மார்க் தெரு கொலைகள்-  இறுதிப் பகுதி

This entry is part 5 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

அவர் இந்தியத் தீவுக் கூட்டங்களுக்கு பயணம் செய்தார்; அவரையும் சேர்த்து அவருடன் வந்த சில கடலோடிகள், போர்னியோ தீவின் உட்பகுதிக்கு உல்லாசமாகச் சென்றனர். அவரும், அவரது நண்பரும் அங்கே ஒரு ஓராங்-ஓட்டானைப் பிடித்தனர். அந்த நண்பர் இறந்து போனார்; இந்தக் குரங்கு இவரது ஏகபோக உடைமையாகியது. வழிப்படுத்த முடியாத முரட்டுத் தனங்கள் நிறைந்த அந்த விலங்கை பல இடர்களுக்கிடையில், பாரிசில், தன் வீட்டில் பாதுகாப்பாக பூட்டி வைத்தார். அண்டை அயலார் சற்று விலக்கமாகப் பார்க்கக்கூடும் என்பதால் தனியாகவே வைத்திருந்தார்.

மாணாக்கன்

“அவர்கள் யேசுவை முதன்மை மதகுருவின் முன்னிலையில் கேள்விகள் கேட்கத் துவங்கினர். அந்த சமயத்தில் முற்றத்தில் வேலைக்காரர்கள் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டினர். அவர்களுக்கு அருகில் நின்றிருந்த பீட்டரும் கைகளை நீட்டி குளிர் காய்ந்தார். அப்போது, அங்கிருந்த ஓர் பெண்மணி, பீட்டரைக் கண்டு “இவரும் யேசுவுடன் இருந்தார்” என்றார்.  அதாவது, பீட்டரையும் இழுத்து சென்று கேள்வி கேட்க வேண்டும் என்று அர்த்தத்தில் கூறினாள். 

வயோதிகம்

யுஸெல்கோவ் அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தான்; கொஞ்ச நேரம் சிந்தனை செய்துவிட்டு ஷாப்கினை அவனுடைய அலுவலகத்தில் சென்று சந்திப்பதென சலிப்பாக முடிவெடுத்துக் கொண்டான். உணவகத்தை விட்டு வெளியே வந்து கிர்பிட்சினி தெருவை நோக்கி இலக்கற்ற மெது நடையில் அவன் சென்ற போது நண்பகலாகியிருந்தது. ஷாப்கினை அவனுடைய அலுவலகத்தில் சந்தித்தான்; அவனை அடையாளம் கண்டுகொள்ளவே சிரமமாக இருந்தது. நல்ல உடலுடனும் துடுக்குத்தனமானவனாகவும் குடிபோதையேறிய முகத்துடனும் திறமை மிக்க ஒரு வழக்கறிஞனாக நடந்து திரிந்த ஷாப்கின் தற்போது அமைதியான, நரைத்த தலையுடன் அடங்கி ஒடுங்கிய ஒரு கிழவனாக மாறிப்போயிருந்தான்.

சபிக்கப்பட்ட வீடு

வைக்கோம், “என் வாழ்க்கையில் இவ்வளவு உறுதியாக இதுவரை இருந்ததே இல்லை, என் நண்பரே” என்று பதிலுரைத்தான். “நான் முன்னமே சொன்னேன், மறுபடியும் சொல்கிறேன், வாடகையை குறைக்கத்தான்போகிறேன்”.
ஐயா நீங்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். நீங்கள் இதற்காக இம்மாலையே வருந்துவீர்கள். வாடகைதாரர்களின் வாடகையை குறைப்பதா? இதுவரை கேள்விப்பட்டிராதது ஐயா. வாடகைதாரர்கள் இதைப்பற்றி அறிந்தால் என்ன நினைப்பார்கள்? நம் அயல் குடியிருப்பாளர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்வார்கள்? நிஜமாகவே…

முது மது (நாட்படு தேறல்)

சாண்ட்ரா விழுங்குவதற்குச் சில கணங்கள் எடுத்துக் கொண்டாள். “இல்லைதான், உங்களிடம் இருப்பது ஜனங்களே பிரச்சினைகளாக இருந்தாலும்,  அவர்கள் தங்கள் பிரச்சினைகளிலிருந்து ஓடிப் போக வழி செய்வது.”..டாக்டர் கோல் அசைவின்றி அமர்ந்திருந்தார், … “ஆமாம், அது ஒரு பெரும் பங்கு இதிலெல்லாம். நாம் ஒரு பெரிய சிக்கலை உருவாக்கி விட்டு, அதன் விளைவுகளைச் சந்திக்காமல் அவற்றிலிருந்து பறந்து போய் விட முடியாது. கடிகாரத்தைத் திரும்பி வைத்து, நிஜ வாழ்வில் ஏற்பட்ட சேதங்களை மற்ற மனிதர்கள் மீது சுமத்த முடியாது. நீ இதைச் சரியாகப் பிடித்து விட்டாய்.”

நாடு கடத்தப்பட்ட லூலூ

அவள் எதிர்காலம் இங்கே (அமெரிக்காவில்) இருக்கிறது: இயற்கை நூலாடைகளுக்குப் புகலிடமான நாட்டில் அகதியாக இருக்க வேண்டி வந்திருக்கிறது. சீனாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட பின் ஹாங்காங் நல்லபடியாகத்தான் இருக்கும் என்று சில ஜனங்கள் நம்பினார்கள், ஆனால் ஷுஷுகுடும்பத்தினர் அப்படி நினைக்கவில்லை. நீங்க பார்த்துகிட்டே இருங்க, நாம எல்லாரும் அருமையான அமெரிக்கப் புறநகர் ஒன்றில் போய் நிற்கப் போகிறோம், என்று அவர்கள் கணித்தார்கள் – லூலுவையும் அந்த ‘நாம எல்லாரும்’ என்பதில் சேர்த்துத்தான் சொன்னார்கள், அதெப்படி இருந்தாலும் ஆர்னி மற்றும் டங்கனின் அம்மாவுக்கு என்னவோ, லூலு நல்ல மனைவியாக அமைவாளா என்பதில் ஐயம் இருந்தது.

தொள்ளாயிரம் பாட்டிகள்

ஆர். ஏ. லாஃபெர்ட்டி, இந்த எளிய, சுவையான கனியை, அண்ட வெளிக் கொள்ளைக்காரரும், அத்தனை எளிமையானவரல்லாதவருமான மையப்பாத்திரத்தின் முன்னால் தொங்க விடுகிறார். பாத்திரத்தின் பெயர், சேரன் ஸ்வைஸ்குட். சேரன் என்னவோ தான் ஒரு ‘ஸ்பெஷல் ஆஸ்பெக்ட்ஸ்” ஆள் என்று நினைக்கிறார். அதாவது மேன்ப்ரேக்கர் (மனிதரை உடைப்பவன்) என்றோ பாரல்ஹௌஸ் (பீப்பாய் வீடு) என்று முரட்டுத் தனமான பெயர்களைக் கொண்ட தன் சகபாடிகளைப் போல அல்லாது, தான் பண்பட்டவன் என்றும் நினைக்கிறார். அவர்களோ அத்தகைய பெயர்கள், அடித்துப் பிடுங்கவோ, கொள்ளை அடிக்கவோ உதவுகின்றன என்று நினைக்கிறார்கள். ‘சேரன் ஸ்வைஸ்குட்’ என்ற பெயரோ, அதிசயமான…. கிடைப்பதற்கரிய பொருட்களைத் தேடிப் பிடிப்பவரான ஒருவருக்குப் பொருத்தமான பெயராக இருக்கும்.

மந்தமான செவ்வாய்க் கிழமை இரவு

“லாஃபெர்ட்டி” கதை ஒன்றை முதல் முறையாகப் படித்த தருணத்தை நினைத்துப் பாருங்கள். அது “லாண்ட் ஆஃப் த க்ரேட் ஹார்ஸஸ்” ஆக இருக்கலாம், அது ஜிப்ஸிகளின் வேர் மூலத்தை விளக்குகிறது, புதுப் பாதை ஒன்றை வகுத்துக் கொடுத்ததும், ஹார்லன் எல்லிஸனால் பதிப்பிக்கப்பட்டதுமான ‘டேஞ்சரஸ் விஷன்ஸ்’ புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. ஒருகால் நெபுலா பரிசை வென்ற கதைகளின் தொகுப்பு ஒன்றில்“யுரேமாஸ் டாம்” கதையை நீங்கள் படித்திருக்கலாம். அல்லது வீணான நிலையில் உள்ள பழைய புத்தகக் கடை ஒன்றில், இஃப் பத்திரிகையின் பழைய பிரதி ஒன்றை அகழ்ந்தெடுத்து, அதில் பிரசுரமான “பூமர் ஃப்ளாட்ஸ்” கதையைக் கண்டிருக்கலாம். அந்தக் கதையில் பிரபலமான மூன்று அறிவியலாளர்கள், டெக்ஸஸ் மாநிலத்தின் வளர்ச்சி பெற்றிராத ஒரு மூலைக்குப் பயணம் போகிறார்கள்,

ஒப்புதல் (l’Aveu)

அங்கே, மேட்டுப்பாங்கான பகுதியில், படை வீரர்கள் போல வரிசை வரிசையாக  பசுமாடுகள். அவை நிலத்தில் படுத்தவண்ணமும், நின்றவண்ணமும் அவ்வப்போது சூரியனின் கூசச் செய்யும் ஒளிகாரணமாக தங்கள் பெரிய கண்களைச் சிமிட்டியபடி மிகப்பெரிய ஏரிபோன்று பரந்துகிடந்த மணப்புற்களை மேய்வதும் அசைபோடுவதுமாக  இருக்கின்றன. 

மல்லிகா ஹோம்ஸ்

சென்னை மாதிரியான நகரங்களிலிருந்து வருகிற என்னைப் போன்ற நகரவாசிகளுக்கு, கொஞ்சம் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தோன்றியது. கோயம்புத்தூருக்கு வெளியே, தம்பூர் சாலையும், தேசிய நெடுஞ்சாலை 181ம், சந்திக்குமிடத்தில், மல்லிகா ஹோம்ஸ் அமைந்துள்ளது. நடுவாந்தரமான நகரத்தை விட்டகன்று, அதன் புறநகர் பகுதிகளுக்குச் சென்றதில், மல்லிகா ஹோம்ஸை உருவாக்கியவர்களுக்கு அதிக இடம் கிடைத்த காரணத்தினால், நாங்கள் பெரிதும் பாராட்டுகிற பல வசதிகளில் அவர்களால் முதலீடு செய்ய முடிந்தது

விரோதிகள்

“ இது ஒரு வேதனைமிக்க சூழ்நிலை! நமக்குப்பிடித்தமானவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போய்விடுவார்கள் என்ற அபாயத்தில் இருக்கும்போது அவர்களை நாம் நேசிப்பதைப்போல நாம் அவர்களை ஒருபோதும் அதிகமாக நேசிப்பதே இல்லை.”
ஆற்றுக்குக் குறுக்காக வண்டி சென்று கொண்டிருந்தது. தெறித்த தண்ணீரால் தான் பயப்படுவதைப்போல அப்படியும் இப்படியுமாக நெளிந்தான் அபாஜின்.
“கொஞ்சம் பார்— என்னை விட்டுவிடேன்…” என்று பரிதாபமாகச் சொன்னார் கிரிலோவ்.

முதல் அற்புதம்

நாளை கி.பி முதலாம் ஆண்டு ஆரம்பிக்கிறது, ஆனால் அவனிடம் யாரும் சொல்லவில்லை. அப்படி யாரும் சொல்லியிருந்தாலும் அவனுக்கு அது புரிந்திருக்கபோவதில்லை, ஏனெனில் அவன் அது பேரரரசரின் ஆட்சியில் நாற்பத்து மூன்றாம் வருடம் என எண்ணிக்கொண்டிருந்தான், அதை விட, அவனது எண்ணங்களில் வேறு விடயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவனது தாயாருக்கு இன்னும் அவன் மீது கோபம் இருந்தது. ஒரு சராசரி பதின்மூன்று வயது சிறுவனை விடவும் தான் அன்று அதிக குறும்புத்தனம் செய்துவிட்டதை அவனும் ஒத்துக்கொள்ளத்தான் செய்தான். அவனது தாயார் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க கொடுத்தனுப்பிய குடத்தை உடைக்கவேண்டும் என அவன் நினைக்கவில்லை. காலில் கல் தடுக்கியது தன் தவறு அல்ல என…

ம்ருத்யோ மா

“க்ளிங்” – சற்றே வேகமாக மதுக் கோப்பைகள் இடித்துக்கொண்டது போலத்தான் சத்தம் கேட்டது. வரிசையின் முன்னே எட்டிப்பார்த்தேன். பெர்லின் செல்லும் இந்த விமான கேட்டின்முன் உருவாகியிருக்கும் வரிசையில் இரண்டாவதாக நின்றுகொண்டிருந்த தாத்தாவின் கையிலிருந்த டியுடி ஃப்ரி ஷாப் பையிலியிருந்து தரையெங்கும் இரத்தச்சிவப்பு உற்சாகமாக எல்லா திசைகளிலும் பரவியது. அவர் “ம்ருத்யோ மா”

பலகை அடித்த ஜன்னல்

மர்லாக், மர வீட்டைக் கட்டி முடித்தபின், வலிமையுடன் மரங்களைக் கோடரியால் வெட்டி வீழ்த்திப் பயிரிடும் நிலத்தை உருவாக்கிக் கொண்டான்- துணைக் கருவியாகத் துப்பாக்கியும் வைத்திருந்தான். அப்போது அவன் இளமையும் கட்டுடலும் நம்பிக்கை மிக்க எதிர்பார்ப்பும் கொண்டிருந்தான். கிழக்கு தேசத்திலிருந்து வந்தபோதே அவ்வூர் வழக்கப்படி அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது.

வில்லியம் பர்ன்ஸ்

ரொபெர்த்தோ பொலான்யோ (தமிழாக்கம் : ஆகாசஜன்) கலிஃபோர்னியாவில் இருக்கிற வெண்டுராவைச் சேர்ந்த வில்லியம் பர்ன்ஸ், இந்தக் கதையை என் நண்பன் பாஞ்சொ மொங்கேவிடம் சொன்னான். சொனோராவில் சாண்டா தெரேசாவில் போலீஸ்காரனாய் இருக்கிற பாஞ்சொ மொங்கே, அதை என்னிடம் சொன்னான். அந்த வட அமெரிக்கன் எதற்கும் கோபப்படாதவன், எதற்கும் அலட்டிக் “வில்லியம் பர்ன்ஸ்”

விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க்

“நான் வேண்டுமானால் இன்னுமொரு நூறாண்டுகள் காத்திருக்கிறேன். அதுவரை தொந்தரவு இல்லாத ஓரிடத்தைத் தேர்வு செய்து என்னை உறக்கத்தில் ஆழ்த்தி உறைய வைத்தோ அல்லது ஏதாவது ஒரு வகையில் பாதுகாத்து வைத்திருங்கள். அதை உங்களால் செய்ய முடியும் என்பதை அறிவேன்” என்றார்.

பேராசிரியர் பரப்பிய வைரஸ்

சீனாவில் தற்போது கோவிட்-19 என்று பெரும் வைரஸ் தொல்லை. இந்த மாதிரி வியாதிகள் எல்லாம் எப்படி ஆரம்பிக்கின்றன, யாரால் பரவுகின்றன ? இதைப் பற்றி 1996 வாக்கிலேயே தீர்க்க தரிசனமாக ஒரு கதை எழுதியிருக்கிறார் ஹா ஜின். ஒரு அப்பாவிக் குடிமகனுக்கு நீதி நியாயக் குறைவு ஏற்படும்போது இந்த மாதிரியெல்லாம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஒரு தூரிகை

ஸியனூக் பதவியிலிருந்து கட்டாயப்படுத்தி அகற்றப்பட்டபோது, அவள் கம்போடியாவை விட்டு நீங்கியிருக்கிறாள், ஒருக்கால் ஸிஐஏ உதவியோடு வெளியேறி இருக்கலாம். அப்போது பௌல் பாட்டின் தலைமையில் கமேயர் ரூ(ஸ்)ஜ் தலைநகரைக் கைப்பற்றி, அதன் இருபது லட்சம் குடிமக்களைக் கிராமப்புறங்களில் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பத் துவங்கியபோது, அங்கே தனிச் சொத்து இல்லாத கூட்டுச் சமூகங்களில் ‘புது கமேர்களாக’ ஆக அவர்கள் பயிற்சி பெற வேண்டி இருந்தது! சுமார் பத்து லட்சம் பேர்கள் இதில் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய வருடங்களில் பெனாம் பென் நகரும், அதைச் சூழ்ந்திருந்த கிராமங்களும், அமெரிக்க பி-52 விமானங்களால் திட்டமிட்டுக் குண்டு வீச்சால் தாக்கப்பட்டிருந்தன. அதில் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருந்தனர்.

கா-மென் – ரேச்செல் ஹெங்

This entry is part 2 of 2 in the series கா மென்

“கா மனிதர்கள் கடற்கரையோரம் நிலத்தை மீட்டுப் பயன்பாட்டுக்குக் கொணர புதிய, ஊக்கம் நிறைந்ததோர் திட்டத்தை முன்வைத்திருக்கிறார்கள். அது வடக்குக் கடற்கரையில் அறுபது சதவீதத்தைக் கையிலெடுக்கும். அதை முடிக்கப் பத்து வருடங்கள் போலாகும். இந்தப் புதுத் திட்டம் மக்களவையில் வரும் வாரம் வாக்களிப்புக்கு வரும்,” திரையில் இருந்த செய்தியாளர் சொல்கிறார்.

கொக்கு மனைவி – சி.ஜே. ஹௌஸர்

பிறரிடம் எதிர்பார்க்கும் தன்மை என்பது நம் பலவீனம் என்ற புரிதலுடன்தான் நான் என் முப்பதுகளுக்குள் வந்தேன். பலருக்கு இது பொருந்தும் என்றாலும் பெண்களுக்கு இது மிகவும் பொருந்துகிறது. ஆண்களின் விருப்பம் ‘திண்மை’யானது என்றும், அது நிறைவேறாத சந்தர்ப்பங்களில் அது ‘கைகூடவில்லை’ என்றும், அவர்களின் ஆசைகள் அல்லது தேவைகள் ‘நிராகரிக்கப்பட்டுள்ளன’ என்றும் அக்காரணம் தொட்டே அவர்களின் நடத்தை அமைகிறது என்றும் சொல்பவர்கள், பெண்களின் விருப்பங்களைத் ‘தேவைகளால் ஆனவை’ என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். ‘கிடைத்ததைக் கொண்டு வாழும் கடப்பாடு அவளுக்கு மட்டுமே!

வெள்ளைப் புள்ளி

“நுரையீரல்களைப் பார்,” அப்பா சொன்னார். “ஆரோக்கியமான நுரையீரல்கள் நெகிழக் கூடியவை. நாம் மூச்சை இழுக்கும்போது, அவை விரியும், விடும்போது சுருங்கும். சில நோய்கள் தாக்கினால் அவை இந்த நெகிழும் குணத்தை இழந்து விடுகின்றன. அவை அளவுக்கு அதிகமாக உப்பும். இங்கே இதயம் எத்தனை குறுகித் தெரிகிறது பார். தட்டையாக, கீழே போய்விட்ட உதர விதானத் திரையைப் பார்க்கலாம். இங்கே நுரையீரல்கள் ரொம்பப் பெரிசாகவும், ரொம்பக் கருப்பாகவும் இருக்கின்றன. நான் சொன்னேனில்லையா, காற்று இங்கே சிறைப்பட்டிருக்கிறதென்று. இங்கே ரத்தத்தில் போதுமான அளவு பிராண வாயு இல்லை. இந்த நபருக்குக் காற்றடைப்பு நோய் இருக்கிறது.”

ஒரு பயணம்

“அவருக்குப் போன வாரம் இன்னொரு முறை ரத்த அடைப்பு வந்தது,” அவள் சொன்னாள், ஆனால் அது ஏனோ நிஜமில்லை, பொய் என்பது போலவும், ஏதோ அவனுக்கு அதிர்ச்சி கொடுத்துத் தன்னோடு பேசவைக்கவென்று அவள் அதைச் சும்மா சொல்கிறாள் என்பது போலவும் இருந்தது. ஆனாலும் அவன் பேசவில்லை; தன் சிகரெட்டை வலுவாக அவன் உறிஞ்சுவது அவளுக்குக் கேட்டது.

பேத்திகள் – பாகம் 2

காலினாவின் முதல் படம் திரையரங்குக்கு வந்த போது, நாங்கள் அதைப் பார்க்க எங்கள் குழந்தைகளுடனும், அவர்களின் பாட்டிகளோடும் போனோம். காலினா இரண்டு மாடி உயரத்துக்கு நீட்டப்பட்டுத் தெரிந்த போது இன்னமும் கூடுதலாகவே அற்புதமாகவிருந்தாள். மர்மமும், சதிகளும் நிறைந்த ஒரு வலையில் சிக்கிய கதாநாயகியாக நடித்திருந்தாள். சி ஐ ஏ அமைப்பால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்தவள், தப்பிக்கிறாள். புத்தியிலும், உடலிலும் தனக்கு உள்ள வேகத்தை அவள் சாதகமாகக் கொண்டாள். கலக்கமில்லாது தந்திரபுத்தியோடு செயல்பட்டு, பெரும் ஆபத்து நேரவிருக்கும் கணங்களிலும் அவள் வாட்டும் ஒற்றை வரி வசனங்களை வீசினாள். விமர்சகர்கள் ‘வஞ்ச வலை’ படத்தைச் சிறிதும் நம்பகமற்ற கதை என்று வறுத்தெடுத்தாலும், நாங்கள் அதைச் சட்டை செய்யவில்லை. எங்களுடைய முன்னாள் பள்ளிக் கூடத் தோழி, எங்களுடைய சிறந்த தோழி, ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறாள், நாங்கள் இங்கே வந்து அதைப் பார்க்காமல் இருப்போமா?

கசாப்புக்கடையில் குறும்பாட்டுக்குட்டி

மேரி மலோனி கணவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவதற்காக காத்திருந்தாள். அவ்வப்போது, கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள், ஆனால், பதற்றமேதுமின்றி, கடந்து சென்ற ஒவ்வொரு நொடியும் கணவனின் வீட்டு வருகையை இன்னமும் நெருங்கச் செய்தது என்ற திருப்தியுடன். அவளையும், அவள் செய்து கொண்ட அனைத்துக் காரியங்களைச் சுற்றியும் ஒருவிதமான மந்தகாசச் சூழல் நிலவியது. தைத்துக் கொண்டிருக்கையில் அவள் தலையை கீழே சாய்த்த விதம் அசாதாரண அமைதியுடன் காட்சியளித்தது– கருத்தரித்து ஆறு மாதமாகியிருந்த அவளது சருமம் அற்புதமான ஒளியூடுருவும் தன்மையைப் பெற்றிருந்தது. மென்மையான உதடுகள், புதிதாய் கிட்டிய மெல்லமைதியால் முன்னதை விட பெரிதாகவும் மேலும் கருமையாகவும் காட்சியளித்த விழிகளுடன் அவள் காணப்பட்டாள். கடிகாரம் ஐந்து மணி ஆவதற்கு இன்னமும் பத்து நிமிடங்களே இருக்கிறது என்று காட்டிய உடனேயே அவள் செவிமடுக்கத் தொடங்கினாள்.

அந்த ஜன்னல்

கடந்த வருடம் மார்ச் மாதம், எனது பத்திரிகை பணியை முடித்துக்கொண்டு நான் வேறொரு மாகாணத்திலிருந்து என் வீட்டிற்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். என் எதிரிலிருந்த இரண்டு நடுத்தரவயது விவசாயிகள் எதுபற்றியோ ஆழ்ந்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் ஜியென் பகுதியில் இறங்கப் போவதையும்,அங்கிருந்து நீண்ட தொலைவிலிருக்கும் ஜியானுக்கு “அந்த ஜன்னல்”

வாய்ப்புகள் என்னவாக இருக்கும்?

பலரும் என் சகோதரியின் கைகளைப் பார்த்து அவற்றை நேசிக்கத் துவங்குகிறார்கள். அவளால் ஒரு செங்கல்லை இரண்டாக உடைக்க முடியும். எங்கள் சகோதரனுக்கு 30 வயதாகிற போது, அவன் அவளோடு தங்கி இருக்க வந்தான். தான் மணந்திருத்த பெண்ணை விட்டு விலக அவன் முடிவு செய்திருந்தான், என் சகோதரி வாழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு சிறிய ஏரியில் மூழ்கி இறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவள் சொன்னாள், “அது முழுக்க உளை சேறாக இருக்கிறது, நீ ரொம்ப தூரம் உள்ளே இறங்கி நடந்தால்தால் ஏதோ கொஞ்சம் ஆழம் கிட்டும், அதில் மூழ்குவது உனக்குப் பெரும் பாடாக இருக்கும்.” எங்கள் சகோதரன் தலையைப் பின்னே சாய்த்துப் பெருஞ்சிரிப்பாகச் சிரித்தான்.

கொல்வதற்கு உரிமம்

தினமும் திட்டம் போட வேண்டி இருக்கிறது. கீழே குப்புற விழுந்த நிலை. வாழ்வை அளந்து பார்க்க வேண்டி இருக்கிறது… காஃபி கரண்டிகளால் இல்லை- மாத்திரைகளால். அவற்றை காலைச் சிற்றுண்டியோடு, மதிய உணவோடு, பிறகு இரவுச் சாப்பாட்டோடு வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. மச்சகன்னிகளாவது, மலர்ந்திருக்கிற லைலாக் புதர்களாவது? அந்த இளைஞனுக்கு எதுவும் புரிந்திருக்கவில்லை. அவனுக்கு என்ன வயதிருந்திருக்கும் அப்போது, இருபதுகளில் இருந்தானா? இப்போது எல்லாம் மாத்திரைகள்தான், நான் அறுவை சிகிச்சைத் தலத்துக்கு தொலைபேசியில் பேசி விட்டேனா, எரிவாயுக்குக் கட்டணத்தைக் கட்டினேனா, என்னிடம் வங்கிச் செலவு அட்டை இருக்கிறதா?

வெற்றிட நிலைகள்

பெருவெடிப்புக்கு முன்னால் பேரண்டத்தில் அறிவுள்ள ஜீவன்கள் இருந்தனவோ என்னவோ. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை நாம் கற்பனை கூடச் செய்ய முடியாது. அவர்களின் உலகம் பெரும் திணிவும், உயர்ந்த உஷ்ணமும் கொண்டு, மிகச் சிறியதாக இருந்தது; அவர்களின் மொத்தப் பேரண்டமும் ஒரு ஊசியின் கூர்முனையை விடச் சிறிய புள்ளியாக இருந்திருக்க வேண்டும், அவர்கள், நமக்குச் சாத்தியமாகியிருக்கிற கால அளவைகளிலேயே மிகக் குறைந்த நேரத்திற்குள், நூறாயிரம் கோடி (1ட்ரில்லியன்) தலைமுறைகள் வாழ்ந்திருக்கக் கூடும். ஒரு வேளை அவர்களில் ஒருவர், தாம் வாழ்கிற வெற்றிடம் ஒரு போலி வெற்றிடம் என்று உணர்ந்திருக்கக் கூடும், அதனால் அந்த வெற்றிலிருந்து சக்தியை உருவாக்க முடியும் என்று புரிந்து கொண்டிருக்கக் கூடும். ஒரு வேளை ஒருவர் அதை முயன்றாரோ என்னவோ.

தானாக உய்த்தறியும் எர்க் எப்படி ஒரு வெள்ளையனை ஒழித்தான்

ஹோமோஸ் வெகு சீக்கிரம் அறிவுள்ள பேச்சைக் கற்றுக் கொண்டு விட்டது, எனவே தைரியமாக எலெக்ட்ரீனாவிடம் பேசியது.
ராஜகுமாரி அதனிடம் ஒரு தடவை கேட்டாள், அதன் முகத் துவாரத்தில் மின்னுகிற வெள்ளைப் பொருள் என்னவென்று.
 “அதை நான் பல் என்று அழைப்பேன்,” அது சொன்னது.
 “ஓ, எனக்கு அதில் ஒன்றைக் கொடேன்!” என்று வேண்டினாள் அரசகுமாரி.
 “அதுக்குப் பதிலாக நீ எனக்கு என்ன கொடுப்பாய்?” அது கேட்டது.
 “நான் என்னோட சின்ன தங்கச் சாவியைத் தருவேன். ஆனால் ஒரு கணம்தான்.”
“அது என்ன சாவி?”
“என் சொந்தச் சாவி. தினம் மாலையில் அதை வச்சு என் மூளைக்கு நான் சாவி கொடுப்பேன். உனக்கும் ஒண்ணு இருக்கணுமே.”

பதனிடப்படாத தோல்

அது அப்போது அவளிடம் பேசியது, அதன் குரல் தாலாட்டை ஒத்திருக்கும் செல்லோ வாத்தியங்களின் ஆழ்ந்த மரமரப்பான நாதத்தைப் போலக் கேட்டது. அது தன் அடர்ந்த முடியடர்ந்த கையால் சைகை செய்தது. அது ஏதோ உறுதி அளித்தது, கொடுத்தது, பின் கேட்டது; அவள் அப்போது செவி கொடுத்துக் கேட்டாள், புரிந்தவளாகவும், புரியாதவளாகவும் இருந்தபடி.
சொற்கள் மெள்ளமாக வந்தன. இது…. …உலகம்.
இங்கே வானம், பூமி, பனிக்கட்டி. அந்த கனத்த கரங்கள் அசைந்தன. கைவிரல்கள் சுட்டின.
குட்டி அடிமையே, நாங்கள் உன்னைக் கண்காணித்து வந்திருக்கிறோம். சுதந்திரமாக நீ என்ன செய்திருக்கிறாய் இன்று? உரிமை எடுத்துக் கொள். உன்னுடைய காலணி உள்ள நான்கு கால்களுக்கான தரை, நட்சத்திரங்களுள்ள வானம், குடிப்பதற்குப் பனிக்கட்டி. இன்று ஏதாவது சுதந்திரமாகச் செய். செய்வாய், செய்வாய்.

மறைந்து கொண்டிருக்கும் நீ

அலெக்ஸாண்ட்ரா க்ளீமான் / குவெர்னிகா பத்திரிகை/ 15 செப்டம்பர் 2014     இன்று காலை கீழ்த்தளத்துக்கு நான் இறங்கிப் போனபோது, குக்கியைக் காணவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். காணாமல் போகிறவற்றுக்கான இலாகாவை ஃபோனில் கூப்பிட்டு அத்தனை தகவல்களையும் கொடுக்க வேண்டும் என்பது அதிகார பூர்வமான எமர்ஜென்ஸிக்கான வழிமுறை “மறைந்து கொண்டிருக்கும் நீ”

பொய்கள்

இதை நான் சான் யுவானிலிருந்து – இங்கிருக்கும் ஒரே தங்கும் விடுதியிலிருந்து – எழுதுகிறேன். இன்று மதியம் கரடு முரடான பாதையில் அரை மணி நேர பயணத்தின் பின் அம்மாவின் வீட்டை சென்றடைந்தேன். அவளது நிலைமை நான் எதிர்பார்த்ததைவிட மோசமாக இருந்தது. நடை மிக தளர்ந்துவிட்டது. கைத்தடி இல்லாமல் அவளால் நடக்க முடியவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி வந்ததிலிருந்து அவளால் மாடி ஏற முடியவில்லை. இப்போதெல்லாம் கீழ் அறையிலுள்ள சோஃபாவில் தூங்குகிறாள். ஆட்களை வைத்து கட்டிலை கீழே கொண்டு வர முடியுமா என்று பார்த்தாள். ஆனால் அவள் அறையில் அது நிரந்தரமாக பொருத்தப்பட்டிருந்ததால், அதை பிரிக்காமல் கீழே கொண்டு வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். (ஹோமரின் பெனிலோபியிடமும் இப்படியொரு கட்டில் இருந்ததுதானே?)

யுவதி

நான் யுவதியாக இருந்தபோது அடிக்கடி விலங்கு காட்சி சாலைக்கு செல்வதுண்டு. அடிக்கடி போய்க்கொண்டிருந்ததால் அங்கு இருக்கும் விலங்குகளிடம் – என் சம வயது பெண்களிடம் இருந்ததைவிட – அதிக நட்பு ஏற்பட்டது. மனிதர்களிடமிருந்து விலகி இருப்பதற்காகவே விலங்கு காட்சி சாலைக்கு தினமும் சென்றேன். அங்கு இருக்கும் ஒரு இள வயது, புத்திசாலியான கழுதைப் புலியுடன் எனக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. நான் அவளுக்கு ப்ரென்ச் மொழி கற்றுக் கொடுத்தேன். மாற்றாக அவளுடைய மொழியை எனக்கு கற்றுக் கொடுத்தாள். இப்படியாக இனிமையாக பொழுது கழித்தோம். என்னை கெளரவிப்பதற்காக என் அம்மா மே மாதத்தில் ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தாள். அது பற்றிய நினைவு இரவு நேரத்தில் எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்தது.

புதரை அடுக்கும் கலை (இறுதி பாகம்)

“இப்பப் பாரு,” அவர் சொன்னார், “நாம புதரை அடுக்கற கலையைப் பயில்கிறோம். அது ஒரு அடிப்படையான கலை. தவிர்க்கவியலாத கலையும் கூட. உன்னோட ‘அருங்கலைகள்,’ உன்னோட இசை, இலக்கியம் எல்லாத்தயும் பத்தி எனக்குத் தெரியும்- நானும் படிக்கப் போயிருக்கேன் – உன் கிட்ட நான் சொல்றேன், அதெல்லாம் அவசியம் இல்லை, விருப்பப் பாடங்கள். புதரை அடுக்கற கலை இருக்கே, அது விருப்பப் பாடமில்லை.”

“நீங்க ஸிம்ஃபனி இசையைப் பத்திச் சொல்றீங்களா?” ஆஸ்டின் நிறுத்தி இருந்தான், அவனுக்கு ஸிம்ஃபனி இசை என்பது எத்தனை முக்கியம் என்பதைக் குறித்துக் காட்டுவது போல அசைவற்று நின்றான்.

“ஸிம்ஃபனிகளா! பாழாப் போச்சுது, ஆமாம்!” ஆன்டி சொன்னார். “ஸிம்ஃபனிகளை எழுதவும், அதை எல்லாம் நடத்தவும், இசைக்கவும் தெரிஞ்ச ஒரு சமூகத்தை எடுத்துக்க, அதுக்குப் பாங்கா ஒரு சுமை புதரை அடுக்கத் தெரியல்லைன்னா, அவங்களுக்கு ஒரு மண்ணும் கெடைக்கப் போகிறதில்லை.”

புதரை அடுக்கும் கலை – (பாகம்-2)

அந்த கணத்தில் ஆன்டியால் யோசிக்க முடிந்ததெல்லாம், தான் மெதுவாக யோசிக்கும் ஒரு நபர், தான் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்பதே. எத்தனை மோசடியாக இருந்தாலும், அவர்கள் அவரைப் பிணைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அவருடைய பழைய வேலி இப்போது அழிந்து விட்டது, அவருக்கு வேலி தேவை, அதைத் திரும்ப நிறுவுவதற்குக் கிட்டுபவர்கள் அனேகமாக அவர்கள் மட்டும்தான். மேலும் யோசனைகள், அவருக்கு இது தெரியும், அதை நினைத்து அவர் அச்சப்பட்டார், பிற்பாடுதான் வரும். ஆனால் பதிலளிக்கும்போது அவருடைய குரல் அமைதியாகவே இருந்தது.

“ஆமாம், அது அறிவில்லாத செயல்தான். இனிமேலும் எதையும் பிய்க்காதீங்க.”

மதி நுட்ப நகரம்

சில்லு பொருத்தப்படாத அந்த பெண் ஒரு  பாதுகாப்புக்  கேமரா பக்கமாகக்  கடந்து சென்றாள் . நகரம் அவள் முகத்தை நுட்பமாக ஆராய்ந்தது  .அவள் கண்களின் வெண் படலம்  நீலஒளி வழித்தடத்தில்  கருமையாக  நிறம்மாறித் தெரிந்தது .  கடும் ஜுரம் தாக்கிய உடலையும் , குளிரில் விரைத்துப்போன  கை கால் விரல்களையும் அகச் சிவப்புக் (infra red )  கதிர்கள்   காட்டின – அவள் உடனடி  மருத்துவக்  கவனிப்பு தேவைப்படக்கூடிய மனுஷி என்று அடையாளம் காணப்பட்டாள் .

ஷப்லீ

என் மனைவிக்கு ஒரு நாய் வேணுமாம். அவளுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கு. குழந்தை நாய் வேணும்னு கேக்கறதா இவ சொல்றா. நாய் வேணும்னு என் மனைவி ரொம்ப நாளாவே கேட்டுக்கிட்டிருக்கா. அதை அவளுக்கு வாங்கித் தர முடியாதுன்னு நான்தான் அவகிட்ட சொல்லியாகனும். ஆனா இப்ப பாத்தா குழந்தை “ஷப்லீ”

ஓர் இளங்காலையில்

அவளுடைய செல்பேசியில் ஒரு செய்தி வந்ததற்கான கீச்சொலி…

  • நான் ஏதாவது சொன்னால், அவன் ரொம்ப ஆத்திரப்படறான் [ஏமி முந்தைய தொலைபேசி அழைப்பில் சொல்லி இருந்தாள்]; நான் கோபப்படறதை அவன் ஏற்பதில்லை.
  • ஆனால் அவன் தானே உன்னை விட்டு விட்டுப் போனான்.
  • ஆமாம். ஆனால் அவன் இப்ப என் கிட்ட ஒரே ஆத்திரமாய் இருக்கான். என்னை வெறுக்கறான்.
  • நீ அவனை இன்னும் காதலிக்கிறியா?
  • நான் அவனைப் பொருட்படுத்தறதில்லை. பதினைந்து வருஷமா என்னோட சாப்பிட்டு, என் கிட்டே படுத்துத் தூங்கினவன் இத்தனை விட்டேத்தியா இருக்கான், இத்தனை கொடூரமா இருக்காங்கிறதைத்தான் தாங்கிக்க முடியல்ல.

பெண்களால் துக்கத்தைத் துக்கமாக மட்டுமே வைத்துக் கையாள முடியும், (ஜோயீ நினைத்தாள்), ஆனால் ஆண்கள் அப்படிச் செய்ய மறுக்கிறார்கள், அதைக் கையாள்வதற்காக அதை டீஸலாக மாற்றி, அத்தனை இழப்பையும், வலியையும் ஆங்காரமாக மாற்றுகிறார்கள், என்பதுதான் உண்மையோ?

வாக்காளர்

சில ஆண்டுகளுக்கு முன் மாரக்கஸ் இபே, ஒரு சாதாரண மிஷன் வாத்தி. அரசியல் அவர்கள் கிராமத்திற்குள் நுழைந்த போது சுதாரிப்பாக அதனுள் தன்னை இணைத்து கொண்டவர் மார்க்கஸ். ஆனால் ஒரு ஆசிரியியை கர்ப்பமானதால் வேலை நீக்கத்திலிருந்து தப்பித்து கொள்ளவே, அரசியலில் இணைந்தார் என்று சொல்லுபவரும் சிலர் இருந்தனர். ஆனால் இன்றோ அவர் மாண்புமிகு இனக் குழு தலைவர், இரண்டு நீளமான மகிழுந்து மற்றும் அந்த வட்டார மக்கள் பார்த்தே இருக்காத ஒரு மிக பெரும் வீட்டின் அதிபதி. இதெல்லாம் பெரிதாக மார்க்கஸின் தலைக்கு ஏறி விடவில்லை. இன்றும் தன் மக்களின் அபிமானமான தலைவராகதான் இருந்தார். முடிந்த போதெல்லாம், தலை நகரின் வசதிகளை விட்டுவிட்டு, தண்ணீர் வசதியும், மின்சாரமும் இல்லாத கிராமத்தில் தனது மக்களோடு இருப்பதையே விரும்பினார். ஆனாலும் சில நாட்கள் முன்னர் தனது வீட்டிற்கு மட்டும் மின்சாரம் தரும் இயந்திரத்தை நிறுவியிருந்தார். கிடைத்ததை பருகிவிட்டும், தின்று விட்டும், தன் முனைப்பாலேயே அவை கிடைத்தன என்ற இறுமாப்புடன் அலையும் பறவை போல் அல்லாமல், மார்க்கஸ் தன் வசதிகளின் காரண, காரியங்களை நன்றாகவே அறிந்திருந்தார்.

என் அப்பாவோடு ஓர் உரையாடல்

முதலில் என் அப்பா மௌனமாக இருந்தார், பிறகு அவர் சொன்னார், ‘முதலாவது: உனக்கு அருமையான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. இரண்டாவது: உன்னால் ஒரு எளிமையான கதை சொல்ல முடிகிறது என்பதை நான் பார்க்கிறேன். ஆகவே, நேரத்தை வீணடிக்காதே.” பிறகு அவர் சோகத்தோடு சொன்னார், “மூன்றாவது: அப்போது நான் என்ன நினைக்கணும்னா, அவனோட அம்மா, அவள் தனியாவே கிடக்கிறாள், அவள் அப்படியே விடப்பட்டு விட்டாள். தனியாவே. ஒருவேளை நோயாளியாகவுமா?”

நான் சொன்னேன், “ஆமாம்.”

“பாவமான ஸ்த்ரீ. பாவமான பொண்ணாக முட்டாள்களின் காலத்தில் பிறந்து, முட்டாள்கள் நடுவே வாழ நேர்ந்து போச்சு அவளுக்கு. அது முடிவு. அதுதான் முடிவு. அதை நீ எழுதினது சரிதான். முடிஞ்சு போச்சு.”

தேறு மனமே, தேறு!

“செகாவ் எழுதினார், ‘மூடர்களும், எத்தர்களும்தான் எல்லாவற்றையும் அறிந்தும், புரிந்து கொண்டும் இருப்பவர்கள்.”

“ஒத்துக் கொள்கிறேன்” அவள் சொன்னாள். “ஆனால் எதையுமே அறிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும்தான் சாத்தியமா? கடந்த காலம் என்பது எப்போதுமே போனதுதானா? இறந்தவர்களோடு சமாதானம் செய்து கொள்வது சாத்தியமா?”

தொலைந்து போன சிறுவர்கள்

செச்சென்யாவிற்கு அனுப்பப்பட்ட இளம் வாலிபர்களுக்காக ‘ரஷ்யா ராணுவ வீரர்களின் தாயார் குழு’ பொட்டலங்களை சேகரிப்பதை செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொண்டேன். அதன் தலைமையகத்திற்கு 25 டிசெம்பர் சென்றேன். என் மகனுக்காக ஒரு பொட்டலத்தை பெற்றுக் கொண்டார்கள். அவன் எங்கிருக்கிறான் என இன்னும் எனக்கு தெரியவில்லை. அவனுடைய படைப்பிரிவு தலைமையகத்தின் தொலைபேசியை கண்டறிந்து 26 டிசெம்பர் முதல் ஒவ்வொரு நாளும் அவனைக் குறித்து விவரம் அறிந்து கொள்ள அழைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு எப்போதும் ஒரே பதிலே அளிக்கப்பட்டது: அவன் காயமடைந்தவர்களிலும், இறந்து போனவர்களிலும் இல்லை. பின்னர், 5 ஜனவரி அன்று, என் மகன் நிகோலை ப்யாசெட்ஸ்கி க்ரோஸ்னி நகரில் கொல்லப்பட்டான் என எனக்கு சொல்லப்பட்டது.

ஒரு ஜன்னல்

உங்களின் கடிதம் எனக்கும் ஹாம்பர்கர் சாப்பிடவேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிட அன்றிரவே நான் நேராக ஹோட்டலுக்குப் போய் அதைச் சாப்பிட் டேன்.அந்த ஹோட்டலில் எட்டுவகையான ஹம்பர்கர்கள் வைத்திருந்தார்கள். டெக்சாஸ், ஹவாய் கலிபோர்னியா,ஜப்பான் என்று எல்லாநாட்டு ஹாம்பர்கர் களும் அங்கிருந்தன.டெக்சாஸ் ஹாம்பர்கர் பார்க்கப் பெரிதாக இருந்தது. டோக் கியோவின் இந்தப் பகுதிக்கு வரும் டெக்சாஸ் மனிதர்களுக்கு இது அதிர்ச்சி யாகத்தானிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.ஹவாய் ஹாம்பர்கர் ஒரு அன் னாசிப் பழத்துண்டத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலிபோர்னியாவின் அலங்காரம் …எனக்கு நினைவில் இல்லை

சந்திப்பு

ஏதாவது ஒரு விதத்தில் அந்த பொறுப்பற்ற துணிவு இறுதிவரை தொடர்ந்தே ஆகவேண்டும். ஒருகால் அதன் முடிவு வெற்றியாகவும் இருக்கலாம். எதிரியிடமே நாங்கள் கரை சேர்ந்தது பற்றி தகவல் தெரிவிக்கும் அதிர்ச்சிகரமான அளவிற்கு வளர்ந்துவிட்ட இந்த அபத்த விளையாட்டில் லூயிஸை இழப்பது பற்றிய பேச்சுக்கு இடமே இல்லை. மேலும் அப்போது எனக்கு மற்றொரு சிந்தனையும் உடனெழுந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் வெற்றி பெற்று லூயிஸைச் சந்திக்க நேர்ந்தால், அந்த கணத்தில் மட்டுமே இந்த ஆட்டம் உண்மையிலேயே தொடக்கம் பெறும் என்றும் அத்தியாவசியமான, கட்டற்ற, அபாயகரமான எங்கள் கற்பனை நவிற்சி தோய்ந்த இலட்சியவாதத்திற்கான பரிகாரமாகவும் அது இருக்கக்கூடும் என்றும் நம்பினேன். உறக்கத்தில் அமிழும் கணத்திற்கு முன் எனக்கு ஒருவிதமான மனக்காட்சி தோன்றியது: லூயிஸ் ஒரு மரத்திற்கு அருகே நின்று கொண்டிருக்கிறான், எங்கள் அனைவராலும் சூழப்பட்டு, கையை முகத்தை நோக்கி உயர்த்துகிறான், பின்னர் முகத்தை முகமூடியை அகற்றுவதைப் போல் கழட்டுகிறான். கையில் தன் முகத்துடன் என்னையும், அவனது சகோதரனான பாப்லோவையும் ரோகேயையும் அணுகி, அதை அணிவித்துக் கொள்ளும்படி சைகை செய்கிறான். அவர்கள் இருவரும் மறுத்த பிறகு நானும் அதை அணிந்துகொள்ள மறுக்கிறேன், கண்களில் நீர் வரும் வரையில் சிரித்துக்கொண்டே. அதன்பின் லூயிஸ் தன் முகத்தை மீண்டும் அணிந்து கொள்கிறான்.

பசை

“அதைத் தொடாதே” என்றாள் அவள்.
“என்னது அது” என்றேன்.
“பசை. மிகச் சிறப்பான பசை. இருப்பவற்றிலேயே மிகச் சிறந்தது”
“எதற்காக வாங்கினாய் அதை”
“இங்கே ஒட்ட வேண்டியவை நிறைய இருக்கின்றன”

பெரும் மௌனம்

மனிதர்கள் அரெஸிபோவின் துணைகொண்டு வேற்றுகிரக நூண்ணறிவை தேடுகிறார்கள். தொடர்பை உருவாக்கிக் கொள்ளும் அவர்களுடைய விழைவின் உந்துதல் எவ்வளவு வீரியமானதென்றால் அதற்காக பிரபஞ்சத்தின் குறுக்கே அதை கேட்பதற்கான வல்லமையுடைய செவியை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். ஆனால் நானும் என் சக கிளிகளும் இங்கேயே உள்ளோம். எங்களுடைய குரல்களை கேட்பதில் அவர்களுக்கு ஏன் ஆர்வம் இல்லை? மனிதன் அல்லாத இனமான எங்களால் அவர்களுடன் தொடர்பு கொள்ள இயலும். மிகச் சரியாக, எங்களைத் தானே அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா?

ஒரு கிறிஸ்துமஸ் மாலை

அவள் அர்சி. கருப்பின வேலைக்காரி. இரவு உணவுக்காக அடுப்படியில் வெந்து கொண்டிருக்கிறாள். ரொம்ப அலுப்பாய் இருந்தாள். மதிய உணவு சமயத்தில் இருந்து அவளுக்கு ஓயாத வேலைகள். வெள்ளைக்கார மொத்தக் குடும்பத்தின் அறைகளையும் அவள் சுத்தம்செய்ய வேண்டியிருந்தது. விடிந்தால் கிறிஸ்துமஸ். அதற்கென வீட்டைத் தயார்செய்ய வேண்டும் அவள். குனிந்து குனிந்து நிமிர்ந்ததில் அவள் முதுகு கடுத்தது. தலை கிறுகிறுத்து மயக்கமாய் இருந்தது. ம். இன்னும் சித்த நேரம். எசமானியும் அவளுடைய ரெண்டு குழந்தைகளும் இராச் சாப்பாடு முடித்து விட்டால் அவளுக்கு விடுதலைதான். வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் …

ரோஸ்லாண்ட்

என்னருகே அமர்ந்திருக்கும், வியட்னாமில் பணியாற்றிய படைத்துறை வீரரொருவர் அவரது கதையை என்னிடம் கூறத் தொடங்கினார். கதை விவரணையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவருக்கு, தலையை கைகளில் பற்றியபடி முகத்தை என் கவட்டையில் இருத்துவதற்கான ஒரு அத்தியாவசியத் தேவை எழுந்தது. சாராய நெடியுடன் அவரது சீரான மூச்சுக்காற்றை என் ஜீன்ஸினுள் வெப்பமாய் உணர முடிந்தது.. அதன்பின் அவர் கதையைத் தொடராமல் அசையாதிருந்தார். என் பொச்செலும்பின் மீது அவர் கனமாக மூச்சிருத்துவதை நான் தடுக்கவில்லை. என் அடிமுதுகை இறுக்கமாக பற்றினார். அது ஒரு மௌனமான மன்றாடலே.

சமூகவியல்

மற்றவர்கள் எதை எல்லாம் ஒளித்தனரோ, அவற்றை ஜூன் கொடுத்தாள்; அவள் வாய் விட்டுச் சிரித்தாள், தன் பயங்களைப் பற்றிப் பேசினாள். எல்லெனுக்கு நினைவிருந்த நாட்களில் சிறப்பானது ஒன்று, அன்று ஜூன் அடுக்கத் தக்கனவாக உருவமைக்கப்பட்ட உலோக நாற்காலி ஒன்றில் அருள் வாக்கு கூறும் பெண் ஒருத்தியைப் போல உட்கார்ந்திருந்தாள், அவளுடைய ஒளி ஊடுருவும் கண்ணிமைகளின் பின்னே பார்வை இல்லாத கண்பாவைகள் தாவி அலைந்தன. ‘என்னால் நம்பவே முடியவில்லை, நான் கர்ப்பமாகி இருக்கிறேன் என்பதை,’ என்றாள் அவள். ‘என்னை நான் பார்த்ததே இல்லை என்பதால் இப்படி இருக்கும் போலிருக்கிறது.’

சம்பாஷணை

“பாருங்க. நேத்திக்கி காலைல என் வீட்டுக்காரர் ஆஃபிஸ் போகிற வழீலெ ஒரு நியூஸ்பேப்பர் வாங்கறத்துக்கு தாமசிச்சார். அவர் எப்போதுமே டைம்ஸ்தான் வாங்குவார், அதையும் ஒரே கடைலதான் வாங்குவார், என்னன்னா நேத்திக்கி அந்தக் கடைக்காரர்கிட்டெ என் வீட்டுக்காரருக்குக் கொடுக்க டைம்ஸ் ஒரு பேப்பர் கூட இல்லை, மாலைல வீட்டுக்குத் திரும்பினப்புறம் ராத்திரிச் சாப்பாட்டுல மீன் தீய்ஞ்சு போயிருக்கு, இனிப்பு வகையறால இனிப்பு அதிகமுன்னார், அப்புறமா அங்கெயும் இங்கெயும் உக்காந்துகிட்டு சாயந்தரம் பூராவும் தனக்குத் தானே பேசிக்கிட்டிருந்தார்.”