தில்லையாடி வள்ளியம்மையின் சொந்தக்காரர்

நானும் இங்க இருந்தப்ப சாதி எல்லாம் பாத்த குடும்பத்துக்காரந்தாங்க. அது பாருங்க தில்லயாடிக்குள்ளே அங்காளி பங்காளிக்குள்ளேயே தகராறுதான். ஆனால் நூறு மைல் தாண்டி திருச்சிக்கு போனா நம்ம சாதின்னு யார் கிட்டயாவது போய் ஒட்டிக்கிடுறோம். மெட்ராசுக்கு வந்தா தஞ்சாவூர் திருச்சி ஜில்லாகாரங்க சிநேகிதம் பிடிச்சுக்கிடறோம். டெல்லிக்கு போனா? தமிள் பேசறவன் எல்லாம் சிநேகிதன்

சரண் நாங்களே

உண்மைதான். எப்போதும் நாங்கள் அடிக்கிற மாதிரி அடிப்போம், அவன் அழுகிற மாதிரி அழுவான். எந்த நெறிமீறலுக்கும் இதே சூத்திரம்தான். எப்போதும் எங்கள் வற்புறுத்தலுக்காகத்தான் நெறி தவறுவது போல நடிப்பான். அப்படி ஒரு பிம்பத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்வது சுமைதான். தந்தையரிடம் பிள்ளைகளால் வெளிப்படையாக பேசவே முடிவதில்லை.

பிரதிபிம்பம்

பெரும் செல்வம் படைத்தவன், ஏன் ஒரு பசுவைக் கொடுக்க மறுத்தான்? நீ என்ன நினைக்கிறாய்?’
‘அவன் நாட்டைக் கேட்டது அந்த நிமிஷத்தில் எழுந்த கோபம். தான் என்னதான் தவறு செய்திருந்தாலும், அதற்காக நான் சினம் கொள்வேன், சபையில் அந்த சினத்தை வெளியே காட்டுவேன் என்று அவனுக்கு தோன்றியே இருக்காது. நாங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது அடித்திருந்தாலும் அது அவனுக்குத் தவறாகத் தெரிந்திருக்காது. அந்தக் கணம் வரைக்கும் அந்த உரிமை கொண்டவன் நான் ஒருவனே, ஏன் இன்றும் அந்த உரிமை கொண்டவன் நானே!’ என்று துருபதர் சொன்னார்.

கல்லும் நாராகுமே

கிருஷ்ணமூர்த்தி பக்கத்திலேயே நின்று என்ன பேசுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து மாலா “உன் மாப்ளே ஒரு வழியா கம்பெனி செலவில எங்களுக்கு ஒரு பெங்களூர் ட்ரிப் அரேஞ்ச் பண்ணிட்டார்ப்பா. நாளைக்குக் கிளம்பி மண்டே திரும்பி வந்துடுவோம்” என்றாள். கிருஷ்ணமூர்த்தி “ஏதாவது ப்ராப்ளமா?” என்று கேட்டார். “ஆமா, அவருக்கு மட்டும்தான் ட்ராவல், ஹோட்டல் எல்லாம் ஏற்பாடு பண்ணுவோம், ஃபேமிலிக்கே பண்ணமாட்டோம்னு சொன்னாளாம். இவர் ஏதோ பேசி எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டாராம்” என்றாள். “அதானே! ரமேஷா கொக்கா? மனுஷன யாரும் பேச்சில ஜெயிச்சுக்க முடியாது. கல்லுல நார் உரிச்சுடுவார்!” என்று வியந்துகொண்டார். மாலா “அது என்னவோ உண்மைதான். பேசிப் பேசியே எல்லாரையும் கரச்சுடுவார்” என்றாள்.