சரபம்

கண்மணி அப்போது ஊரில் புதிதாக உருவாகி கொண்டிருந்த மசாலா பூரி கடை ஒன்றை அப்போதுதான் திறந்திருந்தான். வீட்டிற்கு மூன்று பெண்களுக்கு பின் பிறந்ததால். கொஞ்சம் செல்லமாக வளர்க்கப்பட்டான். எப்படியோ மீசைக்கார தண்டல்காரரிடம் கடன் வாங்கி இந்த கடைய போட்டு விட்டான். புதிய தின்பண்டங்கள் கிடைத்த மகிழ்ச்சியில், ஊரில் உள்ள அனைத்து பையன்களும், நாக்குக்கு சுவை தேடும் பெரியவர்கள் என்று மாலை வேலையில் பெரும் கூட்டம் இருக்கும்.

நீங்களும் உங்கள் ஆராய்ச்சியும் – ரிச்சர்ட் ஹாமிங்

“தயாரான மனதை அதிர்ஷ்டம் சாதகமாக்குகிறது” என்று கூறிய பாஸ்டரை (Pasteur) நான் மேற்கோள் காட்டுவேன். நான் நம்புவதையே அம்மேற்கோளும் மொழிகிறது என்று நனைக்கிறேன். ஆம், சிறிது அதிர்ஷ்டமும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நான் சொல்லவருவது இதுவல்ல. விரைவாகவோ தாமதமாகவோ தயார் நிலையில் இருக்கும் மனது முக்கியமானதைக் கண்டறிந்து அதைச் செய்து முடிக்கிறது. ஆக, ஆமாம் அதிர்ஷ்டம்தான்; குறிப்பிட்ட அந்த முக்கியமான விஷயத்தைக் கண்டறிவதில் அதிர்ஷ்டம் இருக்கிறது, ஆனால் முக்கியான ஏதோவொன்றை நீங்கள் செய்துமுடிப்பதில் அதிர்ஷ்டமேதுமில்லை.   

அரவு உறை புற்று

ஏனென்று தெரியாமல் உடலெல்லாம் எரிவது போல் இருந்தது. அது அப்பாவின் மீது வந்த எரிச்சல் இல்லை என்று உள்மனது சொன்னது. உடலின் மீது ரத்தம் வழிய கீறிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. எவ்வளவோ சிந்தித்தும் என்னுள் அப்பவின் கையை பற்றிக் கீழிறக்கும் எண்ணம் எப்படி உருவாகி செயலாகியது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.

சபலங்களைக் கடத்தல்

This entry is part 5 of 14 in the series குடாகாயம்

சித்தார்த்தரை சலனப்படுத்தும் அவன் முயற்சிகள் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் தீட்டப்பட்டிருக்கின்றன.  இவற்றுள் பழமையானவை அஜந்தா குகைகளில் இருக்கின்றன.  புத்தரின் துறவறத்தின் இந்தக் கட்டத்தை மிக நேர்த்தியாக வடித்த சிற்பம் காந்தாரத்தில் (தற்பொழுதைய ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான்) கண்டெடுக்கப்பட்டன. காந்தாரச் சிற்பங்களில் இந்து, பௌத்த மதங்களின் கதையாடல்கள் கிரேக்கத்து சிற்ப நுட்பங்களுடனும், உடற்கூறு துல்லியங்களுடன் செதுக்கப்பட்டன

பூனையும் கோமதிசங்கரும்

“உன் காதுல விழுந்த, நீ அலட்சியப்படுத்தின உரையாடல்கள், நீ கண்ணால் பார்த்து மனதில் பதிவு செய்யாத காட்சிகள், அலசிப் பார்க்காத சம்பவங்கள் இப்படி ஏராளமாக இருக்கும் உன் மூளையோட பதிவில். உன் மூளையில் கடந்த காலங்களில் பதிஞ்சிருக்கிற, ஆனால் நீ கவனம் செலுத்தாமல் இருந்த சில பதிவுகளை மறுபடி ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்கும். 

ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள்

உங்களுக்கென்று ஒரு வேலையை அமைத்துக் கொள்ளுங்கள், அதை செய்து முடியுங்கள்; அந்த வேலை ஏற்றதல்ல என்பதை ஒத்துக் கொள்ளலாம், நீங்கள் இன்னமும் சிறப்பான ஒன்றைச் செய்திருக்க முடியும்; அதை நிறுத்துவது கடினம், வேறெங்காவது செல்லலாம் என்ற பழக்கம் ஏற்படுமானால், அது வேலையின் குறைபாடில்லை, நீங்கள் தான், நீங்களேதான். ஒருமுறை ஒதுங்கலாம்; உங்கள் பலத்தை நீங்கள் ஒரு மாற்றேனும் குறைத்தால், நீங்கள் உங்களையே குறைத்துக் கொள்கிறீர்கள்

மிளகு அத்தியாயம் எழுபது

வசம்பு இடித்துப் போடச் சொன்னது  சித்தர் வாக்கைத் தவறாகப் பொருள் கொள்வதாகும். சிவசம்பு ஒரு அலங்கார விளி, அதற்குள் வசம்பைத் தேடக்கூடாது’ என்று பாடபேதம், பெயர்ப்புப் பிழை பற்றிய சுவடியின் இறுதி ஏட்டில் எழுதியிருந்தது கண்ணில் பட்டது. சிவசம்பு-வுக்கு விசும்பு என்று இன்னொரு பாடமும் உண்டாம்.  

மௌனம்

எத்தனை ஆண்டுகளுக்குப் பின்
சந்திக்கிறோம் நாம்
முதன்முறையாக பார்த்தது போல
அதே பட்டாம்பூச்சி
காலம் கொஞ்சம் கனிந்திருக்கலாம்
இரங்கி வந்து தணிந்திருக்கலாம்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்…..

This entry is part 5 of 6 in the series பருவம்

கார்த்திகை விளக்கீடு எனும் கார்த்திகை தீப விழா கார்த்திகை மாதத்தில் தமிழர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். இதன் ஐதீகம் என்னவெனில் படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மாவும் காத்தல் தொழிலைச் செய்யும் திருமாலும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார்

அறிவுப்புருசன்

“அவரும் ஐ.ஏ.எஸ் அகாடமி வச்சு நடத்திட்டிருக்காரு. அவர் எம்.ஏ.எம்.பில் முடிச்சுவரு. பி.எச்.டி. படிச்சுட்டு இருக்காரு, மெட்ராஸ் யுனிவர்சிட்டியிலே. ஆந்தரபாலஜிப்பா. உணவைப்பத்தி ஆராய்ச்சி பண்றாரு. சரியான ஆளு. மோத்தேபாளையம் சொந்த ஊராம். இங்கேயே வந்துட்டாங்களாம். 

குமார சம்பவம் மஹா காவ்யம் – 2

பகவானே! நீங்கள் சொன்னது சரியே. எங்களை பொறுப்பு கொடுத்து பதவிகளில் அமர்த்தினீர்கள். அவைகளை எதிரிகள் அபகரித்துக் கொண்டு விட்டனர்.  ஒவ்வொரு உயிரிலும் உங்கள் ஆத்மா உள்ளதே, எப்படி இது வரை நீங்கள் அறியாமல் இருந்தீர்கள்.  உங்களிடம் வரம் பெற்றவன் தான் தாரகன் என்ற அசுரன். மூவுலகையும் ஆட்டி வைக்கும் தூம கேதுவாக வளர்ந்து விட்டான்.  அவன் செய்யும் உபத்ரவம் தாங்க முடியவில்லை.

இலைகளுதிர்ந்த பின் மலைகள்

அந்த நீண்ட திண்ணையில்  ஜாதிமல்லி, காக்கரத்தான், ஜெவ்வந்தி, மரிக்கொழுந்து, நந்தியாவட்டை , மருக்கு, டிசம்பர் பூ, ரோஜா எனப் பலவிதமான வண்ண வண்ண பூக்களின் சிறு சிறு குவியல்களின் மத்தியில் அமர்ந்து பூக்களை ஜோடியாக எடுப்பதும் நாரில் வைத்து விரல்களால் வளைத்து சரக் சரக் என இழுப்பதுமாக ஒரு தாள நயத்துடன் சரம் சரமாக பூக்கள் கட்டுவதும் மாலைகள் சுற்றுவதுமாக அவர் வேறு ஒரு ஆளாக உருவெடுத்திருப்பார். பூ கட்டும்போது அவர் முகமும் கைகளும் வெவ்வேறு பாவனைகளும் அசைவுகளுமாக மாறி அதனுடன் உரையாடிக்கொண்டிருப்பதுபோல இருக்கும்

நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும்

ஒவ்வொன்றோடும் நாம் முரணப்பட்ட உறவை வளர்த்துக் கொள்கிறோம். “இயற்கை” (கட்டமைக்கப்பட்ட, காலத்திற்கு ஏற்றாற் போல் மாறிக்கொண்டே இருக்கும் பொருளுடைய சொல்) என்பது நம் கட்டுப்படுத்தக் கூடிய, கட்டுப்படுத்த வேண்டிய ஒன்று; மாறிக்கொண்டே இருக்கும் நதிகளின் பாதைகள் மாற்றப்படுகின்றன, மரபணுக்கள் மாற்றப்படுகின்றன, கச்சா எண்ணெய் எரிப்பொருளாய் மாற்றப்படுகிறது. 

மாதாவின் செவி

“மாதா ஆலயத்தப் பார்த்து மரியசூசை ஜெபிச்சாருன்னா அந்த மாதா எங்க இருந்தாலும் வந்துருவாங்க… இது நானே ஆலயத்துல பல தடவ சாட்சி சொன்ன வார்த்த…” அங்குள்ள பலரும் சொல்லும் வாடிக்கையான வார்த்தைகள் அவை. மரியசூசை வேண்டாமென்றாலும் அப்போதைக்குக் குருவானவர் இடத்தில் இருந்து திங்கி மக்களின் துயரங்களை மாதாவிடம் கொண்டு செல்லும் சக்தி மரியசூசைடுக்கு இருப்பதாகப் பேசி வந்தனர்.

எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர்

மேலாக நகைச்சுவையாக அறியப்படும் இது, அவரின் சிந்தனை முறையையும், எழுதும் முறையையும் காட்டுவது எனப் பல எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். 34 அபாரமான நூல்களை எழுதியிருக்கிறார். அதைவிட முக்கியமாக அபாரமான வாசகர். “படைப்பாளியின் வார்த்தைகள் எதிரொலியாக உங்கள் சிந்தையில் கேட்கும்போது உங்களைச் சுற்றியுள்ள இரம்மியமான அமைதி”க்காக வாசிப்பின்பமாக பிறரின் கதைகளை விரும்பினார்.

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி

This entry is part 3 of 4 in the series ஆத்தோரம் மணலெடுத்து

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பணத்தை முடக்க அடுக்கு வீடுகள், வசதியான உள்நாட்டுக் குடும்பங்களின் உல்லாசப் பொழுதுகளுக்கு கடற்கரை இல்லங்கள், மலையடிவாரக் குடில்கள் – இவற்றில் முதலீடு செய்வதால் குடியிருப்புக் கணக்கில் ஆபத்து குறைவு. அதன் மதிப்பும் வேகமாக வளராது. உங்கள் தேவைக்கு வணிகக் கட்டடங்களுக்கான அக்கௌன்ட். எங்கள் மேற்பார்வையின் கீழ் நாடு முழுவதிலும் எண்ணற்ற வர்த்தக அமைப்புகள்

காதல்மொழிகள் கடலலை போலே!

இடைக்கால ஜப்பானிய இலக்கியங்களில் சட்டையின் கைப்பகுதி நனைவது காதலரின் பிரிவால் வாடும்போது உகுக்கும் கண்ணீரை உணர்த்துவது என்றும் அரண்மனைக் காதல்கள் எல்லாம் குறுகிய வாழ்வை உடையவை என்றும் பார்த்தோமல்லவா? போட்டிப்பாடல் பாடியவர் தனது செயலுக்குக் கடலலையை உவமையாகக் காட்டியதால் இவரும் இப்பாடலில் அத்தகைய பிரிவைக் கடற்கரையில் உடையை நனைக்கும் அலையுடன் இணைத்துப் பாடியிருக்கிறார்

ஆற்றுப்படுதலின் குளிர்மையும் சூடேற்றிவிடும் சொற்களும்

கீறலில்
பீறிடும் வார்த்தைகள்
சிதைக்கும்
தருணத்தில்
பழைய
களிம்பைத்தான் தடவுகிறீர்கள்
தவறுகள்
என்னுடையதென.

காட்டுப்பன்றி இலச்சினையை நாட்டுப் பன்றியெனத் தவறாகப் புரிந்துகொண்டு…

This entry is part 34 of 48 in the series அதிரியன் நினைவுகள்

காட்டுமிராண்டியான  மித்திரா(Mithra)வுக்குத் தான் அப்பல்லோ கடவுளின் சகோதரர் என்கிற நினைப்பு உண்டு. ஒரே தெய்வமென்கிற கருத்தியத்தின்  குறுகிய எல்லைக்குள் உண்மையை முழுமையாகப்  பூட்டிவைத்து, அனைத்துப் பண்பையும் உள்ளடக்கிய கடவுளின் பன்முகத்தமையை அவமதிக்கும் ஆணவம் இஸ்ரேலியரிடம் மட்டுமே இருந்தது, இதனை உலகில் வேறுமக்களிடம் காணமுடியாது; 

நதி

அந்தக் கடிதம் வந்ததிலிருந்து மூன்றாவது மாதம் லாஸ் ஏஞ்சலஸ் ஏர்ப்போர்ட்டில் அவருக்காகக் காத்திருந்தேன். வேஷ்டியுடன் தான் வந்திருந்தார். மேலே வெளிர் கருப்பில் போன முறை சென்றபோது அவருக்கு நான் கொடுத்திருந்த சட்டை. அன்றிரவு ஆஷா சொன்னாள் ‘ஸீம்ஸ் லைக் அ ஜென்டில்மேன்” என்றாள். ஆஷா நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை என இருப்பவள். ஆனால் இருப்பது வெறும் செருக்கு. சக மனிதரை ஆணவத்துடன் திமிருடன் எதிர்கொள்ள வாழ்க்கை அவளுக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. ஒரு வாரத்தில் அவள் சொன்னாள் “ஐ லைக் யுவர் தாத்தா”.