இளமை நெடுக இயற்றிய கொடும்பாவங்கள் தனக்கு மிகக்குரூரமான மரணத்தை விளைவிக்குமோ என்கிற ஆழ்மன அச்சத்தைப் போக்கும்பொருட்டு ஆன்மீகக் கடலில் கழுத்துவரை மூழ்கியிருந்த அவர் இதுபோன்ற உலகியல் சச்சரவுகளை அறவே வெறுப்பவராக அப்போது மாறியிருந்தார். அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டுவிட்டதை உணர்ந்துகொண்ட சிதம்பரநாதனின் இளமனம், எஞ்சியிருந்த ஒரே வாசலினுள் தன்னைச் சுருட்டிக்கொண்டு நிரந்தரமாக முடங்கியது.
Tag: கெளதம் நாராயணன்
பலூன்
சாந்தியின் கவனம் முழுவதும் கீழே அனாமத்தாய் கிடந்த அந்த பொம்மை வாகனத்தின் மீதே இருந்தது. மேசைமேல் வைத்திருந்த செல்போன் திடீரென அதிர்ந்ததும் ஒருவித ஆர்வத்துடன் அதை எடுத்தாள். ஆனால் திரையில் கடம்பூர் சித்தியின் பெயரைப் பார்த்ததும் உச்சுக்கொட்டிவிட்டு அதை அப்படியே கீழே வைத்தாள்.
