ஏரோசால் (தூசிப் படலம்)

எல்லாவகை ஏரோசால்களும் சூழலுக்கு  ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
கடல் உப்பு அடிப்படை கொண்ட வெளிர் நிற ஏரோசால்கள் ஒளியை பிரதிபலிக்கக் கூடியவை.  இவை பூமியைக்  குளிர்விக்கின்றன.
காட்டுத்தீ கக்கும் ஒளிர் கருநிற (jet -black ) புகைக்கரி சூரிய வெப்பத்தை கிரகித்துக் கொள்கிறது. அதிக உயரப் பிரதேசங்களில் ஏரோசால் இதைச் செய்வதால் குறைவான வெப்பமே நிலப் பரப்பைத் தாக்குகிறது. கருத்த ஏரோசால் வெண்பனி மற்றும் பனிப் பொழிவுகளைக்  கருப்பாக்கி விடுகிறது. அதனால் அவற்றின் ஒளி திருப்பும் திறன் (albedo) குறைந்து பனி உருக ஆரம்பிக்கிறது.

மரபணு திருத்தங்களும் மனமாற்றங்களும்

ஏதோ BT-பருத்தியும், Terminator ஜீன்களை கொண்டுள்ள விதைகளிலும் மட்டும்தான் மரபணு மாற்றப்பட்டுள்ளது, மற்றபடி வேறு எங்கும் மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்கள் கிடையாது என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. உலகிலுள்ள ஒவ்வொரு ஆய்வகத்திலிருந்தும் மரபணு ஆராய்ச்சியில் உபயோக்கிப்படும் பாக்டீரீயங்கள் சுற்றுப்புறச் சூழலை நோக்கி தினமும் அனுப்பபடுகின்றன. ஆய்வக உபகரணங்களைச் சுத்தம் செய்யும் பொழுதுகளில் இது அவர்களுக்குத் தெரியாமலே நடைபெறும். ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவற்றில் இத்தகைய மரபணு மாற்றம் செய்யப்பெற்ற பாக்டீரியாக்களின் எதிர்பாராத வெளியேற்றம் (inadvertent release) என்பது கடுமையான விதிமுறைகளால் குறைக்கப்படுகிறது, ஆனால் தடுக்கப் படமுடியாதது. 

பிட்(காயினு)க்கு மண் சுமப்பவர்கள்

1800 க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்ஸிகள் இருப்பதாக 2018-ல் வெளிவந்த ஒரு செய்தி தெரிவிக்கிறது. அதில் கிட்டத்தட்ட பாதி பிட்காயின் என்ற வலை நாணயங்கள் (Bitcoin). கிரிப்டோகரன்ஸிகளின் தற்போதைய சந்தை மதிப்பு $1.5 டிரில்லியன். உருவற்ற ஒரு பொருள் (!), கணினியின் நிரலன்றி வேறு ஒன்றுமில்லை, ஆயினும் அதன் மதிப்போ மலைக்க வைக்கிறது.

எண்ணும் எழுத்தும் பெண்ணெனத் தகும்

கணினித் துறையில் சாதித்த பல பெண்களின் பெயரைப் பலரும் அறியக்கூட இல்லை. இக்கட்டுரையில் நாம் உரிய கவனம் பெறாத திறமைசாலிகளான சில பெண்களைப் பற்றிப் பார்ப்போம்.

அறிவுடைப் புதுப்பொருள்

இந்த இரு பரிமாண மின் பகுப்பிகள் பல்வகையான கரைப்பான்களில் (solvents) தங்கள் அணுக்களைக் கரைத்துக்கொள்ளும் ஆற்றலுடையவை. வெளிப்புற நிலைகளான வெப்பம், பிஹெச் (pH-potential of Hydrogen) ஆகியவற்றைக்கொண்டு இந்தப் புதுப்பொருளின் அமைப்பு முறைகளை மாற்றமுடியும் என்பதால், குறிப்பிட்ட உடல் பகுதிக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்படவேண்டிய மருந்துகளை மிகத் துல்லியமாக அங்கேயே உட்செலுத்த முடியும்.

சிமென்டும் கரி உமிழ்வும் தீர்வும்

உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இடம் என்பவை அடிப்படைத் தேவைகளே. இவை அனைத்திலும் நாம் செயற்கை முறைகளைப் பெரும்பாலும் பின்பற்றி வருகிறோம். காங்க்ரிட் கட்டடங்கள் நம்முடைய வசிப்பிடத்தின், அலுவலகங்களின் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

மின்சக்தி விமானங்கள்

ஏறத்தாழ உலகில் பறக்கும் விமானங்களில் பாதி விமானங்கள், 800 கி.மீ.க்கும் குறைவான போக்குவரத்தில்தான் பயன்படுத்தப்படுகின்றன. மின்கலன்கள் 2025க்குள் இந்த ஆற்றலை அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலக்க முறை நல ஆய்வும் மருத்துவமும்

உங்கள் மருத்துவர் வருங்காலங்களில் தரப்போகும் மருந்துச் சீட்டு ஒரு மருத்துவப் பயன்பாட்டுச் செயலியாக இருக்கலாம். தற்சமயம் பயன்பாட்டில் உள்ள அல்லது கட்டமைக்கப்பட்டு வருகின்ற பல நூறு செயலிகள், உடல் நலம், மன நலம் மற்றும் நோயினைத் தானாகக் கண்டறிந்து, அதைக் கண்காணிப்பதோ, மருந்துகளைப் பரிந்துரைப்பதோ செய்யும் வண்ணம் உருப்பெற்று வருகின்றன.

இடவெளிக் கணினி

அவர் தன் படுக்கை அறையிலிருந்து சமையல்கூடத்திற்குச் செல்கையில் சுற்றுப்புற வெப்பநிலை சீராக்கப்பட்டு, விளக்குகளும் ஒளிர்கின்றன. அவர் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி, பாதையில் குறுக்கிடுகையில் சக்கர நாற்காலியின் வேகம் குறைகிறது. அவர் சமையல் அறைக்கு வந்தவுடன் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து உணவினை எடுத்துக்கொள்ளவும் அடுப்பினை இயக்கத் தகுந்தாற்போலவும், உணவு உண்ண வசதியாகவும் மேஜை இயங்குகிறது.

மொபைல் தொடர்பாடல் வரலாறு – பகுதி 1 (0G & 1G)

ரேடியோ தொடர்பாடலில் பெருஞ்சாதனைகள் புரிந்த மார்க்கோனி முறையான பொறியியல் அல்லது இயற்பியல் பட்டம் பெறாதவர். அறிவியலர் என்பதைவிட அரைகுறைப் (tinkering) பொறியாளர் என்றால் பொருந்தும். நோபல் பரிசு ஏற்புரையில் தன் கண்டுபிடிப்பு எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தனக்கு எதுவும் தெரியாது என்று மனம் திறந்து பேசினார். நோபல் பரிசு பெற்றிருந்தாலும் அவரை ‘ரேடியோவின் தந்தை’ எனக் கூறிவிட முடியாது.

மெய்நிகர் நோயாளிகள்

கணினிகள், மருத்துவர்களின் சிறப்பிடத்தைப் பெற்றுவிடும் என்று கூறப்பட்டிருப்பதை மெய்ப்பிப்பதுபோல் ஒவ்வொரு நாளும் புது கணினிச் செயல்முறைகள் வெளிவந்து மிகத் துல்லியமாக நோயையும் அதன் வீரியத்தையும் அதற்கான சரியான தீர்வுகளையும் கண்டறிந்து கையாள உதவுகின்றன.

சூர்ய சக்தி வேதியியல்

மனித நலத்திற்கும் அவனது சுகத்திற்கும் தேவையான வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கையில், தொல்லெச்ச எரிபொருள் பயன்படுத்தப்படுவதால், பிரித்தெடுக்கும் செயல்முறைகளும் கரி உமிழ்வும் சூழல் கேடுகளும் ஏற்படுகின்றன. வீணாகும் கரிவளியை, சூர்ய சக்தியை உபயோகித்துத் தேவையான வேதிப் பொருட்களை உருவாக்கும் ஒரு புதிய அறிவியல் முறை கண்டறியப்பட்டுள்ளது.

வலிதரா நுண் ஊசிகள்

வளர்ந்து வரும் பத்து தொழில் நுட்பங்கள்-2020 என்ற அறிமுகக் கட்டுரையைச் சென்ற இதழில் பார்த்தோம். ஒவ்வொன்றாக அவற்றை விரிவாக இப்போது பார்க்கலாம். திரைப்படங்களில் தந்தையின் அன்பைக் காட்டும் விதமாக ஒரு காட்சி இடம் பெறும். அவரது குழந்தைக்கு மருத்துவர் ஊசி போடுவார்; இவர் கண்களில் நீர் திரளும். இன்றும் “வலிதரா நுண் ஊசிகள்”

வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020

கடந்த இருபது ஆண்டுகளாக, முன்னுதாரணங்கள் சொல்ல இயலாத வகையில், தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், கணினியில், செயற்கை நுண்ணறிவியலில், உயிரியல் சார்ந்த துறைகளில் காட்டும் வேகம் அளப்பரியது. உலகளாவிய சவால்களை எதிர் கொண்டு ஏற்புடைய தீர்வுகளை அளிக்கும் சாத்தியங்கள் உள்ள இந்த நுட்பங்கள், தவறாகப் பயன்படுத்தப்படுமாயின் என்ன கேட்டினைக் கொண்டு வருமென்றும் சிந்திக்க வேண்டும்.

ராட்சச எண்ணெய்க் கசிவுகள்

This entry is part 12 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

எண்ணெய்த் தொழில் வழக்கப்படி Premex நிறுவனம், பாதி எண்ணெய் வெளிவந்தவுடன் எரித்துவிட்டோம், கொஞ்சம் ஆவியாகிவிட்டது, மற்றதைக் கவனத்துடன் அப்புறப்படுத்தி விட்டோம் என்று மார் தட்டிக்கொண்டது. இந்த எதையும் தனிப்பட்ட பாரபட்சமில்லாத எந்த ஓர் அமைப்பும் உறுதி செய்யவில்லை.

P.O.T.S – ஒரு மீள் பார்வை

சில ஆண்டுகளாக POTS (Plain Old Telephone System – வெற்று வயோதிகத் தொலைபேசி அமைப்பு) என்ற பெயரால் பரிகசிக்கப்பட்டுவரும் தரைவழித் தொலைபேசி அமைப்பு, அடிப்படையில் முறுக்கு இணை (twisted pair) தாமிரக் கம்பிகள்மூலம் இடையறாது குரல் குறிகைகளை அனுப்புதலாகும். இது 1876-ல் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக நிலைத்திருக்கும் தொழில் நுட்பம் .

இயந்திரச் சிக்கல்கள் – விளாதிமிர் அலெக்ஸீவ்

விளாதிமிர் அலெக்ஸீவ் என்ற தரவிதழாளருக்கும் OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட GPT-3 எனப்படும் மொழி உருவாக்கிக்கும் இடையே நடந்த ஓர் உரையாடலிலிருந்து சில பகுதிகள். இணையத்தில் உள்ள தரவுகளை அலசுவதன் வழியாக GPT-3 தனது செயற்கை நுண்ணறிவை வளர்த்துக் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பழகியுள்ளது.

புத்திசாலித்தனம் ஒரு சேவையாக..

நான் கல்லூரியில் படித்த காலத்தில் கணினித் திரையில் ஆரஞ்சு அல்லது பச்சை கலர் எழுத்துக்கள் மட்டும் தெரியும். பேராசிரியர்கள் உபயோகிக்கும் திரை ஒரு மாதிரி திருச்சி மைகேல் ஐஸ்கிரிம் வண்ணத்தில் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். கலர் கம்யூட்டர் ஆர்.இ.சி போன்ற கல்லூரிகளில் பார்த்திருக்கிறேன். கல்லூரியில் செயற்கை அறிவாற்றல் ( Artificial Intelligence ) மீது ஒரு எனக்கு ஒரு மோகம் இருந்தது.

ஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு

குழந்தைகளுக்கு எதை வேண்டுமானாலும் புரிய வைத்து விடலாம். ஆனால், கணினிகள் அவ்வாறு எளிதில் நம் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளாது. எந்த விஷயத்தையும் குழந்தைக்குக் கூட புரிகிற மாதிரி விளக்க வேண்டியது திறன்மிக்க, பண்பட்ட மனிதர்களின் மாண்பு. நெருப்பென்றால் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கலாம். தொலைக்காட்சித் திரையில் தீ தகதகவென்று எர்ந்தால் தொட்டுப் பார்த்தாலும் ஒன்றும் ஆகாது என்பதையும் புரிய வைக்கலாம். இந்த வித்தியாசத்தை, கணினிக்கு தானாகவே விளங்கிக் கொள்ளுமாறு எப்படி புரிய வைப்பது? எந்தக் காரணத்தால் கையைச் சுட்டுக் கொள்வது மனிதருக்குத் தீங்கு விளைவிக்கும் செயலாக உள்ளது என்பதை பல வகையிலும் ஆராய்ந்து, இறுதி முடிவிற்கான அடிப்படை நியாயத்தை விளக்கச் சொல்லலாம்?

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – விளக்கம்/ பயன்கள்

தங்க விஷயத்தை நாம் இங்கு விவாதிக்க மாட்டோம். ஆனால், மற்ற இரண்டு தடைகளுக்கும் வங்கிக் கணக்கு இல்லாமை மிகவும் முக்கிய காரணம். அத்துடன், வங்கிகள் படிவங்களாலேயே (forms) இந்தியர்களை பயமுறுத்தி வந்துள்ளனர். 2014 –ல் தனியார் வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்த அனுபவம் அலாதியானது. நான் இந்தியப் பிரஜையல்லாதது இந்த விஷயத்தை மேலும் சிக்கலாக்கியது. என் வாழ்வில் ஒரே நேரத்தில் ஏறக்குறைய 100 கையெழுத்துக்கள் போட்டது இந்த விஷயத்தில் தான்!

வாணவெடி

Drones எனப்படும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் தூரயியங்கி குறித்த கட்டுரைகளைப் படித்திருப்பீர்கள். விமானியில்லாத விமானத்திற்கு ஆயிரம் பயன்கள் ஏற்கனவே இருக்கின்றன; இப்போது மற்றுமொரு பயனாக, பொழுதுபோக்கு இசைக்கேற்ப நடனம் ஆட வைத்திருக்கின்றனர். லாஸ் வேகாஸ் நகரத்தில் இருக்கும் பெலாஜியோ விடுதியுடன் இணைந்து இண்டெல் நிறுவனம் இதை செயலாக்கி இருக்கிறது. காவேரி “வாணவெடி”

சிகப்பு ரோஜாக்கள் – ஒரு வளர்ப்புக் காதல் பயணியின் பயணக் குறிப்புகள்

கொய்மலர் ஏற்றுமதி வணிகத்தில் பன்னாட்டு அன்னையர் தினம், மகளிர் தினம், கிறிஸ்துமஸ் தினம், வருடப் பிறப்புகள், மலர்கள் பயன்படுத்தும் நாடுகளின் சுதந்திர தினங்கள் மற்றும் அந்தந்த நாடுகளின் மலர்களின் உபயோகம் அதிகமிருக்கும் விசேஷ தினங்கள் (உதாரணத்திற்கு ரஷ்யாவில் பள்ளிகளில் கல்வியாண்டு துவங்கும் மாதம் செப்டம்பர்; செப்டம்பரில் முதன்முதலாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அவர்களின் ஆசிரியர்களுக்கு மலர் கொடுப்பது அங்கு வழக்கம்) எல்லாமே முக்கியமானவை என்றாலும் கொய்மலர் வர்த்தகத்தின் மிக முக்கியமான பருவம் என்றால் பிப்ரவரியில் வரும் காதலர் தினம்தான்.

சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊன்

சொக்குப் பொடி போட்டு கணித்திரை சிறைக்குள் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றன; ஒரேவிதமான தகவல்களைக் கொடுத்து பொய்களைக்கூட நிஜமென்று நம்ப வைக்கின்றன; நம்மிடையே பிரிவினையை உருவாக்கி, பிழையான சங்கதிகளின் மூலம் வெறுப்பை உருவாக்குகின்றன; வெறும் இதழியல் செய்தித்தாள் அமைப்பை மட்டும், கபளீகரம் செய்தது என்றில்லாமல், தனிமனிதரின் அந்தரங்கம், சுதந்திரம், குடும்பத்தின் நான்கு சுவருக்குள் நடக்கும் பிக்கல்/பிடுங்கல் போன்றவற்றையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன; அரசியலில் மூக்கை நுழைத்து சுதந்திர தேசங்களின் அதிபர் தேர்தல்களில் தகிடுதத்தம் நடக்க வைக்கின்றன; எந்நேரமும் கைபேசிகளின் கறுப்புத் திரையினைப் பார்க்க வைத்து வேறெதிலும் கவனம் செலுத்தவிடாமல் திறன்பேசிகளின் தாசானுதாசர் ஆக்கி வைக்கின்றன…

மதிநுட்ப எந்திரம் – வரமா? சாபமா?

மனிதரை விடத் துடிப்பான எந்திரங்கள் தம்மை விடத் துடிப்பான எந்திரங்களை உருவாக்கி அவை மேலும் துடிப்பான எந்திரங்களை உருவாக்கி இவ்வாறாக  படிப்படியாக எந்திரங்களின்  துடிப்பு அம்சம் உயர்ந்துகொண்டே போவது நுண்ணறிவுப் பெரு வெடிப்புக்கோ(intelligence explosion)   அல்லது ஒருமைத் தன்மைக்கோ (singularity) இட்டுச் செல்லும் என்று சிலர் கலக்கம் அடைகிறார்கள். நுண்ணறிவு எந்திரங்கள் வெகு விரைவில் மேன்மேலும் சூட்டிகையாக ஆகி  அவற்றின் மொத்த அறிவுத் தொகுப்பு மனிதர்களால் புரிந்து கொள்ள முடிகிற சக்திக்கு மீறியதாகிவிடும்  என்று அஞ்சுகிறார்கள்.  மேம்பட்ட அறிவும் தொழில் நுட்பமும் கொண்ட எந்திரங்களின் ஆதிக்கத்தில் மனித இனம் அற்ப ஜீவிகளாகி ஒடுங்கி நிற்கும் நிலை வரக் கூடும் என்கிறார்கள்.

தானோட்டிக் கார்கள் – போக்குகள் மற்றும் எதிர்காலம்

இந்தத் தொழில்நுட்பம் எப்படி நம் சமூகங்களைப் பாதிக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஆயினும், இன்று நமக்குத் தெரிந்த போக்குகள், சவால்களை வைத்துச், சில யூகங்களை முன் வைக்க முடியும். இதில் எத்தனை யூகங்கள் உண்மையாகும் என்று சொல்வது கடினம். நம்முடைய இந்தப் போக்கு பற்றிய யூகங்களைச் சில ஐந்து ஆண்டுகள் வாரியாகப் பிரித்துப் பார்த்தால், சற்று தெளிவு பிறக்கலாம். இதில் சொல்லியுள்ள யூகங்கள் ஒரு ஐந்து ஆண்டு இடைவெளியிலிருந்து அடுத்த ஐந்தோ அல்லது பத்தாண்டு இடைவெளிக்கோ நடைமுறை பிரச்னைகளைச் சார்ந்து மாறலாம்.

தானோட்டிக் கார்கள் – காப்பீடு மற்றும் காப்புப்பிணை

சென்ற பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி அலசினோம். அதைவிட மிக முக்கியமான விஷயம் வாகனக் காப்பீடு. தானோட்டிக் கார்களில் காப்பீடு ஒரு மிகப் பெரிய பிரச்னை. சொல்லப்போனால், தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வாகனக் காப்பீடு சமாச்சாரம். வாகனக் காப்பீடு வாகனத்தில் இல்லையேல், உங்களுக்குக் கார் ஓட்டும் உரிமம் இருந்தாலும், நீங்கள் கார் ஓட்டுவது சட்டப் புறம்பான விஷயம். இதற்குச் சட்டப்படி அபராதம் உண்டு. சரி, ஏன் வாகனக் காப்பீட்டிற்கு இவ்வளவு முக்கியத்துவம்?

தானோட்டிக் கார்கள் – சட்டங்களும் ஒழுங்குமுறைகளும்

ஒழுங்குமுறையிலிருந்து எதுவும் ஒரு சட்டமாக மாறுவது என்பது மிகவும் சிக்கலான ஒரு வாகன நிகழ்வு. உயிர் சம்பந்தப்பட்டிருப்பதால், தீர முழுவதும் விசாரித்து முடிவுக்கு வரும் வரை, பல மாநில, தேசிய சட்ட அமைப்புகளில் ஆமை வேகத்தில் நகர்ந்து சட்டமாக மலர்வதற்குள் பல்லாண்டுகள் ஆகி விடுகின்றன. இதே அமைப்புகள் மிக வேகமாக வளர்ந்து வரும் தானோட்டிக் கார்களை எப்படிச் சீரமைக்கப் போகின்றன? தானோட்டிக் கார்களுக்குச் சாலையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லையா? எப்படி கூகிள், டெஸ்லா மற்றும் பல தயாரிப்பாளர்கள் தங்களுடைய கார்களைப் பொதுச் சாலைகளில் சோதனை செய்கிறார்கள்?

லாப்டாப் கொண்டு உங்கள் கார்களைத் தானோட்டிக் கார்களாக்கலாமா?

படிக்கும் பலருக்குச் சற்றுக் கசப்பாக இருக்கக்கூடும். அதிகக் கம்பித் தொலைப்பேசிகள் சார்ந்த கட்டமைப்பு பெரிதாக இல்லாமல், செல்பேசி தொடர்பியலில் மேற்கத்திய நாடுகளை விட முன்னேறிய இந்தியா ஏன் இந்தத் தொழில்நுட்பத்திலும் முன்னேற முடியாது? விஷயம் தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல; போக்குவரத்து ஒழுங்கு சார்ந்தது. அத்துடன், பல தரப்பட்ட போக்குவரத்து அமைப்புகள் (ஆட்டோ, பைக், ஸ்கூட்டர், மாட்டுவண்டி, ரிக்‌ஷா) ஒரே சாலையைப் பயன்படுத்தும் இந்தியாவில், கணினிகள் குழப்பமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. பல ஆண்டுகள் மேற்குலகில் சோதனைக்குப் பின்னரே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சோதிக்க முடியும். அப்படியே இந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், இந்தியாவில், இந்த ஒழுங்கு ஓரளவு உள்ள நெடுஞ்சாலைகளில் மட்டுமே பயன்படும்.

மறுபடியும் ஜென்கின்ஸ்- அதாவது ‘ஒருங்கிணைந்த கட்டமைப்பு’

அப்போதெல்லாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றங்களை அமல்படுத்துவார்கள். இரவும் பகலுமாக நான்கு நாட்கள் கூடிப் பேசுவார்கள்.  ஒரே குழு, பத்து நாட்கள் உட்கார்ந்து நிரல் (coding) எழுதுவார்கள். எழுதியதைச் சரிபார்க்க இன்னொரு பத்து நாட்கள் ஆகிவிடும். போட்டி நிறைந்த இவ்வுலகில் பத்து நாட்கள் என்பது அதிகக் காலம். அதற்குள் வாடிக்கையாளர்களின் தேவையே மாறிப்போய்விடும். காலையில் முடிவெடுத்தால், மறுநாள் காலையில் மாற்றங்களை அமல்படுத்த வேண்டியிருக்கும். போதுமான நேர அவகாசமில்லை என்பதற்காகச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல், அவசர அவசரமாகப் பணியை நிறைவேற்ற முடியாது. குறுகிய காலம் என்பதற்காக நடைமுறைகளை நமக்கேற்றபடி திருத்தியெழுதினால், தரம் குறைந்துவிடும்.

ஒரு படத்தைப் பார்த்து அது என்னவென்று எப்படி கணினி கண்டுபிடிக்கிறது?

இது சற்று நம்புவதற்குக் கடினமான விஷயம். ஆனால், சில வாகனங்களை மட்டுமே ஒரு பயிற்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டு புதிய வாகனப் படங்களை உட்கொண்டவுடன் செயற்கை நரம்பணு வலையமைப்பு வாகனம் என்று அடையாளம் காட்டக் கற்றால், மிகவும் எளிதாகிவிடும் அல்லவா? இதைத்தான் சில உயர்கணிமை மூலம் ஜெஃப் ஹிண்டன் மற்றும் யான் லகூன் என்ற இரு விஞ்ஞானிகளும் முன் வைத்தனர். புதிய வாகனங்களைக் கண்டவுடன், தன்னுடைய வலையமைப்பு சார்புத் தன்மையை (bias) மாற்றிக் கொண்டே இருக்கும். இதனால், புதிய விஷயங்களையும் இவ்வகை வலையமைப்புகள் வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய உலகில் கற்கின்றன. இதனாலேயே இந்தத் துறை எந்திரக் கற்றலியல் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் பற்றி வாசகர்கள் தீவிரம் காட்டினால், விவரமாகத் தமிழில் எழுத முடியும். இந்தத் தொடருக்கு இந்த அளவு போதும் என்பது என்னுடைய கணிப்பு.

எங்கேயும் எப்போதும் எல்லாமே தானாகவே இயங்கும் – ஜென்கின்ஸ்

உங்களது நிரல், எதில் வேண்டுமானாலும் எழுதப்பட்டதாக இருக்கட்டும். எங்கே, யாரிடம் வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை இயக்கி, முடிவுகளை சரியானவர்களிட்ம் சேர்ப்பிக்கும் அஞ்சலக பணியாளர் பணியைத்தான் ஜென்கின்ஸ் செய்கிறது. இதென்ன கட்டண சேவையா? இல்லை. உரிமம் வாங்கவேண்டுமா? தேவையே இல்லை. முழுவதும் இலவசம். கட்டற்ற சுதந்திரம்! எத்தகைய அடியையும் தாங்கிக்கொண்டு அசராமல், அசுரகதியில் உழைத்துக்கொண்டே இருக்கும் அடிமாடுதான் ஜென்கின்ஸ்.

’தானோட்டிக் கார் ஐபேடுக்குச் சக்கரம் வைத்தது போன்றது’

மேற்குலகில், சாலையில் ஒரு விபத்து நடந்தால், சம்பந்தப்பட்ட இரு வாகனங்களும் (இரு வாகன விபத்து என்று கொள்வோம்) அங்கேயே நிறுத்திவிட்டு, போலீசாரை வரவழைக்க வேண்டும். விசாரணை நடத்திய போலீஸ் அலுவலர், தன்னுடைய அறிக்கையின் நகலை இரு வாகன உரிமையாளருக்கும் கொடுத்து விடுவார். யார் மீது தவறு என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும், வாகனச் சேதத்தை, தவறுக்கேற்றாற் போல, சம்பந்தப்பட்ட ஒரு வாகன உரிமையாளரின் காப்பீடு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். இதற்கு முக்கியமான ஆதாரம், போலீசாரின் அறிக்கை. இந்த அறிக்கையைக் கூர்ந்து கவனித்தால், கவனி – சீரமை – முடிவெடு – செயலாற்று என்னவென்று எளிதில் புரிந்துவிடும்.

தானோட்டிக் கார்கள் – தொழில்நுட்ப அறிமுகம்

பெரும்பாலும் அறிவு என்றால் என்னவென்று சொல்வது கடினம். மேலும், சில சமயம், நாம் ‘மூளை இருக்கா?” என்றும் சொல்வதுண்டு, அறிவுக்கும் மூளைக்கும் சம்பந்தம் உண்டு என்று நாமறிவோம். ஆனால், இந்தச் சம்பந்தத்தைத் தெளிவாகச் சொல்ல பெரும்பாலும் தடுமாறுவோம். மனித மூளை மிகவும் சிக்கலானது – மனித அறிவு என்பதும் அதைவிடச் சிக்கலானது. மனித மூளை, பல்வேறு விஷயங்களைச் செய்யும் ஒரு முக்கிய உறுப்பு. ஆனால், மனித மூளையைப் பற்றிய உடலியலுக்கு இங்கு இடமில்லை. இந்தப் பகுதியில், மனித அறிவின் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம். இந்தப் புரிதலே தானோட்டிக் கார்களின் மென்பொருளைப் புரிந்து கொள்ள உதவும்.

மின்னணு வன்முறை

ஆகவே உங்கள் பிள்ளைகள் எந்த பள்ளியில்படிக்கவேண்டும் ,அவர்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து முடிவு செய்யும் நீங்கள் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் சற்றே கவனியுங்கள்.

இவ்வகை விளையாட்டுகளின் தொழில்நுட்பத்தில் கவரப்பட்டு மின்னணு விளையாட்டுகளின் மீதான ஒரு தீரா மோகத்தையும் விளையாடியே ஆகவேண்டும் என்ற பிடிவாத குணத்தையும் ஏற்படுத்தும். இவைகளில் இருந்து அவர்களை மீட்பது கடினம் எனினும் புதிர்விளையாட்டுகள் ,ஓட்டம் மற்றும் சாகச விளையாட்டுகள் , கிரிக்கெட் , கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் மூலம் தற்காலிகமாக அவர்களை திசை திருப்பலாம். இவையும் ஒரு அளவுடன் இருந்தால் நலம் ,ஏனெனில் மின்னணு விளையாட்டுகள் அனைத்துமே மூளையை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டவையே.

ஹைப்பர்லூப்: வேகம் தடை இல்லை

எங்கள் ரயில் டெல்லிக்கு 28 மணிநேரம் தாமதமாகச் சென்றது. அந்த 3 நாள் பயணம் ஒருவழியாக முடிந்தபோது எனக்கெல்லாம் வாழ்க்கையே வெறுத்துப் போனது. ஊருக்கு போயி மூணு நாள்ல கடிதம் வரும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா ஊருக்கு போகவே மூணு நாளா ? என்ன கொடுமை இது! பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல விரைவு ரயில்களில் பயணம் செய்திருக்கிறேன். நம்மூர் கொங்கன் ரயில் பாதையில் 100 கி.மீ வேகம் செல்லும் ரயிலில் பயணித்தேன். ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரிலிருந்து நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டெர்டாம் சென்ற ரயில் 220 கி.மீ வேகத்தில் சென்றது பிரமிப்பாக இருந்தது. பின்னர் பிரான்ஸ், பெல்ஜியம், ஜப்பான் என்று பல நாடுகளில் பயணங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் ஷாங்காய் நகரின் விமான நிலையத்துக்கு செல்ல அங்குள்ள மக்லேவ் ரயிலில் ஏறினேன். 42 கி.மீ தொலைவு கொண்ட அந்தப் பயணம் வெறும் 6 நிமிடங்களில் முடிந்தது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியையும், அந்த நாட்டின் மீது பொறாமையையும் ஏற்படுத்தியது.

மகரந்தம்

விமானியில்லாத விமானங்களை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது இந்த எண்ணம் உதித்து இருக்கிறது: அவற்றை உண்ண ஏற்றவையாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் பேரழிவு தாக்குகிறதோ, எங்கு பசி வாட்டுகிறதோ, எப்பொழுது போர் மூள்கிறதோ, அப்போது இந்த விமானியில்லா விமானம் விண்ணில் செலுத்தப்படும். பஞ்சப் பகுதிகளில் தானாகவே இறங்கும். உடனை அதற்குள் இருப்பதையும் அந்த விமானத்தையும் பிய்த்து பங்கு போட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். இறைச்சியும் தேனடைகளும் உலர் காய்கறிகளும் கொண்டு இந்த விமானம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. களப் பணியாளர்கள் இந்த டிரோன் வெறும் கண்துடைப்பு என்று…

வாக்கு தவறாமை

“நீங்க குடுத்த காசுக்கு தென்ன மரச்சின்னத்துல ஒரு குத்து” என்று வாக்குச்சீட்டுகளில் சின்னத்தின் மேல் முத்திரையிட்டு பெட்டியில் போடும் தேர்தல் முறையை நாம் கடந்துதான் வந்திருக்கிறோம். மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தபின்பும் தோற்ற கட்சிகள் ஒரு தேய்ந்த ரெக்கார்டை ஓட்டுகின்றன. “எந்த பட்டன் அமுக்கினாலும் ஒரே கட்சிக்கு ஓட்டு விழும்படிச் செய்துவிட்டார்கள்” இந்தக் கூற்று எந்த அளவு சாத்தியம், அந்த வாக்குப்பதிவு இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது. கொஞ்சம் பார்க்கலாம்.

தானோட்டிக் கார்கள் – தொழில்நுட்ப அறிமுகம்

தானோட்டிக் கார்களில் கைகளும், கால்களும் இல்லை. இதனால், ஸ்டீய்ரிங் சக்கரம், பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டர் தேவையே இல்லை. தானோட்டிக் கார்களில் உள்ள கணினிகள் நேரடியாக வேகக் கட்டுப்பாடு, மற்றும் நிறுத்துதல் விஷயங்களைச் செய்துவிடும். சிக்கல் எல்லாம் கண்கள் விஷயத்தில்தான். விவரமாக அடுத்த பகுதியில் பார்க்க போகிறோம் என்றாலும் ஒன்றை இங்குச் சொல்லியாக வேண்டும். சாதாரணக் காய்ந்த சாலையில் தானோட்டிக் கார் செல்வதற்கும், மழை மற்றும் பனிப்பொழிவு சாலையில் செல்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளன. இயக்க பெளதிகம் முற்றிலும் வேறுபட்டது. மழை கொட்டும் சாலையில் பயண வேகம் மற்றும் நிறுத்துவதற்கான தூரம் எல்லாம் வேறுபடும். நாம் இதைச் சொல்லிக் கொடுக்காமலே கார் ஓட்டும்பொழுது கடைபிடிக்கிறோம்.

பார்வையற்றவர்களுககு கிட்டுமோ பார்வை

ஆப்டோஜெனெடிக்ஸ் என்பது மரபணு சிகிச்சையை சேர்ந்தது. முதலில் ஒளியை உணரச்செய்யும் புரதங்களை உற்பத்திசெய்யும் கடற் பாசியிலிருந்து பிரித்தெடுத்த மரபணுக்கள் நுண்ணிய கிருமிகளில் அடைக்கப்பட்டு கண்ணினுள் ஊசியின் மூலம் செலுத்தப்படுகிறது. இந்த மரபணுக்கள் கங்கிளியான் உயிரணுக்களையே ஒளி வாங்கிகளாக மாற்றி அமைக்கின்றது. பிறகு இந்த நோயாளிகள ஒரு நவீன கண்ணாடியை அணிகிறார்கள். இக்கண்ணாடி முதலில் உருவத்தை புகைப்படம் எடுத்து பின் அவ்வுருவத்தை மிகப்பிரகாசமானதாகவும் சிவப்பு நிறமுள்ளதாகவும் மாற்றி உயிரணுக்களால் அடையப்பட்டு அதை சுலபமாக உணரவும் வழி செயகிறது. இம்முறையை கண்ணிழந்த குரங்குகளிடமும் எலிகளிடமும் செயல் படுத்தி வெற்றியடைந்துள்ளதாக ஜென்சைட் முதல்வர் அறிவித்துள்ளார்.

தானோட்டிக் கார்கள் – சமூகத் தேவை மற்றும் மனித ஓட்டுதல் பிரச்னைகள்

எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்திற்கும் ஒரு தேவை இருந்தாலே அது வெற்றி பெறுகிறது. தொலைதூரப் பயணம் என்பது மனிதர்களுக்குக் கால்நடையாகச் செல்வது அதிக நேரம் மற்றும் உடல் சோர்வு உண்டாக்குவதால், விலங்குகளில் ஆரம்பித்து (குதிரை, யானை), சைக்கிள் என்று முன்னேறி, கார் வரை தேவையானது. கடல் தாண்டிச் செல்ல கப்பல் மற்றும் விமானம் தேவையானது. தானோட்டிக் கார்களுக்கு என்ன தேவை? … நாம் பெட்ரோல் விலை அதிகமானால் சீறுகிறோம். அரபு சர்வாதிகாரிகளைத் திட்டுகிறோம். கார் செலுத்துவதன் பிரச்னைகளில், பெட்ரோல் ஒரு சின்னப் பங்கே வகிக்கிறது. மேலே உள்ள படம், ஒரு மைல் பயணத்திற்குச் சமூகம் தரும் விலையைப் பட்டியலிடுகிறது. நம்முடைய பாக்கெட்டிலிருந்து பெட்ரோல், கார் பராமரிப்பு மற்றும் காப்பீடு – இந்த மூன்றே செலவுகள் தான் என்று நினைக்கிறோம். சமூகத்திற்கு, இன்னும் பல செலவுகள் உள்ளன.

தானோட்டிக் கார்கள் – தானியக்க வரலாறு

திடீரென்று தானோட்டிக் கார்கள் ஒன்றும் முளைத்து விடவில்லை. பல திரைப்படங்கள் மற்றும் விஞ்ஞானக் கதைகள் இவற்றைப் பற்றிக் கடந்த 60 ஆண்டுகளாகக் கற்பனை செய்து வந்துள்ளன. ஹாலிவுட் திரைப்படமான ஸ்பீல்பர்கின் Back to the Future, Minority Report (2002) திரைப்படங்களில், கார் தானே செலுத்திக் கொள்ளும். அதே போல, Total Recall (1990), Demolition Man, I Robot (2004), The Car (1967) போன்ற ஹாலிவுட் திரைப்படங்களும் தானோட்டிக் கார்களை நல்லனவாகவும், கொடுமை எந்திரங்களாகவும் கற்பனை செய்து பொது மக்களின் சிந்தனையைச் செதுக்கியுள்ளன. இந்தக் கட்டுரை சினிமாவைப் பற்றியது அல்ல – எப்படி, படிப்படியாக கார்களில் தானியக்கம் தோன்றியது என்பதைப் புரிந்து கொள்வதைப் பற்றியது

மனிதர் ஓட்டாத கார்களில் பயணிக்க நாம் தயாரா?

கார் தயாரிப்பாளர்களுக்கு உதிரி பாகங்கள் செய்யும் நிறுவனங்களான Delphi மற்றும் Continental போன்ற நிறுவனங்கள், எப்படி உணர்விகளைக் கார்களுக்கான கரடு முரடுப் பயன்பாட்டிற்காகத் தயாரிப்பது என்பதில் பல மில்லியன் டாலர்களை செலவு செய்கின்றன. … காப்பீடு நிறுவனங்கள், தானோட்டிக் கார் வந்தால் தங்களுடைய தொழில் என்னவாகும் என்று கவலையில், பல புதிய அணுகுமுறைகளையும் முன் வைத்து வருகிறார்கள். அரசாங்கங்கள் பொதுவாக, வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று செயல்படும் அமைப்புகள். ஆனால், பல அமெரிக்க மாநிலங்கள், இவ்வகைக் கார் தயாரிப்பு தன்னுடைய மாநிலத்தில் நிகழ வேண்டும் என்பதால், அவசரமாக, தானோட்டிக் கார்களைப் பொது சாலைகளில் சோதிக்க முந்துகின்றன. இந்தப் புரட்சியில் பெரும் தாக்கத்தைச் சந்திக்கப் போகும் மூன்று வகை அரசாங்க அமைப்புகள் 2016 –ல் வெறும் பேச்சளவில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.

தானோட்டிக் கார்கள் – ஒரு பருந்துப் பார்வை

வெறும் 2,500 பேர் வசிக்கும் சின்ன ஊரில் 3 கார் டீலர்ஷிப்கள்! இதுவே அமெரிக்க வாழ்க்கை முறை. கார் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்தது. வட அமெரிக்காவை GM Country என்று சொல்வதுண்டு. கார் இல்லாமல் இங்குக் காலம் தள்ளுவது வெகு சில நகரங்களில் மட்டுமே சாத்தியம். கார்களின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனைத்திலும் வட அமெரிக்கப் பங்கு மிகவும் முக்கியமானது.

குளக்கரை

நமது வண்டியை அளவிட்ட வேகத்தைவிட அதிகமாக ஓட்டி மாட்டிக்கொண்டு ஃபைன் கட்டுகிறோம்; வருடாந்திர வரியைத் தாமதமாகக் கட்டுவதால் கூடுதலாகக் கட்டுகிறோம்; தவறுதலாக மகனின் ரயில் கார்டைக்கொண்டு பயணம் செய்து மாட்டிக்கொள்கிறோம்; இணையம் வழியாக நிறைய தடைசெய்யப்பட்ட/புரட்சியாளர்களின் புத்தகங்களை வாங்குகிறோம் – இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை பெற்றாலும், இந்த பலதரப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து உங்களது ‘குற்றப்பட்டியல்’ தயார் செய்யப்பட்டு அதன் மூலம் சமூகத்தில் நீங்கள் எந்தளவு கெட்டவர் எனக் கணக்கிட முடியுமானால் அது எத்தனை …

போர்க்கள நடிப்பு

பத்திரிகையாளருக்கு அழகு என்பது நேரடியாகக் களத்தில் இறங்கி, சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து உரையாடி, இரு பக்கமும் சென்று, தன் சொந்தக் கண்ணால் கண்டதை தத்ரூபமாக விவரிப்பது. ஆனால், வருங்காலத்தில் அதற்கு தேவை இராது. உங்கள் கண்ணில் ஒரு கருவியை அணிந்துகொண்டால், எங்கே போக வேண்டுமோ, அங்கே போகலாம். எவருடன் பேச “போர்க்கள நடிப்பு”

மகரந்தம்

புகைப்படங்களில் வேண்டிய பலவிதமான மாற்றங்களை செய்ய மென்பொருட்களுக்குக் குறைவில்லை. அதேபோல காணொளிகளில் எடிட்டிங் செய்து மாற்றங்களை உருவாக்க முடியும். கைப்பேசியில் கூட இந்த மாற்றங்களைச் செய்ய முடிவதால் பொழுதுபோக்குக்காக பலரும் படங்களை எடிட் செய்து வலைத்தளங்களில் பகிர்வதை பார்த்து வருகிறோம். ஆனால், ஒலித் துண்டுகளை எடிட் செய்து கொலாஜ் போல ஒன்று உருவாக்குவது சவாலாகவே இருந்துவந்தது. இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு சில ஒலித்துண்டுகளை மாற்றம் செய்யலாம் ஆனால் மொழிக்கும் ஒலிக்கும் இருக்கும் தொடர்பை எடிட் செய்யமுடியாது. அடோபி எனும் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் பிராஜெக்ட் வோக்கோ எனும் மென்பொருள் வழியில் ஒலிக்கும் மொழிக்கும் …

கல்லூரிகளில் வேலை வாய்ப்பு எனும் மாயக் கோமாளித்தனம்

Internship எனும் யுக்தியை இதனினும் கேடுகெட்ட ஒரு ஏமாற்று வேலையாகவேக் கருதுகிறேன். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அவர்கள் சேரும் பெரும்பாலான தொழிற்கூடங்களில் பயிற்சியளிப்பதற்கான கட்டமைப்பு இல்லாததனால் எந்த ஒரு தொழில் சார்ந்த அறிவுருத்தலும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. மாறாக, அவர்களின் அன்றாட பணிகளில் ஏதேனும் ஒரு சிறு முக்கியமற்ற பகுதியை மாணவர்களிடம் கொடுத்துவிட்டு தத்தமது காரியங்களில் இயங்குவதே மாணவர்களின் மூலம் அறியப்படுகிறது. இதனினும் கொடுமை, இதிலும் பணம் பறிக்கப் படுகிறது. பல நிறுவனங்கள் ஆங்காங்கே (பல நகரங்களிலும், நகரின் பல பகுதிகளிலும்) குளிர்சாதன வசதியோடும், ஆடம்பரமான உட்புற வடிவமைப்போடும், சில-பல கணினிகளோடும், மிகவும் சாமார்த்தியமாக கவர்த்திழுக்கக்கூடிய பேச்சுத் திறம் வாய்ந்த முகவர்களோடும் பயிற்சி மையங்கள் என்னும் பெயரில் செயல்படுகின்றன. இவைகள் தொற்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்குமிடையே இடைத்தரகர்களாகவும், தனிப்பட்ட முறையிலும் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவிக்க செயல்படுகின்றன.

எனக்கும் ஒரு கனவிருந்தது- வெர்கீஸ் குரியனின் சுயவரலாற்றுப் புத்தகம் பற்றி

நம்மாட்கள் என்றில்லை, வெளிநாட்டவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் வாங்குவாங்கென்று வாங்கித்தான் அனுப்புகிறார். இந்தியா பால்தூள் ஏற்றுமதியை ஆரம்பித்ததும் நியூஸிலாந்து உயராணையர் இவரது அறைக்கு வந்து ‘எங்கள் மார்க்கெட்டில் கை வைக்கும் வேலை வேண்டாம்’ என்று எச்சரிக்க, குரியன் கடுப்பாகி ஆனால் பெண் என்பதால் சற்று மென்மையாக ‘இவ்வுலக மார்க்கெட் உங்கள் தனிப்பட்டசொத்து என்பதை நானறியவில்லை. நன்றி போய்வாருங்கள்’ என்று கதவைக்காட்டியிருக்கிறார். அவரோ மீண்டும்மீண்டும் அதையே பேசி மேலும் எரிச்சலூட்ட, குரியன் ‘இந்தியர்கள் ஒன்றுசேர்ந்து காறியுமிழ்ந்தால் நியூஸிலாந்து மூழ்கிவிடும் ஜாக்கிரதை’ என்று பொரிந்துள்ளார்.

பசுங்குடில் பயன்பாடும், கொய்மலர் வளர்ப்பும், வர்த்தகமும் – ஓர் அறிமுகம்

எண்பதுகளில் கொய்மலர் வர்த்தகத்தின் தலைநாடான ஹாலந்திலிருந்து நிபுணர் குழு ஒன்று வந்து இந்தியாவெங்கும் சுற்றி ஆய்வு செய்து பசுங்குடிலில் கொய்மலர் வளர்ப்பதற்கான சாதகமான தட்பவெப்ப சூழல் எங்கு நிலவுகிறது என்று அறிக்கை ஒன்றை அரசுக்கு தாக்கல் செய்தது (ஆய்வில் விமான போக்குவரத்து வசதிகளும் கணக்கில் கொள்ளப்பட்டன). அதில் குறிப்பிடப்பட்ட இரு இடங்கள் – 1. பெங்களூர் சுற்றுப்புறம் (ஓசூர் வரை) 2. புனே சுற்றியுள்ள இடங்கள் (தலேகான் வரை).

கருவிகளின் இணையம் – பாதுகாப்புப் பிரச்னைகள் – பகுதி 19

ஆரம்ப மடிக் கணினி நாட்களில், இவை அலுவலக மற்றும் இணையத்துடன் தொடர்பில்லாமல் இருந்தன. இவை இணையத்துடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியவுடன், மடிக்கணினியோ, மேஜைக் கணினியோ, எதுவாக இருந்தாலும், இணைய விஷமிகளால், கடத்தப்படும்/தாக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. வெறும் கடவுச் சொல் சமாச்சாரங்கள் உதவாமல் போகவே, எல்லா தொடர்புகளையும் மறைகுறியாக்க முறைகள் மூலம்பாதுகாக்க வேண்டி வந்தது. அடுத்தபடியாக, செல்பேசி, திறன்பேசி போன்ற கருவிகள், இந்தப் பிரச்னையை மேலும் கடினமாக்கின. எளிதில் திருடக் கூடிய விஷயம் இக்கருவிகள். விஷமிகள் கையில் சிக்கினால், பல, மிகவும் அந்தரங்க விஷயங்கள் விஷமியின் கையில் எளிதில் சிக்க, வாய்ப்புகள் உள்ளன.