தொட்டவுடன் நீராக ஓடிய பனி

அப்பொழுதுதான் அப்பாவை  முழுதாக வெளிச்சத்தில் பார்த்தான் ஒரு வார தாடி சவரம் செய்யப்படாமல் இருந்தது நினைவு தெரிந்து அவர் முகம் பளபள வென்றே இருக்கும் , தினமும் அவரே  சவரம் செய்து கொள்வார். முகம் கூட லேசாக கவலையில் ஆழ்திருப்பதாகவும் ரயிலில் வரும் போது தூங்காமல் வந்ததாக சொன்னது. சரி இப்போது கேட்க வேண்டாம் என முடிவு செய்தான். அம்மாவ எழுப்பாதீங்க அவங்களா எழுட்டும் என்றான்.

புத்தனின் புன்னகை

இளமையினால் கண்களின் கூர்மையும் பிரகாசிப்பும் அதிகமிருந்ததோடு மிக ஆழத்தில் அமைதி தெரிந்தது. அவ்வமைதியினால் புன்னகை  மயக்கும் வசீகரத்தை தெறித்தது. பார்சல் கட்டுவதிலும் வரிசை எண்ணை அழைப்பதிலும் தனித்துவமும் பணிவுடன் கண்டிப்பும் நிறைந்திருந்தது.. இருபது நிமிடங்கள் கரைந்தது குறிப்பிட்ட எண்ணை மூன்று முறைகள் அழைத்தார் ஒருவரும் பதிலளிக்கவில்லை.

கலியபெருமாள் கலித்தேவன் கவிதைகள்

அலைக்கழிக்கப்பட்டவனின் துயரம்
மருந்தடைக்கப்பட்ட வெடிகுண்டென
கையில்.
வீசி எறியுமுன்னே அதியற்புத புன்னகையோடு மனக் காட்சி
இன்னாரு வாய்ப்பு