நேற்று இரண்டு யானைகள் துண்டுச் சோலைக்குள் இருந்தன. மாலை வெளியே வரும் என எதிர்பார்த்தேன், வரவில்லை. காலை வெளியே வந்து தோட்டத்திற்குள் சென்று அடுத்த மலைமேட்டைக் கடந்து சென்றிருப்பதற்கான காலடித் தடங்களோ, உடைந்த மரக்கிளைகளோ எதுவும் காணவில்லை. கண்டிப்பாக இரண்டு யானைகளும் இப்பொழுதும் சோலைக்குள் தான் இருக்க வேண்டும். வெளியே வருவதென்றால் காலை 6, 7 மணிக்குள் வெளியே வந்திருக்கவேண்டும், அப்படித் தெரியவில்லை.
Category: இதழ்-345
சொர்க்கத்திலிருந்து ஒரு குரல்
அவருடைய கச்சேரி அமைக்கப்படும் விதம் எல்லோரையும் கவர்வது. கச்சேரிக்கு முன்னால் கச்சேரி நடைபெறப் போகும் சூழலைக் கருத்தில் கொண்டு பாடல் தேர்வு செய்யப் படுகிறது. பாடலுக்கேற்ப பேஹாக், கமாஜ், காபி, மேக், யமன் போன்ற ராகங்களில் ஒரு ராகத்தைத் தேர்ந்தெடுப்பார். அந்த பாடலின் உணர்வுக்கு ஏற்ப ஒப்புமையுடைய மற்ற கவிதைகளின் வரிகளையும் சேர்த்துக் கொண்டு பாடும் தன்மையால் கேட்பவர் உணர்வை உச்ச நிலைக்கு கொண்டு செல்ல அதுவும் ஒரு காரணம் என்கிறார் அவர்.
எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா!
சமீப காலமாக, சிறிய எறும்புகளைப் பெரும் நுண்ணோக்கிகளின் வழியாக ஆராயும் ஆர்வம் அதிகரித்துள்ளது. மனிதக் கண்களுக்கு சாதாரணமாகத் தெரியாத அச்சிறிய புள்ளிகள், இன்று இந்த எறும்புகள் அவைகளின் சமூக நடத்தை, ஒத்துழைப்பு, மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் அனைத்தும் உயிரியல்-ஈர்க்கப்பட்ட தொழில்நுட்பத்தில் (biomimicry) விஞ்ஞானிகளின் பெரும் ஆராய்ச்சி பொருளாக மாறிவிட்டன. இயற்கையின் இந்த சிறிய அதிசயங்கள், மனித பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய வழிகளைத் திறந்துள்ளன.
கண்ணீரும் இசையும் கலந்த சினிமா காவியங்கள்: ஏ. பீம்சிங்கும் தமிழ்சினிமாவின் மெலொடிராமாவின் ஆன்மாவும்
தமிழ் சினிமாவின் புனித உணர்ச்சிகள் பெரும்பாலும் பெருமழை வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஓடும் இடங்களில், ஏ. பீம்சிங் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட துயரார்ந்த தாக்கத்துடன் ஒலிக்கிறது. அவர் வெறும் ஒரு இயக்குநர் மட்டுமல்ல, மனித உணர்ச்சிகளின் கட்டிடக் கலைஞர், ஒரு தலைமுறையினரின் மற்றும் அதற்கப்பாலும் உள்ளவர்களின் இதயங்களைத் தொட்ட கதைகளைத் திறம்பட பின்னியவர்
அது நமக்கான தூக்கு மேடை
இருட்டிலிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். அவள் கண்கள் நீரால் நிறைந்திருந்தன.’ வம்சம் வளர வேண்டும் என்ற எண்ணத்திலானது எங்கள் உறவு. அந்த உறவு வேர்கள் என்னோடு மட்டும் தொடர்வதில், முடிவதில் விருப்பம் காட்டி வந்தவரிடமிருந்து இந்தக் கொடுமைக்காரன் என்னைப் பிரித்து விட்டான். உறவின் உச்ச நிலையில் நான் கத்தியதும், ஓலமிட்டதும் நிஜம்தான்.
அக்ஷய அக்ஷரம்
மனித குலத்திற்கான அக மொழி , ஒன்றாகவே இருக்கிறது என எடுத்துக் கொண்டாலும் அட்சய அட்சரம் என்று ஏன் தலைப்பு கொடுத்தேன்? என் நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார்: ‘பல சொற்கள் தமிழ் புழங்கும் சூழலில் இருந்து வெளியேறி வருகின்றன; அவற்றை ஒரு அகராதியாக தொகுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அவர். தமிழில் எழுதும் வகையில் இந்த சொல் இருப்பதால் இந்தப் பெயரை வைத்தேன் என்று பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்.
திகைப்பெனும் தீராப்பொழுதுகள்
வண்ணத்துப்பூச்சியை குளிரிகள் மொய்த்ததிலிருந்து இப்போது இந்த சுள்ளான்கள் வந்தது வரை எனது கைபேசியில் புகைப்படமும் வீடியோவுமாக எடுத்து வைத்திருந்தேன். நிவேதனா வரும்போது காண்பிக்க வேண்டும். பொதுவாக எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் பழக்கம் என் நண்பர் ஹனிபா அவர்களிடமிருந்து எனக்கும் வந்துவிட்டது.
ஆடலுடன் பாடலும் அய்யாரெட்டும்!
இந்த சோதனையில் ஈடுபட்டிருந்தவர்களில் முதன்மையானவரான சுரஜித் தத்தா இந்த மிக முக்கியமான, நெல் உற்பத்தி வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த ஆய்வின் முடிவை பல வேளாண் சஞ்சிகைகளிலும் IRRI-யின் சஞ்சிகைகளிலும் வெளியிட்டார். அந்த நெல் ரகம் உரம் போடாமல் ஒரு ஹெக்டேருக்கு 5 டன்னும் உரமிட்டால் 9.4 டன்னும் உற்பத்தியை அளித்தது என்பது உலகெங்கிலும் பெரும் ஆச்சர்யத்தை உண்டாகியது. அதற்கு முன்பு எந்த நெல் வகையும் எங்கும் 9.4 டன்/ஹெ உற்பத்தியை அளித்தது இல்லை.
உருவன்றியே நின்று உருவம் புணர்க்கும்
லோகநாதன் இவள் மீது கோபப்பட்டு ஓடும் நதியில் பாய்ந்த புவனை நினைத்தான். எண்ணங்கள்தான் எத்தனை வலுவானது என நினைத்தான். எதை நம்புகின்றோமோ, அது செயலின் ஆற்றலை வழங்குகின்றது எனச் சொல்லிக் கொண்டான். புவன் குழந்தைக்கு சாப்பிட்ட பின்னர் ஏப்பம் வர வேண்டுமென விக்கியின் முதுகை தட்டிக் கொடுத்து கொண்டிருந்தான்.
காலைப் பூசல்
வேட்கையானது உயிரின் மர்மமான இடங்களில் புகுந்து ஆன்மாவுக்குப் பொறுக்க முடியாத இன்ப அவஸ்தை ஆகும் நிலையும், அது நிலைத்து நிற்காமல் மறையும் துயரும் மிக நுட்பமாகப் பதிவாகியிருக்கிறது பாசுரத்தில். இரவு முழுதும் கிளைத்த இன்பத்தை விட, விடிந்ததும் பெற்றம் மேய்க்கச் செல்ல இருக்கும் பெருமானின் பிரிவு பற்றிய அச்சம் மேலிடுகிறது.
இரயில் பயணத்தில்
நான் இறங்கிய இரயிலடியில்
இறங்கியது அதுவும்.
தங்குவதற்கு நான்
நுழைந்த அறைக்குள்
அதுவும் நுழைய
எனக்கு அது
தேவையோ
அல்லது
அதற்கு நான்
தேவையோ என்று
முடிவு செய்ய
முடியாதது போல் தோன்றிற்று.
8. பிரபஞ்ச ஒழுங்கை வழிநடத்தல்
பண்டைய சீனாவில் மஞ்சள் ஆற்றின் நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. பேரரசர் யாவோ (Yao), ஹுவாங்டி பேரரசின் இளவரசன் குன் (Gun) வசம் அணைகள் கட்டி வெள்ளத்தை தடுக்கும் பொறுப்பை அளிக்கிறார். குன் ஒன்பது ஆண்டுகள் முயன்றும் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. சொர்க்கத்திலிருந்து, தானே வளரக்கூடிய, சுவாசிக்கும் மண்ணை ஞானத்தின் ஆதாரமாக கருதப்படும் ஒரு ஆமை திருடி வந்து அவரிடம் தந்தது. அதைக்கொண்டு அவர் அணைகளை, தடுப்பு அரண்களை கட்டுகிறார்.
தவறாக விதிக்கப்பட்ட சாபம்
ஒருநாள், காட்டில் சென்று கொண்டிருக்கையில் களைப்பாய் உணர்ந்த பரசுராமரை உறங்க விரும்பினார். உடனிருந்த கர்ணன், தனது தொடையில் தலை வைத்து உறங்குமாறு கூறினான். அதை ஏற்று, அவனது தொடையில் தலை சாய்த்து உறங்கினார். அவர் உறங்கத் துவங்கி சிறிது நேரத்தில் ஒரு வண்டு அவனது தொடையைக் கடிக்க, தான் அசைந்தால் குருவின் தூக்கம் களைந்து விடுமோ என வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனது தொடையை கடித்து ஊடுருவி மறுபக்கம் வழியே வெளிவந்தது வண்டு
தொட்டவுடன் நீராக ஓடிய பனி
அப்பொழுதுதான் அப்பாவை முழுதாக வெளிச்சத்தில் பார்த்தான் ஒரு வார தாடி சவரம் செய்யப்படாமல் இருந்தது நினைவு தெரிந்து அவர் முகம் பளபள வென்றே இருக்கும் , தினமும் அவரே சவரம் செய்து கொள்வார். முகம் கூட லேசாக கவலையில் ஆழ்திருப்பதாகவும் ரயிலில் வரும் போது தூங்காமல் வந்ததாக சொன்னது. சரி இப்போது கேட்க வேண்டாம் என முடிவு செய்தான். அம்மாவ எழுப்பாதீங்க அவங்களா எழுட்டும் என்றான்.
தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள் – பகுதி- 2
எந்தக் கதையைப் படித்தாலும், யாருடைய கதையைக் கேட்டாலும் அதில் பெண் கதாபாத்திரம் என்ன என்று கவனமாகப் பார்த்து அந்தப் பாத்திரத்தை ஆராய்வது என் வழக்கம். இந்தக் கவனிப்பால் பல பெண்களின் மேன்மையை தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நாம் முன்பென்றும் அறிந்திராத பெண்களும், அவர்களுடைய இயல்புகளும் கதைகளின் மூலம் அறிமுகமாகி, என்னோடு உரையாடுவதும், உயிரோடு நினைவில் நிற்பதுமாக சிறந்த அனுபவத்தைத் தருகிறார்கள்
ஈர்ப்பு அலைகள் – 11
முதலில் லிசா என்பது ஒன்றல்ல, 3 விண்வெளிக் கலங்கள். இவை முக்கோண அமைப்பில் பூமியைச் சுற்றி வலம் வரும். ஒரு கலத்திலிருந்து இன்னொன்றிற்கு உள்ள தூரம் 2.5 மில்லியன் கிலோமீட்டர்கள். அதாவது ஒளி, ஒரு கலத்திலிருந்து இன்னொன்றைச் சென்றடைய 8.3 நொடிகள் ஆகும்! இந்த தூரம் துல்லியமாக எப்பொழுதும் இருக்கும்படி, இந்தக் கலங்களில் மிகச் சிறிய மோட்டர்கள் இயங்கும்.
அணிவகுத்த படைகள்
மூன்றாவது யாமம் தொடங்கியதுமே, பிரயாண படஹ என்ற வாத்யங்கள் ஒலிக்கலாயின. நிச்சப்தமாக இருந்த இரவில் அவை கம்பீரமான ஒலி அலைகளை பரப்பி, அனைவரையும் எழுப்பி விட்டது. திக்குகளில் கும் கும் என்ற நாதமே நிறைந்திருக்க பொழுது புலரும் முன் வழியனுப்ப அனைவரும் வந்து கூடினர். முன்னால் நின்று பிரயாண க்ரோசம் என்ற பெயரில், எட்டு பேர் தனித்தனியாக படஹத்தை வாசித்து அதன் நியமத்தை அனுசரித்தனர்.
டாப் கியர் (Top Gear) – வாகன ப்ரேமிகளின் உயிர்த்துடிப்பு
கார்களை மையப்படுத்தி ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புவது மிகக் கடுமையான விஷயம். சராசரி மனிதன் கார் அல்லது மோட்டார் சைக்கிளை ஒரு இடத்திலிருந்து இன்னொன்றிற்குப் போக உதவும் இயந்திரமாகத்தான் அறிவான். இன்ஜின் மற்றும் ஆயிரக்கணக்கான உபகரணங்களின் தேவை, வடிவமைப்பு, செயல்படும் கோட்பாடு, தேர்வு போன்ற நுட்பம் சம்பந்தமான கேள்விகளை நூற்றில் தொன்னூற்றி ஒன்பது பேர் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எழுச்சியா? கலகமா?
ஆவணமற்றவர்கள் மீதான நடவடிக்கை என்று அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த லத்தீன் இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் என்று பலரையும் சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்து அவர்கள் இருக்குமிடத்தையும் குடும்பத்திற்குத் தெரிவிக்காமல் அலைக்கழித்தனர். அதைத்தொடர்ந்து சாலைகளை ஆக்கிரமித்து ICE மற்றும் LAPD உடன் லத்தீன் சமூக மக்கள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அறிவியல் திரித்தல்கள் – ரவி நடராஜன்
அமில மழைப் பிரச்சினை, ராட்சச எண்ணெய்க் கசிவுகள், ஓசோன் அடுக்கில் ஓட்டை, ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி, டால்கம் பவுடர் உற்பத்தி, செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள், சிகரெட் உள்ளிட்ட பல்வேறு ஆழமான அறிவியல் கருத்துகளை ஆராய்ந்து தொகுத்துத் தருகிறது இந்த நூல்.
