மனிதனின் தனிப்பட்ட குணம் என்னவென்றால் அவன் மனத்தால் இயக்கப்படுகிறவன்.” ஆகவே தன்னைப் பற்றிய ஆராய்ச்சியை அவனால் மனத்தில் செய்துகொள்ள முடிகிறது. நீண்ட பயிற்சிக்குப் பின்னரே ஒருவனால் தன்னைப் பற்றிய பல பிம்பங்களையும் தன்னுடன் தொடர்பு கொண்டிருப்பவை பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. இவற்றிற்குண்டான பெயர்களையும் வைத்து அவற்றின் பல இயல்புகளையும் பகுத்தறிய இயல்கிறது.
Category: கட்டுரை
அக்கரைப் பச்சை
ஆஃபன்பர்க் பல்கலைக்கழகம் அங்கிருக்கும் தனித்த முதியோர்களின் நலனைப் பொறுப்பேற்று கொண்டிருந்தது. விருப்பமுள்ள மாணவர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குத் துணையாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டதால் சரண் மழலையர் பள்ளிக்குச் செல்லாமல் சில வார இறுதிகளில் ஏதேனும் ஒரு வீட்டுக்குச் சென்று அங்கிருக்கும் வயதானவர்களுடன் நடைப்பயிற்சிக்கு துணையாகப் பேசிக்கொண்டே செல்வது, சீட்டு விளையாடுவது, தேநீர் தயாரித்து அவர்களுக்குக் கொடுத்து தானும் அருந்திக் கொண்டு இருப்பது என நேரம் செலவழித்தான்.
சூஃபி ஷாஹ் இனாயத் ஷஹீத்
ஷாஹ் இனாயத்தின் தியாகத்துக்கு 305 ஆண்டுகள் கடந்துவிட்ட இக்காலப்பகுதியில், சமூக நீதிக்காவும், தீவிர ஜனநாயகத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த இந்த மண்ணின் மைந்தன் ஷாஹ் இனாயத்தின் மரபுகளை இன்றைய 21 ம் நூற்றாண்டின் இந்திய-பாகிஸ்தானிய புதிய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வதற்கும், புத்துயிரூட்டுவதற்குமான முயற்சியாக இந்தக் கட்டுரை அமைகிறது.
கானலின் நீரோ, காட்சிப்பிழையோ?
பார்வையாளனின் மூளை படைப்பை எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும், அதை எப்படி அவருக்குக் கடத்துவது எனத் தனக்கென விதிகளை உருவாக்கிக்கொள்வதனால் நவீன ஓவியர் ஒரு தேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி (Neuroscientist) போலச் சிந்திக்கிறார். எதை வரைவது, எதை விடுப்பது அல்லது சிதைப்பது என்று அவர் கருதும் பொழுது, அந்த விடுதலும் சிதைத்தலும் எப்படிப் பார்வையாளானின் மூளையால் இட்டு நிரப்பப்படும் அல்லது சரிகட்டப்படும் என்று அவர் தீர்மானித்தாக வேண்டும்.
மெல்ல மழுங்கடிக்கும் செயற்கை நுண்ணறிவு அபாயம்
செயற்கை நுண்ணறிவுத் துறை சமீப காலமாக, ஜிபிடி போன்ற வஸ்துக்கள் வந்து மேலும் பயத்தை மக்களிடையே உருவாக்கியுள்ளது. எதைக் கேட்டாலும், ஒரு பணிவான உதவியாளரைப் போல உருவாக்கித் தரும் வல்லமையை இந்த மென்பொருட்கள் பெற்று விட்டன. ஏன், கணினி நிரல்களைக் கூட தப்பில்லாமல் உருவாக்குகின்றன. இதன் சக்தி எல்லோரையும் கதி கலங்க வைத்தாலும், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், ஊடங்கங்களில் அதைத் திரித்து, சமாளிக்கின்றன
சகுனங்களும் சம்பவங்களும் – 2
அவர் கங்காரு போலவும், நீர் தெளிப்பான் போலவும் ஆடுகிறார். அந்த ஆட்டத்தை நேரலையில் பார்த்தபோது எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இதைவிடக் கொடுமையான ஆட்டங்களை ஹிந்தி, தெலுங்கு, தமிழப் பட குத்தாட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
என்னைப் போல் ஒருவன்?
நம் அத்வைத வேதாந்தம், உணர்வு என்பது ஒன்றே, பல மனிதர்கள், பல மனதுகள், பல உயிரிகள் என்று கண்டாலும், எல்லாவற்றிலும் இருப்பது ஒரு உணர்வே; அதை ப்ரக்ஞை, சைதன்யம் என்றெல்லாம் பெயரிட்டு நாம் அழைக்கிறோம் எனச் சொல்கிறது. மூளை பௌதீக வடிவம் கொண்ட ஒரு கருவி, மனம் என்பது எங்கும் பயணிக்கும் ஒரு செயல், இவ்விரண்டும் பொருள் என எதால் அறியப்படுகிறதோ அதுவே உணர்வு
சகுனங்களும் சம்பவங்களும் – 1
உளநோய் மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட் என்பாரும் இறையியல் நிபுணரும் ஆங்கில எழுத்தாளரும் ஆன “நார்னியாவின் காலவரிசைக்கதைகள்” (Chronicles of Narnia) எழுதிய சி.எஸ்.லூயிஸ் என்பாரும் சந்தித்துப் பேசிக் கொண்டால் எதைப் பற்றியெல்லாம் உரையாடி இருப்பார்கள்? கடவுள் இருக்கிறாரா? இருந்தால் உலகப் போர்களைத் துவங்க ஆசீர்வதித்து இருப்பாரா? மகள் தந்தையை கவனிப்பதும், நண்பனின் அன்னையை பாதுகாப்பதும் – எல்லாமே காமத்தின் அடிப்படையில் தானா?
சந்திப்பு- யுவன்
அடுத்த நாள் கொஞ்சம் நிதானமாக எழுந்து, கிளம்பி, சிறிய காபி வித் யுவன் நிகழ்வு. அப்போது தான் கவனித்தேன் – கண்ணாடி குவளையின் கைப்பிடியை நான்கு விரல்களை மட்டும் பயன்படுத்தி பிடித்து, கட்டை விரலை தனியாக வைத்து குடிக்கும் காட்சியை. பின் தங்கி இருந்த இடத்தில் இருந்து புறப்பட்டோம். “காலம்” செல்வம் அவர்கள் – யுவனோடு ஒரு உரையாடல் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தார்.
சுநீதி, நிர்மலா மற்றும் நூரி
பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான் என்றாலும் மகாராஷ்டிர தோல் வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் ’எப்படி ஒரு வட இந்தியப் பெண் தமிழகப் பெண்களின் ஒழுக்க குறைவினால் நோய் வந்ததாகத் தெரிவிக்கலாம்’ என்றும் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. மருத்துவப்படிப்பு முடித்தபின்னர் சிகாகோவிலும் லண்டனிலும் பணியாற்றி விட்டே சுநீதி சென்னை மருத்துவ கல்லூரியின் நுண்ணுயிரியல் பிரிவில் 1973-ல் இணைந்தார்
வாழ நினைத்தால் வாழலாம்
க்ரையோனிக்ஸ்’ (cryonics) என்ற துறையில் முன்னிலை வகிக்கிறது. மரணத்தை வெல்லவும், வாழ்தலை நீடிப்பதற்கும் உதவும் துறை க்ரையோனிக்ஸ். மிக மிகக் குறைந்த தட்ப வெப்ப நிலையில் மனித உடல்களைக் குளிரூட்டி, பின்னர் தேவையான போது மீண்டும் உயிர்த்தெழச் செய்யும் தொழில் நுட்பத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
மறக்கப்பட்ட தியாகி: கஸ்பா S.V. அழகப்ப பிள்ளை
ஆஷ் படுகொலை என்பது ஆரிய சனாதன தர்மத்தினைக் காப்பதற்காக உயர்சாதி இந்துக்கள் இணைந்து செய்த தனிமனித பலாத்காரம் என்று சிலரால் விமர்சிக்கபப்டுகிறது. ஆஷ் கொலைக்கான காரண காரியங்களை நுட்பமாக ஆராயும் பொழுது, இக்கொலையானது ஆஷ் மீது சுதேசிகள் கொண்டிருந்த தீரா பகையின் விளைவாகவே நடந்ததென்பது புலனாகும்
பாவம், மரணம், நரகம்
இடப்பகுதி ஒருவித தெய்வீகத் தன்மை கொண்டதாகவும், கருமை நிறத்தில் வலப்புறம் ஒருவித நரகம் போலவும், நடுப்பட்ட பெரும்பகுதி சுவர்க்கம்-நரகம் போன்றவற்றின் கலவையாகவும் தோன்றுகின்றன. அவற்றைப் புரிந்துகொள்ள நாம் பகுதிகளைத் தனித்தனியே பார்த்தாக வேண்டும். முதலில் இடப்புறம், இது ஈடன் தோட்டத்தின் வடிவம். நம் கவனத்தை முதலில் ஈர்ப்பது கீழ்ப்பகுதி, இங்கே கர்த்தர் ஏவாளையும் ஆதமையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்,
டச்சு ஆங்கில இந்திய நாகரீகங்களின் வணிகவியம்
17 ஆம் நூற்றாண்டின் போது, ஐரோப்பாவில் அரசுகள் தங்கள் கால்களை அழுத்தமாக ஊன்றி கரங்களை உலகை நோக்கி விரித்தன, அதிகாரம் மையத்தில் குவிதல் விசை கொண்டது. அதன் செயல்பாட்டிற்கு இரண்டு வகுப்புகள் முக்கியமானவையாக மாறின. ஐரோப்பாவில் அக்காலத்தில் பெரும்பாலும் முடியாட்சிகளே இருந்தன. அதிகாரம் முடியாட்சியில் இருந்தே வழங்கப்பட்டது.
நசையறு மனமும், விசையுறு உடலும்
இன்று வயதில் மூத்தவர்களில் உங்களுக்குத் தெரிந்து ஆரோக்கியமாகவும், பயனுள்ளவர்களாகவும் வாழ்பவர்களை அவதானியுங்கள். அவர்கள் தங்களின் நாற்பது வயது கடந்தபருவத்தில் போட்ட விதை தான் இன்று அவர்களின் முதுமையில் இளைப்பாறும் நிழல் தரும் பெருமரமாக அவர்களுக்குப் பற்றுக்கோடாக இருக்கிறது.
குமார சம்பவம் மஹா காவ்யம் – 6
மனதால் எண்ணிக் கூட பார்க்க முடியாத எதிர் பாராத அனுபவம். மேகமே இன்றி திடுமென மழை பெய்தால் வரும் சந்தோஷம் இவைகளை இந்த இடத்திற்கு வந்த ரிஷிகள் அனுபவித்தனர். அதே போல இமவானும் உங்கள் வரவும், தரிசனமும் எங்களுக்கு பூத்த உடனேயே மரங்களில் பழங்கள் வந்தது போன்ற அதிசயமான சற்றும் எதிர்பாராத அனுபவம் என்றார்.
மலை தெய்வம்
காதல் கொண்டப் பின் தலைவனை பிரிந்திருக்கும் தலைவி பசலை உற்று உடல் அழகு குறைய மெலிகிறாள். காத்திருப்பு என்பது காலத்தை நீளவும் குறுகவும் செய்யும் மாயம் கொண்டது தானே. மகளின் உடல் நலிவை கண்ட கண்ட அன்னை வயதில் மூத்த பெண்களிடம் தன் கவலையை சொல்கிறாள். அவர்கள் வெறியாட்டு நடத்துமாறு கூறுகிறார்கள்.
கற் கோவில்கள், கொலைக் களங்கள்
மனித மனம் ஆக்கத்தின் உச்சத்தைத் தொட்ட இடம் அங்கோர் வாட் என்றால் அது கீழிறிங்கி தீவினை எனும் அதல பாதாளம் சேர்ந்த இடம் அங்கிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாட்டம்பாங் (Battambang) பகுதியில் ஒரு சிறு மலையில் உள்ள குகை தான் அது. அதன் உள்ளளவு சிறியது தான். ஆனால், அதன் கூரை நம் தலைக்கு ஏறக்குறைய 100 அடி மேலே குடை போல விரிந்திருக்கிறது. குகையின் விதானத்தின் நடுவில் ஒரு பெரும் துவாரம்.
நம்பிக்கையா அல்லது ஆறுதலா? – சஸ்கியா ஹாமில்டன்
லோவல் கடிதங்களின் பதிப்பாசிரியராக இருந்த, மறைந்த அமெரிக்க கவிஞர் சஸ்கியா ஹாமில்டனின் இறுதி தொகுப்பான “அனைத்து ஆன்மாக்கள்” நூலில் துல்லியம், விவரித்தல், நிரந்திரமின்மை என்றே அதே பாடுபொருளை (அல்லது) கவலைகளை கையாண்டிருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஹாமில்டன் தன்னுடைய கடைசி கவிதையில், லோவலின் “நிறைவுரை” கவிதையை மேற்கோள் காட்டியிருக்கிறார். லோவெலின் கடைசி கவிதை தொகுப்பை போலவே, ஹாமில்டன் இறந்த பின்பே அவருடைய கவிதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது.
இன்னும் இன்னும் என்ன செய்யப் போகிறாய்?
நுண் அறுவை சிகிச்சைகளில் துல்லியமாகச் செயல்படுதல் மிகவும் தேவையான ஒன்று. சோளக் கொண்டையில் இருக்கும் முத்துக்களின் மீது இருக்கும் மெல்லிய ஜவ்வு போன்ற படலத்தை சோனியின் ரோபோ மிகத் துல்லியமாகப் பிரித்து பின்னர் அறுவை சிகிச்சை நடந்த இடத்தையும் திறமையாகத் தையல் போட்டு இணைப்பதையும் காட்டும் காணொலியைப் பார்க்கும் போது ஆச்சர்யத்தில் மூழ்கிவிடுவோம்.
பொன்கழங்குகள்
குளிர்ந்த அதிகாலையில் பூக்களையும் ,அதன் தாதுக்களையும் ஈரமான மண்ணில் சேர்த்து உனக்காக நானொரு பாவை செய்தேன். அது வெயிலில் வாடும் வரை நீ வரவில்லை என்று தலைவி பாடுகிறாள். முந்தைய பாடலில் காத்திருப்பு கோடையில் பொன்னாய் மலரும் போது, இந்தப்பாடலில் ஈரம் காய்ந்து வாடுகிறது
அமெரிக்கன் ரியலிசம் சொல்லும் பாஸ்டன் நகரக் காட்சிகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியையோ, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தினையோ இந்த பதிவின் பொருட்டு கற்பனை செய்து பார்க்கலாம். அது கடினமாகத் தோன்றுகின்றதா? ரொம்ப தூரமாக இருக்கின்றதா? சின்ன விளையாட்டு ஒன்றினை முயற்சி செய்து பார்த்தால் எளிதில் தொட்டு விடலாம். அப்பாவின் பிறந்த நாள், தாத்தாவின் பிறந்த நாள், தாத்தாவின் அப்பாவின் பிறந்தநாள் என யோசித்தால் நான்கே தாவலில் அங்குச் சென்று விடலாம்.
நீங்களும் உங்கள் ஆராய்ச்சியும் – ரிச்சர்ட் ஹாமிங்
“தயாரான மனதை அதிர்ஷ்டம் சாதகமாக்குகிறது” என்று கூறிய பாஸ்டரை (Pasteur) நான் மேற்கோள் காட்டுவேன். நான் நம்புவதையே அம்மேற்கோளும் மொழிகிறது என்று நனைக்கிறேன். ஆம், சிறிது அதிர்ஷ்டமும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நான் சொல்லவருவது இதுவல்ல. விரைவாகவோ தாமதமாகவோ தயார் நிலையில் இருக்கும் மனது முக்கியமானதைக் கண்டறிந்து அதைச் செய்து முடிக்கிறது. ஆக, ஆமாம் அதிர்ஷ்டம்தான்; குறிப்பிட்ட அந்த முக்கியமான விஷயத்தைக் கண்டறிவதில் அதிர்ஷ்டம் இருக்கிறது, ஆனால் முக்கியான ஏதோவொன்றை நீங்கள் செய்துமுடிப்பதில் அதிர்ஷ்டமேதுமில்லை.
சபலங்களைக் கடத்தல்
சித்தார்த்தரை சலனப்படுத்தும் அவன் முயற்சிகள் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் தீட்டப்பட்டிருக்கின்றன. இவற்றுள் பழமையானவை அஜந்தா குகைகளில் இருக்கின்றன. புத்தரின் துறவறத்தின் இந்தக் கட்டத்தை மிக நேர்த்தியாக வடித்த சிற்பம் காந்தாரத்தில் (தற்பொழுதைய ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான்) கண்டெடுக்கப்பட்டன. காந்தாரச் சிற்பங்களில் இந்து, பௌத்த மதங்களின் கதையாடல்கள் கிரேக்கத்து சிற்ப நுட்பங்களுடனும், உடற்கூறு துல்லியங்களுடன் செதுக்கப்பட்டன
ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள்
உங்களுக்கென்று ஒரு வேலையை அமைத்துக் கொள்ளுங்கள், அதை செய்து முடியுங்கள்; அந்த வேலை ஏற்றதல்ல என்பதை ஒத்துக் கொள்ளலாம், நீங்கள் இன்னமும் சிறப்பான ஒன்றைச் செய்திருக்க முடியும்; அதை நிறுத்துவது கடினம், வேறெங்காவது செல்லலாம் என்ற பழக்கம் ஏற்படுமானால், அது வேலையின் குறைபாடில்லை, நீங்கள் தான், நீங்களேதான். ஒருமுறை ஒதுங்கலாம்; உங்கள் பலத்தை நீங்கள் ஒரு மாற்றேனும் குறைத்தால், நீங்கள் உங்களையே குறைத்துக் கொள்கிறீர்கள்
நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும்
ஒவ்வொன்றோடும் நாம் முரணப்பட்ட உறவை வளர்த்துக் கொள்கிறோம். “இயற்கை” (கட்டமைக்கப்பட்ட, காலத்திற்கு ஏற்றாற் போல் மாறிக்கொண்டே இருக்கும் பொருளுடைய சொல்) என்பது நம் கட்டுப்படுத்தக் கூடிய, கட்டுப்படுத்த வேண்டிய ஒன்று; மாறிக்கொண்டே இருக்கும் நதிகளின் பாதைகள் மாற்றப்படுகின்றன, மரபணுக்கள் மாற்றப்படுகின்றன, கச்சா எண்ணெய் எரிப்பொருளாய் மாற்றப்படுகிறது.
சிறுகோட்டுப் பெருங்குளம்
மல்லர் போர் என்பது எதிர்ப்பவரை குறிப்பிட்ட பொழுது தாக்குதல் நடத்தவிடாது செயலிழக்க செய்தல். அந்த மல்லனின் வீரத்தில் திகைப்புற்று மையல் கொண்ட ஊர், வெளியூரில் இருந்து வந்த மல்லனை வென்றவனாக ஏற்றுக்கொள்வதா.. வேண்டாமா என்று தடுமாறுகிறது. அங்கே கூட்டத்தில் மற்பார் காண வந்த ஒருத்திக்கு அவன் மீது மையல் உண்டாகிறது. அவளும் அவனை காதலிப்பதா? வேண்டாமா? என்று இருநிலைகளில் அலைகழிகிறாள்.
சிறுகதைகளின் வழியாக அமெரிக்க வரலாறு (1900-1939)
ஆனால் 1931ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் பேசுகையில் அமெரிக்க அதிபர் ஹூவர் கவனத்துடன் பீதிக்குப் பதிலாகப் முதன் முதலாக பொருளாதார மந்தநிலை என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்துக் குறிப்பிட்டார். ஹுவரை பொறுத்தவரைப் பீதியை விட மந்தநிலை என்னும் வார்த்தை மிக குறைவான அச்சத்தினை மக்களிடம் கொடுக்கும் என நினைத்தார்.
உதிரும் வண்ண இலைகள் !
துள்ளுகின்ற மீன்களாகிய மேகலையை அணிந்து, நீர்நிலைகளின் கரையோரங்களில் அமர்ந்திருக்கும் அன்னப்பறவைகள் முத்துமாலைகள் போலக் காட்சியளிக்க, பரந்த மணல் பிரதேசம் எனும் நிதம்பத்தையுடைய நதிகள், தம் இளமையாலும் அழகாலும் செருக்குற்ற இளமங்கையர் போல் தளர்நடையிட்டுக் கொஞ்சிக் குழைந்து, மெதுவாக ஆடி அசைந்து செல்கின்றன.
மாடலென்களும் டீயும் அல்லது ப்ரூஸ்டின் “In Search of Lost Time”
சரி,செர்ச்சில் இன்னமும் குதிப்பதற்குத் தயங்கும் வாசகருக்கு வருவோம். அதன் மூவாயிரத்து சொச்சம் பக்கங்களே அவரை முதலில் மாய்ப்பில் ஆழ்துகிறது. ஒருக்கால் கால் நனைப்பதற்காக, அதன் ஹாதார்ன் மற்றும் லைலாக் பூக்கள் அடர்ந்த பாதைகளில் பயணித்தபடி செர்ச்சின் முதல் நாவலான The Way by Swann’s-ஐ மட்டும் படித்துவிட்டு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சப்புக்கட்டிவிட்டு ஓடிவிடலாம் என்று அவர் நினைக்கலாம். அவர் மட்டுமே அப்படி நினைக்கவில்லை, அதே கவலைதான் தயங்கும் கட்டுரையாளனுக்கும். கடந்த சில ஆண்டுகளாகப் பல சிறுபத்திரிகை நண்பர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளையும் மீறி அவன் இன்னமும், சுருக்கமுடியா ப்ரூஸ்டைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தும் கட்டுரை(களை) முயன்று பார்க்கலாமா வேண்டாமா என்று யோசித்தபடி மதில்மேல் அம்ர்ந்திருக்கிறான்.
தாவிதின் திருப்பாடல்கள் அல்லது சங்கீதங்கள்
பல காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாக சங்கீதங்கள் புத்தகம் அமைந்துள்ளது. ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்ட150 பாடல்களைக் கொண்டது சங்கீதங்கள் புத்தகம். இப்பாடல்கள் யூதர்களின் சடங்குகளில் பாடப்பட்ட பாடல்கள் என்பதால் இவை நீண்ட காலங்களாக புழக்கத்தில் இருந்தன.
திணைக்கோட்பாடு – பெண்மையம்
இந்து மதத்தில் தொன்மக்கதைகள் வெறும் கதைகள் மட்டுமல்ல, அவை சமூக மாற்றங்களின் பிரதிபலிப்புகள். பரசுராமனின் கதை, ஆண் தலைமையை அதிகாரத்தை ஏற்கும் சந்ததிகளைப் பற்றிப் பேசுகிறது. அத்துடன் எல்லாம்மா உடம்பில் ரேணுகாதேவியையும் ரேணுகாதேவி உடம்பில் எல்லம்மா தலையையும் பொருத்தி, பண்பாட்டு தளத்தில் பெண்ணுடலை கட்டமைத்திருக்கும் அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி இருக்கிறது.
கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்
ஸிஸிபஸின் தண்டனையைப் பலரும் ஓவியமாக வடித்திருக்கிறார்கள். இவைகளுக்குள்ளே முன் பொதுயுகம் 530-ல் சுட்ட களிமண் பானையில் வரையப்பட்டதே நமக்குக் கிடைத்தவற்றில் மிகப் பழமையானது. பொதுயுகம் 1549-ல் இத்தாலியஓவிய மேதை டிஷியன் என்பவரால் திரைச்சீலையில் தைலவண்ணம் கொண்டு வரையப்பட்ட ஸிஸிபஸ் ஓவியங்களுக்குளே மிகச் சிறப்பானதாக அறியப்படுகிறது.
ஜொராஸ்ட்ரியனிசம்
ஜொராஸ்ட்ரியர்கள் இந்த சடங்கு விழாக்களை செய்வதற்காக மகிகளுக்கு வணக்கஸ்தலங்களை நிர்மாணித்துக் கொடுத்தனர். அவை ஆங்கிலத்தில் ‘fire temples’ (தீக் கோயில்கள்) என அழைக்கப்பட்டன. மூன்றாம் நூற்றாண்டில், சசானிய பாரசீகப் பேரரசு ஜொராஸ்ட்ரியனிசத்தை அதன் அதிகாரபூர்வ மதமாக மாற்றியபோதே உண்மையில் அது ஒரு மதமாக நிறுவப்பட்டது என்று சொல்வேன். அதற்கு முன், இது பாரசீக மற்றும் பிற பேரரசர்களின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்திருக்கலாம். ஆனால் அது உத்தியோகபூர்வ அரச மதமாக மாறிய பின்னர்தான் பரவத் தொடங்கியது.
ஹலோ, யாரேனும் இருக்கிறீர்களா?
பிரபஞ்சத்தில் எங்கேயாவது எப்போதாவது யாராவது தன்னை சந்தித்தால், அவர்களிடம் தெரிவிப்பதற்காகவே, மனிதகுலத்தைப் பற்றிய பல விவரங்களை ஒரு தங்கத்தட்டில் பதித்து ஏந்திக்கொண்டு, நமது சூரியக் குடும்பத்தையே தாண்டி வெளியே செல்லும் நிச்சயமான குறிக்கோளுடன் பயணத்தை துவக்கிய முதல் விண்வெளிப் பயணி
இமானுவல் கன்ட்டின் உணர்வோங்குப் பெருநிலை
தமிழில் உன்னதத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட நான் இறையுணர்வு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். பேரழகின் ஊடாக இணைந்திருக்கும் முடிவின்மையை அதன் முக்கிய வரையறையாகக் கொள்ளலாம். ஊடாக, அது எழுப்பும் அச்சம், இயலாமை, விந்தை எனப் பல்வேறு உணர்வுகளையும் ஒட்டுமொத்தமாகக் கொண்டது இறையுணர்வு.
வசந்தகாலம் வருமோ?….
வசந்தா என்றே ஒரு அழகான ராகம் – உள்ளங்களில் நம்பிக்கையையும் நல்ல எண்ணங்களையும் வளர்ப்பது. வசந்த காலத்துக்கு உரியதா எனில், இல்லை; அவ்வாறு எந்தப் பகுப்புகளும் இல்லை. நளினகாந்தி, கர்ணரஞ்சனி போன்ற ராகங்களையும் வசந்தத்தின் ஓர் அழகான மனோநிலைக்குச் சேர்த்துக் கொள்ளலாம் என எங்கேயோ படித்த நினைவு!!
சந்தனம் வாடும் பெருங்காடு
சங்ககாலத்தில் இளம் பெண்கள் முருகு பிடித்து விட்டது என்று முருகனுக்கு பலி கொடுத்து குறிகேட்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அதற்கு முருகு அயர்தல் என்று பெயர். வழக்கத்துக்கு மாறாக தலைவி சோர்வும் தனிமையும் கொள்வதை அன்னை கவனிக்கிறாள். அவள் உள்ளம் திடுக்கிட்டு விழித்து குழந்தை பெண்ணானதை உணர்ந்திருக்கும். அவள் அதை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தத்தளிக்கிறாள். வழிபாடு மூலம் எதையோ அறிவிக்கிறாள்.
மனித இனத்தினர் எப்பொழுது அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தனர்?
பேலியோ சைபீரியர்கள் மற்றும் பேலியோ அமெரிக்கர்கள் மரபணு ஆய்வு முடிவுகளின் ஒப்பீடு தரும் தகவல் உறுதி செய்கிறது. அமெரிக்கப் பழங்குடியினர் மரபணு ஆய்வு முடிவுகள், 67% அமெரிக்கப் பழங்குடியினர் மரபணுக்கள் அவர்களுக்குக் கிழக்காசியப் பகுதியினர் மரபணுவுடன் தொடர்புள்ளதாகக் காட்டுகிறது.
நாம்
இயற்கையே நமது இருப்பிடம்- இயற்கையில் நமது இருப்பிடத்தில் இருக்கிறோம். அறிநுண்ணுணர்வு நமக்கு அளிக்கும், சிறு துகள்களாலான வெளியினைக் கொண்ட, காலமே இல்லாத, எதுவுமற்ற விந்தையான, பலவண்ணமுடைய, ஆச்சரியமூட்டும் இந்த பிரபஞ்ச சித்திரம் நாம் எதனால் உண்டாக்கப்பட்டுள்ளோம் என காட்டுகிறது. நம்மை உண்மை இயல்பிலிருந்து முரண்பட வைப்பதில்லை
மனித இனப் பரவல் விளைவித்த மரபணு மாற்றங்களும் தோல் நிறத்தின் பரிணாம வளர்ச்சியும்
மனித இனக்குழு தன் தாய்நிலத்திலிருந்து புலம் பெயர்ந்து மற்றொரு புதிய நிலப் பகுதியில் குடியேறிய பிறகு, அப்பகுதியில் நிலவும் இயற்கைச் சூழலுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொண்டு வாழத் தொடங்குவர். சுற்றுச்சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொண்டு வாழ்வது அடிப்படை பரிணாமவியல் கொள்கை. இதுவே மக்களின் தோற்றம், நிறம், உடலமைப்பு ஆகியவற்றில் காணப்படும் மாறுபாடுகளுக்குக் காரணம். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் தோலின் நிறம் மாறுபடக் காரணம் அவர்கள் வாழும் பகுதியின் புற ஊதாக் கதிர்களின் அளவின் தாக்கத்தை எதிர்கொள்ள அவர்களின் தோலின் நிறமிகளில் ஏற்படும் மாறுபாடு என்ற ஒரு தகவமைப்பு என்பது நினா ஜப்லோன்ஸ்கி தரும் விளக்கம்
நிகழ்தகவு, காலம் மற்றும் கருந்துளையின் வெப்பம்
கற்பனையோ இல்லையோ, காலம் கடப்பதையோ ஓடுவதையோ ஒழுகிச் செல்வதையோ எப்படி விளக்குவது? காலம் கடப்பதை நாம் நன்றாகவே அறிகிறோம். நமது சிந்தனைகளும் பேச்சும் காலத்தில் தான் இருக்கின்றன. மொழியின் அடிப்படை கட்டமைப்பே காலத்தைச் சார்ந்தது – ஒரு பொருள் இருக்கிறது – இருந்தது – இருக்கலாம் . பொருட்களோ வண்ணங்களோ, ஏன் வெளியோ இல்லாமல் கற்பனை செய்ய முடியும் பிரபஞ்சத்தினை காலம் இல்லாமல் கற்பனை செய்வது மிகவும் கடினமானது.
கொகெய்னும் கிரேக்கும்
துகளாக கிடைக்கும் கொகெய்ன் அதிக போதையளிப்பதால் அதன் தேவையும் விலையும் மிக அதிகம் எனவே விற்பனை செய்பவர்களுக்கு லாபமும் அதிகம். கிரேக் போதையும் விலையும் குறைவு என்பதால் அது பெரும்பாலும் ஸ்ட்ரீட் கொகெய்ன் என்னும் குறைந்த அளவிலும் பெயரிலும் விற்பனையாகிறது,
கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை
அவருடைய ஓவியங்கள் academicism என்று சொல்லப்படும் பயில்முறையைச் சார்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்தியக் கலையுலகில் பயில்முறைக் கலைகள் கோலோச்சிக் கொண்டிருந்ததன. இது ஓவியம், சிற்பம், இசை போன்று பலவற்றுக்கும் பொருந்தும். இவ்வழிக் கலைஞர்கள் பல வருடங்கள் – அதாவது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக – தங்கள் கலையைப் பயிற்சிக்கூடங்களில் ஆழ்ந்து கற்றார்கள்
ரேபிஸ் தொடர்ச்சி
ரேபிஸ் தொற்றுக்குள்ளான நாய்களில் இருவகையான நோய் அறிகுறிகள் உண்டாகும் furious எனப்படும் வகையில் நாய்களுக்கு வெறிபிடித்திருக்கும். அரிதாக dump எனப்படும் வகையில் ரேபிஸ் தொற்று உண்டான நாய்கள் மிக அமைதியாக உணவின்றி ஒரே இடத்தில் படுத்திருக்கும். பெரும்பாலும் சிறுகுட்டிகளே இவ்வகையில் அதிகம் பாதிப்படைகின்றன.
சீர்மையற்ற சீர்மை
கூகுளை நாம் அத்தகைய ஒரு சீர்மையற்ற இலக்கத்தை உருவாக்க சொல்லி கேட்டால் அது தூய்மையான சீர்மையற்ற கணித மாதிரிகளைக் கொண்டு முடிவுகளை கொடுப்பதில்லை. அது சீர்மையைக் கொண்டு சீர்மையற்ற இலக்கத்தைத் தருவதாக நம்மை நம்பச் செய்துவிடும். அதன் வழிமுறையோ, அதற்கான உள்ளீடுகளோ, எவையுமே நாம் அறியாதவை. இவ்விதத்தில் கிடைக்கப்பெற்ற எண்களும் போலிச் சீர்மைகளே.
எண் சாண் உடம்பிற்கு
மேஜையின் மீது ஒன்றின் அருகே ஒன்றாக அடுக்கப்பட்ட எழுதுகோள்களை மனதில் நினைத்துக் கொண்டால் நமக்கு இந்த கிடைமட்ட அடுக்குகள் புரியும். தூண்டப்பட்ட pluripotent திசுக்களில், மென்மையான உயிர் மையைக் கொண்டு,அதில், மூளை அணுக்களை வளர்த்து, கிடைமட்ட அடுக்குகளில் பொதிந்து, மூளை அணுக்கள் மற்றும் தொடர்புகள் இவற்றை வெற்றிகரமாக இந்த இழைகளில் செய்திருக்கிறார்கள்.
புருஷ சூக்தத்திற்காக உறுதியாய் நிற்பதைப் பற்றி! – முதல் பகுதி
இப்புதினத்தின் முன்னுரையிலும் கதையின் பல பகுதிகளிலும், ஏராளமான குறீப்பிடுகள் தூவப்பட்டுள்ளன. இவை கதையுடனும் அக்காலத்திய இந்து சமுதாயத்துடனும் குறிப்பாக சாதியுடனும் சம்பந்தமுள்ளதாக அமைந்துள்ளது. உண்மையாகவே, சாமானிய இந்துக்கள் எதிர்கொள்ளக்கூடிய விவரங்களின் சிறந்த சுருக்கமாக அமைந்துள்ளது.
ரேபிஸ்
லூயி பாஸ்டர் வெறிநாய் கடித்த சமயத்துக்கும் ரேபிஸ் நோய் உருவாகும் சமயத்துக்கும் இடைப்பட்ட தேக்க நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அந்த தடுப்பூசியை வெற்றிகரமாக சிகிச்சைக்கு பயன்படுத்தினார். ரேபிஸ் தடுப்பூசி லூயிபாஸ்டர் கண்டுபிடித்த நான்காவது தடுப்பூசி முன்பே அவர் Pig Erysipelas என்னும் பறவை/பன்றிகாய்ச்சலுக்கும், ஆந்தராக்ஸ் மற்றும் பறவை காலராவுக்கும் தடுப்பு மருந்துகளை கண்டறிந்திருந்தார்.
வெளியின் துகள்கள்
அடிப்படை நடைமுறைகள் என்பது தருணங்களின் தொடர்ச்சியான ஒழுக்காக இருப்பதில்லை. வெளியினுடைய துகள்களின் நுண்-அளவு நிலையில், இயற்கையின் நடனம் என்பது , இசைக்குழு நடத்துனர் கோலின் ஒரு தாளத்திற்கு ஏற்ப ஆடுவது அல்ல. ஒவ்வொரு நடைமுறையும் தன்னுடைய தாளத்தில்,மற்றதுடன் தொடர்பின்றி ஆடுகின்றன
