அவளுடன் வெகுகாலம் உரையாடிய போதிலும்
இன்னும் சில காலம் உரையாடிக் கொண்டிருந்திருக்க எனக்கு ஆசை,
ஏற்கெனவே தான் பெருக்கி முடித்திருந்த
வீட்டின் முற்றத்தையும், சுற்றுப் புறத்தையும்
இரண்டு மூன்று முறைகளுக்கும் மேலாய் பாட்டி
பெருக்கிக் கொண்டிருந்ததைப் போல.
Author: தி. இரா. மீனா
கே.சட்சிதானந்தன் கவிதைகள்
நாம் சிலதைப் பெறுகிறோம்
நாம் சிலதைக் கொடுக்கிறோம்.
‘சாவு நிதிநிலை அறிக்கை தயாரிக்கிறது’
சொர்க்கம் என்பது ஒரு பொய் , ஆனால்
நரகம் ,ஆமாம், உளதாயிருக்கிறது.
திக்குதல்
திக்குதல் என்பது ஊனமல்ல
அது பேச்சின் ஒரு முறை.
திக்குதல் என்பது,
சொல்லுக்கும் அதன் பொருளுக்குமிடையேயான மௌனம்,
அது வார்த்தைக்கும் செயலுக்குமிடையேயான
தடுமாற்றம் போன்றது.
ஏழாவது மலர்
இளம்பருவத்தில் ஒரு கன்று குட்டியின் மீதேறி சவாரி செய்த கதையைச் சொன்ன போது அவள் சிரிப்பில் குலுங்கினாள். வெளிநாட்டில் வேலை தேடிய போது அடைந்த துயரங்களைச் சொன்ன போது அவள் கண்கள் கலங்கின.தன் பத்திரிக்கை துறை அலுவலகத்திலுள்ள நீண்ட கூந்தலை உடைய இளம்பெண்ணின் மீதான காதலைச் சொன்ன போது கீழுதட்டைக் உதட்டை கடித்துக் கொண்டாள்.லேசாக இரத்தம் வந்தது.
மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு
என் அப்பா அப்படிப்பட்டவரில்லை. பெரிய நகரங்களிலிருந்து வரும் தொழில் வல்லுனர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உண்டியலில் போடும் பணத்தை ஒவ்வொரு காசாக எண்ணி, சரிபார்த்து கோயில்
நிர்வாகிகளிடம் ஒப்படைத்து விடுவார். நிர்வாகிகள் அந்தப் பணத்தில்விளைச்சல் நிலங்களும், பெரிய பங்களாக்களும் வாங்கிச் செல்வந்தர் ஆனார்கள். பணத்தைக் கண்டு எரிச்சலடையும் என் அப்பா வறுமையான பூசாரியாகவே இருந்து விட்டார். தான் இறக்கும் கடைசி நாள்வரைஅவர் பூஜை செய்தார்.
நெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்
அம்மாவும்,பெண்ணும் விடைபெற்றுப் போன பிறகு,அவனால் அங்கு அதிக நேரம் உட்கார முடியவில்லை.வெளித் தோற்றம் அமைதியாக இருப்பவனைப் போலக் காட்டினாலும்,அவன் மன அமைதியை இழந்திருந்தான். ஒரு சமாதானமான பதிலைக் கூட அவனால் அவர்களுக்குச் சொல்ல முடியவில்லையே.
விற்பனை
எம்.டி வாசுதேவன் நாயர் தமிழில்: தி.இரா.மீனா அந்தப் பெரிய நகரத்தின் பூகோளம் அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. .போனில் தரப்பட்டிருந்த விவரங்களைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானதாக இல்லை.சித்தி விநாயகர் கோவிலின் அருகிலிருந்த பஸ் நிலையத்தில் இறங்கிய பிறகு, கடற்கரைக்கு அருகிலுள்ள சாலை அதுதானா என்பதைப் பொருத்தமான சில கேள்விகளால் “விற்பனை”
அவள், அழிவற்றவள்
‘ஒரு கதையை எனக்கு முடிக்கத் தெரியவில்லை என்ற எண்ணம் வந்தால் இதைத்தான் நான் செய்கிறேன். முடிவில்லாத எதுவும், தொடர்ந்து இருக்க அனுமதிக்கக் கூடாது.எது முடிவற்றதோ அது தன்னைத் தானே கொன்று கொள்ளும். அக்கா, வாழ்க்கை முடிவற்ற சோகம்! உலகம் கூட ஒரு சோகம்தான்.சோகம் மட்டும்தான் உண்மை.உண்மையின் முகம் பார்க்கப் பயப்படுபவர்கள் பேனாவைக் கையிலெடுக்கக் கூடாது.
அந்தப் பயணத்தின் போது
அந்தச் சந்திப்பு எதையும் நம்புவதற்கு எனக்கு வழி தந்திருக்கிறது. எதுவும் சாத்தி்யப்படக் கூடியதென்று நம்புகிறேன். யாராவது என்னிடம் வந்து சிறகுகளோடு பழைய டெல்லிகோட்டையின் மேல் நீங்கள் பறந்ததைப் பார்த்தேன் என்று சொன்னால் நான் நம்புவேன். அதற்குப் பெரிய சாத்தியக்கூறு இருக்கிறது. ஒரு வரலாற்றாசிரியன் பழைய சிதைவுகளின் மீது சிறகுகளோடு கண்டிப்பாகப் பறக்க முடியும். அவனால் அதைச் செய்ய முடியும். தனக்கான சிறகுகளை வளர்க்க முடியாதவன் எப்படி ஆராய்ச்சியாளனாக முடியும் ?
அந்த ஜன்னல்
கடந்த வருடம் மார்ச் மாதம், எனது பத்திரிகை பணியை முடித்துக்கொண்டு நான் வேறொரு மாகாணத்திலிருந்து என் வீட்டிற்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். என் எதிரிலிருந்த இரண்டு நடுத்தரவயது விவசாயிகள் எதுபற்றியோ ஆழ்ந்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் ஜியென் பகுதியில் இறங்கப் போவதையும்,அங்கிருந்து நீண்ட தொலைவிலிருக்கும் ஜியானுக்கு “அந்த ஜன்னல்”
அறிகுறிகளும் அடையாளங்களும்
திருமணமாகி பல வருடங்கள் கழிந்த பிறகுதான் அவன் பிறந்தான்; பல ஆண் டுகள் கடந்து விட்டதால் வயதாகி அவர்கள் இப்போது தளர்ந்தும் விட்டனர். அவளுடைய பழுப்பு நரைக் கூந்தல் ஒழுங்கின்றி கட்டப்பட்டிருந்தது. மிகச் சாதாரணமான கருப்பு ஆடை அணிந்திருந்தாள். மற்ற தன் வயதுப் பெண் களைப் போலின்றி (பக்கத்து வீட்டு திருமதி. சோலின் முகம் எப்போதும் பவுடரோடும், தொப்பியில் அழகிய பூங்கொத்துகளோடும் இருக்கும்) அவள் முகத்தோற்றம் எப்போதும் வெளிறிப் போனதாக இருக்கும். ஒரு காலத்தில் தொழிலில் கொடி கட்டிப்பறந்த கணவர் இப்போது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலே தங்கி அமெரிக்கவாசியாகிவிட்ட , தன் சகோதரன் ஐசக்கை சார்ந்திருக்கிறார். அவர்கள் அவனுக்கு “ பிரின்ஸ்” என்று செல்லப் பெயர் வைத்திருக்கின்றனர்.
வசந்தம் : மரங்கள் பறவைகளை நோக்கிப் பறப்பது
பிரமிப்பூட்டும் உருவகங்கள்,வார்த்தைப் பிரயோகங்கள் செலனால் பயன் படுத்தப்பட்டுள்ளன. சான்றாக In rivers என்ற கவிதையில் ’ north of the future” என்ற வார்த்தை மிக வித்தியாசமான உருவகமாக உள்ளது.ஆறும் ,வடக்கும் இடம் சார்ந்த பெயர்ச்சொற்கள்.எதிர்காலம் தற்காலிகமானது. எதிர்காலமென் பது இறந்த நிகழ்காலங்களின் பார்வை என்பதால் இலக்கிய ரீதியில்,கவிதைப் பாணியில் புதிய உருவகங்கள், வடிவங்களைப் பயன்படுத்துவது மிகச்சிறந்த கவிஞனுக்கு கைவருகிறது. கவிதையைப் பொறுத்தவரை புதிய வார்த்தைக ளுக்கான களனாகிறது
ரைனர் மரியா ரில்க : போய்க் கொண்டேயிரு, எந்தவுணர்வும் முடிவல்ல!
பாரீஸ் சென்ற போது அவருக்கு அகஸ்ட் ரோடான் என்ற சிற்பியோடு மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.அவருடைய செயலாளராக இருந்து ரோடானின் சிற்பங்கள் குறித்து கட்டுரைகள் எழுதினார். ரோடானின் மாணவியான கிளாரா வெஸ்ட்ஹாஃபை மணந்தார். ரில்கவின் திறமையை உணர்ந்த ரோடான் கவிதையில் ’புறநிலை நோக்கத்தின் ” அவசியத்தை அவருக்கு விளக்கியதை அடுத்து ரில்கவின் கவிதைநடையும் போக்கும் பெருமளவில் மாறின. அந்தத் தாக்கம் New Poems என்ற புத்தகத்தை எழுதப் பின்புலமானது. பாரீஸில் இருந்தபோது 1905 ல்The Book of Hours,1907ல் New Poems என்ற இரண்டு தொகுப்புகளும் வெளிவந்தன
மராத்தி மொழிக் கவிதைகள்
எப்.எம். ஷின்டே ஓரங்க நாடகம் மொழி பெயர்ப்பு, ,நகைச்சுவைக் கட்டுரைகள்,கவிதைகள் என்ற பன்முகம் கொண்ட படைப்பாளி. மகாராஷ்டிர மாநில விருதை மூன்று முறை பெற்றவர். இது தவிர பரிமள விருது,அஸ்மிதாத தர்ஷ விருது, விகெ பாட்டீல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். இதுவரை 24 கவிதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன. கணேஷ் விஸ்புத் மகாராட்டிர மாநில அரசுத் துறையில் சிவில் இன்ஜினியராகப் பணி புரிந்தவர். கவிஞர் ,மொழி பெயர்ப்பாளர், ஓவியர்.திரைப்படத் துறையிலும் ஈடுபாடு உடையவர்.
சீன மொழிக் கவிதை உலகம் : ஓர் அறிமுகம்
லி பை சீன மொழி இலக்கிய உலகில் சிறந்த கவிஞராக மதிப்பிடப் படுபவர்.ஆயிரக் கணக்கான கவிதைகளை எழுதியவர்.கவிதைகளின் மிக உயர்ந்த கறபனைத் திறத்திற்காக எல்லோராலும் அறியப் பட்டவர். நட்பு,இயற்கையின் செறிவு,தனிமையின் தன்மை என்று பல கருக்களை கவிதைப் பொருளாக்கிக் கொண்டவர். டாங் வம்ச கால கட்டம் சீன இலக்கியத்தின் ’ பொற்காலம் ’என்று மதிப்பிடப் படுகிறது. லி பை அக்கால கட்டத்தைச் சேர்ந்தவர். என்பது குறிப்பிடத் தக்கது
பாஸனின் ஸ்வப்னவாசவத்தம்
பத்மாவதிக்குத் தலைவலி வந்த ஒரு சூழல். உதயணன் – வாசவதத்தை சந்திப்புக்கு இடம் தருவதாகிறது. அது மர்மமான கனவுலகம் பத்மாவதியின் தலைவலி தீவிரம் தெரிந்த பிறகு அவள் வெம்மையைத் தடுத்து படுக்கையைக் குளிர்ச்சியாக்கி வலியின் தீவிரத்தைக் குறைக்க உதயணனும், வாசவதத்தையும் தனித் தனியாக விரைகின்றனர். உதயணன் முதலில் அவ்விடத்தை அடைகிறான். பத்மாவதியின் அறையின் குளிர்ந்த் தன்மை, அறை வசதி, அழகு ஆகியவற்றில் தன்னை மறந்து, செய்ய வந்த்தை விட்டு விட்டு அங்கேயே கட்டிலில் சாய்கிறான். தன்னை மறந்து தூங்கியும் போகிறான். விதூஶகன் வந்து பார்த்து விட்டு குளிர்ச்சியை உணர்ந்து போர்வையை உதயணனுக்குப் போர்த்தி விட்டுப் போகிறான். அந்த நேரத்தில்…
பாஸனின் பஞ்சராத்ரம்
இளம் வயதில் பெற்றோர் குழந்தைகளை குருவிடம் ஒப்படைத்து விட்டால் அவன் செய்யும் தவறுகளுக்கு குருதான் பழிக்கப் படுவார் எனவும் தன் மாணவன் இந்த யாகத்தின் மூலம் தனக்குப் புகழைத் தேடித் தந்து விட்டான் என்றும் குரு துரோணர் சொல்கிறார். தனக்கு அவன் குருதட்சிணை தர வேண்டும் எனகிறார். எதையும் அவருக்குத் தருவதாக உறுதி அளித்து விட்டு விருப்பத்தைச் சொல்லுமாறு வேண்டுகிறான். அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு இருக்க இடமின்றி தவிக்கும் பாண்டவர்களுக்கு உரிய பாதி ராஜ்யத்தை அவர்களுக்குத் தந்து விட வேண்டும் என்பதுதான் தனது தட்சிணை என்கிறார்.
உலகமே ஆத்ம வடிவம்தான்
அப்படியானானால் நீங்கள் பிரித்துத் தரும் இந்தச் செல்வத்தால் என்ன பயன்? இறப்பு ஒருநாள் என்னை விழுங்கும் என்றால் உலகின் நிலையாமை என்னை பயமுறுத்தும் என்றால் எதுவுமே பாதுகாப்பற்றது என்றால்… எதுவும் எவ்வளவு காலம் பயன் தரக் கூடியது என்பதற்கான உறுதியை என்னால் அறிய முடியவில்லை என்றால் …நீங்கள் எனக்குத் தரும் இந்தச் செல்வம் எப்படி நல்லது என்று சொல்ல முடியும் எங்களுக்கு நல்லதைத் தர முடியும் ? மதிப்புடையதாக இருக்க முடியும்? திருப்தியையும், நிரந்தர மகிழ்ச்சியையும் தராத ஒன்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?
பாஸனின் தூதகடோத்கஜம்
கடோத்கஜன் மூலமாக கௌரவர்களுக்கு கிருஶ்ணன் சொல்லி அனுப்பும் செய்தியை கருவாகக் கொண்டதால் நாடகம் தூதகடோத்கஜம் என்னும் பெயருடையதாகிறது. கடோத்கஜன் தூது என்ற நினைவே பாஸனின் கற்பனையில் உதித்ததுதான் மகாபாரத துணைப் பாத்திரம் ஒன்றைத் தன் எண்ணங்களுக்கு ஏற்றபடி வளைத்து நாடகக் கருவிற்கு மூலமாக்கி இருப்பது பாஸனின் நாடக அமைப்புத் திறனுக்கும், படைப்புத் திறனுக்கும் சான்றாகும்
பாஸனின் தூதவாக்யம்
பாண்டவர்களின் தூதனாக கௌரவர்களுக்கு அறிவுரை சொல்லும் தன்மையால் நாடகத்தின் மையக் கரு. .போரைத் தவிர்க்க எந்த நிலைக்கு போகவும் பாண்டவர்கள் தயார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும், கௌரவர்கள்தான் போருக்குக் காரணம் என்பதை அறிவிக்கும் முயற்சியிலும் இந்தத் தூது நிகழ்கிறது. மற்றவர்களுக்கு எதிராளியின் தவறான அணுகு முறையைக் காட்டுவதன் மூலம் நடப்பைப் புரிய வைக்கும் முயற்சியான இது நூறு போர்களை வெல்வதற்கு இணையான அரசியல் சாதுர்யம் கொண்டது. அதுவே இங்கு பாண்டவர்களின் தூதனால் நடைமுறைபடுத்தப் படுகிறது.
பாஸனின் பிரதிமா நாடகம்
தந்தையின் ஆத்ம சாந்திக்கும், திதிக்கும் மிகச் சிறந்தது பொன்மான் தோல் எனச் சந்நியாசி சொன்ன செய்திதான் அவன் மானைத் தொடர்ந்து போகக் காரணமானது என்று நாடக ஆசிரியனின் அணுகுமுறை அமைகிறது.இதுவும் பாத்திரப் படைப்பின் உன்னதம்தான். மானைப் பிடித்துத் தரும்படி சீதை வேண்ட அதை நிறைவேற்றும் வகையில் இராமன் மானைப் பின் தொடர்ந்தான் என்ற சாதாரண வாழ்வுப் பின்னணியில் மனைவி ஆசை, அதை நிறைவேற்ற கணவன் துடிப்பு போன்ற செயல்கள் இங்கில்லை .இராமனின் பாத்திர உயர்வு இப்படித்தான் பாஸனிடமிருந்து வெளிப்படுகிறது.
பாஸனின் மத்யம வ்யாயோகம்
கடோத்: என்ன? நீயும் மத்யமனா?
பீமன்: உம். நான் பாகுபாடு இல்லாதவன். ஏழை,பணக்காரன் என வேறுபடுத்திப் பார்க்காதவன். மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவன். இன்னும் சொல்லப் போனால் சகோதர வரிசையில் நான் நடுவில் இருப்பவன். [வட மொழியில் மத்யமன் என்பதற்கு பாகுபாடற்றவன் என்ற பொருளுமுண்டு.]
பாஸனின் 'கர்ணபாரம்'
கர்ணபாரம் என்ற தலைப்பிற்கு இன்னொரு விளக்கமும் தரப் படுகிறது. நீண்ட காலமாக கவச குண்டல சுமையைத் தாங்கியிருந்த கர்ணன் சரியான நேரத்தில் அதிலிருந்து விடுபட்டதால் ’பாரம்’ என்ற தலைப்பு பொருத்தமாகிறது என்ற கருத்தும் உண்டு.
பாசாவின் உறுபங்கம் – ஒரு பார்வை
வட மொழி இலக்கிய உலகில் நாடகம் என்ற சொல்லைக் கேட்ட அளவில் நினைவில் நிற்கும் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப் பட்டு அறிமுகம் செய்யப் பட்டன.பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளி தாசனுக்கு முற்பட்டவர் என்பதில் இரண்டாவது கருத்து கிடையாது. மாளவிகாகினிமித்திரத்தில் “பாசா ,கவிபுத்ரா போன்ற மிகச் சிறந்தவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா“ என்று காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு இதை உறுதி செய்கிறது. காளிதாசன் தன் படைப்புகளில் பாசாவின் உத்திகளைப் பயன்படுத்தி இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
மராத்திக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு
சிவப்பு பச்சை என
எந்தக் குறியுமில்லை
கண்ணுக்குப் புலப்படாத போது
எப்படித் தொலைய முடியும்
இந்தியக் கவிதைகள் – தெலுங்கு, மராத்தி
அவள், ஆறு
அவன் கடல் :
சொன்னாள்
வாழ்க்கை முழுவதும்
என்னை கரைத்துக் கொண்டிருக்கிறேன்
உன்னை நோக்கிப் பாய்கிறேன்