதுவும் அவருக்குள் நுழையவேயில்லை. வரம்பை மீறிய வசைச்சொற்களை முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்.
திகைப்பெனும் தீராப்பொழுதுகள்
வண்ணத்துப்பூச்சியை குளிரிகள் மொய்த்ததிலிருந்து இப்போது இந்த சுள்ளான்கள் வந்தது வரை எனது கைபேசியில் புகைப்படமும் வீடியோவுமாக எடுத்து வைத்திருந்தேன். நிவேதனா வரும்போது காண்பிக்க வேண்டும். பொதுவாக எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் பழக்கம் என் நண்பர் ஹனிபா அவர்களிடமிருந்து எனக்கும் வந்துவிட்டது.
உருவன்றியே நின்று உருவம் புணர்க்கும்
லோகநாதன் இவள் மீது கோபப்பட்டு ஓடும் நதியில் பாய்ந்த புவனை நினைத்தான். எண்ணங்கள்தான் எத்தனை வலுவானது என நினைத்தான். எதை நம்புகின்றோமோ, அது செயலின் ஆற்றலை வழங்குகின்றது எனச் சொல்லிக் கொண்டான். புவன் குழந்தைக்கு சாப்பிட்ட பின்னர் ஏப்பம் வர வேண்டுமென விக்கியின் முதுகை தட்டிக் கொடுத்து கொண்டிருந்தான்.
தொட்டவுடன் நீராக ஓடிய பனி
அப்பொழுதுதான் அப்பாவை முழுதாக வெளிச்சத்தில் பார்த்தான் ஒரு வார தாடி சவரம் செய்யப்படாமல் இருந்தது நினைவு தெரிந்து அவர் முகம் பளபள வென்றே இருக்கும் , தினமும் அவரே சவரம் செய்து கொள்வார். முகம் கூட லேசாக கவலையில் ஆழ்திருப்பதாகவும் ரயிலில் வரும் போது தூங்காமல் வந்ததாக சொன்னது. சரி இப்போது கேட்க வேண்டாம் என முடிவு செய்தான். அம்மாவ எழுப்பாதீங்க அவங்களா எழுட்டும் என்றான்.
செஞ்சீலை
காட்சி அவன் தர்க்கத்திற்குள் சிக்க மறுத்துக் கொண்டிருந்தது போலும். கதிரவன் தியானத்தில் திளைப்பவன் போல அசையாது இருந்தான். புளியமரத்தடியில் இருவரும் பூசைக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். சாமிக்குப் போட்டு கழிந்த மாலைகள், திருநீறு, குங்குமம், சூடகம், ஊதுபத்தி, தீப்பெட்டி, பன்னீர் குப்பி, உடைந்த சிறு மண்பானை ஓடு, வேப்பிலை கொத்து, சிவப்பு பட்டு சால்வை என எல்லாமே சம்பாதித்து வந்திருந்தனர் எப்படியோ. நீள் வாக்கில் கிடந்த சிதைந்த சிறிய வேலி கருங்கல்லைப் பிரதிஷ்டை செய்து அலங்கார பணிவிடை நடந்து கொண்டிருந்தது.
பலி
“அதெல்லாம் வைச்சிருப்பான். நீ ஒண்ணும் கவலப்படாதே. மாரியம்மா தைரியமான பொண்ணு. அவ அக்காவ கொடுமப் பண்ணுன மாதிரி இதுகிட்ட நடக்காது. எல்லாம் சரியா வந்துடும்.” அம்மாவின் ஆறுதலுக்காக சொல்லிவைத்தேனேத் தவிர, என் பேச்சில் அவ்வளவு உறுதி இல்லை. இந்த மக்களிடம் ஆணின் அதிகாரம் என்பது கல்லில் செதுக்கிய கட்டளையைப்போல. ஆம்பளைக்குச் சளைக்காமல் காட்டிலும் மேட்டிலும் உடம்பு உழைத்தாலும், பொம்பளை கொஞ்சம் அனுசரிச்சுத்தான் போகவேண்டியிருந்தது.
கொன்றைப் பூக்களும் மரவட்டைகளும்
ராகவனுக்கும் சவத்துடைய காதல் கதையைப் பற்றிக் கேட்க ஆசை. நடந்து வீடு இருக்கும் திருப்பத்தை அடைந்த போது ராகவன் அதனிடம் ” நீ எப்படி ஒரு மதராசி தமிழ்ப் பெண்ணை காதலித்தாய் ? என்று கேட்டதை அது தனது சொந்த விஷயத்தில் இவன் ஏன் மூக்கை நுழைக்கிறான் என்றெல்லாம் நினைக்காமல் புன்னகைத்தவாறே கண்டிப்பாக வீட்டிற்கு சென்றதும் சொல்கிறேன் என்று சொன்ன பதிலின் நாகரீகம் அவனுக்கு ரொம்பவே பிடித்தது.
வாகை மனம்
வாவ மரத்தின் அடியில் புகைவதன் அடையாளமாக காற்றில் கருகல் வாடை வந்தது. வெளியே வந்து பார்த்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிரார்த்தனைக்கு வந்தவர்களின் வாகனங்கள் மரத்தின் நிழலில் நிறுத்தப்பட்டு இருந்தது. தேவாலயத்தில் பிரார்த்தனைப் பாடல்கள் வேத வசனங்களுக்கு இடையில் ஒலித்துக் கொண்டு இருந்தது. கோல்டன் பாய் வந்த ஆட்களை வைத்து முட்டுக்கொடுத்ததை சரி செய்து கொண்டு இருந்தார். அவர் அவர்களை திட்டுவது புரியாமல் சத்தமாக மட்டும் கேட்டது. இந்தப் பக்கம் அவர் திரும்பினால் பேச வேண்டுமென நான் கடைக்குள் வந்துவிட்டேன்.
தெய்வ நிமித்தம்
“உங்களுக்குத் தெரியாததா சார்? கடன மறுசீரமைப்பு செய்வோம், வட்டி விகிதத்தை மாற்றி, கால அவகாசம் ஆறு மாசமோ ஒரு வருஷமோ நீட்டிச்சி கொடுப்போம். எப்படியாவது கடனை அடைத்துவிடுவோம்னு பெரியவரும் அவர் மகனும் வந்து கெஞ்சுறாங்க. கொஞ்சம் விட்டுப் பிடிப்போமே,’’ என்ற அரவிந்தனிடம்,
குழலினிது
சண்முகநாதன், “டேட்டிங் செய்ததுக்கு அப்புறம், கண்டிப்பாக இது ஒரு அற்புத கண்டுபிடிப்பா இருக்கும்” என்றார். அவை வளர்ந்த ஓர் ஆணுடைய எலும்புகள். அந்த எலும்புக் குவியலில் இருந்து, ஒவ்வொரு எலும்பாக கவனமாக எடுத்து நானும் நாதனும் பிரஷ்கொண்டு மெல்ல வருடி, உடற்பாகத்திற்கு ஏற்றவாறு மேசையின் மீது வைத்துக்கொண்டிருந்தோம்.
இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகள்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலைக் கணக்கில் கொண்டால், அந்தக் காலத்தின் குரங்குகளுக்கு, இன்றிருக்கும் மனித இனம் என்பது இந்த A2B கூண்டில் உள்ள எலிகள் போலத்தான். இல்லையா? இன்று இருக்கும் மனிதனை, அந்தக் குரங்குகள் எதிர்கொண்டிருந்தால், மனித இனம் இனவிருத்திக்கான வாய்ப்பின்றி அழிந்து போயிருக்கும், இல்லையா? ஒருவகையில், மனித இனத்தின் ஆண்களை புத்திசாலிகள் எனலாம். செயற்கையாகக் கருத்தரிக்கும் இடத்திற்கு நகரும் வரை, அக்காலக் குரங்குகளுடன் இணைந்து பல்கிப் பெறுகி பொறுத்திருந்ததை, வேறெப்படித்தான் சொல்வது? இப்படி யோசித்துப் பார்.
மெய்கண்டவன்
மந்திரித்துவிட்டதுபோல் தன் புலன்களுக்கு ஆளாகி சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டது தவறோ என்று நினைத்தான். அவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே, உடல் மெதுவாக எழுந்து உடை மாற்றிக்கொண்டது. டியோ இரண்டு அழுத்தும், தலையை சரியாக அமைத்துக்கொண்டும், பாக்கெட்டில் வாலட்டும் திறன்பேசியும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டும், அறையின் மின்விசிறியை அணைக்காமல் மெதுவாக கதவைத் திறந்துகொண்டு மண்டபத்தைவிட்டு வெளியேறி இருபது நிமிடத்தில் சொன்ன இடத்தில் இருந்தான்.
ஊழிப் பெருவெள்ளம்
ஒரு கட்டத்தில் எங்களுக்கு இந்த இரவே கடைசி என்றுதான் தோன்றியது. மழை நின்றுவிட்டபோதும் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் நின்றுகொணடிருந்த தண்ணீர்த் தொட்டி இப்போது பாதிக்குமேல் மூழ்கியிருந்தது. “நாம செத்துடுவமா சுகு” என்று கேட்டு கார்த்திக் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். பிறகு திடீரென்று என் தோள்களைப் பற்றிக்கொண்டுக் குலுங்கி அழுதான்
முகம் அலம்பும் பூனை
மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்றாலும் கூட அதிகாலையிலயே எழுந்து பூனைக்கு முன்னால் பற்பொடியை தட்டி ஒரு பேப்பரில் வைத்துவிட்டு மூவரும் அமர்ந்திருந்தோம். பூனை பேப்பரில் வெள்ளையாக இருந்த பற்பொடியை எதோ உணவுப்பொருள் என்று நினைத்து மோந்து பார்த்துவிட்டு நெல் மூட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்து கொண்டது. “பூனை நம்மளப் பார்த்து பயப்படுது.” என்றான் பெரிய அண்ணன். அவன் அவ்வாறு சொன்னதும் எல்லாரும் மறைந்து நின்று கவனிக்க ஆரம்பித்தோம். ஒன்பது மணி ஆகியும் பூனை பல் துலக்கவே இல்லை. நெல் முட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்துகொண்டு வெளியே வரவும் இல்லை.
தும்ரி
அவளிடம் அப்படியெல்லாம் தனது மனதில் உள்ளதைக் கேட்க தயக்கமெல்லாம் தேவையில்லை என்று ஒரு பக்கம் உணரும் போதே மறுபக்கம் அவள் அதன் பிறகு தன்னை இப்படியே விட்டுச் சென்றாள் அதை எப்படி தாங்குவது? என்றும் அச்சமாயிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை தேவநாயப் பாவணார் நூலகத்தில் ஒரு எழுத்தாளரின் நூல் வெளியீட்டு விழா அதற்கு போகலாம் என்று ஏற்கனவே இருவரும் பேசியிருந்தார்கள்.
நண்டுப்பிடி – பாகம் – 1
மருத்துவர் மேகன் க்ரான்ட்டை ஆண்டுக்கு ஒரு முறை ரேவதி பார்ப்பது வழக்கம். மேலோட்டமாக ஒரு சோதனை. வெறும் வயிற்றுடன் மூன்று குப்பி இரத்தம். சந்திப்பிற்கு சில தினங்கள் கழித்து அவளிடம் இருந்து ஒரு மின்னஞ்சல். அளவுகள் ஆரோக்கிய எல்லைகளுக்குள் என்ற தகவலுடன் விளக்கங்கள். முதல் வரிக்கு மேல் படித்தது கிடையாது.
ஊடாடும் பெருநிழல்
பதற்றத்துடன் என்னை இடுப்பில் தூக்கிக் கொண்டும் என் சகோதரனை இழுத்துக்கொண்டும் பின்வாசல் வழியாகத் தப்பித்து ஓடிய சந்தர்ப்பத்தில் பெப்பியைத் தாக்கி இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். கடைசி வரை அவருக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை என்று சொன்னார் பப்பாஜி. உங்கள் வீட்டில் பதுங்கியவாறு பெப்பி அணிந்திருந்த ஆடையின் நிறம், அடையாளங்களையும் கூறி அவளைத் தேடச்சொல்லி உங்களிடம் சொன்னாராம். உங்களாலும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
சாப விமோசனம்
சிவராமனின் மனம் காயத்ரி ஜபத்தில் லயிக்கவில்லை. குளத்தின் ஆழத்தில் உறங்கும் யக்ஷியைச் சுற்றி வந்தது. வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்தாலும் அந்த சிறு குளத்தில் விளையாடவோ குளிக்கவோ ஒரு நாளும் அனுமதி அவனுக்கு இல்லை. அவன் மட்டும் அல்ல அப்பா சாம்பசிவம் கூட கிணற்றில் தான் நீர் மொண்டு குளிப்பார். வருடங்களுக்கு ஒரு முறை குளத்தை சுற்றி இருக்கும் கற் படிகள் சீரமைக்கப்பட்டு சுத்தமாக்கப்படும். ஆனால் குளத்தின் நீர் என்னவோ எப்போதுமே மாசு படாமல் இருந்தது. அதில் தண்ணீர் குறைந்ததும் இல்லை கூடியதும் இல்லை.
கல்பதரு
’உலக வரலாறுல யோசிச்சுப் பாத்தா மண்ணை வச்சு வீடு கட்டறதுக்கு முன்னாடியே முறிஞ்சு விழுந்த கிளைகளை வச்சு கீத்தை வச்சு மனுஷங்க தங்க வாழிடத்தை உருவாக்க முயற்சி பண்ணியிருக்க வாய்ப்பு இருக்கு. அப்படின்னா கார்பெண்டரி உலகத்தோட தொன்மையான தொழில்கள்ள ஒன்னு
உயிரில் கலந்து
ஒருநாள் தூக்கம் கண்ணை இழுக்கும்போது திடுப்பென விழித்துக்கொண்டேன். காரணமின்றி கண்ணீர் பெருகியது. கேவலாக மாறியது. சத்தம் கேட்டு மாதவன் எழுந்து “ப்ரியா, என்னாச்சு? ஒடம்பு சரியில்லியா? ஃபோன் ஏதாவது வந்துதா? அழுகைய நிறுத்திட்டு என்னன்னு சொல்லேன்! ப்ளீஸ், என்னாச்சு?” என்று பதறினார். இத்தனை காலம் தாண்டியும் இன்னும் அகாலத்தில் ஃபோன் அடித்தால் எனக்கு ஏற்படும் நிலைகுலைவு அவர் அறிந்ததுதான்
அறுபது நொடிகள்
கடைக்கு ஒட்டினாற்போல இருந்த அவருடைய வீட்டுக் கதவை தட்டினான். வெளியே வந்தவரிடம் அவசரமாக பணம் வேண்டும் என்றான். கடைக்கதவை திறந்து இவனை உட்கார வைத்தவர், “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க, இதோ வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு போனார். சில நிமிடங்கள் கழித்து வந்தவர், எவ்வளவு வேண்டும் என்று கேட்டார். ‘பதினைந்தாயிரம் வேண்டும், அடுத்த மாதம் சம்பளம் வந்தவுடன் மீட்டு விடுகிறேன்’ என்று சொல்லி தன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி கொடுத்தான். அதனை உரசிப் பார்த்தவர், ஒன்றும் சொல்லாமல் பதினைந்தாயிரம் ரூபாயை எண்ணி இவன் கையில் கொடுத்தார். அதற்கான ரசீதையும் வாங்கிக் கொண்டு கிளம்பினான்.
பூச்சாண்டி
‘பொதங்கிழம வயசுக்கு வந்துருக்கியா?. பரவால்ல நல்ல நாளுதான்..’ன்னு அம்மா சொன்னாங்க. ஆனா, அன்னிலேர்ந்து அவுங்க குடுத்த சாப்பாடுதான் வயித்த கொமட்டுது. சொன்னா நம்ப மாட்ட பூச்சாண்டி!. பச்ச முட்டய ஒடச்சி, அதுல நல்லெண்ணிய ஊத்தி, அப்படியே குடிக்க சொல்றாங்க.
இருபது ரூபாய்
முறையான கணக்குகள் இல்லாதவை என்பதால் தொலைந்த பணத்தை மீட்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கமுடியாது. மேலும் காவல் நிலையங்கள் குருதிச் சுவை அறிந்த மிருகங்கள் இயங்கும் கானகங்கள் போன்றவை. ஆனால் பணத்தை மீட்க அங்கிருக்கும் சில மிருகங்களின் துணையையே நாடுவார்கள். இதற்கென்றே பழக்கப்பட்டு கானகத்திற்கு வெளியே இயங்கும் மிருகங்கள் அவை. சில துண்டுகள் மாமிசம் கேட்பவை.
ஒரு துரோகம், ஒரு தண்டனை
இந்த கடிதத்தில் உங்களை என்ன சொல்லி அழைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என் உள்ளத்தில் இருப்பதை எப்படி சொல்வது என்றும் புரியவில்லை. இது முறை தவறிய செயல் என்று எடுத்துக் கொள்வீர்களோ என்று தயக்கமாகவே இருக்கிறது. உங்களை முதல் முறையாக பார்த்ததும், நீங்கள் எல்லாரிடமும் பேசிய விதமும், பழகிய விதமும் என்னைக் கவர்ந்தது. உங்களைப் போல எனக்கும் இசை என்றால் உயிர். எனக்கு பொருத்தமான துணை நீங்கள் தான் என்று நினைக்கிறேன். நான் மட்டும் நினைத்தால் போதுமா?
