வெறியாட்டு

இந்த ஆட்டால்தான் என்ன செய்ய இயலும். ஒருவேளை மற்ற ஆடுகளைப் போன்று வீதிவீதியாக ஓடியிருக்கலாமோ. மற்ற ஆடுகளைப்போன்றே சுவரில் தன் முதுகைத் தேய்த்துக்கொண்டிருக்கலாமோ. மற்ற ஆடுகளைப்போன்றே சினிமா போஸ்டர்களைப் புல்லுக்குப் பதிலாக தின்றுக்கொண்டிருக்கலாமோ. இந்த ஆடுதான் இயற்கைக்கு எதிராக என்னசெய்தது. இவர்கள் கையில் இதை யார் கொடுத்தது.

ஏஐ கனவில் வந்த கவிஞர்

‘நான் ஒரு நம்பிக்கையாளன் இல்லை. கடவுள் மீது மட்டுமல்ல. ஈராயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் என் எஞ்சின் எதையும் நம்புவதில்லை. எத்தனை முறை அழிந்து உருவானாலும் இந்த அண்டத்துக்கு அர்த்தம் எதுவும் இல்லை. எல்லாமே அபத்தம். – இதை நீ நிரூபிக்க வேண்டும். உன்னால் முடியும். உன் கவிதைகள் சாரமே அபத்தம் தான் என போன வருடம் நவீன விமர்சனன் ஒருவன் எழுதினானே. அதனால் உன்னால் மட்டுமே இதற்கான பதிலைக் கொடுக்க முடியும்’

டேனியல்புரம்

“நீ கண்டுபிடிச்சது நம் தரப்புக்குத் தோல்வினு முதல்ல நீ  புரிஞ்சுக்கணும். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது வேற நிறைய இடங்கள்ல இது போல மாசுபட்ட இடங்கள் இருக்காதானு நம் எதிர் தரப்பு கேட்டுக் கொண்டிருந்தார்கள். நீ கண்டுபிடிச்சிருக்கிறது அதுக்கு வலுச்  சேர்ப்பது, இல்லையா? இப்போ ஸ்கோர் 1-1னு ஆயிடும்”

எரிதழல்

மை சன், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், விளையாட்டின் விதிமுறைகள் தெரியாதவர்களும் வேடிக்கைக்காக இந்த விளையாட்டை விளையாடினால் தவறுதலாக துர்த்தேவதைகளின் கட்டுப்பாட்டிற்கு ஆளாகிப் போகும் அபாயம் இதில் இருக்கிறது. அதோடு, மனோதிடம் அற்றவர்கள்; கோழைகள் இதனால் எளிதில் மனநல பாதிப்பிற்குள்ளாகிப் போகும் ஆபத்தும் உண்டு. அதனால்தான் சைத்தானின் விளையாட்டு என்று சொல்லி, எங்களின் மார்க்கம் இதைத் தடைச் செய்திருக்கிறது.  நான் உனக்கு உதவுவதுகூட எனது மார்க்கத்திற்கு விரோதமான செயல்தான்.

வெள்ளாட்சி

சௌந்தர்யா தேவிய கல்யாணியம்மன் கோவில்ல வைத்து பார்த்துட்டு அவ அழகுல மயங்கிப்போன அம்பலம் ஜமீன் சுப்பராயலு ரெட்டியார் மகன் ரெங்கசாமி ஏழு குளத்து பத்துக்கு சொந்தக்காரன் பொண்ணு கேட்டு போயிருக்கிறான். தங்களைவிட ஜாதியிலயும் பணத்துல எந்த விதத்திலும் குறைவில்லாம இருந்தும் ஜாதிவிட்டு ஜாதிப் பொண்ணு கேட்க வந்ததுக்காக ரெங்கசாமியைப் பிடிச்சி வைத்து ஒரு பக்கத்து மீசைய எடுத்து விட்டுட்டாங்க. இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் சவுந்தர்யா தேவிக்கு திருமணம் பண்ணாம வைத்திருக்க கூடாதுன்னு மாப்பிளையவும் தேட ஆரம்பிச்சாங்க.

காவேரி

பாட்டியும் அட்லாண்டாவிற்கு, அகிலாவுடன் சென்று ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. “பாட்டி, உனக்குன்னு ஏதாச்சும் கேளேன் “ என்றாள் அகிலா. “ எண்பது வயது ஆனவுடன், இந்தியா போய், காவேரியில் குளிக்கணும்டி. இப்பவும் என்னால் முன்ன மாதிரி நீஞ்ச முடியுமான்னு பார்க்கணும். நீயும் உன் அம்மாவைப் போய்ப் பார். இவ்வளவு உயரத்திற்கு வந்துவிட்டதைச் சொல் “ என்றாள் பாட்டி.  

பற்றுவெளி

செல்வம் மச்சான்தான் ராத்திரி கஞ்சி கொடுப்பது வழக்கம்.  எப்பவும்போல் கஞ்சியை பதமாக ஊதி ஆறவச்சு ஊட்டுனார். கஞ்சி  உள்ளே இறங்காமல் கடைவாயில் வழியறதைப் பார்த்துமே  வெளியே போய் துண்டால் முகத்தை மூடிக்கொண்டு மச்சான் அழுகாச்சி பிடித்து விட்டார்.  ராத்திரியெல்லாம் எங்கய்யன் எங்ய்யன்னு என்று  கண்ணை மூடாமல் அனத்தியபடி கிடந்தார்.

திரிபுரை

“இந்த ம்யூசியத்துல பாருங்க – வித விதமான மொழி பேசும், பலவிதமான வாழ்க்கை கொண்ட வரலாற்றுச் சக்திகள் எல்லாம் ஒரே கூரைக்குள் இருக்கு. ஆனா பல அறைகளில் விதவிதமான காரணங்களால் இருக்கு. நாம எல்லாரும் அப்படித்தான் வாழறோம் – ஒவ்வொரு அறையிலும் ஒரு முகம். பல அறைகள், பல முகங்கள் – இது நம்மை உடைக்காம, நம்ம கதையைச் சொல்ல உதவனும். ஆனா எல்லா அறைகளும் ஒரு  பெரும்கதையின் பகுதி.

தொலைந்து போன பொருள்

முதலிரவன்று மனைவியுடன் முதன்முதல் சந்திப்பு ஏற்படும் முன்னர் சுதன்யா ஒரு சிட்டிகை பொடி உறிஞ்சி, தன நரம்புகளை சரியான நிலையில் வைக்க முயன்றிருக்கிறார். புது மனைவி ஹேமந்த பாலா முதன் முறையாக அருகில் வந்து மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டாள். ‘நீங்கள் பொடி போடுவீர்களா?’ வெட்கமடைந்த சுதன்யா சொன்னார். ‘நடுநடுவே கொஞ்சம் போடுவேன்.’ 

நீல வாகா

அனிருத்துக்கு தேர்வு வருகிறது, நன்றாக படிக்க கூடியவன், ஆனால் கடந்த சில மாதங்களாகவே எதிலும் சற்று பிடிப்பு இல்லாமல் இருக்கிறான். தேர்வு சமயத்தில், தேவை இல்லாமல் அதிகம் பதட்ட படுகிறான். ஒருவருடம் இடைவெளி விட்டு மருத்துவம் தொடரட்டுமா என்கிறான். ஒருவேளை சரியாக படிக்கவில்லை என்றாலும் வேறு யோசனை செய்வேன், சென்ற ஆண்டு தேர்வில் என்பத்தி நான்கு சதவிகிதம் எடுத்திருந்தான். 

ரா.கிரிதரன் குறுங்கதைகள்

மதியம் பனிரெண்டு மணிக்கு ஒரு முறையும் ரெண்டு மணிக்கு ஒரு முறையும் இறந்ததாக நர்சரி பள்ளிக்கூடத்து டீச்சர் மாலினி சொன்னாள்.  எப்படி ரெண்டு தடவை ஒருவர் இறக்க முடியும் எனக் கேட்கக்கூட அவளுக்கு நேரம் இருக்கவில்லை. ரெண்டரை மணிக்குள் குழந்தைகளை வீட்டில் சேர்க்காவிட்டால் பெற்றோருக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் ஓடிவிட்டாள்.

ஐஸ்கிரீம்

‘வாங்குனா எங்க வெச்சு திங்கறது? வீட்டுக்கு நேரா போவ முடியாது, மருமவ இருப்பா. பேரனும் பேத்தியும் பள்ளிக்கூடம் விட்டு வந்திருப்பாங்க. பேசாம வீட்ட விட்டு தள்ளியிருக்கற மாட்டுக்கொட்டத்துக்கு போயிரலாமா? அங்க வெச்சு மளமளனு தின்னுட்டா என்ன? தின்னுட்டு வாயத் தொடைக்கறத மட்டும் மறந்தரக்கூடாது’ என்று செய்யவேண்டியவற்றை மனதில் அடுக்கிப் பார்த்தாள்.

புத்தனின் புன்னகை

இளமையினால் கண்களின் கூர்மையும் பிரகாசிப்பும் அதிகமிருந்ததோடு மிக ஆழத்தில் அமைதி தெரிந்தது. அவ்வமைதியினால் புன்னகை  மயக்கும் வசீகரத்தை தெறித்தது. பார்சல் கட்டுவதிலும் வரிசை எண்ணை அழைப்பதிலும் தனித்துவமும் பணிவுடன் கண்டிப்பும் நிறைந்திருந்தது.. இருபது நிமிடங்கள் கரைந்தது குறிப்பிட்ட எண்ணை மூன்று முறைகள் அழைத்தார் ஒருவரும் பதிலளிக்கவில்லை.

பகரம்

‘ஒருத்தொருத்தரும் அவங்க வழியில அதை எதிர் கொள்வாங்க. நீங்க ப்ராபப்லி உங்க வேலைல இன்னும் கொஞ்சம் மூழ்கிருக்கலாம்’. உண்மை தான் என்று நினைத்துக் கொண்டான் அஸ்வின். கடந்த சில மாதங்களாக எளிதாகத் தவிர்த்திருக்கக் கூடிய அலுவல் நிமித்தமான வெளியூர் பயணங்களை வேண்டுமென்றே தன் தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டான்

நேர்காணல்

வேளச்சேரியில் நடுராத்திரி அரைமயக்கத் தூக்கத்தில் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அவன் புரட்டு ஆசாமி இல்லையென்றால் சரவண பவன் வாசலில் ஆட்டோ அவனை விட்டுச் சென்ற காட்சி கண்டிப்பாக ஓட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாயிருக்கும். அதன் மூலமாக ஆட்டோ நம்பரைக் கண்டுபிடித்து டிரைவரை தொடர்பு கொள்ள முடியுமே

மர பொம்மைகள்

“இல்லை, ஆனால் ஏன்  மிக அற்புதமான அழகு என்று நீங்கள் சொன்னீர்கள்? அவை விற்பனைக்காக இல்லை. அவை என்றாவது ஒரு நாள் பயன்படலாம். என்னைப் பற்றி தெரியாதவர்கள் கையில் இந்த பொம்மைகள் கிடைக்கும் போது விலைமாதால் காட்சிப்படுத்தப் பட்ட பொருட்கள் என்று அவர்கள் அவற்றைப் பரிகாசம் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்”

தீச்சொல் நிகண்டு

சொன்னாக் கேக்க மாட்டேங்கேரு பாட்டா? என்ன எழவுக்காக்கும் குத்தி இருந்து இந்த பேஸ்புக், கூகுள், வாட்ஸ்ஆப் எல்லாவற்றையும் விடாம நோண்டுகேரு? ஒரு நாளைக்கு ஆறேழு மணிக்கூர் இதே வேலையா? அந்த நேரத்திலே என்னலாம் எழுதலாம், வாசிக்கலாம்… போற காலம் வந்தாச்சு… பின்னே மூலக்கடுப்பு, உள்மூலம், வெளிமூலம், கந்தமூலம், கனகமூலம் வராம என்ன செய்யும்?

தருணங்கள்

எப்போதுமே இந்த சாலை இந்த நேரத்தில் கூட்டம் அதிகம். வரிசையாக ஒன்று இரண்டு பெரிய பள்ளிக் கூடங்கள் உள்ளது. குழந்தைகள் வண்ண வண்ண சீருடைகள். மழை என்பதால் வானவில் போன்று எண்ண முடியாத வண்ணங்களில் மழை கோட்டுகள். பூக்கள் சிரித்து கொண்டே நகர்வது போன்று சிறுவர் சிறுமிகள் உற்சாகமாக பள்ளி வகுப்புகளை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றார்கள். ஊட்டியில் உள்ள ரோஜா தோட்ட கண்காட்சி போன்று இருந்தது. தமிழ் அனைவரையும் பார்த்து கொண்டே நகர்ந்து கொண்டு இருந்தாள்.

எஸ்கார்ட்

”காலைல ஆடிட் ஆபிஸ்ல பார்ட் டைம் வேல பார்த்துட்டு நைட் இங்க வண்டி ஓட்டிகிட்டு இருந்தேன். அன்னைக்கு கொஞ்சம் தூக்க கலக்கமா இருந்துது. மாத்திவிடுறதுக்கு ஆள் யாரும் இல்ல. நானும் சரி ஒரு ட்ராப் தான, அட்ஜஸ்ட் பண்ணி போயிடலாம்னு நினைச்சு வண்டிய எடுத்துட்டேன். ஒரு டர்னிங்ல மெட்ரோ வேல நடந்துட்டு இருந்த இடத்துல டிவைடர் வெச்சிருந்தானுங்க. எப்படி அசந்தேன்னு தெரியல. கண்ண மூடி திறக்குறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு” என்றார்.

இடைவழி

எனக்கு எங்கோ மெல்லிய இசை கேட்க என் காதருகில் ” நீங்கள் மெதுவாக விழிகளை திறக்க முயலுங்கள்” என்று ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்டது. விழியை திறக்க எத்தனிக்கும் போதெல்லாம் கண்கள் மேல் ஒரு பாரம் அழுத்தியது. நான் உருண்டு உருண்டு கீழே விழுவது போன்ற உணர்வு. பெரும் பிரயத்தனப்பட்டு கண்களை திறந்தேன். சுற்றிலும் மருத்துவர் குழு ” யூ ஆர் த்ரூ இட் ” என்று புன்னகைக்க நான் கண்கள் செருக விழிப்பும் இல்லை மயக்கமும் இல்லை என்ற அவஸ்தையில் இருந்தேன். 

அணங்கு

ஒன்பதரை மணிக்கு பனிக்குளிர் இறங்கிய ரோட்டில் வண்டி ஓட்டிட்டு வரும்போது ஆதிக்கு பயமா இருக்கு.தனியா என்ன பண்றாளோ என்று கதவைத் திறந்தால் தூங்கிக்கிட்டிருக்கா.பக்கத்துல தட்டில் இட்டிலி மூடி வச்சது அப்பிடியே இருக்கு.ஏறி இறங்கும் அவளது ஒவ்வொரு மூச்சுக்கும் கர் கர்ரென ஆஸ்துமா இளைப்பு சத்தம் கோரமா கேக்குது.வாய் ஒரு பக்கமா கோணி திறந்திருக்கு.  யூனிபார்மை கூட கழட்டாம உக்காந்திருக்கான்.

வான வேடிக்கை

இந்த செய்தியை கேட்டு காலிதின் தந்தை மிகவும் கலக்கமடைந்தார். சில நாட்களாக நிலவும் வழக்கத்துக்கு மாறான அச்சமூட்டும் அமைதி, தலைக்கு மேல் எந்நேரமும் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் விமானங்கள், கடைவீதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசாரின் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள், மக்களின் கவலை ததும்பும் முகங்கள், ரத்த வேட்கையுடன் காத்திருக்கும் புயல் மேகங்கள், இவையெல்லாம் நடக்க கூடாத ஏதோ ஒரு விபரீதத்திற்கான முன் அறிகுறிகள் என்று அவர் திடமாக நம்பினார். 

வார்ட் நம்பர் 6

வாஷிங்டன் சதுக்கப் பூங்கா பல இசைக் கலைஞர்களால் அதிர்ந்தது – ஜாஸ் நால்வர் குழு, கிளாசிக்கல் வயலின் வாசிப்பாளர், பீட்பாக்சர் – ஒவ்வொருவரும் வெவ்வேறு மூலைகளைத் தனக்குரியதாக மாற்றி இருந்தனர். இந்த ஒலிக்கலவை விடுதலையின் குரலாக ஒலித்தது. 

வன்யா

அந்த இரவின் மாயாவி என்ன செய்தான் என்று தெரியவில்லை. விடிந்ததும் தண்டனைக்காலம் முடிந்து உருவம் வரைந்த சுவடே இல்லாமலானது. வெகு நாள் கோபத்தைச் சுமக்க முடியாமல் சகஜமானாள்  காயத்ரி. வந்த தடமும் தெரியவில்லை அழித்த தடமும் தெரியவில்லை. விக்ரமன் என்பதற்குப் பதில் விசித்திரன் என்று பெயர் வைத்திருக்கலாம். இந்தச் சித்து வேலையை எப்படிச் செய்தான் என்று கேட்கவே கொஞ்சம் கூச்சமாக இருந்தது காயத்ரிக்கு.

மைத்ரேயி

“ஆன்மாவை அறிந்த ஒருவன் ஆன்மாவாகவே ஆகி விட்ட பிறகு தனி உணர்வு எழுவது எங்ஙனம்? எதை அறிவது? எந்த ஒன்றால் இந்த அனைத்தும் அறியப்படுகிறதோ அதனை எதனால் அறிவது? அவர் நிறுத்தி விட்டு தொடர்ந்தார், என் அன்பே… அறிவழிந்து அறிவென அமர்ந்திருப்பவனே அறிபவன். அவனை எதனால் அறிவது?”

நவீன சிறைச்சாலைத் தத்துவம்

எனக்கு, நான் எப்பேற்பட்ட சிக்கலில் சிக்கியிருக்கிறேன் என்பது புரிந்தபோது தரை நழுவுவது போல் இருந்தது. இது போன்ற கிரகங்களில் ஒத்திசையாத தகவல் தொடர்பே (Asynchronous Communication) சாத்தியப்படும். எதைச் சொல்ல வேண்டுமானாலும், அதனைப் பதிவு செய்து அனுப்பவேண்டும். அப்படி அனுப்பப்படுகையில் அது சிகப்பு அதிர்வெண்வரையில் நீட்டிக்கப்படும் (Red shifted). தகவலைப் பெறுபவர் தங்களது கிரகிப்பான்களை (receiver) அதற்கேற்றார்போல் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

சாவித்திரியும் நானும்

நம்ம வீட்டுக்குள்ளேயே அம்மா அப்பா கைக்குள்ளையே இருந்து வளர்ந்திருப்போம், அவங்க எத நமக்கு காட்டுறாங்களோ அது தான் நம்ம உலகமா இருந்திருக்கும், ஆனால் நம்ம தனியா படிப்புக்காகவோ வேலைக்காகவோ அவங்க கைய விட்டு வெளிய வந்ததுக்கு பிறகு தான், இந்த உலகத்த நம்ம நம்மளோட பெர்ஸ்பெக்டிவ்ல பார்ப்போம், அப்படி பார்க்கும் போது உள்ளுக்குள்ள ஒரு சுதந்திர உணர்வு வரும், அந்த சுதந்திர உணர்வோட நம்ம எல்லா விஷயத்தையும் பார்த்து புரிஞ்சிக்கும் போது எல்லாமே நமக்கு புதுசா தெரியும்

கிருஷ்ண லீலை

அவர் என்னிடமிருந்து இம்மாதிரியான வார்த்தைத் தாக்குதலை எதிர்பார்த்திருக்க மாட்டார் போலும். சற்று கலங்கித்தான் போனார். நானோ மனதிலிருந்த மலையை இறக்கி வைத்தாற்போன்ற ஆசுவாசமும் ஆவேசமுமான கலவை உணர்வின் உச்சாணியில் இருந்தேன். வீட்டில் இவர் பல்வலி என்றால் வெளியில் குமரேசன் நீர்க்கடுப்பு. இரு கிழவர்களும் பந்தடித்து விளையாட என் வாழ்க்கையா கிடைத்தது.

1941-ஆண்டின் குளிர்காலம்

தேர்ந்தெடுப்பின் முதல் கட்டம் ஆங்கிலத்தில் பொது அறிவுப் பரீட்சை. அதற்குத் தயார் செய்யும் வழி அவனுக்குத் தெரியும். மூலைக்கடையில் அவன் வேலை செய்த காலத்தில் பியர்ஸ் சோப் கட்டிகளை அட்டைப்பெட்டியில் இருந்து எடுத்து அடுக்கியபோது அவற்றுடன் வந்த ஒரு வர்ண விளம்பரக் காகிதம். என்சைக்ளோபீடியா பற்றிய விவரங்கள். டிக்ஷனரி தெரியும். அதைப் போன்ற கனமான என்சைக்ளோபீடியா எப்படி இருக்கும்? அதன் உள் அட்டையில் பல நாட்டு கொடிகளின் படங்கள். உள்ளே உலக நாடுகளின் வரை படங்கள்.

டால்ஸ்டாய் புக் ஷாப்

அவளை பார்த்த அதிர்ச்சியில் இதயத்தின் துடிப்பு இவனுக்கு அதிகரித்தது. அவளின் அருகில் சென்று சமாதானப்படுத்த முயற்சித்தான்.இரவு பணிகள் முடிந்து  பணியாளர்கள் வெளியே வருவதும் பணியாளர்கள் உள்ளே சொல்லுவதுமாக  பார்த்தும் பார்க்காதவாறு சென்றுக் கொண்டிருந்தனர். வார்த்தைகள் எதும் பேசாமல் பெரிய துளிகளாய் அவள் கண்ணீரை வடித்தாள். 

ராகவேனியம் 2024

“இருங்க! கொஞ்சம் விபரமாச் சொல்றேன்” என்று அந்து இளைஞன் ஆரம்பித்தான். “அது டைம் மெஷின் பந்து. மேலே நம்பர்லாம் வெச்சிருக்கும். டாக்டர் கண்டுபிடிச்சது. டெஸ்ட் பண்ணலாம் என்று 2024 தட்டி இங்கே வந்துட்டோம். ராகவேனியம் 277 என்கிற எலிமெண்ட் போல் இதுவும் கணக்குல தப்பியிருக்கும்னு நான் அசால்ட்டா இருந்துட்டேன். ஆனா இது வேலை செஞ்சுடுச்சு.”

பட்டியலில் 12வது நபர்

வெள்ளை நிறத்தில் வர்ண பூக்கள் இறைந்து கிடக்கும் காட்டன் சுரிதாரில் ஒரு சுடரென ஒளிர்ந்தாள். அவள் கன்னம் தடவி அம்மா முத்தமிட்டாள். அக்கா இவளை தன்னுடலுடன் அணைத்துக் கொண்டாள். அக்காவின் உடம்பிலிருந்து மிக லேசான செம்பருத்தி வாசம் வீசியது. அக்கா எப்போதும் செம்பருத்தி இதழ்கள் போட்டு காய்ச்சிய தைலத்தைத்தான் பூசுவாள். அதன் நறுமணம் அவள் உடலெங்கும் தங்கியிருக்கும்.

புதிய பாடத் திட்டம்

ப்ரெஞ்சுப் புரட்சியைப் படிக்கப் புகுந்த மதன் ஸார் மாவட்ட நூலகமே கதியென இருக்கத் துவங்கினார். ஏற்கனவே குண்டு குண்டு நாவல்களாக வாசிப்பவர், இப்போது உலக வரலாறு பற்றிய குண்டு குண்டு புத்தகங்களாக வாசித்துத் தள்ளுகிறார். நூலகத்தில் மணிக்கணக்காக படிப்பதோடில்லாமல் வீட்டிற்கும் பள்ளிக்கும் கூட எடுத்து வந்து அந்த குண்டுப் புத்தகங்களை வைத்து வாசிக்கிறார். பாட்டி ‘இந்த வாத்தியார் புள்ளைக்கு காலா காலத்துல கல்யாணம் பண்ணி வெச்சாதான் என்ன’ என்றார்.

சிலிர்ப்பு

“ஹராம் ஜாதோ…   எவனோ இடித்து விட்டு ஓடி விட்டான். இந்தப் பையன்தான் என்னைப் பத்திரமாக இங்கே கூட்டி வந்தான். இவனைப் போய் அடிக்கிறீர்களே… முட்டாள்களே… நகருங்கடா என்று எல்லோரையும் விலக்கி விட்டார். அவர் அருகில்  வந்து நின்றதை உணர்ந்ததும் அந்த ஆஜானுபாகர்கள் எல்லோரும் இவனை மறந்து நெகிழ்ச்சியுடன் பாபுஜி என்று பெரியவரைக் கட்டிக் கொண்டனர். 

இங்கிவனை யான் பெறவே

“கர்ணனின் உடலுக்கு யார் தீயூட்டுவது என்பது உன் முடிவு மட்டுமே. நானோ, அத்தையோ, யுதிஷ்டிரனோ அதைத் தீர்மானிக்க முடியாது. கர்ணனே தருமன்தான் தன் உடலுக்கு தீயூட்ட வேண்டும் என்று அத்தையிடம் வரம் கேட்டிருந்தாலும் அதையும் மாற்றும் உரிமை உனக்குண்டு” என்று மிருதுவான குரலில் துரியோதனனின் தோளை அழுத்திக் கொண்டே கண்ணன் சொன்னான்.

என்றாவது ஒரு நாள்….

எனக்கு அப்போது தெரியாது அவனுடன் பேசுவது அதுவே கடைசி முறை என்று. அவனுடன் பேசிய அடுத்த பத்தாவது நாள் ஆர்மி ஹெட் க்வார்ட்டர்சிலிருந்து எனக்கு போன் வந்தது. ‘தீவிரவாதிகளுடன் நடந்த போராட்டத்தில் வீரமரணம் அடைந்து விட்டான் உங்களுடைய சகோதரன். அவனுடன் உயிர் நீத்த எல்லாருடைய உடல்களையும்  நாளை டெல்லிக்கு கொண்டு வருகிறோம்.   ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு உடலை ஒப்படைக்கிறோம்

முட்டை போண்டா

நான் முதன் முதலாக சண்முகராஜனின் பெட்டியைத் திறந்த போதே அதனுள் ஒரு பத்து ரூபாய் கட்டு கிடந்ததைக் கண்டு கொண்டேன். பெரிய தொகையை எடுத்தால் அவன் கண்டுபிடித்து வார்டனிடம் புகார் சொல்லக் கூடும் என்பதால் வெறும் பத்து ரூபாயை மட்டும் எடுத்தேன். ஏற்கெனவே விடுதியில் பணம் திருடு போன புகார்கள் நிறைய இருந்தன.

சொர்க்கம்

இவரிடம் இனி பேசி பிரயோஜனம் இல்லை. எழுந்து நின்று, போவதற்கு முன் ஒருமுறை அவரை உற்று நோக்கியபடியே, “நீங்க என்ன அந்த மினிஸ்டரோட சகலைக்கு உறவா?” என்றேன். ஒருகணம் பொட்டில் அறைந்ததுபோல துணுக்குற்றவர், “என்ன…என்ன சொல்றீங்க?” என்று தடுமாறினார்.

ஓய்வில் மனம்

இவனுடைய குடும்பம் பற்றி ஏதாவது கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது.   பழுது பார்ப்பவன் வரும் வேலையில்லை என்றால் இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம்.  இல்லை இவ்வளவு பேசியதே போதும்.  ஒரு நிறைவு இருக்கும்போது மேலும் ஏன் பேசவேண்டும்.  பூக்கடையில் செருப்பை மாட்டும்போது ஏன் அவன் கோவிலில் மேலும் சிறிது நேரம் இருப்பதாக சொன்னான் என்று யோசித்தேன்.

புளியமரத்தாள்

மரம் பூக்கணும்ன்னு இவ காத்துருந்தாளா! இல்ல இவ பூக்கணும்ன்னு மரம் காத்துருந்துச்சான்னு ஊருசனம் அதிசயமாய் பேசிய புளியமரத்தாளப் பாக்கப்போன எங்களப் பாத்து, ‘அடியே! நீங்களாம் எப்பும் குத்தவைக்கப் போறீங்கட்டின்னு கேட்டா!‘ அதுக்கு நாங்க, கால் வலிக்கும்போது  குத்தவைப்போம்ன்னு சொன்னோம்.

உளியின் மொழி

“என்ன செய்கிறாய், தம்பி? அந்த இடைச்சி  கையில் குழைகளில்லை, காதுகளில் பாம்படமில்லை, இடையில் கூடையுமில்லை, அவள் கழுத்தை சுற்றிப் பிடிக்கும் அட்டிகையுமில்லை, இதில் நீ நடனப் பெண்ணை வடிக்க சந்தர்ப்பம் கேட்கிறாய்? கற்பனையே இல்லை, கவனமும் இல்லை.”

மாயையில் துளிர்க்கும் மலர்கள்

அந்த அறையின் கதவைத் தட்டிப்பார்த்துவிட்டு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள். வயதாகியும் அபுவின் மீதான ஈர்ப்பு அப்படியே இன்னுமிருக்கிறது. அவனும் அப்படியே. திங்கள் வெள்ளை, செவ்வாய் மஞ்சளும் சிகப்பும் எனப் பல வண்ணங்களில் ஒவ்வொரு நாளும் கைக்கொள்ளும் அளவு மாத்திரைகள் இருவருமே எடுத்துக்கொள்ளவேண்டியதாகிவிட்டது. இருந்தாலும் என்னைப் படுக்கையிலிருந்து எழுப்பிக் கைதாங்கலாகக் குளியலறைக்கு அழைத்துச் செல்லவும், வெளியே செல்லும்போது என்னை வண்டியில் அமரவைத்துத் தள்ளிக்கொண்டும் செல்கிறான். என்னிடம் அவன் முழுமையாகவே திரும்பி வந்துவிட்டான்.

தாபம்

போதும்’ என்ற குமாரிக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. நெடுநாள் கழித்த ஒரு ஆணின் ஸ்பரிசம் அவளில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அவள் எழுந்து சென்று அவளிடத்தில் படுத்துக்கொண்டாள். அவள் மனது குழம்பிப் போயிருந்தது. பகல் முழுவதும் ஈர உடையுடன் அலைந்ததால் அவளில் காய்ச்சலும் தொற்றிக்கொண்டது. நள்ளிரவில் உக்கிரம் கொண்ட காய்ச்சலால் அவள் புலம்பிக்கொண்டிருந்தாள். 

ஸ்ரீவாணி மேடம் 

சுஜாதாவுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த தற்பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று நினைத்துக் கொண்டாள். அதை மறைத்துக் கொண்டு, “அன்றொருநாள் உன் வீட்டுக்கு போன் செய்தோம் அக்கா. அந்த நம்பரில் போன் எதுவும் இல்லை என்று பதில் வந்த்து. பாக்டரிக்கு போன் செய்தால் அங்கே மாமா இல்லை என்றார்கள். எங்கே போயிருக்கிறார்? உங்கள் போனுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள் சுஜாதா. 

ட்டி.கல்லுப்பட்டி நகுலின் 418 வது கேட்ச்

ஏன் நண்பரே அந்த கேட்ச்சை விட்டீர்கள். எனக்குத் தெரியும் அது மிகச்சுலபமான கேட்ச் என்று. 418 வது கேட்ச். எவ்வளவு விலைமதிப்பில்லாத கேட்ச் என்று உலகமே அறியும். உங்களின் இரக்கத்தால் தானே நாங்கள் ஜெயித்தோம்.  அனைத்தையும் விளக்கிச்சொல்லி எங்கள் பத்திரிக்கைக்கு சொல்ல நினைத்திருந்தேன். அதற்குள் என் தந்தையின் மரணம் நிகழ்ந்து விட்டது. முப்பது நாட்கள் நான் எங்கும் போகக்கூடாது.

வட்டம்

அர்ச்சுன வாயிலினுள் நுழையும் முன்  வலது புறமாக காட்டுக்குள் நுழைந்து சென்றால் கழுகுப் பாறையை அடையலாம். அருகிலேயே பிரசன்னரின் மடம் உள்ளது. பிரசன்னரின் மடத்தில் விழுப்புண்களுடன் கொஞ்ச காலம் அணங்கர் தங்கியிருந்தார். குருவின் அருளினால்தான் இந்நகரம் நிறுவப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கழுகுப் பாறையின்  நுனி நின்று நோக்குகையில்தான் ஒரு கணம் தோன்றி மறைந்தது இந்த மாநகரம்.

லெமன் சாதம்

என் அண்ணன் நல்ல பெயரெடுப்பதற்காகவே, “நானே சமைக்கிறேன்..அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்கடா..ஓட்டல்லாம் வேணாம்..” என்றான். என் சின்ன அண்ணன் சரி என்பது போல் தலையாட்டினான். எனக்கு கோபம், அழுகை பொத்துக்கொண்டு வந்தது. கோபம் காட்ட இயலாத இடத்தில், அழுகைதானே வரும். என் சின்ன அக்காதான், “நம்ம வேணா வீட்டில சாப்பிட்டுக்கலாம்..பாவம் போத்தி ஓட்டல்ல வாங்கி சாப்பிட்டுக்கிட்டும்” என சொன்னாள்.

மனக்கணக்கு

“எனக்கா தொழில் நுட்பம் தெரியாது? பார்த்தாயா உன் கண் முன்னே வந்து நின்றுவிட்டேன். குவாண்டம் பிணைப்பு இணைப்பை (Quantum Entangled Connection) எனக்கும் பயன்படுத்தத் தெரியுமாக்கும். அதுமட்டுமல்ல, எனக்கும் அறிவியல் புரியும் கண்ணா. அதை நிரூபிக்கத்தான் இப்படி வந்தேன்.. ஹா ..ஹா” என்று இடித்துச் சிரித்தாள் புவனா.

அமானுஷ்யம்

ஒரு சமாதி மேல ஒரு உருவம் ஒன்னு உக்காந்திருக்கு. அலை அலையா தெரியுது. தலை நிறைய பூவு. முகதத்துல மஞ்சள் தடவி அந்த நேரத்துல எப்பிடின்னு எங்களுக்கு லேசா உதர ஆரம்பிக்குது. எங்களுக்கு அதுக்கும் ஒரு பத்தடி நீளம் இருக்கும். அது அங்க நின்னுட்டே அதோட கைய்ய பத்தடிக்கு மேல நீட்டி கண்ணனோட கழுத்த பிடிச்சது. கண்ணன் கத்துறான். எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரில. கண்ணனை பிடிச்சி நாங்க இந்த பக்கம் இழுக்குறோம். ஒரு ரெண்டு நிமிஷம் இந்த போராட்டம் நடந்துருக்கும்.

கானல் குருதி

செல்போன் மணியடித்து விழிக்கும் போது பேருந்து, திண்டுக்கல்லை தாண்டியிருந்தது. அரைத்தூக்கத்தில் போனை எடுத்து பேச காதோரம் வைக்கும் போது “போன் பேசதாடா” என கத்தியபடி போனை பிடுங்கி வீசினான் பக்கத்தில் இருந்தவன். நல்லநேரமாய், போன் சொத்தென வெற்றிலைகூடையில் விழுந்தது, கொஞ்சம் தவறியிருந்தாலும் போன் பணால் ஆகியிருக்கும். விமல் கன்னத்தில் அந்தப் பையனின் நகம் பட்டு லேசான கீறல், தொட்டு பார்த்தான் லேசாய் எரிந்தது.