கண்ணன் காட்டிய வழி

“உன் உயிர் நண்பன், மதனி அவனை சொந்தச் சகோதரனாகத்தான் கருதுகிறாள். நம் மகள் கிருஷ்ணை என்னை விட, ஏன் உன்னை விடவும் கூட அவனைத்தான் தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறாள். அவன் எப்படி நமக்கு துரோகம் செய்யத் துணிந்தான்? அவன் என்ன அவமானம் ஏற்பட்டாலும் சரி என்று பீஷ்மரின் கீழ் போரிட்டிருக்க வேண்டும். முதல் நாள் போரில் அவன் பாண்டவர்களில் ஒருவரைக்  கொன்றிருந்தால் போர் அத்தோடு முடிந்திருக்கும். நாம் இன்றும் நூற்றுவராக இருந்திருப்போம்”

காமம் காமம் என்ப

நான் நீங்கள் எனக்கு யார் என்று சொல்லிவிட்டால் போதும், அப்படியே ஆடிவிடுவார். ஒரு முறை எனக்கு குற்றாலம் போக ஆசை, கூட்டிப் போக யாரும் இல்லை என்றேன், அடுத்த நாளே நாங்கள் மூன்று பேரும் குற்றாலம் போனோம். அங்கே நான் குளிக்கும் கோலத்தை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார். இரண்டு மூன்று நாள் கழித்து எவனோ ஒரு சனியன் சார் உங்க பொண்ணு கிட்டே அங்கே போக வேணாம்னு சொல்லுங்க ரொம்ப வழுக்குது என்றான்.